துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

 

பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது… கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.

மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக… நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.

ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் சக்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.

அகஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.

உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான்… அணுவாக மாற்றுகின்றான்… அணுவின் மலமாக உடல் ஆக்குகின்றான்.

அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.

சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று… இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.

ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை “நம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.

அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும்… மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.

ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம்… அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

 

எல்லாவற்றையும் உருவாக்கிய.. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளினால் தான் இயற்கையின் உண்மைகளை எல்லாம் நான் அறிந்து கொண்டேன்.

ஆகவே…
1.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்.
2.இந்தச் சொல் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும். அந்த அருள் உணர்வுகளை நாம் பெறுவோம்.
3.குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து நாம் இந்த வாழ்க்கையைக் கொண்டு சென்றோம் என்றால்
4.என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கிறோம்… இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
5.நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழையைப் பெய்யச் செய்யலாம்.
6.கொடிய நோய்களையும் நாம் வாழும் இடங்களில் வராது தடுக்க முடியும்.
7.எத்தனையோ வகையான மற்ற தீமைகளை அகற்றும் சக்தி நாம் பெறுகின்றோம்.

பகைமை வந்தால் அதை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும். ஊரில் இருப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். பகைமையற்ற நிலைகள் வரவேண்டும்.

1.எல்லா உயிரும் கடவுள்
2.எல்லா உடலும் கோவில்
3.எல்லா உடலும் சிவம்
4.எல்லோருடைய கண்களும் கண்ணன்
5.எண்ணும் எண்ணம் இராமன்.
6.அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் உணர்வாக வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம் வளர்வோம். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற “இந்த உறுதியை எடுத்துக் கொள்வோம்…”

அந்த அருள் பெற வேண்டும் என்று வாழ்வோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் குரு வழி வாழ்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பெறுவோம்.

அதன் வழி எல்லாம் ஒளி என்ற உணர்வுடன் ஒன்றுவோம். துருவ நட்சத்திரமாக ஆவோம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலங்களாக வளர்வோம். ஒன்றுடன் ஒன்று… ஒன்று துணையாகித்தான் ஒன்றின் நிலை வளர்கின்றது.

விஜயதசமி…! விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் பத்தாம் நிலை அடையக்கூடிய ஒளியின் சரீரமாகும். ஆகவே அருள் ஒளியைப் பெற்று என்றுமே நாம் பிறவில்லா நிலை அடைய பிரார்த்திப்போம். பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியை நாம் அடைவோம்

1.உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்திற்கே இப்பொழுது அழைத்துச் சென்றது.
2.இந்த உணர்வை நீங்கள் அனைவரும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”

இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”

 

நம் பூமியில் ஒவ்வொரு மரமும் செடியும் எதை எடுத்து உருவானதோ அதைத்தான் காற்றிலிருந்து எடுத்து வளர்கின்றது.

வேப்பமரம் அதன் சத்தை எடுக்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அலைகளாகப் படர்கின்றது. இதே போன்று ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணமும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது.

ஆனால் இவைகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்து மோதும் பொழுது அந்த அளவுகோலுக்குத் தக்கப் புது வித்தாகிறது.

வேப்பமரம் 100% ரோஜாப்பூ 10% விஷச் செடியின் சத்து 1% எல்லாம் சேர்ந்து இரண்டு கலவைகளாகும் போது கருவேப்பிலையாகிறது.
1.அதற்கு நாதங்களைப் பற்றிக் குருநாதர் காட்டுகின்றார்.
2.மரம் ரிக். வேப்பமரத்தின் மணம் சாம இசை. வேப்ப மரத்தின் மணத்தை நாம் நுகர்ந்தால் “ஓய்…” என்று சப்தம் வருகின்றது… வாந்தி வருகின்றது.
3.ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..ஹா… என்று சொல்லி ஆனந்தப்படுகின்றோம்.
4.விஷச் செடியின் மணத்தை நுகர்ந்தால் உச்..உச்..உச்..உச்… என்று சொல்கின்றோம்.
5.அந்த இசைக்குத் தக்க உச்..உச்… என்பது “இழுக்கக்கூடிய சக்தி” அதிகமாகின்றது.
6.ஆனால் வேப்பமரம் “உந்தித் தள்ளும் சக்தி” அதிகமாக இருக்கின்றது.
7.ரோஜாவின் மணம் ஆகா… என்று சொன்னாலும் அதுவும் “இழுக்கும் சக்தி” பெறுகின்றது.

