பக்திக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்

Bhakti and Meditation

பக்திக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருகிறது… புலி வருகிறது…!” என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…? துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம், சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.

“ஐய்யய்யோ…! புலி வருகிறது… புலி வருகிறது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன செய்யும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும். “நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…!”

உதவி செய்தாலும்… அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப் படைக்காதபடி ‘’ஆத்ம சுத்தி” என்ற இந்த ஆயுதத்தை எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

உயிரான ஈசனிடம் வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடமும்,
2.கண்களை மூடி ஒரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும்,.

கண்களைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.

இந்த முறைப்படி செய்தால் அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்…!” என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்.

தியானம் என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.

1.தியானம் என்பது நமக்குள் நல்லதைச் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.
2.தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது
3.இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை
1.வலு கொண்டு உங்களுக்குள் பெறச்செய்து,
2.அருள் வாக்கின் நிலையாக உங்களுக்குள் கொடுத்து
3.எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பத்தைப் பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ…
4.அவைகளெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் இந்த ‘ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.நாளை நடப்பவை அனைத்தும் நல்லவைகளாக இருக்கவேண்டும்,
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படரவேண்டும்…! என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.

உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

eye sight meditation

உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

நாம் சண்டை இடுவோரை வேடிக்கை பார்க்கும் போது அவர்கள் கோபமான உணர்வுகள் நாம் வெளிப்படுத்துவதை நாம் கூர்ந்து கவனிக்கும் போது நம் கண்கள் அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் பதிவு செய்கின்றது. அதனால் நம் நல்ல குணங்கள் மறைந்து நமக்குள் கோபமோ அல்லது பயமோ வேதனையோ உருவாக்குகின்றது.

தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் இணைத்தால் அது நகையாகின்றது. அது அழகாக இருக்கின்றது. ஆனால் அந்தச் செம்பையும் பித்தளையும் பிரித்துத் தூய்மைப்படுத்திய பின் தான் மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம்.

அதைப் போல பிறருடைய துன்பத்தைக் கேட்டறிகின்றோம். துன்பப்படுவோர் நம்மிடம் வந்து துன்பத்தைத் துடைத்துக் கொள்வதற்காகச் சொல்லும் வார்த்தைகளைக் கூர்மையாகக் கேட்டுணரும் பொழுது தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் கலப்பது போல நம் நல்ல குணத்தில் கலந்து விடுகின்றது.

துன்பத்தைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் நமக்குள் வந்த அந்தத் துன்பமான உணர்வை உடனுக்குடன் துடைக்க வேண்டும் அல்லவா…! ஏனென்றால்
1.நம்மைக் கேட்டுக் கொண்டு நம் உடலில் அழுக்குகள் சேர்வதில்லை.
2.இருந்தாலும் நாம் தெரிந்தே தான் தினசரி குளித்து சோப்பைப் போட்டு
3.அந்த உடலில் பட்ட அழுக்கை அப்புறப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான் பிறரை நாம் பார்க்கப்படும் போது அவர்களிடம் பழகும் பொழுது நம்மை அறியாதபடி நம் நல்ல மனதில் நம் ஆன்மாவில் தீமையான உணர்வுகள் அழுக்காகப் பிணைந்து கொள்கின்றது.

அத்தகைய அழுக்கைப் போக்குவதற்காக மகரிஷிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் மனதைத் தூய்மையாக்க வேண்டும். அதற்குத்தான் இந்தத் தியானம்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனை வரும் போதெல்லாம்
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
4.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி
5.ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானித்தால்
6.உங்கள் ஆன்மாவில் பட்ட உணர்வில் பட்ட அழுக்குகள் உடனுக்குடன் துடைக்கப்படுகின்றது

இதற்கு முன் நம் உடலுக்குள் அறியாமல் சேர்ந்த தீமையான உணர்வுகள் வாத நோய் இரத்தக் கொதிப்பு இருதய நோய் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளாக விளைந்த நிலையில் இருக்கின்றது.

அதை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். எத்தகைய நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள். கண்களைத் திறந்தபடியே ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானியுங்கள்.

பின் அதே போன்று கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்களைத் திறங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் இருக்கும். அதைப் போக்க அவரவர் நோய் போக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உதாரணமாக உப்புச் சத்து இருக்கிறது என்றால் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் (KIDNEY) முழுவதும் படர்ந்து அந்த உறுப்பு சீராக இயங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிங்கள்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லும் பொழுது சிறுநீரகம் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கலாம்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த உறுப்பைச் சீராக இயக்கி எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உப்புச் சத்திற்கும் சர்க்கரைச் சத்திற்கும் இந்த இரண்டுக்குமே
2.நம் கிட்னிக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்புகள் சரியாக இயங்கி நாங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள்.

