அர்த்தநாரீஸ்வரர் சக்தி

Lord ardhanreeswarar

அர்த்தநாரீஸ்வரர் சக்தி 

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப் படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..! அதாவது
1.(POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!)

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால் போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…” மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் தாய் சக்தியையும் இழந்து அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான். இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெறவேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெறவேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

 

“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…?

auspicious day

“நினைவு நாள்” அன்று எதை நினைக்க வேண்டும்…? 

 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் வருடா வருடம் நினைவு நாள் வைத்து வணங்குகிறோம். ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் அதைச் செய்கின்றோமா…?

நினைவு நாள் அன்றைக்கு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தோ மற்ற அவர்களுக்கு விருப்பமானவற்றைப் படைத்து வைத்து அவர்களைக் கூப்பிடுகின்றோம்.

அப்படிக் கூப்பிட்டுக் கவர்ந்தோம் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் நம் உடலில் தான் வந்து சேரும்.
2.அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் உடலில் அனுபவித்த நோய்களும் நமக்குள் வந்து சேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று ஏகோபித்த நிலையில் விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

இப்படி எல்லோரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் உந்தித் தள்ளினால் அவர் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கு கரைக்கப்படுகின்றது. அவர் அங்கே ஒளி உடல் பெறுகின்றார். இது தான் ஞானிகள் காட்டிய வழி.

1.அவர் ஆன்மா ஒளி உடல் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வந்தாலும்
2.வருடா வருடம் நாம் நினைவு நாள் கொண்டாடினாலும் இதே முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

ஏன்…?

அவருடன் நாம் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ வகையான வேதனைகள் வெறுப்புகள் இருக்கும். அதே சமயத்தில் கடைசி நிமிடத்தில் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நேரத்திலும் கடும் விஷத் தன்மையாகி மடிந்தபின்தான் அந்த ஆன்மா வெளியேறுகின்றது.
1.இதை எல்லாம் நமக்குள் அவர் உணர்வாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா…!
2.அவருடைய நினைவு நாள் என்று அவரை எண்ணி ஏங்கும் பொழுது
3.அவரின் உணர்வுகள் நம் உடலுக்குள் இருப்பதற்கு மீண்டும் ஜீவன் கிடைத்து
4.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கும்.

பின் அவர் எப்படி சிரமப்பட்டு நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வேதனையுடன் பிரிந்தாரோ அதே நிலை தான் நமக்கும் ஏற்படும்

மாறாக நாம் நினைவு நாள் அன்று கூட்டுத் தியானங்களை அமைத்து
1.அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த அந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது
2.அது நம் இரத்த நாளங்களில் கலந்து
3.நம் உடலில் அவர் உடலில் சேர்த்த தீய வினைகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அவர்கள் உணர்வுடன் பழகிய அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் இருந்தால்
1அந்தப் பேரருள் என்ற அந்த ஒளியான உணர்வினை
2.நம் உடலுக்குள் இருக்கும் அவரின் உணர்வு அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றோம்.

திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம்…!

முதலிலே… அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இந்த நஞ்சின் உணர்வைக் கரைத்து விட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக உருவாக்கி விடுகின்றோம். நாம் தியானித்த உணர்வின் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் சப்தரிஷி மண்டலங்களாக ஆகிவிடுகின்றனர்.

பின் அவர்களும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வருவதை உணவாக உட்கொண்டு அந்த உணர்வினை அவர்களுக்குள் வளர்த்து அழியாத ஒளி உடலாக அவர்கள் வாழ்ந்து வரத் தொடங்குகின்றர்கள்.

அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வினை நாம் குரு காட்டிய வழியில் நாம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கும் போது அவர் ஒளியின் உடல் பெற்ற அந்த உணர்வுகளை நுகர்கின்றோம்.

அவருடன் வாழ்ந்த காலங்களில் வெறுப்போ வேதனையோ சலிப்போ நோயோ இதைப் போன்ற உணர்வுகள் அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதனால் அந்தப் பேரருள் என்ற ஒளிச் சரீரம் பெற்ற அவருடைய உணர்வை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமைகளை நீக்கிடும் உணர்வின் உணர்வாக நாம் பெறுகின்றோம்.
1.அது தான் நினைவு நாள் என்பது.
2.நினைவு நாள் அவருக்காக அல்ல.
3.நமக்குள் இருக்கும் அவர் உணர்வின் அணுக்கள் ஒளியாக மாற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலங்களில் அவர் ஒளியாக வாழ்வது போல் நாமும் பேரொளியாக வேண்டும்
5.இந்த உடலுக்குப் பின் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்குத்தான்.

ஆகவே உடல் பெறும் உணர்வுகளை அது உணவாகக் கொடுக்கும் போது நோய்களாக வருகின்றது. ஒளியாக மாற்றிய உணர்வுகளை உணவாகக் கொடுக்கும் பொழுது பேரொளியாகின்றது. அழியாத நிலைகள் அவர்களும் பெறுகின்றார்கள். நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லதையே செய்தாலும் உடலில் பல விதமான நோய் வருகிறது…! வரக் காரணம் என்ன…?

bONE MAROW

நாம் நல்லதையே செய்தாலும் உடலில் பல விதமான நோய் வருகிறது…! வரக் காரணம் என்ன…?

