“நீடித்த நாள் வாழ்வது என்பது…” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்

“நீடித்த நாள் வாழ்வது என்பது…” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்

 

உலகிற்கே இன்று ஒளியின் சுடராக இருக்கும் “அகஸ்தியன்…” துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த அருள் சக்தி கருவில் வளரக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று… குடும்பத்தில் பத்து மாதத்திலும் கூட்டு தியானங்கள் இருந்து செயல்படுத்தினால்
1.“அந்தக் குழந்தை மகரிஷியாகின்றான்…!”
2.இப்படி உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் விஷத்தன்மைகளிலிருந்து நம்மை நம் குழந்தை காக்கும்
3.இந்த முறைப்படி வகுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அந்தக் குழந்தைகள் நுகராது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து… பச்சிலை மணங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்து
5.நமக்கும் சரி இனி அடுத்து வரும் சந்ததிகளுக்கும் சரி அவர்கள் எல்லாம் மகரிஷிகளாகப் பயன்படுவார்கள்.

திருஞானசம்பந்தர் தாய் கருவில் அவர் இருக்கப்படும் பொழுது சில அற்புத சக்திகளைப் பெற்றார்.

சீர்காழி என்ற ஊரில் அவரின் தாய் பக்தியின் நிலைகள் இருந்தாலும் “சிவன் ஆலகால விஷத்தைத் தனக்குள் அடக்கி மற்றவருடைய விஷத்தைப் போக்கினான்…” என்று கதாகாலட்சேபம் மூலமாக அதை நுகர நேருகிறது.

அந்தச் சக்தி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்றும் அந்தத் தாய் எண்ணியது. காரணம்
1.முதலில் குழந்தை இல்லாதது ஏங்கியது
2.குழந்தை உருவாக வேண்டும் என்று ஆர்வத்திலே அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தனக்குள் வளர்த்துக் கொண்டது
3.அதன் மூலமாக அந்த அற்புத சக்திகள் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குள் இணைந்தது.

இப்படி அந்தக் கருவிலே வளர்ந்தவர் தான் திருஞானசம்பந்தர்…!

அவர் பிறந்த பின் கடும் நோயால் அவதிப்படுவரையும் குழந்தைப் பருவத்திலே உற்றுப் பார்த்தால் அந்த நோய்கள் நீங்குகிறது. ஒரு விஷமான பாம்பு தீண்டினாலும் கூட திருஞானசம்பந்தர் பார்வை பட்டால் அந்த விஷங்கள் அகலுகிறது.

அத்தகைய சக்திகளை ஆரம்ப நிலையில் பெற்றவன்.
1.ஆனால் இத்தகைய ஆற்றல்களை அவன் பெற்றிருந்தாலும் அவன் நீடித்த நாள் வாழ்ந்தானா…? இல்லை.
2.35 வயதுக்குள் தான் திருஞானசம்பந்தர் உடலை விட்டுப் பிரிந்தது.

ஆனால் எங்கே சென்றது…?

1.விஷத்தை முறித்திடும் உணர்வுகளைத் தன் தாயின் வழியில் பெற்ற பின்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற்று முழுமை அடைகின்றான்… ஒளியின் சரீரம் பெறுகின்றான்.

இதை ஏன் சொல்கிறோம்…? என்றால்
1.நாமும் இந்த உடலில் நீடித்த நாள் இருக்கப் போவதில்லை.
2.நீடித்த நாள் வாழ்வது என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உடல் தான் கருகுகின்றது… ஆனால் உயிர் அழிவதில்லை. காரணம் அது வேகா நிலை பெற்றது.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையும் துருவ நட்சத்திரத்தை அழிக்க முடியாது. ஏனென்றால் அது விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெற்றால் நாமும் வேகா நிலை அடையலாம். அதற்குத் தான் இந்த உபதேசமே…!

