ஏகாந்த நிலை

ஏகாந்த நிலை

 

நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியான நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அந்த சக்தி மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்றும் தங்கள் தாய் தந்தையருக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் இப்படி யாரெல்லாம் தியானிக்கின்றீர்களோ அப்பொழுது பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…!

இந்த மனித உடல் கிடைத்த பின் இந்த உடலிலிருந்தே சொர்க்க பூமி என்றும்
1.நம் உயிர் சொர்க்கவாசல் என்றும்
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதன் வழி (உயிர்) சென்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நமக்கு எதுவுமே சொந்தமானது இல்லை… நிரந்தரமானது என்று எதுவும் இல்லை.

உயிருடன் ஒன்றிய இந்த உணர்வை ஒளியாக மாற்றுவதுதான் நமக்குச் சொந்தம். பேரின்பப் பெருவாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கின்றது. அதுவே ஏகாந்த நிலை என்று ஆகின்றது.

இதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

நாம் அனைவரிடமும் பழகுகின்றோம். பழகும் போது ஒவ்வொருவர் உடலிலும் பகைமை உணர்வுகள் சலிப்பு உணர்வுகள் குரோத உணர்வுகள் கோப உணர்வுகள் கொதித்தெழும் உணர்வுகள் இதைப் போன்று எத்தனையோ உணர்வுகளை நாம் கேட்டறிகின்றோம்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுப்பதற்காக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.நாம் பார்ப்போர் உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்.
4.அவர் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.எங்கள் பார்வையில் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
7.எங்களைப் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
8.இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஏகாதசி விரதம்…!

எத்தகைய பகைமை உணர்வும் நமக்குள் உருவாகாதபடி அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்கி அனைவருடைய எண்ணங்களையும் நமக்குள் ஒன்றாகச் சேர்த்து பகைமையற்ற வாழ்க்கை வாழும் இந்த விரதம் தான் விரதம்.

ஆக.. எந்தத் தவறும் நமக்குள் உட்புகாதபடி பாதுகாத்துக் கொள்வதே ஏகாதசி விரதம்.

நேற்று வியாழன்… இன்று பூமி… நாளை சந்திரனா…! – ஈஸ்வரபட்டர்

நேற்று வியாழன்… இன்று பூமி… நாளை சந்திரனா… – ஈஸ்வரபட்டர்

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் நிலை உள்ளது. தொடர் நிலை இல்லாத செயல் நிலை எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு. வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடர் இல்லாமல் ஒன்றில்லை.

வியாழனில் இருந்து தான் நம் பூமிக்கு உயிரணுக்கள் வந்து தோன்றின என்பதனை ஏற்கனவே உணர்த்தினேன்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி தான் வியாழ மண்டலம். ஆனால்
1.மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
2.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்களும் இன்று அங்கில்லை.

ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லாரும்…!

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனில் இருந்து வந்தது தான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே…
1.தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு
2.சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகி கொண்டவுடன்
3.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
4.நீர் நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
5.சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர்ச்சியை இப்பூமியில் வளரவிட்டு
6.அதன் தொடர் நிலையிலிருந்து வந்தது தான் இக்கலி காலம் வரை இப்பூமியின் இன்றைய நிலை.

சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலை உண்டு…!

நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட போகர் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப்பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை தான் போகரின் நிலை.

முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்துச் செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.

1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை – ரிஷிகளுக்கும் ஆசை உண்டு
2.ஆசை இல்லாவிட்டால் எதுவுமே இல்லை…!

பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில்தான் அனைத்துமே செயல் கொள்கின்றது. வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் தான் நம் பூமி சக்தி பெற்றது…!

நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப்போகின்றது. சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால்தான் செயல்படுத்திட முடிந்திடும்.

1.சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை ஒரு வருடமல்ல… இரண்டு வருடமல்ல…!
2.ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற்சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால்… கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால்… “மாற்றம் கொள்ளப் போகின்றது…”

நம் பூமியின் மாற்றத்தினால்…
1.இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப்போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால்
2.நம் பூமி மட்டுமல்ல இதன் தொடர்பினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
3.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
4.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை
5.இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது…!

