இடும்பச் சித்தரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Idumban

இடும்பச் சித்தரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கரங்களைச் சேர்த்து
2.சரீர கதியில் உயிர் சக்தி தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…?

எந்தத் தொடருக்கு இது ஊக்கம் தருகிறது…? இடும்பன் கூறிய குணத்தை எழுதுவாய். இடும்பன் என்றால் யார்…?

1.நற்குணங்களின் எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.

இடும்பன் என்றாலே ஏன் வெறுக்கின்றாய்…? இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள்
1.போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
2.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…!

இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டு இன்றைய வழித் தொடரில்
1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

இடும்பனால் தீவினை குணங்களைப் பற்றிக் காட்டப்பட்ட அதைப் போகர் அறிந்திட்ட வழியிலெல்லாம் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணம்) நீக்கிட்ட முருகா என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.

போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.

வசி…! வசிஷ்டாத்வைதம் – இராஜரிஷி வசிஷ்டர்

Raja rishi vashista

வசி…! வசிஷ்டாத்வைதம் – இராஜரிஷி வசிஷ்டர்

 

மனிதனின் வாழ்க்கையில்
1.நம் உயிரை அரசனாகவும்
2.நம் உடலை ஓர் அரச சபையாகவும்
3.அதற்குள் நீதிகள் வழங்குவதை நற்குணங்களாகவும்
4.சந்தர்ப்பத்தால் நாம் கண்டுணர்ந்த தீமைகள் அது நமக்குள் கலந்திடும் நிலையை மக்களாகவும்
5.வசிஷ்டாத்துவத்தில் வியாசகர் காட்டியுள்ளார்.

உடலுக்குள் வந்த அந்த மக்களைத் (தீமைகளை) திருத்திடவும் மக்களைத் தன்னுடன் இணைத்திடவும் அரச நீதி என்ற நிலையில் உயிரின் தன்மை இயங்கினாலும் இராஐ சபையில் இருக்கும் அதாவது நமக்குள் இருக்கும் நற்குணங்கள் அதனதன் செயல்களை எடுத்து உணர்த்துகின்றது.

இவை அனைத்தும் அடங்கி ஒடுங்கி நிற்கும் இராஐசபைக்கு இராஐ ரிஷியாக “வசிஷ்டர்…!”
1.அதாவது எதையுமே கவர்ந்திடும் நிலையும்
2.அது தன்னுடன் இணைத்திடும் ஆற்றல்மிக்க சக்தி என்பதையும் காட்ட
3.வசிஷ்டர் என்ற நிலையில் காரணப் பெயரை வைத்தார்கள்.

ஆனாலும் நமக்குள் இயங்கும் சக்திகள் அனைத்துமே அருந்ததி.
1.நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றமோ
2.அந்த உணர்வின் சக்திகளை நமக்குள் அருந்தி (சுவாசித்துக் கவர்ந்து)
3.அது பதியாக நமக்குள் இயக்கும் நிலைதான் அருந்ததி.

அவ்வாறு இயங்குவதைக் காட்டி அது எதுவாக இருப்பினும் இந்த இராஐரிஷி “வசிஷ்டர்” தனக்குள் இணைந்த செயலாக தன்னை மீறாத நிலைகள் கொண்டு தனக்குள் ஒடுக்கி உயிருடன் (அரசன்) இழுத்து நமக்குள் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் நல்ல குணங்களுக்கும் நீதி வழங்கும் நிலைகள் வருகின்றது.

நல்லதைப் பல வகையில் பேசினாலும் அல்லது தீமைகளைப் பேசினாலும் அதனதன் குணத்தின் தன்மையே ஒவ்வொருவருக்குள்ளும் வரும்.

உதாரணமாக மல்லிகைப் பூ நறுமணத்தைக் கொடுக்கின்றது, தாழம்பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது. ரோஜாப் பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது.

ஒவ்வொரு பூவின் நறுமணமும் மகிழ்ச்சியை நமக்குக் கொடுத்தாலும் தாழம்பூ தன்னுடைய நறுமணத்தை அதிகமாக வீசினாலும் நல்ல நறுமணத்தைக் கொண்ட ரோஜாப்பூவின் மணத்தைத் தன் அருகிலே விடுவதில்லை. தன் மணத்தின் தன்மையையே அது ஓங்கி வளர்க்கும் தன்மைக்கு வருகின்றது.

இதைப் போலத் தான் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும் அந்த ஒவ்வொரு குணங்களும் அது (மணத்திற்குள்ளே) ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலையே உண்டு. (தாவர இனத்தின் மணங்களை உயிரினங்கள் சுவாசித்தால் அது எண்ணங்களாக வரும்)

மல்லிகைப் பூ கசப்பும் ரோஜா பூ துவர்ப்பும் கொண்டது. இவை இரண்டுமே நறுமணங்கள் கொண்டதாக இருப்பினும் இதற்குள் கலந்த உணர்வின் செயல்கள் அது மாறுபட்டதாகவே இருக்கும்.