யாராவது இருவர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் மற்றொருவரைக் கோபமாக ஆத்திரமாகத் தாக்குகிறார்… தாக்கிப் பேசுகின்றார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நாம் கண் கொண்டு அந்த இருவரையுமே பார்க்கின்றோம். தாக்கிப் பேசும் அந்தக் கோப உணர்வுகளும் அந்தத் தாக்கிப் பேசும் பேச்சைக் கேட்டுணந்தோர் வேதனைப்படும் இந்த இரண்டு உணர்வலைகளும் வெளிப்படுகின்றது.

அவர்கள் இருவரையும் நாம் பார்க்கப்படும் போது
1.வேதனை கலந்த உணர்வும்
2.கோபம் கலந்த அந்த உணர்வும் இந்த இரண்டையும் நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு சுவாசித்த இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டதும்
1.கோபப்படுவோர் யார்…? என்று தெரிய முடிகின்றது.
2.வேதனைப்படுவோரையும் யார்…? என்று அறிந்து கொள்ளச் செய்கின்றது நமது உயிர்.

கண் கொண்டு பார்த்தாலும் “உயிருடன் ஒன்றிய உணர்வுகள்… அது இயக்கிக் காட்டும் போது தான்…!” நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு உடலிலே விளைந்த இந்தக் காரமான உணர்வு அது யார் வேகமாகக் கோபத்துடன் பேசுகின்றாரோ இந்த உணர்வுகள் அடுத்தவர் உடலிலே பட்டு அவர் உடலிலே வேதனையாக மாறுகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசித்தோம் என்றால் அந்த இரண்டு உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி விடுகின்றது. அது நம் ஆகாரத்துடன் கலந்து கோபப்படும்… வேதனைப்படும் அந்த உணர்வின் சத்தாக இரத்தங்களில் மாறுகின்றது.

அதே சமயம் நாம் கண் கொண்டு பார்த்த இந்த உணர்வுகள் நம் எலும்புக்குள் அமைந்திருக்கும் ஊனிலே பதிவாகின்றது. நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் இருக்கும் ஊன் தான் பதிவு செய்து கொள்கின்றது.

யாரை நாம் உற்றுப் பார்த்தோமோ அவர் உடலிலே இருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் பரவி வருவதை கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
1.அந்த எண்ண அலைகள் நம் ஆன்மாவில் வரும்போது தான் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
2.சுவாசிக்கும் பொழுதெல்லாம் அந்த நினைவலைகள் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகின்றது.

ஆக இவ்வாறு எலும்புக்குள் ஊன்றிய பின் நாம் வேடிக்கை பார்த்த உணர்வுகள் நம் சுவாசித்தன் ஈர்ப்புக்குள் வந்து நம் உடலிலே அது விளையத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக நாம் ஒரு பருத்தி விதையை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அந்த வித்துக்குள் எந்தச் சத்து இருக்கின்றதோ அதைக் காற்றிலிருந்து கவர்ந்து செடியாக விளைந்து மீண்டும் பருத்தியின் வித்தை வித்தாகவும் பருத்தியாகவும் அது உருவாக்குகின்றது.

இதைப் போல ஒரு சோள வித்தை விதைத்தால் சோளத்தின் தன்மை கொண்டு அது சோளத் தட்டையாக விளைந்து மீண்டும் சோள வித்தாகவும் சோளமாகவும் விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அது காரம். தனிக் காரத்தைச் சாப்பிட்டால் எரிச்சலடைவது போல் கோபமாகப் பேசினால் நமக்கு அது எரிச்சலாகின்றது.

வேதனைப்படுகிறார் என்றால் அது நஞ்சு கொண்டது. ஒரு நஞ்சான பொருளை உட்கொண்டால் எப்படி மயக்கமாகின்றதோ அது போல் வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலே நமக்கு மயக்கம் ஆகி சிந்தனைகள் குறைகின்றது.

ஒரு நிலத்தில் – நிலம் முழுவதற்கும் பல விதமான வித்துக்களைப் போட்டால் அதனதன் வித்தின் சத்தைக் கவர்ந்து அது அது முளைப்பது போல
1.நமது உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் பதிவாகி
2.வித்துக்களாக ஆன பின் அந்தந்தக் குணமாக (வினையாக) முளைத்து
3.தன் இனமான உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து வளரத் தொடங்குகிறது.

வேடிக்கையாக நாம் பார்த்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி அதை நாம் சுவாசிக்கும் போது உயிரிலே இணைக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக “ஓ…!” என்று அது ஜீவன் பெறுகின்றது.

சுவாசித்த அந்த உணர்வின் சத்து நம் இரத்தத்துடன் கலந்து ஒரு செடி வளர்வது போல இந்த உணர்வுகள் அனைத்தும் ஜீவ அணுக்களாக விளைகின்றது.

அப்படி அந்த உணர்வுகள் இரத்தத்தில் விளைந்த பின் கை கால் குடைச்சல்… எரிச்சல்… அசேர்க்கை போன்ற நிலைகள் ஆகி நோயாக உருவாகின்றது.

நோயாக ஆனது எந்த உறுப்புகளின் பாகத் தொடர்புகளில் இது இணைந்ததோ அங்கே அந்தக் கார உணர்ச்சியை தூண்டும் நிலைகளில் குடல் புண்ணோ… இருதயங்களில் வலியோ… அல்லது இரத்த நாளங்களில் குடைச்சலோ இவ்வாறு பெருக்கத் தொடங்கும்.

