பழைய வினைகளைக் கழிக்க வேண்டிய முறை

meditation high tech

பழைய வினைகளைக் கழிக்க வேண்டிய முறை

 

என் (ஞானகுரு) வாழ்க்கையில் சிறிய பிள்ளையாக நான் இருந்ததிலிருந்து செய்த தவறுகளை எல்லாம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்.

ஒடக்கானைப் பிடித்து அது கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டு “அது ஆடுகிறதைப் பார்த்து நீ ரசித்திருக்கின்றாய்…!” எத்தனை தடவை இந்த மாதிரிச் செய்தாய்…?

அதே மாதிரி குருவியை உயிருடன் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தீயை வைத்து எரித்து வாட்டியிருக்கின்றாய். கிணற்றில் குஞ்சு பொரித்த மைனாக் குஞ்சுகளின் கால்களில் கயிறைக் கட்டி இழுத்து அதன் கால்களை உடைத்திருக்கின்றாய்…! என்று இதை எல்லாம் சொல்கிறார் குருநாதர்.

நான் (ஞானகுரு) கல்யாணம் பண்ணிய புதிதில் ஒரு இடத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது அப்படியே கிறு…கிறு… என்று தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டேன்.

அதை ஞாபகப்படுத்தி நிதானம் இல்லாமல் இன்ன இடத்தில் விழுந்தாய்…! என்று சொல்கிறார்.

அப்புறம் கல்யாணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் போகும் பாதையில் ஒரு சிறிய பாலத்தில் ஒரு ரயில்வே தண்டவாளப் பகுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் இரயில் வந்து கொண்டிருக்கின்றது. அதைப் பார்த்ததும்.. ஒதுங்கி ஓரத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக வேண்டி என் மனைவியிடம் “இந்தப் பக்கம் வாம்மா…!” என்றேன்.

கீழே குனிந்து பார்த்தால் ஒரே அசூசையாக அசிங்கமாக இருந்தது. ஐய்யய்யோ..! என்று சொன்னதும் என் மனைவி என்னைப் பிடித்து மீண்டும் இரயில் தண்டவாளத்திற்கே இழுத்தது.

ஆனால் வண்டியோ மிகவும் பக்கத்தில் வந்துவிட்டது. ஒதுங்க வேறு இடம் இல்லை. அப்புறம் அப்படியே தள்ளி விட்டபடி நானும் கீழே விழுந்தேன். இரயில் போய் விட்டது. நாங்கள் இரண்டு பேரும் எதை அசிங்கம் என்று சொன்னோமோ அதிலேயே விழுந்தோம்.

அதையும் குருநாதர் சொல்கிறார். அத்தகைய உணர்வின் இயக்கங்கள் அந்தச் சத்து உனக்குள் இருக்கப்படும் பொழுது அது “விதியாக” உனக்குள் அமைகிறது.

“டேய்…! அன்றைக்கு நான் தான்டா உன்னைக் காப்பாற்றினேன்..” என்று சொல்கிறார் குருநாதர்.

1.முன்னொரு சமயம் ஒரு பிறவியில் இருக்கும் போது நீ எனக்கு உதவி செய்திருக்கின்றாயடா…!
2.இப்பொழுது நான் இந்த அருள் சக்தியைப் பெற்றிருக்கிறேன்.
3,இப்பொழுது உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்கிறார் குருநாதர்

இதை எல்லாம் வரிசைப்படுத்தி மறைந்த உணர்வுகளை எல்லாம் குருநாதர் காட்டுகிறார்.

எனக்கு இரண்டு வயதில் அம்மை நோய் வந்திருந்தது. நான் இட்லி வேண்டும்..! என்று கேட்டு அழுகின்றேன். என் மனைவியுடைய சின்னம்மா (அப்பொழுதே சொந்தக்காரர்கள் தான்) வந்து என்ன செய்கிறது. சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொண்டு வருகிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தான் இட்லி எல்லாம் செய்வார்கள். இல்லை என்றால் வேறு எந்த வீட்டிலாவது செய்து வைத்திருந்தால் சிறிய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.

சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொடுத்தவுடன் நான் அந்த அம்மா மீதே “அதை வீசிவிட்டேன்…!” அதையும் குருநாதர் என்னிடம் சொல்கிறார்.

இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார். என் வாழ்க்கையில் என்னென்ன…? எப்படி நடந்தது… என்னென்ன நிலைகள் இருந்தது…? என்று சொல்கிறார்.

நீ இளமையில் உன்னை அறியாது செய்த தவறுகள்
1.நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றியது.
2.அதன் வழிப்படி ஒவ்வொரு தவறையும் நீ செய்யச் செய்ய அது பெருகிக் கொண்டே வருகிறது.
3.அந்த உணர்வுகள் பெருகிய பின் உடலில் உள்ள அந்தத் தவறான உணர்ச்சிகள்
4.உன்னை எப்படிக் கொண்டு போகும் தெரியுமா…? என்று கேட்கிறார்…?

இன்றும் சில சிறிய குழந்தைகள் பூச்சிகளைப் பார்த்தாலே அதை அடித்துக் கொன்று கொண்டே இருக்கும். பார்க்கலாம் நீங்கள். ஆக அறியாமல் செய்தாலும் நாம் எதைச் செய்கிறோமோ உயிர் அதை நுகர்ந்து நம் உடலுக்குள் தான் சேர்க்கிறது.

இதை எல்லாம் அறிந்து கொண்ட நிலையில் மனிதனின் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்..? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் உங்களிடமும் அதைப் பின்பற்றச் சொல்கிறோம். ஏனென்றால் எது இருந்தாலும் அப்போதைக்கு அப்போது இது கழியும். (விதியின் விளைவுகள்)

நான் (ஞானகுரு) எல்லாருக்கும் நன்மை தானே செய்திருக்கின்றேன். எவ்வளவோ உயர்ந்த சக்திகளை எல்லாம் பெற்றிருக்கின்றேன்.
1.எனக்கு ஏன் கையில் எலும்பு முறிகிறது…?
2.என்னை ஏன் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படி எல்லாம் சோதிக்கிறார்..? என்று சொன்னால் என்ன ஆகும்…!
3.நான் செய்த பாவத்தின் நிலைகளை அனுபவித்துத் தான் தீரனும்.

ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலை பெறும் போது மேலே பட்ட தூசிகளைத் தட்டி விட்டுத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டே தான் போக வேண்டும்.

1.அதாவது இந்த உடல் பற்று இல்லாதபடி
2.அந்த அருள் பற்றுடன் போனால் இந்தப் பற்று வராது.
(இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.)

ஒரு சமயம் நான் குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும்போது ஒரு அம்மா வந்தது. அது உடலில் ஒரு தீயில் எரிந்த ஆவி இருந்தது. அதனால் ஐய்யய்யோ…! எரியுதே…எரியுதே… என்று குதிக்கும். அந்த அம்மாவின் வயது 45 இருக்கும்.

மேல சேலையைப் போட்டாலே குதிக்கும். ஐய்யய்யோ… எரியுதே என்னைக் கொல்கின்றீர்களே கொல்கின்றீர்களே..! என்று போட்ட துணியை வீசிவிட்டு ஒடும். ஏனென்றால் அந்த அம்மாவினால் அந்த எரிச்சலைத் தாங்க முடியவில்லை.

அங்கே சுற்றுப்பயணத்தில் வரப்படும் போது நம்மிடம் கூட்டி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் துணியைப் போடமுடியவில்லை. அப்புறம் நான் சொன்னேன்.

அந்த அம்மாவைச் சுற்றித் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு வாருங்கள். திரைக்கு பக்கம் அந்தப் பக்கம் பின்னாடி போகச் சொல்லுங்கள். துணியைப் போடாதீர்கள் என்று சொன்னேன்.

அதன்படி கூட்டிக் கொண்டு வந்தார்கள். அங்கே கூட்டுத் தியானம் இருக்கும்படி சொன்னேன். பின் அந்த நேரத்தில் அந்த அம்மாவுக்காக நான் பாய்ச்சும் அலைகள் எப்படி அங்கே பாய்கிறது…? என்று குழந்தைகளை வைத்துப் பார்க்கச் சொன்னேன்.