இன்றுள்ளவர்களின் நிலை சாங்கிய சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாத நிலைகளாகத்தான் உள்ளது – நடந்த நிகழ்ச்சி

இன்றுள்ளவர்களின் நிலை சாங்கிய சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாத நிலைகளாகத்தான் உள்ளது – நடந்த நிகழ்ச்சி

 

எம்முடன் (ஞானகுரு) 20 வருடம் பழகியவர்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் இங்கே வந்தால் (தபோவனம்) தீட்டு…! போகக் கூடாது…! என்று எண்ணுகின்றார்கள்.

1.இறந்த பின் இன்னொரு இடத்திற்குப் போகக் கூடாதா…?
2.கோயிலுக்குப் போகக் கூடாதா…?
3.கோயிலுக்குப் போகாமல் நல்ல நிலை பெறச் செய்வது எது…?

நல்ல நிலை பெறச் செய்வது தான் ஆலயம்…! அனைவரும் கூடி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவை ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும். இது தான் ஞானிகள் காட்டியது.

தீட்டு… தோஷம்… என்று சொல்லிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 48 நாட்கள் கழித்து இன்னொரு உடலுக்குள் போன பிற்பாடு தான் இங்கே வரப்போகின்றார்கள்.

இது எல்லாம் எந்த நல்ல நிலையைச் செய்தாலும் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை பெற்றாலும் யாம் சொன்ன நிலைகளை மறந்து விடுகின்றார்கள்.

இங்கிருந்து திருப்பதிக்குப் போனவுடனே உண்டியலில் காசு போடுகின்றோம் அல்லவா…? போகும் போது என் சார்பாக நீங்கள் என் காசையும் உண்டியலிலே போட்டு விடுங்கள்…! என்பார்கள்.

ஏனென்றால் இப்படித் தேடிக் கொண்டு வந்து போடச் சொன்னால் அதற்காக வேண்டி நமக்குச் “செல்வத்தைக் கொடுப்பான்…” என்ற நிலைகளில் அந்தப் பழக்கத்தில் தான் சிலர் உள்ளார்கள்.

அதே பழக்கத்தில் தான் இங்கே என்ன செய்கின்றார்கள்…?

“இறந்து விட்டார்…” என்று சாங்கியம் செய்து சாம்பலை எடுத்துக் கரைத்து விட்டு ஆற்றுக்குச் சென்று எல்லாரும் குளித்துவிட்டு மந்திரத்தைச் சொல்லி வீட்டிற்கு வந்து எண்ணெய் தேய்த்து முழுகி விட்டுச் சுற்றமும் உறவும் புத்தாடைகள் கொடுத்து அணிகின்றனர்.

பின் மாவிளக்கு செய்து நெய் தீபம் இட்டு விநாயகருக்குக் கொண்டு அர்ச்சனை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் பழக்கம் தான் உள்ளது.

1.இந்தப் பக்குவம் பெற்ற அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற்று
3.அவர் (இறந்தவர்) உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நேரடியாக விண் செலுத்த வரவில்லை.

ஏனென்றால் தீட்டு ஒட்டிகொள்கின்றது என்ற நிலைகளில் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு அந்த மெய் வழியைக் காணும் நிலைகளைத் தடைப்படுத்திடும் காலமாகத் தான் உள்ளது. இதிலிருந்து விடுபடும் காலம் எப்பொழுது வரப்போகின்றது…? என்று தெரியவில்லை.

ஏனென்றால் என்னுடன் (ஞானகுரு) நீண்ட நாள் பழக்கமான சித்தையைன் என்ற அன்பர் ஆன்மா திடீரென்று மறைந்து விட்டது. தகவல் கொடுத்தார்கள். தியானத்தின் மூலம் உந்தி மோட்சத்திற்கு அனுப்பி விட்டோம்.

பழனிச்சாமி இங்கே வருகின்றார். எல்லாம் இருக்கின்றது… ஆனால் மருமகன் இறந்து விட்டார்…! என்றால் உடனே அழுகை வருகின்றது.

ஏன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா..? என்றேன்.

“தீட்டு…! என்று சொல்கின்றார்கள்…” என்கிறார்.

நாம் அனைவரும் மோட்ச லோகம் போக வேண்டும்… நாம் அதற்காக மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத் தியானிக்க வேண்டும்…! என்ற நிலைகள் இல்லை.

