“காண்டீப முனிவர்…” உயிரைப் பற்றிச் சொன்ன தத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kandeepam

“காண்டீப முனிவர்…” உயிரைப் பற்றிச் சொன்ன தத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

(நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்)

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

big-dipper-kalki

நம் குடும்பத்தில் இறந்தவர்களைப் பற்றி நாம் எண்ண வேண்டிய முறை எது…?

 

நம் குடும்பத்திலோ உறவினர்களின் குடும்பத்திலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ யாராவது உடலை விட்டுப் பிரிந்தர்கள் என்றால் அதற்குப் பின் வருடா வருடம் அவர்களை நினைத்து “நினைவு நாள்…!” என்று வைத்துக் கும்பிடுகின்றோம்.

நினைவு நாள் அன்று எதை எல்லாம் நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாருடைய நினைவு நாளோ அவரின் நினைவு வரப்படும் போதெல்லாம்
1.நல்ல மனிதர்… இப்படி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாரே..! என்று எண்ணும் போது
2.அவர் உடலிலே இருந்த நோயின் உணர்வுகள் நமக்குள் அது பெருகத் தொடங்கும்.
3.அவருக்கு ஆகாரம் வைத்து நினைவு நாளில் கும்பிட்டால்
4.அவர் உணர்வுடன் பங்கு கொண்ட அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது.

இதுபோன்ற நிலைகளை நாம் தடைபடுத்த நினைவு நாளில் எப்படி எண்ண வேண்டும்..?

கூட்டுத் தியானங்கள் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளி உடல் பெறச் செய்து விடுகின்றோம்.

அந்த ஒளியின் உடல் பெற்ற அவரின் உணர்வுகள் நமக்குள் இருக்கும் பொழுது
1.அந்தப் பேரருள் நம் உடலுக்குள்ளும் பரவி
2.நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தியை நாம் பெற்று
3.நம் உடலில் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
4.இது தான் நினைவு நாள் என்பது.

ஆகவே ஒளியின் உடல் பெற்ற உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் போது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நம் உடலிலே படர வேண்டும் என்று எண்ணினாலே போதும்.

நினைவு நாள் அன்று இவ்வாறு எண்ணினால் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததனால் அவரின் உணர்வுகள் நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து இருப்பினும் நம் உடல்களிலும் இருளை நீக்குகிறது. அதாவது
1.அவருடன் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் இருந்த உணர்வுகளுக்கு
2.அருள் உணர்வைக் கொடுத்து இருளை நீக்கும் நிலை பெறுகின்றது.

ஏனென்றால் அவர் ஒளியின் உடல் பெற்று விட்டார்…!
1.நமக்குள் இருக்கும் அவரைப் பற்றிய அணுவின் தன்மையும்
2.இருளை அகற்றிடும் அருள் ஒளி பெறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்பது தான் இதன் உட்பொருள்.

இப்படிச் செய்யாமல் இன்று சாதாரண வழக்கத்தில் உள்ளது போல இறந்தவரின் நினைவு நாளில் அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த நாளில் அவர் உணவாக உட்கொள்ளும் உணவினைப் படைத்து விட்டு அவரைப் பற்றி எண்ணி…
1.என்னுடன் எப்படி எல்லாம் வாழ்ந்தார்…! என்று
2.அதையெல்லாம் நாம் நினைவு படுத்தும் போது
3.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் பட்ட அந்தக் கஷ்ட நஷ்டம் எல்லாமே
4.நம் உடல்களில் அதிகமாகப் புகுந்து பரம்பரை நோய் என்றோ பரம்பரை குணங்கள் என்றோ
5.அவர் அடைந்த வெறுப்பின் தன்மை அனைத்தும் இங்கே நமக்குள் விளைந்தே தான் தீரும். (யாரும் இதிலிருந்து தப்ப முடியாது)

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நமது தியானத்தின் வலிமையால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை ஒவ்வொரு நாளுமே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் சொல்கிறோம்.

அவ்வாறு செய்யும் போது இந்த உடல் பெற்ற விஷத்தின் தன்மைகள் அனைத்தும் அங்கே கரைந்து விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
2.ஒளியின் உடலாக இருக்கின்றனர்.
3.ஆகவே இதற்கு அப்புறம் அவர்களுக்குப் பிறவி இல்லை.

