தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை

தியானம் செய்யும் போது “உயிரின் காந்தத்தைப் பயன்படுத்த வேண்டிய” சரியான முறை

 

அகஸ்தியனும் அவன் மனைவியும் பூமியின் துருவத்தின் எல்லையை கடந்து அதிலிருந்து ஒளியாக மாற்றும் சக்தியைப் பெற்றனர்.

ஒளியான பின் இரு உயிரும் ஒன்றி அங்கே துருவ நட்சத்திரமாக நிலையாக இருக்கின்றனர். நம் பூமிக்கு வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
1.இது எல்லாம் வேத நூல்களில் நாதங்கள் என்ற நிலைகளில் எழுதியுள்ளார்கள்.
2.ஆனால் சிற்றரசர்களுக்குள் போர்கள் வரும் பொழுது காலத்தால் மறைந்து விட்டது… கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் இந்தக் காற்றில் இருக்கின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் நமது குருநாதர் அனுபவரீதியாக 20 வருடம் காடு மேடு நகரம் எல்லாம் எம்மை அலையச் செய்து
1.நீ நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.நீ அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று பக்குவப்படுத்தி
3.எனக்குள் துன்பத்தை உண்டாக்கி… எது துன்பத்தை உண்டாக்குகின்றது…?
4.எந்த சந்தர்ப்பத்தில் உண்டாகிறது…? அதை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்ற உபாயத்தைக் கண்டறிந்து
5.அந்த இருபது வருட அனுபவத்தைத் தான் இப்பொழுது நான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு).

ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றார்கள். அதைக் கேட்டவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் அது உங்கள் உடலில் அது விளைகின்றது. ஆனால் இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம்
1.எனக்கு குருநாதர் காட்டியதை எல்லாம் தெரிந்து உங்களிடம் சொல்கின்றேன் நீங்கள் கேட்கின்றீர்கள்… இது நல்ல சந்தர்ப்பம்.
2.என்னை நீங்கள் கண்ணால் பார்க்கின்றீர்கள்… இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது
3.நுகர்கின்றீர்கள்… உங்கள் உயிரில் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. நான் சொல்லும் உணர்வை எல்லாம் தெரியச் செய்கின்றது.

நீங்கள் அதை நுகரப்படும் போது உங்கள் உமிழ் நீர் மாறும். அப்பொழுது உங்கள் சாப்பாட்டுடன் கலந்து சிறு குடலுக்குப் போய்ச் சேரும்… இப்படி சிறுகச் சிறுக பெருங்குடலுக்குப் போய்ச் சேரும்.

இப்பொழுது நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது வாயில் உள்ள ருசியெல்லாம் வித்தியாசமாக மாறும்.
1.உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலுக்குள் அப்படியே ஜிலு…ஜிலு…வென்று இருக்கும்
2.விஷத்தன்மை இருந்தால் அதெல்லாம் குறைந்து போவதை உங்களால் உணர முடியும்.

ஏனென்றால் மணிக்கணக்கில் உட்கார வைத்து எப்படியும் இந்த நல்ல சத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்கின்றேன்.

சண்டை போடுவதை வேடிக்கை பார்த்தீர்கள் என்றால் அந்த உணர்வெல்லாம் உமிழ் நீராக மாறி உடலுக்குள் குடல் உபாதைகள் கல்லீரல் மண்ணீரலில் வலி நெஞ்சு வலி என்று இதெல்லாம் வந்துவிடும்.

ஆனால் இப்போது இந்த உபதேசங்களைக் கேட்கும் போது இந்த சந்தர்ப்பம் ஞானிகள் உணர்வை நீங்கள் நுகர நேருகின்றது… அந்தச் சத்து உங்கள் சிறுகுடல் பெருங்குடலுக்குப் போய்ச் சேருகின்றது, ஆகாரத்துடன் கலந்து நல்ல இரத்தமாக மாற்றிக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் நல்ல உணர்வுகள் பதிவாகின்றது. என்னுள் விளைந்தது உங்கள் உடலில் பதிவாகிறது.
1.ஆனால் காற்றிலேயும் இருக்கிறது
2.எந்தக் கண் வழி பதிவு செய்தீர்களோ உடனே இழுத்து உங்களுக்குள் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக சங்கடமாக இருக்கின்றார்கள்… கஷ்ட்த்தைச் சொல்கின்றார்கள் நீங்கள் கேட்கின்றீர்கள். கேட்கும்போது அதே உணர்வுகள் நமக்குள் என்ன செய்கின்றது…? அவர் மேல் பற்று இருந்தால் நமக்குள் ஏதோ தலை சுற்றுவது போல் வரும்… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று.

இப்பொழுது இந்த மாதிரி நேரத்தில் அவர்கள் உணர்வு நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?

இப்பொழுது நீங்கள் கேட்டுக் கொண்ட முறைப்படி
1.ஈஸ்வரா…! என்று சொல்லிவிட்டு கண்ணிலே ஏங்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வந்தது இந்தப் பூமியில் இருக்கின்றது.
3.அதை நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் இழுக்கின்றது
4.கண்ணின் நினைவை உயிரோடு கொண்டு விட்டவுடன் இதிலே கொண்டு பாய்ச்சி விடுகிறது.
5.அப்போது அந்த உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?
6.இங்கே மூக்கு வழியில் செல்வதை நிறுத்தி விடுகின்றது… புருவ மத்தி வழி கூடி இழுக்கிறது.
7.அப்பொழுது கெட்டதை எல்லாம் நிறுத்திவிடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் என் உடல் முழுவதற்கும் படர்ந்து என் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சொல்லிக் கட்டளையிட்டால் இங்கே வந்துவிடுகிறது.

அப்பொழுது முன்னாடி உஷாராகிக் கொள்கின்றது, கெட்டதை உள்ளே போக விடாமல் தடுக்கின்றது,
1.உடலுக்குள் வலிமையாகி அழுத்தமான பின்பு ஆன்மாவில் இருப்பதைத் தள்ளி விடுகின்றது
2.தள்ளி விட்டவுடன் பிறகு நமக்கு சங்கடம் என்று எதுவும் வராது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்…!

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

திட்டியவர்களை எண்ணும் பொழுது எப்படி உங்கள் வாழ்க்கையில் குறை நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றதோ… அதைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அது உங்களுக்குள் வராமல் இப்படித் தடுத்துப் பழக வேண்டும்.

சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்

Third-Eye path

சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்

 

படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.

மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…!

அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.

இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.

நமது எல்லை எது…? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.

உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.

ஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.

இப்பொழுது நாம் இந்த உடலான சொர்க்க பூமியில் இருக்கின்றோம். நம் உயிர் சொர்க்க வாசலாக இருக்கின்றது. இந்த சொர்க்க வாசலை வைத்து நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் விண் செல்ல முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையில் அதைச் சொர்க்க லோகமாக மாற்ற வேண்டும். அதற்காகச் சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
1.சொர்க்கத்தை அடைந்திட்ட உயிருடன் ஒன்ற வேண்டும்.
2.அருள் ஒளிச் சுடரை இங்கே வளர்க்க வேண்டும்.
3.வளர்த்தால் நம் உயிர் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Image

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!