செய்த பாவங்களை நீக்குவதற்காகச் சாங்கியங்கள் செய்யும் நிலைக்குத் தான் வருகின்றார்கள். இந்த உணர்வுகள் அடிப்பட்டால் மந்திரத்திற்குள் சிக்கி இன்னொருவனின் ஏவலுக்கு ஆளாகி ஆவியின் நிலையாகத் தான் இயக்க முடியுமே தவிர உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது.

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இதைத் தெளிவாக்குகின்றோம்.
1.நாம் எதனின் வளர்ச்சியில் குரு காட்டிய வழியில் அருள் உணர்வைப் பெறுகின்றோமோ
2.அதன் வழியிலேயே தான் செல்ல வேண்டும்.

ஏனென்றால் இன்று விஷம் கொண்ட உலகில் வாழுகின்றோம். அதனை அகற்றிடும் நிலைகள் பெற வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த ஆன்மாவை உந்தி விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வை… அந்த இருளை அகற்றிவிட்டால் “அவர் நினைவு வரும்போதெல்லாம்..” நமக்குள் வரும் நஞ்சினை மாற்றும் அரும் பெரும் சக்தியாக வரும்.

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் யாரையும் இனி நாம் இங்கே இந்தப் பூமிக்குள் இழுக்கக் கூடாது. அவர்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அந்த உடல் பெறும் உணர்வுகளை அங்கே கருக்க வேண்டுமே தவிர “சுட்ட சாம்பலை இங்கே கருக்கிவிட்டால் பாவம் போய்விடும்…” என்றால் அசாத்தியமான நிலைகள் கொண்டு நமக்குள் தவறின் வழிகளிலே நாம் பிழை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.

என்னிடம் சொன்னவுடனேயே அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் யாம் இணைத்து விட்டோம். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒரு ஈ கூட வரவில்லை. ஏனென்றால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம்…!

கோயிலுக்குள் போகக் கூடாது… போனால் பாவமாம்…! ஆனால் கோவிலுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…? கோவிலையே தூக்கிப் பேர்த்து எடுத்து விடுவார்களா…?

நல்ல ஒழுக்கம் கொண்டு நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்கு யாம் சொன்னாலும் இந்தத் தியான வழியில் என்னுடன் பழகி 20 வருட காலத்தில் அனுபவப்பட்ட குடும்பமே இந்த நிலையானால் இன்று வருவோர் என்ன நிலை ஆவார்கள்…?

1.அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையையும்
2.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் நிலையையும்
3.என்றுமே பிறவியில்லா நிலை பெற வேண்டும் என்றும்
4.நாம் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறோம்.

ஆனல் இவர்கள் வழிபடும் தெய்வம் தான் இவர்களைக் காப்பாற்றும் என்றால் அவர்கள் குடும்பத்தில் ஏன் சிக்கல் வருகின்றது…?

ஏனென்றால் இதைப் போன்ற நிலையில் ஒன்றை நாம் வளர்த்துக் கொண்டால்… “நான்…” என்ற நிலைகளில் மற்றவர்களை அடக்க வேண்டுமென்ற உணர்வுகள் அங்கே வரப்படும் பொழுதுதான் பகைமை என்ற உணர்வுகளாகின்றது.

அதனால் ஒருவருக்கொருவர் வேதனை என்ற உணர்வுகள் வந்து… கடும் நோயாகி மனிதனல்லாத உருவாக மாற்றும் நிலையே வருகின்ற்து.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த மறைந்த நிலைகளைத் தான் மீண்டும் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இன்று விஞ்ஞான உலகில் மனிதனுடைய உருவே முழுமையாக அழியும் தன்மையிலிருந்து மீண்டிடும் நிலையைப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்… கேட்பார் யாருமில்லை…!

ஏனென்றால் 20 வருடம் பழகியவர்களே இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால் அப்புறம் எப்படி இருக்கும்…? விடிய விடிய உட்கார்ந்து எல்லா உண்மைகளையும் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். நான் ஞானம் பெற்ற நிலை… வளர்ந்த நிலை…! என்று எல்லாமே சொல்லியிருக்கின்றேன். அவர்களே இந்த நிலையில் இருக்கின்றனர் என்றால் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கின்றது…?

