விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின் உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.

ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம் என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.

ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”

ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை… மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”

ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும் பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள் தான் அவை.

சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.

அதைப் போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.

ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.

இதை எல்லாம் விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.

இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.

அந்த மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

அவன் அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

 

இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும் பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள் என்பார்.

1.நாம் பிரியமாக இருப்பதால் இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!

இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.

தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன் என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.

ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம் சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.

அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன் வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?

நீ யார் பெத்த பிள்ளையோ…? உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று உயர்வாகச் சொல்கின்றார்.

அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை. பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இங்கு தந்தையிடம் இல்லை.

ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும் இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.

1.நீங்கள் இன்னொரு பையனைச் சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்

ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.

இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.

ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின் தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.

இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.

ஆகவே அந்த குணத்தின் இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின் எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.

இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.

அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன் அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.

கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின் சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”

இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின் தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…? என்று காட்டியுள்ளார்கள்.

பழமை கலந்ததின் உணர்வின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

 

இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.

இவ்வெண்ண‌ நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.

நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை “அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு” இதுவும் ஒரு காரணம்.

தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.

இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் “நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான்” அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க…
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…”
4.முன்னோர்களை வணங்க எதற்காக “ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”

இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் “முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…”

ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும்… பலவாகவும்… கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன… இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.

இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…?

 

குருநாதர்:-
உங்களின் தியான ஈர்ப்பின் அருளினால் உங்களின் ஈர்ப்புக்குகந்த போதனையை உணர்த்தி வருகின்றேனம்மா. நீங்கள் இருவரும் செலுத்திய தியானத்தின் ஈர்ப்பிற்கு உங்களுக்கு இப்பொக்கிஷப் பேழையை அளிக்கின்றேன்.

இதிலிருந்து அருளப்பெறும் உண்மைகளை உமதாகப் போற்றி சிவனடியார்கள் என்று உணர்த்திய சித்தர்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பக்தி வழி பெற்று எதை அடைய வேண்டும் என்று அதன் நிலை பெற்று இதனை உமதாகப் பிறருக்கு வெளிப்படுத்தாத பொக்கிஷமாய் வைத்துப் பேரின்பப் பெருநிலை என்று அந்நிலையை அடையலாம்.

இன்றைய தியானத்தில் குருநாதர் (சற்குரு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர்) இந்நிலையில் காட்டித் தந்து அருளியவுடன் பேரானந்தம் கொண்டு அவர் தந்த பேழையை நான் பெற்றவுடன்… என் எண்ணத்தில் சில வினாக்கள் தோன்றி அவரிடமே என்ன பயன்…? என்றெல்லாம் வினா எழுப்பினேன்.

பிறகு அவரிடம் அப்பேரின்பப் பெருநிலையை நீங்கள் தந்த அருள் பொக்கிஷத்தை நான் பெற்றால் சுயநலம் என்ற நிலையில் நான் தனிமையாக்கப்படுவேன். அதனால் பெறக்கூடிய பயன் என்ன…? என்ற வினா எழுப்பினேன்.

குருநாதர்:- நம் பூமியில் அதுவும் இவ் இந்திய கண்டத்தில் பல பொக்கிஷங்கள் அரசர்கள் ஆண்ட காலத்திலிருந்து வைக்கப்பட்டு அப்பொருள் உபயோகமற்று நம் பூமியில் உள்ளது.

இன்று உங்களுக்கு என் அருளினால் உலகத்தில் உள்ள எப்பொருள் எங்குள்ளது…? என்று உணர்த்தினால் அதன் பயனை நீங்கள் பெறவும் அதைப் பிறர் எடுக்கவும் உங்களின் தியான அருள் வழி செய்யும்…! என்று உணர்த்தி குருநாதர் பதிலுரைத்தார்.

இவர் எங்களை எங்களின் அருள் நிலையையும் அவர்பால் வைத்துள்ள பக்திக்கும் “பொருளைக் காட்டிச் சோதனைக்குள்ளாக்குகின்றார்” என்பதனை அறிந்து கொண்டோம்.

ஆரம்பத்தில் நீங்கள்தான் பாடத்தில் உணர்த்தியுள்ளீரே…! அரசர்களாலும், அன்றைய மக்களாலும் பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ள பொக்கிஷங்களை அவர்களின் ஆவியே அங்குள்ள பொழுது அதனை அடைவது நம் சாதனைக்குடையதா…? என்று சபல எண்ணமுடனும் முதலில் வினா எழும்பியது.

அதற்கும் குருதேவர் ஆவி நிலையில் பூதங்களாய் உள்ளவற்றை சப்தரிஷிகள் துணையுடன் எங்கள் துணை கொண்டு இப்பூமியில் எங்கெங்கு எப்படி எப்படி பொருள்கள் புதைக்கப்பட்டுள்ளன எனச் சிலவற்றைக் காட்டி எங்களைச் சோதனைப்படுத்தினார்.

