இரத்தங்களைத் தூய்மையாக்கத் தியானிக்கும் பொழுது நாம் உணரக்கூடிய சில நிகழ்வுகள்

streaming-blood

இரத்தங்களைத் தூய்மையாக்கத் தியானிக்கும் பொழுது நாம் உணரக்கூடிய சில நிகழ்வுகள்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று சொல்லி ஏங்கிக் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தநாளங்களில் செலுத்தித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தது ஜீவ அணுவாக இரத்தத்தில் உருவாகின்றது. ஜீவான்மா என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் அவர் இறந்த பின் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்தால் நம் இரத்தத்தில் தான் தங்கியிருக்கும்.

ஏனென்றால் நண்பனை உற்றுப் பார்த்து பாசத்துடன் பழகியிருந்தால் அவன் இறக்கும் போது கேள்விப்பட்டதும் “நண்பா போய்விட்டாயா…!” என்று ஏக்கத்துடன் கண்ணால் நுகரப்படும் பொழுது அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் வந்து குடிகொள்ளும்.

அந்த இரத்தத்தின் மூலமாக உணவை எடுத்துத் தான் அது அந்த அணுவாக வளரும். அந்த ஜீவான்மா நம் உயிர் பாகம் செல்லும் போது அதனுடைய உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும். நமக்குத் தீமையை விளைவிக்கும்.

1.ஆக அதன் உணர்வுகளைத் தான் அது செயல்படுத்த முற்படும்.
2.அதை மாற்ற அந்த ஆன்மாவால் முடியாது.

ஆகையினால் அத்தகைய ஆன்மாக்களால் முடியாததை நம் இரத்தங்களில் ஜீவான்மாக்கள் எது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் அது பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது அந்த ஜீவான்மாக்கள் ஒளியின் உணர்வாகப் பெறும். நல்ல ஜீவ ஆன்மாவாக நாம் ஆக்க முடியும்.

அதே சமயத்தில் ஜீவ அணுக்கள் என்றால் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அது எல்லாம் ஜீவ அணுக்களாகத்தான் நம் இரத்தங்களில் உருவாகின்றது.

உதாரணமாக ஒரு பட்டாம்பூச்சி ஒரு பூவிலே தன் முட்டையை இட்டால் அந்தப் பூவின் உணர்வை நுகர்ந்து அந்தப் பூவின் நிறத்திற்குத் தக்க பட்டாம்பூச்சியாக மாறி அதன் கலரிலே வருகின்றது.

அதைப் போல் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது கருத்தன்மையாகி முட்டையாகின்றது. மீண்டும் அதற்கு வளர்ச்சி கொடுத்தால் விளைந்து விடுகிறது.

இதைப் போல மற்ற வேதனைப்பட்டோரின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து இருந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தங்களில் சேர்த்து
2.அருள் ஒளி என்ற உணர்வாக ஊட்டி
3.ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நாம் கண்ணால் செலுத்தப்படும் பொழுது இரத்தத்தில் நல்ல கருவாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.மிகச் சக்தி வாய்ந்த துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.உங்கள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்வது போன்று உணர்ச்சிகள் வரும்.
3.அப்பொழுது அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.சிலருக்கு அந்தத் தீமை என்று உணர்வுகள் இரத்தத்திலே இருந்தால் அது அடங்கப்படும் பொழுது அது கொஞ்சம் சோர்வடையும்.

தியானிக்கும் பொழுது இதை உணர முடியும்.

எண்ணம் போல் வாழ்வு என்பது பற்றியும்… ஒரே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord ewara meditation

எண்ணம் போல் வாழ்வு என்பது பற்றியும்… ஒரே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

சக்தி இருக்கிறதா…? என்று கேட்டவுடன் ரோசப்பட்டு எதையாவது செய்ய முடியுமா…?

praise and disgrace

சக்தி இருக்கிறதா..? என்று கேட்டவுடன் ரோசப்பட்டு எதையாவது செய்ய முடியுமா…?

