ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!

 

பல சக்திகளையும் பல வித்தைகளையும் குருநாதர் எமக்குக் காட்டினாலும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எமக்கு “இறுமாப்பு…” அதிகமாகவே விளைகின்றது.

1.காரணம்… எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைகளில் பல சக்திகளை உணர்த்துகின்றார்.
2.அது வந்தவுடன் எமக்குள் இறுமாப்பு வருகின்றது.

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்பொழுது அவர்கள் வன்மம் கொண்டு சில நிலைகளைச் செய்வார்கள்.

மந்திரவாதிகளுக்குள் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு. தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது….? அதே மாதிரித் தான் எமது புத்தியும் செயல்பட்டது.

மனித வாழ்க்கையில் வந்த யாம்… குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார் என்றால் “இவனை ஒரு கை பார்ப்பது…!” என்ற நிலையில் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எமக்குள் தோற்றுவித்தது.

ஆனால் அருள் ஞானியான மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உணர்த்திய உணர்வோ
1.நமக்குள் ஈர்க்கும் அந்த உணர்வின் இயக்கங்களைக் கண்டு அறிவதற்காக
2.எத்தகைய வலு இருந்தாலும்… நாம் எண்ணத்தின் வலு கொண்டு செயல்டும் பொழுது
3.நமது எண்ணம் தீமையின் வழியில் எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பதைத் தெளிவாக உணர்த்தினார்.

குருநாதர் உயர்ந்த சக்தியினை எமக்குள் கொடுத்தாலும் எமக்குள் அகந்தை என்ற நிலைகள் ஓங்கி வரப்படும் பொழுது மற்றவர்களை எளிமைப்படுத்திப் பார்ப்பதும் “தான் தான் நான் தான்” என்று நான் என்ற அகந்தை கூடும் நிலையே ஏற்பட்டது.

அப்பொழுது அந்த நல்ல உணர்வைக் காக்காதபடி இந்த ஆறாவது அறிவைச் செம்மையாகப் பயன்படுத்தாதபடி இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் காட்டிய அறநெறியின் தன்மையை
1.வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்குப் பதில்
2.தீமையை அது தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கு
3.இந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு உணர்த்திக் கொண்டே இருக்கும் பொழுது நான் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது இப்படிப் பல நிலைகளைச் செய்யும் பொழுது திடீர் என்று எம்மை அறியாதபடி ஒரு மலை மீது “கால் பாதம் வைக்க மட்டும் தான் இடம் உள்ளதில் எம்மை நிறுத்திவிட்டார்…!” உட்கார முடியவில்லை…!

அங்கே எப்படி வந்தோம்…? என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைப்பின் நிலையில் இருந்தோம். எந்த மந்திரவாதி இப்படிச் செய்தானோ…? என்ற இந்த எண்ணம்தான் வருகிறது.

யாம் மந்திரவாதிகளைத் தொட்டுப் பரிட்சை செய்ததினாலே யாரோ மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் எம்மை இப்படி அழைத்து வந்துவிட்டனர் என்று நினைத்தோம்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் தலை சுற்றியது. அந்த அளவிற்கு மோசமான இடத்தில் இருந்தோம். அந்த மலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது.

அப்பொழுதுதான் யாம் திகைத்து நமக்கு குரு எவ்வளவு சக்தி கொடுத்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே,
1.யாம் அகந்தை கொண்டு செயல்பட்டதால் ஏதோ மந்திரவாதி செய்து விட்டான் என்ற எண்ணங்கள்தான் எமக்கு வந்ததே தவிர
2.குருவின் வலுவை யாம் எண்ணவில்லை.

எமக்குள் அகந்தையின் நிலைகள் கொண்டு, யாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்ற உணர்வே தோற்றுவித்தது. இந்த நிலைகளில் இருந்து எப்படி மீள்வது…? என்று தவித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, நேரம் ஆக ஆக எமது உடல் எல்லாம் வேர்க்கின்றது. சறுக்குப் பாறைபோல் இருந்ததால் வேர்வை வியர்க்க வியர்க்க கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகின்றது. எனக்கு எதையும் எட்டிப் பிடிக்கும் நிலையே இல்லை.

முன் பக்கம் போனாலும் மரணம் தான்… பின் பக்கம் போனாலும் மரணம் தான். குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இல்லை.

கொஞ்ச நேரம் போனால் போய்விடுவோமோ…! என்ற பய உணர்வுகள் அதிகமாக அதிகமாக உடலின் தன்மையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க உடலிலிருந்து வியர்வை கொட்டத் தொடங்கி விடுகின்றது. ஆக வலுவிழந்த நிலையில் யாம் இருந்தோம்.

