தியானத்தின் மூலம் பெறும் சக்தியைப் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது

power of meditation

தியானத்தின் மூலம் பெறும் சக்தியைப் பயன்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது

 

நான் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் சுழல்கிறது. எப்படி…? அதாவது
1.நாம் எடுக்கும் சுவாசம் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே பட்ட பின் ஒலிகளை (எண்ணங்கள்) எழுப்புகிறது.
2.பின் அந்த உணர்வின் தன்மை உடல் முழுவதும் சுழலுகின்றது.
3.சுழலும் போது தான் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உடலையே இயக்குகின்றது.
4.அதனால் தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று ஞானிகள் அழைக்கின்றார்கள்.

உயிருக்குள் உணர்வுகள் பட்டபின் ஒலி அலைகளைச் சுழலச் செய்கின்றது. நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலேயும் சுழலும் போது மோதி அதையும் இயக்குகின்றது.

நம் உயிர் (விஷ்ணு) எப்படி இயக்குகின்றது என்பதையும் நாரயணன் (சூரியன்) எப்படி மற்ற தாவர இனங்களை இயக்குகின்றது என்பதையும் ரூபத்தைப் போட்டுக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் எழும்பி என்ன செய்கிறது…? அந்த உணர்ச்சியின் தன்மையாக் நம்முடைய நிலையும் வேதனைப்படும்படியாக இயக்குகிறது.

புலி வருகிறது என்றால் “அது நம்மைத் தாக்கிவிடும்…!” என்று எண்ணியவுடனே அந்த ஒலியை எழுப்பி இந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி சுழற்சியான பின் என்ன செய்கிறது…?

இந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றது.
1.எதை உற்றுப் பார்த்தோமோ
2.நாம் பாதுகாக்கும் உணர்வுகளை எண்ணும் போது
3.நம் கண்கள் அந்தப் பாதுகாப்பான இடத்தை நாடி அங்கே அழைத்துச் செல்கின்றது.
4.அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆகவே ஒரு நோயாளியைப் பார்த்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்து அதை அடக்க வேண்டும். அடங்கவில்லை என்றால் கூடக் கொஞ்சம் நேரம் சேர்த்து எடுத்து அடக்க வேண்டும்.

இந்த உணர்வை வலுவாக்கிய பின் வலுவான இந்த எண்ணம் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் (நோயாளியின்) உடலிலே படர வேண்டும். அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர் அருள் ஞானம் பெற வேண்டும். அருள் வழியில் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி நுகர்ந்து இதைக் கூட்டிக் கொண்டோம் என்றால் ருசி இங்கே வந்து விடுகிறது. நோயாளியின் வேதனை நமக்குள் புகாதபடி அந்த மகரிஷிகளின் உணர்வினைக் கலந்து இப்படிச் சுவைமிக்கதாக உருவாக்க வேண்டும். அதற்குத் தான் உபாயத்தைக் கொடுக்கின்றோம்.

ஆகவே பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்.
1.தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வராதபடி
2.சேனாதிபதியான முருகன் ஆயுதங்களை வைத்து
3.முன் நின்று தடுத்து நிறுத்துகின்றான் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அத்தகைய பாதுகாப்பின் தன்மை கொண்டு அந்தத் தீமை தனக்குள் வராதபடி ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை எடுத்து உருவாக்குதல் வேண்டும்… அது தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன்.

ஆறாவது அறிவை இப்படி உபயோகிக்கத் தவறினால் எதைச் சமைக்கின்றமோ அதன் வழி தான் நம் வாழ்க்கையின் ருசியும் இருக்கும்.

ஏனென்றால். கார்த்திகேயா…! நோயாளி வேதனைப்படுகிறான் என்று அறிய முடிகின்றது. வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் தான் அவனைக் காக்கவும் முடியும்… காக்க வேண்டும் என்ற எண்ணங்களும் வரும். இருந்தாலும்
1.அந்த வேதனையை தனக்குள் வராதபடி பாதுகாத்து
2.அருள் ஒளியின் சுடரைத் தனக்குள் உருவாக்கி அந்த ஒளியின் சுடராக நமக்குள் உருவாக்கிய உணர்வு கொண்டு
3.அந்த எண்ணங்களால் மீண்டும் அவனைப் பார்க்கப்படும் போது நலமாக வேண்டும் என்ற உணர்வைக் கூட்டப்படும் போது
4.அந்த வேதனைகளை இது அங்கே உந்தித் தள்ளுகிறது…!
5.அதாவது ரிமோட் கன்ட்ரோல் போல் அவன் உணர்வை நமக்குள் வராதபடி இந்த உணர்ச்சியின் தன்மை பாதுகாப்பு கவசமாக அமைகின்றது.

நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது.

இதை விடுத்து விட்டு நாம் எந்த நோயாளியின் வேதனையை எடுத்தோமோ அவர்களின் எண்ணத்தைத் தான் வளர்த்து கொள்கின்றோமே தவிர இதை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற நிலை இல்லை… தெரியவில்லை…!

1.ஆகவே தியானத்திற்கு வந்தால் பத்தாது.
2.வெறும் தியானத்தைச் செய்தால் பயனில்லாதது.
3.எடுத்துக் கொண்ட சக்தியைப் பயன்படுத்தும் முறைகளில் தான் தியானத்தின் வலுவை நீங்கள் அனுபவிக்க முடியும்.

சாமி காப்பாற்றுவார்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோசியம் காப்பாற்றும்… மந்திரம் காப்பாற்றும்… என்கிற முறையில் நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
1.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய
2.அந்த அவசியமான துப்பாக்கியை உங்கள் கையில் கொடுக்கிறேன்.
3.தீமைகள் வரும் போது எடுத்துச் சுட்டு விட்டீர்கள் என்றால் அது வீழ்ந்து விடும்.

அத்தகைய அருள் ஞானத்தை உங்களுக்குள் எடுத்துக் கொண்டால் தான் அந்தத் தீமை என்ற உணர்வை உங்களால் எளிதில் வீழ்த்த முடியும். இது ஒன்றும் கஷ்டமில்லை. இந்த நம்பிக்கையைத்தான் உங்களிடம் கொடுக்கிறேன்.

