அன்றாடம் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை… டி.வி. மூலம் பார்ப்பதால்… படிப்பதால் வரும் தீமைகள்

Protected zone

அன்றாடம் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை… டி.வி. மூலம் பார்ப்பதால்… படிப்பதால் வரும் தீமைகள்

 

பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அன்றாட நடக்கும் சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் நம்மை அறியாமலே அச்ச உணர்வுகள் நம்மை வாட்டிக் கொண்டு இருக்கும்.

அதே சமயத்தில் அரசியல்வாதிகளைப் பற்றிய கருத்துக்களைப் படிக்கும் பொழுதும் வன்முறை… தீவிரவாதம் சம்பந்தமாகப் படிக்கும் பொழுதும் சிலருக்குப் பகைமையின் உணர்ச்சிகளையே தூண்டிக் கொண்டு இருக்கும்.

அதைப் பதிவாக்கிய பின் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ சிறிது குறைகள் பட்டாலும் பகைமை உணர்வுகள் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில்
1.நாம் எந்தத் தொழில் செய்தாலும்
2.ஒவ்வொரு தொழிலும் பகைமை உணர்வுகளை ஊட்டிக் கொண்டு இருக்கும்.

இப்படி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பகைமை உணர்வைச் சேர்த்துக் கொண்டு இருந்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காது போய்விடும்.

பகைமை உணர்ச்சிகள் அனைத்தும் நம் உடலுக்குள் விளைந்து மிகவும் கடினமான நிலைகள் வளர்ந்து நஞ்சின் தன்மையாக அடைந்து விடுகிறது். பின் நம் சிந்தனைகள் அனைத்தும் செயலற்றதாகி நம்முடைய நல்ல செயலையே மாற்றி விடுகிறது.

நல்ல உணர்வுகள் மறைந்த பின் வாழ்க்கையில் இருண்ட நிலைகள் உடலை விட்டு நாம் சென்றால்
1.பொருள் அறிந்து செயல்படும் நிலைகள் இல்லாது
2.அன்றன்று தன் வாழ்க்கைக்கு உணவுக்கு மட்டும் தேடிச் சென்று உடலைக் காத்துக் கொள்ளும் உடலுக்குள் அழைத்துச் சென்று
3.நம் மனித உடலையே மாற்றி அமைத்திடும் சக்தியாக உருவாக்கி வேறோரு ரூபமாக நம்மை மாற்றி விடுகிறது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞான உலகம் ரொம்பவும் விஷத் தன்மை கொண்டதாக வந்து விட்டது. நாளை நாம் இப்படி இருப்போமா…? என்ற நிலை இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைக்காக நம்முடைய உணர்வின் தன்மை
1.இப்போது இருந்தே நாம் தயார் செய்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை நம்முடைய ஆன்மாவில் பெருக்கி
3.நம் ஆன்மாவை வலுக் கொண்டதாக ஆக்கிடல் வேண்டும்.

இந்த உடலிலிருந்து எந்தத் தருணத்தில் வெளியே சென்றாலும் நமது ஆன்மா இன்னொரு உடலில் புகும் நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாகப் பெற்று நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் இணைந்திடல் வேண்டும்.

ஏனென்றால் பூமியின் கடைசி நிலையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில் நம்முடைய அடுத்த நிலை ஒளியின் சரீரமாகத் தான் இருக்க வேண்டும். சப்தரிஷி மண்டல எல்லையை அடைவதையே நம் வாழ்க்கையின் அடிப்படையாக வைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களும் அச்சுறுத்தும் நிலையில் வெறி உணர்வுகளைத் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த அலைகளும் பூமி முழுவதும் அனுதினமும் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் எப்படி இறந்து விடுகின்றதோ இதைப்போல
2.மனிதனுடைய உணர்வின் செல்கள் அனைத்தும் இழந்திடும் நிலையாக
3.எண்ணிலடங்கா அணு ஆயுதங்களையும் இரசாயணங்களையும் ஒவ்வொரு நாட்டிலும் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

வல்லரசுகளுக்கு மத்தியில் சிறிதளவு போர் ஏற்பட்டாலுமே உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை படர்ந்து மனித உணர்வுகள் அனைத்தும் நஞ்சின் தன்மையே அடைந்து மனித உருவே சரியான உருவாக இல்லாதபடி நம் பூமியின் தன்மை செயலற்றதாக மாறப் போகிறது.

இதைப் போன்ற காலமாக இருக்கும் இந்த நிலையில் நம்முடைய குழந்தையினுடைய எதிர் காலம் – பின்னாடி நிலையும் இதுவாகவே இருக்கிறது.

ஆகவே இந்த உலகில் சிறிதளவேனும் மக்களைக் காக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகளையும் கூட்டு தியானங்களில் அமரச் செய்து அவர்களைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திற்குள்ளும் சரி ஊருக்குள்ளும் சரி ஒற்றுமையாகும் இந்த உணர்வின் தன்மையை நாம் வலு பெறச்செய்யும் நிலையாக கூட்டுத் தியானங்களைக் கண்டிப்பாக அமைத்தே ஆக வேண்டும்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது…! பல நூல்களை ஒன்றாகச் சேர்த்தால் வலு கொண்ட கயிறாக மாறுவது போல்
1.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் மூலம்
3.நாம் வாழும் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காக்க வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் பல பல கோணங்களில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு)

மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

Soul protection method

மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

 

ஒருவர் தீமை செய்கிறார் என்ற உணர்வை நுகர்ந்தால் போதும். அவருடைய சிரமங்களை நாம் அறியலாம். ஆனால் சிரமங்களை அறிந்த பின்
1.“நான் கண்டுபிடித்துவிட்டேன்…!” என்று
2.எப்படி எல்லாம் சிரமம் வருகிறது…? என்று ஜோசியத்தைப் பார்த்து விடாதீர்கள்…!