மன நிலை (மன வலு) குறைவாக உள்ளவரும் பயமும் அதிர்ச்சியும் கொண்டு சிந்தனைத் திறன் குறைவாக உள்ளவரும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் மன பலமும் மன வளமும் தெளிந்த நினைவும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த அருள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நீங்கள் தொழில் செய்யச் செல்கிறீர்கள் என்றால் யாரைச் சந்திக்கச் செல்கின்றீர்களோ அவரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.எனக்கு நன்மை செய்யும் எண்ணம் அவருக்கு வர வேண்டும்
3.எங்களுக்குள் சகோதரப் பாசங்கள் வளர வேண்டும்
4.நாங்கள் எடுத்துக் கொண்ட காரியம் தடையின்றி அது செயல்பட வேண்டும் என்று எண்ணினால்
5.உங்களுக்குள் அந்த மன பலம் கிடைக்கின்றது.

நீங்கள் இவ்வாறு எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வின் எண்ணமே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் ஆன்மாவாக மாறி அந்த உயர்ந்த எண்ணங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாகவும் தொழிலைச் சீராகச் செயல்படுத்தும் தன்மையும் வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான்
1.விஞ்ஞானத்தின் உணர்வால் வெளிப்படும் நஞ்சின் தன்மை உங்களைத் தாக்காத வண்ணம் காத்துக் கொள்ளவும்
2.இந்த வாழ்க்கையில் என்றுமே மன பலத்துடன் தொடர்ந்து செயல்படும் திறனும் உங்களுக்குக் கிட்டும்.

பேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தவம்”

third eye meditation

பேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தியானம்”

அகஸ்தியர் துருவ மகரிஷியான நிலையும் துருவ நட்சத்திரமான நிலையும் அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற்றால் ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.

அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர்கள் அந்தப் பேரருளும் பேரொளியும் பெற்று அவன் உணர்வைத் தனக்குள் எடுத்து அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அதை நாம் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஒரு நிமிடம் நேராக ஏங்கிப் பெறுங்கள்.

பின் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நினைவைச் செலுத்துங்கள் – ஒரு நிமிடம்.

அடுத்து கண்களை மூடி உயிரான ஈசனிடம் வேண்டி நினைவினை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.பேரருள் என்றால் இயக்கச் சக்தியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக ஆனது.
2.அதன் அறிவும் ஒளியும் என்றும் நிலையானது (அழிவே இல்லாதது)

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்கும் போது
1.அந்தப் பேரருளின் உணர்ச்சியும் அந்தப் பேரொளியின் ஒளியும் உங்களுக்குப் புருவ மத்தியில் தெரியும்
2.அதன் உணர்வு சிறிது நேரமானால் உங்கள் உடலில் இருந்து ஒரு வித வெளிச்சம் ஏற்படும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்துடன் நினைவினை இணைத்து அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “புருவ மத்தியின் மூலமாக… ஏங்கித் தியானியுங்கள்…!”

1.அருள் என்றால் இயக்கம்
2.இயக்கத்தால் மோதுண்டு ஒளி என்ற நிலைகள் மாறும்.
3.இருளை அகற்றி ஒளி பெறும் உணர்வே பேரருள் பேரொளி என்பது.
4.அந்த ஒளி சக்தி உள் நின்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சமாக வெளிப்படும்
5.உங்கள் உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசமாக…
6.தீமைகள் புகாது தடுக்கும் பேரொளியாக அது அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.

கண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது போல்
1.கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி
2.அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று
3.அந்த உணர்வின் தன்மையை உங்கள் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான அணுக்களும் பெற வேண்டும் என்று
4.பேரொளியாக மாறும் அந்த உணர்வின் உணர்ச்சியை உடலுக்குள் ஊட்டுங்கள்.

இப்பொழுது அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த மூலிகை மணங்கள் உங்கள் சுவாசத்திற்குள் நுகர்ந்து இழுப்பது போல் வரும். உங்கள் உடலிலிருந்து நஞ்சைப் பிரித்திடும் அருள் மணமாக அது உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவன் தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஏங்கித் தியானிங்கள்.
1.இப்போது சப்தரிஷி மண்டலங்களைக் காட்சிகளாகவும் காணலாம்.
2.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உங்கள் புருவ மத்தியில் மோதும் பொழுது
3.பல விதமான வண்ணங்களில் ஒளிகளைக் காணலாம்.
4.உங்கள் வாழ்க்கையில் இது மகிழ்ச்சியூட்டும் பேரானந்த நிலையாக இது அமையும்.

எம்முடைய ஞான உபதேசத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருபவர்கள் நிச்சயம் மேலே சொன்ன அத்தனையும் பார்க்கலாம்… உணரலாம்…!

புருவ மத்தியின் இரகசியங்கள்

Luminous Polaris and Big dipper

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

om

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

உதாரணமாக நம் குழந்தை அது அறியாதபடி தவறிக் கீழே விழுந்து விட்டது. அதனால் அது அவஸ்தைப்படுகிறது. மருத்துவரிடம் சென்று மருந்தைக் கொடுத்துவிட்டோம்.