இந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் மயங்காதே…” என்ற குரல் வருகின்றது. அது குருவின் குரலாகத் தென்பட்டபின் எமக்குக் கொஞ்சம் ஜீவன் வந்தது.

“நீ கொஞ்ச நேரத்தில் விழுந்து விடுகின்றாய்… நீ உன் எண்ணத்தால் பல மனக் கோட்டையைக் கட்டினாயே… கொஞ்ச நேரத்தில் மறையப் போகின்றது பார்…!” என்றார் குருநாதர்.

அதைத் தொடர்ந்து… ஒவ்வொரு மனிதனும் செல்வங்கள் குவித்து வைத்து, அந்த செல்வத்தைக் காத்திடும் நிலையாக
1.தன் பந்துக்கள்… தன் இனங்களையே இம்சிக்கின்றனர்.
2.கடைசி நிலையில் அந்தப் பொருளைக் காக்க முடியாத நிலையில் அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றனர்…?
3.சம்பாதித்து வைத்தாலும் அவர்களுக்குள் வேதனையத்தான் வளர்க்க முடிந்தது.

செல்வத்தைக் காத்திடும் நிலை அற்றுத் தனக்குள் வேதனை என்ற நஞ்சின் தன்மை உருப்பெறும் நிலையாக நல்ல குணங்களை அழித்திடும் நிலைகள் பட்டுச் சீர்கெட்டு இருக்கும் நிலைகளைச் “சினிமாப் படங்களைக் காட்டுவது மாதிரி ஒன்று ஒன்றாகக் காண்பித்தார்…” அப்பொழுதுதான்,
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற நிலையை உபதேசித்தார் குருநாதர்.

1.ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் எவ்வாறு செல்வத்தைச் சம்பாதித்தனர்…?
2.அந்தச் செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைப்பட்டனர்…?
3.அந்த வேதனை குடும்பத்திற்குள் எப்படித் தொடர்ந்தது…?
4.செல்வத்தைக் காக்க முடியாதபடி சாபங்களும் குடும்பத்தில் நலிந்த உடலாகவும் நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழ்கின்றனர்…? என்று
5.அதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டிக் குறைந்தது இரண்டு மணி நேரம் இருக்கும்… அதன் பின் கீழே இறக்கி விட்டார்.

“இனி நீ வலம் வரலாம்… உலகை அறியலாம். நான் உனக்குக் கண்டுணர்த்திய அனைவரின் உண்மைகள் நீ செல்லும் பொழுது, செல்லும் பாதையில் உனக்கு உண்மையின் உணர்வுகள் வரும்.
1.நீ அங்கே சென்று பார்,
2.அவர்களின் குடும்பத்தின் நிலைகளைப் பார்,
3.ஊன்றிப் பார்… அவர்களின் செயல்களின் தன்மையைப் பார்,
4.அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று சிந்தித்துப் பார் என்று பல நிலைகளை உணர்த்தினார் குருதேவர்.

மனிதர்கள் சூதுகளில் சிக்கும் நிலைகளை உணர்த்தினார் குருநாதர்

மனிதர்கள் சூதுகளில் சிக்கும் நிலைகளை உணர்த்தினார் குருநாதர்

 

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி நீக்கி இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது தீமை என்று தெரிகின்றது. ஆனால் சூதாடப் போகின்றோம். சூதாட்ட விளையாட்டில் தோற்கத் தோற்க விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்று, குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம் குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து
1.“குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது” என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
2,சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும்…! என்று பால் வியாபாரி யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்…?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லாப் பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை…! இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன். இதுவும் போய்விட்டதென்றால் பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை.

ஆகவே குருதேவரிடம் சொல்லி… நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள் என்று கூறினார்.

மறுநாள் குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து… “அண்ணே குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா…?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு…
1.“நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு”
2.எம்மை பார்த்து அவனுக்கு ஆசீர்வாதம் கொடு என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின் அவர் சீட்டு விளையாடச் சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி புது சட்டை பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்குப் படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால் அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர், அதை வாங்கி தார்தாறாகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில் ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும் பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால் தான் பெரிய பங்களாவே… காரே வாங்கி விடலாம் என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கெல்லாம் “நீ காபி சாப்பிடு… நீ காபி சாப்பிடு” என்று கூறி அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டைக் குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு, “பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது…? என்றார்.

ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக் கொடுத்தபின் இவன் ஆசை எங்கே போகின்றது பார்…! ஏதோ ஜெயித்து கொடுத்தால் இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான்.

இழந்த பணத்தைச் சம்பாதித்தான்… ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான்… உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி வருவான் பார்…? என்று கூறினார்.

மறு நாள் பால் வியாபாரி சீட்டு விளையாடித் தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது.

மறுநாள் பால் வியாபாரி எங்களிடம் வந்து “என்ன சாமி…? இப்படி ஆகிவிட்டது…!” என்று கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின் “அவரின் ஆசை” சீட்டு விளையாட்டின் மீது தான் போகின்றது.

இப்படி…
1.சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது… “போதும்…” எனும் மனம் வருவதில்லை.
2.தன்னுடைய தொழிலை முன்னேற்றிப் பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.
3.சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது…? என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அதிலிருந்து நீ எப்படித் தப்புவது…? என்று அங்கு சொன்னார்.

ஒருவர் கடலில் ஒரு தீவைக் குறி வைத்துப் படகைத் துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் எதிர் அலைகளைச் சமாளித்துப் படகைச் செலுத்துகின்றார்.

1.இதில் “தீவு என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்” என்று நாம் கருதிக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு
3.இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று நமது நல் ஞானப் பயணத்தை நடத்தி வரவேண்டும்.

நாம் உடல் மீது பற்று வைத்தால் மீண்டும் பிறவியை அடைவோம். நாம் உயிர் மீது பற்று வைத்தால் பிறவி இல்லா நிலையை அடைவோம்.

பிறர் படும் கஷ்டத்தை உணர்வதற்காக எனக்குக் குருநாதர் கொடுத்த அனுபவம்

பிறர் படும் கஷ்டத்தை உணர்வதற்காக எனக்குக் குருநாதர் கொடுத்த அனுபவம்

 

மனித வாழ்க்கையில் மகரிஷிகள் தீமைகளை அகற்றி விண்ணுலகில் எவ்வாறு இன்று சுழன்று கொண்டு இருக்கின்றனர்…? அவர்கள் உடலிலிருந்து தீமையை அகற்றிய நிலைகள் அவர்கள் உடலில் விளைய வைத்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் நம் பூமியில் எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றது…?

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்ற நிலையை எமக்கு உபதேசித்து அனுபவம் பெறும் வழியில் நமது குருநாதர் எம்மை வழி நடத்தினார்.

எமது கால்களில் பல ஆணிகள் உண்டு. கால்களில் ஆணி இருப்பவரைக் கேட்டால் தெரியும். சிறிய கல் பாதங்களில் குத்தினால்கூட உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால்களில் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் சின்னப் பிரம்பை வைத்து 10 அடிகள் அடித்தால் ஜீவனே பிரிந்துவிடும் என்றால் அதன் உணர்வுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு எமது இரண்டு கால்களிலும் 26 ஆணிகள் உண்டு. யாம் ஒரு காலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால் முள்ளில் கால் வைக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த வேதனைகள் தோன்றும்.

எம்மைச் செருப்பே போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.
1.செருப்புப் போட்டால் உன் கஷ்டத்தை நீ உணர முடியாது.
2.இப்படி எத்தனையோ பேர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
3.இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணரவில்லை என்றால் பிறருக்கு நீ உதவியும் செய்ய முடியாது.
4.இதை நீக்கவும் முடியாது என்று குரு சொல்கின்றார்.

உனக்குள் வேதனை எப்படி உருவாகின்றது…? நீ சுவாசிக்கும் உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்பதையும் உணர்த்துகின்றார்

கால் ஆணி வந்தவர்களின் கால் எப்படி முடமாகின்றது…? நன்றாக இருப்பார்கள் ஆனால் வந்துவிட்டால் உடல் அப்படியே குறுகிக் கால்கள் எல்லாம் நலிந்த நிலைகள் ஆகும்.

அவர்கள் மனதும் வேதனைப்படும் உணர்வாக மாறும். இப்படி மனிதர்கள் எந்தெந்த நிலைகளில் தன்னை அறியாது வேதனைப் படுகின்றனரோ அந்த வேதனையின் உருவாக மாறி விடுகின்றனர்.

இதைப் போன்ற நிலைகளை நீ அறிந்தால் தான் அவைகளை மாற்றி அமைக்கும் சக்திகளை நீ பெற்று மற்றவர்களையும் பெறச் செய்ய முடியும் என்றார் குருநாதர்.

