ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

சாமிகள் உபதேசம்

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

 

சாமிகள் உபதேசம் (audio) கேட்பதைப் பெரும்பாலும் மற்றவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால்
1.கேட்க நேரம் இல்லை…! என்பார்கள்
2.எத்தனை தடவை கேட்டாலும் புரியவில்லை…! என்பார்கள்
3.நமக்குச் சம்பந்தமில்லாததை எல்லாம் சொல்கிறார்…! என்பார்கள்
4.அப்படியே கேட்டாலும் தூக்கம் வருகிறது… என்பார்கள்
5.கடைசியில் சொன்னதயே திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்பார்கள்.

ஆனால் என்னுடைய அனுபவத்தில் சாமிகளின் உபதேசத்தை (audio) உற்றுக் கேட்பதன் மூலம் தான்
1.எனக்குள் வரும் எல்லாக் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
2.உடனுக்குடன் விடை கிடைக்கிறது.
3.கிடைத்துக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி காட்சியாகவும் உணர்வலைகளாகவும் வந்து கொண்டேயுள்ளது. மகா ஞானிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.

உபதேச உணர்வின் இயக்கத்தால் மற்றவர்களின் உணர்வுகளோ அல்லது எற்கனவே நடந்த தீமைகளைப பற்றிய எண்ணங்களோ என்னை இயக்குவதில்லை.

ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக ஒரு புதிய மெய் உணர்வுடன் உத்வேகத்துடன் அருள் வழியில் முன்னேறிச் செல்லும் உணர்வுகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது.

சாமிகளின் உபதேச ஒலிகளுக்குள் அவ்வளவு பெரிய சூட்சம சக்திகள் மறைந்துள்ளது. சரியாகச் சொன்னால் ஞானிகளின் (அசைவுகள்) BODY LANGUAGE அதில் தான் உள்ளது.

ஞானியாக ஆக வேண்டும் என்றால் ஒலி உபதேசத்தை அவசியம் கேட்க வேண்டும். அதைக் கேட்க தனியாக என்று நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

மற்ற வேலைகள் செய்து கொண்டிருக்கும் பொழுதே அதைக் கேட்டு எளிதில் நமகுள் வளர்க்க முடியும்.

சாமிகள் உபதேசத்தை நான் அதிகமாகப் பதிவாக்கும் நேரம்
1.காலை எழுந்ததிலிருந்து வேலைக்குச் செல்லும் அந்த ஒரு மணி நேரம் கேட்பேன்
2.அதன் பின் வேலைக்குச் செல்லும் வழியிலும் வீட்டுக்கு வரும் வழியிலும் ஒரு மணி நேரம் கேட்பேன். (HEAD SET மூலம் காதில் மாட்டிக் கேட்பேன்)

இந்தக் காதில் மாட்டிக் கேட்கும் பொழுது தான் மகரிஷிகளுடன் அதிகமான நெருக்கம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது இன்று வரையிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

சாமிகள் “AUDIO WEB LINK” கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். https://wp.me/P3UBkg-1rP

நம் நல்ல குணங்களைக் காக்கும் சக்தி எது…?

Scaffold

நம் நல்ல குணங்களைக் காக்கும் சக்தி எது…?

 

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்

1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்

2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

உடல் நலம் பெறச் செய்து மகிழ்ந்து வாழச் செய்யவே “அபிநயக் கலைகள்…”

Dance - natyam

உடல் நலம் பெறச் செய்து மகிழ்ந்து வாழச் செய்யவே அபிநயக் கலைகள்

 

நான் யாரையும் தவறாகவோ குறையாகவோ சொல்லவில்லை.

நமது பண்புகளை இழந்து ஏதோ நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு “இன்று… டான்ஸ்களை (DANCE) இரசித்துக் கொண்டிருக்கின்றோம்…!”

“தையா..தக்கா..,” என்று ஆணும் பெண்ணும் மோதுகின்ற மாதிரி ஆடுவது… கழுதை கத்துகின்ற மாதிரி கத்துவது…. குதிரை கத்துகின்ற மாதிரி குத்துவது…, அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் ஆட்டங்கள் ஆடுவது தான் “இன்றைக்கு டான்ஸ்…”

அங்கே ஆட்டங்கள் ஆடுவதைப் பார்ப்பவர்கள் இங்கே இருந்து கொண்டு “ஹேய்….. ஊய்…..” என்று எல்லோரையும் பைத்தியக்காரர்களாக ஆக்குவது இது தான் இன்றைக்கு நம் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனிதனால் சோர்வடையும் போது உடல் உறுப்புகளும் சோர்வடைகின்றது. அதனால் பல நோய்கள் வருகிறது. உடலுக்குள் பல விஷ நீர்கள் உருவாகின்றது.

அதே சமயத்தில் திடீரென்று தும்மலாகிவிட்டால் உள் உறுப்புகளில் சிக்கல்களாகிவிடும். நுரையீரலில் சிக்கலாகிவிட்டால் இருமல்கள் வரும். ஏனென்றால் சரி வர நுரையீரல்கள் விரிவடையவில்லை என்றால் இருமலாக வரும்.

இதைப்போல இருந்து அது நாளடைவில் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளே பாழடைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அகற்றுவதற்குத்தான் அன்று அபிநயம் என்று அங்கக்கலையாக அமைத்துக் கொடுத்தார்கள் ஞானிகள். அபிநயங்கள் கொண்டு மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்தார்கள் ஞானிகள்.

உணர்வின் இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்கு தக்க மகிழ்வான நிலைகள் கொண்டு அபிநயங்களை ஆட்டப்படும் போது
1.உடலிலுள்ள உள் உறுப்புகளின் இயக்கங்களைச் சீராகுவதும்
2.விஷ நீர்களை அகற்றுவதும்
3.உடல் நலம் பெறுவதற்காகச் செய்தார்கள்.

கலை அபிநயம் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வைத் தனக்குள் தோற்றுவிக்கும் போது
1.தன்னை அறியாத உணர்வின் நரம்பு பிடித்தலோ
2.உடல் உறுப்புகளினுடைய சிக்கலோ
3.அல்லது உள் உறுப்புகளில் உள்ள சிக்கலையோ நீக்குவதற்கு
4.நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் இயல்பாக உருவாக்கிக் கொடுத்தார்கள்

இப்பொழுது என்ன என்றால் தையாதக்கா என்று குதித்து தவறாக உணர்வுகளைக் காட்டி காம உணர்ச்சிகளை ஊட்டி கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து மாடுகளைப் போல நம்மை ஆடும்படி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது தான் கலாச்சாரமா…?

நம்முடைய கலாச்சாரம் என்ன ஆனது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…!

gnana pokisham 2

மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…! (ஞானகுரு)

 

தினசரி ஞானிகளைப் பற்றி யாம் (ஞானகுரு) உபதேசம் சொல்லிக் கொண்டே வந்தாலும்… அதைக் கேட்ட பின் “உபதேசம் மிகவும் நன்றாக இருந்தது…!” என்று ஒரே வரியில் சொல்கிறவர்களும் உண்டு.