“துருவ நட்சத்திரத்தின் சக்தியே” நமக்கு அழியாச் சொத்து

“துருவ நட்சத்திரத்தின் சக்தியே” நமக்கு அழியாச் சொத்து

 

வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செல்வங்களைக் குவித்து வைத்தாலும் சிறிது காலம் வாழ்வதற்குத் தான் அது பயன்படுகின்றது.

இன்றைய காற்று மண்டலத்தில் பரவி வரும் விஷமான அணுக்கள் வைரஸ் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிக் கொண்டே தான் உள்ளது… அதைக் குறைக்க முடியவில்லை.

அதற்கு எதிர்ப்பான மருந்துகளைக் கொடுத்தால் தான் அது தணிகின்றது.

1.சர்க்கரைச் சத்து என்று வைத்துக் கொள்வோம் அதை முழுமையாக மாற்ற முடிகிறதா…?
2.இரத்தக் கொதிப்பு என்று வைத்துக் கொள்வோம்… அதை முழுமையாக மாற்ற முடிகின்றதா…?
3.சளி வருகின்றது… முழுமையாக மாற்ற முடிகின்றதா…?

எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்து அதை அவ்வப்போது பணத்தை வைத்து நாம் சமாளித்துக் கொள்கின்றோம்.

தேடி செல்வத்தை வைத்து இதையெல்லாம் நாம் சமாளித்துக் கொண்டாலும் “செல்வம் தேடும் பொழுது” நாம் என்னவெல்லாம் செய்கிறோம்…?

பிறருக்கு எத்தனையோ துயரங்களை உருவாக்குகின்றோம்… தொல்லைகளையும் கொடுக்கின்றோம். ஒருவருக்குக் காசு கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றோம். என்னை ஒருவன் இவ்வாறு பேசுகின்றான் என்று அவனைத் துன்பப்படுத்துகின்றோம்.

ஆனாலும் அப்பொழுது அவன் கடுமையாக வேதனைப்படுகின்றான்… வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் வருகின்றது.
1.பார்க்கலாம்… பலருடைய பகைமைகளைப் பெற்றுக் கொண்டோர் அனைவரும்
2.அவருடைய உடலில் இரத்த நாளங்களில் எவ்வளவு சீர்கேடான நிலைகள் உருவாகின்றது என்று…!

தேடி செல்வத்தைக் கொண்டு நோய்களை மாற்றிக் கொள்ள முடியும் மாற்றிக் கொண்டாலும் நீடித்த நாள் வாழ முடிகின்றதா…?

அதே சமயத்தில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி… தெய்வம் என்னைக் காப்பாற்றும்…! என்று சொன்னாலும் அதன் வழி சொல்பவரும் நீடித்த நாள் இருக்கின்றனரா…?

இப்பொழுது யாம் (ஞானகுரு) சொல்கின்றோம்… நீங்கள் கேட்கின்றீர்கள்.
1.இந்தத் தியானத்தில் வளர்ச்சி பெற்றவர்களும்
2.உடலில் நீடித்த நாள் இருக்கின்றனரா…? என்று கேள்வி கேட்கின்றேன்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கொடுமையான விளைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து தான் மனிதனாக வந்திருக்கின்றோம்.

1.எந்த உணர்வு எந்த உடலில் இருந்து நுகர்ந்ததோ அந்த வலிமையான உணர்வுகள்
2.நாம் சொல்கின்றோமே வைரஸ் என்று… இது போன்ற புதுப்புது அணுக்கள் உருவாகி
3.அதன் உடலில் இதே போல மாற்றப்பட்டு இறந்த பின் அடுத்த நிலையாகிறது
4.ஏனென்றால் தப்பிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உற்றுப் பார்த்த அந்த உடலின் வலிமையை இது நுகர்கின்றது.
5.இது அதிகமாகப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் இழக்கின்றது (இறக்கின்றது)
6.அதன் உணர்வு இரையாகி இங்கே வலுவான பின் உயிர் வெளியே வரும் பொழுது
7.எதன் உணர்வை இந்த உடலில் வளர்த்ததோ அந்த உணர்வின் ஈர்ப்பாகச் சென்று
8.அந்த உடலுக்குள் எதை வலுவாக்கியதோ அங்கே அழைத்துச் சென்று அந்த உடலாக இந்த உயிர் மாற்றி விடுகின்றது.

