“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

peace and silence

“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள் பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமல்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தை சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”

mosquito bite

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”

கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தை குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்…!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் இன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளை பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thavasi

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெறமுடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும் ஞானிகளும் “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்… ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்… இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்.. ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு… இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

kannappar

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

கண்ணப்பநாயனார் வேட்டையாடிப் பிழைத்தாலும் பக்தி நிலைகள் கொண்டு ஆண்டவனுக்காக வேண்டி தான் வேட்டையாடியதைக் கொடுத்தார்.

ஆனால் கொடுத்து வந்தாலும்… ஒரு நாள் ஈசன் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகப் போகும்போது விரலை வைத்துத் தன் கண்ணை நோண்டி எடுத்துக் கொடுத்தார். பக்திப் பெருக்கத்தில் இப்படிக் கொடுத்தார்.

கண்ணப்பநாயனார் ஈசனுக்குக் கண் கொடுத்தார் என்றால் எதை அவர் கொடுத்தார்…?

தன்னுடைய நிலைகள் கொண்டு இதை அடைத்து (இரத்தம் ஒழுகுவதை) அதைக் கொடுத்தார். எதை…?

தான் கொன்று புசித்த உணர்வின் தன்மை எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்…! என்பதே கண்ணப்பநாயனாருடைய கதை.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை… அதை அழுத்தி
2.அந்தக் கண் ஒளியின் தன்மை எதை இறையாகத் தேடுகின்றது…? (தேட வேண்டும்…!) என்ற
3.சூட்சமத்தை உணர்த்துவதற்காகத் தான் இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டது.

ஆனால் பக்தி மார்க்கங்களில் இவர்களுக்குத் தகுந்த மாதிரி தான் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களுடைய உணர்வு எதுவோ அதற்குத் தகுந்தவாறு எண்ணுகின்றார்கள்

கண் என்றால் இப்பொழுது “ஆயிரம் கண்ணுடையாள்” என்று சொல்வார்கள்.
1.நமக்குள் எந்தெந்தக் குணங்கள் இருக்கின்றதோ
2.அதனதன் நினைவு வரப்படும்போது (கோபம் பயம் ஆத்திரம் வேதனை அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி போன்ற எத்தனையோ குணங்கள்)
3.அதன் உணர்வின் அலையையே தனக்குள் அறிந்து தனக்குள் அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நமக்குள் சக்தியாக இருக்கும் நிலைகள் எந்தெந்தக் குணமோ இவை எல்லாம் அதன் வழி தான் காட்டும்… உணர்த்தும்… இயக்கும்.

உதாரணமாக… என் நண்பனைப் பார்க்கின்றேன்.. அவனைப் பதிவு செய்து கொள்கின்றேன். இருந்தாலும் அந்த நண்பனைப் பற்றி நான் நினைக்கப்படும் போதெல்லாம்
1.இந்தக் கண்கள் தான்…
2.நண்பனைப் படமாக மீண்டும் காட்டுகின்றது

ஏனென்றால்… நண்பனைப் பார்த்துப் பதிவான உணர்வுகள் விளைந்து அணுக்களாக இங்கே இருக்கின்ற்து. இதே கண் தான் அங்கே படம் எடுத்தது. அதே உணர்வு தான் எனக்குள் பதிவானது.

அதை அறிந்தாலும் அந்த உணர்வின் சத்தை அதை மீண்டும் கவர்ந்து வளர்க்கச் செய்கிறது.

1.ஒரு செடி தாய் மரத்தின் சத்தைத் தனக்குள் எடுக்கின்றது என்றால்
2.அந்த மணத்தை நுகரப்படும் போது அது கண்..
3.தன் இனமான சத்தை அதனுடைய நிலைகளைத் தெரிந்துதான் எடுக்கின்றது.

இதைப்போல தான் கண்ணப்பநாயனார் காவியத்திலும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது
1.உடலான சிவத்திற்குள் அந்தத் தீமை என்பதை நீக்கிட
2.அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை
3.கண்ணின் நினைவு கொண்டு (கண்ணை எடுத்து உயிரிலே.. அந்த ஈசனுக்குப் பொருத்துவதாக) இதை அழுத்திக் காண்பித்தார் என்று
4.சாதாரண மக்களுக்கும் இந்தத் தத்துவத்தை உணர்த்த இந்த காவியங்களைக் கொண்டு வருகின்றார்கள்.