 

அந்தக் காலத்தில் தன்னுடன் வாழ்ந்த சகாகக்களின் நோயை நீக்கப் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாவரங்களின் விழுதுகளையும் அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்து அதை வைத்து நோய்களை நீக்கியுள்ளார்.

அன்றைக்கும் கேன்ஸர் நோய் வந்துள்ளது. அந்தக் கேன்ஸருக்கு நேரடியாக விழுதைக் கொடுத்தவுடன் அல்லது கட்டி இருக்கும் இடத்தில் அந்தத் திரவத்தை வைத்தவுடனே சர்ர்ர்ர்… என்று கரைத்துக் கொண்டு போகும். விஷ நீர்களை எடுத்து விட்டு அந்தக் கேன்சரைக் குறைக்கும்.

அதே மாதிரி இன்னொரு பச்சிலை இருக்கிறது. இப்பொழுது எப்படி கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்து பின்பு அதை எப்படி மூடுகிறார்களோ பச்சிலையை அரைத்துத் தேய்த்தால் அந்தத் தோல் அப்படியே மூடிவிடும். அக்காலத்தில் செய்த வைத்திய முறை.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரால் எமக்கு (ஞானகுரு) உணர்த்தப்பட்ட நிலைகள்.

ஒரு சமயம் நான் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. ஒருவருக்குக் காலில் ஆணி இருந்தது. அவரால் நடக்க முடியவில்லை. அந்தக் காலில் உள்ள ஆணியை எடுப்பதற்காக வேண்டி “காலை நீட்டுங்கள்…!” என்றார்கள்.

அந்தப் பச்சிலையை வைத்துத் தேய்க்கிறார்கள். தேய்த்தவுடன் அந்த ஆணி அப்படியே ஆழமாக இருப்பதை எடுக்கிறார். அந்த வலி தெரியவில்லை. இப்பொழுது நடங்கள் பார்க்கலாம்… என்கிறார். ஆணியை எடுத்தவுடனே அவர் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது நான் சொன்னேன் வலியை மறக்கச் செய்து எடுக்கின்றீர்கள். இன்னும் கொஞ்ச நேரம் போனால் அவருக்குக் கடுமையான வலி வரும். வலி வந்தது என்றால் தாங்க முடியாது என்று சொன்னேன்.

கேட்டு விட்டு அப்படியே போய் விட்டார். ஏனென்றால் ஆணியை எடுக்க இவர் பணம் குறைவாக வாங்கினார்.

எழுந்திரிக்க முடியாதவர் நல்லதாக ஆனவுடன் இவன் சொன்னதைக் கேட்டு அவர் ஒரு கொலையைச் செய்கிறார். அந்த மாதிரி ஆனவுடன்… “பிறரைக் கொல்வதற்கு நீ வருவாய்…!” என்றேன்.

அவனை அறியாமலேயே இவனுக்குள் செய்கிறான் அவனைக் கொல்லவும் செய்கிறான் இவன் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லவும் செய்கின்றான்.

ஆக இவனால் விளைந்த உணர்வுகள் அணுக்களாக மாற்றப்படும் போது எத்தனை பேர் உடலுக்குள் இது உருவாகிறது…? இந்த உணர்வுகள் எல்லாம் இங்கே மனிதனுக்குள் படர்கிறது. “இதை நீ கரைப்பது எப்பொழுது…?” என்று கேட்டேன்…!

ஏனென்றால் சித்தான புதிதில் முதலில் இதெல்லாம் யாம் (ஞானகுரு) செய்தோம். அதிலே எத்தனை பேர் இங்கே வந்திருக்கிறார்கள்…? தனக்கு நன்றாகி விட்டால் அதற்கு அப்புறம் எங்கேயோ போகிறார்கள்…? யாம் சொல்லும் அருள் வழியைச் சிந்தித்துப் பார்ப்போர் இல்லை.