இப்படித்தான் பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று… பரிணாம வளர்ச்சி அடைந்து… ஒவ்வொரு உடலிலும் பாதுகாக்கும் உணர்வுகளை எடுத்து… எடுத்து… அந்த உடலில் ஏற்பட்ட இந்த உணர்வின் துணை கொண்டு விளைந்து இன்று மனிதனாக வந்திருக்கிறோம்.

இது தான் மகாபாரதப் போர்…! மனிதனுக்குள் இந்தப் போர் நடக்கின்றது. ஏனென்றால் எத்தனையோ வகையான உணர்வுகள் இந்த மனித உடலுக்குள் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் தங்க ஆபரணத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் இருக்கக்கூடிய செம்பு பித்தளையும் அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ… தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்குத்தான்
2.இப்படி எல்லாம் உபதேசத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

 

1.குருவிடம் சிக்கிக் கொண்டோம்…
2.காடு மேடெல்லாம் அலைய வைக்கின்றார்… பல துன்பங்களைக் கொடுக்கின்றார்
3.என்ன வாழ்க்கை…? என்று நான் (ஞானகுரு) வெறுக்கின்றேன்.

என் குழந்தைகள் என்ன செய்யும்…? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதர் பின்னாடி வந்து விட்டோமே…! என்று மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு இக்கட்டான நிலை…!

ஏனென்றால்
1.முதலிலே ஒரு மலை மீது ஏற்றி வைத்தார்
2.இரண்டாவது இமயமலையில் சீனா பார்டர் அருகிலே கொண்டு என்னை நிற்க வைத்து விட்டார்.
3.இந்தப் பக்கமும் வர முடியாது… அந்தப் பக்கமும் செல்ல முடியாது.

இரண்டு மலைகளுக்கு மத்தியில் உறை பனி அதிகமாக இருக்கின்றது. நான் முதலில் அதை தாண்டித் தான் இந்தப் பக்கம் வந்தேன். இருந்தாலும் அந்தப் பனிப்பாறைகள் அனைத்தும் திடீரென்று திடு…திடு… என்று இடிந்து விழுந்தது.

வந்த பாதையைக் காணவில்லை…!

நான் நடந்து வந்திருக்கும் போது விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம்…? என்று பயம் வருகிறது. பயந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு மேல் ஞாபகம் வருகின்றது.

பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்…? என்று இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்தப் பனிப்பாறைகளில் நடந்து செல்லும் போது குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக
1.குருநாதர் சில இதுகளைச் சொல்லி நீ இதைத் தியானி.
2.இந்த பனியின் குளிர் தெரியாதபடி உன் உடலில் சூடு உருவாகும்.

இப்படி நான் (ஈஸ்வரபட்டர்) உனக்குச் சொன்ன நிலைகளில்
1.நீ எதை எதையெல்லாம் எண்ணுகின்றாயோ “அந்த உணர்வுகள் உனக்குள் வளர்ந்து”
1.அந்த அருள் சக்தி கொண்டு எதிர்காலத்தில் உன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று பல முறை எனக்குச் சொல்லி உள்ளார்.

இருந்தாலும் நடந்து வந்த பாதை இடிந்து விழுந்த பின் எந்னுடைய எண்ணங்கள் குழந்தை மீதும் குடும்பத்தின் மீதும் செல்கிறது. நான் நடந்து வரும் போது இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்று சிந்தனைகள் வருகின்றது

இப்படி எண்ணும் பொழுது உடலில் கிர்..ர்ர்ர்… என்று ஒரு இன்ஜின் ஓடினால் எப்படி இரையுமோ என் உடல்… இருதயம்… எல்லாம் இரைய ஆரம்பித்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது ஒரு நிமிடம் ஆனால் மொத்தமாக இன்ஜின் ஆஃப் ஆவது போல ஆகிவிடும் போல இருந்தது.