ஆனாலும்ல் நாம் குழந்தையை நினைத்து அடிக்கடி வேதனைப்படுகின்றோம் அல்லவா…? இதை யார் சுத்தப்படுத்துவது…?

இப்படிக் கஷ்டம் வந்துவிட்டது என்றால் உடனே கோவிலுக்குச் செல்கிறோம். சென்று நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நினைக்கின்றோம்.

இருபது ரூபாயோ ஐம்பது ரூபாயோ கொடுத்து ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்வதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுகின்றோம்.
1.ரூபாயைப் பூசாரிக்குக் கொடுத்தவுடன் நம்மை முதலில் கூப்பிட்டு விபூதி பிரசாதம் சாமிக்குப் போட்ட மலர் மற்ற எல்லாம் கொடுத்துவிடுவார்.
2.ஆனால் காசைக் கொடுக்கவில்லை என்றாலோ குறைவாகக் கொடுத்தாலோ தட்டே இந்தப் பக்கம் திரும்பாது.
3.இப்படித் தான் நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
4.ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால் தான் அவன் வாக்கே இங்கு வரும்.

ஆனால் அந்த நிமிடத்தில் உங்களை ஆளுகிறவன் யார்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உயிர் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் குழந்தையை எண்ணி “இப்படி ஆகி விட்டதே…!” என்று பாசத்தில் எண்ணும் பொழுது வேதனையை உணரச் செய்கிறது. வேதனையை உணரக்கூடிய நிலை இருந்தாலும் நம் உயிரான ஈசனுக்கு வேதனையாகின்றது.

இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடனே உடலுக்குள் இருக்கக்கூடிய சக்திகள் எல்லாம் நெளிய ஆரம்பித்துவிடும். உடலான சிவம் என்ன செய்கின்றது…?

ஆஹ்ஹஹ்ஹா…! என்று அப்புறம் தன்னாலே பயத்தால் நடுங்க ஆரம்பித்துவிடும். நீங்கள் ஆடவில்லை என்றாலும் கூட சிவன் என்ன செய்கிறான்.
1.நர்த்தனம் ஆட ஆரம்பித்துவிடும். கை கால் எல்லாம் நடுங்கும்.
2.ஏனென்றால் நம் உடல் சிவம். இதைத்தான் சிவ நடனமாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.
3.வாசுகி…! நீ சுவாசிக்கக்கூடிய இந்த உணர்வு
4.அது உனக்குள் அந்தச் சக்தியாக இருந்து இந்த உடலை ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கின்றார்கள்…
6.நாம் யார் படித்திருக்கிறோம்…? அதை யாரும் படித்துக் கொள்வதும் இல்லை… தெரிந்து கொள்வதும் இல்லை…!

ஞானிகள் காட்டிய உண்மைகளைச் சொன்னால் என்ன இவர் கோவிலுக்குச் சென்று தேங்காய் பழம் வைத்துக் கும்பிடக் கூடாது என்று சொல்கிறார்…! இதற்கு முன்னாடி செய்ததெல்லாம் தப்பா…? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தை கீழே விழுந்து விட்டது என்றால் பதறிப் போய் வேதனைப்படுகின்றோம். உடல் நடுக்கமாகின்றது. இதை மாற்ற அடுத்த நிமிடம் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை நீங்கள் நினையுங்கள்.
2.உங்களை ஆள்கிற ஆண்டவன் அவன் தான்.
3.ஓ…ம்…! என்று சுவாசிக்கும் பொழுது கரண்ட் (ஆற்றல்) அதிகமாகின்றது.
4.அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
5.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.
6.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்கள். ஈஸ்வரா என்று சுவாசிக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு அப்பொழுது என்ன நடக்கின்றது…?

அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அந்த மணம் புருவ மத்தியில் பட்டவுடனே ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சி வரும்.
1.முதலில் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.
2.அதே சமயத்தில் நாம் பட்ட வேதனைகளையும் தூய்மைப்படுத்துகின்றோம்.
3.குழந்தைக்கு அடுத்து நீ இப்படிச் செய்யப்பா… நீ பார்த்து நடந்து கொள்…! என்று நல்ல உணர்வுகளையும் ஊட்ட முடியும்..!

இப்படிப்பட்ட நல்ல உணர்வை எடுக்கத்தான்… அதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வதற்காகத்தான்… மற்றவர்களுக்கும் அந்த நல்லதைக் கொடுக்கத்தான்… கோவில்களையே ஞானிகள் உருவாக்கினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் வழி நடந்தால் அந்த மெய்யான நிலைகளை அடையலாம்.

தியானம் ஒரே சீராகச் செல்ல நாம் கையாள வேண்டிய முறை

Maharishis frequency

தியானம் ஒரே சீராகச் செல்ல நாம் கையாள வேண்டிய முறை 

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு
1.அதிக அன்பினால் வரும் வினையையும்
2.அதிக ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
3.தீமை செய்யும் குணத்தின் ஆணிவேரைச் சமப்படுத்தும் பக்குவத்தைப் பெறும் நிலையாக நம்முடைய தியானம் அமைதல் வேண்டும்.

