உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

chitra festival

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

 

கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.

ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.

ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.

அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.

பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.

ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?

1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!

இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.

ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆனால் அவன் பிறந்த பின் அதைப் பார்க்கும் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.

நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.

இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.

நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

headache

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

 

நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.

அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?

இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.

அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்

நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுப்ட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாறவேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.

அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.

காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.
ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வை இப்படி நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்…. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

மகிழ்ந்து வாழும் சக்தியையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நாம் பெறுகின்றோம்.

மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…!

Gnana peace and silence

மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…!

கோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.

இப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.

எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…
1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.
2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு
3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.

ஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.

யாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா…! அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

“ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.

பொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.

பின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி
1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்
2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்
3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்
4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று
5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.

உதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்
1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி
2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.

இதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.

தொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையகின்றது.

பகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்
1.பொருள் அவர்களுடையது…! என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…! என்று சொல்வார்கள்.

இத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.

இதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி
2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்
3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.

அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்… பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது… என்று இந்த உணர்வை நாம் எண்ணினோம் என்றால் அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகளை அவர்கள் நுகரப்பட்டு
1.பகைமையை மறக்கச் செய்து
2.அங்கே சிந்திக்கும் திறனை உருவாக்கச் செய்யலாம்.

ஏனென்றால் அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அதை நீங்கள் “பொறுமையுடன்…” கையாள வேண்டும்.

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?

Energy boosts

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…? 

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.

கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.

அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.

நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

சிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!

அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.

அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?

ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்றும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…!

தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

SOUL CLEANING WEAPON

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

 

இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா இதுகளும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.

இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.

இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.

ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.

வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.

அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

விஷத்தின் தன்மையை நீக்கியது அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.

நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.

வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.

1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.

இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.

இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடைப்பிடித்து வந்தால் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது… வாழ்க்கையில் எப்படிச் சீர்படுத்தலாம் என்ற சிந்தனையும் கிடைக்கின்றது.

அதனால் இந்த ஆத்ம சுத்தி செய்வோர் அனைவரும் மன அமைதிப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழலாம். என்றுமே ஏகாந்த நிலையில் அமைதியான துருவ நட்சத்திரம் இருப்பது போன்று நாமும் அந்த ஏகாந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மனிதனின் கடைசி நிலை இது…!

நம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி

Antenna power of sage

நம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி  

 

1.எதிரிகளை எதிரிகள் என்று எண்ணாது
2.அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்தல் வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கொடுக்கும் இந்தச் சக்தியை வலு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க அவர்கள் உணர்வுகள் உங்களை இயக்காது. அதே சமயத்தில்…
1.யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்.
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பதிவாக்கி நம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது அவர் நமக்குத் தீங்கு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் வளர்த்து “நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதில்…”
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்திடும் நிலையாகக்
2.கண் வழி கொண்டு தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (நாரதன்) உணர்வைக் கவர்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை அங்கே சென்ற பின் அங்கே அவர் செய்யும் தீங்கினையும் மற்ற உணர்வினையும் அது வெளிப்படுத்துகின்றது. அப்பொழுது நம் மீது வரக்கூடிய இந்த உணர்வினைப் பலவீனைப்படுத்துகின்றது.

இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணங்கள் கொண்டு அதை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது நம் உடலில் முந்தைய தீய வினைகளையும் அடக்கிட முடியும்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கொண்ட உணர்வால் நம் உறுப்புகள் நல்ல உறுப்புகளில் இந்த இரத்தநாளங்களில் கண்டு இந்தக் கருக்களை அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கின்றது.

ஆகவே அந்தத் தீங்கு விளைவிக்கும் உணர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று கருக்களாக உருவாக்கப்படும் பொழுது இரத்தநாளங்களிலே இது பெருகுகின்றது.

உடலுக்குள் இந்த இரத்தம் போகாத இடமே இல்லை.

ஏனென்றால் இதனின் உணர்வுகள் நம்முடைய எண்ணமே எதனின் உணர்வின் தன்மையோ பாதுகாப்பான நிலைகள் அழைத்துச் சென்று அங்கே பகைமை உணர்வைத் தடுக்க உதவுகிறது.