1.அவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சில வினாக்களை எழுப்பி அதன் நிலையில்
2.எங்களை எண்ணத்தினால் பல சோதனைகள் வைத்துத்தான் எங்களின் அருள் நெறி தியானத்திற்கு வழிகாட்டித் தருவார்.

எங்கள் குரு வேணுகோபால சுவாமிகள் அடிக்கடி ஈஸ்வரப்பட்டர் அவர்கள் உடலுடன் உள்ள காலத்திலும் இன்றும் அவருக்கு ஏற்படும் சோதனையின் நிலையெல்லாம் ஒரு சில உணர்த்தியுள்ளார்.

இன்று எங்களையும் அதே சோதனைப்படுத்தினார்.

அப்பொழுது
1.”நான் தந்த அருள் பொக்கிஷத்தை நீ ஏற்கவில்லையா…?
2.எங்களின் அருளால் எங்களால் தான் இந்நிலை ஏற்பட்டது என்ற பெயர் நிலைக்கும்.
3.“நாங்களே அருள் தந்த பிறகு நீ எப்படி மறுக்கலாம்…?” என்ற வினாவும் எழுப்பினார்.

உடனே குருதேவர் “உள் நிலையில் இருந்து மட்டும் பதிலளிக்க வேண்டாம். உன் கணவரிடம் இவ்வினாவை எழுப்பு” என்றார்.

அவர் உடனே
1.”இப்பொழுது குருநாதரின் அருளினால் கிடைக்கப்பட்ட ஆத்மீக வழித்தொடரின்
2.ஞான பொக்கிஷத்தின் அருள் நிலையடையும் பக்குவப்பேற்றைத் தந்தால் போதும். பொருளான பொக்கிஷத்தால் எப்பயன்…?” என்றார்.

உடனே குருநாதர் “இதே வட்டத்தில் இருந்தால் போதுமா…? ஜீவாதாரப் பொருள் இருந்தால்தான் உயர்ந்தவனாக உலகம் மதிக்கும்… வாழ்க்கை நடக்கும்” என்று உணர்த்தினார்.

இப்பொழுது நான் எழுப்பிய வினாவிற்கு குருநாதர் கைதட்டிச் சிரித்துவிட்டுச் சில வழிமுறை பாடங்களைத் தந்தார்.
1.பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இவ்வுடலின் பிம்பத்திற்கு
2.“இவ்வுயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற”
3.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வ சக்தியைப் பெறும் பொக்கிஷத்தைப் பெறும் ஞான அருள் பெறுங்களம்மா…!

உலகத்திலுள்ள பொருள் பொக்கிஷத்தை நாடி உங்கள் நாட்டம் செல்கிறதா…? என்பதனைத்தான் இன்று உங்களுக்கு சோதனையாக்கிக் காட்டினேன் என்று கூறி அவரால் இன்னும் சில உபதேசங்களும் எங்களுக்கு அளிக்கப்பட்டன.

துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்

துருவப் பகுதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகப்படியான மாற்றங்கள்

 

இது நாள் வரை உள்ள ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் உணர்ந்த உண்மைக்கு மேலும் வலுக்கொண்ட பல நிலைகள் இன்று கூடி வருகிறது.

நம் பாட முறையில் யான் உணர்த்திய நிலையில் நம் பூமியின் சுவாச நிலை பெற்று வாழும் உயிர் ஆத்மாக்கள் மற்ற கோள்களில் சென்று வாழ முடியாது… இப்பூமிக்குகந்த ஈர்ப்பு குண அமிலத்தைத்தான் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தி வாழ்கின்றது என்பதனைப் பல இடங்களில் உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஓட்டப் பாதை சிறிது மாறு கொண்டுள்ளதாகவும்… மாறு கொண்ட அமிலங்களும் ஓடும் ஓட்டமுடன் நம் பூமியின் ஈர்ப்பு காற்று மண்டல நிலையுடன் சிக்குண்டு மோதிச் சிதறும் நட்சத்திர மண்டலங்களின் அமில குணமும்… “முந்தைய நாட்களைக் காட்டிலும் மாறு கொண்டு வருகின்றது” என்று உணர்த்துகின்றேன்.

மாறு கொண்ட அமிலத்தைத் தான் நம் பூமி ஈர்க்காதே…! அப்படியிருக்க நம் பூமியின் சுவாச நிலை கெடுவதேன்…? என்ற வினா எழும்பலாம்.

1.நம் பூமியின் ஈர்ப்பு வட்டக் காற்று மண்டல நிலைக்கும்
2.நம் பூமியின் வட்டத்திற்கு மேல் காற்று மண்டலத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும்
3.நம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் தான்
4.பல சக்தி நிலைகளும் அமில நிலைகளும் மாறுபட்டு நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருகின்றன.

நம் பூமி ஈர்த்து விடும் சுவாச அலையும் பால்வெளி மண்டலத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் (பூமியின் ஈர்ப்பிற்கு வரும்) அமில குணங்களும் இவ்விடைப்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்டுத் தான் (FILTER) நம் பூமியின் ஈர்ப்பிற்கே வருகிறது.

