சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

 

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

 

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

 

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்…!

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?

 

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்

அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.

நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”

எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.

ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

 

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.ஆட்சி நிர்வாகம் என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.

அக்கினிக்கட்டு

அக்கினிக்கட்டு

 

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.

1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது

அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.

மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.

ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.

பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?

மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது

உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.

அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.

நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.

சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.

இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!

காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.

1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

 

இப்பொழுது மனிதர்களில் அவரின் உடல் நன்றாக இருக்கும். சந்தர்ப்பத்தில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை அவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால்
1.அதனால் அவர்கள் அடிக்கடி சோர்வடைவதும் சஞ்சலமான நிலைகளிலே இருப்பதும்
2.அவர்கள் பேசும் பொழுது ஒரு விதமான வாசனையும் வரும் அவர் உடலில் இருந்து ஒருவிதமான நாற்றமும் வரும்.

காரணம் அடிக்கடி சலிப்பையும் சஞ்சலத்தையும் அவர்கள் சந்திக்கப்படும் பொழுது சலிப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது சிலருக்கு அந்த உடலில் “ஈர்” போன்று தோன்றி மேலெல்லாம் அரிப்பாகின்றது.

ஒரு சிலருக்கு அது தலையிலே ஈரும் பேனுமாக உருவாகிவிடுன்றது அப்படிப் பேன்கள் உருவாகிவிட்டால் அதை இவர்கள் எவ்வளவுதான் சீவி எடுத்தாலும் மறுபடியும் அது வந்து கொண்டே இருக்கும்.

1.என்னதான் மருந்தைப் போட்டு அதைப் போக்கினாலும் இரண்டு நாட்களுக்கு இருக்காது
2.மீண்டும் உடலில் வரக்கூடிய மணத்தால் கரு முட்டையாகிப் பேன்கள் வரத் தொடங்கும்.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை…!

இதே மாதிரித் தான் மரங்களில் அதன் அருகில் இதைக் காட்டிலும் வீரிய மரங்களின் மணங்கள் அடித்தால்… உதாரணமாக அது வேப்ப மரமாக இருந்தால் அடுத்த மரத்தின் மணத்தினை அது எதிர்கொள்ளும் பொழுது அதனால் வாடி அதிலே பார்த்தால் “பிசின்கள்” அதிகமாக வரும் அல்லது “வாடல் நோய்” வந்து கருகிவிடும்.

பார்க்கலாம்… சில மரங்களிலே…!
1.வெயில் அதிகமாகும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின்
2.மனிதனுக்கு நோய் வருவது போன்று சில கிளைகள் அப்படியே அது வாடி காய்ந்து மரத்திலிருந்து கீழே விழுவதை நாம் காணலாம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்று தான் நாம் அடிக்கடி கோபப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால்… இனம் புரியாத நிலைகளில் நமக்கும் கோபம் அதிகமாக வரும் சில மனிதர்களைப் பார்த்தால் நமக்குத் தீய சிந்தனைகளும் வரும்

மனித உடலில் இருந்து வரக்கூடிய மணமும் அவர் எந்தெந்த அளவிலே உடலில் குணங்களைச் சேர்த்து நல்ல குணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றதோ அந்த உடலில் உறுப்புகளில் நோயாகவும் காரணமாகின்றது

அதே சமயத்தில் அவர் சொல்லாக வெளியில் சொல்லப்படும் பொழுது கேட்பவர் உணர்வுகளிலும் பட்டு அவர்களுக்கும் நோய் வரத் தொடங்கும்.

இதெல்லாம் சந்தர்ப்பத்தால் நுகரும் இந்த சக்திகள் மனிதனுக்கு மனிதன் உபகாரமும் நல்ல பண்புகளும் பரிவுடன் உதவி செய்யக்கூடிய மனிதனாக இருப்பினும்… பிறர் படும் கஷ்டங்களைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது… அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது இதை எல்லாம் கேட்டு நுகர நேர்கின்றது. சுவாசித்த உணர்வுகள் இரத்தங்களிலே கலந்து உடலிலே நோயாக வந்து விடுகிறது.

எப்படி மரம் செடி கொடிகளில் எதிர் நிலையான மணங்கள் தாக்கிய உடனே கிருமிகளோ பூச்சிகளோ வண்டுகளோ வந்து விடுகிறதோ… வாடல் நோய் வந்து விடுகின்றதோ இதைப் போன்று மனிதனுக்கு வந்துவிடுகிறது

ஆனால் செடி கொடிகளுக்கு மற்றதை நுகரும் சக்தி இல்லை தன்னுடைய வலுவின் தன்மை கொண்டு மற்றது அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.