நேற்று சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார். திருப்பித் திருப்பி அதையே தான் சொல்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு அடுத்த நிலை என்ன சொன்னார்…? என்று கேட்டோம் என்றால் முழிக்கிறார்கள். ஏனென்றால் ஞானிகளைப் பற்றி உபதேசம் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் போது
1.இங்கே எதையுமே நான் முதலில் நினைத்துக் கொண்டு வந்து உபதேசிப்பது இல்லை…!
2.மனப்பாடம் செய்தோ அல்லது மனதில் உருப் போட்டுக் கொண்டு வந்தோ உபதேசிக்கவில்லை..!
3.யார் யார் முன்னாடி வந்து “எதை அறிய வேண்டும்…!” என்று விரும்புகிறார்களோ
4.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத்தான் அந்த உபதேசமே அன்றைக்கு அங்கே வரும்.

ஒரு நூறு பேர் நினைத்திருக்கிறார்கள் என்றால் அந்த நூறு பேருக்குமே (விடைகள்) கிடைக்கும் அளவிற்குத்தான் எம்முடைய இந்த உபதேசம் இருக்கும்.
1.நான் நினைத்துக் கொண்டு வந்தேன்… சாமி சொல்லி விட்டார்…
2.நான் எதைக் கேட்க வேண்டும் என்று வந்தேனோ.. அதைச் சொல்லி விட்டார்.. என்ற
3.இந்த உணர்வு அந்த அத்தனை பேருக்கும் வருகிறது.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதித்துக் கொண்ட நிலையில்
1.இந்த வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்த வேண்டும்…?
2.இந்தக் காற்றில் ஞானிகளின் சக்திகள் எவ்வளவு கலந்து இருக்கிறது…?
3.காற்றில் கலந்துள்ள ஞானிகளின் அருள் உணர்வுகளை எப்படிக் கவர வேண்டும்…?
4.அதை நமக்குள் சேர்க்கும் வன்மை (வலிமை) எப்படி நினைவுபடுத்த வேண்டும்…? என்பதை எல்லாம் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது.

உபதேசத்தைக் கேட்டுப் படித்துணர்ந்த பின் நாம் எந்தளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? அதை எப்படி வலு பெறச் செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நாளும் அருள் ஞானத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்..? என்பதற்குத்தான் வினாக்களை எழுப்பச் சொல்கின்றோம்.

சாமியிடம் வினாக்களைக் கேட்கின்றோமே என்று எண்ண வேண்டாம். இது வரையிலும் பல துறைகளிலேயும் பல முறைகளிலேயும் உபதேசத்தைக் கொடுத்து இருக்கிறோம்.

இதில் நீங்கள் எந்த அளவுக்குப் பதித்து வைத்திருக்கின்றீர்கள்…? உங்கள் மனோநிலை என்ன? அதிலிருந்து நீங்கள் எதை அறிந்திருக்கின்றீர்கள்…? எதை அறிய விரும்புகின்றீர்கள் என்பதற்காக வேண்டித் தான் கேள்விகளைக் கேட்கச் சொல்வது.

ஒருவர் வினா எழுப்பினால் மற்றவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். வினாக்களை எழுப்பும் போது ஒருவர் கேட்கும் வினாவை அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்ள இது உதவியாக இருக்கும். (விருப்பமுள்ளவர்கள் கேட்கலாம்…!)

பேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…! திரிபு செய்து விட்டார்கள்…!

SAVE THE EARTH

பேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…! திரிபு செய்து விட்டார்கள்…!

இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். இரண்டு அரக்கர்கள் மற்றவர்களைக் கொன்று புசிப்பதே அவர்களின் பழக்கம். வாதாபி என்ற அரக்கன் ஆடாக மாறுவான். அவனைக் கொன்று சமைத்து முனிவர்களுக்குப் பரிமாறுவான் அவன் சகோதரன்.

சாப்பிட்டு முடித்தவுடன் “வாதாபி… வெளியே வா…!” என்று கூப்பிடுவான். உண்டவரின் வயிற்றைக் கிழித்து கொண்டு வாதாபி வெளியே வருவான். பின் அவரை இருவரும் சேர்ந்து உணவாக உட்கொள்வார்கள். இது அவர்கள் வழக்கம்.

வாதாபி அகஸ்தியனைப் பார்த்த உடனே நீங்கள் எங்கள் விருந்தாளியாக வர வேண்டும். ஆட்டை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறோம். நீங்கள் சாப்பிட வேண்டும் என்கிறான்.

நான் மாமிசம் சாப்பிடுவதில்லையப்பா…! என்று சொல்கிறார் அகஸ்தியர்.

அகஸ்தியர் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆனால் அரக்கர்கள் நீங்கள் மாமிசம் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று ஆசையை ஊட்டுவதால் “சரி… நீங்கள் மிகவும் கட்டாயப்படுத்துவதால் சாப்பிடுகிறேன்…! என்று அகஸ்தியர் ஒத்துக் கொள்கிறார்.

வாதாபி ஆடாக மாறி விடுகிறான். அதை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறான். அகஸ்தியர் உண்டு முடித்ததும் “வாதாபி வெளியே வா…!” என்று சகோதரன் அழைக்கிறான்.

வாதாபி அப்பொழுதே ஜீரணம் ஆகி விட்டான்…! என்று சொல்கிறார் அகஸ்தியர். உடனே உன்னை இப்பொழுதே கொன்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான் அந்த அரக்கன்.

அகஸ்தியன் தன் பார்வையால் அவன் உணர்வின் அலைகளைப் பொசுக்கி விடுகிறார். இது அகஸ்தியனின் சரித்திரம். ஆனால் இராமாயணம் மகாபாரதத்தில் எல்லாம் இதைப் “புலஸ்தியர்…” என்ற ஒரு ரிஷி சொன்னதாகச் சொல்வார்கள்.

புலையர்கள் அதாவது காட்டுவாசிகள் தங்களுடைய புலனறிவால் உண்மையை உணர்ந்தவர்கள் என்று காட்டுவதற்குப் பதில் புலஸ்தியர் என்று பெயரை மாற்றிவிட்டு உண்மையின் இயக்கங்களை மறைத்து உணர்வின் தன்மையை மாற்றி விட்டனர்.

அசுவமேத யாகம் நடத்தும் போது அங்கே என்ன செய்கிறார்கள்…? மாமிசங்களைத்தான் அதிலே போடுகிறார்கள். இராமன் காட்டுக்குள் போகும் போது என்ன செய்கிறார்…? மாமிசங்களைத் தான் விருந்தாக வைத்துச் சாப்பிடுவார். அப்படித்தான் படித்திருக்கின்றீர்கள் இல்லையா…?

அவர் சாந்தமானவர் மற்ற உயிரினங்களைக் கொல்ல மாட்டார் என்று சொல்கின்றனர். இப்படி அவர் மாமிசம் சாப்பிடுவார் என்று இதை இணைத்துக் கொண்டது யார்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்களாக எப்படி வருகிறது…?
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி இயக்குகிறது…?
3.உணர்வால் அந்த உடல்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டியது அகஸ்தியன் தான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…? நன்றாகத் தெளிந்து பாருங்கள்…! இராமன் மாமிசத்தைச் சாப்பிட்டது என்று இதை இப்படி எடுத்து மாற்றிக் கொண்டது யார்…?
1.இயற்கையின் உண்மையின் மாற்றத்தை அரசியல் ரீதிக்கு மாற்றுகின்றார்கள்.
2.அரசனை வாழ வைப்பதற்காக வேண்டி அரசன் வழியில் மக்களுக்குப் போதித்தார்கள்.