ஆக மேலே சொன்ன மாதிரி எத்தனையோ எதிர்பார்ப்பிலே வருகின்றார்கள். யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் எல்லாவற்றையுமே நல்லதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் எண்ணியபடி நல்லதாக ஆகவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…? வேறு ஒருவரைப் பார்க்கலாம்…! கடைசியில் இந்தச் சாமிக்கு சக்தி இல்லை…! என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஆக இவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் உடந்தையாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்….! அது எப்படி என்னால் (ஞானகுரு) முடியும்…?

1.உங்களுக்குள் ஒரு தவறாகிறது….
2.அந்தத் தீமைகளிலிருந்து அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்…! என்று நாம் விவரமாகச் சொல்கிறோம்
3.நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா..!

அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் தவறு செய்வதற்கு மறைமுகமாக யாம் ஒரு பெரிய குற்றவாளி ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.உங்கள் குற்றத்தை இயக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட மறைமுகமாக அந்த உணர்வுகளைச் செலுத்துவது நல்லதா…?
2.என் புகழுக்காக வேண்டி… ஆகா கடவுள் நீயே தான்…! என்று நீங்கள் என்னைப் போற்றித் துதித்ததும் உடனே உங்களை நான் உயர்த்துவதா..?
3.ஏனென்றால் என்னை நீங்கள் போற்றினீர்கள் என்றால் அந்தப் போற்றுதலின் மறைவில் என்ன ஆகிறது…?
4.உங்களையும் கெடுக்கின்றேன்… நானும் கெட்டேன்… அடுத்தவர்களையும் கெடுக்கச் செய்யும்
5.ஞானிகள்… மகரிஷிகள்… கொடுக்கும் சக்தியை எப்படி விரயமாக்குவது…?

சிலர் நினைக்கலாம் இந்தச் சாமி என்ன என்று..?
1.நீங்கள் சாமிக்கு என்ன பெரிய சக்தி இருக்கிறது…? என்று கேட்டவுடன்
2.நான் ரோசப்பட்டு ஏதாவது செய்வதா…?

இயற்கையின் உண்மை நிலைகளை உணர்த்தி அந்த உணர்வால் தான் எத்தகைய நிலையாக இருந்தாலும் மாற்றப் படவேண்டும். குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் இன்றும் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகளின் ஞான வித்துக்களை உங்களுக்குள் அழுத்தம் திருத்தமாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை வளர்த்தால் உங்களை அது மெய் ஞானியாக நிச்சயம் உயர்த்தும்…!

நம்முடைய குணாதிசயங்களுக்கு மூல காரணம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

palani hill muruga

நம்முடைய குணாதிசயங்களுக்கு மூல காரணம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

பிறர் புகழ வேண்டும் என்ற ஆசையிலேயே நாம் செயல்பட்டால் நல்லவைகள் மறைந்துவிடும்..!

arul-guru-gnanaguru.jpg

பிறர் புகழ வேண்டும் என்ற ஆசையிலேயே நாம் செயல்பட்டால் நல்லவைகள் மறைந்துவிடும்..! 

குழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…?

எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…?

உங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது..? பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது…? அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…!” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…!”
1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…?
2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது
3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..? என்று சொல்கிறோம்.
4.அதற்குண்டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…?

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது
2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.

இதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்…! என்று நான் நினைத்தேன் என்றால்
1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.

ஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.

நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.

வேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,

அதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது
1.நல்லதாக ஆனது…! என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்
2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.

ஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..! ஏனென்றால்
1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.
3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதா…? ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதும் இல்லை.

ஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…! என்று சொல்ல வரவில்லை.