1.அப்பொழுது இந்தக் கார உணர்ச்சிகள் தாங்காது நமது சிறு மூளையின் பாகங்கள் அது புடைத்து நிற்கும்.
2.கை கால் அங்கங்களைச் சுருக்கும்.
3,இதனால் அடிக்கடி நமக்குள் கோபங்களும் எரிச்சலும் வரத் தொடங்குகின்றது.

இந்த எரிச்சல் தாங்காதபடி வேதனை அதிகமாகி மேல் வலியாகி நரம்புகளிலும் இணைந்து புண்ணாகவோ இரணங்களாகவோ மாறி விடுகின்றது.

அப்படி நரம்புகளிலே ஆன பின் அதனின் தொடர் கொண்ட நிலையில் அந்த நுண்ணிய உணர்வலைகள் சிறு மூளையிலே தாக்கப்படுகின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் எப்படிச் செயலிழந்து விடுகின்றோமோ வேதனை என்ற விஷத்தின் தன்மை மூளையில் உள்ள நுண்ணிய பாகங்களில் பட்ட பின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலை ஆகி உடலைச் சீராக இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

உடல்களிலே உணர்ச்சி அற்ற நிலையும் நாம் உணர்வு இழந்ந நிலையில் அதாவது நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று வந்துவிடுகின்றது. பிரசர் (PRESSURE) வந்தவர்களை எல்லாம் பார்த்தால் கை கால் அங்கங்களை எல்லாம் சரியாக இயக்கவிடாதபடி அப்படியே குறுக்கிவிடும்.

ஏனென்றால் சிறு மூலையில் தாக்கபட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்போது கை கால் அங்கங்கள் அனைத்தும் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. அடுத்து
1.அதே உணர்வுகள் பித்த சுரபிக்குள் வந்த பின்
2.பித்தம் அதிகமாகி விட்டால் தலை சுற்றி எப்படிக் கீழே விழுகின்றோமோ இதைப் போல
3.ஒவ்வொரு உணர்வும் செயல் அற்றதாகி நம் உடலே வீழ்ச்சி அடைந்தது போல் ஆகின்றது.

அதே சமயத்தில் சுவாச உறுப்புகளுக்குள் இத்தகைய கோபமும் வேதனையும் சென்று விட்டால் அந்த உறுப்பைப் பலவீனம் ஆக்கி விடுகிறது. அதனால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதனில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயங்காதபடி ஆஸ்மா மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன நிலையில் நாம் எண்ணும் எண்ணங்கள் அதாவது கூர்ந்து சிந்திக்கும் நிலையில் கண்களிலே கொதிப்படைந்த உணர்வும் வேதனையான உணர்வும் கலக்கப்படும் போது
1.ஒரு பொருளை நாம் காண்பது என்பது
2.அந்தப் பொருளின் தெளிவான நிலைகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைத்து விடுகின்றது.

இருந்தாலும் அந்தப் பொருளை நாம் சிறிது நேரம் காண்போம் என்று முயற்சித்தாலும் முடியாத நிலையில் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் உள்ள கரு விழியால் அந்த உணர்வுகளை நாம் கவர்ந்திருந்தாலும்
1.அதிலே எடுத்த அமில சக்தி உடல் முழுவதும் ஊடுருவச் செய்து
2.அறியச் செய்யும் நரம்புகளையும் இரதத நாளங்களையும் மங்கச் செய்து விடுகின்றது… செயலற்றதாக்கி விடுகின்றது.

ஆக கரு விழிகளிலே படும் பட உணர்வுகளை அது தெளியாக எடுத்துக் காட்டாதபடி மங்கும் நிலை அடைந்து விடுகிறது. நம் பார்வையில் படும் பொருளின் ரூபத்தைக் கவர்ந்து கரு விழிகளில் உள்ளே உள்ள விழித் திரையைப் பலவீனம் அடையச் செய்கின்றது.

நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையும் உருவாகி விடுகின்றது. இது சிறுகச் சிறுக விளைந்து இதனின் பலனாக
1.நமக்குள் கோபமும் வேதனையும் வந்து
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலைகளும்
3.குடும்பத்தை உற்று நோக்கினாலே நம்மை அறியாது கோபமும் வேதனையும் படச்செய்யும்.

இதைப் போன்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக வரும்போது
1.நமக்குள் இனம் புரியாத மனக் கலக்கங்களும்
2.கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் ஆகி அதனால் உடலிலே பல பிணிகளை ஏற்படுத்தும் நிலையே உருவாகி விடுகின்றது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு எதிர்நிலை ஆகும் போது கிட்னிக்கோ கண்ணுக்கோ கல்லீரலோ நுரையீரலோ இதைப் போன்ற நிலைகள் மாசுபடும் நிலைகள் வரும்போது அந்தந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது.

நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் தவறே செய்யவில்லை என்றாலும் இப்படி ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்..?

எந்தத் தீமையைக் கண்டாலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உடனே கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.ஒரு ஐந்து நிமிடம் அருள் உணர்வுகளை உயிர் வழிச் சுவாசித்தால் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகள் அகற்றப்படுகின்றது.

அதற்குப் பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் பெறவேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணினால்
1.அவர்களைப் பற்றிய நினைவலைகள் நமக்கு அடுத்து வராது.
2.அவர்களை நினைத்தாலும் நாம் தியானித்தது தான் நினைவுக்கு வரும்.
3.நோயாக நமக்குள் மாற்றாது… மாறாது…!