நினைவு நாள் கொண்டாடும் பொழுதெல்லாம் இப்படி எண்ணினோம் என்றால் நமது உணர்வுகளும் வலுப் பெற்று இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மை நம் உயிர் எளிதில் அழைத்துச் செல்லும்.

நினைவு நாளை நாம் இப்படித்தான் நினைவுபடுத்தும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மறைக்கப்பட்ட திருக்கோவில் இரகசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Natarajar thirumoolar patanjali

மறைக்கப்பட்ட திருக்கோவில் இரகசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சிவகாமி என்ற பெண்மணி நடனக் கலையில் சிறந்து விளங்கி யாராலும் வெல்ல முடியாத் தன்மையில் கர்வப்பட்டு ஆக்ரோஷ குணத்திணாள் ஆகித் தன்னிடம் தோற்பவவர்களைத் தண்டிக்கும் குணம் படைத்த காளி போல் காட்சியாகின்றாள்.

பதஞ்சலி முனிவர் நடனக்கலையின் நுட்பத்தில் தான் உருவாக்கிய யோக சூத்திர மார்க்கத்தைப் புகுத்திக் கர்ண வித்தைகளை உருவாக்கி அவளுடன் போட்டியிடுகின்றார்.

1.அவர் காட்டும் அத்தனை கர்ண வித்தைகளையும் அம்மாது காட்டிக் கொண்டே வருகின்றாள்.
2.பதஞ்சலி வலக் காலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும் முத்திரையைக் காட்ட
3.அதைத் தான் காட்ட முடியாது பெண் குண இயல் தன்மையான நாணம் வந்து தடுக்க
4.தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டு சிவகாமி அடிபணிகின்றாள். அவள் கர்வம் ஒடுக்கப்பட்டது.

பதஞ்சலியின் நடன ஞான மார்க்கம் மற்ற பக்தி நெறிக்கு இடையூறு விளைவிக்கின்றார் என்ற கருத்தில் தில்லை அன்பர்கள் சிலர் பதஞ்சலியை மரணப்படுத்த காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த நேரத்தில் தானாக வந்தமைந்த விதமே திருமூலர். மாடு மேய்க்கும் மூலன் இறந்தவுடன் மூலன் உடலில் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மையால் பதஞ்சலி உள் நுழைகின்றார்.

சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதஞ்சலியின் உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர். எரித்த பின் அந்த எலும்புகளைக் கொண்டு சென்று அந்த எலும்புகளைப் பூஜித்தால் அவருடைய உயர்ந்த சக்திகளைத் தாங்கள் பெறலாம்.

அந்தப் பலனை நாம் பெறவேண்டும் என்று ஒருவருகொருவர் சத்தியம் பெற்று யாரும் வெளியிடாதபடி தாம் செய்த செயலை நியாயப்படுத்தினர்.

திருமூலர் உடலில் புகுந்த பதஞ்சலி திருமூலர் உடலுடன் வந்து தேடும் பொழுது
1.சாட்சாத் பரமேஸ்வரனே உங்கள் திரு உடலை மறைத்து அருளியுள்ளார்.
2.இந்தத் திருமூலரின் உடலுடன் இருப்பதே எம்பெருமான் சித்தம் என்று
3.பதஞ்சலியினால் தங்களுக்குத் தங்கள் பக்தி வழிக்கு இடையூறு ஏற்படாவண்ணம் சாதுரியமாக மாற்றினார்கள்.

ஆனாலும் திருமூலர் திருமந்திரம் வெளிப்பட்டவுடன் மீண்டும் தங்களுக்கு வந்த இடையூற்றினை உணர்ந்து என்ன செய்தார்கள்…?

1.பதஞ்சலியால் இயற்றப்பட்ட திருமந்திரத்தில் “ஞான விளக்கமாகும் செயல் முறையும்”
2.தங்களின் “ஆச்சார அனுஷ்டானங்களை உடைக்கும் வைத்திய முறையும்” இருப்பதால்
3.அந்தத் திருமந்திரத்தை மறைத்தனர்… பல அழிக்கப்பட்டன…! (பல காலமாக…!)

