பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.

சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.

அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…

ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”

நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”

அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.

இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.

ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.

இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?

வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.

அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?

நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.

அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.

இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.

இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.

தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.

இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் “இறைவன் இட்ட பிச்சை” என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா…?

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

 

மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.

வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?

1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.

மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”

சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.

யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!

கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது

அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.

ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.

பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.

அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.

1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.

ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது “மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ணத்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது… வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள “ஒரு உடலை” எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை “எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா….”
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்…
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது… என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில்… “ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

“தாய் சக்தி.. மனைவி சக்தி…” என்ற ரிஷிபத்தினி சக்தியின் கலப்பு

“தாய் சக்தி.. மனைவி சக்தி…” என்ற ரிஷிபத்தினி சக்தியின் கலப்பு

 

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி.. மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”

 

மனிதன் பல கோடிச் சரீரங்களில் தேர்ந்தெடுத்த ஆறாவது அறிவாகப் பெற்ற நிலையில் பிறிதொரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அறிவை அப்போதே அது மறைத்து விடுகின்றது.

1.அந்த வேதனையை நாம் துடைக்க மறுத்து விட்டால்… துடைக்கத் தவறிவிட்டால்…
2.அது சிறுகச் சிறுக நமக்குள் வளரத் தொடங்கி தேய்பிறையாக
3.அமாவாசைக்கு பின் சந்திரன் குறைவது போன்று குறைந்துவிடும் (கண்ணுக்கு புலப்படாது.

ஆகவே உயிரின் தன்மை கொண்டு ஒளி ஒடுங்கி விடுகின்றது மீண்டும் நல்ல உணர்வை நுகர்ந்தால் தான் நல்ல அறிவாகக் (பிரகாசத்தை) காண முடியும்.

உயிரணு தோன்றிய பின் மனிதனாக வரும் பொழுது பூரண சந்திரனைப் போன்று அனைத்தையும் அறிந்திடும் அறிவாகப் பெறுகின்றோம். ஆனாலும்
1.அந்த அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு பிறிதொரு கஷ்டங்களைக் கேட்டறிந்தால்
2.சிறுகச் சிறுக நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும் நஞ்சு கலந்து நாம் தேய்பிறையாக மாறிவிடுகின்றோம்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

பௌர்ணமியைப் போன்று பூரண ஒளி பெற்ற துருவ நட்சத்திரம் பேரருள் பேரொளியாக நம் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதைப் பின்பற்றிய அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைப் பெறக்கூடிய தகுதிக்கே உங்களுக்குள் இப்போது உபதேசிக்கப்படுகின்றது. உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோம்.
1.யாரெல்லாம் இதை மீண்டும் “கூர்மையாக நினைவுக்குக் கொண்டு வருகின்றார்களோ”
2.”துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்கின்றார்களோ…” அவர்களே அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
3.அவ்வாறு தகுதி பெற்ற பின்… தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்கும் அதே போன்று கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று
4..யாரெல்லாம் இருவரும் ஒன்றிச் செயல்படுகின்றனரோ அவரே தீமைகளை வெல்லும் அருள் சக்தி பெற்றவர்களாகின்றார்கள்.
5.விண்ணின் நிலைகளை யாரெல்லாம் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ அவரே பிறவில்லா நிலை அடைகின்றனர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்காகத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் கிழக்கே பார்த்து அதை விண்ணை நோக்கி எடுக்கும்படி வைத்தனர் அன்றைய ஞானியர்.

இன்று நாம் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து வந்திருந்தாலும் அன்பு பரிவு பாசம் என்று பேரன்பு கொண்ட நிலையில்… பிறருடைய துயரத்தைக் கவர்ந்த பின் அதைத் துடைக்கத் தவறினால்… துடைக்க மறுத்தால்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் தீயவினைகளாகச் சேர்ந்து விடுகின்றது.

1.ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் “அதை நாம் துடைக்க மறுத்து விடுவோம்…” இருக்கட்டும்… அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்போம்.
2,ஒருவர் மீது பாசமாக இருந்து ஏதாவது ஆகிவிட்டால்… அவன் படும் வேதனையைப் பார்த்து
3.அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே… ஆகிவிட்டதே… என்று தான் சொல்வார்கள்… “வேதனைப்பட்டதைத் துடைக்க மறுப்பார்கள்…”

அவரிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள் அதைத் துடைக்க மறுப்பார்கள்…!
1.மறுத்து விட்டால் அல்லது மறந்து விட்டால் அது தீமையின் உணர்வாக விளையத் தொடங்கும்
2.மனிதனின் வளர்ச்சியைத் நம்மைத் தேய்பிறையாக மாற்றிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்கு அருகில் வேம்பை வைத்துக் காட்டினார்கள். அதன் அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் உருவான நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றியவன் துருவ மகரிஷி… அரசைப் போன்று அவன் ஓங்கி வளர்ந்தவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்
1.ஆகவே அதனின்று வரும் அருள் ஒளியின் தன்மை எடுத்தால் எத்தகைய நஞ்சின் தன்மையையும் அது பிளந்து விடும்
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் தகுதி நாம் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான உணர்வை இருவருமே எடுத்து இணைத்துக் கொண்டால்… ஒளியின் அணுக்களாக மாற்றி விட்டால்… நஞ்சினை வென்றிடும் அணுவாக அது விளைகிறது.

