“படித்து” ஞானம் பெறவில்லை – குரு சொன்னதைப் “பதித்து” ஞானம் பெற்றேன்…!

Graduation and divine

“படித்து” ஞானம் பெறவில்லை – குரு சொன்னதைப் “பதித்து” ஞானம் பெற்றேன்…!

நான் (ஞானகுரு) படித்து வந்தவன் அல்ல.
1.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
2.பதிந்த நிலைகளை எடுத்து வளர்த்துக் கொண்டவன்
3.எடுத்துக் கொண்ட அந்த உண்மைகளை அறிந்து உணர்த்துபவன்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக அதைத்தான் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அந்த உண்மைகளை நீங்களும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அவைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வைப் பெற முடியும்.

உங்கள் பார்வையால் பிறருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்க வேண்டுமே தவிர
1.ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிலையைப் பார்த்து
2.என்னை இன்னுமா நீ சோதிக்கின்றாய்…! என்று சொல்வது போல்
3.உங்களைச் சோதனைக்கு ஆளாக்குவதற்கல்ல.

அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்திமானாக நீங்கள் மாற வேண்டும். இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும். (அல்லது அடக்க வேண்டும்.)

உங்கள் உடலுக்குள் மட்டும் தீமைகளை அகற்றுவதல்ல… இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மைகளையும் அகற்ற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் “தீமைகளை நீக்கும் வல்லவர்களாக…” ஆகிவிட்டால் இந்தப் பூமியில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை உங்கள் மூச்சலைகள் நிச்சயம் அடக்கும். நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

காற்று மண்டலத்தில் மாசுபடும் உணர்வுகளை மாற்றிவிட்டால் மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற அந்த உணர்வுகளுக்கு
3.அங்கே சென்று ஒளியின் உணர்வுகளாக அங்கே மீண்டும் அது பெருகும்.

இவைகளை எல்லாம் உங்கள் மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் இந்த உடலில் வாழ்வது என்பது சிறிது காலமே…!
1.அதற்குள் நாம் எடுப்பது….
2.எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்தியை
3.உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

இந்தக் குறுகிய காலத்தில் நாம் பேரின்பப் பெரு நிலையைப் பெற்று என்றுமே ஏகாந்த நிலை அடையும் அந்தப் பருவத்தைப் பெறவேண்டும் என்று தான் உங்களுக்கு இதைச் சொல்வது.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…! – திருமூலர் சொன்னது

siva-nataraj

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…! – திருமூலர் சொன்னது

“நெருப்பில் இருந்து தான் நீர் தோன்றியது…!” என்று திருமூலர் அன்று உணர்த்தினார்.

ஆதியிலே எதுவுமே இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தாலும் அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது வெப்பம் உருவாகின்றது,

வெப்பத்தால் ஒன்றுடன் ஒன்று வேக வைக்கும் பொழுது அந்தச் சத்துகள் இரண்டற இணைந்த பின் ஆவிகள் வெளிப்படுகிறது.

ஆவிகள் அடர்த்தியாகும் பொழுது மேகமாக மாறி மேகத்திற்குள் மாறுபட்ட ஆவிகள் மோதும் போது நீராக வடிகின்றது என்ற நிலையைத் தெளிவாகத் திருமூலர் உரைத்துள்ளார்.

நீராக மாறி அடை கூடி நகரும் பொழுது மற்றதைத் தனக்குள் கவர்ந்து மீண்டும் வெப்பமாகி அது உறையும் பொழுது ஒரு திடப் பொருளாகின்றது.

ஆதியிலே எல்லையே இல்லாத பரந்த வெளியில் முதன் முதலில் ஒரு திடப்பொருள் உருவாகும் பொழுது அது பரம் பொருளாகின்றது. பொருளுக்குள் உள் நின்று இயக்கும் சக்தியைப் “பரமேஸ்வரா…!” என்று அழைத்தார்.

திருமூலர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எல்லையே இல்லாத இடத்தில் பரம் பொருளாக (உலகம்) உருவாகின்றது. பெரிய கோளாக உருவாகும் போது இது சுழற்சியின் நிலைகள் கொண்டு நிற்காமல் ஓடுகிறது.

1.நிற்காமல் ஓடியதால் அதைத் “தில்லை நடராஜா…” என்று காரணப் பெயர் வைக்கின்றார்
2.அதாவது அது நிற்காமல் ஓடும் போது அரசனாக நின்று இந்த உலகை எவ்வாறு அது உருவாக்கியது என்ற நிலையை நிலைப்படுத்துகின்றார்.

அதிலே உருவான உணர்வின் தன்மை உயிரணு தனக்குள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப “தில்லை அம்பலத்தாண்டவா…”

1.உயிரினங்கள் தான் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப உரு அமைவதும்
2.அதற்கொப்ப அதனுடைய நாத ஒலிகளை எழுப்புவதும்
3.இந்த உணர்வுக்கொப்ப ரூபங்கள் அமைவதும்
4.அவைகளின் நடை உடை பாவனைகளைப் பார்த்து ஆயிரத்தெட்டு நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
5.அதுவே மனிதனுக்குள் வரும் போது நூற்றியெட்டு நடனங்களாக காட்டினார்.

நடனக் கலை என்று இன்று நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செய்தால் நடராஜர் நமக்கு ஏதோ செய்வார் என்று இப்படி சாங்கியங்களைச் செய்து வரம் கேட்பவர்களாகத்தான் இன்று இருக்கின்றோம்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

அந்த ஸ்தலத்தில் சிதம்பரத்திலிருந்து அதை நாம் பெறவில்லை. அங்கே நாம் பூஜை செய்வதும் அதனுடைய வாரிசுகளுக்குக் கொடுத்து விட்டு அருள் வாங்குவது என்ற நிலையில் தான் இருக்கின்றோமே தவிர திருமூலர் உணர்த்திய பேருண்மையை அறிவதற்கு இல்லை.

அவரின் வாரிசுகளாவது இன்று சீராக இருந்து அவர்களாவது அந்த உண்மையைப் பெற்று இருக்கிறாரா என்றால் இல்லை.

கிடைத்த மட்டும் லாபம் என்ற நிலையில் இந்த வாழ்க்கையின் நிலைகளைத்தான் ஓட்டுகின்றாரே தவிர அந்த மகா ஞானி திருமூலர் காட்டிய மெய் வழியைப் பின்பற்றவில்லை.

அவர் பிறவியில்லா நிலைகள் அடைந்தார். அதைப் பெற வேண்டும் என்ற நிலை இல்லை. ஏனென்றால் விஞ்ஞான அறிவால் மனிதனுடைய எண்ணங்கள் முழுவதும் அழியும் இத்தருணத்தில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

1.திருமூலர் காட்டிய நெறிகள் கொண்டு
2.மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த அந்த மகரிஷிகள் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நம்மைக் காக்க முடியும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும். பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும். என்று எண்ணி இந்த முறைப்படி தியானியுங்கள்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த ஆலயத்தில் தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

ஆண்டவனை நான் காணப் போகின்றேன் அவன் அருளை நான் பெறப் போகின்றேன் என்று இருப்பது தவம் அல்ல.