 

“மூகம்…!” என்ற மூகாம்பிகைச் சக்தி… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Adi sankarar peedam

“மூகம்…!” என்ற மூகாம்பிகைச் சக்தி… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லும்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்துவதைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனித சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குல சிந்தனையை சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

கேன்சர் நோயை ஆரம்பத்திலேயே ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை…!

நோய் நீக்கும் பயிற்சி

கேன்சர் நோயை ஆரம்பத்திலேயே ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை…!

 

அதிகமான வேதனைகளை நாம் படுவோம் என்றால் அது கேன்சராக அதனின் வித்தாக உடலுக்குள் முளைக்கத் தொடங்கி விடுகின்றது.

கேன்சருக்குண்டான வித்தாக இருந்தாலும் உடலில் அது உருவான நிலையில்
1.முதலில் அது ஒன்றுமே தெரியாது.
2.அதனின் முதிர்ந்த பருவம் வந்த பின் தான் அதை அறியவே முடியும்.

உதாரணமாக ஓரு கஞ்சாச் செடி வளர்ந்து வந்தாலும் கடைசியில் அதிலிருந்து “பிசின் ஒழுகும்போது தான்…!” அதனுடைய மணங்கள் தெரியும். அது வரையிலும் அது கஞ்சாச் செடி என்று நாம் தெரிந்து கொள்ளவே முடியாது. அந்தப் பிசின் வந்த பின் தான் அதனுடைய மணத்தை அது வீசும்.

அதைப் போன்று தான் மனிதன் தான் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அது சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்து (கஞ்சாச் செடியை போல) அதனின் மணத்தை வேதனையாக உருவாக்கும் போதுதான் கேன்சர் என்றே அறிய முடியும்.

அது வரையில் வயிற்று வலி அந்த வலி இந்த வலி என்ற மேல் வலி கை வலி என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக எத்தகைய மருந்தைச் சாப்பிட்டாலும் அது முழுவதும் சரியாகாது.

இப்படி சிறுகச் சிறுக அந்த வேதனையைக் குறைத்து வந்தாலும் அது முழுமையான வித்தாக அடையப்படும் போது… “நாம் ஒன்றுமே செய்ய முடியாத நிலைகள் ஆகிவிடுகின்றது…!’

இன்று இருக்கும் நவீன விஞ்ஞானக் கருவிகள் கொண்டு கேன்சரைக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திட முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

ஒரு வேதனை என்ற வித்து உடலுக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகளை அதிகமாக உடல் முழுவதும் பரப்பி நாம் எணணிய எண்ணத்துடன் இணைந்து மூளை பாகம் வரையிலும் அதன் தொடர்பலைகள் சென்றுவிடும்.

உடலில் ஒரு பக்கம் உருவான கேன்சர் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்தாலும்
1.மூளையில் இருந்து எண்ணத்தால் உருபெறும் உணர்வுகள் அதன் விழுதின் தொடர் கொண்டு
2.மீண்டும் அதனுடைய நிலைகள் தொடர் வரிசையாக
3.இன்னொரு இடத்தில் வளரத் தொடங்கும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து இதே வேதனை என்ற நிலைகள் உருவாகி வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கிச் செயல்படுத்திவிடும்.
1.அதை முழுமையாக அகற்றிடும் நிலை இல்லை.
2.நஞ்சின் வீரியத் தன்மை அதிகரிக்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.
3.மனித வாழ்கையில் நாம் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

ஏனென்றால் தவறு செய்வோரை உற்று நோக்கி அதனால் வேதனைப்படுவதும் அல்லது குடும்பத்தின் மீது பாசம் பற்றும் இருக்கப்படும் போது சந்தர்ப்ப பேதத்தால் கவலையோ சோர்வோ சஞ்சலமோ அடையப்படும் போது ஒரு காரியம் சித்தி அடையவில்லை என்றால் வேதனை என்ற நிலையும் வருகின்றது.

பையன் மேல் பற்றுக் கொண்டு இருக்கும் பொழுது அவனுக்குச் சிறிது காய்ச்சல் வந்தாலும் வேதனைப்படத் தொடங்கி விடுகின்றோம். இதைப் போல ஒவ்வொரு செயலிலும் இனம் புரியாத பலவீனங்கள் நமக்குள் ஆட்கொண்டு நஞ்சின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்தபின் நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் பெற்றிருந்தாலும் நஞ்சுக்குள் சிக்குண்டு மனிதனின் உணர்வைத் தாழ்த்தி நஞ்சின் உணர்வாகவே விளைய வைத்து மனிதனின் எண்ணங்கள் சுருங்கி இறந்த பின் மனிதப் பிறவி இல்லாத நிலைகள் வருகின்றது.

இறக்கும் தறுவாயில் இன்னொரு மனிதன் மேல் ஆசை பற்று வைத்திருந்தால் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் நாம் போக நேரிடுகின்றது.

வேதனையால் உடல் நலிந்து எண்ணங்கள் குறைந்து வேதனை என்ற உணர்ச்சியின் வேகம் இன்னொரு உடலுக்குள் போனாலும் அங்கேயும் நம் உடலில் வந்த நோய்களைத் தான் உருவாக்க முடியும்.