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் “தன் கண்களைப் பிடுங்கி ஈசனுக்கு அவர் கொடுத்தார்…” என்று தெளிவாக்குகின்றார்கள்.

வழி தெரியாதபடி செல்லும் இன்றைய நிலையிலிருந்து மீள… ரிஷிகள் காட்டும் வழியில் மனிதன் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

realization-of-gods

வழி தெரியாதபடி செல்லும் இன்றைய நிலையிலிருந்து மீள… ரிஷிகள் காட்டும் வழியில் மனிதன் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன்னைத்தான்… தான்… தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி

தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின்… வழியறிந்து

தன் வழியை… தான் அமைத்து…
தன் உயர்வை… தான் வளர்க்க

தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி

தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!

மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.

அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.

1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை”

FIRST STEP IN DHIYANAM

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை”

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் நம் உயிர் உடலுக்குள் நின்று ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தையும்…
1.சுவாசிக்கும் அந்த உணர்வின் சத்தை
2.அந்த உணர்வின் அணுவாக
3.ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது.

இது தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

காலையிலிருந்து இரவு வரைக்கும் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தும்… நம் உடலுக்குள் நம் வாழ்க்கையில் இவ்வாறு சதாசிவமாக (உடலாக) ஆகிக் கொண்டே உள்ளது.

அதே சமயத்தில் நம் உடலான சிவனுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் “நம் உயிரே குருவாக” இருக்கின்றது.

ஆகவே…
1.நாம் ஒவ்வொரு முறையிலும்
2.ஒவ்வொரு தியான நேரத்திலும்
3.எந்தக் காரியங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாலும்
4.அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து
5.அவர்கள் நம்மைக் காத்தருளிய குணங்களைத் தெய்வமாக மதித்து
6.ஒவ்வொரு நொடியும் நமக்கு நல் உணர்வுகளை ஊட்டி நல் வழி காட்டிய அவர்களைக் குருவாக மதித்து
7.ஈஸ்வரா என்று அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
8.எங்கள் காரியங்கள் வெற்றி பெறவேண்டும்
9.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
10.என் செயல் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயலாக இருக்க வேண்டும்
11.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்ற உணர்வினை முதலிலே செலுத்த வேண்டும்.

இந்த முறைப்படி நாம் எண்ணும் போது அத்தகைய குணங்களை உயிர் நமக்குள் ஓ… என்ற ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது.

அதன் பின் அந்த எண்ணங்களே… அந்தக் குணங்களே… “குருவாக நின்று” நாம் சொல்லால் சொல்லப்படும் பொழுது செயலுக்கும் அந்தக் குணங்களே குருவாக நின்று கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வுகளாகப் பாய்ந்துவிடும்.

அந்த நல் உணர்வுகள் பாய்ந்த பின்..
1.அவர்களும் நமக்கு நன்மை செய்யும் பயன்களை உருவாக்க இது உதவும்.
2.அதே போல் நம் சொல்லிலே இனிமையும்… நல் செயலை ஊட்டும் குணங்களாக நமக்கும் இது அமைகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தக் காரியங்கள் செய்தாலும் அல்லது செய்ய எண்ணினாலும் நம் உயிரை ஈஸ்வரா.. என்று எண்ணிவிட்டு அடுத்த காரியங்கள் எது நன்மையோ அவைகளை மேலே சொன்ன முறைப்படி எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அத்தகைய நல்ல அணுக்களாக உடலுக்குள் உருவாகி அந்த உணர்வின் செயலாக
1.அந்தக் குணங்களே நமக்குக் குருவாக நின்று
2.நல்வழிப்படுத்தும் நற்செயலாக நம் வாழ்க்கையில் அமைவதும்
3.நாம் எண்ணிய நல்ல உணர்வுகள் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி
4.நம் உடலைப் பாதுகாக்கும் நல்ல குருவாகவும் அது அமையும்.

நாம் ஒவ்வொருவரும் இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தாலும் சரி… அவசியம் இதைப் போன்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நாம் வெளியிலே செல்லும் போதும் சரி இதைப் போன்ற நல்ல எண்ணங்களை நாம் எண்ணி
1.அந்தச் செயல்களை செவ்வனே செய்ய வேண்டும் என்று எண்ணினால்
2.செவ்வனே செய்யும் அணுக்களாக நமக்குள் உருவாகும்
3.உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கும் போது
4.மீண்டும் அதே உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை நல்வழியில் செயல்படுத்தும் நிலை உருவாகும்.