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டு இருப்பது உயிர். அது தான் தில்லை அம்பலத்தாண்டவா…!

1.ஆண்டவனாக இயக்கிக் கொண்டு இருப்பதும்
2.எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டு இருப்பதும்
3.உணர்வின் அணுவை உடலாக்கிக் கொண்டு சிவனாக்கிக் கொண்டு இருப்பதும்
4.சிவத்துக்குள் சக்தியாக்கி இயக்கிக் கொண்டு இருப்பதும் உயிரே.

ஆகவே அந்த உடலை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் போது அந்த ஆண்டவனின் அருளை நாம் பெற முடியும்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்று எண்ணினால் இது தவம். அந்த மகிழ்ச்சியின் தன்மை நமக்குள் போற்றும் நிலை வந்தால் அந்த தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம். ஆலயங்களில் இந்த முறைப்படி எண்ணிப் பெறுங்கள்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் இதைச் செயல்படுத்துவோம். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றுவோம். நமக்குள் அறியாது புகுந்த அந்த நஞ்சின் தன்மையை அதை வளராது தடுப்போம். உலக மக்களைக் காப்போம்.

அடுத்து வரும் சந்ததியினர் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஞானியருடைய உணர்வைப் போதிப்போம். அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்.

பிறந்த பின் உலகைக் காத்திடும் ஞானிகளாகக் காப்போம்… வளர்ப்போம்… அதைச் செயலாக்குவோம்… என்று “உறுதி கொள்வோம்…!”

சொர்க்க வாசல் எது…? வைகுண்டம் என்பது எது…? மோட்சம் என்பது எது….?

Vaikundam

சொர்க்க வாசல் எது…? வைகுண்டம் என்பது எது…? மோட்சம் என்பது எது….?

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் வடக்கு வாசலைத் திறந்த பின் சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து சாமிக்கு நல்ல சமையலைப் படைத்து பொங்கி வைத்து விட்டோம் என்றால் நமக்கு ஆண்டவன் சொர்க்கத்துக்கு வழிகாட்டுவான் என்று தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

இவை எல்லாம் நரக லோகத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகள், ஏனென்றால் இந்த உடலின் பற்று தான் வருகின்றது.

“உத்தராயணம்…” என்ற நிலையில் வடக்குத் திசையில் துருவத்திலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெற்று
1.நாம் பார்ப்போர் அனைவரது குடும்பங்களும் நலம் பெற வேண்டும்.
2.இந்தப் புவி முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் என்ற ஆசையில்
4.உயிருடன் ஒன்றி இதனின் உணர்வின் தன்மை வந்தால் இதுவே நம் உயிராத்மாவிற்குச் “சொர்க்கவாசலாக…” அமைகின்றது.
5.உடலை விட்டுச் சென்ற பின் அங்கே வைகுண்டம் அழைத்துச் செல்கின்றது.
6.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்
7.ஏகாந்த நிலைகள் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகள் மீது பற்றற்ற நிலையாக்கி நம் உயிரைப் பற்றுடன் பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் அது தான் “வைகுண்ட ஏகாதசி…!”

வைகுண்டம் என்பது சப்தரிஷி மண்டலம். பக்தி மார்க்கத்திலும் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இந்த உடலின் இச்சையின் நிலைக்கும் அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்ற நிலைக்குத் தான் செல்கின்றோமே தவிர
1.அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பின்பற்றவில்லை.
2.அதன் வழி நாம் செல்லவில்லை… செல்லவும் மனமில்லை…!
3.இன்று இதைச் சொன்னாலும் கேட்பதற்கு இல்லை…
4.அன்றைக்குச் செய்தவர்கள் எல்லாம் தவறா….?
5.இவர் மட்டும் என்னமோ புதிதாக வந்து சொல்கிறாரடா….! என்று தான் நினைப்பார்கள்.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் குடும்பத்தைச் சார்ந்தோர் எப்படி நினைக்க வேண்டும்…?

ஏகாந்த நிலைகளில் அவர் வாழ்ந்தார் வளர்ந்தார் எத்தனையோ இன்னல்கள் அனுபவித்தார்…!
1.உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.என்றென்றும் பேரின்பப் பெரு வாழ்வாகப் பேரானந்த நிலை அடைதல் வேண்டும் என்று
4.உந்தி அங்கே விண்ணிலே செலுத்த வேண்டும் என்றுதான் நம் ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இன்று என்ன செய்கிறோம்..? இறந்த உடலைக் கொண்டு எரித்து விட்டு சாம்பலைக் கொண்டு ஆற்றிலே கரைத்து விட்டால் பாவம் போய்விடும்.

அடுத்து இந்தச் சாம்பலைக் கொண்டு போய் கங்கையில் கரைப்பதற்குப் போவார்கள். கங்கையில் கரைத்ததும் கடலில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால் அவர் பாவம் போய்விடும் என்ற இந்தப் பதிவு தான் மனதில் இருக்கிறது.

தலைமகன் விநாயகர் கோவிலில் தீபத்தை ஏற்றிவிட்டால் அவர்கள் மோட்சம் போய் விடுவார்கள். இப்படித்தான் செய்கின்றோம்.

கங்கையில் கரைக்கச் சொன்னதன் நோக்கம் என்ன…?

“ஒளி கங்கை…!” அதாவது அங்கே விண்ணிலே சப்தரிஷி மண்டல ஒளிக்கடலில் அந்த உயிரான்மாவைக் கலக்கச் செய்து
1.மீண்டும் இருளான இன்னொரு உடலைப் பெறும் உணர்வினைக் கரைக்க வேண்டுமே தவிர
2.உடலை எரித்து அந்தச் சாம்பலை இங்கே கரைப்பது அல்ல.

ஞானிகள் சொன்ன பேருண்மைகளைச் சொன்னாலும் ஏளனமாகவே பார்க்கின்றார்கள். இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

ஆகவே யார் உடலை விட்டுச் சென்றாலும்
1.குடும்பத்தில் உள்ளோர் பாசத்தால் அழுது புலம்பி
2.உங்கள் உடலுக்குள் அந்த ஆன்மாவை இழுத்து விடாதீர்கள். (இது முக்கியம்)
3.அவர்கள் ஆன்மாவை மெய் ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்.

மூதாதையர்களான குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்தில் கலக்கச் செய்து இந்த வாழ்க்கையில் பட்ட துன்பத்தின் உணர்வுகளை அங்கே கரைக்கச் செய்து அருள் மகரிஷியின் உணர்வை நுகரச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் மரணமில்லாப் பெருவாழ்வு என்ற நிலையை அடையச் செய்வதே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி.

“பூர்வ புண்ணியம்” என்றால் என்ன…?

Image

yashoda-with-kanha

“பூர்வ புண்ணியம்” என்றால் என்ன…?