மற்றவர்களுடைய குறைகளோ துன்பங்களோ தெரிந்தது என்றாலும் மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் சிரமத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை மாற்றி எடுத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற்று நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த வாக்கை மட்டும் கொடுங்கள்.

கஷ்டத்தைச் சொல்லி விடாதீர்கள்…!

ஏனென்றால் இந்தத் தியான வழியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அது தெரிய வரும். சொல்லவும் முடியும். ஆனால் அதை நல்லதாக்குவதற்குச் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில பேர் அடுத்தவர்களுடைய குறையை இலேசாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்த பின்…
1.சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்கிறார்.
2.எல்லாமே இவரும் கேட்கிறார்…!
3.கேட்ட பின்பும் இப்படித் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்… என்று எண்ணி அதையே சொல்லிச் சொல்லி
4.அந்தக் குறையை எடுத்து வளர்த்துக் கொள்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறைப் பற்றி அறிய முடிகிறது. ஆனால் அதை அறிந்த பின் அந்தத் தீமையை நீக்கத் தெரியவில்லை.

ஏனென்றால் மற்றவரைப் பற்றி அறியும் ஆற்றல் வரப்போகும் போது குறைகளைக் கேட்கிறோம் என்று அதற்குள் போய்விடுகின்றார்கள்.

பின் இப்படிச் செய்கிறார்கள்… இப்படி இருக்கிறார்கள்…! என்று அவர்களைப் பற்றிக் குறையாகப் பேசி அவர்களுடைய நினைவு வரும் போது இது தான் வளரும்.

யாம் அறியும் சக்தியைக் கொடுத்தாலும் அதை நீக்கும் சக்தியையும் உடனடியாகக் கொடுக்கிறோம். மீட்கும் வல்லமை கொடுத்ததைப் பயன்படுத்தவில்லை என்றால் குறை உணர்வே வளரும். அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவருக்குள் அறியாது புகுந்த அந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அந்தத் திறன் அவர் பெற வேண்டும்.
4.மகரிஷியின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும்.
5.ஒளியின் உணர்வாக வளர வேண்டும் என்று உணர்வை எடுத்தால்
6.நாம் பார்த்து அறிந்து கொண்ட அந்தக் குறையான உணர்வு நமக்குள் மாறும்.

மகரிஷியின் அருள் சக்தியால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பொருள் காணும் சக்தி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை நீக்குவீர்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணினால் அவருடைய குறைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம்.

அவரும் இதே போல் எண்ணினால் அவருடைய குறையான செயல்களும் நிச்சயம் மாறும்.

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தியை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமான அதனின் பேரருள் பேரொளியைப் பெறுவோம். இந்த உணர்வுடன் இப்பொழுது எண்ணி ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால், இதைத் தாண்டித்தான் (புருவ மத்தியைத் தாண்டித்தான்) உயிருக்குள் மோத வேண்டும்.

காலையிலிருந்து வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் என்று எடுக்கும்போது எல்லாம் முன்னாடி தான் இருக்கின்றது.

அப்பொழுது இத்தகைய வலுவான உணர்வை (துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்) எடுக்கும்போது அதைப் போகவிடாமல் தடுக்கின்றீர்கள்.

தடுத்துக் கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உணர்வை வேகமாகப் பாய்ச்சுங்கள்.

1.அவன் இப்படிச் செய்தான்,
2.இவன் அதைச் செய்கின்றான்
3.கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று
4.வெறுப்பு வேதனையாகக் காலையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உள்ளுக்குள் சேர்த்து வலுவானபின் அனாதையாகி விடுகின்றது.

தீமை செய்யும் உணர்வுகள் அனாதையான பின்
1.சூரியனின் காந்தப் புலனறிவுகள் எடுத்துச் சென்றுவிடுகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறைதான் இது.

உங்களை இப்படிச் சுத்தப்படுத்தாதபடி பையனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவன் நோய் அனைத்தும் நீங்க வேண்டும் உடல் நன்றாக வேண்டும் என்று சொல்லி இந்த இராகம் பாடினால் அந்த நோய்தான் உங்களுக்கு வரும். அதை நீக்க முடியாது.

சிலர் படித்துக் கொண்டபின் நான் இப்படித்தான் பண்ணினேன், என் பையனுக்கு நோய் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்றுதான் தியானம் செய்தேன் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் இப்படி எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தால் வேதனைதான் வரும். இங்கேயும் நோய் வரும் அங்கேயும் நோய் வரும்.

அதே மாதிரி பையனை எண்ணி அவன் படிக்கவில்லை, படிக்கவில்லை என்று சொல்வார்கள். அவன் இந்த மாதிரி படிக்காமல் இருக்கின்றானே படிக்காமல் இருக்கின்றானே என்று இதைத் தியானம் செய்வார்கள்.

ஆக, அவன் மேல் வெறுப்பின் தன்மையை எடுத்துத் தியானம் செய்வார்கள். இதுவெல்லாம் முறையற்றது.

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது அவன் உணர்வுகளெல்லாம் அதிகமாக இருக்கும். வலு இல்லை. அப்படி இருக்கும் போது பையன் இப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே என்று எண்ணுவார்கள்.

1.அப்புறம் என்ன செய்வார்கள்?
2.அப்படி இப்படி என்று பார்ப்பார்கள்.
3.நெளித்துப் பார்ப்பார்கள். பிறகு முடியாது.
4.பையன் உணர்வுதான் முன்னாடி வரும்.
5.அப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும்?

உடனே கண்களைத் திறந்து நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

எதை?