ஆனால் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…? என்றால் தனக்குக் கஷ்டம் வந்தது என்றால் கஷ்டம் உள்ளவர்களை எல்லாம் கலந்து இன்னும் ஜாஸ்தியாக வருத்தப்படுவார்கள்.

ஒருவர் கஷ்டத்தைச் சொன்னால் அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அதற்குண்டான உபாயங்களைச் சொல்லி அவர்கள் நிலைமையை நல்லதாக மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் சொன்ன கஷ்டத்தை வளர்த்து இவர்களும் கஷ்டம்… கஷ்டம்…! என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

பாலில் பாதாமைப் போட்டு அப்படியே கொஞ்சம் விஷத்தைக் கலந்து கொடுத்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? இவர்களும் சாப்பிட்டு விட்டு ஆமாம்… நானும் சாப்பிட்டேன்… எனக்கும் இப்படித்தான் மயக்கமாக வருகிறது…! என்பார்கள்.

சாமி (ஞானகுரு) என்னத்தைக் கொடுத்தார்…? என்ற நிலையில் விஷத்தைக் கலந்து கொடுத்தால் அதை ஒதுக்கி வைப்பதற்குப் பதில் அப்படியே சாப்பிட்டால் எப்படிச் சரியாக இருக்கும்….!

ஆக மொத்தம் தான் வளர்வதைக் காட்டிலும் மற்றவர்களையும் வளர விடாமல் செய்வது தான் இந்தக் குணம்.
1.தான் வளர்வதும் இல்லை.
2.மற்றவர்களை வளரவிடுவதும் இல்லை.

களை முளைத்து விட்டால் அது மற்ற நல்ல வித்துகளை உருவாக்க விடுவதில்லை. ஆனால் களைகளை நீக்கினால் தான் நல்ல வித்திற்கு நல்ல உரம் கிடைக்கும்.

ஆகவே வேதனைப்படுவோரைக் கண்டபின் அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து எடுத்துப் பாதுகாப்பாக உடலுக்குள் சொருகிக் கொண்டே வர வேண்டும்.

இதைக் கலக்கக் கலக்க அந்த விஷம் தணியும். விஷம் தணியும் பொழுது தெளிவான சிந்தனைகள் வரும். தெளிவான சிந்தனைகள் வரும் பொழுது நம் செயல்கள் அனைத்தும் நல்லதாக அமையும்.
1.நமக்கும் நல்லதாகும்…
2.மற்றவர்களுக்கும் நல்லதாகும்…
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து இப்படிப் பயன்படுத்திய அனுபவங்கள் நிச்சயம் நமக்கு வேண்டும். (இது தான் முக்கியம்)

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

Lightning souls

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

 

விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது. களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியுல் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம். வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும்பகுதி உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்…! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த… நான் தியானத்தைச் செய்தேன்…! தியானம் செய்து செய்து எனக்கு என்ன கிடைத்தது…? ஒன்றும் நடக்கவில்லை…! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல. அவர்கள் பெறவில்லை என்றாலும்… தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா…! அதில் என்ன பெற்றீர்கள்…?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு…
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்…?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்…? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை…? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி…?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளை செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்…!
1.நல்வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே… இப்பொழுது என்ன ஆனது…? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்…!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது…? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே…!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய…! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும். எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின் நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்…! வளர்கின்றோம்…? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.(முதலில்) டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்…!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.
5.இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

மகரிஷிகளும் ஞானிகளும் இந்த உடலை விட்டுப் பிரிந்தனர். பிரிந்தாலும் அவர்கள் அனைவரும் ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனர்.

நாம் அவர்கள் சென்ற வழியில் அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
1.அதைப் பற்றினால் அந்த எல்லையை அடைய
2.இந்த உடல் வாழ்க்கைக்கு எது தேவையோ அது தானாக வரும்.
3.எது நடந்தாலும் நன்மை பயக்கும் செயலாகவே அது முடியும்.
4.நமக்கு எந்த வேதனையும் வராது. வெறுப்பும் வராது. ஏகாந்தமாக வாழ முடியும்…!
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டியது இதைத்தான்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

Menbership

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

 

நமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உடலுக்குள் விளைந்திருக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்துக் கேள்வியுற்று இருந்தால் அந்த நேரத்தில் இந்த உணர்வுகளை நுகர்ந்திருப்போம். அப்பொழுது நம் நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டு இருக்கும்.
1.அதனால் நல்ல குணங்கள் செயல்படாத நிலைகளில் தடைபட்டு அது நலிந்து கொண்டு இருக்கும்.
2.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்து இருக்கும்.
3.அது வளர்ச்சி குன்றும் போது நாம் நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வின் தன்மை உண்டாகும்.

நாம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற போது பிறருடைய தீமைகளை எல்லாம் கேட்டு உணர்கின்றோம். அப்போது
1.நம் உயிரிலே பட்டுத் தீமை என்ற நிலைகள் உணர்ந்தாலும்
2.இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பரவப்படும் போது
3.நாம் எந்த நல்ல குணங்களை வைத்திருந்தோமோ அதன் வழியில் முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
4.அதாவது தீமை என்று நமக்கு அறிவித்தாலும் நல்லதுக்கு முன்னாடி இது வந்து அடைத்துக் கொள்கின்றது.
5.அதை மாற்ற வேண்டும் அல்லவா…! அது எப்படி…?

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது இதை யாம் (ஞானகுரு) சொல்லும் போது உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது. பதிவு செய்து கொண்ட பின் அடுத்து உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் எண்ணினால் அந்தச் சக்திகளை எளிதில் பெற ஏதுவாகும்.

உங்கள் நினைவு அனைத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணிச் செலுத்துங்கள். இவ்வாறு செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் எளிதில் நுகர்ந்தறிய இது உதவும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி
2.விண்ணிலே நினைவினைச் செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவெல்லாம் வான மண்டலங்களில் சென்றிருக்கும். தீபாவளிக் காலங்களில் ஒரு மத்தாப்பு பொருத்திய பின் பொறிகள் எப்படிக் கிளம்புகின்றனவோ அது போல
1.வான மண்டலத்தில் பல கலர்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்கள் உணர்வுகளில் தோற்றமளித்திருக்கும்.
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் பரவுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் வைரத்தைப் போல “இளம் நீல நிறமாக… இருக்கும்…!”

