பூஜை என்பது என்ன…?

பூஜை என்பது என்ன…?

 

மனச்சாந்திக்காக எல்லோரும் பூஜை செய்கிறார்கள். சாமி (ஞானகுரு) சொன்னது போல் தியான மார்க்கத்திற்கு வந்தால் போதும். மனதை ஐக்கியப்படுத்தித் தியான மார்க்கத்திற்குப் போகவும்.

கடவுள் என்றால் என்ன…? என்பதை முதலில் தெரிந்து கொள்.

பூஜையில் இருக்கும் பொழுது
1.சாமி சொன்ன மாதிரி தாய்… தந்தை… போதனை கொடுத்த குருவிடம்… ஆசிர்வாதம் பெற்றுத் தியானத்தில் ஈடுபடவும்.
2.அடுத்து சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளை நினை.
3.அடுத்தது ஈஸ்வரா என்று நினைத்து மனதை ஐக்கியப்படுத்து.

கடவுள் எல்லாம் ஒன்றே என்று இருக்கும்பொழுது ஈஸ்வரனைப் புருவ மத்தியில் நினைத்தால் போதும்.

மாய ரூபம் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி உள்ளேன்… “ஜோதியே போதும்…!”

விநாயகர் முருகனை நினைத்துத் தியானித்தால் போகரின் காட்சி சீக்கிரம் கிடைக்கும். மனதை ஐக்கியப்படுத்தினால் கிடைக்கும். முனிவர்கள் சித்தர்கள் காட்சி வேண்டுமா…! அல்லது ஜோதி காட்சி வேண்டுமா…?

குழந்தைப் பாக்கியம் இல்லாத வரத்துடன் வந்திருக்கிறார்கள் குழந்தை இல்லை என்றால் அது அவரவர்கள் செய்து வந்த பூஜா பலன்… பிறவியிலிருந்து வந்த பலன் தான். மாற்றுதல் கடிநம்.
1.ஈஸ்வரனிடம் இருந்துதான் கேட்டு வாங்க வேண்டும்…
2.நம்பித்தான் கேட்டு மனதை ஐக்கியப்படுத்தித் தியானித்து வாங்க வேண்டும்.

“சந்தேக நிலை…” நிலையாக இருப்பதால் ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து. (காட்சி:-) மார்க்கண்டேயன் வரப் பலன் பெற வேண்டும்

பூஜைக்கு வரச் சொன்னது வழிமுறைக்காகத்தான். ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்திக் கேட்கவும் இதற்கு நீயோ நானும் என்ன செய்ய முடியும்…? பாடம் போதுமா… வேண்டுமா…? இன்னும் கேட்கலாம்… அவன் எழுத வேண்டாமா…!

காந்த மின் ஒளி அலை (ELECTRO MAGNETIC WAVE)

காந்த மின் ஒளி அலை (ELECTRO MAGNETIC WAVE)

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது (முக்கியமானது). மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

“ஈர்க்கும் காந்த நரம்புகள்…”

“ஈர்க்கும் காந்த நரம்புகள்…”

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள்

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள்

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழி பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

 

உதாரணமாக… பகலில் நாம் ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சியைப் பார்த்த பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது நமக்கு அதே அதிர்ச்சி வருகின்றது… தூக்கம் முழிப்பு… பயம் எல்லாமே வருகின்றது.

அதே போன்று… துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் நீங்கள் கவர்ந்து கொண்டால்…
1.இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது உங்களை வான மண்டலத்துடன் இணைக்கும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்… அந்த உணர்வுகள் உங்களுக்குள் இணையும்.
3.சிலருக்கு மிதப்பது போன்று காட்சிகளும் உணர முடியும்…!
4.உடலுக்குள் இருந்து பளீர்…ர் பளீர்…ர் என்று ஒளியாக மின்னவும் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் சக்தியாக இந்தத் தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் தெளிவாகத் தெரிய வரும்.