எந்த உடலுக்குள் சென்றோமோ அங்கேயும் நஞ்சை விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்ததான் முடியுமே தவிர அங்கே நாம் மனிதனாகப் பிறக்கவும் முடியாது. மனித உருபெறும் நிலையும் அற்றுப் போய்விடுகின்றது. அடுத்தாற்போல் மனிதனே இல்லாத உருவாக நம்மை உயிர் உருவாக்கிவிடும்.

ஒரு எறும்பு கடித்தால் நாம் வேதனைப் படுகின்றோம். கொசு கடித்துவிட்டால் நம் உடலில் அரிப்பு ஏற்படுகின்றது.

ஆனால் ஒரு மாட்டிற்கு நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாக இருக்கின்றது. ஆக நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் இந்த உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

இருந்தாலும் நஞ்சின் நிலைகள் உடலுக்குள் அதிகரித்த பின் அந்த நஞ்சே தனக்கு உறுதுணையாக இருந்து அதற்குகந்த அடுத்த உடலமைப்பாக அந்த உடலைக் காத்திடும் நஞ்சின் நிலையாக மாற்றி விடுகின்றது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும் இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் எலும்புக்குள் ஊனுக்குள் பதிவாகி இருக்கும் வேதனை என்ற வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும். கேன்சர் நோயிலிருந்து முழுவதும் விடுபடவும் முடியும்.

“தியானத்தின் மூலம்…” நாம் எண்ணுகின்ற இலக்கை எப்படி அடைய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

pearl of wisdom

“தியானத்தின் மூலம்…” நாம் எண்ணுகின்ற இலக்கை எப்படி அடைய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!

அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் அருமருந்து.

(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”

(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)

கொங்கணரின் ஞானக் கண்ணைத் திறக்கக் காரணமாக இருந்த “வள்ளுவன் வாசுகி செயல்…”

Tiruvalluvar

கொங்கணரின் ஞானக் கண்ணைத் திறக்கக் காரணமாக இருந்த “வள்ளுவன் வாசுகி செயல்…”

கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்து பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”

பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.

அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாக தகித்து நின்றார்.

தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.

வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு எதனால் இந்த நிலை வந்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.

பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.

வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்த காரணம் என்ன..? என்ன மமதை கொண்டு தாமதமாக வந்தாய் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.

வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.

“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.

அந்தச் சொல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!

ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த நியமன ஜடாக்கினித் தொடரில் தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற வொட்டாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது.

காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.

பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.

வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன். பதில் கூற வேண்டும் என்று பணிவோடு பகர்ந்து அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும் என்றார்.

வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!

1.“மண் சட்டியில் உணவில்லை.
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…!”
3.உமது குரல் எட்டா நிலைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததே காலதாமதம் ஆனது.. என்று சொல்கிறார்.

அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.

அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.

என்ன…? கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.

ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்…! பேரண்ட இரகசியம் தெரியுமா…?

ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு உண்டு தான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”

1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன் – என் உயிர் சக்தி தான்
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.

உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபமகற்றி ஞானக்கண் திறந்தார்…!”

“வள்ளுவர் வாக்கு…! (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலக அறிவின் செயல்பாட்டுக்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்குப் பலமான பின்னணிக் காரணமும் உண்டு. அது என்ன…?

அது தன் கணவர் ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் வறுமைதான்.

பல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவாணிக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் இருந்தாலும்
1.முழுவதும் காற்றின் ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு
2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..?
3.இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.

காற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் கொள்ளுதலும் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.

எத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் பெருமக்களை நாடிப் பொருள் பெற்றுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.

1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…!
2.அது வாசுகிக்கும் வந்ததன்றோ விந்தை…!” என்று உணர்ந்து கொண்டு
3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மன எண்ணச் செயலின் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி
4.நற்செயலுற வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.

பின் அம்மையை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறு நீர் பெய்யச் செய்தார். வெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமத் சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார். “தான் ஒரு சித்தன்…! என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.

“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது வெறும் உலகோதய ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்
1.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.
2.நல் வழி ஒன்று அது நன்றாம்.. தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.
3.சரீர நலத் தொடருக்கும் நம்மிடமே தொழில் உள்ளது.
4.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…!
5.ஆகவே அனைத்தும் சேமமாகும்…! என்று கண்டிப்பது போல் எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.

இந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கும் வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…!

வள்ளுவனாரும் வாசுகி அம்மையும் தனது சிந்தனையின் தவத்தை ஆட்கொள்ள.. தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணரும் வள்ளுவச் சித்தரின் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்ட கருத்தின் பயன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார் கொங்கணர்.

அதனால் அவர் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்று சிந்தனையின் வசமாக ஆனார்.

வெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறுகின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…!

வாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன் என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்து வறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையைக் காட்டி உண்மையின் சூட்சமம் தெளிவுபடுத்தி விட்டார்.

1.வாசுகி சொல்லால் போதனைப்படுத்தினார்.
2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.
3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…!
4.இனி யான் இந்த வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன்.
5.என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.
6.இத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன்.
7.செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்…! என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.

சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…! வீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…!
1.தன் சூட்சம சரீரம் செயல்படும்
2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்…! என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…!

இவ்வாறு கொங்கணர் எண்ணிக் கடும் தவம் பேற்கொண்டு தனது சரீரத்தைப் புற்று மூட அதனுள் சூட்சம ஜெபத்தில் ஆழ்ந்து விட்டார்.