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் பல வித வண்ணங்களில் இருக்கும். ஏனென்றால் பல கோடி மகரிஷிகள் அந்த ஒவ்வொரு மகரிஷியும் அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்த வண்ணம் பல வர்ணங்களில் இருக்கும்.

சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போல பல வண்ணங்களில் ஒளிக்கற்றைகளாக இந்த உணர்வுகள் தெரிந்து இருக்கும்.

ஆனால் உங்களுக்குள் இது தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல்களிலே பாய்ந்து
1.உங்கள் உடலில் ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டு வருவதை உணர்ந்திருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்டு வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் அவை அனைத்திற்கும் செடிகளுக்கு உரம் போட்ட மாதிரி அந்த அணுக்களின் முகப்புகளில் இது பூராம் போய்ச் சேரும்.

உதாரணமாக நீங்கள் மாவை எடுத்துப் பிசைகின்றீர்கள். அது நல்ல சுவை உள்ளது தான். ஆனால் அதில் வேறொரு பொருளைப் போட்டால் எதன் சுவை வரும்…?
1.அந்த நல்ல மாவுடன் நாம் எதைக் கலக்கின்றமோ அது மேலோட்டமாக இருந்தால்
2.அதனுடைய சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக்கி வரும் போது இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் இப்படிச் சுழலச் செய்ய வேண்டும்.

நாம் எப்படிச் செடிகளுக்கு உரம் போடுகின்றோமோ அதைப் போல் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சுழலச் செய்யும் பொழுது அது வலு கொண்டு ஊடுருவிப் பாயும் தன்மை பெற்றது.

அது ஊடுருவிப் பாய்ந்து நம் நல்ல குணங்களில் கலக்கப்படும் பொழுது அந்த நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகள் செயலிழந்து விடுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளைச் செயலற்றதாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்வதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தியானிக்க வேண்டிய முறை – Meditating Method

Image

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

2.“முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்து, பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால், திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.
ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).
இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.
ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர்” என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.
இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.
அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.
திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.
கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்

தியானம் செய்யவேண்டிய முறை:-

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது, துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.
இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.
நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.
இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. அந்த உருவான அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.
ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.
இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.
உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.
எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ, அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி, அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.
அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.
இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும்.
எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

 

நம் உடல் உறுப்புகள் முழுவதற்கும் ஆற்றல் மிக்க சக்தியை உடனுக்குடன் எப்படி ஏற்றிக் கொடுப்பது…?

pranayama

இரண்டு நிமிடத்திற்குள் நம் உடல் உறுப்புகள் முழுவதற்கும் ஆற்றல் மிக்க சக்தியை உடனுக்குடன் எப்படி ஏற்றிக் கொடுப்பது…?

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உதாரணமாக வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் உங்களுடன் நண்பராகப் பழகுபவர்கள் அவர்கள் கஷ்டங்களை எல்லாம் வந்து சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

என் பையன் அப்படிச் செய்கிறான்.. இப்படிச் செய்கிறான்…! என்று அவர் சொல்வதை எல்லாம் நீங்கள் உம்…! கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். உங்கள் மனதில் என்னவெல்லாம் ஓடுகிறது…! என்று பாருங்கள். முந்தி தெரியாது. இப்போது நம்மை எது இயக்குகின்றது…? என்று உணரலாம்.

ரோட்டில் போகிறோம். தூசி படுகிறது. துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம். மேலே குளித்துக் கொள்கின்றோம். கையைக் கழுவி கொள்கின்றோம்.

இதை மாதிரி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்திப் பழக வேண்டும். அது இல்லை என்று சொன்னால் “நம் உடலும் கெடும்… நம் மனமும் கெடும்…!”

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சு என்று தெரிந்து கொண்ட பின் ஆறாவது அறிவால் அதை மாற்றி அமைக்கின்றது. இது தான் “முருகு…!”

குழம்பு வைக்கும் போது காய்களில் உள்ள காரலை எல்லாம் அகற்றிவிட்டு பல சரக்குகளை இணைத்து அதைச் சுவையாக மாற்றுவது போல
1.எத்தனை கடுமையான உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து
3.நம் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.நல்ல பண்புகளும் நல்ல அறிவான நிலைகளும் வர வேண்டும் என்று
5.இதைச் சேர்த்து இணைத்து விட்டோம் என்றால் மற்றவரின் தீமைகளோ துயரங்களோ நமக்குள் விளையாது.

அப்படி உடனுக்குடன் நல்லதாக்க வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம் அந்தச் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலுவாக ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.கணையங்கள்:-
நம் உடலில் உள்ள கணையங்கள் கொழுப்புச் சத்து சர்க்கரைச் சத்து உப்புச் சத்து அவைகளைச் சீராகப் பிரிக்கும் சக்தி பெற்றது. கொழுப்புச் சத்தைச் சீராகப் பிரிக்கவில்லை என்றால் இரத்தத்துடன் சேர்ந்து குழாய்களில் அடைத்துக் கொள்ளும். மற்ற விஷத்தின் தன்மைகளை பிரிக்கவில்லை என்றாலும் அதனால் பாதகம் ஏற்படும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்களில் படர்ந்து எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இவ்வாறு கணையங்களில் சேர்க்கப்படும் பொழுது நாம் சாப்பிடுகிற ஆகாரத்திலிருந்து ரசத்தை எடுத்துப் பிரித்து அதை எல்லாம் வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றும். கொழுப்பு சர்க்கரை உப்பு போன்ற நிலைகளைச் சரியான நிலைகள் அது பிரிக்கும்.