அப்படி இருக்க மாறு கொண்ட ஓட்ட கதியில் அமில குணங்கள் அதிகப்பட்டு வருகிறது என்றால் அதனின் பொருள் என்ன…?

நாம் சமையல் செய்யும் பொழுது ஒரு வகை மரத்தை கருவேல மரத்தை வைத்து எரிக்கின்றோம். அதனுடன் மற்ற குணவிறகைக் குறைவாக வைக்கும் பொழுது கருவேல மரத்தின் நிலை உயர்ந்ததாக இருக்கும்.

மற்ற விறகைக் கருவேல மரத்தைக் காட்டிலும் அதிகமாக வைத்து எரிக்கும் பொழுது மற்ற விறகின் நிலை அதிகமாகக் கூடி விடுகிறது.

எரிந்து ஆவியாகிக் கலக்கும் நிலையில் அதிகப்படியாக வைத்த விறகின் குண ஆவி நிலையும் கருவேல மரத்தின் ஆவி நிலையும் ஒன்றுடன் ஒன்று கலந்து அதற்குகந்த தனி அமில நிலையாகி மீண்டும் ஒரு நிலையான தன்மை வழிபடுகிறது.

அதைப் போல்
1.நம் பூமியின் ஓட்டக் கதியில் இன்று ஓடும் மாறு கொண்ட ஓட்டத்தினால் ஏற்படும் புதிய அமில குணமானது
2.வழக்கமாக எடுக்கும் நிலையைக் காட்டிலும் அதிகப்பட்டுள்ளதால்
3/நம் பூமியின் ஈர்ப்பு நிலைக்கும் பால்வெளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள இச்சுத்திகரிப்பு ஆலை
4.”புதிய அமில குணத்தை” நமக்கு அனுப்பி வருகின்றது.

இதன் தன்மை நம் பூமியின் நிலையில் அதிகமாக ஜீவராசியின் சுவாச நிலைக்கு வருவதைக் காட்டிலும் நம் பூமியின் “வட துருவ தென் துருவ” நீர்நிலையின் ஈர்ப்பிற்குத்தான் அதிகமாகச் செல்கின்றது.

முந்தைய பாடத்திலேயே நம் பூமிக்கு உயிர் நாடியாய் வட துருவம் தென் துருவம் அமைந்துள்ளன என்று உணர்த்தினேன். அதுவல்லாமல் நம் பூமிக்குச் சில இடங்களில் சூரியனின் ஒளியே காணாத இடம் உள்ளது என்றும் உணர்த்தினேன்.

ஆனாலும் அங்கு உயிரணுக்கள் உண்டு. சூரியனின் ஒளி படாவிட்டாலும் (நேராக) பூமியின் சுவாச அலையின் வெக்கையும் காற்று மண்டலத்தின் அலையும் அங்கு உள்ளதினால் ஜீவன் உண்டு. ஆனால் கடும் விஷ குணங்கள் நிறைந்துள்ள இடங்களாகத் தான் அவை உள்ளன.

இப்பூமியிலேயே பலதரப்பட்ட வளர்ச்சி நிலைகள் எண்ணிலடங்கா வண்ணம் உள்ளன. அதற்குகந்த நிலையை அவை அவை பிரித்து அவற்றின் வளர்ச்சி நிலை வளர்கின்றது.

இதை உணர்த்தும் நிலை எதற்கு…? என்று எண்ணலாம்.

பூமியின் மாறு கொண்ட ஓட்ட கதியில் இருந்து பூமியின் அலையுடன் அதிகப்பட்டு அவ்வமிலங்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்கு வந்தாலும்
1.அதன் நிலைக்குகந்த ஈர்ப்பு நிலையான நம் பூமியின் சூரிய ஒளி படாத இருண்ட பகுதியின்
2.அமில குண வர்க்கத்தின் தொடர்புடைய அமில குணமாக அது இருப்பதினால்
3.இருண்ட பகுதியின் ஈர்ப்பிற்கு இப்புதிய நிலை விஷ அமிலம் சென்று விடுகின்றது.

ஆனால் இதன் வளர்ச்சி நிலை அதிகரிப்பினால் இன்றைய காலகட்டத்தில் நம் பூமியின் ஆத்மாக்கள் ஏற்க முடிவதாகத்தான் உள்ளது. காலநிலை கூடக்கூடத் தான் இதன் வளர்ச்சி நிலையில் அதிகரிப்பும் ஏற்படும்.

