நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்

நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்

 

அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.

எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.

தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.

நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.

ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.

காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.

வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.

உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது… தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.

இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.

துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!

விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற… பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.

இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி – ஈஸ்வரபட்டர்

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்… இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்… இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது…?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து…
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்… எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்… தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா…?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை… மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு… இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்… இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை…
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்… நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்… இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்…
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

 

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது… அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! – ஈஸ்வரபட்டர்

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!

தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.

சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.

ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.

மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா…!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது… அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்…!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது…!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து… அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

நிதானத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்லதைக் காக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

நிதானத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்லதைக் காக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று…!

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!

யாம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர்”

யாம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர்”

 

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது…?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன…? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது. இதைப் போல
1.மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும்
2.நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
3.சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
4.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார். நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம்.

1.இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ
2.அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து
2.நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து… ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து… ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக்கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக்கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையைப் பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

தனித்திருந்து… “விழித்திருத்தல் வேண்டும்…”

தனித்திருந்து… “விழித்திருத்தல் வேண்டும்…”

 

விழித்திரு… விழித்திரு… விழித்திரு… “தனித்திரு…!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு… தனித்திரு…” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு… நீ தனித்திரு… என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே… தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக…” வளர்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து… தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு…”

ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.

கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு…” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ… தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ… இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்… அதே போல விழித்திருத்தல் வேண்டும்…!

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி…
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது…”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து… அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று… நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தனித்திருந்து… அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.

இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.

சித்தம் தெளிவானால் வெற்றி நிச்சயம் – ஈஸ்வரபட்டர்

சித்தம் தெளிவானால் வெற்றி நிச்சயம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்பு நிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!

 

சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி… சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே… சீர்படும் சிகரமாகுமே…!