ஏனென்றால் எல்லாரும் அருள் ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கின்றது. என் ஆசை என்றும் குறைந்ததில்லை…! எல்லாரும் பெற வேண்டுமென்ற ஆசையின் உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த அருள் ஒளியை நாம் பெறுகின்றோம்.

ஆனால் இப்படிச் சாங்கியத்தை செய்து பாவத்தைப் போக்கும் ஆசை இருந்தால் அவர்கள் அந்த வழியிலே போகட்டும்.

ஒவ்வொரு நொடிகளிலும் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் நிலையை எடுக்கின்றோமோ நம்மை அறியாது சில குறைகள் எடுத்தால் அருள் ஒளி பெற்று நம்மை நாம் திருத்தி கொள்ளப் பழகுதல் வேண்டும்.

பிறரின் குறைகளைப் பற்றிச் சொல்லும் போது தனக்குள் இருக்கும் குறை வருவதில்லை. குறைகளை உணர்ந்தாலும் குறையைத் தான் திருப்பி வளர்க்க முடிகின்றதே தவிர குறையை நீக்கும் மார்க்கம் இல்லை.

ஆகவே நம்மை அறியாது இயக்கும் இது போன்ற அறியாமையிலிருந்து மீள்தல் வேண்டும். அப்படி மீள்வதற்கே இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிப்பது…!

அண்டத்திலே உணவு இல்லாது எந்தச் சக்தியும் ஜீவிப்பதில்லை… செயல்படுவதில்லை – ஈஸ்வரபட்டர்

அண்டத்திலே உணவு இல்லாது எந்தச் சக்தியும் ஜீவிப்பதில்லை… செயல்படுவதில்லை – ஈஸ்வரபட்டர்

இந்த உலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்தியையும்
2.பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத்தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு அமிலமாய் ஆவி நிலை கொண்டு நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் (இரத்தம்) உருப்பெற்று நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் செல்கிறது.

1.அந்த உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான்
2.நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு
3.எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளது.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால், நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா..? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்கு பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்கின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது. எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகின்றதோ அந்த நிலை போன்றுதான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

1.நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும்
2.அமில சக்தியின் ஆவி நிலைதான் நம் உணவிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உணவை உட்கொண்டு பழகினோமோ அதே அமில சக்தியின் வளர்ச்சியின் நிலை கொண்ட நிலையைத்தான் நம் உடல் ஏற்கிறது.

முசுக்கொட்டைத் தளையை மட்டும் உட் கொண்டிடும் பட்டுப்புழுவின் உடலிலிருந்து அது எடுத்த ஆவியின் அமிலத்தினால் தான் பட்டை எடுக்க முடியும். அந்தப் பட்டுப் புழு முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
1.அதைப் போல்தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல் நிலை நடக்கின்றது.
2.மனிதனின் நிலையும் அதுவே…!
3.மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.
4.உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து தான் மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

மனித உடல் என்ற கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்துதான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

1.நாம் உண்ணும் உணவு ஆவியாய்… அமிலமாய்… உதிர சக்தி பெறுகின்றது
2.அவ்வாவி ஆன பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

அந்த ஆவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிர் அணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பிலுள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன. ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ்வுயிரணுக்களின் நிலையிருந்தால்தான் வளர்ந்திடும்.

இந்த நிலையை வைத்துத்தான்…
1.நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன என்று உணர்த்தினேன்,

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

 

கல்வியில் சிறந்தவன் ஆனாலும் ஞானம் இல்லை என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.

ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவார்கள். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.

மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தை பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.

குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகள் வளர்த்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ragging) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.

இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்

கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?

எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.

தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.

இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ர அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.

நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.

அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.

ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.

தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.

ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.

கல்வி எதற்கு…?

1.ஞானம் இல்லை என்றால் கல்வியைக் காக்கும் நிலை இல்லை.
2.கல்வியால் ஞானம் வர முடியாது
3.ஞானத்தால் கல்வியின் நிலைகள் வளர்க்க முடியும்.

ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

நம் பூமியில் ஏற்பட்ட முதல் இரண்டு பிரளயங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியில் ஏற்பட்ட முதல் இரண்டு பிரளயங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் பூமிக்கு மேல் வியாழன் மண்டலம் பெரியது. சூரியனின் நிலை மிகவும் பெரியது. இந்த நிலையில் சூரியனை வியாழனின் கிரகணம் பிடித்தவுடன் சூரியனைத் தாண்டி வியாழனின் செல்லும் நிலையில் நம் பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட நிலையில் பால்வெளி மண்டலத்தில் “வியாழனின் சக்தி நம் பூமியின் மேல் நேர்ப்பார்வையில் பட்டது…”

அப்படிப் பட்டவுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்திகள் உறைந்து வேகமாய் “வியாழனின் இயற்கைக் குணமான அதிக நீரைக் கொண்ட சக்தியுடைய அமில உப்பு…” இப்பால்வெளி மண்டலத்தில் கலந்து வேகமாய்ப் படர்ந்து உறைந்தது.

வியாழன் சூரிய கிரகணத்தைத் தாண்டிய நிலையில்
1.உப்புக் கலந்த உறைந்த அந்த அமில சக்தியானது
2.சூரியனின் ஒளி பட்டவுடன் கரைந்து நம் பூமிக்குள் வரத் தொடங்கியது.

பூமியில் எப்பொழுதும் இருந்த இயற்கை நிலையுடன் அதிக சக்தி கொண்ட இவ்வுப்புக் கலந்த அமில நிலை மோதுண்டவுடன் நம் பூமியின் நிலை ஏற்காமல் பிரளய நிலை (முதல் பிரளயம்) ஏற்பட்டது.

அதன் சுழற்சி வட்டத்தில் சிக்கிக் கொண்ட நீர் நிலைகள்தான் நம் பூமிக்கு இரண்டு பக்கமும் “வட துருவ தென் துருவ நீர் நிலைகள். அடர்ந்த கடல்களாகப் பெருகியது…”

அதன் தொடர்ச்சியிலிருந்து சுழன்ற நிலை கொண்டு நம் பூமி முதலில் சேமித்துப் பழக்கப்படுத்திய இயற்கைத் தன்மை மாறி இத்தாவர வர்க்கங்களும் முதல் பிரளயத்திற்கும் பிறகு நீருடனே நீர் நிலைகளுள்ள இடத்தில் நீருக்கடியில் ஆரம்ப காலத்தில் வளர ஆரம்பித்தன.

அதன் தொடர்ச்சியிலிருந்து ஏற்பட்ட இன வர்க்கங்கள் தான் கொசுக்களைப் போன்று நுண்ணிய உடல்களைக் கொண்ட உயிரணுக்கள் நீர்நிலைகளில் தோன்றி நீர் நிலைகளின் மேல் படர்ந்து வளர்ந்தது.

அதன் தொடர்ச்சியில் அதன் சுவாசத்தில் அதன் கழிவின் உஷ்ண நிலையிலிருந்து சிறு சிறு முட்டைகள் தோன்றி அதிலிருந்து எறும்பின் தலையை ஒத்த தலையுடைய சிறு வால் நீண்ட உயிரணுக்கள் வளர்ச்சி கொண்டன.

அந்தத் தொடரில் நீரிலிருந்து வளர்ந்த இவ்வுயிரணுவே சிறு சிறு மாற்றம் கொண்ட நிலையில் ஜீவ உடல் கொண்ட உயிர்ப்பிராணி வர்க்கத்திற்கு வந்ததின் தொடர் நிலையிலிருந்துதான் பல நிலைகள் மாறியது.

பல ஆயிரம் கோடி ஆண்டுகள் அந்நிலையின் வளர்ச்சிக்குப் பிறகு அடுத்த பிரளயம் ஏற்பட்டது.

1.முதல் வளர்ச்சி நிலையில் உயிரணுவாய் ஜீவ உடல்களைக் கொண்ட ஜீவன்களின் நிலை
2.அதன் வளர்ச்சியில் அது சேமித்த சக்தியின் நிலை கொண்டு
3.அடுத்த பிரளயத்தில் அவ்வுயிரணுக்களே தோன்றிய நிலையில்தான்
4.மனித உடல் கொண்ட அறிவு வளர்ச்சியுற்ற ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை வந்தது.

இரண்டாவது பிரளயத்தினால் நம் உலகிற்கு எந்த நிலை கொண்ட மாற்றம் வந்தது…? இரண்டாவது பிரளயத்திற்கும் வியாழன் தான் காரணம்…! வியாழனிலிருந்துதான் நம் பூமிக்கு மனிதர்கள் வாழும் நிலையின் தொடர் வந்தது.