2.நுரையீரல்:-
கல்லீரலில் எது படுகிறதோ அந்த மூச்சு அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் வந்து இழுக்கிறது. வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் வந்து கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்து விட்டது என்றால் என்ன செய்கிறது…?
1.அந்த வேதனை என்ற உணர்வானவுடனே
2.இங்கே படக்… படக்… படக்… என்று அடிக்கிறது. மூச்சுத் திணறல் ஆகிறது.

நுரையீரலில் இத்தகைய தொல்லைகள் இருந்தது என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் சுவாசித்து வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அந்த மூச்சுத் திணறல் குறையும். அதே போல மண்ணீரலில் குறைபாடுகள் எது இருந்தாலும் இதைப் போல மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

3.சிறுநீரகங்கள்:-
சிறுநீரகத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தது என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சிறுநீரகங்களில் படர்ந்து எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியம் பெற வேண்டும் என்று இப்படிச் சேர்த்து அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

4.கண்கள்:-
உதாரணமாக ஒரு கெட்டதைப் பார்க்கின்றோம். அல்லது சங்கடமானதை ஒருவர் சொல்லும் பொழுது அதைக் காது கொடுத்துக் கேட்கின்றோம்.

கண்களில் உள்ள கருமணியில் பட்டுத்தான் உடலுக்குள் போகிறது.
1.கருமணியில் பட்டு இழுத்து
2.அதனுடன் இணைந்த நரம்பு (WIRE) மூலமாக
3.உடல் எல்லாவற்றிற்கும் அந்தச் செய்தியை அனுப்புகிறது.

ஆனாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணியில் படர்ந்து விடுகிறது. அடுத்தாற்போல் எதைச் சொன்னாலும் அந்த வேதனையான எண்ணமே நமக்கு வரத் தொடங்குகிறது.

ஆகவே வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இந்த மாதிரி உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் கூடக் கொஞ்சம் நேரம் “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கருமணிகளில் படர வேண்டும் என்று எண்ணியவுடனே அங்கேயே பதிவாகிக் கொள்கின்றது. கருமணிகள் சுத்தமாகின்றது.
1.உங்கள் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணினால்
2.ஒளிப் படலங்கள் படர்ந்து தூய்மைப்படுத்துவதைப் பார்க்கலாம்.

5.இருதயம்:-
அதே மாதிரி வாழ்க்கையில் நாம் நல்ல வளர்ச்சி அடைந்து வரும் பொழுது ஒரு நான்கு பேர் வந்து அது இது என்று ஆசை காட்டி அந்த வழியில் சென்ற பின் அது சரி வர நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அந்தச் சந்தர்ப்பம்…
1.நம் எண்ணம் பூராம் அவன் மேல் செல்கின்றது.
2.அவன் மேல் கோபமும் வெறுப்பும் உண்டாக்குகிறது.
3.நம் காரியங்களைப் பார்க்க முடியாமல் தடைப்படுத்துகின்றது.
4.நம் தொழிலைப் பார்க்க முடியாமல் போகிறது.
5.நம் நல்ல குணங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றது.

அதனால் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அதிகமாக அதிகமாக நல்ல அணுக்கள் மயக்கம் ஆகிறது. சிந்திக்கும் வலிமை இழந்து விடுகிறது. அதே உணர்வாக இருந்தால் இருதயமும் பலவீனம் அடைந்து விடுகிறது.

இந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான் தினமும் அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளுக்குள் அந்த வலிமையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இரத்தங்களில செலுத்தி இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படித் தனித்தனியாக
1.எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உறுப்புக்களுக்குச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டுமோ கொடுத்து
2.நம் உடலையும் நம் ஆன்மாவையும் தூய்மையாக்கும் அந்தப் பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
3.அதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி…! ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நிமிடத்தில் இதை எடுத்துக் கொள்ள முடியும்…!

 

தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

Eswaraya Gurudevar Tapovana Guru Peedam

தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் எத்தனையோ அவஸ்தைப்பட்டு (ஞானகுரு) மெய் ஞானத்தைப் பெற்று வந்தோம். அப்படிப் பெற்ற நிலையை நான் உங்களைத் தேடி வந்து சொல்லும் போது எத்தனை பேர் கேட்டுப் பின்பற்றுகின்றீர்கள்…?
1.எத்தனையோ பேருக்கு அருள் சக்திகளைப் பாய்ச்சி நோய்களையும் நீக்கி விட்டேன்.
2.அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்து ஞான வழியில் வளர்ந்திருக்கின்றார்கள்…!

கடுமையான நோய்களுடன் வந்தாலும் அது நீங்கிய பின் அடுத்து நான்கு பேருக்கு இவர்கள் சொன்னால் “அது மற்ற எல்லோருக்கும் நல்லதாகுமே…!” என்ற எண்ணத்தில் தான் யாம் அதைச் செய்தோம்.

ஆனால் அப்படி நோயை நீக்கிக் கொடுத்தபின் இங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியிடம் போய் ஐம்பதாயிரம் காணிக்கை செலுத்தி விட்டு வந்து எனக்குச் பலவிதமான சாப்பாட்டைக் கொடுத்து தபோவனத்திற்கு இரண்டு தென்னை மரக்கன்றையும் வைத்து விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

ஆக அவர்கள் செய்த வேண்டுதலின் படி அந்த வெங்கடாஜலபதி தான் நோயை நீக்கிக் கொடுத்ததாகக் காணிக்கை செய்து விட்டு வருகிறார்கள்.

ஆனால் யாம் சொல்வது
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணிப் பெறுங்கள்.
2.அது உங்கள் உடலுக்குள் விளைந்த பின் உங்கள் துன்பங்களையும் நோய்களையும் அகற்றும்.
3.நீங்கள் நன்றாக ஆவீர்கள்.
4.நீங்கள் நன்றாக ஆனதும் உங்களுக்குள் விளைந்த உணர்வு கொண்டு அடுத்தவருக்கும் இதைச் சொல்லுங்கள்.
5.உங்கள் உணர்வு அவர்களுக்குள் பாய்ந்து அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது
6.அவர்களும் உடல் நலம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் தான் யாம் எல்லாவற்றையும் செய்தோம்.

ஆனால் அதை எல்லாம் சரியாகப் பின்பற்றாதபடி அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். எதை..?