அரசனின் கீழ் அடிமைப்படுத்தி அவனுக்குக் கீழ் மக்கள் வருவதற்கும் அசுவமேத யாகம் என்ற நிலைகளில் மந்திரங்களைச் சொல்லி ஒன்றோடு ஒன்றைக் கலக்கச் செய்து சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

சோமபானத்தை ஊற்றி யாகத் தீயில் புகையை மூட்டி எந்த மந்திர ஒலியில் எதைப் பதித்தானோ எந்த இசைக் கருவிகளில் எதை இசைத்தானோ அந்த இசையின் தன்மை வரப்படும் போது எந்த உடலில் பதிந்ததோ அந்த உடலில் விளைந்த உணர்வுகளை எல்லாம் கவர்ந்து கொள்கிறார்கள்.

கவர்ந்த உணர்வுகளையும் ஆன்மாக்களையும் பில்லி சூனியம் ஏவல் என்று பயன்படுத்தி
1.அடுத்த நாட்டைப் பழி வாங்குவதற்கும்
2.ஒவ்வொரு குணங்களுக்கும் கடவுள் என்று பெயர் வைப்பதும் தெய்வம் என்ற நிலைகளை உருவாக்குவதும்
3.தெய்வத்தின் நிலை என்று சொல்லி இன்ன இன்னது செய்யும் என்று அதற்குண்டான பதார்த்தங்களைக் கொடுப்பதும்
4.யாகத்தீயில் போட்டு காளி மாரி சாமுண்டீஸ்வரி என்ற நிலையும்
5.மந்திர ஒலிகளை மாற்றி இசையின் தன்மையைக் கூட்டி இதன்வழி தான் அரச நியதிகளாகக் காட்டிவிட்டார்கள்.
6.இன்று நாம் அந்த வழியில் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

நம் நாடு மட்டும் அல்ல. உலகம் முழுவதற்குமே இந்த உடலின் இச்சைக்குத் தான் மாற்றிக் கொண்டோமே தவிர “உயிரின் இச்சை யாருக்கும் வரவே இல்லை…!”

உயிர் தான் நம்மை வளர்த்தது என்ற பேருண்மையை உணர்த்தி அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை அடைய வேண்டும் என்ற
1.உண்மையின் இயக்கத்தைச் சொன்ன அகஸ்தியன் உணர்வுகள்
2.இன்று யார் கையிலும் இல்லை.

பிறருடைய வேதனை உணர்வை நுகர்ந்தால் தீய வினையாகின்றது. வேதனையான அந்த உணர்வை நமக்குள் சதுர்த்தி – நிறுத்துதல் வேண்டும். நிறுத்த வேண்டும் என்றால் இந்த விஷத்தை நீக்குதல் வேண்டும். எப்படி…?

ஒருவர் திட்டியதைப் பதிவு செய்து கொண்டபின் மீண்டும் அவரை எண்ணும் போது இந்தக் காற்றிலுள்ள அந்தத் திட்டியவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்து அதே உணர்ச்சி நம்மை இயக்குகின்றது.

அதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரத்திரமாகி அதிலிருந்து வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவருகிறது. காற்று மண்டலத்திலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அலைகளாகப் பரவச் செய்துள்ளது.

அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எளிதில் பெற முடியும்.

ஆகவே நமது ஆயுள் எதிலே இருக்க வேண்டும்…? முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர வேண்டும்.

ஆனால் ஆயுள் கால மெம்பராக இருந்து கொண்டு என்னைத் திட்டினார்கள். என்னைக் கேவலமாகப் பேசினார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஆயுள் கால மெம்பராக இருந்து என்ன செய்வது…?

நான் நல்லதைத்தான் செய்கிறேன். ஆனால் எனக்கு எல்லோரும் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்ற இந்த உணர்வை எடுத்தால் இந்த ஆயுள் கால மெம்பர் அப்படியே தான் இருக்கும்.

தேவை இல்லாததை எண்ணும் போது நாம் மீண்டும் இந்தப் பூமிக்குள் இன்னொரு உடலுக்குள் போய் வேதனையைத்தான் அனுபவிக்க நேரும்.

ஆகவே அதை மாற்ற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அந்த அகஸ்தியனின் வழியைப் பின்பற்ற வேண்டும். தீமையை அகற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற இதுவே சரியான மார்க்கம்…!

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

spiritual-path

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

நம்மைச் சாராதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் என்ன சொல்கிறோம்…?

அவர்கள் செய்ததற்கெல்லாம் அவர்களுக்கு நடக்கின்றது…! துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று அவர்கள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.

உதாரணமாகப் பாம்பு என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை ரசித்து உணவாக உட்கொள்கின்றது.

ஆகவே பிறருடைய வேதனையை நாம் ரசித்தோம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நமக்குள் கூடி மனிதனினுடைய சிந்தனைகள் அழிந்து இறந்த பின் பாம்பின் உருவத்தைத்தான் நாம் பெற முடியும்.

மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசிப்போம். இதே போல தன் குழந்தை மேல் பாசமாக இருக்கும் போது அவன் படும் வேதனையால் நாம் வேதனையின் உணர்வை அதிகமாக எடுக்கும் பொழுது கடைசியில் அதுவும் விஷத் தன்மை அதிகமாகி பாம்பின் ஈர்ப்புக்கே அழைத்துச் செல்லும்.

ஆகவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்ணுற்றுப் பார்த்து அந்தத் தீமைகளை அறிந்தாலும்
1.அந்தத் தீமையினுடைய அணுக்கள் தனக்குள் விளையாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு சில நொடிக்குள் அதை எண்ணி
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு
4.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
5.எங்கள் சொல் அனைவரையும் இனிமையாக்க வேண்டும்
6.அனைவரும் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு
7.தீமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுங்கள்.

குழந்தை தவறு செய்கிறான்… அவனைச் சீர்படுத்த வேண்டும் என்றால்
1.எங்கள் குழந்தை மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள் அவனிலே விளைய வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொண்டு
4.அதன்பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ ஞானியாக வருவாய் என்று சொல்லால் சொன்னால்
5.இந்த உணர்வுகள் அவன் திருந்த உதவும்.

அவ்வாறு இல்லையென்றால் அவன் மேல் வெறுப்பின் உணர்வுகள் வந்து “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்ற இந்த உணர்வின் தன்மை கேட்ப்படும் போது இது எதிர் நிலையை உருவாக்கும்.

இதுவே அவனுக்குள் வெறுப்பின் தன்மை ஊட்டும். அவனை வெறுக்கும் செயலைச் செய்ய வைக்கும். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமக்குள் மீண்டும் வெறுப்பின் தன்மையே வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அனுபவத்தைப் பெற்றவர்கள் அனைவருமே எந்த நிலையானாலும் இரவிலே படுக்கும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்…” என்ற எண்ணத்துடனே உறங்குங்கள். இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

“குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்…” என்று அந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்து இதைச் சொன்னீர்கள் என்றால் முதலில் இது வரும். இது கலந்தவுடன் மறுபடியும் கலக்கங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்றால் அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த விஷத்தோடு கலந்து மறுபடியும் இடைஞ்சல் செய்தவன் உணர்வுதான் நினைவுக்கு வரும்.