அப்படிப் பார்க்கும் பொழுது அந்த அம்மா உடலில் இருந்த தீ பிடித்த ஆன்மா (ஆவி) வெளியில் போகிறது. உடனே அந்த அமமா எழுந்து உட்கார்ந்தது. துணியைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

மறுபடியும் அந்த ஆன்மா வந்தவுடன் ஐய்யய்யோ எரியுதே எரியுதே என்று பல நிகழ்ச்சிகள் ஆகி அப்புறம் கடைசியில் அந்த அம்மா நன்றாக ஆனது. அந்த ஆவியின் செயல்கள் ஒடுங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அங்கே அந்த அம்மாவுக்கு எரிச்சல் எப்படி அது உடலில் எரிகிறது என்று நீ பாருடா…! என்றார்.

பார்த்ததும் எனக்கு அப்படியே கப..கப.. என்று எரிகிறது.

ஆக அந்த உடலில் இருந்த ஆவியின் தன்மையை அடக்கினாலும் அந்த எரிச்சலான உணர்வலைகளை நான் கவரப்படும் போது நான் நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகிறது.

அது உடலிலிருந்து எரிந்த அந்த ஆவியின் உணர்வலைகள் வந்ததை நான் சுவாசிக்கப் போகும் போது எனக்குள் கொஞ்ச நேரத்தில எரிய ஆரம்பிக்கின்றது.

இப்படி எரிகிறது என்றால் எரியக் காரணம் என்ன..? என்ற நிலையில் உடலிலே விளைந்தால் இது மாதிரித் தான் எரியும்…! என்று சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார்..!

1.டேய்…. உன் சிறு வயதில் நீ குருவிகளை எப்படியடா சாப்பிட்டாய்…?
2.எத்தனை குருவிகளை உயிருடன் கம்பியில் கட்டித் தீயில் சுட்டுத் தின்றாய்…?

இங்கே இந்த அம்மா உயிருடன் இருக்கும் போது எரிகிறதே என்று நன்மை செய்யப் போனாய். தீயில் வெந்த ஆவி அந்த உடலிம் இருக்கிறது. ஆனால் நீ அதை அடக்க வேண்டும் என்கிற போது அந்த வேதனை உணர்வைச் சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்துக் கொண்டு வருகிறது

நீ கவரும் பொழுது அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிட்டது.
1.காரணம் அந்தக் குருவிகள் எப்படித் தீயில் எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருக்கிறது.
2.அதற்கு அது சாப்பாடு தேவை.
3.அதை எடுப்பதால் உனக்கு எரிச்சல் தெரிகிறது என்று விளக்கமாகச் சொன்னார் குருநாதர்.

நடந்த நிழச்சி இது. அனுபவித்துத் தான் உங்களிடம் சொல்கிறேன்.

நான் என் சிறிய வயதில் செய்த தப்பு அது ஒரு விதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த அம்மாவைப் பார்த்தால் எரிச்சல் ஆகிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுகிறேன். எனக்குள் கொஞ்சம் மறைகிறது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு இதை எல்லாம் மாற்ற வேண்டும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.நான் தினம் தியானம் செய்கிறேன்…?
2.எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது..? எனக்கு ஏன் நோய் வருகிறது என்று சொன்னால்
3.நாம் இந்தப் பூமிக்குள் தான் தான் இருப்போம். விண் செல்ல முடியாது.

ஆகையினால் தான் உங்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்தோம் என்றால் நாம் அங்கே போகலாம்.

சில பேர் என்ன சொல்வார்கள் என்றால் என்னை எல்லோரும் சேர்ந்து எப்படி எல்லாம் பேசினார்கள்…! பாவிகள்… அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…! என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட உணர்வுடன் இந்த உடலை விட்டுப் போனால் யாரை நினைத்தோமோ அதனால் நோயாகி அந்த உடலுக்குள் போய்ச் சேர்ந்து மீண்டும் பிறவி நிலைக்குத் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்…!

ஆண்டவனின் சக்தி பெற்றே ஒவ்வொரு உயிரணுக்களும் உதிக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Eswara sakthi power.jpg

ஆண்டவனின் சக்தி பெற்றே ஒவ்வொரு உயிரணுக்களும் உதிக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
5.அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள்.
6.அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ் ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கு ஏற்ப தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

நமக்குத் தீமை செய்பவர்களை வைத்து நன்மை பயக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவது எப்படி..?

naranarayanan.jpg

நமக்குத் தீமை செய்பவர்களை வைத்து நன்மை பயக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவது எப்படி..?

ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வழி காட்டாமல் இருக்க முடியுமா…? அதே போல் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால் அந்த வேதனை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது தான் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு அவர் ஆகாதவராகப் போய்விட்டால் “அவனுக்கு அப்படித் தான் வேண்டும்…!” என்று சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்குள் அந்த உணர்வு விளைகிறது.

ஆனால் அவரைக் காக்க வேண்டும் என்று நாம் பாசத்துடன் எண்ணினால் இங்கே உடலில் அவருடைய வேதனை வந்துவிடுகிறது.

1.ஆகாதவன் எந்த ரூபத்திலாவது அந்த நோயாளிக்கு அப்படித்தான் வர வேண்டும் என்று ரசிக்கின்றான்.
2.பண்பு கொண்ட மனிதனோ தன் உடலில் பாசத்தால் இழுத்துக் கொள்கிறான்.

காரணம்… நாம் உதவி செய்கிறோம். அந்த உணர்வுகள் இங்கே விளைகிறது. மகராசன்…! “எனக்கு நன்மை செய்தான்…!” என்று நோயாளி எண்ணுகிறான். இந்த இரண்டும் கலக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடிகிறதா..? என்றால் இல்லை.

அந்த உணர்வை விளைய வைத்தால் அவர் (நோயாளி) உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது. எந்த உடலில் அந்த வலு இருக்கிறதோ அந்த உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.உதவி செய்தாலும் உயிர் இந்த மாதிரி இயக்கி நம்மை இந்த நிலைக்கு ஆக்குகிறது
2.இதற்கு என்ன செய்வது…?

உணவு நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் சாப்பிடுகிறோம். ஆனாலும் அந்தச் சாப்பாடு “அளவுக்கு மேலே அதிகமாகிப் போனால்” என்ன செய்யும்…? அதிகான அளவில் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்கிறதா…?

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஆகவே அப்பொழுது அதை ஜீரணிக்கும் சக்தி நமக்கு வேண்டும்.

ஜீரணிக்க வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். அந்தச் சக்தியைப் பெற்றால் அது ஞானம் என்ற ஒரு வித்தாகிறது. மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

எப்படி ஒரு சோப்பைப் போட்டவுடன் எண்ணைச் சத்தை நீக்கி விடுகிறதோ இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகள் கலந்த பின் அவர்கள் எப்படி ஒளியாக மாற்றினார்களோ அதே போல் நமக்குள்ளேயும் ஒளியாக மாற்றும்.

நமக்குள் வலுவான பின்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்.
3.விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
4.அப்பொழுது அவன் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால் அவனும் நல்லவனாகின்றான்.

இதற்கு மாறாக ஒரு தடவை நாம் வெறுத்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வருகிறது, அவன் நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பாகி இரண்டு பேருக்குள்ளும் பகைமையாகிவிடும்.

ஆகவே அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அவன் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது
1.உங்களைப் பார்க்கும் பொழுது முதலில் முறைத்துக் கொண்டிருந்தவன்
2.அவன் மனம் மாற வேண்டும்… மாறவேண்டும்…! என்று எண்ணும் பொழுது
3.இந்த உணர்வு அவனுக்குள் இது சென்று அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.

ஆகவே இந்த மாதிரியான கஷ்டமோ பகைமையையோ துன்பமோ வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்களால் நீங்கள் நலம் பெறுகின்றீர்கள்… உயர்ந்த ஞானிகளின் சக்தியும் பெறுகின்றீர்கள்.

அதற்காகத்தான் “ஆத்ம சுத்தி…” என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியையும் இந்த உபதேச வாயிலாகவே கொடுக்கின்றோம்.

நீங்கள் இதை எண்ணினால் உங்கள் உயிர் அதை எல்லாம் உங்களுக்குள் உருவாக்கும்.

நம் கண்ணிற்குத் தெரியாத பல கோடி ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

cosmic power of gurudevar.jpg

நம் கண்ணிற்குத் தெரியாத பல கோடி ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி

near death intance

மரணம் அடைவதற்கு முன்னாடி சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்…! – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.

எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.

என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!

வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!

ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!

ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.

பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!

அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!

கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.

எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!

தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?

சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.

இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!

பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!

உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

கோவில்களிலும் வானசாஸ்திரங்களிலும் (ஜாதகம்) மருத்துவத்திலும் சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sidhargal-18

கோவில்களிலும் வானசாஸ்திரங்களிலும் (ஜாதகம்) மருத்துவத்திலும் சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்…
2.உந்தல்கள்…! தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

நான் ஒருவனே எல்லாவற்றையும் செய்வேன்…! என்று சொன்னால் அது அகந்தைக்குரியது தான் – ஒன்றும் செய்ய முடியாது…!

light-world.jpg

நான் ஒருவனே எல்லாவற்றையும் செய்வேன்…! என்று சொன்னால் அது அகந்தைக்குரியது தான் – ஒன்றும் செய்ய முடியாது…!

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்றும் வராக அவதாரம் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு உடலையும் உற்றுப் பார்த்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
1.தீமைகளிலிருந்து விடுபட எந்த உடலைக் கூர்மையாக உற்று பார்த்ததோ
2.அதனின் உணர்வை வளர்த்து அடுத்து அதே உடலாக உருவம் பெறுகின்றது அந்த உடலுக்குள் சென்று…!

இப்படித்தான் தீமையில் இருந்து விடுபடும் உடலின் வலிமை பெற்று வளர்ந்த நிலைகள் கொண்டு வராகனாக உடல் பெறுகின்றது. வராகனாக உடல் பெற்ற பின் என்ன செய்கிறது…?

தன் வலிமையான உணர்வைப் பாய்ச்சித் தீமையைப் பிளந்து சாக்கடைக்குள் மறைந்துள்ள (நறுமணத்தை) நல்ல உணர்வை நுகர்ந்து உணவாக உட்கொள்கிறது.

நாற்றத்தைப் பிளந்து நல் உணர்வை நுகரும் தன்மையைத் தன் வாழ் நாள் முழுவதும் பெருக்கி இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதனான பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள தீமை விளைவிக்கும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நஞ்சை மாற்றிடும் சக்தியாக “ஆறாவது அறிவு வருகின்றது…!”

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அருள் மகரிஷியின் உணர்வை வலுப் பெறச் செய்து எண்ணத்தால் அதனை நுகர்ந்தறிந்தால் வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளை எல்லாம் ஒளியாக மாற்றிட முடியும்.

1.இதனை எவர் ஒருவர் சீராகச் செயல் படுத்துகின்றாரோ அவரே அடுத்துப் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுவர்.
2.அந்த மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் குடும்பங்களிலும் பரவச் செய்து மரணமில்லாப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோணத்தில் உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு). அந்தப் பதிவின் நினைவாற்றலை நீங்கள் கொண்டு வந்து தீமையை அகற்றிடும் சக்தியாக விளைய வேண்டும்.

இன்று காற்று மண்டலங்களில் கடுமையான நச்சுத் தன்மைகள் பரவினாலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் பரவி தீமைகள் புகாத நிலையில் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த உபதேசம்.

1.ஆக… நான் ஒருவன் (ஞானகுரு) இருந்து இதை ஒன்றும் செய்ய முடியாது.
2.நான் செய்வேன்..! என்று சொன்னால் அது நானாக அகந்தையாகப் பேசிக் கொள்ளலாமே தவிர
3.நான் செய்வேன் என்றால் இது அகந்தைக்குரியது தான்…!
4.நானாக ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல் என்றுமே ஒருவருக்குப் பசியைத் தீர்த்தது இல்லை. அதை விதைத்துப் நெல் குவியலாக உருவாக்கிய பின் அளவுகோல் அளந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரது பசியையும் போக்கவும் முடியும்.

ஆகவே அதைப் போல நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி அழுத்தமான நிலைகள் கொண்டு அந்த மூச்சலைகளை இந்தக் காற்று மண்டலத்திலே பெருக்க வேண்டும்.