அந்த உணர்வின் ஒளியைப் பெருக்க முடியும் அந்தத் தகுதியை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதற்கு தான் விநாயகர் தத்துவமாகக் கொடுத்தது.

அந்தத் தத்துவப் பிராகரம்… சாதாரண மனிதனும் தன் வாழ்க்கையில் தன்னை அறிதல் என்ற நிலைக்குத் தனக்குள் வரும் தீமைகளை… மேல் அழுக்கைப் போக்குவது போல ஆன்மாவில் படும் அழுக்கைப் போக்கி… தன் உடலுக்குள் ஜீவான்மாவை மறைத்திருக்கும் தீமையின் அழுக்குகளையும் நீக்க முடியும்.

ஆகவே அருவ நிலைகள் செயல்படுவதை அறிந்து கொள்ள விநாயகரை உற்றுப் பார்க்கப்படும் போது (அது துவைதம்) ஞானிகள் காட்டிய காவியத்தின் பிரகாரம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அங்கே காட்டப்பட்டிருக்கும் உண்மைப் பொருள்களை நாம் உணர்ந்து அதன் வழியில் நாம் நுகர்ந்தால் அத்வைதம்
2.இந்த உணர்வுகள் உயிரிலே பட்டு உடலில் விளைந்து மீண்டும் நுகந்தறியப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அதன் வழி நாம் விண் சொல்லும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைய அது உதவும்.

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

 

இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.

உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.

“சைவ சித்தாந்தம்” – தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.

“வேதாந்தம்” – உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.

ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.

ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.

உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.

இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.

சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.

காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”

கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!

வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.

இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.

உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…

 

உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட… எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது “எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி…”
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் “தன் முயற்சி கொண்டு” கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை.

“தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.

அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

 

உதாரணமாக கோழியோ பாம்போ கருவுற்றால் அவைகள் கேறும். குருவி மற்ற அதைப் போன்ற முட்டையிடும் சில இனங்கள் அனைத்துமே கேறத்தான் செய்யும்.

மனிதனின் வாழ்க்கையில் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து (சுவாசித்து) விட்டால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பின் கருத்தன்மை அடைகின்றது.

1.மீண்டும் மீண்டும் அவரின் வேதனையை எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் இந்த உணர்வுகள் முழுமை அடைந்தால்
2.எந்த உடலிலே அந்த வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்ததோ
3.அதே மாதிரி நம் இரத்த நாளங்களிலும் அந்த அணுவை உருவாக்கும் “கரு முட்டைகளாக” மாறி விடுகின்றது.

அவ்வாறு கரு முட்டைகள் ஆகும் பொழுது அந்த இரத்தம் இரத்தநாளங்கள் வழியாகச் சுழலும் போது அந்தக் குறித்த காலம் வரும் பொழுது என்ன நடக்கின்றது…?

வேதனைப்படுவோரை… “அடப்பாவமே… நல்ல மனிதன் இப்படி அவதிப்படுகின்றானே…!” என்று தான் அவர்கள் நோயாக அல்லது துன்பத்தில் வாடுவதை நாம் எண்ணுகின்றோம்.

கோழி எப்படிக் கருவுற்ற பின் அது கேறுகின்றதோ அதைப்போல நுகர்ந்த உணர்வுகளை “மீண்டும் மீண்டும் திரும்ப எண்ணும் பொழுது” அது கோழி கேறுதல் போன்று ஆகிவிடுகிறது

அவர் உடலிலே நோயாக உருவாக்கிய அணுவின் தன்மை நம் இரத்தங்களிலே கருவுற்று முட்டையாக மாறுகின்றது.
1.அந்த முட்டை இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது உடலுக்குள் சிறு மூளை பாகம் வரை செல்லும்… மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று வரும்.
2.முட்டையாக இருக்கும் பொழுது முதலில் அந்த வேதனை நமக்குத் தெரியாது.

ஆனால் இரத்த நாளங்கள் வழியாக நம் உடல் உறுப்புகளுக்குள் சுழன்று வரும் பொழுது… இருதய வாயில்களில் இரத்தங்களை வடிகட்டி வரும் அந்த இடத்தில் இந்த முட்டை சென்றால்… இது வடிகட்டும் திறன் கொண்டு இழுத்து அனுப்பப்படும் பொழுது துடிப்பின் தன்மை அழுத்தமாகும் பொழுது அந்த முட்டை வெடித்து விட்டால் போதும்.