அந்த நேரத்தில் குருநாதர் என் வீட்டில் நடப்பதையும் காட்டுகின்றார். அந்தக் காட்சி தெரிகிறது.

என் பையன் சிறியவன் ரோட்டில் முச்சந்தியிலே உட்கார்ந்து கொண்டு இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியே செல்கின்றது அவன் நானா… நானா… என்று என் பெயரைச் சொல்லி அவன் இருந்து கொண்டிருக்கின்றான்.

என் மனைவியோ அப்பொழுதுதான் அது நோயிலிருந்து விடுபட்டது. தன் குழந்தையைத் தேடி வந்து பார்க்கக்கூடிய நிலைகள் முடியாது இருக்கிறது. கவலையோடு மற்றதை எண்ணிக் கொண்டிருக்கிறது.

இவனுக்கு இங்கே ரோட்டில் இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது இதை எல்லாம் நான் காட்சியாகக் கண்டபின் எனக்கு உணர்வுகள் மாறுகின்றது.

பனிப் பாறைகளுக்கு மத்தியில் அந்தக் குளிர் பாதிக்காது இருப்பதற்கு குருநாதர் எடுக்கச் சொன்னதை மறந்து விட்டேன். பின் இந்த உடல் இரையும் போது உயிரே போய்விடும் போலிருக்கிறது.

இப்பொழுது நான் யாரைப் போய்க் காப்பது…?

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…! மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…! மனமே இனி மயங்காதே…! மனமே இனி மயங்காதே…! என்று பாடலைப் பாடுகின்றார்.

உன் உயிர் போய்விட்டால் சொத்து சுகம் எல்லாம் எங்கே போகப் போகின்றது…? பல எண்ணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் போய்த் தான் ஆக வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல ஆகவே நீ எதைச் சொந்தமாக வேண்டும்…? என்று வினா எழுப்புகிறார்.

1.எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்றும்
2.எல்லோருக்கும் அந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்றும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்றும்
4.அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அழியாச் செல்வமாகக் கூட்டி
6.அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டினால் இது மறைவதில்லை.
7.உன் உடல் மறைகின்றது… ஆனால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
8.நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்… ஆகவே நீ அதைப் பெறு.

இந்த உடலே சதம் அல்ல நீ தேடிய செல்வங்கள் எப்படிச் சதமாகும்…? அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கி… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து…
1.அனைவரும் நலம் பெறுவர்… அனவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்.
2.இது தான் உனக்குச் சதமும் சொந்தமும் எல்லாமே…!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல இன்னல்கள் படுகின்றனர் அத்தகைய நிலையில் இருந்து “அவர்களை மீட்ட வேண்டும்… அவர்கள் மீள வேண்டும்…” என்ற உணர்வை வளர்த்துக் கொள்…! என்று அடிக்கடி சொல்வார்.

மலைப்பகுதியில் அழைத்துச் சென்று பல துயரங்களை ஒவ்வொரு நிமிடம் எனக்கு ஊட்டித் தான் இந்த உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்

உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.

அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.

ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.

அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.

இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.

அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.

அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.

உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.

இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”

அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.

பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.

காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.

ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.

எப்படி…?

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு…!”

இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.

இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்து செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.

உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.

1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.

இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்த்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிலே “முந்திக் கொள்ள வேண்டும்…?”

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிலே “முந்திக் கொள்ள வேண்டும்…?”