அன்பே தெய்வம்…! அன்பே சத்தியம்…! என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நமக்குள் ஞானத்தின் நிலை கூடுவது கடினம். அதாவது நம் எண்ணமெல்லாம் இந்த உலகுடன் கலந்துள்ள அலைகளில் உள்ள
1.நல்ல அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
2.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
3.நான் நல்லவன்…! என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
4.நம் ஆத்ம சக்தி வளர்வது கடினம் தான்.

பல நாட்களாக நாம் தியானித்து எதிர் நிலையான உணர்வின் இயக்கங்களைத் தடைப்படுத்தி வைத்து நாம் சீராக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

பிறருடன் நண்பராகப் பழகும் பொழுது அவருடன் நம் உணர்வுகள் ஒத்துப் போனாலும் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது அவர் சுவாசித்த அந்தத் தவறின் உணர்வுகளை நாமும் சுவாசிக்க நேர்கின்றது.

அப்பொழுது
1.நாம் தடைப்படுத்துப் பழகிய உணர்வுகளின் இயக்கம் மாறி
2.அந்த எதிர் அலையின் உணர்வுகள் சாடி
3.நம்மையும் அதே உணர்வுடன் (தவறின்) நம்மைப் பேசச் செய்யும்.

அப்பொழுது நாம் எடுத்த தியானம் என்ன ஆனது…?

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் முதலில் நாம் பிறர் வெளிப்படுத்தும் சொல்லுக்கோ எண்ணத்திற்கோ நம் நினைவினை அடிமைப்படும் நிலையாக அடிபணியச் செய்து விடக்கூடாது.

ஞானத்தின் பாதையில் பரிபக்குவ நிலையில் சீராகச் சென்று கொண்டிருந்தாலும்
1.மற்றவர்கள் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையை வைத்தோ
2.அல்லது அவர்கள் செய்வதைப் பார்த்தோ
3.அல்லது அதைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட நிலையை வைத்தோ
3.அந்த உணர்வுகள் நம் மீது மோதும் நிலையில் நம் எண்ணத்தைச் சிதற விடக் கூடாது.

ஏனென்றால் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலைகளில் அந்தந்தச் சுவாசத்திற்கொப்ப உணர்வின் அலைகளாக
1.உயிரில் உராய்ந்து கொண்டே தான் உள்ளது.
2.அதை உயிர் அதை இயக்கிக் கொண்டே தான் இருக்கும்
3.நமக்கு அதை உனர்ச்சிகளாக உணர்த்திக் கொண்டே தான் இருக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.

நாம் புதிய வீட்டை அழகாக கட்டியிருந்தாலும் அதைத் தினசரி தூய்மைப்படுத்துகின்றோம். அதே போல சில காலங்கள் கழித்து பராமரிப்பு வேலைகளும் செய்ய வேண்டியது உள்ளது.

அதைப் போல நம் மீது (உயிரிலே) மோதும் உணர்வுகளை அப்படியே இயக்கவிடாது
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அதனுடன் இணைத்து
2.அதை நம்முடன் நல்லதாகச் சேர்த்து ஆக்கபூர்வமானதாக மாற்றிக் கொண்டே வேண்டும்.
3.இது மிகவும் முக்கியம்…!

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமும் காலமும் எது…?

Merkaba-Meditation

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமும் காலமும் எது…?

கேள்வி:-
தியானத்தில் இருக்கத் தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சப்தங்கள் வராத இடமும் தான் ஏற்ற இடமா..?

விளக்கம்:-
1.எந்த நிலையிலும்…
2.எங்கு இருந்தாலும்…
3.எவன் ஒருவன்… ஒரு நிமிடமாவது
4.புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம்
5.மனதை (நினைவை) ஐக்கியப்படுத்துகின்றானோ அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்.

யோகிகள் சந்நியாசிகள் போல் உலகப் பற்றை விட்டு விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் “தியான நிலை” என்பதல்ல. எல்லோரும் சந்நியாசிகளாக ஆக முடியாது.

அவரவர்கள் ஏற்றுக் கொண்ட கடமைகளைச் செய்து கொண்டே உயிரான ஈசனை வேண்டித் தியானிப்பவர்கள் அனைவருமே அந்த அருளையும் சக்தியும் ஆற்றலும் பெறுகின்றார்கள்.

கணவன் மனைவி இருவரும் எங்கள் குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்து கடமைகள் முடிந்த பிற்பாடு தெய்வீக வழியில் ஈடுபடுகிறோம் என்று நினைப்பீர்கள்.

கல்யாணம் முடிந்ததும் கடமை தீர்ந்துவிடுமா…? தீராது.