1.அருள் ஞானத்தைப் பெற்றால்
2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.
உடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

real family relation.jpg

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

“குழந்தைப் பாக்கியமே இல்லை…” என்று வந்த தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்த நிகழ்ச்சி

thirugnana-sambandhar-thevaaram.jpg

“குழந்தைப் பாக்கியமே இல்லை…” என்று வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்த நிகழ்ச்சி

மதுரை வெங்கட்ராமன் வீட்டிற்கு நான் (ஞானகுரு) வரப்போகும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. அவர்கள் வீட்டிற்கு அருகிலே அவர்கள் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தை இல்லை என்று எம்மைச் சந்தித்து ஆசீர்வாதம் செய்த பின் அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது.

அந்தக் குழந்தைக்குப் பேர் வைக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் நான் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்த சமயம் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அந்த நேரத்தில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே வருகின்றனர். அவர்களுக்கும் குழந்தை இல்லை. அது மட்டுமல்ல..! “குழந்தை பாக்கியமே இல்லை..” என்ற ஏக்கம். விபரம் கேட்கும் பொழுது
1.குழந்தை இல்லை என்று ஏற்கனவே நாங்கள் சாமியைச் சந்தித்தோம்
2.அவர் ஆசியால் எங்களுக்குக் குழந்தை கிடைத்தது.
சாமியிடம் சென்று இன்றைக்குத்தான் குழந்தைக்குப் பேர் வைக்கப் போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அல்லி நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆசை.

சாமியிடம் போனால் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் என்றார்கள். அப்பொழுது இவர்கள் தன் குழந்தைக்குப் பேர் வைக்கும் பொழுது அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களும் கூட வருகின்றார்கள் எம்மைச் சந்திக்க…!

1.இந்த உணர்வு வேகம் அலைகள் எப்படி வருகின்றது…! என்று சொல்கிறேன்.
2.அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.அதைக் கேட்டதும்… இந்தத் தம்பதியருக்குத் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்ற அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

அந்த உணர்வைச் சுவாசித்ததும் என்ன நடக்கிறது…?
1.குழந்தை இல்லை என்று இவர்களுக்குக் கிடைத்தது.
2.குழந்தை கிடைத்த அந்த உணர்வை வாக்காலே சொல்லப்படும் பொழுது
3.அந்த ஒலி அலைகள் பட்டவுடன் உற்றுப் பார்த்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கின்றனர்
4.அந்தக் கரு உருவாகும் பருவம் அப்பொழுது உருப் பெறுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி…!

சாமி எங்களுக்கு எல்லாம் இருக்கிறது… நிறைய மருத்துவர்களையும் பார்த்து விட்டோம்.
1.எங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டும்…! என்று
2.அவர்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே “வேண்டும்” என்று எம்மிடம் கேட்கிறார்கள்.
3.”இல்லை…!” என்ற அந்தக் குறையான சொல்லே அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் மனைவி இருவரும் பெறுவீர்கள்…! என்று ஆசீர்வாதம் கொடுத்தேன். பேர் வைக்கக் குழந்தையை எடுத்து வாருங்கள்..! என்று சொல்லி அனுப்பினேன்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து எண்ணுங்கள்..! என்று சொன்னேன்.

ஒரு ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்தேன். அந்தக் கணவன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று பரிசோதித்த டாக்டரும் அங்கே வந்திருந்தார்.

அந்த டாக்டர் என்னிடம் சில விபரங்கள் கேட்க வேண்டும் என்று வந்தார்,
1.குழந்தை கிடைக்கும்..! என்று நீங்கள் ஆசீர்வாதம் கொடுத்தவர்களுக்குக் குழந்தை கிடைத்திருக்கின்றது.
2.இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..? என்று எனக்குத் தெரிய வேண்டும்.
3.மருத்துவத் துறையில் நாங்கள் நிறையப் படித்திருக்கின்றோம்.
4.இவர்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்திருக்கின்றார்கள்.
5.குழந்தைக்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில் இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..?
6.வழக்கமாகக் கர்ப்பப் பையில் தான் குழந்தை உருவாகியிருக்கும்.
7.ஆனால் இவர்களுக்குக் கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை எப்படி உருவானது,..?
8.கர்ப்பப் பை சிறுத்திருக்கின்றது… ஒன்றும் செய்ய முடியாது… என்று நாங்கள் சொன்னோம்.
9.ஆனால் நீங்கள் மருந்தும் கொடுக்கவில்லை. ஒன்றும் செய்யவில்லை…! எப்படிக் குழந்தை உருவானது…?