உங்கள் நினைவை அங்கே துருவ நட்சத்திரத்திற்கு அனுப்புங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அப்படியே கண்களை மூடுங்கள், உள்ளுக்குள் செலுத்துங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் பெறவேண்டும் அவன் உடல் முழுவதும் படரவேண்டும் அவன் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வுகள் வெறுப்போ, வேதனையோ, வேதனைப்படுவோரின் உணர்வுகளோ வந்தால் உடனே என்ன செய்யவேண்டும். தியானிக்கும்போது வேறு எண்ணம் வந்தால்

1. கண்களைத் திறங்கள்
2. நேராக துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள்
3. அந்த உணர்வின் தன்மை கண் வழி கவருங்கள்
4. கண்களை மூடுங்கள்
5. உயிர் வழி உள்ளுக்குள் செலுத்துங்கள்
6. துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள்ளே அனுப்புங்கள்

இந்த முறைப்படி நீங்கள் செய்து பாருங்கள். இந்தத் தியானத்தில் அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

ஏனென்றால் உள்ளுக்குள் அழுக்கு அதிகம் இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு இப்படித்தான் செய்ய வேண்டும்.

உங்களால் இது முடியும். சிறிது நாள் முயற்சி எடுத்தால் பழையது எல்லாம் மாறும். ஒரு புதுமையான சக்தியை நாம் பார்க்கலாம்.

நல்ல நிலையில் இருக்கும் போது நன்மை செய்யும் போது பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்த பின் நமக்குள் அழுக்கான நிலைகள் வந்து நோயாகித் தீமைகள் விளைவிக்கின்றது.

இதே போல தீமையை நீக்கிய உணர்வின் தன்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் எடுக்க வேண்டும். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் “தீமைகளை நீக்க வேண்டிய முறை…!”

காலையில் கண் விழித்ததுமே நாம் செய்ய வேண்டியது என்ன…?

Morning star Polaris

காலையில் கண் விழித்ததுமே நாம் செய்ய வேண்டியது என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பலருக்கும் நாம் பல நன்மைகளைச் செய்கிறோம். நன்மைகள் செய்வதைக் கண்டு நாம் மகிழவும் செய்கின்றோம். இருந்தாலும் நம்மால் நன்மைகள் பெற்றவரோ சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார்.

அல்லது வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்கின்றார் அல்லது வேதனைப்படும்படி ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். விஷத்தை உட்கொண்டால்
1.நம்மை எப்படி மயங்கச் செய்கின்றதோ
2.இருளடையச் செய்கின்றதோ
3.சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்கின்றதோ அதைப் போல
4.வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனை குறைகின்றது.
5.அடுத்தாற்போல் நம் சொல்லும் நல்ல சொல்லாக வராது.

நல்ல சொல் மறைந்தபின் எவ்வளவு தான் மற்றவர்களுக்கு உபதேசம் கொடுத்தாலும் நல்ல வழியைச் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலிலே விஷம் பட்டபின்… விஷத்தை மீண்டும் பாலிலே சேர்க்கப்படும் போது விஷத்தின் தன்மையே கூடும்.
1.ஆனால் விஷத்தின் தன்மை கூட்டினாலும்
2.நல்ல பாலை அதற்குள் அதிகமாகக் கூட்டும் போது தான் அந்த விஷத்தின் தன்மை குறையும்.

சாதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ல பால் எல்லாமே பாழாகி விடுகின்றது. விஷத்தின் தன்மை பாலை ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

அதற்குள் பல ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றினால் அதற்குள் விஷம் சிறுத்து விடுகிறது. அப்போது விஷம் சிறுத்து விட்டால் பாலிற்கு வீரிய சக்தி கொடுக்கின்றது.
1.அதாவது அந்த விஷம் பாலிற்கு மிகவும் வீரிய சக்திகளைக் கொடுக்கிறது.
2.அது போல பல ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் வேதனைப்பட்ட உணர்வை மாற்ற முடியும்.

அது வரையிலும் நம்மால் அந்த வேதனையைத் தாங்க முடியுமா…? முடியாது. அதற்குண்டான மனம் இல்லை. வேதனையே ஆக்கிரமிப்பு சக்தியாக மாறுகிறது.

அப்படிக் கடுமையான வேதனைப்படும் நேரங்களில் நம் கண்களைப் பார்த்தோம் என்றால் கரு நீலமாகத் தெரியும். ஒளி மங்கியே தெரியும். அத்தகைய வேதனையான நேரங்களில்
1.ஒரு எழுத்தைப் பார்த்தாலும் அந்த எழுத்து சீராகத் தெரியாது.
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்பு தப்பாகப் படிக்க வேண்டி வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது…?

காலையில் கண் விழித்ததுமே “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தத் துருவ தியானத்தை எடுத்து அந்தச் சக்தியை நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் இதைச் செய்ய வேண்டும்.

ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தோம். அவர் தவறான நிலைகள் செயல்படுத்தும் போது அதைக் கண்டு நாம் வேதனை கொள்கிறோம். சந்தர்ப்பம் நாம் நுகரும் உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாகி விடுகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்
1.அவருடைய தவறான செயலைப் பார்த்தவுடனே
2.காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்திப் பிரகாரம்
3.”ஈஸ்வரா…” என்று இடைமறித்து நம் உயிருடன் ஒன்றி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.அந்த உணர்வினைக் கொஞ்ச நேரம் நம் உடலுக்குள் ஈர்த்திட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று அந்த நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்திக் கொண்ட பின் யார் நம்மை வேதனைப்படும்படி செய்தார்களோ.. துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்
1.அவர்களுக்குள் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலை பெற வேண்டும்
3.அவர்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
4.அவரைப் பற்றி நாம் எண்ணி வேதனைப்பட்ட உணர்வை இவ்வழியில் நமக்குள் இணைத்து
5.அந்தப் பேரருள் பேரொளியின் அணுவாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணூவது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நமது உயிர் ஓ…! என்று நம் உடலுக்குள் ஜீவ அணுவாக ஒளியாக மாற்றும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் எந்த வேதனை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த விஷமான உணர்வை முறித்து ஒளியாக நாம் மாற்றிட முடியும்.

மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியை நிச்சயம் பெற முடியும்.

உயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…! ஏன்…?

Flame of soul

உயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…! ஏன்…?

சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)

அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.

இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.

நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…!

இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.

யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது…! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

 

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை…!

chakkar

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை…!

 

1.இந்த உபதேசத்தின் வாயிலாக அகண்ட அண்டத்துடன் உங்களை அழைத்துச் செல்கின்றோம்.
2.இந்தப் பிரபஞ்சத்தோடு மட்டுமல்ல…!
3.இரண்டாயிரம் சூரியக் குடும்பம் எடுக்கும் உணர்வுடனே உங்களை அழைத்துச் செல்கின்றோம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எனக்கு (ஞானகுரு) எப்படிக் காட்டினாரோ குரு காட்டிய அதே அருள் வழிப்படி உங்கள் உயிருக்குள் சேர்க்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் உபதேசித்து வருகின்றோம்.

அந்த அருள் உணர்வைப் பெருக்கவே அருள் ஞானச் சக்கரம் கொடுத்துள்ளோம். அந்தச் சக்கரத்தைப் பார்த்து எப்படித் தியானிக்க வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. குடும்பத்திலுள்ளோருக்கோ நண்பருக்கோ மற்ற எதுவாக இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்…
1.”ஓ…ம் ஈஸ்வரா…!” என்று சொல்லி உயிரை எண்ணுங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி
2.ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சக்கரத்தின் முன்னாடி சொல்லுங்கள்.

அதிலிருந்து ஒளிகள் வரும். அந்த அருள் உணர்வுகள் வரும். அதை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அடுத்து அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்றுபட்டு வர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவர்கள் உணர்வை மாற்றி அருள் உணர்வின் வழிப்படி அவர்களுக்கு நல்லது கிடைக்கும். ஓரளவுக்கு மாற்றமாகி உடலில் அருள் உணர்வையும் பெருக்கச் செய்யும்.

ஆனால் எது எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எல்லோருமே போகக்கூடியவர்கள் தான்…! ஆனால் அருள் ஒளியின் உணர்வைப் பெருகச் செய்யும் போது இருளை போக்கும் அருள் வலுவை நாம் எல்லோரும் பெறுகிறோம்.

ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் உடனே “ஈஸ்வரா…!” என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடலில் படர வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். மகரிஷியின் அருள் சக்தியால அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

இதைக் கொஞ்ச நேரம் சொல்லி விட்டு கையில் ஏதாவது ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து “உங்கள் உடல் நன்றாகி விடும்… கவலைப்படாதீர்கள்…!” என்ற நல்ல வாக்கைப் பதிக்க வேண்டும்.

அதே போல் தொழிலுக்கோ குடும்பங்களை ஒன்று சேர்ப்பதற்கோ விவசாயத்திற்கோ மற்ற நல்ல விஷயங்கள் “எது நல்லது நடக்க வேண்டும்…!” என்று எண்ணினாலும் சக்கரத்திற்கு முன்னாடி அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்தீர்கள் என்றால் அதிலிருந்து ஒளிகள் வரும்.

1.காலை துருவ தியானம் செய்யும் பொழுது சக்கரத்திற்கு முன் உட்கார்ந்து செய்தீர்கள் என்றால் அற்புதமான நிலைகள் கிடைக்கும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகள் உங்கள் ஈர்ப்புக்குள் வருவதைப் பார்க்கலாம்.
3.இப்படி நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் “ஆயுள் மெம்பராக” அந்த ஒளியுடன் ஒன்றிட வேண்டும்.

அதே சமயத்தில் நம்மைப் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று அதனுடன் இணை சேர்த்தது நமக்குள் இருக்கும் பல கோடி உணர்வுகளையும் அருள் ஒளியின் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

நம் குடும்பத்தில் உள்ளோர்… நம்மைச் சார்ந்தோர்.. உலக மக்கள் எல்லோருக்குள்ளும் அந்த அருள் ஒளி பெற வேண்டும்… இருளை அகற்றும் உணர்வுகள் பெற வேண்டும்…! என்று நாம் தியானித்தல் வேண்டும்.

அதே போல் கூட்டு குடும்ப தியானங்களைச் செய்து அந்தந்தக் குடும்பங்களிலும் அருள் ஒளி பெறவேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

ஒருவரால் முடியவில்லை…! என்றால் நாம் அனைவரும் சேர்த்து அந்தக் குடும்பங்களில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பெறச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

எங்கே குறைகளைக் கண்டாலும் அல்லது காண நேர்ந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாது
1.மெய்ப் பொருள் அங்கே படர வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
3.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்மிடம் வாங்கிய பொருளுக்குண்டான பணத்தைச் சந்தர்ப்பத்தால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை என்றால்
1.அவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.பொருள் தேடும் நிலைகளுக்குண்டான ஊக்கம் கிடைத்து அவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்
3.அவர் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெற்று நம்முடைய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வைச் சக்கரத்தின் முன்னாடி எண்ணுங்கள்.

நம்முடைய உணர்வுகள் அங்கே இயக்கும். பணமும் வரும். பகைமையாக மாற்றாது. நமக்குள் நல்ல பண்புகள் வளரும். அருள் உணர்வு நமக்குள் பெருகும். இருள் புகாத நிலையாகத் தீமைகளைத் தடுக்கும் ஆற்றல் கிடைக்கும். அந்த “அங்குசம்…!” நமக்குள் நிச்சயம் கிடைக்கும்.

அதே போல கூட்டுத் தியானங்கள் எடுத்து ஊர் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் அந்த்ச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

வெளியே சொல்லக் கூச்சம் இருக்கும். ஆனால் சக்கரத்தின் முன்னாடி நீங்கள் தாரளமாகச் சொல்லலாம். எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சக்கரத்தின் முன்பு சொல்ல வேண்டும்.