ஆகையினாலே அதை மறக்க அந்த மகரிஷிகளை எண்ணி
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும்
2.நாங்கள் நினைக்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
3.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று தவம் இருங்கள்.

இதை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் குருநாதர் எமக்கு (ஞானகுரு) எந்த முறைப்படி சக்திகளைக் கொடுத்தாரோ அதே முறைப்படித்தான் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின்பால் செலுத்தச் செய்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயங்களுக்குச் சென்றாலும் அல்லது உறவினர் நண்பர்களுடைய குடும்பங்களுக்குச் சென்றாலும் அங்கே போய் அமர்ந்தவுடனே நாம் களைப்பால் “உஷ்ஷ்…ஷ்ஷ்.. அப்பா…! என்று பெரு மூச்சையும் சோர்வையும் வெளியிடுகின்றோம்.

அப்போது நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் அதை எடுத்து,
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ச்சியின் நிலைகள் இங்கே வளர வேண்டும்
3.இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல நாம் கடைப்பிடித்து நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திடும் நிலை பெற நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்…!”

குரு பலம் பெறும் வழி

நாம் அனைவரும் துருவ நட்சத்திரமாக ஆக வேண்டும்

புருவ மத்தி வழியாக யாம் கொடுக்கும் உயர்ந்த சக்தி

உறுப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய சக்தி – குருவின் பாதுகாப்பு

சொல்வது சாதாரணமாகத் தெரியலாம்… ஆனால் உண்மையை அனுபவித்துச் சொல்கிறேன்

சக்கரத்திற்கு முன் நின்று நாம் சொல்ல வேண்டியது

அருளைப் பெருக்கி இருளை அகற்றிப் பொருள் காணும் கூட்டமைப்பு

உங்கள் உயிரை எண்ணிச் சதா தியானமிருக்கின்றேன்

இந்தத் தியான வழியில் நாம் பேணிக் காக்க வேண்டியது

அகண்ட அண்டத்தை முழுமையாக அறியும் பயிற்சி தியானம்

கேள்வி பதில் – எனது பிரார்த்தனை

மூலக்கூறுகள் மூலக்கூறுகள்

மூலாதாரத்தில் மூண்டெழும் கனல்

குரு வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டியது

எனது சுயநலம்… பொதுநலம்… பேராசை…

மெய் ஒளியைத் தான் நான் நாடினேன் என்றார் குருநாதர்

குரு அருள் – திரு அருள்

சாமி சொன்ன வழியில் நம் பார்வையால் தீமைகள் போக வேண்டும்

குருநாதர் தான் பேசுகின்றார்

எமது உபதேசங்களை எழுத்து வடிவுக்குக் கொண்டு வாருங்கள்

நீங்கள் ஒளியாக வேண்டும் என்பது தான் என்னுடைய பிரார்த்தனையே

அண்டத்தில் இருப்பதை இந்தப் பிண்டத்தில் காட்சியாகக் காண முடியும்

குருநாதர் எனக்குக் கொடுத்த வரம்

குரு பூஜை விழாவின் விளக்கம்

குருநாதர் ஒவ்வொரு நிலைகளுக்கும் சூட்சமமாக பல விளக்கங்கள் கொடுப்பார்

12 மாத காலத்தையும் வீணாக்காது அருள் ஒளியை மக்களைப் பெறச் செய் என்றார் குருநாதர்

குருநாதர் தன் மனைவியுடன் விண்ணுலகில் வாழும் நிலை

குருதேவரிடம் எதைக் கேட்க வேண்டும் ஆனால் எதைக் கேட்டார்கள்…?

குருநாதர் கொடுக்கும் ஞானப் பொக்கிஷம்

அருள் ஞானத்தை அனைவரையும் பெறச் செய்து பேரானந்தப்பட வேண்டும் என்று சொன்னார்

குருநாதர் எமக்கு உபதேசம் கொடுத்த முறை

குருநாதரை அணுகிய சிலர் தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

குருநாதர் என்னிடம் வேதனைப்பட்டுச் சொன்னது என்ன…?

குரு சூரியனாக இருந்து அவர் பெற்ற உணர்வைப் பெறும்படி செய்தார்

குருநாதர் கொடுக்கும் அண்டத்தின் உணர்வுகள் அளவு கடந்த நிலைகளில் உண்டு

குருநாதர் எனக்கு விண்ணின் நிலைகளைக் காட்டிய முறை

உங்களிடம் தான் நான் வரம் கேட்கின்றேன்

யாம் தொட்டுக் காட்டவில்லை என்று சிலர் எண்ணுகின்றார்கள்

நான் எத்தனையோ மோசமான ஆள் தான்… ஆனால் என்னைக் குருநாதர் ஆயுள் மெம்பராக இணைத்துக் கொண்டார்

பிரசாதத்தில் கொடுக்கும் காசை வைத்து உங்களுக்குச் சக்தி இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்

குரு பூஜை அன்று ஒரு ஆவி பிடித்த பெண்ணை ஃபோன் மூலம் குணப்படுத்திய நிலை

மூன்றாவது வகுப்பு படித்த என்னால் எப்படி ஞானம் பேச முடிகின்றது

குருநாதர் (engineer) அருளால் இந்த உடலைக் காத்து உயர்ந்த உணர்வைக் கவரும் நிலை

உங்களிடமிருந்து தான் நான் சக்தியைக் கூட்டிக் கொள்கிறேன் – குரு காட்டியது

நான் பேசவில்லை, நாடாவில் பதிவானது போல் பதிவான குரு உணர்வே பேசுகின்றது 

சிறிது நாள் பழகிக் கொண்டால் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற முடியும்

எமது குரு அருளை உங்களிடம் காண விரும்புகின்றேன்

குருநாதர் கொடுத்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் கொடுத்துள்ளோம்

நான் படிக்காதவன் ஜீரோ (zero)  – குரு உணர்வு இயக்குகின்றது…! படிக்காத மற்ற ஞானிகள் யார்…?

மிக உயர்ந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கொடுக்கின்றோம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சரித்திரம்

ரிக் வேதத்தை சுருதி சுத்தமாகப் பாடிக் காட்டினார் குருநாதர் 

ரிக் வேதத்தை மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் நிதர்சனமாக உணர்த்தினார் குரு

குருநாதர் ஏன் பைத்தியமாக இருந்தார் – விளக்கம்

குருநாதர் யார் என்று கேட்டேன்…? நீ சீக்கிரம் தெரிந்து கொள்வாய் என்றார்

ஆசீர்வாதம் செய்யும்போது காசு எதற்காகக் கொடுக்கின்றோம்

தீமைளிலிருந்து விடுபடும் மக்களை வாக்கின் மூலம் உருவாக்கு என்றார் குரு – நோயை நீக்கி அல்ல

அண்டத்தையே அலசி சக்தி கொடுக்கின்றோம், நீங்களும் அண்டத்தை அலசி எடுக்க முடியும்

உயிரை எல்லோரையும் மதிக்கும்படி செய் என்றார் குருநாதர்

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சிக்குக் காசோ பணமோ செலவு இல்லை

நல்ல நேரம் கெட்ட நேரம், குரு அருளை யாம் கொடுக்கும் வழியும் மற்றவர்கள் கொடுக்கும் வழியும்