 

உங்கள் வாழ்க்கையில் தொழிலிலோ மற்றதிலோ…
1.எப்போதெல்லாம் சங்கடமோ கோபமோ ஆத்திரமோ சலிப்போ வெறுப்போ வருகிறதோ
2.அந்த உணர்வுகளை அடக்குவதற்கு நீங்கள் “முந்திக் கொள்ள வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
4.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர வேண்டும்… அதை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
6.எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
7.எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
8.இது போன்று வரிசையாக எண்ணித் தினமும் ஒரு இன்ஜெக்ஷன் செய்வது போன்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மருத்துவர்கள் எவ்வாறு ஊசி மூலம் மருந்தினை இரத்தத்தில் செலுத்தி அந்த உடலில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குகின்றனரோ அது போன்று
1.“உங்கள் கண்ணின் நினைவு கொண்டு”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்த நாளங்களில் இஞ்செக்ஷன் செய்வது போல் செலுத்தி
3.அதை வலுவாக்கிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் ஏற்கனவே நாம் எதைக் கண்களால் உற்றுப் பார்த்தோமோ அது தான் இரத்தத்திலே ஜீவ அணுக்களாக மாறுகின்றது.

அதே போன்று இதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தில் எளிதில் பாய்ச்ச முடியும். அவ்வாறு பாய்ச்சி இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு வேகத்தின் உணர்வைக் (TENSION) கூட்டிவிட்டால் அந்த வேக உணர்வே இயக்ச்க சக்தியாக மாறிவிடுகிறது. உணர்ச்சி வசப்படும் நிலைகளை எல்லாம் சமப்படுத்துவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் வலுவாக்கி அதை நாம் நமக்குகந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
1.ஆக நாம் அதை அடக்க வேண்டுமே தவிர
2.அதன் வழியில் அதன் இயக்கமாகச் சென்று விடக்கூடாது.

சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் வேதனையோ வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ அவைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கண்ணின் நினைவு கொண்டு உள் செலுத்தி அடக்கிப் பழகுதல் வேண்டும். பயிற்சியாக இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…! வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை மறக்கத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் செயல்பட்டோம் என்றால் இந்தக் கணக்குக் கூடினால் துருவ நட்சத்திரத்துடன் நாம் இணைந்து விடுகின்றோம்.

இல்லை… இப்படிப் பேசினார்கள்… அப்படிச் சொன்னார்கள்…! என்று பிறருடைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

வேதனை அதிகமானால் நோய் அதிகமாகிறது. நோயாகி உடலை விட்டு சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலுக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வாழ்க்கை வாழுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் நம் உயிரிலே எப்போதும் இருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் நம் உயிரிலே எப்போதும் இருக்க வேண்டும்

 

நாட்டையோ தன் இனத்தையோ காப்பதற்காகத் “தற்கொலைப் படை” என்ற பெயரில் எங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றோம் என்று இருக்கின்றார்கள். போதை மருந்துகளைக் கொடுத்து அவர்கள் மனதை மாற்றி அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றார்கள்.

உன் குடும்பத்தை நாங்கள் காத்துக் கொள்கின்றோம்.
1.ஆண்டவன் உனக்கு எல்லாம் கொடுப்பான்… நீ அதற்காக உயிரைத் தியாகம் செய்…! என்று
2.தவறான பாதைகளைக் காட்டி உலகம் முழுவதற்குமே இந்தத் தற்கொலை படை பரவி விட்டது.

அவன் (முதலில் ஒருவன்) செய்கின்றான்… அவனைப் போன்று நாமும் செய்யலாம் அல்லவா…! நமக்கும் அந்த ஆண்டவன் கொடுக்க மாட்டானா…? என்று இப்படி ஒரு நிலை வந்து விட்டது.

வளர்வதைக் காட்டிலும் மனிதனை அழித்து வாழும் நிலை உருவாகி விட்டது. இப்படி உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்த நேரத்தில் நாம் எங்கே செல்லப் போகின்றோம்…?

இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்த வேதனை எடுத்ததோ… அடுத்து உடனடியாக உடல் பெறும் தன்மை இல்லை.

