
எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”
விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.
விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.
விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.
ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.
முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”
இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.
முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?
விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.
பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!
1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.
உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.
உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.