உபதேசத்தை யாரும் கேட்கவில்லை என்ற வேதனை கூடாது என்றார் குருநாதர்

குருநாதர் சொல்வதை யார் சீராகக் கடைப்பிடிக்கின்றார்களோ அவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

குருநாதர் எனக்கு எந்த மாதிரி இடத்தில் வைத்து உபதேசம் கொடுத்தார்

பல ஞானிகளின் அலைவரிசைகளைக் கொடுக்கின்றோம், TV போன்று திருப்பி வைத்துக் கொள்ளுங்கள் 

செடிகளின் தூரைக் கிளறி உரம் வைப்பது போல் அருள் உணர்வை இணைக்கின்றோம்

நான் உங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு 

ஞானிகளின் உணர்வை இணைத்து எலெக்ட்ரானிக் கன்ட்ரொல் போல் தீமைகளைத் தடுக்கமுடியும்

உங்களுக்குள் அருளைப் பாய்ச்சும் பொழுது கதவை மூடிக் கொண்டால் என்ன ஆகும்

உங்களைச் சுற்றியிருக்கும் தீமைகளை அகற்றவே உபதேசிக்கின்றோம்

குருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை

குரு அருள் பெறும் வழி

நாம் படித்துவிட்டு வந்து உபதேசிக்கவில்லை

ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கும் முறை

எல்லோருக்கும் பொருந்தும்படியான உபதேசமாக எப்படி எம்மிடமிருந்து வருகிறது…?

அருள் வாக்கு வாங்கும் முறை

நாம் போகும் பாதையில் இடைமறிக்கும் நிலைகளைத் தடுத்துப் பழக வேண்டும் – அத்தடிபாட்சா

சாமி சொன்னார் நடக்கவில்லை என்பார்கள், அந்தப் பக்குவம் எது 

சாமி பெற்ற சக்தியை நம்மால் பெறமுடியுமா என்று எண்ணுவார்கள்

குருநாதர் கொடுத்த சக்தி சரியா தப்பா என்று அறிந்த பிற்பாடு தான் அதைக் கொடுக்கின்றோம் 

குரு துணையில்லாது விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது 

குரு அருளால் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்

வியாழன் கோள் – உயிர் குரு – முருகன் குமரகுரு

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்ற குரு அருளை நாம் பெறுவோம்

தபோவனத்தில் தியான வழி அன்பர்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்

தபோவன எல்லைக்குள் வந்தாலே உங்கள் தீமைகளும் நோய்களும் அகலும்

குரு பீடத்தின் சூரியனைப் பார்த்துத் தியானித்து அனைவரையும் அதைப் பெறச் செய்யுங்கள்

தபோவனத்திற்குள் வந்தால் எப்படி இருக்க வேண்டும்…?

குரு பீடத்தைப் பார்த்துத் தியானியுங்கள், தீமைகள் அகலும்

கல்வி இல்லாதவருக்குப் பள்ளி என்பது போல் அருள் ஞானத்தைப் பெறுவதற்குத்தான் தபோவனத்திற்கு வருகின்றீர்கள்

மாமகரிஷிகள் காட்டிய வழியில் புதிய பூமி

நேற்றுச் சொன்னதைத்தான் சாமி சொல்கிறார் – கோவிலுக்கோ படிப்புக்கோ அப்படி எண்ணுகிறார்களா…?

சாமியிடம் விபூதி வாங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் சொல்வதைச் செய்வதில்லை

சாமி சொல்வது மிகவும் அற்புதம் என்று போற்றிவிட்டு சொன்னதைச் செய்யவில்லை என்றால் பலன் இல்லை

சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் போரடிக்கிறது என்கிறார் ஒருவர்

உங்கள் உணர்வுகள் மாறினாலும் அதை அருள் வழியில் திருப்பவே உபதேசிக்கின்றோம்

திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம் – என்னாலே திரும்பச் சொல்ல முடியாது – உணர்வின் நினைவாற்றல்

யாம் (ஞானகுரு) உபதேசம் எப்படிச் செய்கின்றோம்…?

என்னைப் பற்றி (ஞானகுரு) யாரும் தவறாகச் சொன்னால் அதை எடுப்பதில்லை

படிக்காதவன் தான் நான் சொல்கிறேன்

உங்களுக்கு யாம் நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி

ஞானகுரு மவுன விரதம் தீமைகளை கேட்காமல், பேசாமல் இருப்பது

சொல்லித் தரும் ஆசிரியரே எல்லாவற்றையும் நமக்குச் செய்து தருவாரா…?

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

third-eye-crystals

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

முந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து… அதற்கு என்று ஒரு கம்பியை வைத்து லேசாகத் தட்டினால் வெடிக்கும்.

ஏனென்றால் கந்தகத்தின் அழுத்தம் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய நிலைகள். கந்தகப் பாறைகள் எங்கிருக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் தண்ணீர் மேலே ஓடி வந்தால் நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) அது சுடு தண்ணீராக வரும்.

சுடு தண்ணீர் வருவதை முதன் முதலில் பம்பாயில் இருக்கும் கணேசபுரியில் தான் பார்த்தோம். நித்யானந்த சாமிகள் அங்கே ஒரு குகையில் சமாதியாகி உள்ளார். அந்த குகைக்கு நடந்து எல்லாம் போக முடியாது. படுத்துக் கொண்டே தான் போக முடியும்.

புலி போன்ற துஷ்ட மிருகங்கள் வராதபடி படுத்துக் கொண்டே குகைக்குள் சென்று பின் கல்லைக் கொண்டு மூடி மறைத்துக் கொள்வது. அங்கே உட்கார்ந்து தியானம் செய்வது என்ற நிலைகள் இருந்ததை எல்லாம் அங்கே போய்ப் பார்த்து விட்டு வந்தேன் (ஞானகுரு).

அங்கே சுடு தண்ணீர் கிணறு ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கத்தில் பாறை மேலிருந்து தண்ணீர் வருகிறது.

எந்த இடங்களில் எல்லாம் கந்தகப் படிவம் உள்ளதோ அங்கே பச்சைத் தண்ணீர் ஓடினால் தண்ணீரின் சூடு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சுற்றுப் பயணத்தில் குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) என்னை வலுக்கட்டாயமாக போகச் சொன்னார்.

இப்படி அந்தச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். வீட்டிலேயும் சரி என்னைப் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் சரி எல்லோரும் என்னை வெறுக்கும் நிலையை உண்டாக்கி என்னை விரட்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்.

1.போகிற போக்கிலே எல்லாம் ஆசையை ஊட்டி
2.சரி… இதைப் பெருக்கலாம்..! இதைச் செய்து அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்…! என்ற எண்ணம் வருகிறது.
3.இப்படி ஒவ்வொரு எண்ணங்களை நான் எண்ணினாலும் என்னைத் துரத்தி விட்டு கொண்டிருந்தார்.
4.எல்லாமே தனியாகத் தான் சென்று அனுபங்களைப் பெற்று வந்தோம். யாருடைய உதவியும் இல்லை.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார். அங்கே மலை மேலே ஒரு ஊற்று வருகிறது… அதை நீ போய்ப் பாருடா..! என்று சொன்னார். அங்கே போனேன்.