ஆனாலும் திருமூலர் வெளிப்படுத்திய மூச்சலைகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் உண்டு. காற்றிலே ஓடும் அந்த நிலைகளைத் தன் ஈர்ப்பில் கொண்டு வந்து நிச்சயம் இந்த உலகுக்கு அளிக்க முடியும் (ஞானத்தை உணரும் ஞானிகளால்…!)

திருமூலர் உடலும் ஜெபத்தின் பொழுது மண்ணிட்டுப் புதைக்கப்பட்டு ஓர் நன்னாளில் சிதம்பரம் கோவில் நிலையில் ஓரிடத்தில் ஜீவ சமாதி போல் மறைக்கப்பட்டுப் பூசி அடைக்கப்பட்டு விட்டது.

சிதம்பரம் கோவிலினுள் அவர் செயல் நிலை இன்றும் பதஞ்சலியாகச் செயல்படுகிறது.

பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

Life cylce of man

பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

கேள்வி:-
பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்…! எதுவப்பா பிச்சை…? எதுவப்பா இயற்கை…? அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் பற்றிப் புரிந்து கொண்டீர்களா…?

மேலே கூறப்பட்டுள்ள மாமகரிஷி ஈஸ்வரபட்டரின் கருத்தில் “அணுவின் பாடம் பற்றியும்… ஆவியின் பாடம் பற்றியும்…” விளக்கம் தேவை

பதில்:-
அணுவின் பாடம்:-

விண்ணிலே தோன்றிய ஓர் உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் சந்தர்ப்பவசத்தால் பூமிக்குள் வந்து ஒரு தாவர இனத்தில் வீழ்ந்தால் ஒரு புழுவாக உடல் பெறுகிறது.

பின் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்ந்து வருகிறது. மனிதனுக்குப் பின் தன்னை உணர்ந்து மெய் ஞானிகள் வழியில் சென்றால் மனிதன் தெய்வ நிலை பெறுகின்றான். கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரமாக ஆக முடியும்.

ஆனால் விண்ணிலே தோன்றிய அந்த பூமிக்குள் வராது வேறு கோள்களின் ஈர்ப்புக்குள் சென்று விட்டால் அங்கே கிருமிகளாகத்தான் வாழ முடியும்.
1.எத்தனை கோடி ஆண்டுகளாக அங்கே இருந்தாலும் உடல் பெறும் நிலை இல்லை.
2.மனிதனாக வரும் வாய்ப்பே இல்லை.

நம் சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டும் தான் உயிரணுக்கள் உயிரினங்களாக உடல் வளர்ச்சி பெற்று மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய தாவர இனங்களும் நீர் வளங்களும் உள்ளது.

ஆகையினால் நாம் இந்தப் பூமியில் மனிதனாக இப்பொழுது பிறந்திருக்கும் நிலை எந்தக் காலத்தில் பெற்ற நல்ல நிலையோ என்பதைக் கருத்தில் கொண்டு நம் உயிரான்மா இந்தப் பிறவியில் இப்பொழுது பெறவேண்டிய விமோச்சனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி அல்லாது நாம் வேறு கோள்களின் ஈர்ப்புக்குச் சென்றிருந்தால்
1.மனிதனாகும் தகுதியும் இருக்காது.
2.ஞானத்தின் வழி செல்லும் சந்தர்ப்பமும் இல்லாது போய்விடும்.
3.ஆக மனிதனாகப் பிறந்ததின் பயனை நாம் அடைதலே சிறப்பு,

ஆவியின் பாடம்:-

மனிதனாக நாம் இன்று வாழ்ந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ உணர்வுகளை நாம் சந்திக்கின்றோம். அதில் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவைகள் வந்து மோதத்தான் செய்கின்றது.

நல்லதோ தீமையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுகளின் இயக்கத்திற்குக் காரணமே
1.இந்தப் பூமியில் ஏற்கனவே நம்மைப் போன்று வாழ்ந்த மனிதர்கள் விட்ட மூச்சலைகள் தான்.
2.அந்த அலைகளை நாம் சுவாசித்துத் தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றோம். (அதைத்தான் சிவ தனுசு என்று சொல்வது)
3.அதாவது ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளைத்தான் சுவாசிக்கின்றோம்.
4.மீண்டும் இந்தப் பூமியில் உடல் பெறச் செய்யும் உணர்வுகளைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்.

வாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே எத்தனையோ வேதனையுடன் நிராசையாகித்தான் கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றான்.

அவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படர்ந்துள்ளது. அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிராத்மாக்களும் இதே காற்று மண்டலத்திலே தான் சுழன்று கொண்டுள்ளது.

நாம் சாதாரணமாக எண்ணும் பொழுது அவர்கள் வெளி விட்ட மூச்சலைகளும் நம்முடைய எண்ணமும் ஒன்றாக இருந்தால் அந்த அலைகள் நமக்குள் வந்து நம்மை இயக்கும்.

ஆனால் மிகவும் அழுத்தமாக எண்ணினால் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாவே நம் ஈர்ப்புக்குள் வந்து நம் இரத்தத்தில் வந்து அது நம்மை இயக்கத் தொடங்கும். இதைத்தான் ஆவி நிலை என்பது.

ஏனென்றால் நிராசையுடன் சென்ற அந்த உயிரான்மா
1.தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடனேயே காத்துக் கொண்டு இருக்கும்.
2.இன்னொரு உடலுக்குள் சென்று குழந்தையாகப் பிறக்காமல்
3.உடலுடன் வாழும் மற்ற மனித உடல்களுக்குள் புகுந்து தன் காரியத்தைச் செயல்படுத்தும் ஏக்கத்திலேயே இருக்கும்.

ஓரளவுக்கு முழுமையாக வாழ்ந்து உடலை விட்டு அமைதியாகப் பிரிந்த ஆன்மாக்கள் தான் அடுத்து குழந்தையாகப் பிறக்கும் நிலைக்கு வரும். அதுவும் குறைந்தது 100 – 150 ஆண்டுகளாவது ஆகும்

நிராசையாக உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் தன் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதால் அவைகள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் வந்த நோய்களும் துன்பங்களும் நம்மையும் சாடி நம் உடலையும் சீக்கிரம் நலியச் செய்து அதே நிலைக்கே அழைத்துச் சென்று விடும்.

ஆக மொத்தம் மனிதனாகப் பிறந்து வாழும் பெரும்பகுதியானவர்கள் கடைசியில் இப்படித்தான் இறக்கின்றனர்.

1.இந்த ஆவி உலக உயிராத்மாக்களின் உணர்வின் உந்தல்களால் இயக்கப்பட்டு
2.தீமையான உணர்வுகளுக்குள் சிக்கித் துன்பப்பட்டு வேதனைப்பட்டோ அல்லது
3.மற்றவரை அழிக்கும் எண்ணம் கொண்டோ செயல்படச் செய்து
4.கடைசியில் நிம்மதியை இழந்து பலவிதமான நோயாகி இறக்கும் நிலை தான் இன்று உள்ளது.

ஆனால் “வயது ஆக ஆக மனிதனுக்கு இப்படித்தான் நோய்கள் வரும்…!” என்று நாம் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு “அதையே வாழ்க்கை…!” என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நல்லதே செய்து நல்ல எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் பக்தி கொண்டு வாழ்பவர்களுக்கும் பக்தி இல்லாது வாழ்பவர்களுக்கும் எல்லோருக்குமே நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் பிறிதொரு உடலை விட்டுப் பிரிந்த உணர்வுகள் அல்லது அந்த ஆன்மாக்களின் இயக்கமே…!

இன்று சிறிதளவு உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த ஆவி உலக ஆன்மாக்களின் உணர்வுகள் நம்மைச் சாடத்தான் செய்யும்.

ஆவி உலக ஆன்மாக்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிக் கொண்டால் தான் தப்ப முடியும்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்திக்கு நம் கண்ணின் நினைவுகளைக் கொண்டு போய் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் பொழுதெல்லாம் இவ்வாறு மாற்றிக் கொண்டால் தான் ஆவி உலக ஆத்மாக்களின் தொடர்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நம் எண்ணங்களும் உணர்வுகளும் செயல்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த உடலுக்குப் பின் மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் எளிதில் அடைய முடியும்.