கொஞ்சம் சக்திகளைக் கொடுத்து விஷயத்தைக் காட்ட ஆரம்பித்த பின் அதை எல்லாம் தன் வசதிக்குதான் கொண்டு போய் விட்டார்களே தவிர மனமாற மக்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.

இது ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள். எனக்குள் எல்லாமே இருக்கிறது. இதை நான் செய்கிறேன். ஏதாவது ஒன்றைச் செய்தால்
1.“நான் செய்தேன்…” என்று நீ போய்ச் சொல்…!
2.என்னால் நல்லதாக ஆனது என்று என்று சொல்
3.பெரும்பகுதி இப்படி விளம்பரம்படுத்திக் கொள்கிறார்கள்…!

அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்கள் கிடைக்கப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அந்த தனித்தன்மை வைத்துப் பலருக்கும் யாம் செய்து கொடுத்தோம்.

ஆனால் அதன் வழி வந்தவர்கள் எல்லாம் தோல்வி (FAILURE) ஆனதால் தான் “சரி… இனி நேரம் இல்லை…!” என்ற காரணத்தால் இப்போது எல்லோருக்குமே நேரடியாகத் தெரியும்படி (OPEN) இப்பொழுது கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருளாற்றல்களை எல்லோருக்கும் வேகமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அந்தத் துணிவிலே தான் இருந்து கொண்டு இருக்கிறேன்.

1.நீங்கள் மகரிஷிகளை எண்ணி உங்கள் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் வேண்டித் தியானத்தைச் செய்யுங்கள்.
2.உங்களுக்கு நல்லாகும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.
3.தியானத்தைச் செய்யாதபடி நல்லது ஆகாது.
4.அந்த ஆசையிலேயாவது “மெய் ஞானத்தைப் பெற வரட்டும்…!” என்பதற்காகச் சொல்கிறோம்.

ஏனென்றால் நீங்கள் ஒரு ஆள் அந்த ஆற்றல்களைப் பெற்றால் தொழிலில் நீங்கள் நூறு பேரை பார்த்தாலும் உங்கள் சொல் அந்த நூறு பேருக்கும் நன்மை தரும்.

ஆனால் (சாதாரணமாக) இப்பொழுது நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். அந்த நூறு பேர் கஷ்டம் என்று உங்களிடம் வந்து சொல்லும் பொழுது நூறு பேர் உணர்வும் உங்களுக்குள் வந்து விடும்.
1.ஆக முதலில் நன்றாக இருப்பீர்கள்.
2.பிறர் கஷ்டத்தைக் கேட்ட பின் அந்தக் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வந்து விடுகிறது.

இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளில் இருந்து உங்களை மீட்டுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் இதை எண்ணி வளர்த்துக் கொண்டால் உங்கலுக்கும் நல்லதாகின்றது. உங்கள் சொல் மற்றவருக்கும் நல்லதாகும்.

பிறரின் தீமைகளைப் பார்க்கும் போது உடலில் நோய் வருகிறது. ஆனால் அந்த மகரிஷிகளின் உணர்வை வலுவாக்கிய நிலைகள் கொண்டு நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் நோய் குறைகிறது. அந்தளவுக்கு இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் “நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்…!”

நான் செய்து கொடுப்பேன் என்று என்னை (ஞானகுரு) எண்ணுவதற்குப் பதில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தின் “குருபீடத்தை நினைத்து… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…!” என்று நீங்கள் தியானியுங்கள்.

உங்கள் உடல் நலமாகும். அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த மாதிரி எடுத்துக் கொண்டால் எல்லோரும் பொதுவாக தபோவனத்தின் ஈர்ப்புக்கு வருகின்றனர். யாரையுமே போற்றுவது இல்லை.

நான் எடுத்த பங்குக்கு அந்த உயர்ந்த நிலையை நான் அடைகிறேன். அது போல அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கொப்ப அந்தப் பலனை நிச்சயம் அடைய முடியும்.

எல்லோரையும் மெய் ஞானிகளாகத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. அந்த ஆசையிலேயே போகிறது. (ஞானகுரு உபதேசித்த வருடம் 2002)

ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தியை எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இத்தனை சிரமத்திலேயும் மீட்டி வரும் போது “எல்லோரும் இதைப்பெற வேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான்…” இதை மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்.

தபோவனம் வளர்கிறது என்றால் அது மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரால் தான், அவருடைய உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். அத்தனை பேருக்கும் சந்தர்ப்பம் அது தான்.

நான் செய்தேன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது…! நான் எதைத் தேடி வைத்திருக்கின்றேன்…? என்னிடம் எந்தப் பொருளும் கிடையாது. அருளைத் தான் நான் தேடி வைத்திருக்கிறேன்.

அந்த அருளால் என்ன செய்கிறேன்…? உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணினீர்கள் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறலாம். அந்தச் சக்திகளை உணர முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்ற அனுபவப் பாடம்…!

Meditation methods

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்ற அனுபவப் பாடம்…!

குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில் நான் (ஞானகுரு) இங்கே என் குடும்பத்தை விட்டு விட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால் கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டு போய் இறைத்துவிட்டான்.

1.அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும் தன் வலுவின் தன்மையை விடாதபடி
2.ஒரே நிலைகளிலே எப்படியும் நாளைக்கு ஜீவிக்க முடியும்…! நாளைக்கு நன்றாக இருப்போம்…! என்ற
3.அந்த எண்ணத்திலேயே என் மனைவி (சாமி அம்மா) இருந்து வந்ததினால்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான் மெய் ஞானத்தின் சக்தியை யாம் பெற முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் மெய் ஞானத்தைப் பெற்றிருக்க முடியாது.

குருநாதர் எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பங்கள் வேதனையிலும் சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1.நான் வெளியிலே போகப்போகும் போது எனக்குக் கஷ்டம்.
2.அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம்.

கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் என் பையன் வாரி இறைத்துவிட்டான். அதனால் பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கே வீட்டிலேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு போனாலும் போகிற பக்கமெல்லாம் எம்மைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். யாம் உதவி செய்தாலும் கூட அந்த உதவி பெற்றவர்களும் என்னைக் கேலி பண்ணுகிறார்கள். இத்தனை அவஸ்தைகள்…!