நாளைய அரசு நல்ல அரசாக ஆட்சியில் அமர “மக்களாகிய நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை…!”

spiirtual election

நாளைய அரசு நல்ல அரசாக ஆட்சியில் அமர “மக்களாகிய நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை…!”

 

அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறவேண்டும். அவர்கள் மன பலம் பெற வேண்டும்.
1.மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி
2.அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி இந்த அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது நம்முடைய எண்ணம் அவர்களுக்கு நல் வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வளரவும் இது உதவும். இதைப்போல மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “ஓர் குடும்பம்…!” என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

மனித உடலுக்குள் நல்ல குணங்களும் உண்டு கெட்ட குணங்களும் உண்டு. இருந்தாலும் உயர்ந்த உணர்வு கொண்டு தியானிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்திட இது உதவும்.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த ஒருக்கிணைந்த நிலைகளில் இணைந்திடும் போது
1.நமது அரசே உலகிற்கு எடுத்து காட்டும் அரசாகவும்
2.அதன் கீழ் வாழும் மக்கள் நாம் உயர்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான முறையால் மத பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் இன்று உலகம் அழிந்திடும்… மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில்
1.மாமகரிஷி ஈஸ்வர பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
2.நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த முறைப்படி நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்
3.ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் நமது அரசும் வளமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுங்கள்.
4.இப்படி ஒருக்கிணைந்தால் கட்சி பேதமும் வராது… இன பேதங்களும் வராது… மத பேதங்களும் வராது…!

ஏனென்றால் நாம் அனைவரும் ஆட்சி சீரானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணி அந்த ஆட்சி சீராக அமைந்தால் “யாருக்கும் தொல்லை இல்லை…!”

அப்படி எண்ணாது என்னுடைய வழியில்… “நான் உயர்ந்து இருக்க வேண்டும்…!” என்று எண்ணி விட்டால் அடுத்து தொல்லைகளே வருகிறது. ஆகவே இந்த எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு அரசை ஒத்தே நாம் வாழ வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருக்கிணைந்து ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய ஓட்டைப் பெற்றுத்தான் ஆட்சிக்குச் செல்கிறார்கள். ஓட்டு அதிகமாக வாங்கி வென்று அங்கே சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால் “நம்மைக் காக்கும் உணர்வுகள் அவர்களுக்குள் வளர்கின்றது…!” பின் நாம் இந்த எண்ணங்கள் பகைமை இல்லாத நிலைகள் வளர்கின்றது.

இது போன்ற நிலைகளை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.
2.நமது நாட்டு மக்கள் அனைவரும் மத பேதம் இன்றி இன பேதம் இன்றி ஒருக்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் வாழ வேண்டும்.
3.ஆட்சி புரியும் அந்த ஆட்சி நிர்வாகிகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.தலையாயக் கடமையாக இது ஒவ்வொரு நாளும் நாம் எண்ண வேண்டும்.

மனித உடலுக்குள் எப்படி நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பது போன்றே நம் நாட்டுக்குள்ளும் இருக்கும் அனைவரும் (நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி) ஒருக்கிணைந்தால் தான் இந்த நாடும் நலம் பெறும். மக்களும் ஒருக்கிணைந்து வாழ்வோம்.

ஆகவே தீமையை விளைவிக்கும் சக்திகளிலிருந்தும் மக்களைக் கலக்கமுறச் செய்யும் தவறான செயல் கொண்ட இந்த உணர்வுகளிலிருந்தும் அனைவரையும் காத்திடும் சக்தியாக
1.நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்களை அறியாது தவறு செய்யும் நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
3.மக்கள் பேரானந்த பெருநிலைகள் பெற வேண்டும்
4.மனிதனாகப் பிறந்த முழுமையின் உணர்வுகள் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதம் இல்லாத மத பேதம் இல்லாத இன பேதமில்லாத மொழி பேதமில்லாத அரசியல் பேதமில்லாத உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்…” அத்தகைய உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதத்தால் போர்கள் நடக்கின்றது. கட்சி பேதத்தால் உண்மையினுடைய நிலைகள் அறியாது சீராக செயல்படும் தன்மைகள் காலத்தால் உலக நிலைகளில் இருந்து இன்று மறைந்து கொண்டு வருகிறது.

இதைப் போன்ற நிலைகளை நாம் வாழும் நாட்டிலே விளையாது
1.கட்சி என்ற பேரை அகற்றி விட்டு
2.இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சியின் நிலைகள் சீராக வர வேண்டும் என்று ஒருக்கிணைந்தால் “எல்லோரும் நல்லவரே…!”
4.எல்லோரும் நல்ல ஆட்சியை நிச்சயம் பெற முடியும்…!

ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் மேல் நாம் குறைகளை எண்ணி வளர்த்துக் கொண்டேயிருந்தால்
1.அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறைகளைக் கூறி கொண்டே தான் இருப்போமே தவிர
2.குறையை நிவர்த்திக்கும் எண்ணமே நமக்குள் வராது.
3.நாம் குறையைச் சொல்லி விட்டு நாமும் குறையைச் செய்து கொண்டு இருப்போம்.