அதற்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் நஞ்சான நிலைகள் கொண்டு எதனுடன் கலக்கின்றதோ அதனின் வலுவாக அது இணைத்துக் கொள்ளும்.

இதைப் போலத் தான் எத்தகைய நறுமணங்கள் கொண்டு இருப்பினும் தனக்குள் “வசி…!” அதாவது தன்னுடன் இணைந்து செயல்படும் சக்தியாக இராஜரிஷி என்ற நிலைகளில் வசிஷ்டாத்துவத்தை அன்று வியாசகர் மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் இயக்கங்களைக் காட்டுகின்றார்.

இராஐ நீதியாக அரசன் அவன் மற்றவரின் செயலைக் கேட்டறிந்து நீதி வழங்குவான் என்ற நிலைகள் போல நாம் உயிரின் நிலைகளைக் காட்டுகிறார் வியாசகர்.

ஒரு சேனாதிபதி இருக்கிறான் என்றால் “அடுத்த நாட்டுக்காரன் நம் நாட்டின் மீது படையெடுக்கின்றான்…!” என்று அவன் கூறுவான் என்றால் அவன் கேள்வியுற்றதைத்தான் வந்து சொல்லுவான்.

அரச சபையில் அதைச் சொல்லும் போது அதைக் கேட்ட அரசனோ… “தன் நாட்டைக் காக்க வேண்டும்…!” என்ற நிலையில் சேனாதிபதி சொன்னதைக் கேட்டு ஆவேசமாக அதனின் உணர்வை இயக்கிக் காட்டுவான்.

ஒருவன் நம்மைப் பழித்து பேசுகிறான் என்று கேள்விப்பட்டதும் நாம் என்ன செய்கிறோம்…? உடலின் தன்மை கொண்டு நம் குணங்களைக் காத்திட “இப்படிச் சொல்கிறானே…!” என்ற ஆவேச நிலைகள் படுகிறோம்.

ஏனென்றால் நாம் எண்ணிய நிலைகளை வைத்து நம் உயிரே அவ்வாறு இயக்குகின்றது என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கு வசிஷ்டாத்துவம் என்ற நிலைகளை வியாசகர் பிரித்துக் காட்டுகிறார்.

உடலின் உறுப்புக்குள்ளும் உயிருக்குள்ளும் இயக்கும் நிலைகளை மகரிஷிகள் கண்டுணர்ந்து நஞ்சை எல்லாம் ஒடுக்கித் தான் ஒளியின் சரீரம் பெற்றதை அதே வியாசகன் கண்டுணர்ந்த இந்த உணர்வின் தத்துவத்தை நமக்குள்ளும் அது ஆரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

வியாசகர் சொன்ன வசிஷ்டாத்துவத்தைப் போன்று நமக்குள் அது எத்தனை நிலைகள் வந்தாலும் அதனைக் காத்திட வேண்டும் என்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.இதை உணர்த்திய மகரிஷிகள் அருள் ஒளி கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்றும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து நிலைகளையும் அந்த மகரிஷிகள் அடக்கியது போல அடக்கி
4.ஒளியாக ஆக்கி ஒளியின் சரீரமாகப் பெறவேண்டும்.

ஞான விழிப்பார்வை (பிடர்தல்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Intellectual thinking - sages

ஞான விழிப்பார்வை (பிடர்தல்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’

“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.

சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.

சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதை போல் மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.

குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல் நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.

அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.

இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள காந்த அமில குண வீரிய தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச் சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.

இதைப் படித்துப் பதிவாக்கினால் “குரு பலம்” கிடைக்கும்

Gnanaguru - papanasam

இதைப் படித்துப் பதிவாக்கினால் “குரு பலம்” கிடைக்கும் 

 

பழனியம்பதியில் குருநாதர் எமக்கு உறுதுணையாக இருந்த காலத்தில் யாம் (ஞானகுரு) மில்லில் வேலை செய்து கொண்டிருந்தோம்.

ஒரு சமயம் நெய்காரப்பட்டியில் வசிக்கும் எமது நண்பர் இராமசாமி நாயுடு அவர்களை ஒரு மாந்திரீகவாதி சந்தித்து அவருடைய இடத்திலுள்ள ஒரு பெரிய மரத்தைத் தன்னுடைய மந்திர சக்தியால் வீழ்த்திவிட்டேன். இந்த மரத்தில் வசித்த பூதத்தைப் போக்கிவிட்டேன். இனிமேல் உங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று சில ஜோதிடங்களைக் கூறி பணம் கொடுங்கள் என்று மந்திரவாதி இராமசாமியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் குருநாதர் எம்மை இராமசாமியைச் சந்தித்து வரும்படி அனுப்பி வைத்தார். அது சமயம குருநாதர் பாதரசத்தால் உருவாக்கப்பட்ட இரசமணியை எம்மிடம் கொடுத்து அதை வைத்திருக்கும்படிக் கூறினார்.