குழந்தையைப் பேர் வைக்க எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னீர்கள்…! என்னால் இது நம்ப முடியவில்லை. யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்…! நான் நேரடியாகப் பார்த்த அனுபவம்.

இவர்களுக்குப் பிரசவமும் நானே தான் பார்த்தேன். ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தோம். ஆனால் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கின்றது. இது எப்படிச் சாத்தியமாகும்…? என்று அந்த டாக்டர் என்னிடம் (ஞானகுரு) கேள்வியைக் கேட்டார்.

அப்பொழுது நான் சொன்னேன்…! அவர்கள் எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்ட உணர்வின் இந்த அணு செல்கள் வெளியில் வரப்படும் பொழுது
1.கர்ப்பப்பைக்கு அருகிலேயே அதனுடைய ஜீவ அணுக்கள் துடிப்புக்குக் கொண்டு வரும்.
2.அப்பொழுது புதுக் கருப்பை அதிலிருந்து உருவாகிறது. அதற்குள் குழந்தை உருவானது.

ஆனால் பிறக்கும் பாதை வழியாக வர முடியாது ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும். ஒரே குழந்தைதான், அதற்குப் பிறகு வராது என்று முழு விபரத்தையும் டாக்டரிடம் சொன்னேன்.

இது அல்லி நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஏனென்றால் இந்தத் தியானம் என்றால் என்ன…? என்ற நிலையில் அந்த மகரிஷிகளைப் பற்றிய எண்ணங்களை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…” நமக்கு வேண்டாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Atma Jyoti.jpg

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…” நமக்கு வேண்டாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

கண்களைத் தூய்மையாக்கி உடலில் இருக்கும் “ஊழ்வினை என்ற எல்லா வித்துகளையும் நல்லதாக மாற்ற வேண்டும்…”

soul-cleaning.jpg

கண்களைத் தூய்மையாக்கி உடலில் இருக்கும் “ஊழ்வினை என்ற எல்லா வித்துகளையும் நல்லதாக மாற்ற வேண்டும்…”

கண்ணின் கருவிழிக்குள் இருக்கும் கருமணிகள் தான் நாம் பார்ப்பதை எல்லாம் நமக்குப் படமாக்கிக் கொடுக்கிறது. கண் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் பொருதி இருக்கிறது.

வேதனை… வேதனை… என்ற உணர்வை அதிகமாக எடுத்துக் கொண்டால் கருவிழியில் அது பட்டு நாளடைவில் மாசுபட்டு விடுகின்றது. வேதனை என்பது விஷம்.
1.அது முன்னணியில் இருந்தால் நம் கருமணி விஷத் தன்மை அடைந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே விஷத் தன்மைகள் நம் உடலுக்குள் பரவப்பட்டு நம் உடலிலே கடும் நோயையும் உருவாக்குகிறது.

கண்ணின் கருவிழிக்குப் பின் இருக்கும் அந்த நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை கவர்ந்து கொண்டபின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமானமாகி நம் கண்களே மங்கிவிடுகின்றது அல்லது கண் பார்வை தெரியாமலே போய்விடுகிறது

ஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து “தான் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற வலுவான உணர்வு கொண்டு தான் கண்களே உருவானது.

நம் கண்களைத் தூயமைப்படுத்திக் கொண்டால் கண்கள் மாசுபடும் தன்மையை மாற்றலாம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இணைத்துப் பழகவேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் எண்ணக் கூடாது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொன்னபடி
1.எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் கண்ணுக்குத் தான் வரும்.
2.அந்தக் கருவிழி அதைத் தான் கவரும்

நல்லதை எண்ணினாலும் வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள் வலிமை ஆகிவிட்டால் கண்கள் மாசுபட்டு விடுகிறது.