1.மிளகாய் குறு மிளகு இப்படியுள்ள செடிகள் அதற்குகந்த கார குணத்தையும்
2.கரும்பும் கனிகளும் அதற்குகந்த இனிப்பு குணத்தையும் அதனதன் பழக்கப்பட்ட ஈர்ப்பில் வளர்வதைப் போல்
3.இன்றைய நிலையில் நம் பூமியின் ஓட்ட மாற்றத்தினால் வந்தடைந்த அமிலத்தை எடுக்கக்கூடிய
4.இருண்ட பகுதியில் உள்ள விஷ ஜெந்துக்களுக்கும் தாவரங்களுக்கும் உகந்ததாக உள்ளது.
5.”இதன் வளர்ச்சியினால் தான் மாற்ற நிலை ஏற்படும்…”

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

நான் சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

 

வலுவிழந்து வலு கூட்டிக்கொள்ளப் போகின்றது நம் பூமி என்று உணர்த்தினேன். எதன் அடிப்படைத் தன்மையில்…?

முந்தைய பாடத்தில் நம் பூமியின் ஓட்டமுடன் பூமிக்குகந்த அமில குணங்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பூமியின் ஈர்ப்பில் வந்து சிக்குகின்றன என்றும் உணர்த்தினேன்.

வலுவிழந்து வலுக்கூடும் நிலை என்பது
1.இன்றைய பூமியின் வலுவிழந்த இந்நிலை…
2.இப்பொழுது பூமியின் மாறு கொண்ட ஓட்டப் பாதையில் சந்திக்கும் நட்சத்திர மண்டலங்களில் சிதறல்களும்…
3.மாறு கொண்ட அமில குணத்தின் சேர்க்கையில் ஏற்படும் நிலையில் ஏற்படும் புதிய அமில வளர்ச்சிக் குணங்களின் அதிகரிப்பும்…
4.நம் பூமியின் ஈர்ப்பில் மோதுண்டு இன்றைய இயற்கைத் தன்மையின் நிலையே
5.மாறு கொண்டு செயல்படும் இன வழிப்பாதை நிலை நம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது.

வழக்கமான பாதை நிலையிலிருந்து மாறு கொண்டு சுழன்று ஓடும் தன்மையினால் அந்த இடங்களுக்குகந்த அமில குணங்களும் ஏற்கனவே நம் பூமி வளர்த்துக் கொண்ட நம் பூமியின் ஈர்ப்பலையின் காற்று மண்டல அமில குணத்துடன் புதிய அமில குணங்களின் ஈர்ப்பின் நிலை மோதுண்டு இது வெளிப்படுத்தும் அமிலமும் மோதுண்டு ஒன்றுக்கொன்று உராய்ந்து ஏற்கும் நிலை பெறுவதற்கு முன்… ஒளி அலையாகி அதற்குப் பின் தான் பூமியின் ஈர்ப்பலைக்கு… இப்பொழுது ஓடும் பாதையில் சந்திக்கும் “புதிய அமில குணம்” நம் பூமியின் ஈர்ப்பின் காற்று மண்டலத்துடன் கலக்கும் தன்மை பெறுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்குள் உள்ள அமில குணத்தின் மாற்ற குணங்கள் மோதிடும் நிலையிலேயே மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன.

சுழன்று ஓடும் இப்பெரிய நம் பூமியின் கோளத்தைக் காட்டிலும்…
1.நம் பூமி உறிஞ்சி வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் விகித வட்டம் பெரிதாக உள்ள தன்மையில்
2.இவ் ஓட்ட கதியில் ஏற்படும் அமில மோதலில் ஏற்படும் ஒளி வட்டம் தான் என்று பூமியைச் சுற்றியுள்ள ஒளி வட்டம்.
3.முந்தைய காலங்களைக் காட்டிலும் இன்றைய நிலையில் அவ்வொளிப் பிரகாசம் கூடுதலாகத் தெரிகின்றது.

நம் பூமிக்கு என்று ஏற்பட்டுள்ள இந்நிலையினால் அபரிமிதமான அமில சக்திகள் ஓடும் பாதையில் இருந்தும் நட்சத்திர மண்டலங்களின் வெடிப்பு நிலையில் இருந்தும் கூடிக்கொண்டு அதிகமாக பூமியின் சுவாச நிலைக்கு வருகிறது.

அப்படி வருவதினால் வலுவிழந்து வலு கூடும் தன்மை என்பது இக்கலி காலத்தில் மனிதனால் காற்று மண்டலத்தை நஞ்சாக்கி வலுவிழக்கச் செய்த நிலையை…
1.இம்மாற்ற ஓட்டத்தின் நிலையினால் ஏற்பட்டுள்ள மாறு கொண்ட அமில குணத்தை நம் பூமியின் அலையில் கலக்கச் செய்து
2.நம் பூமியின் பழக்கப்படுத்திக் கொண்ட நிலையிலிருந்து அதிகச் சுமை கலக்கப் பெற்று
3.அதை ஏற்கும் பக்குவத்தன்மையை நம் பூமியின் சுவாச நிலை ஏற்றுக் கொள்ளும் இயற்கை நிலை இல்லாததினால்
4.பூமியின் சுவாச நிலையை மனிதனுக்கு எப்படி அதிகமான உணர்ச்சி நிலை ஏற்படும் பொழுது இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறதோ
5.அதைப் போன்ற நிலையில் நம் பூமி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சிறுகச் சிறுக உள்ள இந்நிலை அதிகப்படும் தருணத்தில் பூமியின் சுவாச அலைகள் மாறு கொண்டவுடன்
1.இன்று மனிதனால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் நிலைக்குகந்த பாதுகாப்பும் குறைந்து
2.முந்தைய பாடத்தில் உணர்த்தியுள்ளதைப் போல் இக்கலியின் மாற்ற நிலையை மனிதன் காணப் போகின்றான்.