உயிர் உடலில் இருக்கும் பொழுதே நல்லதாக மாற்ற முடியவில்லை என்கிற போது… உயிருடன் சேர்த்து அந்த வேதனையுடன் தான் வாழ முடியும்… நரகத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க முடியும்.
1.அதற்குத்தக்க (வேதனை) உடல்கள் பெற்ற பின் தான் அதிலே அடங்கும்
2.வேதனையையே உணவாக உட்கொள்ளும் தன்மை வரும்
3.விஷமான உடல் பெறும் வரையிலும் அது அடங்காது
4.அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கும்.

இது போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

தியான வழியினைக் கடைபிடிப்பவர்கள் சில நேரத்தில் இதையெல்லாம் காட்சியாகக் காண முடியும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற அத்தகைய உயிரான்மாக்கள் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்…? என்பதைக் கூட நீங்கள் காண முடியும். அவர்கள் எத்தனை வேதனைப்படுகிறார்கள்…! என்பதையும் அந்த உணர்வின் அலைகளையும் காண முடியும்.

ஏனென்றால் இதையெல்லாம் நான் (ஞானகுரு) அனுபவித்துச் சொல்கின்றேன். குருநாதர் காடு மேடெல்லாம் எம்மை அலையச் செய்து அந்த உண்மையின் இயக்கத்தை “உயிரிலே என்னென்ன நடக்கின்றது…?” என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

அதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான் எல்லோருக்கும் அந்த அருள் சக்தியைக் கொடுத்து “உங்களாலும் காண முடியும்…” என்று உணர்த்துகிறோம்.

ஆகவே
1.எத்தகைய தீமைகளும் வராதபடி தடுக்க அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால் – “ரிமோட் (REMOTE)”
3.தீமை என்ற உணர்வுகள் உங்கள் அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி கம்ப்யூட்டர் என்ற் சாதனத்தை வைத்து எத்தனையோ வேலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

ஒரு இடத்தில் பிழையாகி விட்டால் உடனே அந்தக் கம்ப்யூட்டர் அதைத் திருத்தி எத்தனையோ நிலைகளை மாற்றிச் சீர்படுத்துகின்றது.

அது போன்று தான்… நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கிறது… சுவாசிக்கும் உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக… (அழுத்தம்) உணர்ச்சிகளால் இயக்குகிறது.
1.நாம் சுவாசிக்கும் போது மாறுபட்ட உணர்வுகள் வந்தால்…
2.அது நம் அழுத்தங்களை மாற்றினால்… அது தவறு என்று தெரிந்தால்…
3.அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் என்ற “இந்த அழுத்தத்தைக் கொடுத்து”
5.முதலில் நுகர்ந்த மாறுபட்ட உணர்வின் அழுத்தங்களை மாற்றிக் கொண்டு
6.இனி நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து வலுவாக்கி…
6.இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்… கண்ணின் கரு விழியால் பதிவாக்கிய நிலைகள் கொண்டு… உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து,,, நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!
1.நல்ல நேரத்தை உருவாக்குவது உங்கள் கையிலே தான் இருக்கின்றது
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தைக் கொண்டு எதையுமே நல்லதாக்கும் ஒரு பழக்கம் நமக்கு வர வேண்டும்.

“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

 

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!

1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.

இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.

காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.

வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!

உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.

காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்ட்த்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.

எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!

சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.

வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!

ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!

ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

 

உதாரணமாக…
1.சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிர்மறையான உணர்வாக (சண்டையோ அல்லது எதிர்பாராத நிகழ்வோ) இருந்தால்
2.நம் இரத்தங்களிலே அது கலக்கக் கலக்க ஒன்றுக்கொன்று போர்முறையாகி
3.உறுப்புகள் முழுவதற்கும் இந்த இரத்தங்கள் செல்லும் பொழுது
4.ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் எதிர்நிலையாகிறது.

