எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

 

ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் “எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…” அந்தச் சொல் வரும்… தனித்து வராது… அதனுடைய சுருதிகள் அப்படி…!

ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள்… இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும்… எதிர்மறையாகும்.

இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.

இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.

ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.

புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் இங்கே படரும்… நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே “எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”

வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

விண்ணின் பற்றைக் கொண்டு நாம் அந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.

மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும்… கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்… செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும்… இரண்டும் கலவையாகும்… அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!

சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.

நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோபமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.

சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! – கண்ணன் சொன்னது

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! – கண்ணன் சொன்னது

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் ஒவ்வொரு உடலிலும் காத்துக் கொள்ளும் உணர்வினை எடுத்து மனிதனாக வளர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்
1.அர்ச்சுனன் சகலகலா வல்லவன்… சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்
2.வல்லமை பெற்றவன்…! என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய அந்த உண்மைகளைப் பார்ப்போம்.

தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். சகோதர பாசம் என்ற உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால் சகோதரர்களைப் பார்த்ததும் அவர்களைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.

அவர்களை விட்டு விட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள். ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.

அதன் விளக்கம்…! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால் “அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது…”

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் மாறி “நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்…”

ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும்
1.அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால் அது உன்னை அழித்துவிடும்
2.நீ கற்றுணர்ந்த வல்லமை அப்போது எங்கே செல்கின்றது…? என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கின்றான்.

கண்ணன் சொன்னதன் நிலைகள் “தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்…!” தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை இங்கு அழித்து விடுகின்றது.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உனது நல் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
3.அவன் அறியாத இருள்களிலிருந்து மீள வேண்டும்… இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது.
4.அதாவது… இந்த எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.

அதன் வழி எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். எதிரியுடன் இருந்து நின்று அவர்கள் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்…? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும் கீதையிலே எழுதுகின்றனர்.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய “உணர்வின் இயக்க நிலைகளைத் தான்” அன்று ஞானியர்கள் கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

 

ஞானிகள் மகரிஷிகள் நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் குணங்களுக்குள் அதைக் கலந்து இணைக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின் செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும் வென்றிடும் நிலைகள் வருகின்றது.

நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும்… அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.

காரணம் இதற்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச் செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால் சூரியன் ஒளி மங்கும்… பின் இருள் சூழும்.

இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.

அப்படிக் கரைந்து வந்த ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம் வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).

இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப் பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.

இருப்பினும்… பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள் அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும் நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.

1.இதைப் போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.எதனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ அந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதைக் கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.

அது தான் விநாயகர் சதுர்த்தி…!

நாம் கேட்டுணர்ந்த மற்ற மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும் அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.

மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ… அதையெல்லாம் அகற்றிடும் நிலையாகத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

ஆகவே… மற்ற மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்படுத்திட வேண்டும்.

அவ்வாறு எல்லோரும் நிறுத்திவிட்டால்…
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின் சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள் சிக்கி
3.நமக்குள் பதிவான பகைமை உணர்வுகளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் அந்தச் சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே பொசுங்கிவிடும்.

நாமும்… நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தம் ஆகும்.

மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!

மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!

 

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.

நாம் எதனை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது பதிவாகி அதனின் கணக்குப் பிரகாரம் தான் நமக்குள் வளர்கிறது. ஆகவே எதனின் கணக்கை நாம் கூட்ட வேண்டும்…?
1.நாம் மெய் ஞானிகள் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலையை அடைந்திட
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அந்த நிலைகள் எல்லோரும் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் எத்தனையோ எத்தனையோ…! அதற்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து வலு ஏற்றுகின்றேன்.

தாவர இனங்களுக்கு நாம் உரச் சத்தை ஏற்றும் பொழுது ஒரு முறை முதலிலே ஏற்றுகின்றோம். அதை ஏற்றுக் கொண்ட பின் அடுத்த முறை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.

இப்படி அது இணைத்துக் கொண்ட்தற்குத் தக்கவாறு தான் “புது வித்துக்களாக…” நாம் உருவாக்க முடியும். ஏனென்றால்
1.ஒரு வித்தினை நேரடியாக மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து
3.மாற்றுப் பொருளாக மீண்டும் மீண்டும் உருவாக்கி
4.சீராக அதனுடன் ஒன்றி இயக்கும் நிலைகள் கொண்டு தான் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வர முடியும்.

காரணம் நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்… பகைமை உணர்வால் வளர்த்துக் கொண்ட வித்துக்கள் ஏராளம் ஏராளம்… தன்னை காத்துக் கொள்ளும் கோப குணம் ஆக இருந்தாலும் அதுவும் ஏராளம் ஏராளம்…!