நம் பூமியில் இன்று எப்படி நமது நிலை உள்ளதோ அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வியாழனிலும் நம்மை ஒத்த மனித இன வர்க்கமும் அடர்ந்த நீர் நிலைகளும் இருந்தன.

1.அறிவின் வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் ஆசையின் நிலையினால்தான்
2.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால் இன்று வியாழனில் மனித ஆத்மாக்கள் இல்லாத நிலை…!

ஆனால் நம் பூமிக்கு வியாழனில் இருந்துதான் அதன் தொடர் சக்தியின் உருவிலிருந்துதான் நம் உயிராத்மாக்கள் தோன்றி “இன்று இங்கு நாம் வாழும் நிலை உள்ளது…”

இந்தக் கலி வரை ஏழு ஜென்மங்களில் இன்று மனிதராய் வாழ்பவரில் பலர் உள்ளனர். இக்கால நிலையிலேயே மனித உடல்களில் இருந்து மாறு கொண்ட மிருக வர்க்கத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளாகவே பல உயிர் ஆத்மாக்கள் சென்று விட்டன. மிருக உடலிலிருந்து மாறிக் கொசுவாகவும் ஈ எறும்பு புழு பூச்சியாகவும் பல ஆத்மாக்களின் நிலை சென்று விட்டன.

இம் மண்டலத்தில் வந்து வாழக் குடியேறிய உயிராத்மக்களுக்கு வந்த சக்தி ஏழு உடல்களை ஏற்கும் சக்திதான் உண்டு. அதிலிருந்து மாறுபட்டுத் தோன்றிப் பல நிலைகள் கொண்ட உடல்களை ஏற்று எண்ணிலடங்கா உயிரணுக்கள் வாழ்கின்றன.

ஓர் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியில் உயிராத்மாவாய் பல ஜென்மங்கள் மாறு கொண்டு பல நிலைகளைப் பெற்று வாழும் தருவாயில் ஒவ்வோர் உயிராத்மாவும் பல உயிரணுக்களை உண்டு பண்ணியே தான் வாழ்கின்றது.

“எந்த உயிரணுவும் உணவில்லாமல் வாழ்ந்திட முடியாது…!” அது எடுக்கும் ஆகாரத்தில் அதன் சக்தியை வளர்த்த பிறகு அது வெளிப்படுத்தும் மலத்திலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுகின்றன.

1.உண்டு… கழித்து… வாழ்ந்திடும்… உயிராத்மாக்களினால் எண்ணிலடங்கா உயிரணுக்கள் தோன்றி
2.அவை அவை தோன்றிய நிலைக்கொப்ப பல நிலைகளில் வளர்ச்சி கொள்கின்றன.

ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…?

 

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

கிரகணத்திற்கும் பிரளயத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கிரகணத்திற்கும் பிரளயத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும் அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும் ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும் அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத் தன்மை மாறு கொள்கின்றது.

அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கை குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.

1.சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் எந்த மண்டலம் தாண்டி ஓடுகின்றதோ
2.அம் மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் நம் பூமிக்கு ஏற்பட்டு
3.அதிலிருந்து இயற்கையிலேயே நற்சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.

பிப்ரவரி 16.02.1980ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி கேதுவின் ஓட்டம் சென்றதனால் கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதரின் தாக்குதல் நம் பூமியைத் தாக்கியது.

கேதுவின் தன்மையில் விஷத் தன்மை அதிகம்…!

நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத் தன்மை கொண்டதாகவும் சிலது நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம் மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது.

இந்தக் கேது மண்டலம் இல்லாவிட்டால்…
1.பால்வெளி மண்டலமே மற்ற மண்டலங்களுக்கு நன்மை தரும் சக்தியாக இல்லாதபடி
2.பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில்
விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.

நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

எண்ணத்தில் கூட கேதுவின் சக்தியை எண்ண முடியாதபடி எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத் தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.

சூரியனின் ஈர்ப்பிலுள்ள இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும். கேதுவின் கிரகணம் பிடித்ததினால் நம் பூமியின் மேல் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கி விட்டது.

சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்பட்டு விட்டது. பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட்டு விட்டது.