இரசமணியை என் கையில் கொடுத்து உன் நண்பனைப் போய்ப் பார் என்று கூறினார். குருநாதர் கூறிய வண்ணம் யாம் சென்று எமது நண்பரைப் பார்க்கும்போது அவர் கையிலும் ஒரு இரசமணி இருந்தது.

குருநாதர் எம்மிடம் கொடுத்த இரசமணி உருண்டையாக இருந்தது. நண்பர் தன் கையில் வைத்திருந்த இரசமணி சதுரமாக இருந்தது.

அந்த மந்திரவாதி இராமசாமி கையில் வைத்திருந்த இரசமணியைக் குறித்து சிலவற்றை அவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக யாம் சென்றோம்.

அது சமயம் எமது சட்டைப் பையில் கணேஷ் பீடிக்கட்டு வைத்திருந்தோம். முன்பு யாம் தொப்பி சிகரெட் குடிப்பது வழக்கம். குருநாதர்தான் கணேஷ் பீடி பற்றிச் சில விஷயங்களைக் கூறி எம்மைக் கணேஷ் பீடி குடிக்கும்படி செய்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் கணங்களுக்கெல்லாம் ஈசன் கணேசன் என்று பல உண்மைகளை எமக்கு குருநாதர் கூறினார். கணேஷ் பீடியில் விஷய்ம் இருக்கிறது என்று கூறினார் குருநாதர்.

ஆகையினால் எமது சட்டைப் பையில் கணேஷ் பீடிகளை வைத்திருந்தோம். அதே சமயத்தில் எம்மிடத்தில் மறைவாக தொப்பி சிக்ரெட் வைத்திருந்தோம்.

அங்கே இருந்த மந்திரவாதி என்னைப் பார்த்து தொப்பி சிகரெட் கொடுப்பா என்றார். கணேஷ் பீடி வெளியில் தெரியும்படி இருந்தது ஆனால். அதைக் கேட்பதை விட்டு தொப்பி சிக்ரெட் கொடுப்பா என்று எம்மைப் பார்த்துக் கேட்டார் அந்த மந்திரவாதி.

ஆனால், யாம் எம்மிடம் சிகரெட் எதுவும் இல்லை என்றோம்.

என்னிடம் எதுவும் மறைக்க முடியாது என்றார் மந்திரவாதி. நீ கொண்டு வந்த இரசமணியையும் என்னிடம் கொடு என்றார். நீ என்னிடம் மறைப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னிடம் நீ எதுவும் மறைக்க முடியாது என்று என்னைப் பார்த்துக் கூறினார் மந்திரவாதி.

ஆகவே, குருநாதர் எம்மிடம் கொடுத்திருந்த இரசமணியை எடுத்து அவர் கையில் கொடுத்தோம்.

யாம் கொடுத்த இரசமணியை வாங்கிக் கொண்ட மந்திரவாதி தன்னிடமிருந்த பாதரசத்தை யாம் கொடுத்த இரசமணியில் செலுத்தினார். இதனால் யாம் கொடுத்த இரசமணி கருத்துப் போய்விட்டது.

நீ கொடுத்த இரசமணியில் சக்தி கிடையாது என்று பார்த்துக் கொண்டாயல்லவா என்று எம்மைப் பார்த்துக் கேட்டார் மந்திரவாதி.

சக்தி உள்ளதா இல்லையா..,? என்று எனக்குத் தெரியாது. என் குருநாதர்தான் இதைக் கொடுத்தார் என்று கூறினேன்.

நீ கொண்டு வந்த இரசமணியில் சக்தி இல்லை என்பதைக் காட்டவே இது போன்று செய்து காண்பித்தேன் என்றார். தன் கையில் இருந்த சதுரமான இரசமணியை எம்மிடம் காண்பித்து, “இதில் ஒரு பக்கம் பார்த்தால் நாம் எண்ணுகின்ற மனித்ருடைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

மந்திரவாதி ஒரு குச்சியை எடுத்தார். அதே சமயத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்து ஒரு காகத்தைக் காட்டினார். தன் கையில் இருந்த குச்சியை ஒடித்தார் மந்திரவாதி.

அது சமயம் மந்திரவாதி சுட்டிக் காண்பித்த காகத்தின் இறக்கை ஒடிந்தது. காகம் கீழே விழுந்த்து. என்னை எதிர்ப்பவனின் நிலையும் இது போன்று ஆகும் என்று என்னைப் பயமுறுத்தினார் மந்திரவாதி.