இரவிலே வான மண்டலத்தில் செல்வது போன்று தெரியும். முழித்துப் பார்த்தால் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே நாம் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தி வளர்ந்திருப்பதை நாம் இப்படி அறியலாம்…!
1.வான மண்டலத்திலே உங்கள் உணர்வலைகள் சஞ்சரிக்கும்
2.உங்கள் நினைவாற்றலை அங்கே விண்ணுக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே சொன்னது போன்று பயமான உணர்வுகளைப் பதிவாக்கினால் அது அஞ்சி வாழும் உணர்வுகளாக… இரவிலே தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பி… கலக்கமான நிலைகள் கொண்டு தூக்கம் இல்லாத நிலை ஏற்படும்.

அது போன்ற நிலையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத் இதையெல்லாம் தெளிவாக்குகின்றேன்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெருக்கி இருளை அகற்றிடும் சக்தியாக நீங்கள் வரவேண்டும். இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. ஆகவே அந்த அரும் பெரும் சக்திகளை… மகரிஷியின் சக்திகளை நீங்கள் எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது அந்த ஒளியான அணுக்களாக உங்களுக்குள் மாற்றும் தன்மை வரும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இவ்வளவு விளக்கமாகச் சொல்கின்றேன்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த நினைவு உங்களைக் காக்கும் சக்தியாக வரும்.

மனதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியம்

மனதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியம்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவும் காயும் கனியும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…! அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!

நாம் பெறும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… “உணரும் (காணும்) வழி”

நாம் பெறும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… “உணரும் (காணும்) வழி”

 

பாலிற்குள் பல சத்துள்ள பொருட்களை இட்டிருந்தாலும் அதிலே அறியாது ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்தப் பால் செயலிழந்து விடுகிறது அதைக் குடிப்போரையும் மடியச் செய்து விடுகின்றது.

இது போன்று தான் நாம் நல்ல பண்புகளுடன் இருந்தாலும் சந்தர்ப்பத்தில் சில கடுமையான தீமைகளைச் சந்திக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் எல்லாம் நம் நல்ல குணங்கள் கெட்டுவிடுகிறது.

அதை எப்படி மாற்றுவது…?

மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவர்கள்… நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள் அருள் மகரிஷிகள்.

அவர்கள் உணர்வுகளை நமக்குள் இணைத்தால்…
1.அறிவின் ஞானமாக மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்
2.மெய் ஞானிகளுடன் ஒன்றிடும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
3.அதைப் பெறச் செய்வதற்கே யாம் (ஞானகுரு) இதை உபதேசிப்பது

ஆகவே… உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களுடையது அல்ல…! உயிரால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல். தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தீமைகள் அகற்றும் போது நம்மை இயக்கிய… நம்மை உருவாக்கிய… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலை அடையலாம்.

சங்கடங்களோ சலிப்போ மற்ற நிலைகளோ வரப்படும் பொழுது ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணை நோக்கி ஏக்க உணர்வைச் செலுத்துங்கள்.
2.தலை நிமிர்ந்து (இலேசாக) உயர்வாக நினைவைச் செலுத்துங்கள்
3.இப்போது உங்கள் ஆன்மாவைக் கடந்து இந்த உணர்வுகள் செல்கின்றது

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
1.நீரிலே கல்லைப் போட்டால் எப்படி அதற்குள் அலை அலையாக மாறுகின்றதோ இதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் அலைகள் உங்களுக்குள் (அலை அலையாக) வருவதை “அந்த ஒளிக் கதிர்களை” உங்களால் உணர அல்லது காண முடியும்.

உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும்… உங்கள் உடலுக்குள் ஊடுருவி அதனின் ஆற்றல் பெருகும்.

இருந்தாலும்… அதிகமான காட்சிகளைக் கொடுத்து விட்டால் அதைப் பார்த்துப் பயப்படுவோர் நிறைய உண்டு.
1.திடீரென்று இந்த மாதிரித் தெரிந்தால் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று எண்ணிவிடுவார்கள்
2.கிடைத்ததைப் பற்றி சந்தோஷப்பட்டு மீண்டும் அந்த சக்தியை எண்ணிப் பெறுவோர் “ஒரு சிலரே” உள்ளார்கள்.
3.ஆனால் “பலர்” “இப்படி எல்லாம் தெரிகின்றதே… இது ரைட்டா… தப்பா…?” என்று இந்தக் கணக்குகளைத்தான் போட ஆரம்பித்து விடுகின்றார்கள்
4.இதனால் ஏதாவது நல்லதாகுமா அல்லது கெட்டதாகுமா…? என்று கிடைத்ததையும் இழக்கும் நிலை தான் இருக்கின்றது.

