மேல் நோக்கிய சுவாசம் அவசியம் நமக்கு வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மேல் நோக்கிய சுவாசம் அவசியம் நமக்கு வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள்… அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை… உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

அகஸ்தியன் பெற்ற மகா சக்திகள்

அகஸ்தியன் பெற்ற மகா சக்திகள்

 

ஆதியிலே அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே கொசுவோ தேளோ பூரானோ யானையோ புலியோ நரியோ நாயோ எதுவும் வருவதில்லை.
1.காரணம் அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம்
2.அந்த மிருகங்களுக்கு எதிர்நிலையாகிறது… அஞ்சி ஓடுகிறது.

தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள் அகஸ்தியன் உடலிலே வினையாகிறது. அந்த மணமே வினைக்கு நாயகனாகி அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அந்த மணத்தை மற்ற மிருகங்கள் நுகரப்படும் பொழுது அவைகளின் விஷங்கள் ஒடுங்கி விடுகின்றது. அவைகளின் கவனத்தையும் திசை திருப்பி விடுகின்றது. ஆகையினால் மற்ற உயிரினங்கள் அகஸ்தியன் இருக்கும் பக்கம் வருவதில்லை.

1.ஆனால் இந்தக் குழந்தை அவன் ஒன்றும் மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை.
2.தாய் கருவில் தான் அதைப் பெற்றது.
3.ஏனென்றால் விஷத்தன்மை கொண்ட அந்தத் தாவர இனத்தின் மணங்களை
4.கருவிலிருக்கக்கூடிய குழந்தை கவர்ந்ததால் அதே மணத்தை நுகரும் அணுத்தன்மை இந்தக் குழந்தையின் உடலில் உருவாகி
5.அதனுடைய மணம் சிவமாகின்றது… அதுவே வினையாகிறது.
6.வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கிடும் சக்தி பெருகுகிறது அந்தக் குழந்தையிடம்.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

சந்தர்ப்பம்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கும் போது அத்தகைய உண்மைகளை உணர்ந்ததனால்… பிறந்த பின்
1.மற்ற விஷத்தன்மை கொண்ட பச்சிலைகளைத் தேடிச் சென்று
2.அவனுடன் அன்று பழகிய மற்றவர்களுக்கும் இதைக் கொடுத்து
3.விஷத்தன்மையிலிருந்து இருந்து மீட்கும் மார்க்கத்தை அவர்களுக்கும் காட்டி வந்துள்ளான்.

அப்படிப்பட்ட அந்த உண்மையான நிலை பெற்றவன் தான் அகஸ்தியன்.

அவன் காடுகளுக்குள் செல்லப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணங்கள மற்ற உயிரினங்களோ விஷ ஜெந்துக்களோ நுகரும் போது அதனின் விஷத்தை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அதனால் அவைகள் இவன் அருகில் வருவதில்லை.

அதே சமயத்தில் மனிதர்களுக்கு வரும் நோய்களையும் மாற்றும் திறன் பெற்றான் அகஸ்தியன்.
1.நோய்கள் எதுவாக இருப்பினும் பல பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு
2.மற்றவர்களின் உடல்களை நலமாக்கும் திறன் பெற்றான்.

இப்படி அவனுடைய அனுபவங்கள் பெற பெற அவன் சந்தர்ப்பத்தால் தாவர இனங்கள் எப்படி உருவானது…? சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்ற நிலையை அவனால் அறிய முடிகின்றது.

அவனுக்குள் விளைந்த உண்மையின் உணர்வுகளை உலகெங்கிலும் இருப்பினும் அகஸ்தியன் கூறிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

மனிதனுக்குத் தேவைப்படும் நிலைகளுக்கு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்து விட்டனர்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாக தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல்கள் கொண்டவராகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உயிர் குரு – ஈஸ்வரபட்டர்

உயிர் குரு – ஈஸ்வரபட்டர்

 

எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சணங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.

அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.

அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க… இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு…
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.

உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக… வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.

அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே…
2.தெய்வமாக்கியே… தெய்வமாகியே…
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக…
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதி நிலை…” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.

வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு… நாம். நம் குரு தெய்வத்திற்கு… அபிஷேகம் செய்கின்றோம்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே…
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்…! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.