இது இரண்டும் விஷச் செடியின் மணத்தை எடுத்த பின் உச்..உச்… என்கிற பொழுது இந்த மணங்களைச் சேர்த்துச் “சுழலின் தன்மைக்கு” வருகின்றது.

சுழலின் தன்மை வந்த பின் வேம்பின் சத்தைச் சேர்க்கின்றது. மூன்றும் ஒன்றாக இணைகிறது. இணைந்து கொண்ட பின் கருவேப்பிலையாக மாறுகின்றது.

செடி கொடிகளில் இப்படி மாற்றங்கள் ஆகி வளர்ச்சிக்கு வருகின்றது.

அதே போல் உயிரணு தோன்றிய நிலையில் மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விதமான உணர்வை எடுத்து உயிருக்கு தக்க உனர்வுகள் எடுத்து ரூபங்கள் மாறி வந்தது.

முதலில் சொன்ன மாதிரி கருவேப்பிலையாக எப்படி மாறியது…?
1.கசப்பு… நல்ல மணம்… அந்த அரிப்பு… மூன்றும் சேர்ந்து அது உருவாகின்றது.
2.கருவேப்பிலையைத் தேய்த்தால் அரிப்பு வரும்.
3.ஆனால் மற்றொன்றுடன் சேர்த்தபின் ருசி வருகின்றது என்பதை உணர்த்துகின்றார் குருநாதர்.

இதே போல் தான் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரும் சத்தினைக் கோள்களும் சூரியனும் கவர்ந்து அதனுடைய கலவைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை “நேரடியாகக் காட்டினார் குருநாதர்…”

மலை உச்சிக்கு அழைத்துச் சென்று எத்தகைய மறைப்பில்லாத இடத்தில் வைத்து அதைக் காட்டுகின்றார். யாம் கண்டது அனைத்தும் நீங்களும் காண முடியும்… அறிய முடியும்…! வரிசைப்படுத்தி எடுத்து வளர்த்துக் கொண்டால்…!

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

 

விஷத்தால் தாக்கப்படும் பொழுது தான் “நகர்ந்து ஓடும் நிலை” பெறுகின்றது… வெப்பமும் காந்தமும் உருவாகின்றது. மூன்று சக்தியாக இயங்குகின்றது…
1.வெப்பம் காந்தம் விஷம் மூன்று தான் ஆதியிலே உருவானது.
2.இயக்கத்திற்கு மூலம்… வெப்பம் உருவாவதற்கு மூலம்… விஷம் தான்.

அதே சமயத்தில் விஷம் வெப்பமாகி… வெப்பமாகும் போது உணர்வின் சுழற்சியாகும் போது சூரியனாகி விஷத்தைப் பிரிக்கின்றது. அது மற்றதுடன் கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் “விஷத்தின் தாக்குதலால்…” ஏற்பட்டது தான் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷம் உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும் உணர்வின் சத்து அதிகரித்து
2.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைதான் இது.

சூரியனால் கவரப்பட்ட வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து கொண்டால்
1.இந்த விஷ இயக்கத்தை அடக்கிய உணர்வுகள் அடக்கும் உணர்ச்சியை நமக்குள் கூட்டுகின்றது.
2.கவர்ந்து கொண்ட காந்தம் லட்சுமி அதனுடன் இணைக்கப்படும் பொழுது அதைப் பிரிக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஏனென்றால் முக்கியமாக உங்களுக்குள் நுண்ணிய உணர்வுகளைப் பதிவாக்குகின்றேன்.