வேதனையை உருவாக்கும் அந்த விஷமான அணு அந்த இருதய பாகத்தில் சேர்ந்து விடுகிறது. சேர்ந்த பின்
1.அந்த மனிதன் எப்படி வேதனைப்பட்டானோ அதே வேதனை உணர்வுகள் இருதய வாயிலே தோன்றி
2.பளீர்… பளீர்… என்று மின்னும்… ஊசி குத்துவது போல் இருக்கும்.
3.நெஞ்சு வலிக்கின்றது… எப்படியோ எனக்கு மயக்கமாக வருகிறது என்று சொல்லத் தொடங்குவோம்.

நெஞ்சு வலிக்கின்றது என்று ஒரு அணுத்தன்மையாக முதலில் அடைந்தாலும்… முட்டை வெடித்து முட்டையை விட்டு வெளிவந்த குஞ்சுகள் தன் இரைக்காக (வேதனைப்படும்) உணர்ச்சிகளை உந்தும்.

கோழி முட்டைகள் பொரிந்த பின் வெளி வந்த குஞ்சுகள் கத்தும். அப்போது தாய்க்கோழி கூவி இரையைத் தேடித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.

அதைப் போல நமது உயிர் நாம் எண்ணியதை அணுக்களாக உருவாக்கிய பின் உணவு கொடுக்கும்.
1.இருதய வாயிலில் உருப்பெற்ற அணுக்களுக்கு… அந்தக் குஞ்சுகள் இரைக்காக உணர்ச்சியைத் தூண்டும்.
2.அப்போது வலி வரும்… மீண்டும் வலிக்கின்றதே வலிக்கின்றதே என்று எண்ணும் போதெல்லாம்
3.அந்த வலியின் உணர்வை எடுத்து அந்த அணு தன் இனத்தையே பெருக்கத் தொடங்கும்.

முதலிலே லேசாகத்தான் நெஞ்சுவலி இருந்தது பின் அது அதிகரித்து அணுக்களின் தன்மை தன் இனத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் பொழுது “இருதய வால்வுகள்” விஷத்தன்மையான நிலைகள் கொண்டு “அது விரிவடையும்… அல்லது ஒடுங்கி நிற்கும்….”

விஷ வாயுவின் தன்மை உற்பத்தியாகத் தொடங்கினால் அதனுடைய முடிவு… தாங்காதபடி அந்த ரத்த நாளங்கள் வெடித்து விடும். வெடித்தால் ஒன்றும் செய்ய முடியாது… இது ஒரு பக்கம்.

ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்…. திடீரென்று இயக்கச் சக்தி குறைவு.

ஆனால் அவர் ,மீது பற்று கொண்ட ஒருவர் அவர் மீது நினைவாற்றலைச் செலுத்தி… “திடீரென்று இறந்து விட்டாரே…” என்று அடிக்கடி இந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் இந்த அணுத்தன்மை சிறு மூளை பாகம் செல்லும் பொழுது அங்கே வெடித்து விட்டால் இந்த உணர்வின் தன்மை கூடும்.

அது உயிர் பாகம் வரும் பொழுது… நமது உயிரோ கண் காது மூக்கு உடலுக்கு ஆணையிடும். எந்த மனித உடலிலிருந்து இந்த விஷத்தன்மை நுகரப்பட்டு அணுவானதோ அதைக் கவர்ந்து அதே உணர்வின் தன்மையை இங்கே நமக்குள் உருவாக்கும்.

பின்…
1.சிறு மூளை பாகங்களில் இருதயத்தை இயக்கக்கூடிய அந்த நரம்புகளில் தொடர்பு இழந்து விட்டால்
2.இருதயம் இயங்காதபடி ஒரு நொடிக்குள் நாளை மாய்த்து விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… எத்தகைய தீமைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்க… கேட்க… நுகர நேர்ந்தால் அதை மாற்றிட நமது குருநாதர் காட்டிய வழியில்
1.உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து.
3.தீமைகள் இரத்தத்தில் கருத்தன்மையாக உருவாகதபடி தடுத்து நம் வாழ்க்கைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு தான் உணர்வின் இயக்கங்களை உங்களுக்குள் தெளிவாக்கி வேதனைகளை மாற்றி அமைக்கும் உபாயங்களைச் சொல்லி… அருள் வழியில் இந்த வாழ்க்கை வாழ்ந்திட… “அதற்குண்டான ஒரு பழக்கமாக… ஒரு பயிற்சியாக… இதைக் கொடுக்கின்றோம்…”

“வாயு ஸ்தம்பம்…”

“வாயு ஸ்தம்பம்…”

 

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் “மேலிருந்து கீழுமாக… கீழிருந்து மேலுமாக…”
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.