 

பொழுது போக்கு என்ற நிலையில் டிவியைப் பார்க்கின்றார்கள். அதையே கர்ப்பமுற்ற ஒரு தாய் ஒன்றிலிருந்து மூன்று மாதம் கரு வளர்ச்சியாகும் நிலையில் இருக்கும் பொழுது பார்த்தால் ஏற்ப்டும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

டிவியைப் பார்க்கப்படும் போது ஒருவருக்கொருவர் சண்டை போடுபவர்களைப் பார்ப்போம்.

ஐயோ… பார்…! எப்படிச் சண்டை போடுகின்றார்கள் பார்..! என்று இதையெல்லாம் நம் எண்ணத்தால் எண்ணி எடுப்போம். அந்தச் சண்டை போடும் உணர்வு அந்தக் கருவிலே உள்ள குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

திருடினான்… கொள்ளை அடித்தான்… கொலை செய்தான்…! என்று அதிகமாகப் பத்திரிகைகளில் படிக்கின்றோம்.

ஐய்யயோ… இப்படி உலகத்தில் நடக்கின்றதே…! உலகம் மிகவும் கெட்டுப் போய்விட்டது… என்ற இந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே வளரக்கூடிய குழந்தைக்குப் பதிகிறது.

இதெல்லாம் பத்தாது என்று டிவியை வேறு போட்டுப் பார்க்கின்றோம். அதிலே பார்த்தோம் என்றால் அசுர உணர்வுகளையும் அசுரத்தனமான செயல்களையும் இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் நிலைகளையும் அழிக்கும் தன்மைகளையும் காண்பிக்கின்றார்கள்.

அதையெல்லாம் ரசித்துப் பார்ப்பார்கள்.

இதுவும் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது பூர்வ புண்ணியமாக.

அடுத்துக் குழந்தை பிறந்த உடனே அவன் என்ன செய்வான்…?

சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதே “டமார்… டுமார்…” என்று சண்டை போடுவான். யா.. டுஷ்.. யா… டுஷ் என்று கராத்தே விளையாடுவான். (ஒன்றும் தெரியாத வயதில்)

பெரியவர்களுக்கு இன்று டிவியோ கம்ப்யூட்டரையோ இயக்கிச் சரியாக வைக்கத் தெரியாது. ஆனால் இந்த இரண்டு வயதுக் குழந்தை அதை அழகாகத் திறந்து இயக்குகின்றான்.

ஏனென்றால் இதெல்லாம் கருவிலே இருக்கும் போது தாய் உற்றுப் பார்த்தது. அதைக் கூர்மையாகப் பதிவாக்கியது. அதே உணர்வு வேலை செய்கிறது. குழந்தை திருப்பி வைக்கிறான்.

சினிமாவில் சண்டை போடுவதைத் தாய் பார்த்தது. அதைக் குழந்தையும் செய்கிறான். சினிமாவில் என்னென்ன தந்திரம் செய்கிறானோ அது அத்தனையும் இந்தக் குழந்தையும் செய்கின்றான்.

சிறியவனாக இருக்கும் பொழுது இவ்வாறு செய்தாலும் அதனின் வளர்ச்சியில் பெரியவனாக வரும் பொழுது தாய் எந்த உணர்வுகளை டிவியை உற்றுப் பார்த்து ஆழமாகத் தனக்குள் பதிவாக்கியதோ அந்த வேலையைத்தான் அவன் செய்வான்.

அவனை யாராலும் மாற்ற முடியாது. யார் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். தவறின் எல்லை கடந்த நிலைகள் விளைவை அனுபவித்தால் தான் அவன் அதை அறியும் வாய்ப்பு வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதனால் தான் அதைப் பூர்வ புண்ணியம் என்பது…! இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தாய் கருவுற்றிருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று தாய் தனக்குள் இதை வினையாகக் சேர்க்க வேண்டும். அதையே தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

பின் தன் கருவில் இருக்கும் குழந்தையை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் ஒளி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும்
2.அது இருள் நீக்கிப் பொருள் கண்டு உணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3..உலகையே காத்திடும் உணர்வுகள் என் கருவில் வளரும் சிசுவிடத்தில் விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்தக் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் இதை வினையாகச் சேர்க்க வேண்டும்
5.குழந்தைக்கு அந்த ஞான உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமையும்.

இப்படிப் பிறக்கும் குழந்தை ஞானியாகத் தோன்றுவான். உலக ஞானம் பெறுவான். குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்குவான். அவன் சிறிய வயதில் செய்யும் செயல்கள் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.

பெரியவனாகும் பொழுது மற்றவர்களுக்கு நல்ல வழியைக் காட்டக்கூடியவனாக உத்தம ஞானியாக வருவான். தன்னையும் காத்துப் பிறரையும் காக்கும் சக்தியாக வருவான்….!

அணுவைப் பிளந்து மற்றதை அழிக்கச் செய்யும் விஞ்ஞானத்தின் செயலும்… அணுவைப் பிளந்து ஒளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானியின் ஆற்றலும்…!

Image

Astral path and ways

அணுவைப் பிளந்து மற்றதை அழிக்கச் செய்யும் விஞ்ஞானத்தின் செயலும்… அணுவைப் பிளந்து ஒளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானியின் ஆற்றலும்…!

 

அணுவைப் பிளந்து இன்று விஞ்ஞானி அணு குண்டாக உருவாக்குகின்றார்கள். அணு குண்டை வீசிய பின் அந்த அணுக்கதிர் இயக்கங்கள் எல்லாவற்றையும் அழித்து விடுகின்றது.

அணுவிற்குள் இயங்கும் அந்த ஆற்றலே துடிப்பின் நிலைகள் கொண்டு மண்ணை வளர்த்தது. அதே ஆற்றல் தான் வீரியத் தன்மை கொண்டு உலோகத்தையும் விளைய வைக்கின்றது.

அதே அணுவின் ஆற்றல் ஒரு மரத்திற்குள் சிறிதளவு இருக்கப்படும் போது அது துடிப்பின் நிலைகள் கொண்டு மரத்தை இயக்கச் செய்கின்றது… அதை வளர்க்கவும் செய்கின்றது.
1.ஆனால் அணுவைப் பிளந்து அணுகுண்டாக வெடிக்கச் செய்யும் பொழுது
2.அதீதமான வீரியமான ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு வெளிப்படும் அந்த ஆற்றல்களை சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்த பின் மற்றொன்றுடன் மோதும் போது
1.உதாரணமாக மரம் பச்சையாக இருந்தாலும் அந்தப் பச்சையான மரத்திற்குள் மோதும் போது
2.அதற்குள் மறைந்துள்ள அணுவிற்குள் அதே அணு தன் இனத்தைப் பெருக்கி மரத்தைக் கருக்கச் செய்துவிடுகின்றது
3.காற்றலைகளாக மாற்றி புயலைப் போன்று தன் இனத்தைப் பெருக்கி எல்லாவற்றையும் அழித்து விடுகின்றது.
4.தன் உணர்வின் சக்தியை ஆற்றல் மிக்கதாக விளைந்து அதனின் வீரியம் இருக்கும் மற்றதை அழித்துக் கொண்டே இருக்கின்றது.
5.விஞ்ஞானிகள் புற நிலைகளில் மற்றதை அழிப்பதற்காக அணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

ஆனால் மெய் ஞானிகளோ தன் உடலுக்குள் விண்ணின் ஆற்றல்களைச் சேர்த்து விளையச் செய்து வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மைகள் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

1.தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த வீரியச் சக்தியின் துணை கொண்டு
2.விண்ணிலிருந்து வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து
3.அந்த உணர்வின் சக்தி கொண்டே ஒளிச் சரீரமாக ஆகி
4.சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் நிலைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் ஒளி அலைகளை நாம் எடுத்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டு நம் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போன்று நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் சுழலச் செய்ய வேண்டும்,

இதைப் போல நாம் செய்தால் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் சுவாசிக்கப்படும் போது இன்னொரு உடல் பெறும் சரீரத்தைக் கருக்கிவிட்டு ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்கள்.