“சிந்தனை கொண்டு…” உங்கள் வாழ்க்கையில் உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்குள் இதை இணையச் செய்து அதைப் பதிவாக்குகின்றேன்.

சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
1.அதிலே இக்கட்டான நிலை வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதிலிருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆகவே ஒளியின் சரீரம் பெறக்கூடிய நிலையில் ஆயுள் மெம்பராக நாம் இருக்கப்படும் பொழுது அதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நம்மைச் சங்கடப்படுத்தியவர்கள் வேதனைப்படுத்தியவர்கள் சலிப்புப் படுத்தியவர்கள் நம்மிடம் சண்டையிட்டவர்கள் இவர்களைப் பற்றித் தான் அதிகமாக எண்ணம் வருகின்றது.

ஏனென்றால் அதனுடைய “அழுத்தம்…” அதிகம்…!

இதையெல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தான் துருவ நட்சத்திரம். அதை உங்களுக்குள் இணைக்கின்றேன். அப்படி இணைக்கப்படும் பொழுது ஒவ்வொரு உணர்விலும் சேர்ந்து கொள்கின்றது.

பல சரக்குகளைப் போடுகின்றோம் அதிலே காரத்தை இணைத்த பின் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சுவைமிக்கதாக அந்த உணர்ச்சியை எப்படிக் கூட்டிக் கொண்டு வருகின்றதோ இதைப் போன்று
1.விஷத்தை அடக்கிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்க வேண்டும்
2.எப்போது தீமையைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அதை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி எடுக்கும்படி சொல்கின்றோம்.

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

 

பரசுராமனுக்கும் சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது.

ஏனென்றால் “சிவ தனுசு” எனும் பொழுது
1.உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு
2.இந்த உடல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே அந்த உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால் “விஷ்ணு தனுசு” எனும் பொழுது தீமைகளை அகற்றி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது.
1.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது
2/துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் “விஷ்ணு தனுசு” ஆகின்றது.

அதாவது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்றது.

அப்பொழுது தான் விஷ்ணு தனுசிற்கும் சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது.

ஏனென்றால்… சீதா என்றால் சுவை கொண்டது… மகிழ்ச்சி கொண்டது… மகிழ்ந்து வாழக்கூடியது… மகிழ்வான செயல்களைச் செய்வது…! மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும் எந்தெந்தக் குணங்களை நமக்குள் பெற்றோமோ “அதைத்தான்…” அது நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக…
1.நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்தக் கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த “சிவ தனுசு” உதவும்.
2.நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால் “இரு உன்னை நான் பார்க்கிறேன்…” எனும் எண்ணம்தான் நமக்கு வரும்.

இது பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற நம் உடலில் வளர்த்துக் கொண்ட “சிவ தனுசு…”

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால் நம்மில் உருவான தனுசை எடுத்துத் தான் பயன்படுத்துகின்றோம். “தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிவ தனுசைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ அதற்கொப்பத்தான் அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை.

“என் பிள்ளை…” என்ற நிலையில் இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான் அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில் நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் “விஷ்ணு” வரம் கொடுத்து விடுகின்றார். பின் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.

உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான் இந்திரலோகம் என்று காரணப் பெயர் வைத்தார்கள் ஞானிகள்.
1.இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும்.
2.குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுது தான் அணுக்கரு வெடிக்கின்றது.
3.அப்படி வெடித்தபின் அதன் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
4.இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது.
5.உடலில் உருவான இவ்வணு தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து எந்த இனச் செடியின் வித்தோ அதே இனச் செடியைத் தான் உருவாக்குகின்றது. கடைசியில் அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகவே… நாம் சுவாசித்த உணர்வின் தன்மை அணுவாகி உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது…? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது இதற்கும் நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும் போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம் நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால் அதனின் உணர்வின் கூட்டமைப்பு தன்னில் ஒரு படையையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது கோபம் அதிகமாகி… கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு “இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்ற கோப உணர்வு கொண்டு பிறிதொருவரைத் தாக்குகின்றார்.