எனக்கு ஒன்றும் தெரியாது. என்னுடைய குருநாதர் இந்த இடத்திற்குப் போ என்று கூறினார், அதனால் வந்தேன். “நீங்கள் போ..,” என்று கூறினால் நான் இங்கிருந்து போய்விடுகின்றேன் என்று கூறினேன்.

எனக்குப் பயமாகிவிட்டது. ஏனென்றால் மாந்திரீகவாதி குச்சியை ஒடித்தால் காகத்தின் இறக்கையே ஒடிகிறது. எம்மையும் மந்திரவாதி ஏதாவது செய்துவிடுவாரோ என்று யாம் பயந்தோம்.

மந்திரவாதி இராமசாமியிடம் காட்டி “இந்த ஆளைப் போகச் சொல்” என்றார்.

இராமசாமி என்னைப் பார்த்து என் ரைஸ்மில்லில் இரு. சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

என்ன இது பெரிய வம்பாகிவிட்டது? குருநாதர் போகச் சொன்னார் என்று நான் இங்கே வந்தேன். மந்திரவாதி காகத்தின் இறக்கையை ஒடித்தது போன்று என்னுடய கை காலை உடைத்துவிட்டால் என் பிழைப்பு என்னாவது என்ற பயம் வந்துவிட்டது. உண்மையில் இது நடந்த நிகழ்ச்சி.

இராமசாமி ரைஸ்மில்லுக்குப் போகச் சொன்னதும் ஆளை விட்டால் போதும் நான் சென்றுவிடுகிறேன் என்று செல்ல ஆரம்பித்தேன். அவர்களிருந்த இடத்தை விட்டு யாம் நகர்ந்து செல்லும்போது குருநாதர் ஒரு சப்தத்தைக் கொடுத்தார்.

“கூ.., கூ..,” என்று ஒரு பட்சியின் சப்தத்தைப் போன்று குரல் கொடுத்தார். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. நான் வரும் அந்த வழியில் ஒரு மாமரம் அதனுடைய ஒரு நல்ல வலுவான கிளை “சடார்..,” என்று ஒடிந்து விழுந்தது.

அந்தக் கிளையில் பல காய்களும் இருந்தது. காய்கள் “பொல பொல” என்று கீழே விழுந்தது. “கூ.., கூ..,” என்ற சப்தம் குருவிடம் இருந்து வந்ததால் எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

பின், ரைஸ்மில்லுக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். இராமசாமி வருகைக்காகக் காத்திருந்தோம் நேரம் அதிகமாகிவிட்டது.

நான்கு மணி நேரம் கழித்து இராமசாமியும் மந்திரவாதியும் வந்தார்கள். அவர்கள் வரும்போது நான் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் வரும் நேரத்தில் யாம் சேரில் அமர்ந்திருந்ததால் மந்திரவாதி யாம் அமர்ந்திருந்த சேரை உடையும்படிச் செய்தார்.

இதனால் நான் கீழே விழுந்தேன். அதைப் பார்த்த மந்திரவாதி எம்மைப் பார்த்து “கே..க்..கே..க்..கே..,” என்று சிரித்தார். எம்மை “இங்கிருந்து போ..,” என்று சொல்லியது போன்று மந்திரவாதியின் இந்த்ச் செயல்.

மந்திரவாதியும் இராமசாமியும் ஒவ்வொரு சேரில் உட்கார்ந்து கொண்டார்கள். யாம் நின்று கொண்டிருந்தோம். அந்தச் சமயம் மந்திரவாதி அமர்ந்திருந்த சேர் நொறுங்கியது.

என்னப்பா.., என்னிடமே வித்தையக் காண்பிக்கின்றாயா..,?” என்று எம்மைப் பார்த்து மந்திரவாதி கேட்டார்.

அதற்கு யாம் எனக்கு ஒன்றும் தெரியாது குருநாதருக்கும் உங்களுக்கும் இடையில் என்ன நிலை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்றோம்.

அது சமயம் குருநாதர், “உடனே பஸ் ஏறி வா..,” என்று எமக்குக் கட்டளையிட்டார். குருநாதரின் உணர்வுகள் என் காதில் ஒலித்தன.

மந்திரவாதி அமர்ந்த சேர் நொறுங்கியவுடன் நாம் இரண்டு பேரும் நண்பர்களாகிவிடுவோம் என்று மந்திரவாதி எம்மைப் பார்த்துக் கூறினார். அதன் பின் அவருடைய கதைகளை எம்மிடம் கூறினார்.

உன்னுடைய குருநாதர் சக்தி வாய்ந்தவர்தான். ஆனால், நீ மிகவும் அவரிடம் அவஸ்தைப்படுவாய், அவரிடமிருந்து நீ விலகிவிடு. உன்னுடைய குடும்பத்தை நீ காப்பாற்றுவதற்குண்டான உபாயத்தை நான் சொல்கிறேன். அத்ன் வ்ழி நடந்து கொள் என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.