அந்த உணர்வின் அலைகள் எல்லாப் பக்கமும் பரவும். நம் உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் படர்ந்து இருளை மாய்க்கும். பேரொளியாக மாற்றும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள். அதற்குத் தான் உங்களுக்கு இந்தச் சக்கரத்தை கொடுத்தது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஒளியானான்.

அந்த உணர்வை எவர் பெற்றாலும் இருளை அகற்றி ஒளித் தன்மை பெறுகிறது. தென்னாட்டிலே தோன்றிய நாம் அவர் வழியினைப் பின்பற்றி நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் தன்மையில் அறிவென்ற நிலையைக் காக்கும் உணர்வுடன் செய்வோம்.

நமக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. இந்த உயிருடன் ஒன்றி உடலை நீக்கி என்றும் ஒளி என்ற உணர்வாகி எல்லாவற்றையும் காக்கும் உணர்வாக நாம் முழு முதற் கடவுளாக ஆவோம் என்று நாம் எல்லோரும் ஒன்றாகிடல் வேண்டும்.

பல உணர்வின் மலம் தான் நம் உடலாகின்றது. பல உடலின் அந்த உணர்வின் அருள் ஒளி என்ற உணர்வின் அணுக்களானால் உணர்வின் தன்மை உயிரான இந்த நிலையாகிறது. ஒளி என்ற உணர்வின் சரீரம் பெறுகின்றது… முழுமை அடைகிறது…!

அந்த அருள் ஒளி என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் வளரும் பொழுது பேரொளியாக மாறுகிறது. அந்தப் பேராற்றலை வைத்து நாம் உலகை காக்கும் நிலையும் விஞ்ஞான அறிவால் வரும் இந்த சூறாவளியோ மற்ற விஷக் கிருமிகளாக் வரும் கொடுமையான நோய்களையோ நாம் வாழும் பக்கம் வராதபடி தடுக்கலாம்.

அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவோம் என்று பிரார்த்தித்து வேண்டிக் கொள்கிறேன் (ஞானகுரு).

நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி… நல்ல மணமாக… நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்…!

eswara aradhana

நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி… நல்ல மணமாக… நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்…!

 

ஒருவர் தீமை செய்கிறார்… எல்லோரிடம் கடுமையாகவும் இருக்கிறார்… அதனால் மற்றவர்கள் வேதனைப் படுகிறார்கள் என்ற உணர்ச்சிகளை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

நமக்கும் அந்த எரிச்சலைத் தான் ஊட்டுகிறது. அப்பொழுது எரிச்சலான உணர்வு தான் நம்மை ஆட்சி புரிகிறது. நம்மை ஆளும் ஆண்டவன் அதைத்தான் ஆட்சி புரிகிறது. இயக்குகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

நீங்கள் சாந்தமாகவோ ஞானமாகவோ சொன்னால் அது அடங்குமோ…? என்றால் இல்லை…! ஏனென்றால் அது கடும் விஷம். விஷத்தில் கொண்டு போய் நல்ல பாலையும் நல்ல மணம் கொண்ட சுவை கொண்ட பொருள்களைப் போட்டால் மயக்கம் தான் வருமே தவிர சிந்திக்கும் தன்மை வராது.

நம் உடலிலுள்ள தீமைகளைக் கழிக்கக்கூடிய உணர்வு ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” வாழ்க்கையில் தீமை வருகிறது என்று தெரிகிறது. அப்பொழுது அதை மாற்றியமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற உணர்வுகள் நமக்குள் பதிந்தாலும் “ஈஸ்வரா”என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

விநாயகர் கையில் என்ன இருக்கிறது…? அங்குசம் இருக்கிறது. பெரிய யானையாக இருந்தாலும் ஒரு சிறு அங்குசத்தால் அதை அடக்க முடிகிறது. அதைப் போல நாம் அந்தத் தீமைகளை அடக்கிப் பழக வேண்டும்.

எப்படி…?

நம்முடைய நினைவைக் கண்ணுக்குக் கொண்டு வந்து கண்ணின் நினைவை ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்ற வேண்டும். ஏனென்றால் கண் வழி கவர்ந்த உணர்வுகள் உயிருக்குள் பட்டபின் தான் அந்த உணர்வை உயிர் இயக்கச் சக்தியாக மாற்றுகிறது… உணர்ச்சிகளாக ஊட்டுகிறது.
1,ஆக நாம் சுவாசிக்கக்கூடியதை எல்லாம்
2.நம் உயிர் அகக்கண்ணாக இருந்து
3.உள் உணர்வாக உணர்த்துகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி
1.நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் போது
2.காற்றிலே பரவி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர முடிகிறது.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பொழுது இரத்தங்களிலே கலந்த தீமையின் வீரியத் தன்மையைக் குறைக்கச் செய்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துப் பழக வேண்டும்.
.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் பரப்பப்படும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களில் கலந்து “ஆராதனையாகின்றது…!”

அப்படியென்றால் நாம் வெளிச்சத்தைக் காட்டுகிறோம் என்று அர்த்தம். அந்த உணர்வின் இயக்க ஒளியை உள்ளுக்குள் காட்டும் போது நமக்குள் வந்த இருள் சூழும் உணர்வின் தன்மைகளை அது அடக்குகிறது.

அதன் பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும்.
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்.
4.அருள் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தோமானால்
5.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு அது ஆராதனையாகின்றது.

கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள் இல்லையா…! மலரையும் பன்னீரையும் விட்டு அபிஷேகம் செய்கிறார்கள். கனிகளையும் மற்ற பதார்த்ததையும் இணைத்துப் பஞ்சாமிர்தமாகவும் சிலைக்கு ஊற்றுவார்கள்.

ஏனென்றால் சாமி சிலைக்கு ஊற்றுவது முக்கியமல்ல…!