பார்த்து விட்டுக் கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பெரிய சூறாவளி வந்தது. ஏற்கனவே நாராயணசாமி அவர்கள் பம்பாய் செல்வதற்காக ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணத்தில் குடை வாங்கி வைத்திருந்தேன். காட்டிற்குள் செல்லும் பொழுது லேசாக தூறல் வந்தால் பிடித்து கொள்ளலாம் என்று இது “என்னுடைய ஆசை…!”

மலை மேலே ஏறிவிட்டு இங்கே வந்தேன். கீழே வரும் போது காற்றும் புயலுமாக வந்தது. விரித்த குடையைக் காணோம். கம்பி தான் என் கையில் இருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று.

சூறாவளிக் காற்றில் மரங்கள் எல்லாம் சட…சட…! என்று தாவுகள் எல்லாம் முறிந்து ஓடுகிறது. அப்போது மரத்தின் பக்கம் நான் போனால் ஆபத்து இருக்கிறது.

காற்று எப்படி அடிக்கிறது…? என்று அந்த நேரத்தில் ஒரு சிந்தனை வருகிறது. கூந்தப் பனை என்ற மரம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலும் கீழே அறுந்து விழாது. பறந்து கொண்டே தான் இருக்குமே தவிர ஒடியாது. ஏனென்றால் அதில் நார் பிடிப்பு அதிகமாக இருக்கும்.

காற்று என்னையவே அப்படியே தூக்குகிறது. அவ்வளவு புயல். ஓடிப் போய் என்ன செய்தேன்…? கூந்த பனையில் காற்றடிப்பதற்கு நேராக நின்று கொண்டேன். சாய்ந்தால் நம்மை அமுக்கி விடும்.

காற்றடிப்பதற்கு நேராக ஒரு வேளை அது சாய்ந்தாலும் கூட நாம் அப்படியே இருந்து கொள்ளலாம். “நம் மேலே விழாது…!” என்று இத்தனை சிந்தனையோடு அதைச் செய்தேன்.
1.அந்த இடத்தில் உணர்ச்சியை ஊட்டுகிறார்
2.நான் அல்ல…! குருநாதர் அந்தக் குரு வழியில் இதைக் கொடுக்கிறார்.

பார்த்தோம் என்றால் மற்ற மரத்தின் தாவுகள் எல்லாம் ஒடிந்து வந்து நான் நிற்கிற கூந்த பனையில் அடித்து அங்கே மேலே வரிசையில் அடுக்குகிறது.

ஆனால் கூந்தப் பனையில் மேலே உள்ள ஓலைகள் விழவில்லை. அது அப்படியே இருக்கிறது. மற்ற மரங்களின் தாவுகள் இதன் மீது ஒரு இரண்டு மூன்று அடித்து அடித்து சொத்…சொத்…! என்று கீழே விழுகிறது.

நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். என் மேல் விழுகவில்லை. அடி மரம் நன்றாகப் பருத்து வலுவாக இருக்கிறது மேலே ஒல்லியாக இருக்கிறது.

அந்த அடி மரத்தில் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். உட்கார்ந்து கொண்டு “ஈஸ்வரா… குருதேவா…! “ஈஸ்வரா… குருதேவா…!” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

இவ்வாறு அனுபவரீதியில் கடுமையான புயலைச் சந்தித்தாலும் மரங்கள் எல்லாம் ஒடிந்து போனாலும்….
1.ஆனால் குரு என்ன செய்கிறார்..?
2.இந்த இடத்தில் சிந்திக்க வைக்கிறார்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்திருக்கிறார். அந்த ஆற்றல்களைத் தனக்குள் பேரொளியாக உருவாக்கினார்.

அவர் வழியில் நாம் என்ன செய்கிறோம்…? அந்தத் துருவ நட்சத்திரத்தோடு குரு வழியில் இணைகிறோம். அதற்காக வேண்டித்தான் என்னை இப்படியெல்லாம் அனுபவம் பெறச் செய்தார்.
1.கண்ட அனுபவத்தை இங்கே விளைய வைத்துக் கொண்டிருக்கிறேன்.
2.இதை வித்தாக எடுத்து உங்களுக்குள் முளைக்க வைக்கின்றேன்.

இதை எடுத்து நீங்கள் வளரக்கூடிய பக்குவத்தில் ஒவ்வொரு நேரத்திலும் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் பல வகையிலும் சொல்கிறேன்.
1.இதையெல்லாம் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொடுக்க முடியாது
2.வாக்காகத் தான் (சொல்) கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே என்னிடம் வாக்கு வாங்கியவர்கள் எத்தனை பேர் வளர்கிறார்கள்…? எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது..? இன்னொரு சாமியாரைப் பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.

அல்லது இங்கே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். மிகவும் எளிதாகக் (CHEAP) கொடுப்பார்கள் என்று அங்கே சென்று விடுவார்கள். ஜோசியக்காரரையும் தந்திரக்காரர்களையும் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கம் போவார்கள்.

1.ஆகவே என்னிடம் கேட்ட வாக்கின் நிலைகள் என்ன செய்கிறது…?
2.உறுதிப்படுத்தும் உணர்வுகள் இங்கே இல்லாமல் போய் விடுகிறது.

இதுவரைக்கும் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட நீங்கள் கேட்கலாம்.

1.உறுதியில் இது தேர்ந்தெடுத்து
2.சல்லடை போட்டுச் சலித்து எடுக்க வேண்டும்.
3.உறுதி கொண்ட நிலையில் எப்படி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்…?
4.இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைவது எப்படி…? என்ற
5.இந்தச் சிந்தனையைத் தூண்டும் உணர்வு உள்ளவர்கள் தான் இங்கே வரவேண்டும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

அந்த உறுதி பெறச் செய்யும் நிலைக்காகத்தான் தான் அனுபவ வாயிலாகப் பெற்றதை உங்களிடம் அந்த ஒவ்வொன்றையும் சொல்லி அந்த ஒவ்வொரு உணர்வாகக் கொண்டு வருவது.

காரணம் நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். தனுஷ் கோடியில் என்ன செய்கிறார்கள்…? உலகம் முழுவதும் சுற்றி விட்டு இங்கே இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஏன்…?

இராமன் என்ன செய்கிறான்…? நேரம் ஆகி விட்டது…! என்று மணலை எல்லாம் கூட்டுகிறான். சிவலிங்கத்தை உண்டாக்கிப் பூஜையை ஆரம்பித்து விடுகிறான். அப்படி என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உடலில் ஒவ்வொரு நிமிடத்திலும் தீமை என்ற உணர்வு வரும் போது அந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிட அருள் உணர்வை எடுத்து ஒவ்வொன்றையும் நல்லதாக மாற்றி நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து கொண்டே வருகிறோம். இது தான் தனுசு கோடி.

1.கோடிக்கரையில் இருந்து கொண்டு கடைசி நிமிடத்தில்
2.அன்றைக்கு… ஒரே நாளில் எல்லாத் தீமைகளையும் நீக்க முடியாது.

வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள் சலிப்புப் படுகிறார்கள் என்றால் அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குள்ளும் இதைப் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சை எல்லாம் வேக வைத்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வை ஒவ்வொருவரும் எடுத்து நம் மனதைக் குவித்து எண்ணங்களை ஒன்றாக்கி இராமலிங்கமாக அழியாத வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அகஸ்தியன் “27 நட்சத்திரத்தின் சக்தியை” ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…?

dippers

அகஸ்தியன் 27 நட்சத்திரத்தின் சக்தியை ஏன் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டான்…?