ஆகையால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சொன்ன நிலைகளில் நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு
1.மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து
2.நாடு சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருக்கிணைவோம்.
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நல்ல ஆட்சியாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

CHITRAI Fruit

“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

1.அதாவது கனி என்றால் அதற்குள் ஒரு வித்தும்
2.அந்த வித்தைக் கனி மறைத்திருக்கிறது என்ற நிலையும்
3,வித்தானாலும் அந்த வித்தையும் ஒரு திரை மறைத்திருக்கின்றது என்ற நிலையும் உணர்த்துவதற்குத்தான்
4.அதைச் சித்திரை என்றார்கள் ஞானிகள்.
5.அந்தத் திரையை நீக்கினால் வித்தின் தன்மை கனியாகி மீண்டும் ஒரு வித்தாகின்றது.

இந்த வித்தில் மூடியிருக்கும் இந்த நிலையை (சித்திரையை – சிறு திரையை) நீக்கினால் அதன் சத்தின் தன்மையை நாம் அறியலாம்.

மண்ணிலே ஊன்றும் பொழுது வித்தினுடைய மேல் மூடி அதற்குத் தக்க நிலையில் அது வெளிப்படும் போது தன் உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அச்செடியாக விளைந்து அதன் இனத்தின் வித்தாக விளைகின்றது.

எத்தனையோ வகையான குணங்கள் கொண்டிருந்தாலும் இவ்வாறே ஒவ்வொரு வித்திற்கும் திரை உண்டு.

இதனை நாம் அறிந்து கொள்வதற்காக சித்திரை மாதத்தினுடைய நிலைகளைப் புது வருடம் பிறக்கிறது (புதிய வித்தாகிறது) என்று காட்டினார்கள்.

இந்தப் புது வருடத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைக் குறிக்கும் நாளாக
1.இந்த வாழ்க்கையில் நம்மை மூடி மறைத்திருக்கும் தீமையான திரைகளை நீக்கி
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து
3,பேரருள் பெற்று பேரொளியை நமக்குள் பெறச் செய்வதற்குத் தான்
4.”சித்திரைக் கனி…!” என்று அழைக்கின்றனர் நமது ஞானிகள்.

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய “ஈஸ்வர தரிசனம்…”

Om Eswara (2)

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய “ஈஸ்வர தரிசனம்…”

 

கோவிலை அமைத்து அதில் ஈசனுக்குச் சிலைகள் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து தேங்காய் பழம் வைத்து நாம் கும்பிட்டுவிட்டால் அதுதான் ஈஸ்வர தரிசனம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஈஸ்வர தரிசனத்திற்கு இன்று நாம் எப்படிச் செல்கிறோம்? தேங்காய் பழம் கொண்டு செல்கிறோம். சுவையான நைவேத்தியங்களைச் செய்கிறோம். பின், ஆலயத்திற்குள் வணங்கும்போது எப்படி வணங்குகின்றோம்?

அங்கே தெய்வச் சிலைக்குப் படைக்கப்பட்டிருக்கும் கனிகளை மலர்களை சுவைமிக்க பதார்த்தங்களை நாம் எண்ணுவதில்லை. மாறாக நாம் எதை எண்ணுகின்றோம்?

நம் வாழ்க்கையில் நமக்கு ஒருவர் இடைஞ்சல் செய்திருந்தால் அல்லது ஒருவர் நம்மைக் கோபித்திருந்தால் அவர்களைப் பற்றிய நினைவுகளையே அங்கே ஆலயத்தில் எண்ணிக் கொண்டிருப்போம்.

கோபித்தவர்களையும், இடைஞ்சல் செய்தவர்களையும் ஆலயத்திற்குள் நாம் எண்ணினால் நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

ஒரு குழம்பு வைக்கும்போது பலசுவையுள்ள பொருகளைப் போட்டு அதில் சிறிது காரத்தை அதிகமாகப் போட்டால் குழம்பில் காரத்தின் சுவையே அதிகமாக இருக்கும்.

இதைப் போன்றுதான் நாம் தெய்வச் சிலைக்கு முன் சுவையான பலகாரங்களையும், நறுமணமான மலர்களையும் வைத்திருந்தாலும் நமக்கு இடையூறு செய்தவர்களை நாம் எண்ணும்போது நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

தெய்வ வடிவங்களை உருவாக்கி ஈஸ்வர சக்தி எது? என்ற நிலைகளில் கதைகளை எழுதி ஈஸ்வரன் இந்த நிலைகளில் அனைவரையும் காப்பாற்றுவான் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஆண்டவனுக்குத் தேங்காய் பழம், நைவேத்தியம் படைத்து ஆண்டவனிடம் உன்னுடைய குறைகளைச் சொல்லிவிட்டால் ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவான் என்று மற்றவர்கள் சாங்கிய சாஸ்திரங்களை எழுதிவிட்டார்கள்.

1.நமது உயிரை ஈஸ்வரன் என்றும்
2.நாம் எண்ணிய எண்ணங்கள் எவையோ அவை அனைத்தையும்
3.உயிர் ஈசனாக இருந்து ஜீவ அணுக்களை உருவாக்கி
4.நமது உடலாக மாற்றுகின்றது என்பதை ஞானிகள் காண்பித்தனர்.
5.உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வின் சத்தை உடலை சிவம் என்றும் காண்பித்தனர் ஞானிகள்.

சிவனுக்கு வாகனமாக மாட்டை வைத்து அதற்கு நந்தீஸ்வரன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.