அணு குண்டை வெடித்தபின் அது எப்படி மற்றது அனைத்தையும் கருக்கிவிட்டு ஒளியாகப் பெருக்கிக் கொண்டே போகின்றதோ அதைப் போல உயிராத்மாவில் சேர்ந்த தீமைகளைப் பிளந்து விட்டு (கரைத்துவிட்டு) மெய் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலங்களை எண்ணி அந்த உணர்வின் சக்தியை நம் உடலுக்குள் கூட்டி வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து
3.அவர்களைப் பிறவா நிலைகள் பெறச் செய்ய முடியும்.

முன்னோர்கள் அங்கே செல்ல வேண்டும் என்று நாம் உந்தித் தள்ளி அதனுடன் இணைக்கப்படும் போது அவர்களின் உணர்வின் சத்து நம் உடலிலே இருப்பதால் அவர்கள் பெற்ற வழிகளில் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை நாமும் அடைய முடியும்.

சப்தரிஷி மண்டலமே மனிதனின் கடைசி எல்லை…!

இறந்த உடலை வைத்து மருத்துவர்கள் (PRACTICE) கற்றுக் கொள்வது போல் என் உடலுக்குள்ளேயே நேரடியாக இயக்கிக் காட்டி “மெய் ஞானத்தைக் கற்றுக் கொடுத்தார் குருநாதர்…!”

Image

Polaris stars - DIVINE.jpg

இறந்த உடலை வைத்து மருத்துவர்கள் (PRACTICE) கற்றுக் கொள்வது போல் என் உடலுக்குள்ளேயே நேரடியாக இயக்கிக் காட்டி “மெய் ஞானத்தைக் கற்றுக் கொடுத்தார் குருநாதர்…!”

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் என்னைப் (ஞானகுரு) பதினான்கு வருடங்கள் பல காடு மேடெல்லாம் அலையச் செய்து என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை ஊட்டி பல அனுபவங்களை நேரடியாகக் கொடுத்தார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அவை எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போல மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்படுவதைக் காணச் செய்தார். அவர்கள் குடும்பங்களில் நடக்கும் நிலைகளையும் நேரடியாகக் காணும்படிச் செய்தார்.

சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலைகள் பேசிக் கொள்வது… சாபமிட்டுக் கொள்வது… போன்று எத்தனையோ பல உணர்வின் தன்மைகளை நுகரும்படிச் செய்தார்.

அதை நுகர்ந்து சுவாசிக்கப்படும் பொழுது என் உயிரிலே மோதி மோதி அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவர்கள் விஷத்தின் தன்மை என் உடலுக்குள் கலந்து
1.என் நல்ல குணத்தை எப்படிச் செயலாக்காதபடி தடுக்கச் செய்கின்றது…?
2.நல்ல எண்ணங்கள் எப்படியெல்லாம் அது மாறுபடுகின்றது…?
3.கவலையையும் சஞ்சலத்தையும் எப்படி உண்டாக்குகின்றது என்று காட்டினார்.

ஏனென்றால் நாம் எவ்வளவோ திடமானவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டு இருக்கும் போது
1.அவர்கள் வெளிப்படும் உணர்வைக் கூர்மையாக கவனிக்கப்படும் போது
2.அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பதிவாகின்றது
3.அந்த அலைகள் நமக்குள் சுழன்று கொண்டு இருக்கும் போது
4.இரவிலே படுத்திருக்கும் போது அந்த உணர்வுகளைச் சுவாசித்து “திடுக்…!” என்று பயப்படச் செய்வதும்
5.நம்மை அறியாமலே தூங்க விடாமல் எப்படி இயக்குகிறது என்று பார்க்கச் செய்கின்றார் குருநாதர்.

இது எல்லோருக்கும் தான் தெரியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் பார்த்த உணர்வு நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது. அதனின் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அதையே இயக்கித் தன்னிச்சையாக வளரச் செய்து விடுகின்றது. “நோயாகின்றது….!”

நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அந்த குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடல்களில் உள்ள உறுப்புகளின் நிலைகள் அமைந்தது.

ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருகுடல் இருதய வால்வுகள் சிறுமூளை பெருமூளை என்று உடலுக்குள் உள்ள உறுப்புகள் அனைத்துமே
1.நாம் எடுக்கும் உணர்வுகளுக்குத் தக்கவாறு
2,எந்தெந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ – “கடினமாகவோ மிருதுவாகவோ”
3.அதற்குத் தக்கவாறு தான் அந்தந்த உறுப்புகளின் செயலும் இயக்கமும் இருக்கின்றது.

உதாரணமாக டாகடருக்குப் படிப்பவர்கள் பயிற்சிக்காக இறந்த உடலை எடுத்து அதைப் பரீட்சித்துப் பார்த்து அந்தப் படிப்பின் மூலமாக உடல் கூறுகளை நேரடியாகத் தெரிந்து கொள்கின்றனர்.

அதைப் போன்று தான் (மூன்று இலட்சம் பேரின் உணர்வை வைத்து) குருநாதர் என்னையும் அறியும்படிச் செய்தார்.

எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப உடலில் உள்ள உறுப்புகள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை “என் உடலுக்குள்ளேயே… பார்க்கச் செய்தார்…!”

1.நீ எத்தகைய உணர்வைச் சுவாசிக்கின்றாய்…?
2.நீ எண்ணி எடுக்கும் எண்ணங்கள் உன்னுடைய உடல் உறுப்புகளை அது எப்படித் தாக்குகின்றது…?
3.சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் வேகத் துடிப்பு உன் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் சுழன்று வரப்படும் போது உறுப்புகளுக்குள் எப்படி எதிர்மாறாகின்றது…?
4.அதனால் அந்த உறுப்புகள் எப்படி எரிச்சலாகின்றது…? எப்படி உனக்கு வேதனையாகின்றது…? என்று குருநாதர் பார்க்கச் செய்தார்.