இந்த மனிதனுடைய வாழ்க்கை அவ்வாறு தான் உள்ளது.

ஆனால் மந்திரஜாலங்களையோ அல்லது ஆவிகளை வைத்து அமானுஷ்யமான விசித்திரங்களைக் காட்டினால் அதைக் கண்டு ஆசைப்படுகின்றோம்… அதைப் பெருமையாகவும் பேசுகின்றோம்.

ஆனால் அத்தகைய மந்திர ஒலிகளைப் பதிவாக்கினால்… பின் இறந்தால் நம் உயிரான்மா அவர்கள் கையிலே தான் சிக்கும்… அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானம் பெறுவோம்
2.அதை நமக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளர்ப்போம்
3.மெய் ஞானிகள் கண்ட பெருண்மைகளை நாமும் கண்டுணரும் சக்தி பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தகுதியாக அதைத் தாங்கும் ஆற்றலைப் பெற வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தகுதியாக அதைத் தாங்கும் ஆற்றலைப் பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் மூலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் முழுவதும் படரச் செய்து நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களில் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பெருக்கிக் கொண்டால்… விண்ணிலே பரவிக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும்… இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியும் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவினை விண்ணிலே செலுத்தும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் “கதிர்பொறிகளை” உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அதைப் பெறும்படி செய்வதுதான் குரு காட்டிய அருள் வழி.
4.துருவ தியான நேரங்களில் உங்களுக்குள் ஒரு புது உணர்வு பரவும்.
5.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஒளிக் கதிர்கள் அலை அலையாகச் சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காண முடியும்.

எவர் எவர் இதைப் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி ஆன்மாவைத் தூய்மையாக்கிடும் சக்தியாக வளரும்.

நீங்கள் சுவாசிக்கும் அந்த உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடச் செய்யும். வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்து தீமையற்ற உணர்வை அறியும் ஆற்றலாக உங்கள் நினைவுகள் வளரும். அதே சமயத்தில்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு நொடியிலேயும்
2.அந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெற்று பெரும் சக்தி பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் மறவாது செயல்படுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வந்தால்…
1.நினைவை விண்ணிலே செலுத்தி எண்ணி ஏங்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
2.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்குச் செல்லும்.

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ இன்னல்களிளிலிருந்து விடுபடும் நிலையாக உணர்வுகள் வலுப்பெற்று வலுப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய உயிரால்… உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா (ஆறாவது அறிவு) என்பது.

எதனையுமே அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் தான் நாம். இருளைப் பிளந்து பொருளைக் காணும் நிலை பெற்றுள்ளோம்.

ஒரு தீபத்தில் ஒளியை ஏற்றினோம் என்றால் இருளை மாய்த்து விட்டுப் பொருளைக் காண முடிகின்றது. இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்கள் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் சிறுகச் சிறுகச் சேர்க்கப்பட்டு வருகின்றது.
2.அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது… உடலிலே சூடாகிவிடும்
3.அதே சமயத்தில் அதனுடைய வேகத்தடிப்புகளைத் தாங்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லை.

அதைத் தாங்கக்கூடிய நிலைக்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியான நேரங்களில் உங்கள் ஈர்ப்புக்குள் சிறுகச் சிறுக அதைப் பெறக்கூடிய தகுதியை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கச் செய்கின்றோம்.

காரணம்… எத்தனையோ விதமான குணங்களை எண்ணி எடுத்துள்ளோம். அதற்குத்தக்க அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை இணைக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக அதற்குள் விளைந்துள்ள தீமைகள் குறையும். உங்கள் நினைவின் ஆற்றல் விண் செல்லும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.நீங்கள் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எந்த விண்ணிலே உருப்பெற்றதோ
2.அண்டத்திலிருந்து வரும் எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் அது எவ்வாறு இருக்கின்றதோ
3.அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு பேரின்ப பெரு வாழ்வாக வாழ்கின்றார்களோ
4.என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும்… நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!