ஆனால்… செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி… ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு…
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.

சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க… செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற… “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்…!”

நல்லதே நடக்கும்.

நம்முடைய மூச்சு எல்லோரையும் நல்லதாக்கச் செய்ய வேண்டும்

நம்முடைய மூச்சு எல்லோரையும் நல்லதாக்கச் செய்ய வேண்டும்

 

இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கிறோம் என்றால் “மரண வாயிலில் இருக்கின்றோம்…”

நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வருவதைக் கவர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி எலக்ட்ரிக் ஆக மாற்றுகின்றது.

அதனுடைய உணர்வில் வேறு ஏதாவது எடுத்தால் விஷத் தன்மையான எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது. மாற்றினாலும் கூட விஷத்தின் தன்மை கொண்ட நட்சத்திரங்களின் உணர்வுகளைப் பிரித்து… அடித்து… மோதியவுடனே புது விதமான உணர்வாக விஷத் தன்மையாக மாறுகிறது… “நியூட்ரான்…”

1.நியூட்ரான் என்ற விஷத் தன்மையாக மாறியபின் அது அதிவேகமாக இயக்கும் சக்தியாக மாறுகிறது
2.எதனையுமே துரித கதியில் அது இயக்குகிறது.

எந்தப் பொருளுக்குள்ளும் அது இணைந்த பின் எதிர்நிலையாகி… புரோட்டான் என்று அதனுடைய சக்திக்கே மாறுகின்றது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

விஞ்ஞானிகள் கதிரியக்கங்களை வைத்து நியூட்ரானைப் பிரிக்கின்றார்கள். பிரித்து அந்த விஷத்தின் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அது பரவும் போது
1.நம் உடல்கள் எல்லாம் அப்படியே இருக்கும்
2.கட்டிடங்களும் அப்படியே இருக்கும்
3.ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் அழிந்துவிடும்

விஷத்தை சாப்பிட்டால் எப்படி இருப்போம்…? அந்த மாதிரியான குண்டுகளைச் செய்து வைத்திருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலுமே இது உண்டு. நம் நாட்டிலும் உண்டு. அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கின்றார்கள்.

அவன் வைத்திருக்கின்றான்… நாம் ஏன் செய்யக் கூடாது…! என்று இந்த ரகசியம் எல்லோருக்கும் வெளி வந்துவிட்டது உலக மக்களை அழித்துக் கொள்வதற்கு தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

1.ஒரு பக்கம் மனிதனை உருவாக்குகின்றான்
2.ஒரு பக்கம் மனிதனையே அழித்துக் கொண்டிருக்கின்றான்.

இந்த நிலைதான் இன்று பெருகி வருகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வருவது மின்னல்களாக மோதுகிறது. கடலில் படுகின்றது. மின்னல் தாக்கும்போது மணலாக மாறுகின்றது.

விஞ்ஞானி அந்த அணுவைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றான். அதிலேயே பல நட்சத்திரங்களின் தனிமங்களைச் சேர்க்கின்றான். அணுகுண்டாக வெடிக்கச் செய்கின்றான்.

மின்னல் எப்படி வெகு தூரத்திற்குப் போகிறதோ அதனின் இயக்கச் சக்தியைக் துரித கதியில் வெப்பத்தின் தன்மை கூட்டி துரித நிலையில் இயக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வருகின்றார்கள். அதை வைத்து இயந்திரங்களை இயக்குகின்றான்.

1.அதில் வரும் விஷக் கழிவுகளைச் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது.
2.கழிவாக்கிய இந்த விஷத்தின் தன்மையைச் சூரியன் எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

மனிதன் விஷத்தன்மை கொண்ட சத்துகளைக் கடலிலிருந்து பிரித்து எடுக்கின்றான். அதனின் தரத்தை உயர்த்துகின்றான். ஆனால் கழிவுகள் வருகிறது.
1.சூரியன் எடுத்து இங்கே கழிவாகப் பரவச் செய்கின்றது.
2.இப்படித்தான் அசுத்தமான அலைகள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றது.

இதைச் சுத்தப்படுத்தும் நிலை வேண்டுமல்லவா.