நீங்கள் இருக்கும் வரை நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள். நினைப்பது எல்லாம் நடக்குமா…? நீங்கள் இருக்கும் வரை கடமைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பொழுது இருக்கும் நிலையிலேயே…
1.கடமை பந்தம் பாசம் ஆசைகளை விட்டுவிடலாம் என்று நினைக்காமல்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணைத்தில்
4.இந்தத் தியானத்தைச் செய்து கொண்டே வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிற்பாடு தான் தியானத்தில் ஈடுபாடு வைக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளே நம்மை எல்லா வழியிலும் வழி நடத்திச் செல்வார்கள்.

மகரிஷிகளின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி

real-meditation

தலையிலிருந்து கால் வரை உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் தியானத்தில் கொடுக்க வேண்டிய சக்தி 

1. துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசிக்க வேண்டிய முறை:-
எங்கள் அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் அவர் துருவனான நிலையும் துருவ நட்சத்திரமான அந்த பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவு அனைத்தையும் இப்போது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அதனின்று வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள். உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.
1.உங்கள் கண்ணின் நினைவினை உயிரில் இணைக்கும் போது
2.அந்த உயிரான காந்தத்தின் வழி துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் போது
3.அதனின்று வரும் பேரருளைக் கவர்கின்றது.

இப்போது உங்கள் உயிரில் அது ஈர்க்கப்படும் போது துருவ நட்சத்திரத்திலிருந்து பேரருளும் அந்த பேரொளியும் உங்கள் உயிர் ஈர்க்கப்படும் போது
1.புருவ மத்தியிலே வெளிச்சம் வரும்.
2.சிலருக்கு அரிப்பு ஏற்படும்.
3.சிலருக்கு இந்த வலி ஏற்படும்.
4.சிலருக்குக் காட்சியாகவும் தெரியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதைச் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலமும் உங்களுக்குத் தெரியும். அதாவது இன்று பிரபஞ்சத்தில் மற்ற நட்சத்திரத்தின் கூட்டத்தில் தனித்து வாழும் இந்த உணர்வுகளை நீங்கள் பார்க்கலாம்.

2. நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்த நாளங்களிலே செலுத்துங்கள்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை
1.நாம் பார்க்க நேர்கின்றது நுகர நேர்கின்றது.
2.இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
3.அப்பொழுது தீய உணர்வுகள் நம் இரத்தமாக மாறுகின்றது.
4.இந்த உணர்வின் இயக்கங்கள் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிப் பின் அணுக்களாக மாறுகின்றது.

இப்படி அணுக்களாக மாறிவிட்டால் நம் இரத்தத்தில் கோபம் அதிகமானால் இரத்தக் கொதிப்பும் வேதனை அதிகமானால் அதற்குத்தக்க வாத நோயோ சரவாங்கி நோயோ போன்ற வாதங்கள் 48ம் உருவாகின்றது.

ஆகவே அந்தந்த அணுக்களுக்குத் தக்க நம் உடலில் இரத்தங்கள் உருவாகி இந்த இரத்தங்கள் உடல் முழுவதும் படர்ந்து நமது உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இதனின்று ஆகாரம் செல்கின்றது.

தீய உணர்வின் அணுக்கள் இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவப்படும் போது உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் தீய அணுக்கள் உருவாகி அந்தந்த உறுப்புகளில் நோயாகின்றது… வேதனையாகின்றது…!

கடும் நோயான பின் உடலை விட்டு உயிர் பிரியும் தன்மை வருகின்றது.
1.உடலை விட்டுப் உயிர் பிரியும் போது
2.எந்தெந்த உறுப்புகளில் எதனெதன் நிலைகள் பாழானதோ
3.அந்த உறுப்புகள் குறைவான நிலையில் உயிரான்மா வெளியேறும்.

உறுப்புகள் குறையும் பொழுது அதற்குத்தக்க மனிதனல்லாத உறுப்புகள் குறைவாக உள்ள உடலின் (உயிரினங்களின்) ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று விஷம் கொண்ட உடலை அடுத்து உருவாக்கிவிடும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் நாம் கேட்டு பார்த்து நுகர்ந்து அறிந்து உணர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஈஸ்வரலோகத்தின் (உயிரின்) இயக்கமாகவும் நம் இரத்தத்தில் அணுத்தன்மை கருவாகும் இந்திரலோகமாகவும் அடைந்து விடுகின்றது.

ஆகவே நம் உடல் உறுப்புகளைச் சீராக்க வேண்டுமென்றால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வினை உமிழ் நீராக மாற்றி நல்ல இரத்தமாக உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி இந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அணுக்களை நம் இரத்தத்தில் உருவாக்கும் நிலைக்கே இந்தப் பயிற்சி.

3. நுரையீரலுக்குச் செய்ய வேண்டிய தியானம்:-
சலிப்பு சஞ்சலம் வெறுப்பு என்ற உணர்வுகள் நுரையீரலில் அணுக்களாக ஆனபின் ஆஸ்துமா போன்ற நோய்களும் வேதனை என்ற கடுமையான நிலைகளை எடுத்தால் T.B. என்ற நோய்களும் வருகின்றது.