1.பிறிதொரு மனித உணர்வின் (ஆவி) ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நமக்கு வந்து கொண்டே தான் இருக்கும்.
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சென்ற மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாத நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வு நாம் வாழலாம்.

“நடராஜர் களி நடனம்…!” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord Natraja

“நடராஜர் களி நடனம்…!” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி… வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு… பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே…!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெறவேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெறவேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெறவேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

Good and bad segregation

ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

 

ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.

இதைப்போல தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!

அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.

ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,

பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.

இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.

ஆகவே தீமையையே எண்ணாது எந்தத் தீமையும் நமக்குள் வராது
1.மீண்டும் மீண்டும் உயர்ந்த நிலைகளை நாம் எண்ணி
2.இந்த உணர்வலையைப் பரப்பப்படும் போது தான்
3.நமக்குள் உயர்ந்த சக்தியைப் பெற முடியும்.

“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord-Krishna-Govardhan-Parvat

“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து அந்த எண்ண வழித் தொடரில் பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான் “கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்றுவிட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெறவேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில் தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும் உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன்
2.கருப் பொருளை உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரம் உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

நல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை

SWIPE CARD

நல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை

 

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் (SWIPE CARD) கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதற்குரிய சாவியைப் (PASSWORD) போடச் சொல்கிறார்கள்.

அந்த அட்டையில் என்ன இருக்கின்றதோ அந்தச் சாவியை (PASSWORD) அதிலே போட்டால் தான் அது திறக்கின்றது. இல்லை என்றால் திறக்கவே திறக்காது.

இதைப் போல பலவிதமான உணர்வின் தன்மைகளை அந்தப் பிளாஸ்டிக் அட்டையிலே (SWIPE CARD) கொடுத்து இந்தத் மாதிரி திறக்கும்படிச் செய்கின்றனர். இன்று அதை வைத்து எத்தனையோ விதமான பரிவர்த்தனைகளை நாம் செய்கின்றோம். அந்த அட்டையை வைத்து இருந்த இடத்திலிருந்து “உலகம் முழுவதற்கும்…!” நாம் செயல்படுத்துகின்றோம்.

உதாரணமாக நமக்குள் நண்பர்களாகப் பழகிய அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ளோருடன் பழகியவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதை என்ன…? ஏது…? என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

அவர்கள் உணர்வு நமக்குள் பதிவு இருப்பதனால் அதே நினைவு கொண்டு நாம் எண்ணுவோம் என்றால்
1.அப்போது இந்தக் கதவு திறக்கப்படுகின்றது.
2.அவர் உடலில் இருந்த உணர்வுகள் நோய்கள் நினைத்தவர் உடலில் உருவாகின்றது.
3.அப்போது அந்த இருள் சூழ்ந்த நிலையே நமக்குள்ளும் வருகின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா..!

அதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமைகளை எல்லாம் நீக்கி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாக இப்பொழுது இங்கே பதிவு செய்கின்றோம்.

நமது உடல்களில் அந்தத் துருவ நட்சதிரத்தின் உணர்வை நாம் பதிவு செய்து கொண்டால் (SWIPE CARD)
1.நமது எண்ணத்தின் திறவுகோலை (PASSWORD) ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக அந்தத் துருவ நட்சதிரத்தின் பால் பாய்ச்சப்படும் போது
2.அந்த அருள் பெரும் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.இருளை நீக்கி நல் வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழமாகப் பதிவான பின் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலே நம் உடலுக்குள் அதனின்று வரும் பேரருள் பேரொளி உட்புகுந்து
1.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் தீமைகளை எல்லாம் நீக்கி
2.நல் உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தோற்றுவித்து
3.நல்ல குணங்களுக்கு நம் மணம் இடம் கொடுக்கின்றது.
4.நம்மை மகிழ்ந்து வாழச் செய்கிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடல் நலம் பெற்வேண்டும் என்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களும் நோயிலிருந்து விடுபடுகின்றார்கள்.