1.நம் பூமியின் மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு இக்கேதுவின் நிலை சாதகப்படுத்திச் சென்றது.
2.நல் வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்… …
3.நம் முன்னோர்கள் எக் கிரகணம் பிடித்ததோ இந்த நிலையில் வாழ…?! என்று தெரிந்தோ தெரியாமலோ செப்பினர்.
நம் பூமி பல கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொண்டு விட்டது.

சுழன்று கொண்டே உள்ள இம் மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை… ஒன்று அதன் ஓடும் நிலையில் ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்…
1.பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் (கிரகணத்திற்குப் பின்) மாறும் நிலை கொள்கின்றது.

நம் பூமியில் தோன்றிய உயிர் அணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆன பிறகு இப்பூமியின் முதல் பிரளய காலத்திற்குப் பின் வந்தது.

முதல் பிரளய நிலைக்குப் பிறகுதான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவங்களில் நீர் நிலைகளும் கிடைத்தது.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில் நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் அதை ஏற்பதில்லை.

1.அதை ஏற்காதபடி… வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில்… பல இன்னல்களை
2.இம்மண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன. அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்த நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதும் சுழற்சியில் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல் அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

நம் உடல் மண்டல ஆரோக்கிய நிலையே… கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும் எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
1.உடலிலுள்ள இவ் எதிர்ப்பு சக்தியினால்
2.மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தைத் தாக்கிடாது.

அந்த நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திருந்தால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும். சூரியனைத் தாண்டிக் கேது சென்ற போதும் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்றிருக்காது.

ஆனால் நம் பூமியிலிருந்து தான்
1.நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து
2.ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!
3.இந்த நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி “நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து நாம் பெற்ற பொக்கிஷம்…!”

சூரியனுக்கும் பூமிக்கும் சமீபத்தில் எப்படிக் கேது கிரகணம் பிடித்ததோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் வியாழனின் கிரகணம் பிடித்தது. இது முதல் பிரளயத்திற்கு முன் நடந்தது…!

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் – விளக்கம்

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் – விளக்கம்

 

காலையில் எப்படி இருந்தாலும் நீங்கள் கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

1.பின் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் இந்த அருள் உணர்வை எடுத்துச் சேர்க்க வேண்டும். இப்படி இருவருமே எடுத்து உணர்வை ஒளியாக மாற்றினால்தான் அந்த ஒளியின் அணுவாக மாற்றும் தன்மை அடைகின்றது.

அதைத் தான் எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்று சொல்வது…!

உதாரணமாக குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ நோய்வாய்ப்பட்டிருந்தால் பற்று கொண்ட நிலையில் அவரின் உணர்வை நுகர்ந்து விட்டால் அது நமக்குள்ளும் அணுவாக விளைகின்றது.

அந்த நோயாளி இறந்து விட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்து நோயாக உருவாக்குகின்றது. இது போன்ற நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும்.

என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்றும் அதே போல் என் மனைவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மையை அதனோடு இணைக்கப்படும்போது “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்ற நிலை வருகிறது.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்…
1.அன்புடன் பரிவுடன் நோய் உள்ளோரைக் கேட்டறிந்தால்
2.அந்த உணர்வு நமக்குள் எமனாகின்றது…
3.இந்த எண்ணம்தான் எமனாகின்றது.

எந்தக் குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ “வேதனை வேதனை…” என்றால் அதன் வழி கொண்டு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

வேதனை என்பதே விஷம்…!

உடலுக்குள் வேதனை அதிகமானால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த விஷம் கொண்ட உடலாக நம் உயிர் உருவாக்கிவிடுகிறது. பாம்பினமாகவோ அல்லது விஷம் கொண்ட ஜெந்துக்களாகவோ அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக… இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் வேதனை உடல் முழுவதும் விஷமாகி விட்டால் மனிதனுடைய நல்ல சிந்தனை இழக்கப் படுகின்றது.

அப்பொழுது நாம் எங்கே செல்கின்றோம்…?

மனைவிக்குக் கணவன் இல்லை… மனைவியும் இதே போல் வேதனைப்பட்டால் கணவனுக்கும் மனைவி இல்லை…!