இதுபோன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தியானப் பயிற்சியாகவே கொடுக்கிறோம்.

கண்களுக்குப் பாதிப்பாக ஆனது போல் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை பரவி விட்டால் சரவாங்கி நோய்… வாத நோய்… போன்ற நோய்கள் வந்து விடுகின்றது.

நரம்புகளை உருவாக்கிய அணுக்கள் அதனின் செயலாக்கங்கள் மடிந்து விட்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்காது.

அதே சமயத்தில் எலும்பு மண்டலங்களிலும் நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வு எடுக்க எடுக்க நம் எலும்பை உருவாக்கிய அணுக்களும் பலவீனமாகிவிடும்.

சில நேரங்களில் என்ன ஆகிப் போகும்…?

ஒன்றுமே செய்ய வேண்டாம். வெறுமனே எங்கேயாவது கையை ஊன்றினால் போதும்.. கை ஒடிந்து விட்டது…! என்று சொல்வார்கள். நடந்து தான் போனேன்… என் கால் ஒடிந்து போனது என்பார்கள்…!

எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குள் வேதனை வேதனை என்ற உணர்வால் அதனின் வலிமை இழக்கப்படும் பொழுது எலும்புகளின் பலம் குறைந்து விடுகிறது.

எல்லாவற்றிற்கும் மூலம் நம் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் தான்.

நிலத்திற்குள் மண் வளம் மறைந்து உள்ளது. அதற்குக் கீழ் ஆழத்தில் நீரும் இருக்கின்றது.
1.குறைந்த காலம் வாழும் தாவர இனங்கள் (சில செடி கொடி புல் பூண்டுகள்)
2.நிலத்தில் பரவி இருக்கும் நிலங்களிலிருந்து நீரை எடுக்கிறது.
3.நிலத்தின் ஆழப் பகுதியில் ஓடும் நீரை எடுப்பதில்லை.

ஏனென்றால் நிலத்திற்கு அடியில் பாறைகளும் உண்டு கல்களும் உண்டு. சிறிது காலமே வாழும் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அதனால் நிலத்தின் மீது நீர் இல்லை என்கிற பொழுது உடனே வாடிவிடுகிறது. ஆனால்
1.மரமாக வளரும் பட்சத்தில் அந்த மரம் தன் விழுதுகளைப் பாய்ச்சி
2.அந்த நீரை எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி அதற்கு இருக்கின்றது.

அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் அருளாற்றல்களை நம் எழும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக்கி
1.என்றுமே… எங்கிருந்தும்… எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தியாக
2.நாம் நமக்குள் பதிவாக்க வேண்டும்

அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை அதிகமாகக் கவர முடியும்.

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்தால் நம் கண்ணில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்குகிறது அது பதிவானால் தான் நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறிய முடிகின்றது.

நம் உடலோடு இணைத்துக் கொள்ளும் நிலையாகப் பதிவு (RECORD) செய்வது தான் கண்ணின் கருவிழியின் வேலை. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எது பதிவானதோ அதனின் உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரின் காந்தபுலன் கவர்ந்து அது உயிரான்மாவாக மாற்றுகின்றது. ஆகவே இதில் எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் “சேர்க்கை…!”
1.இப்படி எத்தனையோ வருடங்கள் சேர்த்து வைத்த உணர்வுகள் அனைத்தும்
2.ஊழ்வினை என்ற வித்தாக உடலிலே இருக்கிறது.

கோபம் வேதனை வெறுப்பு பயம் போன்ற வித்துக்கள் ஊழ்வினையாக உடலிலே இருந்தால் நமக்குள் தீமையான உணர்வுகளையே தூண்டி அதையே சுவாசிக்கச் செய்து தீமையின் விளைவாகவே ஊழ்வினைப் பயனாகிவிடும்.

