பரிதாபப்படுவதால் நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைக்கிறதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Personal Protection

பரிதாபப்படுவதால் நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைக்கிறதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம் பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால் பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது.

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”

சுயநலமின்றிப் பொது நலம் வளராது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

success story

சுயநலமின்றிப் பொது நலம் வளராது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…!

real homa

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…!

 

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டிஅப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு எந்த மந்திரக்காரன் சொன்னானோ அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப்போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

sixth sense power

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

 

ஒருவன் குறும்புத்தனம் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் அந்த குறும்பின் உணர்ச்சியை ஊட்டும் அணுத்தன்மை நம் உடலில் விளைந்து விடுகின்றது. அப்பொழுது அதை புகாது நமக்குள் தடுத்தல் வேண்டும்.

அந்த குறும்புத்தனத்தின் உணர்வை நீக்க வேண்டும் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து அதனுடன் கலந்து என் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும். ஈஸ்வரா என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் எவன் குறும்புத்தனம் செய்தானோ…
1.அவன் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவன் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
4.பிறரை மதிக்கும் நன்மதிப்பான அந்த உணர்வுகள் அவனிடம் தோன்றப்பட வேண்டு என்று எண்ணினால்
5.அந்த குறும்புத்தனத்துடன் நமது அந்த அருளொளி என்ற உணர்வைக் கூட்டி ஒரு புது உணர்வாக மாற்றுகின்றோம்.

விவசாயங்களில் என்ன செய்கின்றோம்…? நமக்கு வேண்டிய உணர்வின் அணுக்களைச் சேர்த்து தாவர இனங்களை மாற்றித் நமக்குகந்த புது வித ரகங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அதே போல மனிதனுக்குகந்த நிலையில் உயிரினங்களில் மற்ற மரபணுக்களைச் சேர்த்துச் சேர்த்து அதனின் உடல்களை உருமாற்றுகின்றோம். ஆகவே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் அந்த ஆறாவது அறிவின் தன்மை.

1.இதையெல்லாம் உருவாக்கும் திறன் இருந்தும் நமக்குள் நல்லதை உருவாக்கத் தவறினால்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமைகள் நம்மை அது வலிமை கொண்டு
3,மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் மனிதனல்லாத உடலை உருமாற்றிக் கொண்டிருக்கும் – நம் உயிரின் வேலை.

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாக்கப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பத்தில் காக்கா வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கத்துடன் கேட்கிறோம்.

இருந்தாலும் சிலருக்குப் பலவீனமான உணர்வு இருந்தால் அது சிறு மூளை பாகத்தில் தாக்கி விட்டால் அது வெடுக்கு…வெடுக்கு… என்று சுண்டும்.

1.இதற்கு முன்னாடி காக்கா வலிப்பு இல்லை…
2.ஆனால் இப்படிச் சந்தித்த நிலைகள் கொண்டு அதிர்ச்சி ஆன பின்
3.இந்த உணர்வின் தன்மை அணு அங்கே தேங்கி விட்டால் அவர்களுக்கு இந்தக் காக்கா வலிப்பு வரும்.
4.சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இது இல்லை என்று எண்ணுவார்கள்
5.ஆனால் இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

இதைப் போல ஒரு சாந்த குணம் கொண்ட… பரிவான நிலைகள் கொண்ட ஒரு மனிதன்… எதிர்பாராத நிலைகள் சந்திக்கப்படும் பொழுது ஆ…ஆ…! என்ற இந்த உணர்வின் தன்மை பயந்தால் என்ன நடக்கின்றது…?

டரன்சாக்சன் (TRANCACTION) செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிப்பெருக்கி ஆகும்போது சிறு மூளைப் பாகங்களில் உள்ள நுண்ணிய நரம்புகள் விரிவு அடைந்து விடுகின்றது.
1.அப்போது நமக்குள் மயக்கம் ஆகின்றது
2.உறுப்புகளின் தன்மை கை கால் அங்கங்கள் வராமல் கூட போய் விடுகின்றது – அதிர்ச்சியினால்…!

இதெல்லாம் நாம் அறியாமலே நுகரும் உணர்வுகள். அப்போது நம்மைக் காக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்…? ஆறாவது அறிவைச் சீராக நாம் பயன்படுத்த வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உணர்வின் தன்மை உயிரோடு ஒன்ற வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி
2.உட்புகும் அந்தத் தீமையின் செயலாக்கங்களை நாம் தடைப்படுத்தி பழக வேண்டும்.

யாரைப் பார்த்து அந்த அதிர்ச்சியின் நிலைகள் ஆனதோ அவனுக்குள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும். அவன் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவன் உடலில் உள்ள பிணிகள் நீங்க வேண்டும் அவன் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உணர்வுகளை எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகின்றது. அவனுடைய செயல்கள் நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பத்தால் வேதனையை நுகரப்படும்போது அது பிரம்மமாகின்றது… உருவாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நம் ஆறாவது அறிவு சேனாதிபதி இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது. கார்த்திகேயா…! இதையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது அந்த ஆறாவது அறிவு.

1.தீமை என்ற உணர்வுகள் வந்தாலே…
2.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் இணைத்து
3.அதைச் சுவைமிக்கதாக நாம் படைத்துப் பழக வேண்டும்.
4.அந்த அணுக்களை மாற்றிப் பழக வேண்டும்…!

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது…!

உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

onward breathing yoga

உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும் ஆறு வகை குண அமிலத்தையும் நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

சலிப்பைச் சாந்தமாக்கி…
கோபத்தை வீரமாக்கி…
சங்கடத்தை அன்பாக்கி…
இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்த்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
1.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
3.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழலவிடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.