இப்படி மந்திரவாதி எம்மிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் குருநாதர் என்னைக் கன்னத்தில் அடித்தது போல இருந்தது. “எழுந்து நீ வாடா..,” என்று கூறினார்.

அது சமயம் குருநாதரிடமுள்ள பழக்கத்திலிருந்து யாம் விடுபடுவதற்கு கூடுமான வரையிலும் பல அறிவுரைகளைக் கூறினார். உன் முகவரியைக் கொடு, உன்னை வீட்டில் வந்து பார்க்கிறேன் என்று மாந்திரீகவாதி கூறினார்.

“நீ பஸ் ஏறுடா..,” என்றார் குருநாதர். அந்த நேரத்தில் எம்மிடம் காசும் இல்லை. ரைஸ் மில்லுக்குச் சென்ற இடத்தில் எமது பணத்தை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோம்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டோம். சண்முக நதி (பழனி) பாலம் வரையிலும் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்கவில்லை.

ஆனால், சண்முக பாலத்தின் அருகே குருநாதர் நின்று கொண்டு யாம் வந்த பஸ்ஸைக் கைகாட்டி நிறுத்தினார். இந்த பஸ்ஸில் ஒரு திருடன் இருக்கின்றான், அவனை இறக்குங்கள் என்று கண்டக்டரிடம் கூறினார் குருநாதர்.

கண்டக்டர் “திருடன் யார்..,?” என்று குருநாதரிடம் கேட்டார். குருநாதர் ஒரு பைத்தியக்காரரைப் போன்று தோற்றமளித்ததால் பஸ் கண்டக்டர் குருநாதரின் வார்த்தையை நம்பாமல், பஸ்ஸில் திருடன் யாரும் இல்லை என்றார்.

அதே நேரத்தில் பஸ் டிரைவரும் ப்ஸ்ஸை நகர்த்த முயற்சி செய்தார். ஆனால், பஸ் நகரவில்லை.

திருடனை இறக்கி விடவில்லை என்றால் பஸ் போகாது என்று கூறினார். இப்படி இது அரை மணி நேரம் இந்த வாக்குவாதம் நடக்கின்றது.

பிறகு குருநாதர் பஸ்ஸிற்குள் ஏறி, “இவன் தன் திருடன், இவனை இறக்குங்கள்.., “ என்று எம்மைச் சுட்டிக் காண்பித்துக் கூறினார். இது நடந்த நிகழ்ச்சி.

பழனியில் இருக்ககூடியவர்கள் குருநாதரைப் பற்றிய உணமைகளையோ அவரிடம் இருக்கக்கூடிய சக்திகளையோ அறிய முடியாது.
1.அந்த அளவிற்கு மற்றவர்களிடம்
2.ஒரு பைத்தியம் போன்று நடந்து கொண்டார்.
3.தன்னிடம் உள்ள சக்திகளை ஒவ்வொன்றாக எம்மிடம் வெளிப்படுத்திக் காண்பித்தார் குருநாதர்.

“எனக்கு இந்த வித்தைகளே வேண்டாம்.., நீங்கள் செய்வதே போதும்..,” என்று கூறினோம். ஏனென்றால் குருநாதரின் நிலையைக் கண்டு எமக்குள் பயம்.

பஸ்ஸை விட்டு எம்மை இறங்கச் செய்து பழனி சண்முக நதி ஆற்றுப் பக்கம் எம்மை அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே அமர்ந்து தரையில் குருநாதர் தனது காலால் ஒரு சக்கரத்தை “கிறு.., கிறு..,” என்று வரைந்தார்.

குருநாதர் தான் வரைந்த சக்கரத்திற்குள் ஒரு கத்தியை எடுத்துக் குத்தினார். “மேலே பாருடா..,” என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.
1.சக்கரத்தினுள் குத்திய கத்தி மேலே சூரியனை நோக்கிப் பறந்து சென்றது.
2.அந்தக் கத்தி சூரியனுக்கே சென்றது.

பிறகு குருநாதர் எம்மிடம் “நீ சந்தித்த மாந்திரீகவாதியின் நிலை இப்பொழுது எப்படி உள்ளது தெரியுமா..?”. தன் சக்தியை அவன் இழந்த நிலையில் உள்ளான் என்று கூறினார்.

இதுபோன்றவர்கள் சில பூதகணங்களைக் கைவல்யம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை எனக்கு அங்கே உணர்த்தினார் குருநாதர்.

தெய்வீக வழிகளில் தெய்வ வழிபாடுகளைக் கொண்டுள்ளவர்களை இந்த மாந்திரீகவாதிகள் ஏமாற்றுகிறார்கள்.

