தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

 

உதாரணமாக… பகலில் நாம் ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சியைப் பார்த்த பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது நமக்கு அதே அதிர்ச்சி வருகின்றது… தூக்கம் முழிப்பு… பயம் எல்லாமே வருகின்றது.

அதே போன்று… துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் நீங்கள் கவர்ந்து கொண்டால்…
1.இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது உங்களை வான மண்டலத்துடன் இணைக்கும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்… அந்த உணர்வுகள் உங்களுக்குள் இணையும்.
3.சிலருக்கு மிதப்பது போன்று காட்சிகளும் உணர முடியும்…!
4.உடலுக்குள் இருந்து பளீர்…ர் பளீர்…ர் என்று ஒளியாக மின்னவும் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் சக்தியாக இந்தத் தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் தெளிவாகத் தெரிய வரும்.

இரவிலே வான மண்டலத்தில் செல்வது போன்று தெரியும். முழித்துப் பார்த்தால் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே நாம் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தி வளர்ந்திருப்பதை நாம் இப்படி அறியலாம்…!
1.வான மண்டலத்திலே உங்கள் உணர்வலைகள் சஞ்சரிக்கும்
2.உங்கள் நினைவாற்றலை அங்கே விண்ணுக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே சொன்னது போன்று பயமான உணர்வுகளைப் பதிவாக்கினால் அது அஞ்சி வாழும் உணர்வுகளாக… இரவிலே தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பி… கலக்கமான நிலைகள் கொண்டு தூக்கம் இல்லாத நிலை ஏற்படும்.

அது போன்ற நிலையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத் இதையெல்லாம் தெளிவாக்குகின்றேன்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெருக்கி இருளை அகற்றிடும் சக்தியாக நீங்கள் வரவேண்டும். இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. ஆகவே அந்த அரும் பெரும் சக்திகளை… மகரிஷியின் சக்திகளை நீங்கள் எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது அந்த ஒளியான அணுக்களாக உங்களுக்குள் மாற்றும் தன்மை வரும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இவ்வளவு விளக்கமாகச் சொல்கின்றேன்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த நினைவு உங்களைக் காக்கும் சக்தியாக வரும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply