மனிதனுடைய ஆணிவேர் அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

மனிதனுடைய ஆணிவேர் அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இதைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம் நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மட்டுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்… இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.

எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவு கூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாவது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.
1.இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல்…
2.பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

“தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்…” தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது

“தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்…” தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது

 

யாராக இருந்தாலும் மற்றவருடன் நாம் ஒத்துழைத்து… “நம்முடைய தத்துவத்தை” இணைந்து அவரிடத்தில் சொல்லும் போதுதான் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கே வரும்.

1.இல்லை… இல்லை… நாங்கள் இந்தத் தியானத்தின் வழியில் மிகப் பெரிய சக்தி பெற்றிருக்கின்றோம்
2.இப்படிச் செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும்…! என்று சொன்னால்
3.நம் காரியங்கள் அத்தனையுமே அது தடைப்படுத்தும்
4.நீங்கள் நல்லதை எடுத்து யாருக்கும் சொல்லவும் முடியாது… அதை வளர்க்கவும் முடியாது.

எது எதிலே பழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதைத் தெரிய வைக்க வேண்டியது… தெளிவாக்க வேண்டியது… நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நமது தான் உயர்ந்தது என்று நாம் சொல்லப்படும்போது
2.அடுத்தவர்கள் “அவர்களது உயர்ந்தது என்று என்று தான் சொல்வார்கள்…!”

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக்கூடாது.

மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு… நம்முடைய தத்துவத்தை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலைக்கு அதை உருவாக்க வேண்டுமே தவிர…
1.நாம் பிடிவாதமாக இருந்து வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக்கூடாது.
2.எப்பொழுது பார்த்தாலும்… “என்னமோ சாமியார் என்கிறார்கள்…
3.அதைப் பண்ணுகிறேன்… இதைச் செய்கிறேன்… என்று என்னென்னமோ வேலை செய்கின்றார்கள்…! என்ற நிலைக்குச் செல்ல விடக்கூடாது.

வீட்டில் நடக்கும் சில நிலைகளுக்குச் சாங்கியங்களும் சடங்குகளையும் செய்வார்கள். உதாரணமாக உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்த பிற்பாடு என்ன செய்வார்கள்…?

காக்காய்க்கு நாங்கள் சோறு வைக்கின்றோம்… பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துக் கூப்பிடுகிறோம்… என்று சொன்னாலும் “அவர்கள் இஷ்டத்திற்கு” விட்டு விட வேண்டும்.

நாம் முறைப்படி தியானம் இருந்து அந்த உடலை விட்டு பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் கூட்டுத் தியானமிருந்து அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

இதை… அவர்களிடம் சொல்லப்படும்போது…
1.இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குப் போகிறது என்று பாருங்கள்…! என்று சொல்லிக் கொஞ்சம் தூண்டி விட்டால்
2.அந்த ஆர்வம் அவர்களுக்குள் வரும்… ஏற்றுக் கொள்ளும் பருவங்களும் வரும்.
3.அப்போது அந்த ஆன்மா விண்ணுக்குச் செல்வதை அவர்களும் பார்க்க நேரும்.

ஆக… ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும் என்றால்
1.எவ்வளவு நல்லதாக இருந்தாலும்…
2.அந்தப் பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல.

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியைப் பார்த்து இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று நாம் சொல்கின்றோம்.

இங்கே சன்ன ரகமான பொன்னி அரிசியை நாம் சாப்பிடுவதைப் பார்த்து இந்த அரிசியை யார் சாப்பிடுவது…? என்று அவர்கள் சொல்கிறார்கள். அவரவர்கள் ருசி தான் அவரவர்களுக்கு வரும்

ஆகவே எப்போதுமே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மற்றவர்களை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.அவர்களை உயர்த்தினால் தான் நமது சொற்களை அங்கு ஏற்கும் பருவம் கிடைக்கும்.
2.இல்லை என்னுடையது தான் உயர்ந்தது..! என்று சொன்னால் நமது உணர்வை அவர்கள் தாழ்த்தித் காட்டுவார்கள்.