சொல்லும் நிலைகள் வேடிக்கையாக இருக்கலாம்…!

காற்று மண்டலத்தின் ஈர்ப்புக்கு வந்துள்ள புதிய குண அமிலத்தின் வளர்ச்சியின் புதிய சக்திகள் உருவாகலாம். இயற்கையில் விஞ்ஞானத்திற்கும் செயற்கையின் வழி வாழ்க்கைக்கும் இன்றைய ஆராய்ச்சியில் இருந்தும்… பல உண்மைக் குண நிலைகளை எடுக்கலாம்.

ஆராய்ச்சிக்குப் புதிய வழித் தொடரில் சென்று பாருங்கள்… இதன் உண்மைக் குணம் புரியும்.

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

 

ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.

எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.

இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.

அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.

பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து… மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.

காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து… அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிறது.

இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு… ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம்… நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை‌ கூடும்.

இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம்… எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து “நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்…”

மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது

மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது

 

பூமியின் உள் நிலையை நாம் எப்படி விரயப்படுத்துகின்றோம்…? பூமியிலிருந்து எடுக்கப்படும் கனி வளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண, காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் பூமியிலிருந்து அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகப் பல சக்திகளை விரையப்படுத்துகின்றோம்.

ஆங்காங்குள்ள கனி வளங்களை எடுத்துவிட்டாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருக்க இன்றைய செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்துகின்றது.

பல ஆயிரம் ஆண்டு காலங்களாக பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்தே உள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.
1.ஆனால் இக்குறுகிய நூற்றாண்டுகளில் பெட்ரோலிய இன திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காக காந்த அலையின் அணுசக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததினால்
3.பூமியில் வளர வேண்டிய கனிவளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன் அதன் வளர்ச்சியும் குன்றிவிட்டது,

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல. வாத்து தானாக தினசரி இட்ட முட்டைகளை பேராசை கொண்டு ஒரு நாள் அவ்வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல “நம் பூமியின் நிலையை நம் மனிதர்கள் சிதறடித்து விட்டனர்…”

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் ஞானத்திலும் வேகமில்லை.
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டுமென்ற பேராசையின் வெறி வேகம்
3.மனிதனுக்கு மிகவும் துரிதப்பட்டதினால் இயற்கையின் பொக்கிஷத்தை அழித்து வாழ்கின்றோம்.

இயற்கையின் சக்தியே ஒன்றுடன் ஒன்று கலந்து கலந்து ஒன்றிலிருந்து வெளிப்படும் அமிலமானது மற்றொன்றில் மோதி மற்றொன்று புதிய உயிர் ஜீவன் கொண்டு அதிலிருந்து வெளிப்படும் அமிலம் அதற்குகந்த தன்மையில் மாறு கொண்டு மாறி மாறியே வளர்ந்து வருகின்றது தொடர் வளர்ச்சியாக.

உங்களின் வினாவை எழுப்பலாம். இப்பூமியின் அமில குணம் இப்பூமியின் காற்று மண்டலத்திலேயே தான் உள்ளதென்கின்றீர். அப்படி இருக்க பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி குணங்கள் மாறுபட்டால் மீண்டும் நம் பூமியின் ஈர்ப்பில் தானே நிலைபெற வேண்டும் என்று.

ஒன்றிலிருந்து பிரிக்கப்படும் அமிலமானது அதன் இன நிலையில் இருந்து ஆவியாய் காற்று மண்டலத்தில் சுழலும் நிலையில் அவ்வமிலத்துடன் மற்றொரு அமில நிலை மோதுண்டு அது ஏற்காத நிலையில் பிரியும் நிலையில் அதிலிருந்து ஒரு வகை அமிலம் வெளிப்படுகின்றது.

அதுவுமல்லாமல் மழை வரும் காலங்களில் ஏற்படும் இடியினால்தான் இவ்வுலகின் பல இயற்கையின் குண அமில வர்க்கங்கள் மாறுபாடு கொண்டு வளர்கின்றன.

இப்படியே மாறு கொண்டே அமில வளர்ச்சியில் சுழன்று ஓடும் நிலையில் மாறுபடும் இயற்கையின் வழித்தொடர் கொண்டு நாம் வாழ்ந்து வருகின்றோம்.

எல்லா வகை இயற்கை வளங்களுமே உருவிலும் சுவையிலும் வண்ணத்திலும் ஒளியிலும் ஒலியிலும் நீரிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் உள்ளது. நம் நிலைக்கு ஒன்று போல் உள்ளனவாகத் தெரிபவையும் சிறுகச் சிறுக அதன் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலை எல்லா மண்டலங்களின் நிலைக்கும் ஒத்ததுதான்.