இன்றைய மருத்துவ முறைகளில் சிறு நீரில் உள்ள சர்க்கரையைப் பரிசோதித்துப் பார்க்கின்றார்கள். சிறு நீரில் எந்தெந்த அளவுக்குச் சர்க்கரை கலந்து இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி பரிசோதனை செய்யும் பொழுது நிறங்களை மாற்றிக் காண்பிக்கின்றது.

அதே மாதிரித்தான் எனக்குள்ளும் காட்டுகின்றார் குருநாதர்.

உடலின் உறுப்புகள் அது எந்த உணர்வின் சத்து கொண்டு உருவானதோ பிறருடைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
1.அந்த உணர்வுகளைச் சுவாசித்து உடலுக்குள் செல்லும்போது
2.இரத்தமாக மாறி உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி
3.ஏற்கனவே உருவானதற்கும் இப்பொழுது சுவாசிப்பதற்கும் எதிர்மறையாகப்படும் போது
4.அந்த உறுப்புகள் செயலிழந்து எப்படிப் பின்னமாகின்றது…?
5.அதனால் உனக்கு வலி எப்படி வருகின்றது…? என்ற நிலையை
6.என்னையே முன் நிறுத்தி என் உடலின் இயக்கத்தை என்னைப் பார்க்கச் சொல்கின்றார்.

உதாரணமாக… “எக்ஸ்ரே” படங்களில் உள் உறுப்புகளைப் பார்ப்பது போலவும்… “கண்ணாடிகளில்” புற நிலைகளைப் பார்ப்பது போலவும்
1.நீ எடுத்துக் கொண்ட உணர்வின் சக்திகள்
2.அது எவ்வாறெல்லாம் உன் உடலிலே விளைகின்றது…? என்ற நிலையை
3.குருநாதர் ஒவ்வொரு நிலையிலும் அப்படியே காட்டுகின்றார்.

தாவர இன சத்துக்கள் காற்றில் இருக்கக்கூடிய சத்துகளை அது எதையெதைக் கவர்ந்ததோ அதனின் உணர்வின் தன்மைக் கொப்ப அந்த இலைகள் ரூபங்கள் அமைகின்றது.

இதைப் போன்றே தான் நாமும் எந்தெந்தத் தாவர இனத்தின் சத்துக்களை உணவாகவும் உணர்வாகவும் எடுத்துக் கொண்டோமோ அதற்குத்தக்க தான் பரிணாம வளர்ச்சியில் உடல் உறுப்புக்கள் உருவாகி (ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருகுடல் இருதய வால்வுகள் சிறுமூளை பெருமூளை) மனிதனாக வந்தோம் என்ற நிலையையும் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி மனிதனாக உருவாகும்போது எண்ணங்கள் நமக்கு எப்படி உருவாகின்றது..?
2.பல எண்ணத்தின் நிலைகள் வரப்படப்போகும் போது அதனால் தீய விளைவுகள் மனித உடலுக்குள் எப்படி வருகின்றது..?
3.அது நம்மை என்ன செய்கின்றது…?
4.தாவர இனங்களைப் புசித்து உடல் பெற்று வந்தாலும் பிறிதொரு மிருகம் தாக்கப்பட்டு உயிராத்மா பிரிந்த பின் அடுத்த உடல் உருவான நிலையில் தாவர இனச் சத்தில்லாத உணர்ச்சிகள் வரும் பொழுது உடலில் எப்படி புதுப் புது நோய்கள் வருகின்றது…?
5.இதிலிருந்து மனிதன் நீ எப்படி மீள வேண்டும்…?
6.அந்த அருள் ஞானிகள் இதையெல்லாம் கண்டுணர்ந்து தீமைகளை நீக்கும் ஆற்றல்மிக்க சக்தியை எப்படிப் பெற்றார்கள்..?
7.தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்கள்…? என்று குருநாதர் ஒவ்வொன்றையும் வழிப்படுத்திக் காட்டுகின்றார்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாவற்றையும் கண்டு… பார்த்து… உணர்ந்த பின் தான்… உங்களுக்கு யாம் சொல்கிறோம்.

சிறு குழந்தைகளாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் குருநாதர் காட்டிய அந்த உணர்வின் சக்திகளை நான் நினைவு கூர்ந்து பதிவு செய்யப்படும் போது உங்களுக்குள் அது ஞான வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவான உணர்வை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் ஞானிகள் பெற்ற சக்தியை நீங்களும் பரிபூரணமாகப் பெற முடியும்.

இன்ஜினியரோ அல்லது டாக்டரோ அல்லது விவசாயமோ இதைப் போன்று எந்தெந்த நிலைகளில் நாம் கூர்மையாகச் செலுத்துகின்றோமோ அந்தப் பாட நிலைகள் பதிவாகின்றது.

அதன் வழியிலே சீராகச் சென்று கூர்மையாகக் கவனித்திருந்தால் அந்த நிலைக்கொப்ப விஞ்ஞானியாகவோ இன்ஜினியராகவோ டாக்டராகவோ நாம் ஆக முடிகின்றது.

இதைப் போன்று தான் பிறவா நிலைகள் அடைந்த அந்த மெய் ஞானிகள் சென்ற வழிகளில் விண்ணுலக ஆற்றலை நாம் நமக்குள் கூர்மையாக எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் மெய் ஞானியாக ஆகின்றோம்.

இது மனிதனால் சாத்தியமாகக் கூடியது தான். உங்களால் முடியும்…!

“அன்றைய சித்தனின் ஆற்றல் சாதாரணமானதல்ல…!

Agastya Muni

“அன்றைய சித்தனின் ஆற்றல் சாதாரணமானதல்ல…! – 

மின்னல்கள் கடலுக்குள் பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலை எடுத்து அதிலுள்ள யுரேனியத்தைப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள். அதை வடிகட்டி பல மடங்கு செறிவூட்டி எடுத்து வைத்துக் கொள்கின்றார்கள்.

உதாரணமாக நூறு டன் விறகை எறித்து நெருப்பை உண்டாக்கினால் எந்த அளவு வெப்பத்தின் கனல் கிடைக்குமோ அதே வெப்பத்தை இந்த “ஒரு அவுன்ஸிலேயும்…” குறைவாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கொடுக்கின்றது.

அதனுடைய வேகம் நீரைச் சீக்கிரம் கொதிகலனாக மாற்றி அதை ஆவியாக மாற்றி இயந்திரங்களை இயக்கச் செய்யக்கூடிய நிலைகளாகின்றது.

அணு மின் நிலையங்களில் மிக மிகக் குறைவான எடையுள்ள யுரேனியத்தை வைத்து வருடம் முழுவதற்கும் மின்சாரத்தைத் தயாரிக்கின்றார்கள்.

ஆனால் அதே மின்சாரத்தை நிலக்கரியை வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பல ஆயிரம் டன் தேவைப்படுகின்றது.

இதை எல்லாம் மனிதன் தான் இன்று செய்கின்றான்.

பெரும் பாறையாக இருக்கின்றது என்றால் அதைக் கடினமான இரும்பு உளியைக் கொண்டு அதற்குண்டான இயந்திரத்தை வைத்து அதைப் பிளக்கின்றார்கள். ஏனென்றால் இரும்பிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.