நமது தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த்தான் சொல்ல முடியுமே தவிர
1.கட்டாயப்படுத்தி யாருக்கும் திணிக்க முடியாது
2.கட்டாயப்படுத்திச் சொல்வதோ… இது தான் மிகவும் நல்லது என்று வலியுறுத்தினாலோ
4.நம் மீது வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பை எடுக்க விடாதபடி… நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி நம்முடைய நிலைகளைப் படிப்படியாக அங்கு சொல்லி மாற்றி… “அவர்களை உணரும்படி செய்வது தான்…” நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உடலில் இயக்குவது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! அவரின் எதிர் நிலையான அழுத்தங்கள் நாம் எவ்வளவு தான் உண்மையைச் சொன்னாலும் வெறுக்கும் தன்மை தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற பழக்கத்தை எல்லாம் நாம் மாற்றி
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு
2.அந்தப் பக்குவ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

சூரிய (வெப்ப) சக்தியை அபரிதமாகப் பிரித்தெடுப்பதால் காற்றிலே விஷத் தன்மைகள் அதிகரிக்கிறது – ஈஸ்வரபட்டர்

சூரிய (வெப்ப) சக்தியை அபரிதமாகப் பிரித்தெடுப்பதால் காற்றிலே விஷத் தன்மைகள் அதிகரிக்கிறது – ஈஸ்வரபட்டர்

சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்…
1.செயற்கைக்கு ஏங்கும்…
2.செயற்கையான மனமுடைய…
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருபீடம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருபீடம்

 

உங்கள் உயிரைத்தான் எண்ண வேண்டுமே தவிர சாமியின் (ஞானகுரு) உயிரை எண்ணுவதால் பலனில்லை.

சாமி உயிரால் உருவாக்கப்பட்ட அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை இங்கே பரவியிருக்கப் படும்போது நீங்கள் நுகர்ந்தால் அது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வைத் தான்
2.அவர் வழியில் எல்லோரும் ஏகமாக எண்ணி
3.அவரின் அருள் உணர்வுகளை இங்கே தபோவனத்தில் பரப்பச் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் சில சிக்கல்கள் வந்தால் அதை நிவர்த்திக்க உங்களுக்கு வழிகாட்டியான முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்.

ஞானகுரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தபோவனத்தை எண்ண வேண்டும்.

காரணம்…
1.நாம் எல்லோரும் தவம் இருந்த அந்த உணர்வலைகள் அங்கே உண்டு…!
2.அது மிகவும் வலிமை மிக்கது… சக்தி வாய்ந்தது.

தபோவனத்தை எண்ணி குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

ஆனால் நமது ஆசை…
1.நல்ல உணர்வைக் கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்
2.நல்லது செயல்படுத்தக்கூடிய அந்த இச்சையை நாம் பெற வேண்டும்.

அதன் வழியில் நாம் பெற்று இயங்கினோம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும்.

எந்தத் திசையில் நீங்கள் எங்கே இருந்தாலும் தபோவனத்தை எண்ணி…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கினால்
2.மிகவும் எளிதாகக் கிடைக்கும்… வலிமை மிக்க சக்தியாகவும் இருக்கும்.

அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதாக இருக்க வேண்டும்.

தபோவனத்தில் எல்லோருடைய அருள் உணர்வுகளும் பரப்பப்பட்டுள்ளது. குரு அருள் துணை கொண்டு தான் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது பூமி முழுவதும் அந்தச் சக்தி பரவுகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எங்கிருந்து நீங்கள் எண்ணினாலும் அந்த அருள் உணர்வுகளைப் பெற முடியும்
1.ஏனென்றால் அவர் உணர்வைப் பெற்றுத் தான் நான் (ஞானகுரு) ஆனது.
2.அவர் உணர்வை எடுத்துத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றோம்.
3.ஒளியின் உடலாக இருக்கும் குருவின் உணர்வை எளிதில் பெற முடியும்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழியில் குரு பெயரை வைத்துத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்…” என்று வைத்தது. அவர் உணர்வுகளை எனக்குள் விளைய வைத்து விளைந்த அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

1.ஞானகுரு கூறிய உணர்வுப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவேன் என்றால்
3.அந்த முறைப்படி… அந்த நெறிப்படி… அந்தச் சக்திகளை நாம் பெறுகின்றோம்.

குருநாதர் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக இருக்கின்றார். அவர் உடலோடு இருக்கக்கூடிய காலங்களில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் பதிவானதால்… அதை உங்கள் எல்லோர் உணர்வுகளிலும் பதியச் செய்து… ஒருக்கிணைந்த அந்த உணர்வின் தன்மைகளை அலைகளாக இங்கே தபோவனத்தில் பரப்பி வைத்திருப்பதால் எளிதில் பெற முடியும்.