 

இயற்கையின் இயக்கத்தின் பல உண்மைகளை அறிந்த அகஸ்தியன் தாவர இனங்களின் உணர்வையும் முழுமையாக அறிகின்றான். பச்சிலைகளைச் சாப்பிடும் போது உடலிலிருந்து அந்தப் “பச்சிலைகளின் மணம் தான்…!” வருகின்றது என்று அறிகின்றான்.

எந்தெந்தப் பச்சிலைகளை வெள்ளாடு சாப்பிடுகிறதோ அதே போல் மான் சாப்பிடுகிறதோ அதற்குத்தக்கவாறு அதனதன் உடல்களிலிருந்து மணங்கள் வருகிறது.

அந்த மணம் வரப்படும் பொழுது அந்த மானையோ ஆட்டையோ கொன்று பிற மிருகங்கள் அதைச் சாப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை தான் அதன் உடலுக்குள்ளும் சேருகிறது.

அதாவது எதை அதிகமாக நேசித்துச் சாப்பிட்டதோ அதையே தான் தேடும். உதாரணமாக ஒரு புலி மான்களை அடித்துச் சாப்பிட்டது என்றால் அந்த மானைத் தான் அதிகமாகச் சாப்பிடும்.

ஒன்றை ரசித்துப் புசித்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டபின் அந்த அணுக்கள் தான் அங்கு அதிகமாக வளரும். ஆகவே தான் புலி மானை அதிகமாக அடித்துச் சாப்பிடுகிறது. புலி மற்றொன்றைக் குறி வைத்த நிலைகள் இருந்தாலும் அந்த உணவைத் (மானைத்) தேடியே போகும்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசி இருக்கிறது. அந்த மொக்கை அரிசியைத் தான் அவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
1.அந்த மொக்கை அரிசியை நம்மைச் (தமிழ் நாட்டில்) சாப்பிடச் சொன்னால்
2.இந்த மொக்கை அரிசியை யார் சாப்பிடுவது என்கிறோம்…?
3.நாம் இங்கே சாப்பிடக்கூடிய நைஸ் (சன்னமான) அரிசியை அவர்களைச் சாப்பிடச் சொன்னால்
4.இதை யார் சாப்பிடுவார்கள்…? என்று அவர்கள் (கேரளா) கூறுகிறார்கள்.

இவையெல்லாம் அந்தந்த உணர்வுகொப்ப வலிமை கொண்ட உயிரினங்கள் மற்ற சாந்தமான உயிரினங்களைக் கொன்று புசித்தாலும் எல்லாவற்றையும் அது தாராளமாகச் சாப்பிடுவதில்லை. தன் உணர்வுகொப்ப தான் உணவை எடுக்கும்.
1.மற்ற உணவுகள் இருந்தாலும் அவற்றை முகர்ந்து பார்த்துவிட்டுப் போய் விடும்.
2.அதற்குப் பிடிக்கவில்லை என்றால் மற்றொன்றை – அது எதைக் குறி வைத்து தாக்கியதோ அதைச் சாப்பிடும்.
1.இதைப்போல இயற்கையின் நியதிகளை அதனதன் உணர்வுகொப்பத் தான் இந்த இயக்கத்தின் நிலைகளே மாறுகிறது என்பதை அகஸ்தியன் அறிந்தான்.

வெள்ளாடுகளைப் போல நாமும் பச்சையாகக் காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பித்தோமானால் இப்போது மனிதனாக இருக்கும் நமக்குள் வெள்ளாட்டின் உணர்வுகளின் அணுக்கள் தான் சேரும். வெள்ளாட்டின் ஈர்ப்புக்குள் நாம் போய்ச் சேருவோம்.

மான் அது எதை எதையெல்லாம் சாப்பிடுகிறதோ அதன் உணர்வு கொண்டு அந்தப் பச்சிலைகளை நாம் சாப்பிட ஆரம்பித்தால் (வேக வைக்காமல்) சாப்பிட்டால் அதன் நிலைக்கே போவோம்.

குரங்கினங்களை எடுத்துக் கொண்டால் அது மனித இனமாக இருக்கும். எந்தெந்தப் பச்சிலைகளை அது உணவாக உட்கொள்கிறதோ அதன் மணம் வந்தால் அதன் ஈர்ப்புக்குள் சென்றுவிடும்.

இன்று மனிதனாக உருவாக்கிய பின் “நமது மாற்றங்கள் இப்படித் தான் இருக்கும்…!” என்ற நிலைகளை தெளிவாக அறிந்து உணர்ந்தவன் அகஸ்தியன். அதனால் உணவை வேக வைத்து அது மீண்டும் முளைக்காத நிலையிலே செய்து சாப்பிட்டான் அந்த அகஸ்தியன். “அவனுடைய வளர்ச்சி இது…!”

1.அகஸ்தியன் தன் வாழ்நாளில் உணவை வேக வைத்துச் தான் சாப்பிடுகிறான்.
2.உணவை வேக வைத்துச் சாப்பிட்ட பின் இறந்தால்
3.மறு பிறவிக்கு – அதாவது மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் போக முடியாது.

ஏனென்றால் அன்று அகஸ்தியன் வாழ்ந்த இடங்களில் உணவுக்காக மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவது அந்த மலைவாசிகளுக்குச் சர்வ சாதாரணம்.

ஆகவே மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிட்டு வந்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு சென்றால் மீண்டும் பிறவிக்குச் செல்வோம்…! என்று தெளிவாக உணர்ந்து கொண்டான்.

ஆகவே இதை வெல்வதற்காக அன்று அகஸ்தியன் என்ன செய்தான்…?

27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் மோதும் போது ஒளிக் கற்றையாக மாறி உணர்வின் அணுக்கள் மின் அணுக்களாக மாறும். அதை எடுத்தோம் என்றால் இதை எல்லாம் வேக வைக்கலாம்…! என்று அறிகின்றான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…?

நட்சத்திரங்களின் ஆற்றல்கள் மோதி மின்னல்களாக வரும் பொழுது அந்த ஒளிகளை வெள்ளிக் கோள் எடுக்கிறது. “பளீ….ர்ர்ர்…! என்று மின்னல் வருவதை எல்லாம் அந்த வெள்ளிக் கொள் உணவாக எடுக்கிறது. அதே சமயத்தில் மோதியவுடனே விஷம் பிரிந்தே தீரும்.

வீட்டில் விஷமான காய்கறிகளை வேக வைத்துப் பாருங்கள். இந்த விஷம் பிரியும். விஷம் பிரிந்த உடனே என்ன செய்கிறது…?
1.காற்றிலுள்ள எந்த விஷத்தின் தன்மை தாக்கியதோ
2.இதைப் பிரித்துத் தன்னோடு சேர்த்து அது வளர்த்துக் கொள்ளும்.
3.சூரியன் இந்த விஷத்தின் நிலைகளை எடுத்திருந்தால் அதனின் சத்தைப் பிரித்து அதனுடன் இணைக்கும்.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் காட்டுக்குள் கொண்டு போய்க் காட்டுகிறார். பெற்ற அனுபவத்தை எல்லாம் நீங்களு பெற வேண்டும் என்பதற்காகத்தான் (ஞானகுரு) இதைச் சொல்கிறேன்.