ஆகவே
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகத்தியர் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகன் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டிய அருள் நெறிப்படி
5.போகர் காட்டிய அருள் நெறிப்படி நாம் எதை எண்ண வேண்டும்…?
6.எதனை நாம் பருக வேண்டும்…?
7.எதனை நமக்குள் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
8.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
9.அதை “வினைக்கு நாயகனாக” நமக்குள் எவ்வாறு ஆக்க வேண்டும்…? என்ற நிலைகளில் எனக்கு உணர்த்துவதற்காக
10.என் கால்களில் ஆணி இருக்கின்ற வரையிலும் இப்படி நடக்கச் சொல்லிப் பல நிலைகளைச் செயல்படுத்தினார் நமது குருநாதர்.

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

 

எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார்… அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே… கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம்… நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்… ஒரு முறை அல்ல பல முறை…!

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.

மனைவியைக் காப்பாற்றினார்… சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும் அந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.

எத்தனையோ உடல்களில் “உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.

ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.

அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.

1.நீங்கள் அனைவரும் அதைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.

ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும்… குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.

நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ… “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…?” என்று திட்டினார்.

குருநாதரும்… “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார்.

அதாவது… சமுதாயத்தில் இது போன்று சந்தர்ப்பங்கள்
1.சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டு
2.தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை.
1.நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
2.டிரைவர் திட்டியது சரி தான்…! என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் “நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது…”
3.நல்ல அறிவினை ஊட்டினார்…! என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி… குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் எமக்குக் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளியினை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே “நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன்…” என்ற அகந்தை கொண்டால் நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று அந்த இடத்தில் குருநாதர் எம்மைத் தெளிவுபடுத்தினார்.

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால் நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வருகின்றது. இதைப் போன்று ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

எனவே… தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
1.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
2.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

அதைத் தான் உங்களுக்கும் குருநாதர் காண்பித்த அருள் வழியினைத் தெளிவுபடுத்துகின்றோம்.

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.

உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.
1.அதே சமயத்தில் அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அபிஷேகமும் ஆராதனையும் செய்வதைப் போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள்.

இதனால் உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு “நல் அமுது…” கிடைக்கின்றது.

நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும் அருள் ஒளியைப் பெறும் நிலையையும் உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீ பெற்றுக் கொள்… இருளை அகற்ற உதவும். மெய்ப்பொருளைக் காண உதவும். உன்னை அறியாது வரும் தீங்கினை அகற்றிட உதவும்…! என்று குருநாதர் எமக்கு உபதேசித்தார்.

1.நமது குருநாதர் தாம் ஒளியின் சரீரமானபின் எம்மை “நீ அதில் ஆயுள் மெம்பராகு…!” என்று உரைத்தார்.
2.அதே போல் யாம் உங்கள் அனைவரையும் அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

 

யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.

அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி… குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.

அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ…?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா…? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா…?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன.

உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.

இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் “பட…பட…” எனத் துடித்து இரைச்சலாகி… சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்”என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.

அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.

மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.

சோதனையான சமயத்தில் “இப்படி ஆகின்றதே”என்று வருந்தி “உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.

ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்…? என்று கேட்கிறார் குருதேவர்.

ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.

நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.

1.மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதே”என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.

இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.

ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் “நம் உடல் நமக்கு சொந்தமில்லை…!” என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி “மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது…?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

 

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி நீக்கி இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது தீமை என்று தெரிகின்றது… ஆனாலும் சூதாடப் போகின்றோம். சூதாட்டத்தில், தோற்கத் தோற்க
1.விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று
2.திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்றைக் குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம் குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது…” என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

ஆகையினால் சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும் என்று யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்…?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை… இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம்…! என்று பார்க்கின்றேன்.

இதுவும் போய்விட்டதென்றால் பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே குருதேவரிடம் சொல்லி “நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள்…!” என்று கூறினார்.

மறு நாள் குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து “அண்ணே… குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா…?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு…” எம்மை பார்த்து “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு…!” என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின் அவர் சீட்டு விளையாடச் சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி புதுச் சட்டை பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்கு படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால் அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர் அதை வாங்கித் தார்தாராகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில் ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும் பால் வியாபாரிக்கு “மேலும் ஆசை வந்துவிட்டது…” இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால் தான் பெரிய பங்களா… கார் வாங்கி விடலாம்” என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கெல்லாம் “நீ காபி சாப்பிடு… நீ காபி சாப்பிடு…” என்று கூறி, அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார்… 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு
1.பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது…? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான்.
2.அதைக் கொடுத்தபின் இவன் ஆசை எங்கே போகின்றது பார்
3.ஏதோ ஜெயித்துக் கொடுத்தால், இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான்.
4.இழந்த பணத்தைச் சம்பாதித்தான்… ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான்,
5.உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான்… நாளை எப்படி வருவான் பார்…? என்று கூறினார்.