ஏனென்றால் நாம் எடுக்கும் உணர்வு
1.மற்றொன்றோடு ஒன்றி வரப்படும்போது இங்கே தன் மனைவியைப் பிரிக்கின்றது அல்லது கணவனைப் பிரிக்கின்றது.
2.அருள் ஒளியைக் குறைக்கின்றது… நஞ்சு என்ற நிலையை வளர்க்கின்றது.
3.நஞ்சிற்குள் நம் நல்ல உணர்வுகள் அடிமையாகின்றது.

அடிமையான பின் அதன் உணர்வின் உடலாக மாற்றிவிடுகின்றது இது எல்லாம் நம் உயிரின் வேலை.

ஆகவே கணவன் மனைவியும் இருவருமே இதைப் போல காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த ஊரிலும் இருந்தாலும் சரி… அல்லது எங்கே சென்றிருந்தாலும் சரி… உங்களுக்குள் பதிவு செய்த நினைவை எடுத்து மனைவிக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.. அதன் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று கணவன் எண்ணுதல் வேண்டும்.

அதே மாதிரி மனைவியும் இதைப்போல எண்ணி தன் கணவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வெண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்…. அருள் ஒளி பெற வேண்டும்… அவர் பார்வையில் இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும். அவரின் அருட்பார்வை என்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை இருவருமே இப்படி எண்ணிப் பழக வேண்டும்.

இப்படி எண்ணினால் மனிதன் என்ற முழுமை அடையலாம்.

1.எப்படி இரக்கம் கொண்டு எண்ணியபின் ஒரு ஆத்மா நமக்குள் வந்து விடுகின்றதோ…
2.இதைப்போல கணவன் மனைவி இருவரும் ஒன்றானால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

ஆனால் இந்த உணர்வுடன் மற்றவர்கள் உணர்வுகள் நம்முடன் ஒன்றினால் இணைந்த நிலை மாற்றப்பட்டு “உயிரைப் (இருவரையும்) பிரித்து விடுகின்றது…”

ஆனால் அதே சமயம் இரு உயிரும் ஒன்றாக்கிடும் நிலையாக… இரண்டையும் பிணைத்து அருள் ஒளியைக் கூட்டும் போது உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி அந்த ஒளியின் சரீரமாக… பேரருள் பேரொளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்படித்தான் அக்காலத்தில் கணவன் மனவியாக வாழ்ந்த அகஸ்தியன்… விஷத்தின் தன்மையை வென்று… அருள் ஒளிச் சுடராகி… துருவனாகி துருவ மகரிஷியாக ஆனது…!

அவன் திருமணம் ஆனபின் தான் இந்த நிலையை அடைகின்றான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். ஆகவே அந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வழிப்படி நாமும் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

கிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்

கிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்

 

பூமியில் அதனின் வளர்ச்சி நிலைக்கும் அதிலே ஜீவன்கள் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கும் அச் சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

அத்தகைய ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அந்த மண்டலத்தின் வளர்ச்சியுடனே அதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.

1.இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான்
2.இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.

ஆனால் இந்த நிலையிலே சுழலும் அந்த மண்டலத்திற்கு மாறிக் கிடைக்கும் சக்தி எப்பொழுதெல்லாம் ஏற்படுகின்றது…?

ஏற்கனவே நம் சூரியனைச் சுற்றி மண்டலங்கள் சுழன்று கொண்டுள்ளது என்று உணர்த்தி உள்ளேன். அவ்வாறு சூரியனைச் சுற்றி வரும் இந்தக் கோளங்கள்…
1.சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும்பொழுது
2.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராகத் தாக்கிடாமல்
3.சூரியனைத் தாண்டி (குறுக்கே) எந்தக் கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
4.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் அந்த ஒளி அலையின் மாற்றத்தினால்
5.சூரியனைத் தாண்டி செல்லும் அந்தக் கோளத்தின் மறைப்பினால் (கிரகணம்)
6.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள அந்த ஒளி அலைகளை
7.இரவில் உள்ள நிலைபோல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
8.எந்த மண்டலம் தாண்டிச் செல்கின்றதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை பூமியின் ஈர்ப்புக்குள் கவரப்பட்டு
9.அந்த ஒரு இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் கால நேரத்திலேயே பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது.

நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருகிற்து என்பதல்ல…! எல்லா மண்டலங்களுக்குமே இந்த நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”

ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலையும் உண்டு.