இவற்றைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் அதனால் தான் உணவை வேக வைத்துச் சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிறான்.

மாமிசங்களை வேக வைத்தாலும் என்ன நடக்கிறது…? அதை வேக வைத்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சாறுகளை சூரியன் கவரும். சூரியன் எவ்வழியில் கவர்கிறது…?

எந்தெந்த செடியின் சத்தைக் கவர்ந்து இந்த உடலானதோ அதேபோல இது வெளிப்படும் போது சூரியன் எந்தெந்தச் செடியின் சத்தை எடுத்ததோ அதை இது கவர நேர்கின்றது.
பலவிதமான செடியின் தன்மை வரப்படும் போது
1.இந்த வெள்ளாட்டின் குணங்கள் எப்படி இருக்கின்றதோ
2.இதையும் சேர்த்து ஒரு புது விதமான செடி வரும்.

அதே போல புலிகள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் இது உடலிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையையும் சூரியன் எடுத்துக் கொள்ளும்.
1.இந்தப் புலி இது எதையெல்லாம் கொன்றதோ
2.இதைப் போல மற்ற உயிரினங்களின் சத்தை இது கவர்ந்து வைத்திருந்தால்
3.இதைச் சேர்த்து ஒரு புது விதமான உணர்வை எடுக்கும்.

அதாவது அப்போது தாவர இனங்களின் சத்தும் மிருகங்கள் கொன்று பூசித்த உணர்வும் ஒன்றாகப்படும் போது இந்த உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதி மீண்டும் தாவர இனங்களாக மாறும்.

அப்படி உருவாகும் பொழுது…
1.இரத்தம் உறியக்கூடிய தாவரமு…ம் ஒன்றுகொன்று கொன்று புசிக்க கூடிய நிலைகளும்
2.சாப்பிட்டதும் கொல்லக்கூடிய விஷமான தாவரங்களும்
3.இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருவாகின்றன என்பதை அகஸ்தியன் தெளிவாக உணர்கிறான்.

ஆகவே இத்தகைய விஷத் தன்மையை எல்லாம் வெல்வது எது…? என்ற நிலையில் தான் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டான்.

27 நட்சத்திரத்தின் சக்தியை அப்படி எடுத்த அந்த அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்த ஆற்றலை நாம் பெற்றால்
1.நாமும் ஒரு ஒளியான நட்சத்திரமாக
2.துருவ நட்சத்திரமாக நிச்சயம் ஆக முடியும்.

அகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…?

Kalyana Teertham Papanasam

அகஸ்தியனுக்குச் சர்வ வல்லமையும் எப்படிக் கிடைத்தது…?

 

ஆதியிலே விஷத்தின் இயக்கம் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தோன்றும் மோதலின் தன்மையை முதன் முதலில் அறிகிறான் அகஸ்தியன். அதே சமயத்தில் நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது “உயிர் உருவானது…!” என்றும் அறிகின்றான்.

இதை எல்லாம் எப்படி அறிந்தான்..?

தாய் கருவிலேயே அவனுக்குள் விளைந்த ஆற்றல்களால் தான் அவனால் அறிய முடிந்தது. அகஸ்தியனின் தாய் பல விஷ ஜந்துகளிடமிருந்து தான் தப்பிக்கும் உபாயங்களைக் கண்டு பல விதமான பச்சிலை மூலிகைகளை உபயோகப்படுத்தியது.

பாம்பு யானை தேள் கொசு போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மூலிகைகள் உண்டு. அதன் மணத்தைக் கண்டதும் அவைகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும்.

உதாரணமாக நாம் இன்று கொசுவர்த்தியைப் பொருத்தி வைக்கிறோம் என்றால் அந்த வாசனை இருக்கும் வரை அங்கே கொசு வருகிறதோ…? இல்லை. ஆனால் கொசு சாவதில்லை.

சாகும் நிலை வந்தால் என்ன ஆகும்…? நம் உடலில் கொசு கடித்து உருவான பல அணுக்கள் உண்டு. அந்த அணுக்கள் இருந்தால் விஷத்தால் அது மடியும் போது விஷமான அணுவாக நம் உடலுக்குள் மாறும். குளவி கொட்டினால் எப்படியோ அதே போல நமக்குள் மாறும். இயற்கையின் நியதி இது.

எப்படிப் பார்த்தாலும் இது உடலுக்குள் மாற்றும். ஆனால் அத்தகைய விஷத்தை எல்லாம் வென்றவன் எவனோ… அவன் உணர்வை எடுக்க வேண்டும்…! அதை எடுக்கத் தவறினால் நமக்குள் மாற்றம் தான் ஆகும்.

அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல விதமான பச்சிலைகளைத் தன் குகைப் பக்கம் போட்டு வைக்கின்றார்கள்.
1.இதை நுகர்ந்த மிருகங்கள் விலகிச் செல்கிறது… மடிவதில்லை…
2.அந்த விஷத்தின் ஆற்றல் தணிகிறது.

ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (தேய்க்கக் கூட வேண்டாம்) தேளைக் கையில் விட்டால் கொட்டவே கொட்டாது. வாலை அப்படியே சுருட்டிக் கொள்ளும். ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டு சுளுக்கு எறும்பு நம் மீது ஏறினால் அது நம்மைக் கடிக்கவே கடிக்காது.

ஆனால் சும்மா இருக்கும் பொழுது சுளுக்கு எறும்பு நம்மைக் கடித்தால் கடித்த இடம் அப்படியே வீங்கிவிடும். அந்தப் பச்சிலை வாசனை இருந்தது என்றால் அது நம்மை கடிக்காது.

ஒரு நூறு சுளுக்கு எறும்பு ஒருவரைக் கடித்தால் மரணமே ஏற்படும் அபாயம் உண்டு. விஷம் பரவி விடும். விஷத்தின் தன்மையை நாம் எண்ணும் போது மனிதன் நாம் அதற்கேற்றாற்போல் தான் அடுத்த உடலுக்குள் போகிறோம்.

இயற்கையின் நியதிகள் எத்தனையோ நிலைகளில் அதன் உணர்வுகள் இப்படி எத்தனையோ நிலைகளில் மாறிக் கொண்டிருந்தாலும்
1.இத்தகைய விஷத் தன்மையிலிருந்து மீளும் தன்மையை
2.அகஸ்தியன் தன் தாயிடமிருந்து கருவிலேயே பெற்றதால்
3.கருவிலேயே இரத்தத்தின் வழி நுகரப்படும் போது பலவிதமான சக்திகளை அவன் பெறுகின்றான்.

பிறந்த பின் விஷத்தின் ஆற்றல் தன் அருகில் வராதபடி அதன் இயக்கத்தை உற்று நோக்கும் உணர்வும்… அதை அறியும் பருவமும்… அவனுக்கு வருகிறது.

அந்த அகஸ்தியனின் உணர்வை நாமும் பெற்றால் அவனைப் போன்ற அகண்ட அண்டத்தின் ஞானமும் ஆற்றலும் அவனுடன் இணைந்து என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ முடியும்.

அதற்காகத் தான் இதைச் சொல்கிறோம்.