மறு நாள் பால் வியாபாரி சீட்டு விளையாடி தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது. பால் வியாபாரி எங்களிடம் வந்து “என்ன சாமி…? இப்படி ஆகிவிட்டது…!” என்று கேட்டார்.

முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின் அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது.

இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது “போதும்” எனும் மனம் வருவதில்லை. நம்முடைய தொழிலை முன்னேற்றி பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.

இப்படி சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை.
1.ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படித் தப்புவது…? என்று அனுபவபூர்வமாக எமக்குக் காட்டினார்.

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

 

ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.

அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்குப் பயந்து யாரும் வரவில்லை.

அது சமயம் எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு… அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள்.

பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.
1.காலராவில் இறந்த 30 பிணங்களை தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை.
2.எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே
3.எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி… “நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். உனக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே என்று எண்ணியவுடனே, உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது.
1.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று கேட்டார்.
2.காலராவால் தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று
3.குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால் அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.

பிறகு, ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லி தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் “யாம் ஒரு பயில்வான்…” என்று எண்ணி தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தயிர் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும்…? பார்க்கலாம்…!” என்று இருந்தோம். பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம்.

ஏனென்றால் தயிர் குளிர்ச்சி. தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம். அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம், வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. சரி…! நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறைய பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு “தாம் தப்பித்தால் போதும்…” என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.

அவர் எம்மைப் பார்த்து, “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கிறாய்…?” என்று கேட்டார்.

“காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன், இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது” என்று அவரிடம் கூறினோம்.

“அட… நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்து சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து… “நன்றாக மூக்கு பிடிக்கச் சாப்பிடு…” என்று கூறினார்.

1.அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய் எங்கே போனதென்றே தெரியவில்லை.
2.யாம், பூரண குணம் அடைந்தோம்.
3.காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு…! இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல் நிலை குணமானவுடனே, சும்மா இருக்கவில்லை. ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்று காசு சேர்த்து கரும்புச் சற்றை வாங்கிக் காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு… “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று. இது ஒரு சந்தர்ப்பம்.

அப்பொழுதுதான் சொன்னார் குருநாதர்
1.“டேய்… உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2. நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய்…! ஆனால் “நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…” என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கியபின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.

யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம். ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம் பாட்டிக்கு நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது. “பாட்டியை எண்ணினாய் என்ன ஆனது உனக்கு…?” என்று கேட்டார் குருநாதர்.

1.குருநாதர் சொன்ன பின்தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம்.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.

இறந்தவர்களைத் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே என்று ஏங்கினாய்,

உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர். இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் தங்களுள் மெய் ஞானம் பெற்று, மெய் வழியில் வாழ்ந்து மெய்பொருள் காணும் திறனை தங்களுக்குள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
1.உங்களுடைய வாழ்க்கையில் உணர்வின் இயக்கங்களை அறியும் ஆற்றல் பெற்று அருள் ஞானம் பெற்று
2.சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் மிக்க அருள் சக்தி பெற்று
3.இந்தப் பிறவியில், பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச்சரீரம் பெறும் நிலையாக
5.பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது

 

யாம் குருநாதர் காண்பித்த அருள் வழி கொண்டு பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் எமது தாய் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்தார். குருநாதர் அதை எமக்கு உணர்த்தினார்.

1.உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே…!
2.அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்.
3.அதன் பிறகு தான் நீ விண்ணுக்குப் போக முடியும் என்று நினைவுபடுத்தினார்.

ஆகையால் எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களால் சாப்பிட முடியவில்லை. கண் பார்வை முழுவதும் மங்கி விட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.

யாம் அது சமயம் சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால் எமது தாய் சாமியம்மாவை வீரம்மா… என்று பெயர் சொல்லி அழைத்து “ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து இரண்டு மிளகு சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வை… வீரம்மா” என்றார்கள்.