1.கோபம் உள்ளவர் சிவ தனுசைத் தனக்குள் எடுத்துக் கொண்டு கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
2.இதே போன்று வேதனை என்ற நிலை வரும் பொழுது வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

“பரசுராம்…!” நாம் சுவாசித்த உணர்வுகள் எந்தக் குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள் தான் வருகின்றது.

உதாரணமாக ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு.

இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது மனிதர் தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ அது சிவ தனுசு.
1.அதாவது உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான் சிவ தனுசு.
2.உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றும் ஒளியாக வைத்து இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் “விஷ்ணு தனுசு…”

மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி…! அது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து புவிக்குள் கொண்டு வருகின்றது. ஆகவே இதனை “ரிஷியின் மகன் நாரதன்” என்றும் “நாராயணனின் அபிமான புத்திரன்” என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நாம் நுகர்ந்தோம் என்றால்
1.“நாரதன் என்னும் உணர்வுகள்” உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
2.மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று
3.பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ அதைச் சொல்லி பகைமையைத் தணிக்கச் செய்கின்றது.
4.உண்மையை விளங்கச் செய்கின்றது இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி நம்மை நல்வழிப்படுத்தும்.

ஆகவே தான்
1.ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமானப் புத்திரன் என்றும்
2/“நாரதர் நன்மைகள் தான் செய்வார்…” என்றும் காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் “விஷ்ணு தனுசு…” உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் “சீதா” மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும்.

ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன் தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார் என்பதுதான் பொருள்.

ஆகவே அரும்பெரும் ஞானிகள் காண்பித்து உணர்த்திய உண்மைகளைத் தம்முள் உணர்ந்து அதன்வழி இயங்கி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும் விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் உடல் நலம் உடல் பலம் மன நலம் மன பலம் மன வளம் செல்வம் செல்வாக்கு பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

 

நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.

இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்… பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.

ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.

மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.

இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

 

இனபேதத்தினால் வரக்கூடிய உணர்வுகள் மனிதனிலிருந்து அது விளைந்தது தான். உற்றுப் பார்த்து அந்த உணர்வுகள் பதிவானது. பதிவு மீண்டும் நினைவாகும் பொழுது எது வலுவோ அது தான் நம்மை இயக்கும்… நம்மையும் அந்தப் பேத உணர்வு இயக்கும்.

சந்தர்ப்பத்தால் வரும் இது போன்ற ஒரு தீமைகளை மாற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அதனை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.இந்தக் காற்று மண்டலத்திலே யார் எந்த வகையில் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்திருந்தாலும்
2.நமது குரு அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்க முடியும்.
3.அவ்வாறு உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை அடைய முடியும்.
4.அது தான் கல்கி ஒளி உடலாக மாற்ற முடியும்… இதிலே சிரமம் ஒன்றுமில்லை.

உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் எண்ணத்தால் எண்ணி எடுத்தால் இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டிவி.யை இன்னென்ன அலைவரிசையில் என்று அதை வைக்கப்படும் பொழுது ஒவ்வொரு ஊரிலிருந்து வெளிப்படுத்துவதை அது கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

ஆங்காங்கு ஒளிபரப்பு செய்வதை அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போலத்தான்
1.மக்கள் பேசிய தவறான உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு.
2.அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசையில் நமக்குக் கோபம் வரும் வெறுப்பு வரும் சங்கடம் வரும் இத்தனையும் வரும்.

ஆனால் அது அத்தனையும் நீக்கியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குரு துணை கொண்டு கவர்ந்து நமக்குள் எடுத்துக் கொண்டால்
1.”அந்த அலைவரிசை…”
2.தீமைகளை நீக்கும்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வரும்… நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணவுகள் வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை என்ற நிலையை நாம் அடைய முடியும். அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும். அத்தகைய ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்.