உதாரணமாக பருத்திச் செடி அடர்த்தியாக இருந்தது என்றால் அடுத்த பக்கத்தில் இருக்கும் புகையிலைச் செடியில் புழுக்களைக் கொல்ல மருந்துகளை தூவப்படும் பொழுது அங்கே என்ன நடக்கிறது…?

புகையிலைச் சத்தை எடுத்து அதில் அணுவாகிப் புழுவாகி அதை உணவாக உட்கொண்டாலும் மருந்தைத் தூவிய நிலையில் அந்த விஷங்கள் தாக்கப்படும் பொழுது புழுக்கள் இறந்து விடுகிறது… ஆவியாகக் கரைகின்றது சூரியனும் அந்த ஆவியை கவர்ந்து கொள்கின்றது.

ஆவியாக கரைந்த பின் காற்று எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அதற்குத் தக்கவாறு… அதனுடைய உணர்வுகள் பட்டபின் மற்ற சாதாரண தாவர இனச் சத்தைக் கவர்ந்த அலைகள் அஞ்சி ஓடும்.

அப்படி ஓடும் பொழுது
1.பருத்திச் செடிகள் இருக்கும் பக்கம் இது சென்றால் அது தன்னுடைய உணர்வை எடுக்கக்கூடிய சக்தி இழந்து விடுகிறது
2.தன் சத்தைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி குறையப்படும் பொழுது அந்தச் செடி வாடுகிறது…. அதிகமான மோதல்கள் ஏற்பட்டால்…!

ஆனால் புகையிலையில் அடித்த விஷத்தின் தன்மை அதில் இருக்கக்கூடிய விஷக் கிருமிகளைக் கொன்றாலும்… கிருமிகள் செத்த உணர்வு வெளிவரப்படும் பொழுது அது உடல்பெற்ற நிலைகள் அந்த முட்டையில் படுகின்றது.

ஆனால் முட்டை சாவதில்லை. விஷத்தின் தன்மை அதை ஏற்றுக் கொண்டு அடுத்து மருந்துகளை அடித்தாலும் அது சாவதில்லை.

முதலில் பூச்சிகள் செத்தால் ஆவியாக வருகின்றது சூரியனால் கவரப்படுகின்றது. விஷத் தன்மை பூச்சியின் உடலில் பட்டபின் ஆவியாக மாறுகின்றது அது வீரியமடைகின்றது.

பூச்சியின் விஷத் தன்மைகள் சூரியனால் கவரப்பட்டுக் காற்றலைகளில் அது போகும் பக்கத்தில் பருத்திச் செடியில் மோதப்பட்டுத் தேங்கி விடுகின்றது.
1.தேங்கிவிட்டால் அந்த இலையை உணவாக எடுக்கக்கூடிய நிலையில் எதிர் நிலையாகி
2.பருத்தி செடியின் இலையின் நுனிகள் கருகி விடுகின்றது நுனியில்
3.இவ்வாறு ஆன பின் வளர்ச்சி குறைந்து பருத்திச் செடி கருக நெரும்.
4.அதனுடைய காய்களில் பார்த்தோம் என்றால் பூச்சிகளும் விழுந்து விடுகின்றது.

இயற்கை நியதிகள் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

இவை எல்லாம் எதனால் வருகிறது…?

1.மனிதன் விஞ்ஞானத்தால் எடுத்து விரிய விஷ வித்துக்களை உருவாக்கப்பட்டு
2.அந்த விஷத்தன்மைகளைப் பவுடராகவும் நீருடன் கலந்து தூவப்படும் பொழுது காற்றிலும் வருகின்றது… செடிகளிலும் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் இயற்கையில் விளைவதை கடினமான விஷ உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது பலவாறு மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுப் பயிர்களில் சேர்ந்து விடுகிறது.

நெல் செடி என்றால் அதிலே பால் பிடித்துத் தான் அரிசி உருவாகும். சோளமானாலும் பால் பிடித்துத் தான் சோளம் உருவாகும்.
1.ஆனால் விஞ்ஞானத்தால் தூவிய விஷங்கள் காற்றலைகளில் இது கலந்த பின்
2.அந்தப் பாலுக்குள்ளும் விஷத்தின் தன்மை புகுந்து விடுகின்றது.
3.மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் நஞ்சின் தன்மை பாய்ந்து விடுகிறது.