இதைத்தான் இராமனுக்குப் படகோட்டியான குகன் தன் படகின் மூலம் நதியைக் கடக்க உதவி செய்கின்றான்…! என்று காட்டினார் வான்மீகி.

1.ஆக நம் எண்ணங்களின் நிலை கொண்டு
2.இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் அந்த அருள் உணர்வின் எண்ணமே கருவாகி
3.கருவின் உணர்வாக உருவாகி அதன் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது..? என்றும் இதைக் காட்டுகின்றனர் ஞானிகள்.

இப்படி நம் உடலுக்குள் பகைமை உணர்வைச் சாராத நிலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்றால் இதைப் போன்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர் தீங்கு செய்தார் என்ற எண்ணங்கள் வருவதற்கு முன்
1.என் மீது தீங்கு எண்ணும் அந்த எண்ணங்கள் அங்கே மறைய வேண்டும்
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் தீங்கு செய்யும் அந்த எண்ணங்கள் மடிந்திட வேண்டும் என்ற உணர்வினை
3.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வினை எண்ணிவிட்டு அந்த எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

“கண்ணால் இந்த உணர்வைப் பாய்ச்சி…” இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் நினைவாற்றல் கொண்டு ஊடுருவிச் செலுத்தப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அங்கே நாரதனாகச் சென்று
2.மற்றவர்கள் தீங்கு செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

sixth sense power

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

 

ஒருவன் குறும்புத்தனம் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் அந்த குறும்பின் உணர்ச்சியை ஊட்டும் அணுத்தன்மை நம் உடலில் விளைந்து விடுகின்றது. அப்பொழுது அதை புகாது நமக்குள் தடுத்தல் வேண்டும்.

அந்த குறும்புத்தனத்தின் உணர்வை நீக்க வேண்டும் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து அதனுடன் கலந்து என் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும். ஈஸ்வரா என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் எவன் குறும்புத்தனம் செய்தானோ…
1.அவன் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவன் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
4.பிறரை மதிக்கும் நன்மதிப்பான அந்த உணர்வுகள் அவனிடம் தோன்றப்பட வேண்டு என்று எண்ணினால்
5.அந்த குறும்புத்தனத்துடன் நமது அந்த அருளொளி என்ற உணர்வைக் கூட்டி ஒரு புது உணர்வாக மாற்றுகின்றோம்.

விவசாயங்களில் என்ன செய்கின்றோம்…? நமக்கு வேண்டிய உணர்வின் அணுக்களைச் சேர்த்து தாவர இனங்களை மாற்றித் நமக்குகந்த புது வித ரகங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அதே போல மனிதனுக்குகந்த நிலையில் உயிரினங்களில் மற்ற மரபணுக்களைச் சேர்த்துச் சேர்த்து அதனின் உடல்களை உருமாற்றுகின்றோம். ஆகவே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் அந்த ஆறாவது அறிவின் தன்மை.

1.இதையெல்லாம் உருவாக்கும் திறன் இருந்தும் நமக்குள் நல்லதை உருவாக்கத் தவறினால்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமைகள் நம்மை அது வலிமை கொண்டு
3,மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் மனிதனல்லாத உடலை உருமாற்றிக் கொண்டிருக்கும் – நம் உயிரின் வேலை.

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாக்கப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பத்தில் காக்கா வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கத்துடன் கேட்கிறோம்.

இருந்தாலும் சிலருக்குப் பலவீனமான உணர்வு இருந்தால் அது சிறு மூளை பாகத்தில் தாக்கி விட்டால் அது வெடுக்கு…வெடுக்கு… என்று சுண்டும்.

1.இதற்கு முன்னாடி காக்கா வலிப்பு இல்லை…
2.ஆனால் இப்படிச் சந்தித்த நிலைகள் கொண்டு அதிர்ச்சி ஆன பின்
3.இந்த உணர்வின் தன்மை அணு அங்கே தேங்கி விட்டால் அவர்களுக்கு இந்தக் காக்கா வலிப்பு வரும்.
4.சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இது இல்லை என்று எண்ணுவார்கள்
5.ஆனால் இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

இதைப் போல ஒரு சாந்த குணம் கொண்ட… பரிவான நிலைகள் கொண்ட ஒரு மனிதன்… எதிர்பாராத நிலைகள் சந்திக்கப்படும் பொழுது ஆ…ஆ…! என்ற இந்த உணர்வின் தன்மை பயந்தால் என்ன நடக்கின்றது…?