1.உங்கள் பார்வையால் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும்
2.உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும்
3.உங்கள் பார்வை அனைவரையும் ஞானிகளாக ஆக்க வேண்டும்.
4.இத்தகைய கூட்டம் அமைய வேண்டும்.
5.இத்தகைய கூட்டங்கள் அமைந்தால் தான் மனிதனுக்குள் இருக்கும் பேதங்களை மாற்ற முடியும்.

குரு அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இதைப் படிப்போர்… இதைக் கேட்போர் அனைவரும் இதன்படி செயல்பட்டால் பல ஆயிரம் பேராக மாற்றலாம். அந்த ஆயிரம் பேர் “பல லட்சக்கணக்கான பேராக மாற்ற முடியும்…” இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

வேம்பின் கசப்பான உணர்வுகள் வரும் பொழுது மற்ற உணர்வலைகள் எப்படி அது விலகி ஓடுகின்றதோ இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை காலை துருவ தியான நேரத்தில் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது… தீமை செய்யும் உணர்வலைகளை “விலகி ஓடச் செய்யலாம் அல்லது அது இயங்காதபடி தடைப்படுத்தலாம்…”

சாதாரணமாக… நம் உடலுக்குள் பல வகைகளிலும் பலருடைய உணர்வுகள் பதிவாகி இருப்பதனால் அதை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணம் ஆகின்றது.

துருவ தியானத்திலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை உள்புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுத்தால் காலை ஆறு மணிக்குச் சூரியன் உதயமாகும் பொழுது நாம் இழுக்கத் தவறும் அந்த உணர்வுகளை அது மேலே அழைத்துச் சென்று மாற்றி அமைக்கின்றது. நமது ஆன்மா சுத்தமாகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்திலே தொல்லை என்று அடிக்கடி வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வலு சேர்த்து தீமை உள்புகாது தடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் ஆத்ம சக்தி என்று உங்களுக்குத் தெளிவாகக் கொடுக்கின்றோம். நம் குரு எப்படி அருள் வழியில் செயல்பட்டாரோ அது போன்று நாமும் செயல்பட முடியும்.
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுடன் குருநாதர் செயல்பட்டார்.
2.ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார்.
3.அதற்குத் தான் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டுகின்றேன்.
4.எல்லோருக்கும் அந்த ஞானம் வரட்டும் அந்த உயர்ந்த உணர்வுகள் பெருகட்டும் என்று சொன்னார்.

ஆகவே நாம் அனைவரும் நம் குரு காட்டிய அருள் வழியில் செல்வோம். விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை விடுபடச் செய்வோம்.

அந்த அஞ்ஞான வாழ்க்கையின் உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மை இயங்கிடாதபடி “மெய் ஞான உலகை நமக்குள் சிருஷ்டிப்போம்…”

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

 

அருள் ஞானச் சக்கரத்தை யாம் கொடுத்தால் சிலர் அதிலிருந்து விபூதி வருமா…? மருந்துகள் வருமா…? என்று கேட்கின்றார்கள். எதன் மீது ஆசை போகிறது…?
1.துருவ நட்சத்திரத்தின் அருள் வரும்
2.இருளைப் போக்கும் அருள் சக்தி கிடைக்கும் உண்மைகளை அறியலாம் என்று நான் சொன்னால்
3.விபூதி வராதா…? மருந்து வராதா…! என்று கேட்கின்றார்கள்.

ஏனென்றால் பழைய அன்பர்களுக்கு ஆரம்பத்தில் அப்படிக் கொடுத்த நிலையினை எண்ணிக் கொண்டு அந்த ஆசையிலே கேட்கின்றார்கள்.

அருளைப் பெற வேண்டும் என்று தான் வர வேண்டும். இருளை நாடக்கூடாது.
1.ஆசை என்று வரும் பொழுது இருள் தான்.
2.ஆசையிலே பொருள் வந்தால் மற்றதைச் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது.
3.இருளுக்குள் தான் செல்கிறோம்.