இதுவே நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வாகப் பதிந்து நம்முடன் இணக்கமாகச் செயல்படும் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்…! பகைமையை அகற்றி மகிழ்ந்து வாழச் செய்யும்.

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Saptarishis

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது. நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து… நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற… இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாக பல கோடி ஆண்டுகளாய் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

trust-yourself

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

“ஞானிகளைப் பற்றிய முழு உண்மைகளையும் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்” வருடக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் உங்களுக்குப் பொறுமை பத்தாது.

உணவு உட்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அதை உங்களால் ஜீரணிக்க முடியாது.
1.ஆனால் எப்படியும் சுருங்கச் சொல்லி அதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்
2.மகரிஷிகள் நினைவுகள் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கே தான் இதையெல்லாம் தொடர்ந்து சொல்கின்றேன் (ஞானகுரு)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் விண்ணின் ஆற்றலை எவ்வாறு பதிவு செய்தாரோ இது போல் உங்களிடமும் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை நீங்கள் எண்ணி மீண்டும் வளர்த்து வந்தால்
1.மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால்…
1.அறிவு இல்லை என்ற நிலைகளை எண்ண வேண்டாம்.
2.கற்கவில்லை என்று எண்ணவும் வேண்டாம்.
3.ஞானகுரு சொல்வதை எல்லாம் நாம் எப்பொழுது பெறப் போகின்றோம்…! என்ற ஏக்க நிலையும் வேண்டாம்.
4.பெற முடியும்…! என்ற ஏக்கத்தின் நிலைகள் வரும்போது
5.நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் இதைப் பெற முடியும்.

அதற்கேதான் இதை உங்களிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வது.

ஏனென்றால் “பௌர்ணமி போன்று” பூரண நிலைகள் நாம் பெற முடியும். இருள் சூழ்ந்த சந்திரன் இன்று ஒளி கொண்டு பௌர்ணமியாக ஒளியின் சுடராக வீசுவது போல
1.ஒரு உயிர் கொண்ட உணர்வின் தன்மை
2.புழுவாக இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும்போது
3.உலகை அறிந்திடும் உணர்வு பெற்ற… பூர்ண பௌர்ணமியாக
4.ஒளியின் உடலாகப் பூரண நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

இருளை மாய்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றதுதான் “எண்ணிலடங்காத சப்தரிஷிகள்…” சப்தரிஷி மண்டலமாக இன்றும் இருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்து உடலை விட்டு அகன்ற நமது குலதெய்வங்களான உயிராத்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் எப்படி உடலைக் கருக்கினரோ அதைப் போன்று உடல் பெறும் உணர்வை மாய்த்துவிட்டு ஒளியின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் சப்தரிஷிகள்தான்.

உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு செயல்படுத்தும் நிலைகளில் முதலில் அவர்கள் ஆனார்கள் என்றால் அவர்களைத் தோடர்ந்து நாமும் இதைப்போல் அங்கே நிலை கொள்ள முடியும்.

ஆறாவது நிலையிலிருந்து ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றதுதான் சப்தரிஷி.

 

செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

gnana pokisham 2

செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

உபதேசங்களைத் திருப்பிச் திருப்பிச் சொல்லுகின்றேன் (ஞானகுரு) என்று சிலர் நினைக்கலாம்…! ஆனால்
1.அடுத்தாற்போல் கேட்டால் மட்டும் சொல்லத் தெரியாது
2.அதை நினைக்கவும் தெரியாது… அதை பார்க்கவும் முடியாது.

சாமி போன தடவை சொன்னார்… இப்பொழுதும் சொல்கின்றார்… திருப்பியும் சொல்கின்றார்…. என்பார்கள்.

சாமி என்ன சொன்னார் என்று திருப்பிக் கேட்டால் அது தெரியாது.
1.என்ன சொன்னார்..?
2.எந்த வழியில் நடக்க வேண்டும்…? என்று தெரியாது.
3.தனக்குள் பதிய வைக்கத் தெரியாது… அதன் வழி நடக்கவும் தெரியாது.

ஒரு வார்த்தை திரும்ப வந்து விட்டால் போதும்… சாமி…! இதை நேற்றே சொன்னார். போன வாரம் சொன்னர். இந்த வாரமும் சொல்கின்றார் என்று
1.தனக்குள் பதிவு செய்யும் நிலையை
2.தனக்குத் தானே தண்டனை அனுபவித்து கொள்கிற மாதிரி தடைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக இது மட்டும் தெரியும்.