அதை மனிதன் உணவாக உட்கொள்ளும் போது சிந்தித்துச் செயல்படும் இரத்த நாளங்களில் விஷத்தன்மை கலந்து உடல் முழுவதும் சுழல்கிறது. காற்றில் எப்படிப் பரவிப் படர்கின்றதோ
1.மனித உடலுக்குள் இந்த விஷங்கள் சுழன்று நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் செயலிழந்து விடுகின்றது
2.உறுப்புகள் சுருங்குகின்றது… அதனால் இருதய வலி நுரையீரல் வலி கல்லீரல் வலி சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற நோய் வருகிறது.

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

 

முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!

விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.

1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர காக்க வேண்டும்… என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது

எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.

அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.

சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.

அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.

அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள் மற்ற நாடுகளிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.

எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.

எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியில் பத்திரிகைகளும் பார்த்திருப்பீர்கள்.

இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உலகில் உள்ள அனைவரையும் நாம் மதித்துப் பழக வேண்டும்

உலகில் உள்ள அனைவரையும் நாம் மதித்துப் பழக வேண்டும்

 

இது நடந்த நிகழ்ச்சி…! தியான வழியில் சாமியை (ஞானகுரு) வைத்துத் திருமணம் நடத்த வேண்டும் என்று இவர்கள் (பெண் வீட்டார்) கட்டாயப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அவர்கள் (ஆண் வீட்டார்)… எங்களிடம் பலர் பழகி இருக்கிறார்கள். நான்கு பக்கத்திலும் நாங்கள் பழக வேண்டும். எங்கள் முறைப்படித் தான் நாங்கள் திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“சரி… உங்கள் வழியில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…” என்று சொல்லி விடுங்கள் என்று பெண் வீட்டாரிடம் சொன்னேன். அதே மாதிரிச் செய்தார்கள்.

பின் திருமணத்திற்கு வேண்டிய பத்திரிகை எல்லாம் அடிக்கப்படும் பொழுது என்னிடம் யோசனை கேட்க வந்தார்கள்.

அப்போது பையனின் தகப்பனாருக்கு ஒரு நெஞ்சு வலி இருந்தது. “எனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தான்” சீக்கிரம் திருமணத்தை முடித்து விடவேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

இங்கே வந்து என்னை அவர் சந்தித்தபின் நெஞ்சு வலி நின்றது. பின் அவருடைய மனம் மாறிவிட்டது. ஊருக்குச் சென்ற பின் மனது கலங்கிவிட்டது.

1.இவர்களும் விடாப்பிடியாகத் தியான முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் அந்த இரண்டு மனதும் ஒன்றாகி விட்டது.
2.“குருவை வைத்தே திருமணம் செய்யலாம்…” என்று முடிவு செய்கின்றனர்.

இன்று அவர் இதை ஒத்துக் கொள்ளலாம்…! ஆனால் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சொல்லும் பொழுது என்ன ஆகும்…? அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நாம் உபதேசிக்கும் உணர்வுகளை இணைத்துக் கொண்டு வந்து தான் மாற்ற முடியும்.

காரணம்… சம்பந்தம் செய்வதை நம்முடைய முறைப்படி ஐயரை வைத்துச் செய்யாதபடி “ஏதோ தியானம் செய்கிறார்கள்…” என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும்.

ஆனால் யாம் உபதேசிக்கும்போது மற்றவர்கள் அதைக் கேட்கப்படும் போது தான் அவர்கள் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
1.என்ன தான் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய நிலைகள் பெற்றாலும்
2.அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு அவர்கள் முறைகளைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.மனதிலே ஒரு அழுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அந்த அழுத்தம் மாறி நம்முடன் ஒத்துழைத்தார்கள் என்றால் அது இப்படிச் செய்யலாம். இல்லை என்றால்…
1.அவர்கள் இஷ்டத்திற்குப் போய் நம்முடைய மனம் எப்படியோ
2.அது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நாம் இப்படித்தான் எண்ண வேண்டும்.

எந்த இடத்திலும் இது போன்று பொதுவான திருமணம் நடக்கிறது என்றால் அவர்கள் இந்த முறைப்படி நாங்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினால் “சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்…” என்று சொல்லிவிட வேண்டும்.
1.நாம் அதற்கு முன்னாடி தியானம் இருந்து அவர்களுக்கு என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.அவர்கள் முறைப்படி செய்யட்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

அப்படி இல்லாதபடி ஆரம்பமே பெண் வீட்டார்கள்… மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார்… நாங்கள் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நடக்குமா…? அதனால் விபரீதங்கள் தான் ஏற்படும்.