அதனால் மனக்கலக்கங்களும் நாளடைவில் உடல் வலியும் நோயும் வரக் காரணம் ஆகிவிடுன்றது. அதைப் போன்று ஆகாதபடி தடுக்க ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி என்று யாம் கொடுக்கும் ஆயுதத்தை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்…!

தீமைகள் உங்களை இயக்காதபடி மனம் தெளிவாகும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதிக்கே இதை உபதேசிக்கின்றேன்… பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

“ஆத்ம சுத்தி” செய்யும் ஆற்றலைப் பெறுவதற்கு நீங்கள் வருடக் கணக்கில் தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

“ஒருவன் திட்டுகிறான்…” என்று வைத்துக் கொள்வோம். திட்டியவுடனே நம் எண்ணங்கள் அனைத்தும் அவன் மீது எப்படி வருகிறதோ அதே போன்றுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை மீண்டும் எண்ணுவது போல்
1.யாம் சொன்னதைத் திரும்ப எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்
2.இருளை நீக்கலாம்… அமைதி பெறலாம்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தலாம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிகளை நீங்கள் பெற வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி… என்றும் பிறவியில்லா நிலை என்று அடைந்ததுதான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அடிக்கடி நாம் நுகர்ந்து அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டால் இருளை நீக்கி… சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… இந்த வாழ்க்கையை நமக்கு நாமே ஒழுங்குபடுத்தும் அந்த சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

அவ்வப்பொழுது வாழ்க்கையில் வரும் தீமைகளைச் சுத்தப்படுத்தி அருள் உணர்வைச் சேர்த்துக் கொள்ள முடியும்.
1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு நல்லது
2.இந்த உடலில் வரும் நோய்களைத் தடுக்கலாம்… மன அமைதியும் கிடைக்கும்
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்

சாமி செய்வார் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… எந்திரம் செய்யும்…! என்று காலங்களை நீங்கள் விரயம் செய்ய வேண்டியதில்லை.

இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணிய உடனே அது உங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கின்றோம்.

1.திட்டியவனை எண்ணியதும் நம்மை அந்தக் கோபம் எப்படி இயக்குகிறதோ…?
2.இது போன்று திட்டியவனை எண்ணப்படும் போது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அது நமக்குள் இயக்காதபடி தடுக்கவும்
3.ஒரு வேதனைப்படுவோரை எண்ணியபின் அந்த வேதனை உடனடியாக நம்மை எப்படி இயக்குகின்றதோ
4.இதைப் போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள் செலுத்தி
5.அது போன்ற எத்தகைய தீமைகள் வந்தாலும் அவைகளைத் தணித்துக் கொள்ள முடியும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும்… மகிழ்ச்சி வரும்… அருள் சக்திகளும் கிடைக்கும்.

இந்த யுக்தியைக் கையாண்டால் எந்தத் தீமையையும்… வேதனையையும்… அகற்றிடும் வல்லமை நிச்சயம் பெற முடியும்

இந்த யுக்தியைக் கையாண்டால் எந்தத் தீமையையும்… வேதனையையும்… அகற்றிடும் வல்லமை நிச்சயம் பெற முடியும்

 

பல காலம் எண்ணிப் பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால்… நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுது தான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது. வலித்தவுடன்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.
4.இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் தியானத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் என்ன சொல்வார்கள்…?

இப்படித்தான் நான் எண்ணினேன்… இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே…! என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது
1.ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்…”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி
2.“வலி நிற்கவில்லையே… வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகிச் சுழன்று வரப்படும் பொழுது… தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது. அப்பொழுது
1.நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது
2.அதனால் அது சோர்வடைகின்றது
3.அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே… இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்ய வேண்டும்…? என்பதைச் சற்று சிந்தியுங்கள்
2.“எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்…?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

நாளை மனித ரூபம் இருக்குமா…?

நாளை மனித ரூபம் இருக்குமா…?