சாமி செய்து கொடுப்பார் என்றால்…
1.அந்தக் குருவின் (ஈஸ்வராய குருதேவர்) அருளை நமக்கு வழிகாட்டினார் என்று
2.இந்த ஞானத்தின் வழியில் உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
3.இதுவே உங்களுக்குள் அந்தக் குருவாக இருந்து
4.ஞான வழியாக அந்த உணர்வின் தன்மை உங்களை வழிநடத்தும்.
5.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியையும் ஊட்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களைக் கலிக்கு முன் வெளிப்படுத்தும் சித்தன் – ஈஸ்வரபட்டர்

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களைக் கலிக்கு முன் வெளிப்படுத்தும் சித்தன் – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்…
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்… பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.

சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான் சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா…? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்தரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ள போதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜன்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே…!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்

 

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து எப்படி வாழ்கிறதோ ஒவ்வொரு உடலும் ஒரு பிரபஞ்சத்தைப் போன்றது தான்.

அகண்ட அண்டத்தில் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய பூமி உண்டு.

அதில் வடிகட்டிய உணர்வு கொண்டு தாவர இனங்களும் உண்டு… உயிரணுக்களின் வளர்ச்சியும் உண்டு. அதனதன் உணர்வுக்கொப்பத்தான் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரனங்களின் வளர்ச்சிகள் உண்டு. மற்ற பிரபஞ்சத்தில்
1.நம் பூமியைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற மனிதர்களும் உண்டு.
2.நம்மைக் காட்டிலும் கூழையான மனிதர்களும் உண்டு.
3.கூழையான நிலையில் சிந்தனை வலுவானவர்களும் உண்டு.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

முதலில் ஒரு சூரியன் உருவாகி 27 நட்சத்திரங்கள் உருவாகி அதன் வழிகளிலே வளர்ச்சியாகிப் பெரிய அகண்ட அண்டமானது. அந்த அண்டத்திற்குள் இது ஒரு பிரபஞ்சம்.

இப்படி 2000 சூரியக் குடும்பங்கள் உருவானது ஒரு அகண்ட அண்டம் என்றால் இதைப் போன்று எத்தனையோ அண்டங்கள் உண்டு.
1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோமே தவிர
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளாது வாழ முடியாது… வாழவில்லை.

அதைப் போன்று தான் மனிதனுக்கு மனிதன் இன்று தொடர்பில்லாது யாரும் இருக்க முடியாது. யாரைச் சந்தித்தாலும் நம் சந்தர்ப்பம் அவர் படும் வேதனைகளை நுகர்ந்தால் நமக்கும் வேதனை வருகின்றது… அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம்…!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் சேர்ப்பிக்கும் நல்ல சந்தர்ப்பமாக உருவாக்க வேண்டும். தீமையை நீக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கினால் நமக்குள் தீமை என்ற உணர்வு வராதபடி தடுக்கலாம்.

அதற்குத்தான் உங்களுக்கு இப்போது இந்தப் பயிற்சி.

1.”பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வார்கள்
2.உயிர் ஒவ்வொன்றையும் பிரம்மம் ஆக்குகின்றது…
3.இந்த உயிரைப் போன்றே உணர்வை ஒளியாகப் பிரம்மமாக்கும் நேரம் இது.

ஆகவே இருளை அகற்றி ஒளி பெறும் அந்த நேரம்தான பிரம்ம முகூர்த்தம் என்பது.

இருளை அகற்றி அறிவென்ற தெளிவாகத் தெரியும் இந்த நேரத்தில் உங்கள் கவனம் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும்,

1.உங்கள் உறுப்புகளை இயக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதுதான் துருவ தியானம்.

விஞ்ஞானத்தால் காண முடியாததை மெய் ஞானத்தால் அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞானத்தால் காண முடியாததை மெய் ஞானத்தால் அறிய முடியும் – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா…? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை… எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா…? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா…? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது…? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்… ஆனந்த மயமான மணமும்… உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… சொல்வதைக் கேட்காமல் இருக்க முடியாது… அதை நுகராமல் இருக்க முடியாது… எல்லாம் தெரிந்த பின் உதவி செய்யாமலும் இருக்க முடியாது.

ஆனால் அப்படிக் கேட்டு உணர்ந்தாலும் இந்த உணர்வுகள் நம் உடலிலே இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

முதலிலே உணர்ந்தோம்… மேலும் அதிகமாகப் போகாதபடி தடுத்தல் வேண்டும். தடுக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று நமது கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கரு விழி அங்கிருந்து வரும் சக்தியைக் கவர்கின்றது.
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் உடனே அந்த வீரிய சக்தியை உண்டாக்குகிறது.
3.கரு விழியுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து
4.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

டி.வி.க்கு எப்படி ஆண்டனா முக்கியமோ இதே மாதிரி நம் உடலுக்கு கண் ஆண்டனாவாக இருக்கிறது. அதிலே (கருமணிகளில்) ரெக்கார்ட் செய்தாலும் அதை ஆண்டெனா வழி அறியக்கூடிய சக்தியும் கிடைக்கிறது.