ஏனென்றால் எமது தாய் முட்டை கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும் முன்பு முட்டை கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.

எமது தாயால் அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால் வேக வைத்த கோழி முட்டையில் இரண்டு மிளகும் சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா என்றால்
1.எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது…?
2.கோழியின் மேல்தான் இருக்கின்றது.

உனது அம்மா முட்டையும் கோழிக் கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது என்று குருநாதர் கூறினார்.

எமது தாய்க்கு உதவியாக சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு யாம் தாரமங்கலம் வந்து விட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து ஊர் முழுவதும் விளம்பரமும் செய்து விட்டார்கள்.

இதனால் தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வர வேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத் தாரமங்கலம் வந்து விட்டோம்.

சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம் ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது. ஆகவே ஏதேனும் தகவல் வந்தால் ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்” என்று கூறியிருந்தார்கள்.

தாரமங்கலத்தில் யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது எமது தாயின் ஆன்மா வெளி வருகின்றது.

அது சமயம் எமது குருநாதர் சொன்னது போன்று எமது தாயை மனதில் நினைத்துத் தியானம் செய்தோம். அப்பொழுது அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.

இது தாரமங்கலத்தில் நடந்த சம்பவம்.

அம்மாவின் உருவம் அதனின் உடைகள் அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.

1.எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின் தான்
2.அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை யாம் பெற முடிந்தது.
3.அதற்கு முன்பு வரையிலும் எம்மால் பெற முடியவில்லை.
4.அது வரையிலும் எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை.

அன்னை தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால் அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்ற வேண்டும் என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.

நான் உனக்குக் குருவாக இருக்கலாம்… அருள் ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம். இருந்தாலும்
1.உன் அன்னை தந்தையை நீ விண்ணிற்குச் செலுத்த வேண்டும்.
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு தான் என்னையும் அங்கே அழைத்துச் செல்ல முடியும் என்று குருநாதர் உபதேசித்தார்.

“குரு வாக்கு” தப்புவதில்லை. நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். அது சமயம் தான் எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம்.

எமது தந்தையின் இறப்பின் பொழுது கூட யாம் அவர் அருகில் இல்லை. அப்போது கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து கரூருக்குக் கால் நடையாக வந்திருந்தோம்.

அது சமயம் தான் எமது தந்தையின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.

அங்கே ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. “ஐயோ.. உங்கள் அப்பா போகிறாரே…!” என்றார்,

அருகிலிருந்த இன்னொருவர் “யாரோ ஒரு பெரியவர் போகிறார்…” என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.

எம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைதான் எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள் தான். குருநாதர் காண்பித்த அருள் வழியில் அவர்களை விண் செலுத்தினோம்.

1.முதலில் எமது தந்தை விண் சென்றார்… அடுத்து எமது தாயையும் விண் செலுத்தினோம்
2.இருவரையும் சேர்த்துச் சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.
3.அப்பொழுது தான் ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும் என்று குருநாதர் உணர்த்தினார்.

அதன் பிறகு
1.இதன் உணர்வின் ஒளி கொண்டு உன் உணர்வுடனே வருகின்றேன்… உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன்.
2.என்னை விண்ணில் செலுத்திவிடு… உணர்வின் ஒளியாக இயக்கிவிடு…! என்று குரு சொன்னார்.

எம் அன்னை தந்தையர் விண் சென்றபின்தான் குருவின் உணர்வின் ஒலிகளை அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தினோம்.

உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்துவதற்காக விண்ணின் ஆற்றளைப் பெறுவதற்கு… கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு எம்மைப் போகுமாறு செய்தார் குருநாதர்.

அங்கே கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்துத் தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி…? என்பதை எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான் யாம் அந்தப் பேருண்மைகளை அறிய முடிந்தது.

ஆகவே இன்றைய நிலைகளில் “யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும் பேருண்மையின் உணர்வுகள்…”

அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அதிகாலை துருவ தியானத்திலும் பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
3.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று எண்ணி உந்தித் தள்ளுங்கள்.

முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே அவர்களை விண் செலுத்தினால் அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.

அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால் சப்தரிஷிகளின் அருள் சக்தியை… ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் ஒளியாக நிலைக்கின்றது.
2.இதன் உணர்வின் தன்மை கொண்டு உங்கள் உணர்வுகளும் ஒளியாக மாறுகின்றது.

நீங்கள் இதனை எளிதில் பெற முடியும். உங்களை நம்புங்கள்…! இதன் வழி செயல்படும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.