அருள் உணர்வுகளை நுகர்ந்து அந்த எண்ணங்களாக நம் உயிருக்குள் படரச் செய்யும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக “மகிழ்ச்சி…!” என்ற உணர்வுகள் வரும்.

அதைத் தான் தான் நற்குணங்களின் உணர்வுகளைச் சுவாசமாக்கி நல்ல மணமாக நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம் என்று சொல்வது…!

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் செலுத்தும் போது “விஷ்ணு தனுசு…!”
1.நம் உடலிலே சேர்த்த உணர்ச்சிகளை இயக்க விடாது – அதாவது சிவ தனுசை இயக்காது…
2.உயிரை எண்ணி அருள் உணர்வை நமக்குள் செலுத்தினால்
3.இது விஷ்ணு தனுசாக மாறி தீமையின் உணர்வின் நிலைகளை அடக்குகிறது.
4.ஒளியின் உணர்வாக நம்மை மாற்றுகிறது.

இதை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிய வைப்பதற்காகக் காவியங்கள் மூலம் ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்

நம் சொல்லையும் செயலையும் புனிதப்படுத்தும் பயிற்சி

eswara's prayer

நம் சொல்லையும் செயலையும் புனிதப்படுத்தும் பயிற்சி

 

1.அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனை வேண்டி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்…!

2.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்…!

அதாவது நாம் சொல்லும் போது கேட்போரின் உணர்வுகள் புனிதமாக வேண்டும்… மகிழ்ச்சியாக வேண்டும்…! அதே சமயத்தில் நாம் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயலைப் பார்போருக்கும் அந்த மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் இதனின் நோக்கம்.

2.நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்…!

நமக்கு ஆகிறவர்களோ… ஆகாதவர்களோ… மற்றவர்களுடைய செயல்களைப் பார்க்கும் போது
1.நல்ல குணங்களும் நல்ல நிலைகளும் அவர்கள் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் நமக்கு வர வேண்டும்.

காரணம்… அவர்களைப் பார்க்கும் போது நாம் அவர்களுடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ நுகர்ந்துவிடக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழிலில் வளம் பெற வேண்டும் என்ற உணர்வு தான் நமக்குத் தோன்ற வேண்டும்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரிடம் செல்வம் அவர்களிடம் இல்லை என்றால் முகம் வாடிய நிலைகள் கொண்டு மனம் குறுகிய நிலையில் சோர்வாக இருப்பார்கள்.

அந்தச் சோர்வும் சலிப்பும் சஞ்சலமும் அவர்கள் குடும்ப நிலைகளில் இருக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகொப்ப அவர்களுடைய முக வாட்டங்களையும் அவர்களுடைய செயல்களையும் நாம் உற்றுப் பார்க்கும் போது
1.அது நமக்கும் வேதனை தரும்.
2.அந்த வேதனை என்ற உணர்வை நுகரப்படும் போது நம் சிந்தனையும் குறையும்.

ஏனென்றால் நல்ல மனங்கள் கொண்ட… நல்ல குணங்கள் கொண்ட… நல்லது செய்வோரின் உணர்வுகளுக்கு மற்றவர்களின் இத்தகைய செயல்களைப் பார்க்கும் போது
1.அவருடைய உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் ஓர் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அவர்களுடைய உணர்வுகள் நம் உடலிலே இரத்தங்களிலே மாறும் போது அதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு விதமான நிறம் உண்டு. நம் இரத்த நாளங்களிலே அத்தகைய நிறத்தின் உணர்வுகள் உணர்ச்சிகள் பரவும். அந்த நிறத்தின் உணர்வு உணர்ச்சிகளுக்கு ஒப்பத் தான் நம்முடைய பேச்சும் மூச்சும் இருக்கும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால் அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் இது புகாது.

அவர்களுக்கு நல்லதைச் செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்… அவர்களுக்கு மன பலம் கிடைக்க வேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அப்படி எடுத்து அதை உறுதிப்படுத்தினால்
2.அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் நமக்குள் நுகரும் சக்தியைத் தடைப்படுத்தலாம்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்க வேண்டும்.

பிறருடைய குற்றமான செயல்களைப் பார்க்கும்போதெல்லாம் இப்படி எடுத்து நாம் இந்த உணர்வுகளைச் செலுத்தினோமென்றால் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடைப்படுத்தி நம் இரத்தங்களில் நல்ல உணர்ச்சிகளாக மாற்றியமைக்கலாம்.

இது மனிதன் ஒருவனால் தான் முடியும்…!

ஆக.. நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற இந்தச் சொல்லுக்குள் இவ்வளவும் அடங்கி இருக்கிறது.

3.எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெற செய்ய அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

நமக்கு வேண்டிய ஒருவர் சங்கடமாக இருக்கிறார் என்று அவரைப் பார்த்தால் உடனே அவரிடம் “என்ன… ஏது…?” என்று அவருடைய சங்கடங்களைப் பற்றித்தான் கேட்போம். நல்லதைக் கேட்க மாட்டோம்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டமாக இருக்கிறார்கள்… சங்கடமாக இருக்கிறார்கள்… வேதனையாக இருக்கிறார்கள்… வெறுப்பாக இருக்கிறார்கள்… என்ற நிலையில்
1.அவர்கள் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் நாமும் கஷ்டத்தையும் சங்கடத்தையும் வெறுப்பையும் வேதனையும் பட்டு
2.இப்படி ஆகிவிட்டதா…! அப்படியா செய்து விட்டார்கள் பாவிகள்…! என்று நாம் பதிலுக்குச் சொன்னோமென்றால்
3.அது சாதாரண வாழ்க்கைக்கு ஒத்ததாகப் போய்விடும்.
4.அவர்களிடம் அதைத் தூண்டிக் கேட்கக் கேட்க அவர்களின் வேதனையும் சலிப்பும் நமக்குள் அதிகமாக வர நேரும்.