வீட்டிற்குள் நுழைந்தாலோ உணவு இல்லை.. உடுத்த உடை இல்லை…! என்று பிள்ளைகள் எம்மிடம் கேட்கிறது. அந்த அளவுக்கு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படி வரக்கூடிய ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும் எதை எதையெல்லாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் வீட்டில் தியானம் எல்லாம் இருக்கவில்லை. அப்பொழுது எந்தத் தியானமும் செய்யவும் இல்லை. பொதுவாகக் குருநாதருடைய நிலைகளைத்தான் எண்ணத் தெரியும்.

எல்லோரும் அந்தத் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்காக அந்தத் தியானம் என்றால் என்ன…? தியானம் எப்படிச் செய்வது…? தியானத்தின் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எப்படிப் பெறுவது…? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு பதினாறு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்து அதை உணர்த்தினார்.

அதாவது…
1.ஒரு எண்ணத்தின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து எப்படிச் சுவாசிப்பது…?
2,காற்றிலிருந்து நமக்கு வேண்டியதை மட்டும் எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது…?
3.அதைச் சுவாசித்து நம் உடலில் எப்படிச் சேர்ப்பது…?
4.உடலில் உள்ள எல்லா அணுக்களையும் எப்படி ஒளியாக மாற்றுவது…? என்ற
5.இந்த நிலைகளையெல்லாம் அறிந்து கொண்ட பின்புதான் உங்களுக்கு உபதேச வாயிலாக இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதினாறு வருட காலத்தில் எமக்கு உணர்த்திய மெய் உணர்வுகளை யாம் கண்டுணர்ந்து எமக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துகளைத் தான் உங்களுக்குள்ளும் ஊன்றச் செய்து அதை நீங்களும் வளர்த்துக் கொள்வதற்கு அவர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அதை எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசையில் இருந்தால் போதும். உங்களுக்குள் அது ஆழமாகப் பதிவாகும். நினைவு கொண்டு மீண்டும் அதை எண்ணி ஏங்கி எடுத்தால் அந்தச் சக்திகள் உங்களுக்குள் வளரத் தொடங்கும்.

“ஊழ் வினையை…” நீக்கும் தியானப் பயிற்சி

Eye antenna

“ஊழ் வினையை…” நீக்கும் தியானப் பயிற்சி

நம் உடலில் நோய் வந்துவிட்டால் அந்த நோய்களை நீக்க மருந்தினை உட்கொள்கின்றோம். அந்த மருந்து இரத்தங்களில் பரவப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி கிடைக்கின்றது. அந்த நோய் குறையக் காரணமாகின்றது.

இருப்பினும் நம் உடலில் நோய்களை உருவாக்கிய அணுக்கள் முழுமையாக இறப்பதில்லை.
1.நல்ல அணுக்களுக்கு ஒரு கவசமாகத் தான் மாறியுள்ளதே தவிர
2.நோயை உருவாகும் அணுக்களை அடுத்து உருவாக்காமல் தடைப்படுத்தும் சக்தி
3.அந்த மருந்திற்கு இல்லை.
4.(ஏனென்றால் சிறிது காலத்திற்கு ஒன்றும் தெரியாது. நோயை உருவாக்கும் அணுக்களின் எண்ணிக்கை கூடியபின் மறுபடியும் மருந்தை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் வாழ்கின்றோம்)
5.காரணம் நாம் முதலில் பதிவு செய்த உணர்வுகளின் “மூல வித்து…!” எலும்புக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக எப்படி மரத்தின் கிளைகளை நீக்குகிறோமோ அது போல் தான் நாம் சாப்பிடும் மருந்துகள் அனைத்தும். மரக்கிளைகளை முழுவதும் வெட்டினாலும் சிறிது காலம் கழித்து மீண்டும் அந்த மரம் சிலிர்த்து எப்படி முளைக்கின்றதோ அதைப் போல தான் நமது உடலில் நோய்கள் மீண்டும் வளரத் தொடங்குகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் அந்த உறுப்புகளை இழந்தபின் அவர்கள் சொல்லும் கட்டுப்பாட்டுடன் உணவுகளை நாம் உட்கொள்தல் வேண்டும். அந்தக் கட்டுப்பாடு தவறினால் துரித நிலையில் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் நிலையான உணர்வுகளை நாம் சேர்க்க முடிவதில்லை.

இந்த வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஊழ் வினை என்ற வித்தாக எலும்புக்குள் இருப்பதனால்
1.மருந்துகளை உட்கொண்டு மேலெழுந்தவாறு தசைகளிலோ மற்ற இடங்களிலோ உள்ள நோயை அகற்றினாலும்
2.“ஊழ்…” என்ற வித்தின் மூலமாக அது ஜீவன் பெற்று வளரத்தான் செய்யும்.
3.எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் எலும்புக்குள் இருக்கும் இந்த ஊழ்வினை என்ற மூல வித்தை அகற்ற முடியாது.

ஏனென்றால் அது நிலையானதாகி விடுகின்றது. ஆக ஊழ்வினை என்ற வித்தை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?

பாம்பினங்கள் தன் உணவுக்காக விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது. விழுங்கிய உயிரினங்களின் உடல்களிலுள்ள விஷத் தன்மைகளை எல்லாம் தனக்குள் சத்தாக வடித்து எடுத்துக் கொள்கிறது.

இப்படிப் பல பல உயிரினங்களின் விஷத் தன்மைகள் சேரச் சேர உடலுக்குள் அது அடங்கிய பின் அந்த விஷமே பல வண்ணங்கள் கொண்ட நாக இரத்தினமாக உறைந்து விடுகின்றது.

இதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில் அந்தத் துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கி அந்த விஷத்தையே உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

1.எல்லா விஷத்தையும் வென்று ஒளியாக இருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளைத்தான்
3.நமது குரு காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களைப் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் செவி வழி ஓதி… கண் வழி கவரச் செய்து… மூக்கு வழியாக நுகரச் செய்து… உடலிலிருக்கும் இரத்தங்களில் கலக்கச் செய்து… தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்கின்றோம்…! ஆகவே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…!
2.அது எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…!
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடல் முழுவதும் படர்ந்து உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று
4.அந்தத் தீமையை நீக்கும் உணர்வினை ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கச் செல்லும் போது ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானியுங்கள்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையங்கள் நுரையீரல் சிறுநீரகம் இருதயம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்,

நம் உடலில் உள்ள இந்த முக்கிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்ய இதை போல எண்ணி நினைவாற்றலைக் கூட்டி அந்த உறுப்புகளில் நல்ல அணுக்களின் தன்மையை உருவாக்க வேண்டும்.

வாழ்க்கையில் எது வந்தாலும் அந்தக் கவலையோ சஞ்சலமோ சோர்வோ நம்மை இயக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குப் பெறச் செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுபவரையோ வெறுப்படைந்தவரையோ சஞ்சலப்படுபவரையோ நாம் பார்த்தோம் என்றால்
1.கண்களில் உள்ள கருமணி அதைப் படமாக்கி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகளை அதனுடன் இணைத்துள்ள நரம்பு மண்டலத்தின் வழி கொண்டு
3.நம் உடல் உறுப்புகளில் உணர்ச்சிகளைத் தூண்டி செய்தியாக உணர்த்தி அதை உஷார்படுத்துகிறது.
4.அதே சமயத்தில் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி
5.நரம்பு மண்டலத்தின் வழியாக உடல் உணர்ச்சிகளைத் தூண்டி
6.நாம் நுகர்ந்த உணர்வுகளை எண்ணம் சொல் செயல் என்ற வழியில் வெளிப்படச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு டம்ளரில் விஷத்தைப் போட்டுக் கொட்டிய பின்பு அதைச் சீராகச் சுத்தம் செய்யாமல் மறு முறை பயன்படுத்தினால் அந்த டம்பளரில் தொக்கியுள்ள விஷம் மற்ற பொருளை அதிலே போட்டாலும் அதையும் விஷமாகத் தான் மாற்றும்.

அது போல வேதனைப்படுபவரைப் பார்த்து அவர் சங்கடப்பட்ட உணர்வுகளை எல்லாம் பேசிவிட்டு அடுத்து நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் சீராக வராது. ஏனென்றால் கண்களில் உள்ள கரு மணிகளில் அந்த உணர்வுகள் அழுக்காகப் படிந்துவிடுகின்றது.

அந்த நேரத்தில் ஒரு நோட்டிலே எழுத வேண்டும் என்றாலும் எழுத்தின் வடிவம் சரியாக வராது. அல்லது ஒருவர் நல்ல விஷயத்தை நம்மிடம் சொன்னாலும் அதைக் கேட்கும் மனது இருக்காது. சோர்வும் சஞ்சலமும் எரிச்சலும் தான் நமக்கு வரும்.

அதே சஞ்சல உணர்வை எடுத்துத் தொழில் செய்தாலும் அது நமக்குச் சரியாக வருவதில்லை. உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே அந்த விஷத்தைத் துடைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் கரு விழிகளில் படரச் செய்ய வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கருமணிகள் பெற வேண்டும் என்று எங்கும் போது அது கரு மணிகளைத் தூய்மையாக்குகின்றது.

டி.வி. ரேடியோ ஒளி, ஒலி அலைகளை பரப்பும் போது அந்தந்த ஸ்டேஷனில் வைத்தால் அந்தந்த அலை வரிசையில் எடுத்துக் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது, ஒலியைக் கேட்கவும் முடிகின்றது.

அதே போல துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அரும்பெரும் சக்திகள் நம் பூமியில் நிறையப் படர்ந்துள்ளது. இப்போது நான் சொல்லும் போது நீங்கள் கேட்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்ய முடியும்.

கண்களில் உள்ள கரு மணிகளைத் தூய்மையாக்குவதும் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை அடிக்கடி ஊட்டிப் பழகிக் கொண்டால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு உடலிலுள்ள அணுக்களுக்குள் பெருகிப் பெருகிப் பெருகி
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.
3.அதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்…!

தியானம் என்றால் என்னமோ… ஏதோ…? என்று நினைக்கிறோம் – ஆனால் அப்படி இல்லை… மிகவும் எளிதானது…!

Dhuruva meditation

தியானம் என்றால் என்னமோ… ஏதோ…? என்று நினைக்கிறோம் – ஆனால் அப்படி இல்லை… மிகவும் எளிதானது…! 

சதா நாம் “மகா காளி… மகா காளி…!” என்று அந்த மந்திரத்தைச் சொல்லிப் போற்றி.. போற்றி…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் கோபமோ ஆத்திரமோ வரும் – அது ஜெபம்.

1.ஆழமான நிலைகள் கொண்டு
2.வெகு தூரத்தில் இருக்கக்கூடிய அந்த மெய் ஞானிகளின் உணர்வை இழுத்து
3.நமக்குள் சேர்க்கச் செய்கின்றோம் – இது தியானம்.
4.இதை “யார் வேண்டுமானாலும்… செய்யலாம்…!”

மந்திரத்தைச் சொன்னால் அந்த உணர்வுகள் சீக்கிரம் நமக்குள் வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னைத் திட்டிவிட்டார்…! என்ற உணர்வை எடுத்துவுடன் சோர்வாகும். அதுவும் தியானம்தான்.

அவர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டாலும்… அவர்கள் திட்டியதை மனதில் ஏற்றுக் கொண்டு என்னைத் திட்டினார்களே… என்னைத் திட்டினார்களே…! என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அதுவும் தியானம்தான்.

இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டார்களே…! என்று எண்ணும் பொழுது சோர்வினுடைய நிலைகள் வரும். அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் ஆத்திரம் வரும்.

அந்த எண்ணத்தினுடைய நிலைகள் வரும் பொழுது வியாபாரத்தில் ஒருவர் வந்து சரக்கு கேட்கும் பொழுது வெறுப்பு வந்துவிடும். இதுவும் தியானம்தான்.
1.ஆக இது எல்லாம் நாம் என்ன செய்கின்றோம்…?
2.நல்லதை எல்லாம் விலக்கிக் கொண்டு வருகின்றோம்.