மனிதனுக்குள் இத்தகைய தீமையின் உணர்வுகள் வளராது தடுக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அந்தக் கழிவு நமக்குள் சேராது சுத்தப்படுத்தினால் ஒழிய நம்மை நாம் காக்க முடியாது. “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தால் தான் தப்ப முடியும்…”

ஆனால் மனிதன் ஈன்று தன்னுடைய சுகத்திற்காக விஷத் தன்மை வாய்ந்த உணர்வுகளைச் சேர்க்கின்றான். புதுப்புது உணர்வுகள் ஆகி புதுப்புது விஷத் தன்மைகள் இங்கே பரவுகின்றது.

நிமோனியா காய்ச்சல் என்று அக்காலத்தில் கொசுக்கள் மூலம் எல்லாம் வந்தது. அப்படி வந்தால் உடனே மரணம் தான். மூளை சிதைவாகும்… மூளைக் காய்ச்சல் வரும்.

அத்தகைய கொசுக்கள் கடிப்பதால் மனிதன் சிந்தனை இழக்கின்றான்… துரித நிலைகள் கொண்டு மடிகின்றான்…! என்று கண்டுபிடிக்கின்றான்.

காரணம் இவன் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை காற்றிலே பரவுகின்றது. ஆனால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்தக் கழிவும் இதுவும் சேர்க்கப்படும் பொழுது
1.இந்த உணர்வு கலந்து விஷப் பூச்சிகளாக மாறுகிறது. விஷ அணுக்களாக மாறுகின்றது
2.இன்று அதிக அளவில் மாட்டின் மாமிசங்களைச் சாப்பிடுகின்றார்கள்.
3.மாட்டிற்குள் இந்தப் பூச்சிகள் குடைந்து மூளைக்குள் சென்று மாட்டையே வீழ்த்தி விடுகின்றது.

இந்த மாதிரித் தான் மனிதனுக்குள் விளைந்த நிலைகள் இன்று ஏராளமாக உண்டு. இதை எப்பொழுது மாற்றுவது…? ஆக மொத்தம் நம்மைக் காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒரு ரோஜாச் செடி மற்ற செடி கொடிகளின் மணங்கள் தனக்குள் வராதபடி தன் மணத்தின் வலுவால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி பாதுகாக்க வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துப் பழகி நமக்குள் பெருக்கி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காற்றிலே தான் அந்த நல்ல சக்தியும் இருக்கின்றது.

மனித உருக் கருவை உருப் பெறச் செய்யும் சக்தி – ஈஸ்வரபட்டர்

மனித உருக் கருவை உருப் பெறச் செய்யும் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

ஓர் பொருளைச் செய்யவோ ஓர் பொருளை வளர்க்கவோ பலமான செயல் வலுக்கூடிய பிறகு தான் அந்தப் பொருள் உருப் பெற்று உபயோகமாகின்றது… அதன் பலனையும் பெற முடிகின்றது.

அதே போல இவ்வுயிரான ஆத்மா உருப் பெறவும் பலவற்றில் மோதி பல சக்திகள் பெற்று இப்பிம்ப நிலை பெறுகிறது.

1.தந்தை உடலின் அமிலம்… தாய் தரும் உயிர்த் துடிப்பு… இவற்றுள் கருவாகி வளர
2.தாயின் சத்து நிலையை உணவாகப் பல கோடி உயிரணுக்களை ஜீவ வளர்ச்சி தந்து
3.கர்ப்ப காலத்தில் எடுக்கவல்ல அறு சுவையின் உயிரணுவின் வளர்ப்புக்கு உணவு தந்து
4.கரு தோன்றி வளர்ந்து பிறப்பில் தன் உணர்வின் உயர்வை உணர்வுக்குகந்த உணவூட்டி
5.இவ்வுயிராத்மாவை வளம் பெற வலுத் தரும் இந்த உடலின் கோடானு கோடி அணுக்களுக்கும்
6.உயிராத்மாவின் சேவை நிலை செய்திடல் வேண்டும்.

உடலின் உயிரணுக்களுக்கொப்ப உணர்வு நிலை தோன்றி… உணர்வின் உந்தலில் எண்ணத்தைச் செலுத்தி… அதனதன் தேவைக்குகந்த உணவை அது அது பெறுகின்றது.

உடல் என்ற உருவக் கூட்டில் நமக்கு நண்பனும் உண்டு… எதிரியும் உண்டு.
1.உடலில் உள்ள உயிரணுக்களில் உணர்வுக்கொத்த சேவை நிலையை நம் உயிராத்மா தந்துதான்
2.தான் குடியிருக்கும் ஆலயத்தைப் பேணி வணங்குகின்றது.

உடலில் ஏற்படும் உபாதைகள் உணர்வில் மோதியவுடன்… இவ்வெண்ணம் மாற்று நிலையில் செல்லாமல்… உணர்வின் வேதனையை உணர்ந்தே உயிரின் ஆத்மாவும் செயல் கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று உடலில் ஏற்படும் இன்ப உனர்விற்கும் இவ்வுயிராத்மாவின் செயல் நடக்கின்றது.

உடலின் உணர்வும் உடலில் வளரும் கோடானு கோடி அணுக்களும் உள்ளதென்றால் அவ்வணுக்களில் பல நிலைகள் உண்டு. இந்த உடல் திடம் கொள்ள… ஆறு நிலையான அமிலச் சேர்க்கையின் வளர்ச்சி கூடி ஏழாம் உருவ திடச் செயல் தான் “இப்பிம்பக் கூடு…!”

இந்த உடல் கலவையில் எல்லாமே உண்டு…!

இந்தப் பூமியில் பல இரசாயண அமிலத் தன்மைகள் வளர்ந்துள்ளனவோ அவற்றின் சீரிய குணம் கொண்ட ரசச் சக்தியும் தங்கச் சத்தும் இரும்பின் கருமை நிற அமில சத்தும் காந்த மின் ஒளி நிலையும் இதன் தொடர்பில் பல இரசாயண அமிலங்களும் உண்டு.

நீர் வாயு குண்டு… அணு குண்டு (HYDROGEN AND NUCLEAR BOMBS) போன்றவற்றைச் செய்விக்க பல உலோக மண் கலவைகளில் இருந்து அதனுடைய சத்தை நுண்ணிய அளவில் எடுத்துச் செய்விக்கின்றனர்.

அந்த நுண்ணிய பொருளினால் உலக்த்தையே அழிக்கவல்ல சத்து நிலை எப்படிச் சேர்க்கபப்டுகின்றதோ அதைப் போன்று இந்த உடல் சேர்த்த அமிலத்தில் சில விஷத் தன்மை கொண்ட அமிலச் சத்துகளும் உண்டு.

மனிதன் இட்ட பெயரில் அவ்வமிலத்தின் செயல் இல்லை. (விஞ்ஞானம் இன்னும் அதைக் காணவில்லை).

உயிரணுக்கள் ஜீவ சரீர ஞானச் செயல்… சொல்லாற்றல் கொண்ட… உருவ உணர்வு எண்ணச் சரீரம் அமைய… அதற்கு வேண்டிய அமிலக் கூறுகள் இந்தப் பூமியில் குறிப்பிட்ட சில இடங்களில் உண்டு.

கடலில் மலைப் பிரேதசங்கள் சிலவற்றிலும்… ஆழ் கிணறுகளிலும்… மனிதக் கரு உருப் பெற வேண்டிய அந்த அமிலச் சத்தை இந்தப் பூமி எடுத்து வெளிக்கக்கும் காற்றின் தொடர்பலைக்குச் செயல்பட
1.பல தெய்வத் தொடர்பு கொண்ட சப்தரிஷிகள் செயல் உருவிலேயே
2.பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே செயல்படுத்தியுள்ளனர்.

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

நம் எண்ணத்தின் கூர்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

 

ரோட்டிலே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அப்போது நெடு நாள் பார்க்காத ஒரு நண்பரைப் பார்க்கின்றோம். அந்த ஆர்வத்தில் செல்கின்றோம்.

இரண்டு பேரும் சந்திக்கக்கூடிய நேரத்திலே அந்த இடம் அசுத்தமாக இருக்கின்றது.. அசூசையாக இருக்கின்றது. ஆனால் நண்பன் என்ற ஆர்வத்தில் எண்ணும் பொழுது அதை நுகர்வது இல்லை.

1.பேச்செல்லாம் முடிந்த பின்பு திரும்பிப் பார்க்கும் போதுதான்
2.ஐய்யய்யோ… இங்கே நின்று கொண்டல்லவா இவ்வளவு நேரம் பேசியிருக்கிறோம் என்று தெரிகிறது… நாற்றமும் அப்போது தான் தெரிகிறது.

அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்தக் கூர்மையான எண்ணங்கள் தான் அப்படி வருகின்றது.

ஒரு சிலர் என்ன செய்வார்கள்…?

எப்பொழுது பார்த்தாலும் குறைகளையே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் பார்த்தால் ஐயோ… இங்கே ஏதோ நாற்றம் அடிக்கிறது என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாற்றத்தை எண்ணாதவர்கள் அங்கே வந்த பின் அவர்களுக்கு அது தெரியாது. ஆனால் இவர்கள் சொன்ன பின் அப்படியா… இப்போது தான் தெரிகிறது…! என்றும் சொல்வார்கள்.

அதே உணர்வை நுகர்ந்த பின் அவர் செய்த நிலையை ஆமாம் என்று சொல்வார்கள்.

இது எல்லாம் எது இயக்குகின்றது…? கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய்…! என்பது போன்று அதனின் உணர்வு கொண்டே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே நாம் எதை எண்ண வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று சதா எண்ண வேண்டும். அது தான் தியானம்…!

எப்பொழுது கெட்டதைச் சந்திக்கின்றோமோ அந்தக் கெட்டது நமக்குள் வராதபடி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பையனுக்கு உடம்புச் சரியில்லை என்றால் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் பையன் உடலில் படர வேண்டும். அவன் உடல் நலமாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சி பையனுடைய உணர்வு (உடல் நலக்குறைவான) நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

அவனிடமும் இதைச் சொல்லி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடு… உனக்கு நல்லதாகும்…!” என்று நினைவுபடுத்த வேண்டும். நாம் சொல்லிப் பதிவு செய்ததை அவனும் எண்ணி எடுக்கும்பொழுது அவனைப் பாதுகாத்துக் கொள்கின்றான்.

செடி கொடிகள் எப்படித் தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. அதே போல் மாடு ஆடு எல்லாம் முகர்ந்து பார்க்கிறது. தனக்கு உகந்ததாக இல்லை என்றால் விலகிச் சென்று விடுகின்றது.

ஆனால் மனிதனாக இருக்கும் நாம் கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை வேக வைத்து விஷத்தை நீக்கி விட்டுப் பலசரக்குகளை அதற்குள் போட்டு நமக்கு உகந்ததாகச் சுவையாக உருவாக்கி உட்கொண்டு மகிழ்கின்றோம்.

அதைப் போன்று தான்
1.தீமை என்ற உணர்வு வந்தாலும் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
2.இருளை நீக்கி ஒளியான அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

விஞ்ஞானி ஆடு மாடு மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்துப் புதிது புதிதாக மாற்றுகின்றான். செடி கொடிகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து வீரிய விதைகளை உருவாக்குகின்றான்.

அது போல் நாமும்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்த்துத் தீய வினைகளை மாற்றி கொள்ள முடியும்.
2.தீமைகளில் இருந்து நாம் விடுபட முடியும் அருள் ஒளியை நமக்குள் பெருக்கவும் முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது.
1.சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்…
2.“அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

 

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவன் யார் – ஈஸ்வரபட்டர்

பாற்கடலில் பள்ளி கொண்ட மூலவன் யார் – ஈஸ்வரபட்டர்

 

“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே… இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்…!

1.பலவாக மோதுண்டு… பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.

மனிதச் சுவை ஆறு…! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை… வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்…
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன…? என்று நாம் உணரவில்லை.

மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும் இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று…
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது…?

ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்… உருண்டோடும்… இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்…”

அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்…!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.

கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.

ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.

1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்…!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே…!

கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது…? என்ற வினா எழும்பலாம்.

உண்மை நடை முறையை உணர்த்தி… ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி…
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

 

நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.

இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது… சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.

உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது… ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.

அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.

எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்…” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நமக்குள் இருப்பது பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.

ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி…! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்தித்திறோமா…? இல்லை.

நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது… நாம் சண்டை போட்டது… அடுத்தவர் சொன்னது… அடுத்தவர் சங்கடப்பட்டது… நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.

நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்… நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது… நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா…?

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.

ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த… நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.

1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.

அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது…?

நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.

எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.

இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.

ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.

ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்