ஆகையினால் மனது ஒத்து வருவதற்கு…
1.தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது
2.அவர்களுடன் ஒத்துழைத்து நம்முடைய தத்துவத்தை இணைந்து அவரிடத்திலே சொல்லும் பொழுது தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவமே வரும்.

இல்லை…இல்லை…! நாங்கள் இந்தத் தியான வழியில் பெரிய சக்திகள் பெற்றிருக்கின்றோம் அதனால் இப்படித்தான் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தால் “நம்முடைய காரியங்கள் அத்தனைக்குமே தடங்கல்கள் வரும்….”

அடுத்து நீங்கள் நல்லதை யாருக்கும் சொல்ல முடியாது… அதை வளர்க்கவும் முடியாது நாம் எந்த வழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்குமே வரும்.

அவர்களைத் தெரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.
1.நம்முடைய பாதை தான் உயர்ந்தது என்று நாம் சொன்னால்
2.அவர்கள் அவருடைய பாதை தான் உயர்ந்தது என்று சொல்ல முற்படுவார்கள்.

ஆகவே தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக் கூடாது.

நம்முடைய தத்துவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்தி அதை உருவாக்க வேண்டுமே தவிர “நாம் பிடிவாதமாக இருந்து… வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக் கூடாது…”

என்ன… எப்போது பார்த்தாலும் சாமியாம்… தியானமாம்…! என்று அவர்கள் எண்ணுவதற்கு விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே மாதிரிச் சில சடங்குகள் செய்யும் பொழுதும் உடலை விட்டு வீட்டில் யாராவது பிரிந்து சென்றாலும் “காக்கைக்கு சோறு வைக்கின்றோம்…” என்று சொன்னாலும் அவர் இஷ்டத்திற்கு நாம் விட்டுவிட வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைக் கூட்டு தியானமிருந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

அவர்களிடம் “இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குச் செல்கிறது என்று பாருங்கள்…!” என்று நாம் தூண்டிவிட்டு அந்த முறைப்படி செய்தோம் என்றால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள்.

1.ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டுமென்றால்
2.”எவ்வளவு நல்லதாக இருந்தாலும்” அதை உடனடியாகக் கொண்டு வர முடியாது.

கேரளாவிலே மொக்கை அரிசி தான் சாப்பிடுகிறார்கள். அதை நம்மைச் சாப்பிடச் சொன்னால் “யாருடா இந்த அரிசியைச் சாப்பிடுவது…?” என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் இங்கே பொடியாக இருக்கும் பொன்னி அரிசியைச் சாப்பிடுகின்றோம். ஆனால் இந்த அரிசியை யார் சாப்பிடுவார்கள்…? என்று அங்கே கேரளாவில் உள்ளவர்கள் சொல்கின்றார்கள்.

காரணம்… அவரவர்கள் ருசி தான் எல்லோருக்கும் முக்கியம்…!

ஆகவே நாம் மற்றவர்களை மதித்துப் பழக வேண்டும். நமது குருநாதர் காட்டிய வழியில் மற்றவர்களை உயர்த்தினால் தான் நம்முடைய சொல்கள் அங்கே ஏற்கும் பருவம் கிடைக்கும்.

இல்லை… என்னுடையது தான் உயர்ந்தது என்று சொன்னால் நம்முடைய உணர்வை அவர்கள் தாழ்த்தித் தான் பார்ப்பார்கள்.

ஆகவே
1.நாம் நம்முடைய தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த் தான் சொல்ல முடியுமே தவிர
2.கட்டாயப்படுத்தி யாருக்குமே திணிக்க முடியாது.

கட்டாயப்படுத்திச் சொல்வதோ நம்முடையது தான் நல்லது என்று வலியுறுத்தினால் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பு ஏற்படாதபடி பக்குவப்படுத்தி… நம்முடைய நிலைகளைப் படிப்படியாகச் சொல்லி… அவர்களை உணரும்படி செய்வது நம்முடைய கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதாவது அந்த எதிர்மறையான உணர்வின் அழுத்தங்கள்… எவ்வளவு தான் உண்மைகளைச் சொன்னாலும் வெறுக்கும் நிலை தான் வரும்.

இதையெல்லாம் மாற்றி
1.நமது வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு…
2.அந்தப் பக்குவ நிலைக்கு நாம் எல்லோரும் வளர்தல் வேண்டும்.