நமக்கு நமது கண் ஆண்டெனா. அதிலே எந்த உணர்வினை நினைவினைச் செலுத்துகின்றோமோ நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் வீரிய உணர்வைச் செலுத்தியபின் இந்தக் காற்றிலிருந்து இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை நாம் உள் முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் அது வலுப்பெறத் தொடங்குகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணப்படும் பொழுது நமக்குள் தீமைகள் புகாது தடுக்கபப்டுகின்றது.

காரணம்… இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட முந்திய தீய வினைகளுக்கு இந்த மூக்கு வழிதான் அந்த உயிர் வழி தான் உணர்ச்சிகள் சென்று ஆகாரமாகப் போகிறது.

ஏற்கனவே எடுத்த உணர்வு அதிலே சென்ற இயக்க அணு அதை வளர்ப்பதற்கு உதவும். அதைப் போன்ற தீமைகளை உட்புகாது முதலிலே தடைப்படுத்த வேண்டும்.
1.அதாவது அந்த இயக்க அணுக்கள் நம் இரத்தத்திலே ஜீவ அணுவாகப் போவதற்கு முன்
2.அதைத் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும் (இது முக்கியம்).
3.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.உடலுக்குள் புகாது முகப்பிலே தடைப்படுத்துகின்றோம் (உயிர் வழி எடுக்கும் போது முக்கு வழி தடைப்படுத்தப்படுகிறது).

விஷத்தை அகற்றி… அந்த விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுவோம் என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி… என்றும் பிறவியில்லா நிலை என்ற… ஒளி உடலைப் பெற முடியும்.

ஆறறிவு படைத்த இன்றைய மனிதன் வளர்ச்சி என்ற பெயரிலே எல்லாவற்றையும் அழிவிற்குக் கொண்டு வந்துவிட்டான் – ஈஸ்வரபட்டர்

ஆறறிவு படைத்த இன்றைய மனிதன் வளர்ச்சி என்ற பெயரிலே எல்லாவற்றையும் அழிவிற்குக் கொண்டு வந்துவிட்டான் – ஈஸ்வரபட்டர்

 

அனைத்துமே ஆவிதான்… ஆவியிலிருந்து வந்தது தான் அனைத்து உலோகங்களும்… ஜீவராசிகளும்…! அந்நிலையிலிருந்து பிரித்தெடுத்து அதனதன் தன்மையில் அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்

இப்பூமியில் இயற்கையிலிருந்து எடுத்த நிலைகளிலிருந்து அணுகுண்டு செய்து இப்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள். சகல பாதுகாப்புடனும் அவர்கள் பாதுகாத்து வைத்த உலோகத்தினாலான துருப்பிடிக்காத இரும்பைக் கொண்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

பலர் பதப்படுத்தும் நிலையில் பதப்படுத்தி வைத்துள்ளார்கள். இப்பூமியிலிருந்து எடுத்த உலோகத்திலே தன் அறிவினால் விஞ்ஞானம் கொண்டு இவ்வணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

அனைத்துமே ஆவி நிலை ஆகக்கூடியதுதான். உதாரணத்திற்கு தங்கத்தினால் ஓர் ஆபரணத்தைச் செய்து இன்று நீ பார்க்கும் எடைக்கும் பத்தாண்டிற்குப் பிறகு அவ்வாபரணத்தை உபயோகிக்காத நிலையிலேயே நிறுத்திப் பார்த்தால் அதன் நிறையில் ஒரே நிலை இல்லாமல் குறைந்துதான் இருக்கும்.

1.தேய்மானம் என்பார்கள்…!
2.பிற வஸ்துவில் பட்டுத் தேய்வதல்லை
3.இக்காற்றில் கலந்துள்ள ஆவித் தன்மையினால் இப்பூமிக்குள்ள காந்த சக்தியைக் கொண்டு ஈர்ப்பதினால் அதுவும் ஆவியாகிறது.