1.நம் பூமியின் நிலையில் மட்டும் இப்பூமியின் மாறிடும் தன்மை குணத்தில் ஏற்படப்போகும் நிகழ்ச்சிக்கு
2.மனித ஆத்மாவினால் நிகழுகின்றது என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்…?
3.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிபட்டதற்கு மனிதனைக் குற்றம் காணலாமா…? என்ற வினா எழும்பலாம்.

மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இத்தீய அமில குணத்தினால்தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு ஒருவனை உயர்த்தி ஒருவனை அடிமை கொண்டு வாழ்ந்த எண்ணத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டு பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
1.இயற்கையில் இருந்த அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
2.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால்தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகின்றது.

உலக மாற்றத்திற்குப் பின்…

உலக மாற்றத்திற்குப் பின்…

 

இப்பூமியில் நிகழப்போகும் மாற்றத்தினால் இப்பூமியில் உள்ள இயற்கைக் குண அமிலத்தில், குண அமிலம் என்பது இப்பூமியின் மேல் பகுதியில் உள்ள அனைத்து ஜீவன் கொண்ட நிலைகள் எல்லாம் மாற்றத்தில் உருமாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலை இப்பொழுது பூமியின் தன்மை மாறும் பொழுது இதிலுள்ள எல்லா இயற்கை நிலையும் மாறிய பிறகு (இறந்த பிறகு) அதனுடைய அமில குணங்கள் எப்படி வெளிப்படுகின்றன…?

ஒரு கனி அழுகிவிட்டால் அக்கனியில் உள்ள நீர்ச்சத்தெல்லாம் உஷ்ணம் படப்பட வெளிப்படுகின்றது அல்லவா…? பல நாட்கள் நாட்களுக்குப் பிறகு அது காய்ந்து எதுவுமே இல்லாமல் அதனுடைய சக்கையும் மண்ணுடன் மண்ணாய் கலந்துவிடுகிறது.

அதைப் போன்று இவ்வுலக மாற்றத்தில் அழியப்படும் எல்லா இயற்கை ஜீவன்களும் இப்பூமியின் மேல் ஜீவனற்று உள்ள நிலையில்… இப்பூமியின் சுழற்சியினால் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் உஷ்ண அலைகள் அவற்றின் மேல் மோதுண்டு மோதுண்டு…
1.அதிலிருந்து வெளியாகும் ஆவி அமில குணத்தின் நிலையுடன் இப்பூமியிலிருந்து பிரிந்த உயிரணுக்கள் எல்லாம்
2.மீண்டும் உஷ்ண அலைகள் பட்டவுடன் ஜீவன் பெற வருகின்றன மாறு கொண்ட நிலையுடன்.

அதன் தன் நிலையிலேயே மீண்டும் வர முடியாது. ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அமில குணமே அதன் சுவாசத்தை ஈர்க்கும் உயிரணுவுடன் மோதுண்டு ஜீவனுக்கு வரும் பொழுது உரு மாறப் பெறுகின்றது.

எப்படி…? என்று வினா எழும்பலாம்.

கொசு எதற்காக இரத்தத்தை உறிஞ்ச மனிதனையும் மிருகத்தையும் மட்டும் கடிக்கின்றது…? தாவரத்திலும் பல நிலைகள் உள்ள பொழுது மனிதனின் இரத்தத்தைத்தானே அக்கொசு விரும்புகிறது.

மனிதனிலிருந்து அவன் இறந்து விட்டால் அவ்வுடலைப் புதைத்த நிலையிலிருந்து வெளிப்படும் பல கோடி அணுக்கள் இக்காற்றுடன் படர்ந்துள்ளன.

அந்நிலையில் மனிதன் உண்டு கழித்த சாக்கடை நீர்களிலும் மனித மலத்திலும் மனிதனால் உண்ணப் பெறும் கனிகளின் அழுகிய பழங்களில் இருந்தும் இக்காற்றில் படர்ந்துள்ள இவ்வுயிரணுக்களுக்கு ஆகாரம் எடுக்க அதன் மேல் மோதுண்டவுடன்… அங்குள்ள ஈரத்தின் உஷ்ண அலையில் இஜ்ஜீவ அணு பட்டவுடன் உருவ நிலை கொண்டு கொசுவாகி புழுவாகி உரு அமைப்புப் பெற்றவுடன் அது சுற்றி வாழும் தருவாயில் மனிதனின் இரத்தத்தையே ருசி காண வருகிறது.

நாய் உள்ள இடத்தில் நாய் உண்ணி என்னும் ஒருவகைக் கொசு இருக்கும். அதைப் போன்று ஒவ்வொரு மிருக இனத்திற்கும் அது அது உள்ள இடத்தில் அதன் இன வர்க்க உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களின் அமில குணத்தில் பிறப்பெடுக்கும் அதன் இன வர்க்க சுவாச குணமுடைய பல உயிர்ப்‌‌ பிறப்புக்கள் வளர்ச்சி கொள்கின்றன.