அந்த அருளைப் பெற வேண்டும்… தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற வேண்டும் என்றால் ஒளிக்குச் செல்கின்றோம்.

ஆகவே… ஆயுள் கால மெம்பர்களாக இருக்கக்கூடிய நமக்கு எது தேவை…? இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து.

அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை. ஏகாதசி… வைகுண்ட ஏகாதசி…!
1,எதுவுமே நம்மை அழித்துவிட முடியாது
2.என்றுமே நிலையானது அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுவது தான்.
3.மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை தான்.

அதைத்தான் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். கடைசியில் சீதா எங்கே போகின்றது…? நாம் சாப்பிட்டது எல்லாம் சேர்த்து இந்த உடல் பூமிக்குள்… மண்ணுக்குள் தான் போகின்றது.

“மண்ணுக்குப் போகும் உடலுக்காக…” ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்…? என்று இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா…!
1.ஒளியின் அறிவாகவும் இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு விஷ்ணுவுடன் இணைந்தது.
2.அப்பொழுது அங்கே சொர்க்கம் அடைகின்றது… இது தான் அங்கே காட்டப்பட்டுள்ளது.

இதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் எதைச் சொல்லி நிரூபிப்பது…? சீதா அவஸ்தைப்படுகிறது… இராமன் சந்தேகப்பட்டான்…! என்று சந்தேக உணர்வைத் தான் கொடுக்கின்றார்கள். ஆனால் அதற்குள் எத்தகைய மூலம் இருக்கிறது…? என்பதை அறிய முடியவில்லை.

ஆகையினால் ஆயுள் கால மெம்பர் ஆக வேண்டும் என்றால் பேருக்கு அல்ல… இயற்கையிலே ஆயுள் மெம்பராக வேண்டும். துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ நண்பருடைய குடும்ப வாழ்க்கையிலோ… எல்லோரும் அருளைப் பெற்று இருளைப் போக்க கூடியவர்களாக மாற வேண்டும்.

1.உங்கள் சொல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2.உங்கள் சொல்லின் தன்மை சிந்திக்கும் தன்மையை ஊட்டி அவர்களைச் சிக்கலிலிருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும்.
3.ஒவ்வொருவரும் அந்த வளர்ச்சிக்கு வர வேண்டும்… அது தான் ஆயுள் கால மெம்பர் என்று சொல்வது.

பிறிதொரு தீமை நமக்குள் புகாதபடி அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் சக்தி வர வேண்டும்.

ஆகவே நீங்கள் மன உறுதி கொண்டு அருள் சக்தியைப் பெறுங்கள். இருளை நீக்குங்கள் உயர்ந்த ஞானத்தைப் பேசி ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறச் செய்யக்கூடிய சக்திகளாக நீங்கள் மாற வேண்டும்.

அவர்களைப் பக்குவப்படுத்தும் பொழுது அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

பாசத்தால் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால் அந்த வேதனை நிச்சயம் நமக்குள் வரும்.
1.ஆனால் வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாகத்தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர அதை வளர்க்கும் நிலை வந்து விடக்கூடாது.
2.அருளைப் பெருக்குங்கள்… இருளைப் போக்குங்கள்.

அந்த வழியில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழுங்கள்.

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

 

1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.

அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.

கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.

இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.

சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.

எப்படி மலைப் பிரதேசங்களில் உறை பனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றது… அது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது

வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.

வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.

செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.

அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது “சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.

திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.

பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.

வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப் படர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்த அற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.

வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”

நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் “நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி… அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் “பல வர்ணங்கள் மாறுவதும்… பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.

1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது “மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.

ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.

இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.

இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து… “அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”

வான மண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.

இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.

நம் பூமிக்கு வருவதை இடைமறித்து…
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி “ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து… மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.