ஒரு நிலம் கெட்டுப் போனால் அதிலே நல்ல பயிர்களை நாம் வளர்க்க முடியாது. ஆனால் அந்த நிலத்தைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்தால் நல்ல பயிர் இனங்களை அதில் வளர்க்க முடியும்.

அதைப் போல நம் உடல் என்ற நிலத்தைப் பண்படுத்த
1.துருவ நட்சதிரத்தின் உணர்வை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி அதைப் பண்படுத்தி
2.நல்ல உணர்வுகளைப் பதிவாக்கும் நிலைகளுக்கு நாம் ஊழ்வினையை மாற்ற வேண்டும் (இது முக்கியம்).

விதையில்லாமல் தாவரங்கள் எப்படி முளைக்கிறது…? எண்ணிலடங்காத எறும்புகளும் பூச்சிகளும் எப்படித் தோன்றுகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Nature goddess.jpg

விதையில்லாமல் தாவரங்கள் எப்படி முளைக்கிறது…? எண்ணிலடங்காத எறும்புகளும் பூச்சிகளும் எப்படித் தோன்றுகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எல்லோரும் வணங்கிடும் அந்தக் கடவுளின் சக்தி ஒன்றே தான். அந்தச் சக்தியின் நிலைக்குப் பல ரூபங்களும் பல நாமங்களும் இட்டு அவரவர்கள் வழிக்கு அவரவர்கள் வணங்குகிறார்கள்.

ரூபமில்லா சக்தியின் நிலை என்னப்பா..? அந்த ரூபமில்லாத நிலை தான் காற்றும்… மழையும்… ஒளியும்…! இவற்றில் கலந்துள்ள அச்சக்தியின் நிலை இல்லாவிட்டால் இந்த உலகிலே தோன்றிடும் பல கோடி உயிரணுக்கள் எல்லாமே எப்படி உதித்து இந்நிலையில் உயிர் பெற்று வாழ்ந்திடுமப்பா…?

அவ் ஈசனின் சக்தியின் ஆற்றல் எல்லாம் அச்சூரியனின் சக்தியிலிருந்து தான் பல வழிகளில் நமக்கு அருள் தருகின்றது. எல்லா அருளையும் தன்னுள் ஏற்றிருக்கும் அச்சூரியனின் சக்தியிலிருந்து பல கோடி உயிரணுக்கள் தோன்றுகின்றன.

அந்த உயிரணுக்களின் உண்மை நிலைகளை எல்லாம் பலர் பல வழிகளில் அறிந்தும் அறியாமலும்… பல ஆராய்ச்சிகளிலும்… பல வகை விஞ்ஞான ரூபத்திலும்… கண்டு உணர்கின்றார்கள். கண்டு உணர்வதற்குப் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த உயிரணுக்கள் உயிர் பெற அச்சக்தியின் அருள் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உயிர் பெறும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் பல வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகைச் செடிகளும் அந்த ஊரின் மண் நிலைக்கு ஏற்ப வளர்ந்து பயன் தருகின்றன.

1.நாம் பயிர் செய்து பலன் பெறும் செடி கொடிகள் பல.
2.நாம் பயிர் செய்யாமலேயே இப்படர்ந்த பூமியில் பல வகைச் செடி கொடிகளும் மரங்களும் வளர்கின்றன.

அவை எல்லாம் எந்நிலையில் அவ்விடத்தில் வளர்கின்றன…?

விதை விதைத்து வளர்கின்றனவா எல்லாமே என்று சிலர் எண்ணுகின்றார்கள். பறவைகளின் எச்சம் பட்டும் காற்றிலே பல விதைகள் பறந்து வந்தும் அந்நிலையிலிருந்து பல வகைச் செடிகள் வளர்கின்றன என்று..!