ஓர் உயிராத்மா ஓர் ஜீவ உடல் (மனிதனோ, மிருகமோ) அதன் நிலை மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் உயிரணுக்கள் அதன் நிலைக்கொப்ப அமில குணமுடைய உருக்கொண்டு அந்நிலை (அவ் உருவ நிலை) மாறும் பொழுது… அதிலிருந்து சில நிலைகள் ஏற்பட்டு ஏற்பட்டு பல உருவ நிலைகளும் மாறி மாறி வரும் ஜீவ ஜெந்துக்களின் நிலையும் இன்றைய கால நிலையிலேயே ஏற்பட்டு வருகின்றது.

இவ்வுலகமே மாற்றம் கொள்ளும் தருவாயில் எல்லா ஜீவ ஆத்மாக்களின் நிலையும் மாறு கொள்ளும் பொழுது எந்த நிலையான மாற்றம் ஏற்படும் என்று எண்ண முடிகின்றதா…?

1.இன்றளவும் இவ்வுலகினில் நடந்து வந்த நிலையே இக்கலி மாறி கல்கியுகத்தில் எல்லா நிலைகளுமே மாறித்தான் நடக்கும்.
2.ஒன்றிலிருந்து ஒன்று மாறும் பொழுது ஒன்றைப் போல் ஒன்று இருக்காது. கல்கி என்ற புதிய உலகச் சுழற்சி தான் மீண்டும் ஏற்படும்.

இப்புதிய உலகில் இக்கலியில் மாற்றம் கொண்ட இயற்கைத் தன்மையினால் இவ் இயற்கையின் ஜீவ அணுக்களெல்லாம் கல்கி யுகத்தில் உருவ நிலைக்கு வரும்பொழுது “எண்ணிலடங்கா மாற்ற நிலை கொண்ட வளர்ச்சிகள்” ஏற்படப்போகின்றன.

இப்பூமியின் ஈர்ப்பில் ஜீவிக்கும் ஜெந்துக்களுக்கு மட்டுமா…? பறக்கும் பறவைகளின் நிலை எல்லாம் எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

மாற்றத்தினால் அப்பறவைகளின் நிலையும் மாறப் போகின்றது. இப்பூமியின் ஈர்ப்பு சுற்றளவில் உள்ள மண்டலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நிலையும் தான் இம்மாற்றத்தினால் மாறப்போகின்றது.

இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையினால் தான் உள்ளது. அந்நிலையில்
1.இம் மாற்றத்தினால் வெளியிடப் போகும் உஷ்ண அலையின் வெக்கையான அமில குணங்கள் மாறும் பொழுது
2.இப்பூமியின் ஈர்ப்பில் சுழன்று ஓடும் காற்று மண்டலத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு வழக்கமாய்ச் சுவாசித்த காற்றின் குண நிலை மாறும் பொழுது
3.அதன் எண்ண நிலையும் மாறு கொண்டு அதன் சுவாசத்தின் நிலையினால் அதன் ஜீவ உடலும் மாறத்தான் போகின்றது.

இந்நிலையினால் பலப் பல மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன.

பூமி பரிசுத்தமடையும் காலம்

பூமி பரிசுத்தமடையும் காலம்

 

மனித ஆத்மாக்களுக்குத் தான் வழிமுறையும் செயல் திறமையும் செய்விக்க உணர்த்துகின்றேன். இவ்வுலக மாற்றத்தில் மிருகங்களின் நிலை என்ன…? மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…?
1.இவ்வுலக மாற்றத்தினால் மனிதனின் நிலை மட்டும் மாற்றப்படுவதில்லை.
2.இப்பூமியின் இயற்கைக் குணமே மாற்றம் கொள்ளப் போகின்றது.

நல்ல கனியை அது கெடாத வரைக்கும் சுவை உணர்ந்து உண்ண முடிகின்றது. அதே கனி அழுகிவிட்டால் நாற்றம் அடிக்கின்றது. அதைப் போன்று மாற்றம் கொள்ளும் தருவாயில்… நல் உணர்வு கொண்ட ஆத்மாக்கள் மற்ற ஜீவ ஜெந்துக்கள் இவற்றின் நிலையில் இருந்து “மாறும் அமில குணங்கள் தான்” இவ்வுலகமே கல்கிக்குச் செல்லும் அவதார நிலைப்படுத்துகிறது.

தீய எண்ணத்தை கொண்ட விஷமான அமில குணங்கள் இவ்வுலகினில் இக்கலியுடன் மாறப் போகின்றது. ஜீவராசிகளில் உன்னத சக்தியுடைய
1.நம் மனித ஆத்மாக்கள் காணாத பல கோடி நிலைகள் உண்டு.
2.பல கோடி தாவர வர்க்கங்களுண்டு
3.நாம் கண்டுணரும் பட்சிகளும் மற்ற சாது குணங்கள் கொண்ட பிராணி வர்க்கங்களும் பல உண்டு.