ஏனென்றால் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். “தெளிந்த நிலைகள் பெறும்” அந்த உணர்வின் சக்தியை வளர்ப்பதற்குத் தான்
1.மாதம் தோறும் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதும்
2.அந்த உணர்வின் ஆற்றலை – மகரிஷிகள் காட்டிய நெறிகளை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்லவில்லை. உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். நிறையச் சொல்லிவிட்டால் முந்தி ஏன் சொல்லவில்லை… இப்பொழுது மட்டும் ஏன் சொல்கிறார்…? என்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வரவேண்டி இருக்கிறது. நிறையச் சொன்னாலும் ஜீரணிக்க முடியாதல்லவா…!

இருந்தாலும் இப்பொழுது சொல்வதை நாளைக்குக் காலையில் கேட்டால் தெரியாது. காலையில் என்ன…? இப்பொழுது கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டாலும் தெரியாது…!

நாளைக்கு நான் இதைத் திருப்பிச் சொன்னால்… உடனே சாமி நேற்று சொல்வதைத் தான் சொல்கின்றார்…!
1.இது நேற்றுச் சொன்னது தானே…
2.சரி சொல்லட்டும்… பார்த்துக் கொள்ளலாம்…. என்று சொல்லிக் கொண்டு
3.காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

அதைத் தான் நேற்று சாமி சொல்லிக் கேட்டோம் அல்லவா.. அதிலே இன்று என்ன பொருள் வருகின்றது என்று பார்த்தால் அது நல்லது.

உதாரணமாக ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் தான் முளைக்கும். தண்ணீர் ஊற்றவில்லை என்றால் எப்படி வளரும்…?

தன் உணர்வை உந்தி எடுத்தால் தான் அந்தச் செடி வளரும். ஆக அந்த உணர்வை எடுக்க மறந்து விட்டால் என்ன செய்யும்…? அது தன் இனத்தை வளர்க்குமா…?

அன்றைய இராமயாணத்தை இன்றைக்கும் சொல்கின்றார்கள் என்றால் அதே இராமயாணத்தை விடிய விடிய சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் இராமயாணம் என்ன என்றே தெரியாத வகையில் கதையைக் கேட்டு அதைப் பதிவு செய்து கொண்டு பாடத்தை ஒப்பிக்கின்றோம்.

ஆக… இராமாயணத்தின் சொன்னதை வாழ்க்கையில் ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றோமா என்றால் இல்லை.

மகாபாரதத்தை பற்றியும் பேசுகின்றோம் அதிலே என்ன சொல்கின்றார்கள்..! என்றால் கதையைப் படிக்கின்றோம். ஆகா என்று…!

இராமயாணத்தையும் கேட்டேன்… மகாபாரதத்தையும் கேட்டேன்… கீதையில் கண்ணன் கூறியதையும் கேட்டேன்… எல்லாம் பார்த்தேன்…! என்ற உணர்வுதான் இருக்கும்.

அந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டோமா என்று பார்ப்பதில்லை. ஆனால் அதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார்கள்.

இப்பொழுது சொன்ன உபதேசத்தைத் திருப்பி ஒரு மாதம் கழித்து மீண்டும் சொல்லும் போது… மீண்டும் அது நினைவில் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து அந்த உணர்வை வலுவாக எடுத்து வளர்க்க வேண்டும் என்பதற்குத் தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஆனால் அப்படி இல்லாதபடி… நேற்றே சாமி சொன்னார்…. சரி விடு… போ…! என்று இருப்பார்கள்.

யாம் உபதேசம் செய்யும்போது பக்கத்திலே அடுத்தவர்களைக் கண்டால் அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் நாம் இரண்டு பேரும் எதாவது பேசிக் கொண்டிருப்போம்.
1.”கேட்காதவர்கள் கேட்கட்டும்…!” என்று இப்படியும் இருப்பார்கள்.
2.இது தான் சிலருடைய நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

 

மகரிஷிகளும் ஞானிகளும் ஏன்… எதற்காக… ஒளி நிலை பெற்றார்கள்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

EVERLASTING life of sage

மகரிஷிகளும் ஞானிகளும் ஏன்… எதற்காக… ஒளி நிலை பெற்றார்கள்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!

உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…! ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.

அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”

இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,

அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.

ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.