இயந்திரங்களில் இரும்பை அதிகமாக உபயோகப்படுத்தினாலும் மனித உணர்விற்குள் (உடலுக்குள்) அந்த இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால்
1.இரும்பு எப்படி மற்றதை எப்படிப் பிளக்கின்றதோ
2.இதைப் போல மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துக்களைப் பிளக்கும் நிலையாகி
3.இடி மின்னலைப்போல உடலில் வலியும் அதனால் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு தாவர இனங்களிலேயும் ஒவ்வொரு விதமான உலோகத்தின் தன்மை அதிகமாக விளைந்திருக்கும். அந்தத் தாவர இனச் சத்துக்களைத் தான் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட் கொண்டு வந்துள்ளோம்.

அந்தத் தாவர இனத்தின் மணமே மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்வதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.

சந்தர்ப்பத்தால் நாம் உணவாக உண்ணும் காய்கறியிலோ அல்லது நம் எண்ணத்தால் பல நிலைகள் சுவாசிக்கும் போது இந்த இரும்புச் சத்து நம் நல்ல குணங்களுக்குள் கலந்து விட்டால் கடுமையான நோய்களாகி விடுகின்றது.

இப்படி இருக்கக்கூடிய நிலையை அன்றைய சித்தன் என்பவன் இது மனித உடலில் தொல்லை கொடுக்கிறது என்பதை அறிந்து அதை எப்படி நீக்குவது…? என்று சிந்திக்கின்றான்.

அப்படி அவன் சிந்தித்து வரும் நிலையில் அவன் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகளில் அதை நீக்கக்கூடிய வல்லமை அவனுக்குள் அது வலிமை பெறுகின்றது.

அப்பொழுது பல தாவர இனங்களைப் பறித்து இரும்பை அதற்குள் கலந்து புடம் போடுகின்றான்.
1.அப்பொழுது இரும்பிற்குள் இருக்கும் பாறையை உடைக்கக்கூடிய அந்தக் கடுமையான சத்து வலு இழந்து
2.இரும்பின் சத்தான நிலைகள் கரைந்து போகும் அளவுக்கு அதை
3.ஒரு பஸ்பமாக உருவாக்குகின்றான் அந்தச் சித்தன்.

மனித உடலுக்குள் எவ்வளவு தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்ததோ அந்த உணர்வின் வலுவை அடக்க இந்தப் பஸ்பத்தைக் கொடுக்கின்றான்.

கொடுக்கும் பொழுது மனிதனுக்குள் கடுமையாக வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியைக் கரைத்து விடுகின்றது.

அப்போது அது உடல் நலம் பெறும் சக்தியாக அங்கே வருகின்றது. இப்படி ஒரு மனிதனின் உடலிலே துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தை அன்று நீக்கினான் சித்தன்.

“எதனுடன்… எதைச் சேர்த்தால்… என்ன ஆகும்…?” என்ற நிலையில் மனிதன் ஆரோக்கியமாக வாழும் நிலைக்காகத்
1.தாவர இனத்தின் சத்திற்குள் உலோகத்தினை இணைத்து
2.தன் எண்ணத்தால் உருவான அந்த சத்தினை இணைக்கச் செய்து
3.அதை உருவாக்கி அதைப் புடமிட்டுச் செய்த இந்த உணர்வுகள்
4.அந்தச் சித்தனின் உடலில் “மிகச் சக்தி வாய்ந்த நிலையாக விளைகின்றது…”

அவர் உருவாக்கிய இந்த மருந்தோ மனித உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் நீக்குகின்றது. ஆனால் அந்தச் சித்தனோ இத்தகைய கடினமான நிலைகள் தன் உடலிலே வளர விடாத நிலைகளில்
1.அவர் எடுத்துக் கொண்ட ஆற்றல்கள்
2.மெய் ஞானத்தின் உணர்வின் அணுக்களாக அவன் உடலில் விளைகின்றது.

இப்படிக் கடின சக்திகளை வென்றிடும் அந்த உணர்வின் சத்துகள் அந்த உடலிலே விளையப்படும் போது அவனுடைய சிந்தனைகள் அனைத்தும் அவ்வுடலிலே
1.எந்தெந்தக் குணங்களினால் எந்தக் கடினமான நிலைகள் வருகின்றதோ
2.அதை நிவர்த்திக்கும் “உணர்வின் ஞானம்” அங்கே உருவாகின்றது.

அதன் வழி கொண்டு தன் உடலில் வந்த தீய விளைவுகள் அனைத்தையும் நீக்கி தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையுமே தனக்குக் கட்டுப்படும் நிலையாக அதைச் சரணமடையச் செய்தான் அந்தச் சித்தன் என்பவன்.

அதிலே முதன்மையானவன் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்.

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் ஒளியாக இருந்தது போல அகஸ்தியர் தன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வு அனைத்தையும் ஒளியின் சரீரமாக வளர்த்துத் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

1.விண்ணிலிருந்து வரக்கூடிய பேராற்றல்களையும்
2.பேரண்டத்தில் இருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மைளையும் (எதுவாக இருந்தாலும்)
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தத் துருவ மகரிஷி அவைகளை முறித்து
4.வரும் கதிரியக்கச் சக்திகளையும் கடினமான உலோகத்தின் தன்மைகளையும் தனக்கு உணவாக எடுத்துக் கொண்டு
5.ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அத்தகைய ஆற்றல்களைத்தான் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

பல புத்தகங்களைப் படித்தவர்கள் எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

Saamigal upadesam

“பல புத்தகங்களைப் படித்தவர்கள்” எதனின் அடிப்படையில் எண்ணுகின்றார்கள்…?

உபதேசத்தைப் படித்துவிட்டு எனக்கு அர்த்தம் தெரியவில்லையே என்று இருக்கவே வேண்டாம். என்ன சொல்கிறோம் என்று அந்த உணர்வை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே இருந்தால் போதும்.

டேப்பிற்கு (TAPE) ஒன்றுமே தெரியாது. அந்த நாடாவில் முலாம் தான் பூசி இருக்கிறார்கள். நாம் பேசுவதையெல்லாம் பதிவாக்கி விடுகின்றது. ஏனென்றால் அதற்கு வேறு எண்ணம் இல்லை.

வயதில் சிறிய குழந்தைகளுக்கு அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.

ஒரு டேப்பில் பாடல் பாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதை அந்தக் குழந்தைகள் சும்மா கவனித்துக் கொண்டிருந்தால் போதும். அந்தப் பாட்டைக் கவனித்த பின் அதே பாட்டை அதே மெட்டில் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

பெரியவர்கள் ஆயிரம் தரம் கேட்டாலும்… அந்தப் பாடலை அதே மெட்டில் பாடத் தெரியுமா…? என்றால் தெரியாது…!
1.நாம் பல எண்ணங்களில் இருப்போம்…..
2.கூர்ந்து பதிவாக்கிக் கொள்வதில்லை அது தான் காரணம்…!

அதைப்போல நாம் குழந்தை உள்ளங்களாக இருந்து மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் நமக்குள் அது பதிவாகும்.