இவ்வுலக மாற்றத்தின் போது அந்தந்த இடங்களின் மாற்ற நிலைக்கொப்ப அங்கங்குள்ள ஜீவன்கள் எல்லாமே இன்றைய நிலை கொண்ட ஜீவநிலை உருமாறி… அவ்வுயிரணுக்கள் அவ்வுருவிலிருந்து பிரிந்தவுடன் அவ்வுருவுக்குண்டான ஆவியான அமில குணங்கள் நற்குணங்கள் எல்லாம் ஆவியான நிலையில் திடப்பட்டுப் பல உன்னத சக்தி கொண்ட பல கனிவளங்கள் இப்பூமியில் தோன்றிட… கலிக்குப் பிறகு கல்கியில் செயல் கொள்ள உதவுகின்றது.

அப்பொழுது அக்கல்கியில் எந்நிலை கொண்ட தன்மையில் உயிரணு வெளிப்பட்டதோ அதன் சக்தி இப்பூமியில் கல்கியில் உருவாக்கும் உயிர்த் துடிப்பின் உன்னத சக்தியில் அவ்வுயிரணுவின் உருவ ஜொலிப்பு இருந்திடும்.

இவ்வுலகம் முழுமைக்கும் இன்றுள்ள உண்மையின் உயிர் ஜீவ நற்சக்திகள் அதிகம். கடலும் மலையும் மடுவும் எல்லாமே. ஜீவத் துடிப்புள்ள சக்திதான்.
1.இத்தீய எண்ணங்களும் தீய செயலும் புரிவதெல்லாம் மனித ஆத்மாக்களின் தொடர் தான்.
2.மனிதனிலிருந்து சென்ற சென்ற மிருகங்களும் சில உள்ளன.
3.இம்மாற்றத்தினால் இத்தீய சக்திகள் மாறப் போகின்றன.

எத்தீய சக்தியும் கல்கிக்கு மருந்தாகச் செல்கின்றது. எந்த நிலையில்?

இப்பொழுது எப்படி இக்காற்றில் உள்ள விஷத்தன்மையை சில விஷச் செடிகள் தன்னுள் ஈர்த்துக் கொண்டு இக்காற்றை சுத்தம் ஆக்குகின்றனவோ அதைப் போல் பல நிலைகளை இன்றுள்ள தீய குணங்களும் இம்மாற்றத்தினால் வளர்ச்சிப் பெறப் போகின்றன கல்கியில்.

இவ்விஷமான காற்று எங்கு செல்லும்…?

இவ்வுலகம் மாற்றம் பெற்றால் எல்லாமே ஆவி நிலையாகி அமில குணப்பட்டு திடப்பட்டு ஒன்றுடன் உராய்ந்து வளர்ந்து கொண்டே தான் உள்ளது. தீய சக்தியையும் அழிக்க முடியாது… நற்சக்திகளையும் அழிக்க முடியாது.

இம்மாற்றத்தினால்…
1.இவ்வுலகத்துடன் கலந்துள்ள காற்று மண்டலத்தின் கரியமில வாயுவின் விஷச் சக்தி
2.இவ்வுலகின் இயற்கைத் தன்மையினால் இவ்வுலகம் மாறும் தருவாயில்
3.இவ் இயற்கைக் குணத்தில் இருந்து வெளிப்படும் ஆவியான அமில சக்தி அதிகப்பட்டு அதன் திடத்தினால்
4.இக்காற்று உலகத்தின் இன்று சுழன்றுள்ள தீய விஷமான அமிலக் குணத்தை இந்நற்சக்திகளின் அமில குணங்கள் மோதுண்ட பொழுது
5.சுழன்று கொண்டுள்ள இக்காற்று மண்டலத் தன்மை மேல் நோக்கி இப்பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் சென்று விடுகின்றது.

இப்பூமியில் ஈர்ப்பின் காற்று குண அமில நிலைக்கு மேல் இத்தீய சக்தி பல நூறு மைல்களுக்கு மேல் நோக்கி உயர்ந்தும் சக்தி பெற்று… பால்வெளி மண்டலத்துடன் பல திசைகளில் பரவி விடுகின்றது. அதன் தொடரில் அந்தந்த குண நிலைக்கொப்ப உள்ள மண்டலங்களில் இந்நிலை சேர்த்து விடுகின்றது.

ஒரு நிலையில் சுழன்று கொண்டுள்ள இச்சக்தி நிலையே பிரிந்து செல்லும் பொழுது அதன் தன்மையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கடும் விஷமான வைரம் எப்படி ஜொலிக்கின்றது…? அப்படித்தான் இம்மாற்றத்தினால் பல உன்னதத் தன்மைகள் நிகழப் போகின்றன.
1.இப்பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் புனிதப்படும் பொழுது
2.இப்பூமியில் வளரும் ஜீவனின் நிலை எந்நிலை கொண்ட புனிதத்தன்மை பெறும்…? இதனை உணர்ந்து செயல் கொள்ளுங்கள்.