குடசாஸ்திரி மலையில் ஆதிசங்கரரால் அமைத்து வைக்கப்பட்டுள்ள “சர்வக்ஞ பீடம்…!” என்ற மூலச்சக்கரத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

kundalini sakthi

குடசாஸ்திரி மலையில் ஆதிசங்கரரால் அமைத்து வைக்கப்பட்டுள்ள “சர்வக்ஞ பீடம்…!” என்ற மூலச்சக்கரத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்று தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

மனித வாழ்க்கைப் பயணத்தின் திசை எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்…?

both dippers

மனித வாழ்க்கைப் பயணத்தின் திசை எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்…?

 

ஆறாவது அறிவின் தன்மையில் மனிதன் என்ற நிலைகளில் நமக்குள் தீமையின் நிலைகள் பொங்கிடாது அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து மகாமகமாக எல்லா இடத்திலும் பிணிகளை நீக்கும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்வதே “மகாமகம்…!” என்பது.

மாசி மாதம் தான் மகாமகத்தின் ஆற்றல் மிக்க சக்தியினை சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அருள் ஞானிகள் இதைக் கூட்டினார்.

மாசியில் தான் “உத்தராயணம்…” என்ற நிலைகளும் வருகின்றது. அதாவது
1.இந்த மனித வாழ்க்கையில் உடல் பெறும் நிலையை மாற்றிவிட்டு – திசையை மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று
3.அடிக்கடி நாம் தியானிப்பது தான் உண்மையான தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று உங்களால் எத்தனை தடவை எண்ண முடியுமோ எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்ட பின்
1.எங்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்,
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெறவேண்டும்,
3.எங்கள் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்,
3.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
4.எங்கள் தொழில்கள் அனைத்தும் சீராக வேண்டும்,
5.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும்,
6.எங்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளரவேண்டும்,
7.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அமைதி பெறவேண்டும் என்று
8.இந்த உணர்வினை நீங்கள் எடுத்து செல்லுங்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் மகிழ்ச்சி பெறும் நிலையாக “உத்தராணயம்…!” உங்கள் திசை மாறி அந்த மெய் ஞானி உணர்வுடன் செல்லத் தொடங்கும்.

நாம் இது வரையில் அறியாத நிலைகள் கொண்டு வளர்ந்து வந்திருந்தாலும்
1.இனிமேல் நமக்குள் தீமைகள் வளராது
2.மீண்டும் உடலுடன் உடல் பற்று கொண்டு புவியின் ஈர்ப்புக்குள் வராது
3.புவியைக் கடந்து சென்று உத்தராணயம் – ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக நாம் அந்த மகரிஷியுடன் ஒன்றி வாழும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

முழுமையின் நிலையாக உத்தராணயம் என்ற நிலையை நாம் பெறுவோம் என்று இதை எல்லோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வயலைப் பன்படுத்தி நல்ல வித்தினை விதைத்து நீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை இட்டு வந்தால் அதனுடைய ராசிகளை நாம் பார்க்க முடிகின்றது.

மனிதனின் வாழ்கையில் நாம் கேட்டறிந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் பொறாமை கோபம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினைகளாக நம்மை அறியாமலே வந்து சேர்ந்து விடுகிறது.

அந்தத் தீயவினைகளை (களைகளை) அகற்றிட ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பல முறை செலுத்துங்கள்.

அதிகாலையில் கண விழித்ததும் (சூரிய உதயம் ஆவதற்கு முன்) உங்களால் முடிந்த மட்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

இது உங்களுக்குள் கூடக் கூட உங்கள் வாழ்கையில் வந்த தீமைகளை அது அகற்றி விட்டு திசை மாறி ஞானியின் உணர்வு கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் செல்லும்.

இவ்வாறு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள் என்றால்
1.உங்களை அறியாது சேர்ந்த நோய்கள் போகும்,
2.உங்கள் அறியாது வந்த தீயவினைகள் மறையும்
3.உங்களை அறியாது உட்புகுந்த சாப வினைகள் நீங்கும்
4.உங்கள் அறியாது வந்த பூர்வ புண்ணியத்தால் அமைந்த தீமைகளும் அகலும்.

மெய் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக என்றுமே நாம் முழுமையின் நிலை அடைய முடியும்.