இதைப் போன்ற அணுக்களை மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலில் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்.

4. இருதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீய உணர்வுகள் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்குள் செல்லப்படும் போது அங்கே அது எதிர்நிலையாகி இரத்தங்கள் உறையும் தன்மையாகின்றது.

அதே சமயத்தில் விஷத்தன்மை படர்ந்த பின் அந்த இருதயத்தை இயக்கும் அந்த நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து மூச்சுத் திணறலும் நெஞ்சு வலியும் ஏற்படுகின்றது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து மாற்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தில் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவு அனைத்தும் இந்த இருதயத்திற்குள் செலுத்தி அந்த அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

5. கல்லீரலுக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
அசுத்த இரத்தங்கள் கல்லீரலுக்குள் சென்றால் அது வீக்கம் ஆகும், அதிலேயும் மூச்சுத் திணறலும் வரும். சில நேரங்களில் வலியும் எரிச்சலும் வரும்.

கல்லீரலை அதை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை கல்லீரலுக்குள் செலுத்துங்கள்.

6. கணையங்களைச் சீராக இயக்கத் தியானிக்கும் முறை:-
சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளை மாற்றியமைக்கும் திறன் கொண்ட கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பலவீனமானால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து உருவாகும். இரத்தக் கொதிப்பும் உருவாகும்.

அந்த மூன்றையும் சீராக்க கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கணையங்களுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

7. கிட்னிக்குத் தியானிக்க வேண்டிய முறை:-
தீமையான உணர்வுகள் இரத்ததில் அதிகமாகி அந்த கிட்னிக்கு வந்தால் அது சீராக இயங்கும் தன்மை மாறி மயக்கடைந்து இரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மைகள் இழந்துவிடுகின்றது.

அதனால் அசுத்தமான இரத்தங்கள் உடல் முழுவதும் சென்று உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்கக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

8. சிறு குடல் பெரும் குடலுக்குத் தியானிக்கும் முறை:-
உங்கள் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரரளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தி அந்த அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

9. ஆற்றல்மிக்க சக்திகளை உடலுக்குள் நேரடியாகச் செலுத்தும் பயிற்சி:-
இன்று மருத்துவ ரீதியில் ஊசி மூலமாக மருந்தினை இரத்தத்தில் செலுத்தும் பொழுது மருந்து உடனடியாக உடல் முழுவதும் பரவி உடலில் நிவாரணம் ஏற்படுகின்றது. உடல் வலியோ வேதனையோ உடனே குறைகின்றது.

அதே போலத்தான் உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதன் உணர்வைக் கவர்ந்து கண்ணின் நினைவு கொண்டு உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்தப் பயிற்சி.

நேரடியாக அந்தந்த உறுப்புகளுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலுள்ள அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டித் தீமைகளை நீக்கும் அணுக்களாக ஒளியாக மாற்றுகின்றது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் உங்கள் எலும்புகளில் உள்ள ஊன்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அந்த வித்தின் தன்மை வளர்ந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நேரடியாகக் கவர்ந்து
1.நோய்களை நீக்கும் தன்மையும்
2.சிந்திக்கும் ஆற்றலும் மனவலிமை பெறும் தன்மையும்
3.அருளைப் பெருக்கும் தன்மையும்
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் சக்தியும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

10. கண்களில் உள்ள கண்மணிகளைத் தூய்மையாக்கும் பயிற்சி:-
வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை கண்மணி வழியாக அதிகமாகக் கவர்ந்தால் வேதனையைக் கவரும் சக்தியாக மாறிக் கண் பார்வை குறைந்து விடுகின்றது. அல்லது பார்வையே கூட இழந்து விடுகின்றது.

இதை மாற்றக் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதிலுள்ள விஷத் தன்மைகள் அனைத்தும் அகன்று அருள் ஞான சக்தியைக் கவரும் கண்மணிகளாக மாற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பேரொளியான உணர்வுகளையும் பேரருளான நிலைகளையும் பெறும் அருள் கண்மணிகளாக வளரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11. நரம்புகளை வலுவாக்கும் பயிற்சி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து கண்ணின் நினைவினை அதிலே செலுத்துங்கள்.

இந்தப் பயிற்சியைச் சீராகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றல் தீமைகளை நீக்கும். அருளைப் பெருக்கும். வாழ்வில் நலம் பெறச் செய்யும். ஆனந்தப்படச் செய்யும்.

12. எலும்புக்குள் உருவாகும் ஊனை மாற்றத் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினை எலும்பு மண்டலத்தில் செலுத்தி எங்கள் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் எதையெல்லாம் கண்மணி வழியாகப் பார்க்கின்றோமோ அது நம் எலும்புக்குள் இருக்கும் அந்த ஊனுக்குள் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வித்தின் உணர்வு உயிரின் துடிப்பால் அந்த உணர்வின் இயக்கங்களாகும் பொழுது அது அணுவாகி அணுவின் மலமாக நம் எலும்புக்குள் உருவாகின்றது.
1.எதனெதன் உணர்வுகள் அது உருவாகின்றதோ
2.அதனதன் உணர்வுகளைக் கவரும் சக்தி பெறுகின்றது.