பல ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்வது அர்த்தமில்லை என்று எண்ணி
1.படித்த புத்தகங்களில் உள்ள நிலைக்கு ஒப்பிட்டுப் (TALLY பண்ணி) பார்த்தால்
2.யாம் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் இவை எல்லாம் எல்லாவற்றையும் சொல்வார்கள்.

ஆனால் மெய் ஞானத்தின் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஒரு சில விஷயங்களை முழுமையாகவும் சொல்கிறேன்.

இராமாயணமோ மகாபாரதமோ ஏதோ ஒரு பாஷையில் தான் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்.
1.எல்லாவற்றையும் “பாடல்களாகத் தான்” எழுதி வைத்திருக்கிறார்கள்.
2.கதையாக அவர்கள் உரை நடையில் எழுதவில்லை.

“புத்தகத்தைப் படிப்பவர்கள்” அவர்கள் பாடலாகப் பாடியது எல்லாம் தெளிவாக அர்த்தமாகின்றது என்று சொல்கின்றார்களா…? அல்லது அர்த்தமாகவில்லை என்று சொல்கின்றார்களா…! என்று எனக்குத் தெரியவில்லை.

அர்த்தம் தெரிந்து எல்லோரும் வருவதில்லை…..!

ஏனென்றால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பாடம் படிக்கின்றோம் என்றால்
1.நாம் தெரிந்து கொண்டு அங்கே போன பின் நமக்குப் பள்ளியில் அதைச் சொல்லிக் கொடுப்பதில்லை.
2.ஆரம்பப் பள்ளியில் படித்த பிற்பாடு அடுத்த உயர் கல்விக்கு நாம் சென்றாலும்
3.ஆரம்பப் பள்ளியில் படித்த பாடத்தை அங்கே சொல்லிக் கொடுப்பதில்லை.
4.உயர் கல்வியாக இத்தனையும் படித்து முடித்தாலும் அடுத்து…
5.நீ இன்ஜினியருக்குப் படிக்கின்றாயா அல்லது டாக்டருக்குப் போகின்றாயா…? என்று கேட்கின்றார்கள்.
6.படித்ததற்குத் தகுந்த மாதிரி அங்கே தேர்வு வைத்து..
7.நீ இன்ஜினியராகப் போகலாம்… டாக்டராகப் போகலாம்…! என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

அப்படிப் பிரித்த பிற்பாடு மீண்டும் இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர
1.ஏற்கனவே நான் பல புத்தங்களைப் படித்திருக்கிறேன் என்று சொல்லி
2.அதனால் இதை எல்லாம் நான் படிப்பதற்கில்லை என்று இப்படிச் சொன்னால் அந்தப் பாடம் இங்கே ஏறாது.

ஆக படித்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறையப் படித்துவிட்டு வருபவர்கள்…,
1.”என்னமோ…!” இந்தச் சாமி சொல்கிறார்….
2.என்னமோ… “கேட்டுக் கொண்டு போவோம்…! என்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.
3.படித்த நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்படித்தான் வரும்.

தன் வாழ்க்கையில்… இயற்கையில்… அது என்ன நிகழ்கின்றது..? என்ற நிலையைத் தெளிவாகத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் பதிவு செய்து விட்டு அந்த வழியில் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் இருந்தால் இது பதிவாகும். உங்களுக்குள் வளரவும் செய்யும்.

அந்தப் பதிவான நிலைகளை நீங்கள் தியானத்தில் அமர்ந்து எடுத்தால்
1.ஆயிரம் புத்தங்களில் நீங்கள் படித்து விட்டு வந்ததற்கு “விடை…!”
2.உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும். (நிச்சயம் வரும்)

இந்தத் தியானத்தை முறைப்படி எடுத்து நீங்கள் நெறிப்படுத்தி விட்டீர்கள் என்றால் “எல்லாமே அர்த்தம் காண முடியும்…!”

“அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…!” பேராற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் வரத் தொடங்கும்…! – பயிற்சி

Divine energy and Power

“அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…!” பேராற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் வரத் தொடங்கும்…! – பயிற்சி

நாம் தவறே செய்திருக்க மாட்டோம். யாராவது ஒன்றைச் சொல்லி இருப்பார்கள். சாபமிட்டார்கள் என்றால் அதை நாம் கூர்ந்து கவனித்துக் காது கொடுத்துக் கேட்டால் போதும்
1.நான் ஒன்றும் செய்யவில்லையே…
2.”இப்படிச் செய்கிறார்களே…! என்று நாம் பதறிப் போவோம்…..

அப்போது அவர்கள் சொல்வதை நம் உடலிலே வினையாகச் சேர்த்து விடுகின்றோம். இது கடுமையான விஷம். இதை மாற்ற வேண்டும் என்றால் ஒரு ஐந்து நிமிடம் வலுவாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டிவிட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். அதற்குப் பின் யார் நம்மைச் சாபமிட்டாரோ…
1.மகரிஷியின் அருள் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்.
2.என்னைப் பார்த்துப் பேசும் போது அவர் நல்ல சொல்களைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டும்
3.அவர் பிறரிடம் பேசினாலும் அந்தப் பேச்சு நல்லது பெறக்கூடிய நிலையாக உருவாக வேண்டும் என்று
4.அவருடைய எண்ணத்தை நமக்குள் ஊடுருவ விடாதபடி இதைத் தடுக்க வேண்டும்.

இது தான் சூரசம்ஹாரம் என்பது.

“தீபாவளி” – அதாவது அசுர சக்தியைச் சம்ஹாரம் செய்வது என்றால் பிறர் பேசக்கூடிய சாபங்கள் வந்து
1.நம்மை அழித்து விடக்கூடாது
2,நம் நல்ல எண்ணத்தை அழித்து விடக்கூடாது.
3.நம் உடலுக்குள் நோயாக வந்து விடக்கூடாது.

இதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று சொல்வது. இது தான் ஆத்ம சுத்தி என்பது. நம்மைத் திட்டினார்கள் என்றால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

குழந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம். ஏனென்றால் குழந்தை மேல் நாம் பாசமாக இருக்கின்றோம்.

அப்போது அந்த நோய் என்ன செய்கின்றது…? நம்மைக் கொல்கின்றது. அப்போது அந்த அசுர சக்தியை என்ன செய்ய வேண்டும்…?

அந்த சக்தியால் தான் நோயாக ஆகி அவஸ்தைப் படுகின்றார்கள். ஆகவே அந்த அசுர சக்தி நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். அதை நீக்குவதற்கு
1.அம்மா அப்பா அருளால் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் தியானிக்க வேண்டும்.
3.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் கூட உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் படரச் செய்யலாம்.

ரொம்பவும் பாசமாக நெருக்கமாக இருந்தீர்கள் என்றால் அவர்கள் உணர்வைப் பார்த்தவுடனே அந்த நோயை இழுத்து உங்களைப் பதறச் செய்யும்.

அந்த நேரத்தில் கொஞ்ச நேரமாவது மன பலத்தை உங்களால் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது.