சலிப்பும் வேதனையும் நமக்கு நன்மை செய்யுமா…? அல்லது அவருக்கு அது நன்மையாகுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அவர்கள் முகம் வாடிய நிலையில் சோர்வையோ சஞ்சலத்தையோ சொல்லும் போது நாம் ஈஸ்வரா..! என்று உயிரை நினைத்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் பெருக வேண்டும்.
3.உங்கள் உடல் முழுவதும் அந்த அருள் ஞானம் பெருக வேண்டும்.
4.உங்களுக்கு அமைதி கிடைக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பாருங்கள்.

ஏற்றுக் கொள்ளும் பண்பும் வரும். நாம் சொல்லும் உணர்வுகள் அவர்களுக்குள் பதிவாகும். பதிவானதை எண்ணும் பொழுது அவர்களும் அந்தச் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பம் உருவாகும்.

ஆனால் நீங்கள் சாதாரண நிலையில் இருந்து புத்திமதிகளைச் சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொல்கிறீர்கள்…! ஆனால் என் பையன் பேசுவதையும் செய்வதையும் கேட்டால் அப்புறம் தெரியும் உங்களுக்கு…! என்று நல்லதைச் சொல்லும் போதே பதிலுக்கு எதிர்த்துச் சொல்லுவார்கள்.
1.எனக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று
2.அதையே இறுக்கப் பிடித்துக் கொண்டு பேசுவார்கள்.

ஆகையினால் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அவர்களின் உணர்வை நாம் எடுப்பதற்கு முன்பாகவே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நமக்குள் வலுவாகச் சேர்த்து கொள்ள வேண்டும்.

எடுத்து அதன் பின் அவர்களுக்கு இந்தச் மாதிரி சொல்ல வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் இதே போன்று நாம் செயல்படும் போது
1.நம் பேச்சு உலக மக்களோடு ஒத்து வாழ்ந்தாலும்
2.அவர்கள் உணர்வை ஏற்றுக் கொள்ளாதபடி
3.நமக்குள் நல்ல உணர்வுகளைச் சமைத்து
4.அந்த நல்ல உணர்வுகளை அவர்களையும் பெறச் செய்கின்றோம்…!

அப்பொழுது நம்முடைய பேச்சும் மூச்சும் உலகம் அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரும்.

“உயிரான ஈசனுடன் ஒன்றி… அவனுடன் அவனாக ஒளியாக மாறும் தியானப் பயிற்சி…!”

eswara meditation

“உயிரான ஈசனுடன் ஒன்றி… அவனுடன் அவனாக ஒளியாக மாறும் தியானப் பயிற்சி…!”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களிடம் மெய் ஞானிகளின் ஞான வித்துக்களைப் பதிவு செய்து கொண்டே வருகிறேன். இதை நீங்கள் நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்த அருள் உணர்வு பெறுவீர்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும். அதில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் இணைய வேண்டும்.

விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் வழி நாம் சென்று இருளை அகற்றி உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நாம் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் உணர்வுகளை உருவாக்கும் நிலைக்குத் தான் இதைச் சொல்கிறோம்.
1.உங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் தொட்டுக் கொடுத்திருக்கிறது.
2.நீங்கள் இதை ஒவ்வொன்றிலும் இணைத்து நல்ல முறையில் பக்குவப்படுத்த முடியும்.

கணவனும் மனைவியும் இதைப்போல நீங்கள் ஒன்று சேர்த்து இணைத்து எண்ண வேண்டும். கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெருக்கிப் பழக வேண்டும்.

நம் குருநாதர் சென்ற பாதையில் நாம் அதன் வழி செல்லும் போது இதன்வழி ஒன்றாக இணைந்து அருள்வழி என்ற நிலையிலே பெரும் சக்தியை நாம் பெறுவோம்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

“ஓம் ஈஸ்வரா குருதேவா…!” என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை எண்ண வேண்டும். உங்கள் உயிரை ஈசனாக மதித்துக் குருவாக மதியுங்கள்.
1.உங்கள் உயிரை ஈசனாக மதிக்கிறேன்.
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கிறேன்.
3.நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரான ஈசனை நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களை நான் அதுவாக மதிக்கின்றேன். அப்போது அதனுடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் அதன் உணர்வின் தன்மையைப் பெறும் ஈர்ப்புடன் செல்கின்றேன்.

அந்தச் சக்தி பெற நாம் இப்பொழுது தியானிப்போம். சொல்வதை எல்லாம் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணுங்கள்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! கருணை சொரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா… ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா… கருணை சொரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் குருதேவா…! ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம்…! ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்… எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…!

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்… என்றால்
1.இந்த உயிரான ஈசன் இல்லாமல்
2.உடலான இவ்வுலகில் நாம் இருக்க முடியாது.

எல்லா வகையிலும் நம் உடலை வளர்த்தது நம் உயிர். எல்லா நிலையிலும்… என்றால்
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தி
2.அதற்குத் தக்க தப்பிக்கும் உணர்வுகள் பெற்று
3.தப்பிச் செல்லும்… தப்பித்துக் கொள்ளும் உணர்வின் உடலாக உருவாக்கியது உயிர்.

ஆகையினால் தீமையிலிருந்து தப்பித்துச் செல்லும்
1.அந்த எல்லா நினைவையும் பெற்றிடவே
2.எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா.. என்று நம் உயிரிடம் நாம் வேண்டிடல் வேண்டும்

பாட்டை மட்டும் பாடிவிட்டு… பல நினைவில் நான் இல்லாமல்… பரி பக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…!

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு… என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது “என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே இருந்துவிடு…!” என்றால்
1.நாம் எல்லா நல்லதையும் செய்கிறோம்…
2.ஆனால் நல்லதைச் செய்து எதிர்ப்பாகி மற்றவர்கள் நமக்கு உதவி செய்யவில்லை என்றால் உடனே வெறுப்படைகிறோம்.
3.உதவி செய்தவருடைய நிலையில் ஏதாவது சிறிது குறையைக் கண்டால் வெறுப்பென்ற உணர்வை வளர்த்து விடுகிறோம்.