இவை அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் சக்தியாக மாற்ற உங்கள் கண்ணின் நினைவினை எலும்புக்குள் ஊனாக உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களில் செலுத்துங்கள்.

இவ்வாறு எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் ஊனுக்குள் பதிவாகின்றது. எலும்புக்குள் ஏற்கனவே ஊனை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்யும் போது அருள் சக்தியைக் கவரும் ஊனாக உருவாக்க முடியும்.

13. தசைகளுக்கும் தோலுக்கும் தியானிக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

14. குடும்பத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை:-
இவ்வாறு நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தது போன்று எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

திருமணமானவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர்/மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடக்கும் ஆற்றலும் சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிப் பேரருள் பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாழ்ந்து வளர்ந்து தொழில் வளம் பெருகி செல்வம் பெருகி செல்வாக்கு பெருகி அருள் ஞானம் பெருகி அருள் குடும்பமாக வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

15. தவமிருக்க வேண்டிய முறை:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் விவசாய நிலம் முழுவதும் படர்ந்து எங்கள் விவசாய நிலத்தில் பயிரிடும் பயிரினங்கள் அனைத்தும் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலகில் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் மனதார எண்ணி உங்கள் நினைவினை மேகங்களில் படரச் செய்து மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய உங்கள் நினைவாற்றலைப் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு பாய்ச்சினால் உங்கள் உணர்வு அந்த மேகத்துடன் கூடி மழை நீராகப் பெய்கின்றது. எல்லா நலமும் பெற வேண்டும் என்ற உணர்வு கலந்திருப்பதனால் மழை பெய்தால் தாவர இனங்களில் நல்ல அணுக்கள் உருவாகி அதனுடைய மலம் தாவர இனங்களுக்கு நல்ல உரமாகும்.

வாழும் மக்கள் வேதனை வெறுப்புடன் எண்ணினால் விஷக் கிருமிகளாகித் தாவர இனங்களை அது பாழாக்கி விடும்.

அதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இந்தத் தியானப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
1.ஞானிகள் வாழ்ந்த அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்.
2.மெய் ஞானம் பெறுவீர்கள்.
3.மெய் உலகை அடைவீர்கள்.

எமது அருளாசிகள்.

ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானப் பயிற்சி…!”

Sage Agatheeswara

ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானம்…!”

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்போது அந்த ஒளியின் சுடர் உங்களுக்குத் தெரியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தனக்குள் விளையச் செய்து
2.அந்த உணர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சச் செய்து
3.அந்த அகஸ்தியன் உணர்வுகளை முதலில் பார்த்த (பெற்ற) நம் குருவின் உணர்வலைகளை
4.அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
5.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளை இப்பொழுது நீங்களும் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை உணரும் அறிவு பெற்று உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்போது
1.உங்கள் புருவ மத்தியில் இருந்து
உங்கள் உடலுக்குள் ஒளிக் கதிர்கள் பரவுவதை
உங்களால் உணர முடியும் (ஒளியின் சரீரமாவது போன்று…!”)

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையைப் பார்க்கும் போது அவர்கள் உடல்களில் இருந்து வந்த அந்த பச்சிலை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.
1.அதை இப்பொழுது நீங்கள் நுகரும் ஆற்றல் பெறுகின்றீர்கள்
2.அந்தப் பச்சிலைகளின் வாசனையை உணர முடியும்.
3.உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க இது உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தை பால் செலுத்தி அவர் உடலில் இருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் கிடைக்கும்.

1.அகஸ்தியன் நுகர்ந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று இரத்தங்களில் கலந்து
2.கடும் தீமைகளை அடக்கி உங்களுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வரும்
3.அகஸ்தியன் அடைந்த அதே மகிழ்ச்சி உங்களுக்குள்ளும் இப்பொழுது பெருகுவதைப் பார்க்கலாம். உணரலாம்.

உதாரணமாக மலைப் பகுதிகளில் செல்லும் போது
1.ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை “நுகர்வது போன்று”
2.இப்பொழுது நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் பல அற்புத மணங்கள் பரவும்.
3.நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் பூமியின் துருவப் பகுதி வழியாக வரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான். துருவன் ஆனான்.

அதனின் வளர்ச்சியில் இந்தப் பிரபஞ்சத்திற்கு எவ்வாறு சக்தி கிடைக்கிறது என்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்தான். துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் கண்டுணர்ந்தது போன்று அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அகஸ்தியன் வழியில் அனைவரும் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

(இவ்வாறு தியானிக்கும் பொழுது அவரவர்கள் உங்களுக்கு என்ன கிடைத்தது…? என்ன தெரிந்தது…? என்று முடிந்த மட்டும் சொல்லுங்கள்…! – ஞானகுரு)

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றேன்.
1.அந்த “ஈர்க்கும் சக்தி” இப்பொழுது வரும் போது
2.நினைவுபடுத்தி (அகஸ்தியனை) அதைப் பெறுகின்றீர்கள்…! அதை உணர்கின்றீர்கள்.