நம்மையும் காத்து மக்களையும் காக்கும் சக்தியாக வளர வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்கள் எங்கே… எந்த நிலையில் இருக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Journey-OF Soul.jpg

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்கள் எங்கே… எந்த நிலையில் இருக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை. எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
1.அதன் ஆசை முடியும் வரை
2.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…? என்றால் சிறிய அணுவாகத்தான் உள்ளது.

அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விட்டிடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விட்டிடும் சுவாச நிலை என்றிடும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழி இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…! அதைத் தவிர வேறு வழி இல்லை.

என் நேரம்… என் விதி…! என்று சொல்கிறோம்… அதனின் உண்மை நிலை என்ன..?

Fate and destiny.jpg

என் நேரம்… என் விதி…! என்று சொல்கிறோம்… அதனின் உண்மை நிலை என்ன..?

எதிர்பாராத விதமாக சில சிக்கல்களில் மாட்டுபவர்கள் கடைசி நேரம் அபயக் குரலை எழுப்புகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்கிறார்கள்.

நாம் நல்ல எண்ணத்தில் இருக்கின்றோம். அவர்களைக் காக்கவும் முயற்சி செய்கின்றோம். அந்த விபத்திலிருந்து கூடுமானவரை தப்பிக்க வைத்து விடுகின்றோம்.
1.அந்த உடலை அந்த நேரத்தில் காக்கின்றோம்.
2.ஆனாலும் அந்த விதி வேலை செய்யும்.

“விதி வேலை செய்கிறது” என்றால் மீண்டும் இதை எடுத்துக் கொண்டால் அதனுடைய “எதிர் அலைகள்” ஏராளமாக வரும். அப்பொழுது இந்த உடல் பற்று தான் வரும்.

விதிப்படி நாம் மீண்டும் பிறப்பிற்கு வருகின்றோம். பல துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
1.அந்த உணர்வின் தன்மை அதிகமாக வளர்த்து விட்டால்
2.இதே போல பல இம்சைகள் உருவாகக்கூடிய ஒரு உயிரணுவாகத்தான் மாற்றும்.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதிகள் உண்டு…!
1.அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
2.நாம் செய்த நிலைகளுக்கு இது “கழிகிறது…!” (இது மிகவும் முக்கியம்)

சரி…! இனிமேல் நாம் அந்த அருள் ஒளியை நாம் அதிகமாகக் கூட்ட வேண்டும் என்ற நிலைகளில் எடுத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் தெரிந்தோ… அல்லது தெரியாமலோ அது பட்டிருந்தாலும்… நம் உயிர் அதை இயக்கத்தான் செய்யும்.

சமையல் செய்யும் பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைக்கின்றீர்கள். நான் தானே சமையல் செய்தேன். நான் அதிலே போடாமல் அது எப்படி அதற்குள் ஒரு பூச்சி வரும்…! என்று கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.நாம் போடவில்லை…!
2.காற்றிலே பறந்து வந்த ஒரு விஷப் பூச்சி சமையல் பாத்திரத்திலே விழுந்து விடுகின்றது.
3.நான் போடவில்லையே..! என்று சொல்லிக் கொண்டு
4.நான் போட்டால் தானே அப்படி வரும்…! என்று சொன்னால் அது எப்படி…?

நெருப்பைக் கூட்டிப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அதிலே எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு வேக வைக்கும்.
1.இதைப் போன்று தான் இந்த உயிருடைய வேலை நெருப்புக்குச் சமம்
2.எந்த உணர்வை நுகர்ந்தோமோ சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிவிடும்
3.எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஒரு விதியாக உருப்பெற்று விடுகிறது
4.உயிருடைய வேலை அது தான்…!

அப்படியானால் தெரிந்தோ தெரியாமலோ உயிரிலே படும் தீமைகளை எல்லாம் மாற்றியமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கிறது..,?

நம் ஆறாவது அறிவுக்குத் தான் இருக்கின்றது. ஆறாவது அறிவு கொண்டு மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்தால் உயிர் அதனின் இயக்கமாக நம்மை மாற்றும். விதியை மதி கொண்டு நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் விதியின் வழியாகச் சென்றும் மீண்டும் தேய்பிறையாகக் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம்.

நம்முடைய ஜென்ம நட்சத்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Radioactive power.jpg

நம்முடைய ஜென்ம நட்சத்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்திட நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது இராகு என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள். ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.