அனைத்து உலோகங்களின் நிலையும் இதுதான். இவ்வுலக நிலையும் இதுதான். இவ்வுலகம் ஆவியை ஈர்த்து அவ்வாவியையே வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் இன்று விஞ்ஞானம் கொண்டு செய்திடும் அணுகுண்டைப் பாதுகாக்கும் நிலை கொண்ட அவ்விரும்புக் கவசமே இவ்வுலகம் ஈர்த்து ஆவியை வெளிப்படுத்தும் தன்மையில் அதன் நிலையும் ஆவியாகி… “அதில் ஏற்படும் சிறு துவாரத்தினால் வரப்போகின்றது இவ்வுலக மாற்றமே…!”

இன்று விஞ்ஞானம் கொண்டு சூரியனிலிருந்து வரும் சக்தியினால் பல நிலைகளைச் செய்திடலாம் என்று விஞ்ஞானப் படுத்துகிறான். சூரியனிலிருந்து வந்த அணுக்கதிரினால் பூமியில் ஏற்பட்ட கனி வளங்களையும் பல திரவ வஸ்துக்களையும் தன்னிலைக்கு ஈர்த்து எடுத்து விட்டான்.

இன்று இவன் செயற்கைக்காகச் சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரை ஈர்த்து (SOLAR POWER) அதிலிருந்து பல சாதனை செய்து காட்டுகின்றானாம். இக்காற்றையே கரியாக்கி வாழ்கின்றான்.

1.வரும் சக்தியையே ஒவ்வோர் இடத்திற்கும் தன்னிலைக்குகந்த விஞ்ஞானமாக்கி ஈர்த்து எடுத்து விட்டான்
2.வாழும் மனிதர்கள் இக்காற்றிலிருந்து பிரித்தெடுத்து நல் சுவாசம் எடுப்பதற்குண்டான சக்தியை அழித்து வருகிறான்.
3.இன்றைய விஞ்ஞானத்தினால் வந்த வினைதான் இது…!
4.மனிதனுக்கு ஆறறிவு என்று அவன் பெற்ற அறிவினாலேயே உலக நிலையையே இவ்வாறறிவு படைத்த மனிதன்தான் மாற்றுகின்றான்.

இதனால் இவ்வுலகம் மட்டும் மாறப்போகிறதா…? உலகுடன் தொடர்பு கொண்ட எல்லா மண்டலங்களுமே மாறத்தான் போகின்றன.

இன்று இவ்வுலகில் வாழும் மக்களினால் வந்த வினை தான் அது.

1.ஆத்மீக வழியை வழியமைத்தால் ஏற்பதற்கும் ஆளில்லை.
2.இதன் நிலை அறிந்துதான் பல சித்தர்கள் பல உண்மைகளையே மறைத்தார்கள்.

இன்று குழந்தை பெறுவதற்கே செயற்கை முறைப்படுத்திப் பேழையில் கரு வளர்த்து அக்கருவை தாய்க்குச் செலுத்திக் குழந்தையை வளர விடுகின்றானாம்.

இன்று ஒரு சித்தனால் தாயும் தந்தையும் இல்லாமல் இக்காற்றில் உள்ள சகல சக்தியிலும் கலந்துள்ள இம்மனித ஜீவ அணுவிற்கு வேண்டிய ஜீவ அணுவையே பிரித்தெடுத்து அப்பிரித்ததின் ஜீவ அணுவை வளரவிட்டுக் குழந்தையாக்கிக் காட்ட முடியும்.

புராணக் கதைகளில் படித்திருப்பீர்… ஆறுமுகனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் என்று.

அந்த அறுமுகன் எந்தத் தாயின் கர்ப்பத்தில் இருந்தான் என்பதனைச் சூட்சுமத்தில் மறைத்தார்கள். அனைத்தையுமே இந்நிலையில் வெளியிட்டு நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்திடவும் விரும்பவில்லை.

நம் சக்தியை நல்வழிக்குச் செலுத்திவிட்டால் அந்நிலையில் என்றுமே நிலைத்திருக்கலாம். சக்தியையே… “நமக்குத் தெரிந்தது…! என்று ஆணவத்தால் செய்து காட்டி என்ன பயன்…? என்றுணர்ந்துதான் அன்றே பல சித்தர்களினால் பலவும் மறைக்கப்பட்டன.

1.எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்தினால்
2.சகல நிலையையும் சகலரும் அறிந்திடலாம்.

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

 

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன…?

ஞானகுரு:-
உதாரணமாக… வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்… உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்… அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை… அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது… “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது…” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்… காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே… என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்…
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்…?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது…!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்…?

பயத்தைக் காட்டிலும் படபட… படபட… என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா…!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்…? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே… நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.