 

உதாரணமாக 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகளைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி… அதில் இருக்கும் விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் துருவப் பகுதிக்குள் நுழைந்தால் மின்னலாக மாறுகின்றது… கடலில் பட்டால் மணலாக மாறுகின்றது… மரத்தில் பட்டால் கருகி விடுகின்றது.

மின்னலின் துகள்கள் நாலாபுறமும் பரவுகின்றது.
1.அதன் அருகிலே எதிர்மறையான நட்சத்திரத்தினுடைய துகள்கள் அதிகமாக இருந்தால்
2.எந்தப் பக்கத்தில் இது மோதி வெடிக்கின்றதோ மின்னல்களாகத் தாக்கப்படும் பொழுது
3.சூறாவளியாக மாறிக் கட்டிடம் மற்ற பொருள்கள் அனைத்தையும் தூக்கி வீசிக்கொண்டு போகின்றது…
4.ஏனென்றால் அதற்கு அது எதிர்நிலை… சுழிக் காற்றுகளாக இப்படி வருகின்றது.

உலகில் எந்தப் பிரதேசங்களில் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் இந்த உணர்வலைகள் பட்டுச் சுழிக் காற்றுகளும் சூறாவளிகளும் அந்தந்த மோதலுக்குத் தகுந்த மாதிரி அதிகமாக வரும்.

அணு உலைகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் எல்லாம் அந்தக் கசிவின் துகள்கள் படர்ந்திருக்கும். அதிலே நட்சத்திரத்தினுடைய எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது சூறாவளி வரத்தான் செய்யும்.

விஞ்ஞானி ஒரு பக்கம் எத்தனையோ கண்டுபிடித்தாலும் இயற்கையின் சூழ்நிலை… அந்த இயற்கையையே மனிதன் மாற்றி அமைக்கின்றான். இயற்கையிலிருந்து மாறும் நிலைகளாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்… நாம் இருக்கும் இடங்களில் அந்தச் சூறாவளி வராதபடி தடுக்க வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி அத்தகைய மூச்சலைகளை இங்கே பரவச் செய்தால்
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தங்கள் அதிகமாக வரும்பொழுது அந்த விஷக் கதிரியக்கங்கள் விலகிச் செல்லும்.
3.நம் சார்புடைய மக்களையும் காக்க முடியும்.
4.நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உணவாகக் கொடுக்க முடியும்.

இதைச் செய்யத் தவறினால் இயற்கையின் நியதிகளில் மனிதன் எங்கோ அழைத்துச் செல்லப்படுகின்றான். நாளை மனித ரூபம் இருக்குமா…? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அந்த அளவிற்கு மனித ரூபத்தைச் சீர்குலைக்கும் உணர்வு வந்துவிட்டது.

ஆகவே இனி வரும் காலங்களில் மனதில் கலக்கங்கள் வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் ஒரு நிமிடமாவது எண்ணிப் பழக வேண்டும்.
2.அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்… ஆதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிழிகளில் படர்ந்து கருவிழிக்குள் இருக்கும் கண்மணி பெற வேண்டும்
5.கருமணிகளைத் தொடர்ந்து வரும் நரம்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
6.எங்கள் எலும்புகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்
7.எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணி நாம் பழகி ஆக வேண்டும்.

இதை நாம் செய்து வளர்த்துக் கொண்டே வந்தால் முந்தைய வினைகளை நீக்க முடியும். இனி வரக்கூடிய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக அதிகமாக இந்த உடலுக்குப் பின் நமது உயிர் அங்கே அழைத்துச் சென்றுவிடும். நம்மைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.

இதைத் தவிர வேறு வழி இல்லை… மனிதனின் கடைசி நிலை…!

மனித உடலில் நாம் வாழும் நாள்கள் மிகக் குறுகியது. அதற்குள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி சிறுகச் சிறுக துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெருக்கிப் பழக வேண்டும்.