தெய்வங்களின் பெயரைச் சொல்லி மற்றவர்களுக்கு ஆசைகளை ஊட்டி அவரை உயர்ந்த சீமானாகும் நிலைகளைச் செய்யும்போது அதன் வழிகளில் மந்திரவாதி தன்னையும் சீமானாக்கி அவருடைய மறைவில் மாந்திரீகவாதிகள் தான் வாழ்வதற்குண்டான நிலைகளைச் செய்து கொள்கின்றான்.

மாந்திரீகவாதி கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுடைய மனித உடல் வாழ்க்கைக் காலத்தோடு சரி.

இந்த மாந்திரீகவாதியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த மாந்திரீகவாதி தான் உடலுடன் வாழும் காலத்தில் ஜெபித்த மந்திரத்தை இன்னொருவன் ஜெபித்தான் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற மாந்திரீகவாதி தன்னுடைய உடலோடு வாழும் காலத்தில் செய்த அதே வேலையை ஜெபித்தவனின் உடலுக்குள் இருந்து செய்யும்.

ஜெபித்தவனையும் அதே தவறான நிலைக்கு அழைத்துச் சென்று வீழ்த்தும்.

ஜெபித்தவனின் உடலில் மாந்திரீகவாதியின் உயிரான்மா வாழும் காலத்தில் பல தவறின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக்கொண்டதற்கொப்ப, ஜெபித்தவன் இறந்தபின், ஜெபித்தவனின் உடலை விட்டு வெளியே வரும் மாந்திரீகவாதியின் உயிரான்மா மீண்டும் மனிதரல்லாத உருவைப் பெறும்.

ஆக மனிதர்கள் மாந்திரீகம் என்ற நிலையில் தங்களின் உடலின் இச்சைக்குத்தான் இத்தனை வேலைகளும் செய்கின்றனர்.

மனிதர் தம் உயிரை மறந்து உடலின் இச்சைக் கொண்டு வாழ்ந்து வரும் இவ்வுலகில் மகரிஷிகள் காண்பித்த அருள்வழியில், தம் வாழ்க்கையில் அறியாது வரும்
1.தீமைகளைப் போக்கிடும் நிலையாக
2.இருளை வென்றிடும் நிலையாக,
3.உயிரில் ஒன்றும் உணர்வினை
4.ஒளியின் உணர்வாக ஆக்கிடும் நிலையாக
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து பழகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்தால், உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வேகா நிலை பெற்று என்றுமே மரணமில்லா பெருவாழ்வாக வாழ்ந்திடும் பாக்கியத்தைப் பெற முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் நாம் ஐக்கியமாக முடியும்,

இதுவே மனிதனின் கடைசி எல்லை என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

செல்வத்தின் அதிபதியான ஏழுமலையானப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

thirupathi elumalaiyaan

செல்வத்தின் அதிபதியான ஏழுமலையானப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கி விடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகா தேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழு மலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழு மலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்கு தெரிந்து விடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்சொங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள். கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

 

இருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள்

Solar bliss -

இருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள்

 

உதாரணமாக யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் எதிர்நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கின்றது. ஏன்…?

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது. இரண்டு நட்சத்திரத்தின் சக்திகள் எதிர் நிலையாகி அதனால் துடிக்கும் இயக்கமாக ஒரு உயிராக உண்டாகின்றது.

அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குள் அது கவர்ந்து கொண்ட உணர்வினை உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது தான் ஒவ்வொரு உயிரும்.

கார்த்திகை நட்சத்திரம் அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளில் ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அறிவாகப் பெற்றது.
1.ஆக 27 நட்சத்திரங்களிலும் 27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான வலுவின் தன்மை பெற்றது.
3.ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலைகள் கொண்டது

27 நட்சத்திரத்தின் உணர்வின் இயக்கங்கள் இவவாறாக இருக்கும் இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

இருப்பினும் ஒரு கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டவர்கள் அவர்கள் உடலிலே எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் நல்லவராகத் தோன்றினாலும் அதே சமயத்தில் எதிர் மறையான நட்சத்திரத்தின் சக்தி கொண்ட நாம் அவருடன் நட்புடன் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

27 நட்சத்திரத்திங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை மறைகள் உருவாகி அதனின் இயக்கத்தால் தான் தாவர இனங்களே விளைகின்றது.

அந்தத் தாவர இனத்தில் விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது ஒரு சிலது கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அவருக்கு அதனால் அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக் கொண்ட நிலைகளும் அவருக்குள் வரும். (ஆனால் மற்ற நட்சத்திரத்தின் சக்தி கொண்டவருக்கு எதிர் நிலைகளாக வரும்)

அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் சொல்லால் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாமலேயே தீமை விளைவிக்கும் நிலையாக இங்கே வரும்.