டரன்சாக்சன் (TRANCACTION) செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிப்பெருக்கி ஆகும்போது சிறு மூளைப் பாகங்களில் உள்ள நுண்ணிய நரம்புகள் விரிவு அடைந்து விடுகின்றது.
1.அப்போது நமக்குள் மயக்கம் ஆகின்றது
2.உறுப்புகளின் தன்மை கை கால் அங்கங்கள் வராமல் கூட போய் விடுகின்றது – அதிர்ச்சியினால்…!

இதெல்லாம் நாம் அறியாமலே நுகரும் உணர்வுகள். அப்போது நம்மைக் காக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்…? ஆறாவது அறிவைச் சீராக நாம் பயன்படுத்த வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உணர்வின் தன்மை உயிரோடு ஒன்ற வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி
2.உட்புகும் அந்தத் தீமையின் செயலாக்கங்களை நாம் தடைப்படுத்தி பழக வேண்டும்.

யாரைப் பார்த்து அந்த அதிர்ச்சியின் நிலைகள் ஆனதோ அவனுக்குள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும். அவன் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவன் உடலில் உள்ள பிணிகள் நீங்க வேண்டும் அவன் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உணர்வுகளை எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகின்றது. அவனுடைய செயல்கள் நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பத்தால் வேதனையை நுகரப்படும்போது அது பிரம்மமாகின்றது… உருவாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நம் ஆறாவது அறிவு சேனாதிபதி இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது. கார்த்திகேயா…! இதையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது அந்த ஆறாவது அறிவு.

1.தீமை என்ற உணர்வுகள் வந்தாலே…
2.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் இணைத்து
3.அதைச் சுவைமிக்கதாக நாம் படைத்துப் பழக வேண்டும்.
4.அந்த அணுக்களை மாற்றிப் பழக வேண்டும்…!

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது…!

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை

galaxy near ursa major

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை

 

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைத் தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டே வருகின்றீர்கள். இதிலே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் பண்புடன் கேட்டறியும் மற்றவர்களின் உணர்வுகள்
1.உங்களுக்குள் அது எப்படி அறியாது தீய வினைகளாக உருவாகின்றது…?
2.நல்ல அணுக்களை உருவாக விடாதபடி எப்படித் தடுக்கிறது…? என்பதை நீங்கள் அறிந்து
3.ஒவ்வொரு நிமிடத்திலும் அதை நல்லதாக மாற்றும் சக்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
4.முருகு..! – மாற்றியமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு.

கோபப்படுவோரைப் பார்த்துவிட்டால் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் புறக் கண்களால் பார்க்கப்படும் பொழுது நுகர்ந்தது நம் உயிரிலே பட்டுத்தான் நம் உயிர் அகக்கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றப்படும் பொழுது இது நெற்றிக் கண்ணாகின்றது.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்…! என்று ஏற்றப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

ஆகவே சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். புறக்கண்களால் பார்த்த இந்தக் கோபத்தின் உணர்வுகள் இங்கே வரப்படும் பொழுது இதை அடக்குகின்றது.

இப்படி அடக்கிய நிலைகள் வரப்படும் பொழுது யார் கோபப்பட்டார்களோ அவர்களைப் பார்க்கும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் தீமைகள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஒன்று சேர்த்து வாழும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குழம்பில் பல சரக்குகளைப் போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போல் அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் வளராதபடி அருள் உணர்வை எடுத்துக் கலந்தால் அந்த அணுவின் தன்மையாக உருவாகின்றது.
1.அத்தகைய அணுவாகி விட்டால்
2.அந்த அருள் உணர்வு (துருவ நட்சத்திரம்) தான் அதற்கு உணவாகத் தேவை.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் கருவாக்கி அணுவாக உருவாக்குகின்றது நம் உயிர். உயிரின் வேலை அது தான்…!

செடி கொடிகளில் பல உணர்வைச் சேர்த்து ஒரு புதுச் செடியாக உருவாக்கும் பொழுது
1.எதன் பங்கு விகிதாச்சாரம் வருகின்றதோ
2.அதன் வழி அந்தச் செடி வளர்ந்து அதனுடைய கனிகளையும் வித்துகளையும் உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

stepway to heaven

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

 

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெறவேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் ஏன் மாறுகிறது…?

Telepathy

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் ஏன் மாறுகிறது…?

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.