அப்பொழுது நமது ஆசை எதிலே போகிறது…?

நம்மைப் போற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தான் தள்ளுகிறது. போற்றும் நிலையைத் தவறினால் நம்முடைய ஆசையே நமக்குள் வேதனையாகிவிடுகிறது.

ஆனால் நம் உயிர் என்ன செய்கிறது…? எல்லாவற்றையும் நமக்கு உணர்த்துகிறது. உணர்வின் தன்மை ஒளியாக்கி உயிர் ஒன்றானது போல் நம் உணர்வின் தன்மை ஒன்றாகி துருவ நட்சத்திரத்தைப் போல் ஒன்றென இணைந்திட வேண்டும். அதனால் தான்
1.இந்த உடலின் இச்சை வளர்ந்திடாது உயிரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.என்றும் எல்லோரும் அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்ற
3.அந்த அருள் உணர்வைப் பெறுவது தான் இந்தப் பாடலின் நோக்கம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனம் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உயிரான ஈசனை எண்ணித் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் தொடர்பும்
2.நம் குருநாதர் பெற்ற உணர்வுகளும்
3.அற்புத நிலையில் உங்கள் உடலுக்குள் பாயும். அருள் உணர்வை உடலுக்குள் பெருக்கச் செய்யும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அகஸ்தியன் உணர்வும் அவன் வளர்ந்த நிலையும் அவன் முழுமையடைந்த உணர்வுகளையும் பெறும் பொழுது நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒன்றாக இணைகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளினால் அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியும் அவர் வளர்ச்சி அடைந்த நிலைகளும் கணவன் மனைவி பெற்ற நிலையும் இருவருமே உணர்வு ஒன்றாகி ஒளிச் சரீரமான அதிலிருந்து வந்த உணர்வுகளை எல்லாம் இப்பொழுது நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

அதே சமயத்தில் உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊடுருவி உங்கள் இரத்த நாளங்களில் பேரொளியாகக் கலந்த அந்த உணர்வையும் நீங்கள் அறிய முடியும்.

அந்த அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கவும் பொருளைக் காணவும் என்றுமே பிறவி இல்லா நிலை என்ற அந்த அருள் நிலையை நாம் பெறுவதற்குத் தான் நாம் இதைச் செய்கிறோம்.

ஏனென்றால்
1.இந்த உடலும் சொந்தமில்லை.
2.இந்த உடலால் தேடிய செல்வமும் சொந்தமில்லை.
3.ஆகவே அந்தப் பேரருளை நமக்குள் சொந்தமாக்கிக் கொள்வோம்.

“என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு…”என்ற நிலையாக இந்த உயிர் என்றுமே நமக்குள் ஒளியாக இருக்கும் “அவனுடன் அவனாக நாம் ஒன்றி… ஒளியின் சரீரமாக நிலைத்திருப்போம்… என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

“இரவு முழுவதும்…” உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…!

flying lights in night

இரவு முழுவதும் உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…!

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம். அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த உணர்வு உங்களைக் காக்கும்.

அதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தபின் புலனடங்கித் தூங்கும் போது அந்த அதிர்ச்சியின் நிலைகள் வருகின்றது.

அதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து கொண்டால் புலனடங்கித் தூங்கும் போது உங்களை வான மண்டலத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணைத்து அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் இணையும்.

சிலருக்கு அந்தக் காட்சிகள் வந்து கொண்டிருக்கும். மிதப்பதைப் போல் இருக்கும். இதன் வழியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒளியின் தன்மை திடீரென்று உடலிலிருந்து மின்னவும் செய்யும்.

தியான வழியில் பெற்றோருக்கு தீமைகளை அகற்றும் நிலைகள் தனக்குள் இந்த உணர்வுகள் அது தெளிவாகத் தெரியும்.

இரவிலே வான மண்டலத்திலே சுழல்வது போலத் தெரியும். முழித்துப் பார்த்தால் உங்கள் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே, நாம் வளர்த்துக் கொண்ட நிலையை அந்தப் பேரருள் பேரொளியை நாம் அறியலாம்.

எப்படி இதை அறிந்து கொள்ள முடியும்…? என்று சிலர் நினைக்கலாம்.

யாம் உங்களுக்குள் பதிவாக்கிய நிலைகளைச் சீராக நீங்கள் எடுத்துக் கொண்டால் வான மண்டலத்தில் உங்கள் உணர்வுகள் சஞ்சரிக்கும். உங்களின் உணர்வின் நினைவாற்றல் அங்கே அழைத்துச் செல்லும்.

நீங்கள் பயந்த உணர்வுகளைப் பதிவாக்கினால் இந்த உணர்வுகள் அஞ்சி வாழச் செய்யும் நிலைகளும் இரவில் தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பிக் கதறுவது போன்று தூக்கமின்மையும் பல நிலைகளும் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் தெளிவாக்கி மனிதனுடைய வாழ்க்கையில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்.

இதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நிலைகளையும் போக்கிக் கொள்ள உங்களால் முடியும். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

சாமியார் காப்பாற்றுவார், சாமி காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் என்ற நிலைக்குத்தான் இன்று சென்று கொண்டுள்ளார்கள்.

உங்களுக்குள் பதிவு செய்ததை நீங்கள் நினைவாக்கினால் அதே உணர்வு உங்களைக் காக்கின்றது வழி நடத்துகின்றது. உங்களைச் செயல்படுத்துகின்றது. இதைத் தான் யாம் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

நாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே, அருள் சக்திகளை நீங்கள் பெறும் நிலைகள ஏங்கி எடுக்கும் போது நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றும் நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு இவ்வளவு விளக்கமாகக் கொடுக்கின்றோம்.