இருப்பினும்
1.நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது அதனின் உணர்வு எதிர்மறையாகி
2.ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகும்போது தான்
3.விண் உலகிலே ஆற்றல் மிக்க இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதே போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் போது எதிர் மறையான உணர்வுகள் வரும்போது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

ஒரு “எலக்ட்ரானிக்” என்ற நிலை வரப்படும் போது அதை இயக்க வேண்டும் என்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் அது இயக்கமாகும்.

அந்த எலெக்ட்ரானிக் போல் தான் நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும்…!

ஒரு உணர்வின் சக்தி நம் உடலுக்குள் அது ஒத்துக் கொண்ட உணர்வாக இருந்தாலும் எதிர் மறையான நிலைகள் இருக்கும் போதுதான் நமக்குள் உந்தி இயக்கும் நிலைகளாக நாம் செயல்படுகின்றோம்.

மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் POSITIVE NEGATIVE என்ற எதிர் மறையான நிலைகள் வரும்போதுதான் மின் அணுவின் நிலைகளும் இயங்கி மின் அணுவின் அழுத்தத்தைக் கொண்டு மோட்டார்களையும் மற்ற எல்லா மின் சாதனங்களையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் மனிதனின் உணர்வுக்குள்ளும் நாம் நண்பராகப் பழகினாலும் அந்த நட்சத்திரத்தின் இயக்கத்தால் எதிர்மறையான இயக்கங்கள் உண்டு,

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடப்படும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம், ஒரு குழந்தை ஒத்து வராத நிலைகள் வரும். இப்படி எதிர்மறையான நிலைகள் வரும்போது எதிர்ப்பின் நிலைகளே வருகின்றது.

நாம் பலருடன் பழகினாலும் எண்ணத்தால் கவர்ந்து நட்பு கொண்டு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுணர்ந்தாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாக்கும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்…!
1.நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் போது
2.இன்னொரு நண்பருடன் நாம் பேசினாலே தன்னை அறியாமலேயே ஒரு கலக்கம் ஏற்படும்
3.வியாபார ரீதியாக நீங்கள் சென்றாலும் அத்தகையவர்கள் உறவாடிவிட்டுச் சென்றாலே நமக்குள் இனம் புரியாத கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.
4.இவை எல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடிய நட்சத்திரங்களில் எதிர்மறையான இயக்கங்களே.

நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய நட்சத்திரம் எதிர்மறையாக இருந்தால் அதனால் எதிர் நிலையான உணர்வுகளாக இயக்குகின்றது.

இதை எப்படி மாற்றிச் சமப்படுத்துவது…? அதற்கு வழி வேண்டுமல்லவா…!

அன்று வாழ்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோளின் சக்தியையும் தனக்குள் அடக்கி அதை எல்லாம் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு ஏகாந்தமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அந்த உணர்வின் சத்தைக் கவரும் திறனாகத்தான் வசிஷ்டாத்வதைம்…! என்ற நிலைகளில் தியானத்தை அமைத்துக் கொடுக்கின்றோம். (வசிஷ்டர் – அருந்ததி)
1.எதனையுமே தனக்குள் கவரச் செய்து அருந்ததியாக
2.இணைந்தே வாழும் நிலைகளும்
3.இணைத்து அறிந்திடும் நிலைகளும்,
4.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்,
5.இந்த வலுவினில் இணைந்திடும் நிலைகள் நாம் என்று கொள்கின்றோமோ
6.இதனை இணைத்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அது பருக வேண்டும்.
7.அதைப் பருகினால் எதிர்நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தி நன்மை பயக்கும் சக்தியாக உருவாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பருகும் நிலையைக் உருவாக்குவதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

“சக்தியின் சொரூபம்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

AGASTYAR AND TEMPLE

“சக்தியின் சொரூபம்” (ஆக்கல் காத்தல் அழித்தல்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கி காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெற பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா…?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ தன் புகழ் ஓங்க தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா அந்த நிலையைப் பெற்றார்கள்…?

இல்லையப்பா…!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?

இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.

அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில், அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.

இத்தகையை ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

Guru Tapovanam

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்ததன் முக்கிய நோக்கம் என்ன…?

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கச் சொன்னார். அந்தக் கடவுளால் அவன் அமைத்துக் கொண்ட கோட்டை தான் உடல் என்று அந்த உடல்களை “ஈசன் வீற்றிருக்கும் கோவில்…” என்று மதிக்கச் சொன்னார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த உடலான ஆலயத்திற்குள் அரும் பெரும் சக்தியாக உலகைப் படைத்திடும் சக்தியாக அதாவது தெய்வங்களாக ஒவ்வொரு உணர்வுகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னார்.