உதாரணமாக பாட நூல்களைப் பள்ளியில் படித்த பிற்பாடு இன்னதுதான் என்கிற வகையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில நீங்கள் காணுகின்றீர்கள் அல்லவா…!

அதைப் போல…… உங்கள் உணர்வால் அகஸ்தியன் கண்டுணர்ந்த
1.அண்டத்தின் உணர்வுகளையெல்லாம் காட்சியாகக் காணும் நிலைகளைப் பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்
3.அகஸ்தியனாக மாறுவதற்குத் தான் இதைச் சொல்வது

சொல்வது…..! உங்களுக்கெல்லம் அர்த்தமாகின்றதல்லவா…!

நாம் உணவாக உட்கொள்வதை “நல்ல இரத்தமாக மாற்றும் தியானம்”

Image

gastro

நாம் உணவாக உட்கொள்வதை நல்ல இரத்தமாக மாற்றும் தியானம்

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.

அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவதும்.

சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணி நல்ல உணவைச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமாகி
3.ஜீரணிக்கும் சக்தியை இழந்து வயிறு உப்புசமாகி
4.வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா…? என்றால் இல்லை. சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கப்படாதபடி தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்…?

எங்கள் சிறுகுடலை உருவாக்கிய அணுக்களும் பெருங்குடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை குடலுக்குள் செலுத்துங்கள்.
1.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
2.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
3.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இப்போது அந்தச் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் ஒரு விதமான புத்துணர்ச்சிகள் உருவாகும்.
1.சிறு குடலில் புண் இருந்தாலும்
2.ஜீரணிக்கும் சக்தி குறைந்திருந்தாலும்
3.இயக்கச் சக்தி குறைந்து இருந்தாலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுக்களுக்கு ஊட்டப்படும் போது
4.வீரிய உணர்வு பெற்று நல்ல இயக்க சக்தியாக மாறும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் உள்ள நல்ல சத்தினை நமக்குள் வடித்து நஞ்சினைத் தணித்து நல்ல அணுக்களையும் நல்ல இரத்தங்களையும் உருவாக்கும் சக்தி பெறச் செய்யும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் சிறுகுடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை ஏக்க உணர்வுடன் பாய்ச்சுங்கள்.

1.உங்கள் குடல் பாகங்களில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் இப்பொழுது நீங்கும்.
2.அருள் உணர்வுகளை உங்கள் உடலில் பெருக்கும்.

நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…!

Serene divine lights

நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…! 

தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய ஞானிகளின் ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காகப் பல தடவை யாம் உபதேசித்தாலும் மீண்டும் குறைகளைச் சொல்லி உடலின் இச்சைக்குத்தான் கேட்கின்றனர்.

1.மகரிஷிகளின் அருள் ஒளி பெற நாங்கள் வேண்டும்.
2.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் பார்வையில் மற்றவர்கள் இருளை அகற்றும் திறன் நாங்கள் பெற வேண்டும்.
5.எங்களை இருள் சூழாத நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள் பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

தேடி வருகின்றனர். ஆனால் ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றனர். இந்த உடலில் நமக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்றால் அருள் ஒளியைப் பெற்றால் தான் மகிழ்ச்சி பெறும் தன்மையே வருகின்றது.

மகிழ்ந்திடும் உணர்வுகள் உடலுக்குள் வளர வளர ஒளிச் சுடராக ஒளியின் சரீரமாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

இதை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். வருவோர் எல்லாம்
1.அவர்களுடைய குறைகளின் வலிமையைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர
2.அதிலிருந்து விடுபடும் வலிமையான சக்தியைப் பெறவேண்டும்…!
3.எங்கள் காரியங்கள் வெற்றியாக வேண்டும்…! என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் வாழ்க்கையில் அறியாது வரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம். அந்த மகா ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்து விட்டு அதை வளரவிடாது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆகவே ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்தி அருள் ஒளிச் சுடரை உங்களுக்குள் உருவாக்கும்.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால்
1.ஒரு அழுக்கு நீரில் நந்நீரை விட்டால் முதலில் அதுவும் அழுக்காகத் தான் செய்யும்…
2.நல்லதை விட்டாலும் அழுக்காகத்தான் போகும் என்ற மனக் குழப்பத்தையும் உண்டாக்கும்…! பலவீனமும் ஆகும்…!
2.ஆனால் நந்நீர் அதற்குள் “சேர…சேர…சேர…” அழுக்குகள் மறையத்தான் செய்யும்.

உங்களை நம்பி இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள் அற்புதத்தை நிகழ்த்த முடியும்.