சிவனின் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன். நாம் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் போனவுடன் நந்தீஸ்வரா.., அதாவது சுவாசித்த உணர்வின் குணம் நம் உடலுக்குள் உணர்வின் சத்தாக விளைகின்றது.

இப்பொழுது இந்த மனித உடலில் நாம் எந்த குணத்தை அதிகமாக எண்ணி நமக்குள் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வின் தன்மைக்கொப்ப நந்தீஸ்வரனின் கணக்கின் பிரகாரம் நமது உயிர் நமது அடுத்த உடலை உருவாக்குகிறது என்று ஈஸ்வர தரிசனத்தில் ஞானிகள் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையிலுள்ள சூட்சம இயக்கங்களை மனிதருக்கு உணர்த்தும் விதமாக உடலைச் சிவமாக, உயிரை ஈசனாகக் காண்பித்தார்கள் ஞானிகள்.

ஆகவே,நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் “ஈஸ்வர தரிசனம்” என்றனர் ஞானிகள்.

இதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஈஸ்வர தரிசனம் என்பதன் மூலம் நமது உயிரை எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தபின் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி நாம் வணங்க வேண்டும்.

1.இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டபின்
2.எங்கள் பார்வை பிறர் தீமைகளை நீக்குவதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் சொல் பிறர் கஷ்டங்களைப் போக்குவதாக இருக்க வேண்டும்,
4.எங்கள் பார்வை பிறரை நல்லவர்களாக்கும் நிலை பெறவேண்டும்,
5.எங்களைப் பார்ப்போரெல்லாம் உயர்ந்த எண்ணங்கள் பெறவேண்டும் என்று இவ்வாறுதான் நாம் அனைவரும் எண்ணவேண்டும்.

நாம் காலையில் தூக்கதிலிருந்து எழுந்து ஈஸ்வர தரிசனம் எனும் நிலையில் நமது உயிரை எண்ண வேண்டும். நம் கண்கள் உயிரின் இயக்கத்தின் தொடர் கொண்டு இது நல்லது இது கெட்டது என்று காண்பிக்கின்றது.

நமக்கு ஒருவர் நன்மைகள் செய்திருந்தால் அவரை நாம் அதிகமாக எண்ணுவதில்லை. ஒருவர் நமக்குத் தீங்கு செய்திருந்தால், அவன் நமக்குத் தீமை செய்தானே பாவி…, என்று அடிக்கடி அவரைப் பற்றி எண்ணுவோம்.

இப்படிப்பட்ட உணர்வுகளை காலையில் படுக்கையை விட்டு எழும்போது எண்ணினால் வேதனை. காலையில் படுக்கையில் உடல் சோர்வடைந்திருக்கும் வேளையில் வேதனை என்ற உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு நம் உயிரில் மோதும்போது நம் உடலில் வேதனை உருவாகிறது.

அப்பொழுது நம்முடை ஈஸ்வர தரிசனம் எதுவாகின்றது?

நாம் வேதனை உணர்வு ஒன்றைக் கண் கொண்டு பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டபின் நம்மிடத்தில் வேதனையை உருவாக்கும் நினைவாற்றல் வருகின்றது.

நமக்கு ஒருவர் தீங்கு செய்திருந்து அதன் உணர்வுகள் நமக்குள் பதிவாகியிருந்தால் நமக்குத் தீங்கு செய்தவர் பற்றிய நினைவே நம்மிடத்தில் வருகின்றது.

இதனின் தொடர் கொண்டு காலையில் நாம் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இனம் புரியாது “பாவிகள்.., எனக்கு ஏன் இப்படித் தீங்கு செய்கிறார்கள்?” என்ற வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும்.

வேதனைகளை நாம் எண்ணும்போது நம்முள் உள்ல வேதனையை உருவாக்கும் அணுக்களுக்கு உண்வினை அதிகமாக ஊட்டி நமக்குள் வேதனைகளை உருவாக்கும் நோய்களை நஞ்சின் தன்மைகளை வளரச் செய்கின்றது.

இதனை மாற்றுவதற்குத்தான் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம்
1.ஈஸ்வர தரிசனம் என்று காட்டி
2.காலையில் எழுந்திருக்கும்போதெ நினைவின் ஆற்றலை
3.நமது உயிரின்பால் கொண்டு செல்ல வேண்டும் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அடுத்து இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்து மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உயிரில் ஒன்றிய உணர்வினை ஒளியின் உணர்வாக மாற்றி இன்று விண்ணில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ள துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று பல முறை திரும்பத் திரும்ப எண்ணி தியானிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லாம் வாழ்வில் இனிமை பெறவேண்டும், எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அவர்கள் மன நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இது நம் ஈஸ்வர தரிசனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணும்பொழுது
1.பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறக்கின்றோம்,
2.பிறருடைய துன்பங்களை மறக்கின்றோம்,
3.மற்ற குடும்பத்தினர் நமக்குச் செய்த இடைஞ்சல்களை மறக்கின்றோம்.

ஆகவே, இது போன்ற உயர்ந்த உணர்வின் தன்மைகளை நமது உயிரில் இணைக்கும்போது நமது உடலில் மகிழ்ந்திடும் உணர்வுகளுக்கு அமுது கிடைக்கின்றது.
1.மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெறுகின்றோம்.
2.ஏகாந்த வாழ்க்கை வாழ முடியும். உடலுக்குப்பின்
3.அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும்.