அங்கே நீ வரம் பெறும் நிலையாக
1.ஒவ்வொரு மனிதனுக்குள் அறியாது விளைந்த தீயதுகளை மறந்து விட்டு
2.அந்த உடலை வளர்த்த உயர்ந்த உணர்வின் எண்ணங்களை நீ எண்ணி
3.அது உயர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ எண்ணுவேயென்றால்
4.அந்த உயர்ந்த நிலையின் சக்தியை நீ பெறுகின்றாய் என்று குருநாதர் தெளிவாக எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு கோயிலும் (உடல்கள்) பரிசுத்தமாக வேண்டும். அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் ஈசன் நல்ல உணர்வுகளை அங்கே படைக்கச் செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் தியானித்து வருகின்றேன்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும்
1.அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!”

அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று
1.நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும்
2.மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும்
3.அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு
3.அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சில சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டிலிருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும் இங்கே வந்து அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டால் அதன் பின் உங்கள் வீட்டிலிருந்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்து விடும்.

அந்தப் பழக்கம் வந்து விட்டால் “நம்மை நாமே காத்திடும் சக்தியாக…” அது வரும். அதனின் வளர்ச்சியில் எத்தகைய நஞ்சு கொண்ட உணர்வுகள் இங்கே பூமியிலே படர்ந்தாலும் அது நம்மைத் தாக்காத வண்ணம் நம்மைக் காத்து கொள்ளும் ஆற்றலை நிச்சயம் எல்லோரும் பெற முடியும்.

ஆகையால் சாமியார் காப்பாற்றுவார் ஜோதிடம் காப்பாற்றும் ஜாதகம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் என்ற நிலையை விடுத்து உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு மெய் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பேரொளியாக மாற்றச் செய்யவே இந்தத் தியான மண்டபம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி
2,மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து
4.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம். நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!

“ஜோதி நிலை…” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

blue flame soul

“ஜோதி நிலை…” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை…!”

ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.

அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.

“நம் தமிழ் நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும்…!” என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வரும் மெய் வழி

Golbal Tamil Nadu

“நம் தமிழ் நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும்…!” என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வரும் மெய் வழி

 

உலக மக்கள் அனைவரும் அகஸ்தியமாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று நாம் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தவமிருப்போம்.

1.எந்தத் தென்னாட்டிலிருந்து உலகம் முழுவதற்கும் மெய் ஞானத்தின் தத்துவங்கள் பரவியதோ
2.அதே தென்னாட்டிலிருந்து மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை எல்லாம் ஒன்று சேர்த்திடும்…
3.மனித இனத்தைக் காத்திடும் சக்தியாக வெளிப்பட வேண்டும் என்று
4.குருநாதரின் அருளாற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம் (ஞானகுரு).

உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உலகைக் காப்பீர்… உங்களையும் காப்பீர்… உங்கள் ஊரைக் காப்பீர்… உலக மக்களைக் காப்பீர்கள்..! என்று வேண்டுகின்றேன்.

நிறைந்த மனதுடன் வாழ்வோம். எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம். அந்த நிறைவின் நிலைகள் கண்டு மகிழ்வோம்.

அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் பேரானந்தப் பெரு நிலையை இந்த வாழ்க்கையிலே அடைவோம். பேரின்பப் பெரு மகிழ்ச்சியை இந்த உடலிலிருந்தே வளர்ப்போம்.

பிறவி இல்லா நிலைகள் என்ற பெரு வாழ்வு வாழ்வோம். என்றும் அழியாத நிலையான ஒளிச் சரீரம் பெறச் செய்யும் வாழ்க்கை வாழ்வோம்.

உலக மக்கள் அனைவரும் மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி அரசியல் பேதமின்றி வாழ்வோம். சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்வோம்.

1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நாட்டு அரசுடன் இணைந்து நாம் எடுத்துக் காட்டினோம் என்றால்
2.அந்த நிலையே நம் அரசும் ஆகின்றது.
3.நாமே அரசாகின்றோம். அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலைகள் கொண்டு நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் இந்த அரசும் நலமானதே. அரசே நாம் – ஆக நலமாகின்றோம்.

1.நாம் தான் அரசு
2.அரசு தான் நாம் என்ற நிலைகளில்
3.தீமைகளை வென்று ஞானத்தின் நிலையை வளர்த்த நம் பாரத நாட்டில் அரசியல் பேதமின்றி வளர்ப்போம்.
4.பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்து நம் தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும் என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவோம்.

உலக மக்கள் அனைவரும் பேதமற்ற நிலைகளில் வாழ வேண்டும் என்று “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…!” என்று போற்றப்படும் இங்கே தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகளை இந்த உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வை நாம் ஒருக்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்ற நமது மூச்சலைகளைப் பரப்புவோம்.

நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம். பகைமையற்ற உணர்வுகளுடன் வாழ்வோம்… வளர்வோம். எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று அந்த அகஸ்தியமாமகரிஷிகளை வேண்டிப் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!