அதாவது பிறருடைய சங்கடப்படும் உணர்வுகள் நமக்குள் புகுந்து “நம்மைப் இப்படிப் பழித்துப் பேசிவிட்டார்களே…!” என்ற உணர்வு வந்தால்
1.பாத்திரங்களில் அழுக்குப் பட்ட மாதிரி அதனுடன் படிந்துவிடும்.
2.அதைத் தேய்க்கத் தேய்க்க அது தேய்ந்து கொண்டே இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்களோ இருளான நிலைகளோ வந்தால் நமக்குள் இருள் சூழும்.

நாம் நல்ல எண்ணத்துடன் இருக்கும் பொழுது பிறர் ஏதாவது “சுருக்…” என்று சொல்லிவிட்டால் இருள் சூழ்ந்துவிடும். அந்த சமயத்தில் ஞானத்தை ஊட்டும் நிலைகள் அங்கே மறையும்..

இதைப் போன்ற தீமையான நிலைகள் வருவதை எல்லாம் அந்த அசுத்தத்தை நீக்கக் கூடியதாக மெய் ஞானிகளின் அருள் ஒளியை எடுத்து நல்லதைச் சேர்க்கும் நிலையாக அதைப் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அனைத்து மகரிஷிகளினுடைய எண்ண ஒலிகள் இன்றும் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது. அந்த மகா ஞானிகளின் அருள் ஒளிகளை நாம் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுவது தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்துச் சுத்தப்படுத்தும் பொழுது
2.நமக்குள் மாசுபடும் நிலைகள் மாறி
3.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் எண்ணத்தையும் பரிசுத்தமாக ஆக்கிவிடும்.

நீங்கள் இதைச் செய்து பாருங்கள். வாழ்க்கையில் செல்வம் உங்களைத் தேடி வரும். உங்கள் சொல்லிலே தெளிவு வரும்.

இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது உங்கள் தொழிலேயும் செல்வாக்கைப் பார்க்கலாம். உங்கள் மனதிலும் மகிழ்ச்சியையும் பார்க்கலாம்.

உயிராத்மாவை அழியாததாக ஆக்கிடும் பயிற்சி

Noble powers of sages

உயிராத்மாவை அழியாததாக ஆக்கிடும் பயிற்சி 

நல்ல உணர்வுடன் நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நமக்குத் துன்பமூட்டும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதனால் நம் நல்ல உணர்வுகள் சீர்கெட்டு நல்ல குணங்களைச் சிந்திக்க முடியாதபடி நோயாக வளர்ந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் வாழ்க்கையைச் சீர்கெடச் செய்யும் இந்த உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா…!

என்னுடைய (ஞானகுரு) வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் அதை நிவர்த்திப்பதற்காக வேண்டி குருநாதர் உபதேசித்த அருள் உணர்வுகளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலைச் சுவாசித்துப் பழகினேன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்குள் அறியாது வந்த நஞ்சுகள் ஒடுங்கி என்னுடைய துன்பங்கள் அகன்று மகிழ்ச்சியூட்டும் செயலை உருவாக்கியது.

அதைப் போலத்தான் வேதனையும் துன்பமும் பல கஷ்டங்கள் கொண்டு நீங்கள் வந்தாலும் அதை நிவர்த்திப்பதற்குத்தான் எம்மிடம் வருகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இடர்களிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தக் கருத்தில் தான் இங்கே வருகின்றீர்கள்.

கஷ்டமாக இருக்கிறது…! என்ற நிலையில் உடலிலே வேதனை… தொழிலிலே கஷ்டம்… நண்பர்களால் சில துன்பங்கள்… என்று இதைப் போன்று வாழ்க்கையில் வரக்கூடியதை எண்ணிச் “சாமிகளிடம் (ஞானகுரு) போனால்… எப்படியும் நிவர்த்தி ஆக்கலாம்…!’ என்ற ஏக்கம் அது ஒன்றாக அமைகின்றது.

அந்த ஏக்கத்தின் நிலையில் வரும்பொழுது நீங்கள் ஏங்கித் தவிக்கும் இந்த உணர்வுக்குள் மெய் ஞானிகளின் உணர்வின் நிலைகளை யாம் உபதேசிக்கின்றோம்.

உபதேசிப்பது உங்கள் செவிப் புலன்களில் அது தாக்கப்பட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வின் நிலைகளை உங்களைச் சுவாசிக்கச் செய்கின்றது.

அன்றைய அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கருவிலிருந்தே சிறுகச் சிறுக விஷத்தை ஊட்டி வளர்த்தார்கள். குழந்தை பிறந்த பின்னாடியும் ஆகாரத்துடன் சிறுகச் சிறுக விஷத்தை ஊட்டினார்.

ஏனென்றால் வலுக் கொண்ட குழந்தைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள். அதைப்போன்று தான்
1.உங்கள் வாழ்க்கையில் துன்பத்தை துடைக்கும் நிலையாக வரும் பொழுது
2.அந்த மெய் ஞானிகளுடைய அருள் சக்தியைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் ஏற்றி
3.அவர்களின் பேராற்றல் மிக்க உணர்வின் சத்தை உங்கள் நல்ல உணர்வுகளுடன் சேர்ப்பிக்கின்றோம்.

ஆகவே நீங்கள் எப்போது யாரிடத்தில் துன்பமான நிலைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்துணர்ந்தாலும்…
1.அந்த உணர்வின் தன்மைக்கு அடுத்து
2.“ஈஸ்வரா…1” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசித்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற நினைவின் அலைகளை
5.உள்முகமாக உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.
6.கண்களைத் திறந்து ஒரு நிமிடமும் கணகளை மூடி ஒரு நிமிடம் அவ்வாறு செய்ய வேண்டும். இதற்கு “ஆத்ம சுத்தி…” என்று பெயர்.

தீயது அணுகாது கெட்டது தனக்குள் நுழையாது தனக்குள் காத்திடும் நிலையாக உயர்வான எண்ணங்களை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதற்காக இதைத் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.