திடீர் திடீரென்று மழை பெய்து சூரிய ஒளி பட்டவுடன் ஈரம் உள்ள இடங்களில் எல்லாம் பல வகை புல் பூண்டு தாவரங்கள் எல்லாமே வளர்கின்றன. புல் பூண்டிற்குத்தான் விதையே இல்லாத பொழுது அவை எப்படி அந்நிலையில் எல்லாம் வளர்கின்றன…?

பல உயிரணுக்களின் உண்மைத் தத்துவங்களை இந்நிலையில் செப்புகின்றோம்.

சூரியனிலிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் எந்தெந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்நிலையில் அப்பூமித் தாய் ஈர்க்கின்றாள்.

அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் மேல் அச்சூரிய ஒளி பட்டதும்
1.அப்பூமியின் நிலைக்கும் அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் நிலைக்கும் ஏற்ப சூரிய ஒளி பட்டவுடன்
2.அங்குள்ள உயிரணுக்கள் உயிர் பெற்று அம்மண்ணின் நிலை கொண்டு பல வகைத் தாவரங்கள் உண்டாகின்றன,

அந்நிலையிலே தான் பல கோடி உயிரணுக்கள் தன் தன் நிலைக்கு ஏற்ப தன் தன் சுவாச நிலைக்கேற்ப சேர்த்து
1.தன் ஆகாரம் உள்ள இடத்தில் படர்ந்து இருக்கும் பொழுது
2.அந்நிலையில் தன் ஆகாரத்தின் சுவாச நிலைக்கு ஏற்ப… “ஆகாரம் உள்ள இடத்தில் அச்சூரிய ஒளி பட்டதும்”
3.பல உயிரணுக்கள் உயிர் பெறுகின்றன.

இந்நிலையில் உயிர் பெறுபவை தான் பல வகைப் புழு… பூச்சிகள்… எறும்புகள்… கொசுக்கள்.. ஈக்கள்…! எல்லாமே. இவை எல்லாம் முட்டை இட்டு முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதில்லை.

இதன் நிலை எல்லாம் தன் சுவாச நிலைக்கேற்ப அழுகும் தன்மை நாற்றம் வாய்ந்த இடம் இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு தான் அந்த உயிரணுக்கள் எல்லாமே உற்பத்தியாகின்றன.

தன் சுவாச நிலைக்கேற்ற உணவுள்ள இடங்களில் தான் இந்த உயிரணுக்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

ஆடி மாதத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்க்கிறது என்கிறோம்.
1.அந்த ஆடி மாதத்தில் மட்டும் தான் அந்த ஈ உற்பத்தியாகின்றதா…?
2.திடீரென்று தோன்றி மறைய அந்த ஈக்களுக்கு முட்டை எங்கிருந்து வந்தது…?
3.பல ஈக்கள் ஒரே சமயத்தில் வருகின்றன. அந்த ஈக்கள் திடீரென்று தோன்றுவதெல்லாம் இந்நிலையிலிருந்து தான்.

அச்சூரியனின் சக்தியிலிருந்து பல உயிரணுக்கள் இந்தப் பூமியின் மீது படர்ந்துள்ளன. இந்நிலையில் அதற்கு ஏற்ற சுவாச நிலை கிடத்தவுடன் அந்தந்த நிலையிலேயே அந்த உயிரணுக்கள் எல்லாம் ஜீவன் பெற்று தன் ஆகாரத்தைத் தேடிக் கொள்ளச் சுற்றி வருகின்றன.

எவ்வளவு குறுகிய காலத்தில் ஜீவன் பெற்றதோ அந்நிலையிலேயே அந்த உடலை விட்டும் அது ஜீவன் பிரிகின்றது. பல உயிரணுக்களின் நிலை எல்லாம் அந்நிலையிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

மரப்பொந்துகளிலும் வீட்டின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று எறும்புகள் படர்ந்து காணப்படுபவை எல்லாமே இந்நிலையிலிருந்து தான்…!