அந்த மன பலம் பெறுவதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அந்தச் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காக இதை உபதேசிக்கின்றோம்.

இந்தக் காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.
1.ஒரு தடவைச் சொல்லி வரவில்லை என்றாலும்
2.அடுத்த கணம் அதைத் தூண்டி எடுக்க முடியும்
3.ஏனென்றால் “அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்…!”

ஒன்றும் அறியாத குழந்தையாக இருக்கின்றது. நோயாகி விட்டதென்றால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் உன் நோய் விலகும்
2.நீ உடல் நலம் பெறுவாய்… சீக்கிரம் குணமடைவாய்…! என்று
3.அந்தக் குழந்தையின் “கண்ணிலயே பார்த்து” இதைச் சொல்லுங்கள்.

வெறுமனே தண்ணீரையோ அல்லது மருந்தோ ஏதோ ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுடன் அதைக் குழந்தைக்குக் கொடுங்கள்.

குழந்தை உடலில் நோய் உண்டாக்குவதைச் சம்ஹாரம் செய்ய வேண்டும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அது வராதபடி சம்ஹாரம் செய்ய வேண்டும்.

ஒருவர் மேல் நாம் பிரியமாக இருக்கும் போது அவர் துன்பப்படுவதைப் பார்த்தால் நமக்குள்ளும் இருள் சூழ்ந்து விடுகின்றது. அந்தத் துன்பத்தில் இருந்து நம்மால் விலக முடியவில்லை.

ஆனால் மேலே சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ணிணால் இரண்டு பேரும் நன்மை அடைகின்றோம்.
1.அவர்களையும் நோயிலிருந்து விலக்குகின்றோம்…
2.நம்மையும் காத்துக் கொள்கின்றோம்…!

“வியாபாரம் ஆகவில்லையே…! என்று அடிக்கடி நினைத்தோம் என்றால் அந்த வேதனையை எடுத்துக் கொண்டு அடுத்தாற்போல சரக்கு எடுத்துக் கொடுத்தால் அந்த உணர்வு வாங்குபவர்களிடமும் இயக்கி நம் வியாபாரத்தை கூடக் கொஞ்சம் மந்தமாக்கும்.

ஆகவே கடையில் போய் உட்கார்ந்தவுடனே இத்தகைய அசுர சக்திகள் நம் உடலில் இல்லாதபடி… அவைகள் நம்மை இயக்காதபடி… சம்ஹாரம் செய்ய வேண்டும்.

கடையில் போய் அமர்ந்தவுடனே… மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி இந்தக் கடை முழுவதும் படர வேண்டும். இங்கே வரும் வாடிக்கையாளர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பரப்புங்கள்.

அந்த உணர்வுடன் பொருளை எடுத்துக் கொடுங்கள். உங்கள் வியாபாரம் சீராகும். உங்களுக்கும் உங்கள் கடையில் பொருளை வாங்குவோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

செய்து பாருங்கள்….!

என்னைப் போல் நீங்களும் ஞானத்தின் வழித் தொடரில் வளர வேண்டும் என்பதற்காகத் தான் “திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்…!”

Image

Saamiji

என்னைப் போல் நீங்களும் ஞானத்தின் வழித் தொடரில் வளர வேண்டும் என்பதற்காகத் தான் “திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்…!”

 

சொன்ன உபதேசத்தையே திருப்பித் திருப்பிச் சொல்கின்றார் என்று எம்மைச் (ஞானகுரு) சொல்வார்கள். ஒரு டேப்பில் பதிவு செய்வது போலத்தான் உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.பத்து தரம் சாமி சொன்னார் என்று சொல்வார்கள்.
2.ஆனால் திருப்பிக் கேட்டால்… “என்ன சொன்னார்…?” என்று சொல்லச் சொன்னால் “எனக்குத் தெரியாது…!” என்பார்கள்.

ஏனென்றால் எது முக்கியமோ அதை நான் திரும்பத் திரும்ப பதிவு செய்தே ஆகவேண்டும். ஒரு நல்ல விதையை வயலில் பண்படுத்தி விதைத்து வைத்தாலும் அதை வளர்க்கச் சீராக நீரை ஊற்ற வேண்டும்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்தாலும் அதை உங்களுக்குள் சீராக வளர்க்கச் செய்வதற்காக
1.அந்த மெய் ஒளியின் உணர்வுகளை இணைத்திடும் நிலையாக
2.திரும்பத் திரும்ப அதை உரமாக உணவாகக் கொடுக்கின்றோம்.

சாமி சும்மா திரும்பத் திரும்பச் சொல்கின்றார். சொன்னதேயே மீண்டும் மீண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள்.
1.எப்படியும் உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பம் எல்லாம் நீங்கி
2.உங்களுக்குள் மெய் ஞான உணர்வுகள் வளர்ந்து
3.நீங்கள் இடும் மூச்சுகளெல்லாம் பிறருடைய துன்பத்தைப் போக்கக்கூடிய அலைகளாக இங்கே படர வேண்டும் என்ற
4.பேராசை எனக்கு நிறைய இருக்கின்றது.

நான் என்ன செய்கின்றேன்…? கடலில் இட்ட பெருங்காயம் தானே. கடல் எவ்வளவோ பெரிதாக இருக்கின்றது. அதில் நான் ஒருவன் பெருங்காயத்தைக் கொண்டு நல்ல வாசனையைப் போட்டால் என்ன ஆகும்…? எவ்வளவு நேரம் இருக்கும்…?

உங்களுக்குள் வரும் துன்பத்தை உள்ளே விடாது அந்தத் துன்பத்தை உருவாக்கக்கூடிய விஷத்தின் தன்மையை அடக்கி நல்லதாக்கும் நிலைகள் பெற வேண்டும்.

1.துன்பத்தை நீக்கி… “நீங்கள் விடும் மூச்சலைகள் அனைத்தும்…”
2.இந்தக் காற்றுக்குள் பரப்பச் செய்ய வேண்டும்.
3.அப்படிப் பரப்பினால் சூரியனின் காந்தப் புலன்கள் அதைக் கவர்ந்து
4.உலகம் முழுவதும் பெரும் கடலாகப் பரவச் செய்துவிடும்.

நீங்கள் இதைப் படிக்கின்றீர்கள். உங்களுக்கு இப்போது கிடைக்கும். கிடைத்தாலும் கூட… “என்னைப் போல…!’ நீங்களும் இந்த மூச்சலைகளை வெளியிட்டால் அந்த மெய் உணர்வின் அலையின் தொடர்கள் வருகின்றது.

பேரருள் பேரொளியாக மாறும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் பரவும். அதைச் சுவாசிக்கும் உலக மக்கள் அனைவரும் ஞானத்தின் வழித் தொடரில் வளர ஏதுவாகும்.

நீங்கள் விடும் சுவாசம் உங்களைக் காக்கும். அதே சமயத்தில் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாகவும் அது மாறுகின்றது.

அந்த நிலையை உருவாக்குவதற்காகத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது…!