இத்தகைய வித்துகள் நமக்குள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தும் ஒருக்கிணைந்து
1.இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கிடும் நிலைக்காக
2.அருள் ஞானிகள் உணர்வினை உங்களிடம் இருக்கும் குணங்களுடன் இணைத்து இணைத்து
3.அதை இரண்டு முறை மூன்று முறை பிணைத்துப் பிணைத்து உங்கள் குணங்களுடன் ஒன்றச் செய்து
4.நினைவு கொண்டு அதை நீங்கள் பெறும் ஆற்றலை… அந்தத் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அது அல்லாதபடி நாம் செய்தோம் என்றால் அது முழுமை சேர்க்க முடியாது.

பாடப் புத்தகத்திலே படித்துவிட்டு “ஆகா நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு அதற்குப்பின் அதை நாம் ஓரம் கட்டி விடுகின்றோம். அடுத்து அதை மீண்டும் படிப்போம் என்ற நிலை வராது.

அதைப் போன்று அல்லாதபடி யாம் பதிவு செய்யும் உணர்வுகள் உங்கள் நினைவாற்றலுக்குள் அது ஓங்கி வளர வேண்டும். ஆகவே இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு எது சொந்தம்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்குங்கள்… அதைச் சொந்தமாக்குங்கள்.
2.பிறருடைய குறைகளை உங்களுக்குச் சொந்தமாக்க வேண்டாம்.
3.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

 

ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.

சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்… கல்கி.

அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.

ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு “இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.

காரணம்… இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.

மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.

மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!

ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.

உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய்… பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.

எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள் மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.

என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.

கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன்… அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.

அதையெல்லாம் மாற்றிட
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.

வீண் என்ற பேச்சு இல்லை… விரயமாகும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ “அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்…
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்… உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

 

விஞ்ஞான அறிவில் இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறது. கற்றறிந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்தறிந்து அந்தந்த உணர்வுக்குத்தக்க “எத்தனையோ நுண்ணிய நிலைகளில் செயல்படுத்தித் தான் புதிதாகக் கண்டு பிடிக்கின்றார்கள்…”

இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு நிலைகளிலும் மனிதன் எப்படி இயங்குகின்றான்…?
2.ஆதியிலே காட்டு விலங்குகளுடன் மனிதன் எப்படி வாழ்ந்தான்…?
3.அவன் விண்ணின் ஆற்றலை எப்படி எடுத்தான்…?
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலைப் பெற்றான்…?
5.அவனுடைய வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…?

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள் கொண்டு நாம் அந்தப் பேராற்றல்களை நுகர்ந்தால் அந்த உணர்வினை உயிர் அணுவாக மாற்றுகின்றது.

கருத்தன்மை அடைந்து அணுத் தன்மை அடைந்தால் அந்த அணுவாக உருப்பெற்ற பின் அது உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
1.எந்த உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்த அணுவின் தன்மை பெற்றதோ
2.இந்த உணர்வின் எல்லை கடந்து அங்கே விண்ணுக்கே செல்கின்றது.

உயிருடன் ஒன்றிய பின் எந்தக் கண்களால் கவர்ந்து தன் உடலுக்குள் கவரும் சக்தி பெற்றதோ அதே கண்ணுக்கு மீண்டும் ஆணை இடும் பொழுது கண்ணின் காந்தப் புலனறிவு இந்த பூமியில் படர்ந்திருக்கும் சக்திகளை பரவி இருப்பதை நமக்கு முன் குவித்து ஆன்மாவாக்குகிறது.

அதிலிருந்து சுவாசித்து உயிரிலிருக்கும் காந்தப் புலனில் பட்டபின் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவைக் கொடுத்து… அந்த உணர்வினை வளர்க்கவும்… அதை இயக்கவும் செய்கின்றது.

இயற்கை இவ்வாறு தான் இயக்குகின்றது.

இதைத்தான் குருநாதர்
1.உன்னை நீ அறிந்து பார்…! நீ இயக்குகின்றாயா…? நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா…?
2.எதை எண்ணி நீ நுகர்கின்றாயோ அதன் உணர்வு தான் உன்னை இயக்குகின்றது.
3.ஆகவே நீ எதை நுகர வேண்டும்…?

சந்தர்ப்பத்திலே பகைமையான உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் தாக்குகின்றது. உடலிலிருக்கும் நல்ல அணுக்களைச் சரியாக இயக்க விடுவதில்லை.

தீமையான அணுக்கள் உருவாகி விட்டால் இதனுடைய பெருக்கம் அதிகமாகும் பொழுது நல்ல அணுக்கள் சுருக்கம் அடைகின்றது. நல்ல அணுக்கள் குறையப்படும் பொழுது தீய அணுக்கள் வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்றால் அதனுடைய செயலாக்கங்கள் எதுவோ அதனுடைய அமிலங்கள் உடலில் படரப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட தசையின் பாகங்களைக் கரைத்து விடுகின்றது.

அப்படிக் கரைந்து விட்டால் அதனால் உடல் உறுப்புகள் எப்படிக் குறைகின்றது…? அந்த உணர்ச்சிகள் வரும் பொழுது
1.வேதனை என்ற சோக ஒலிகளைக் அலைகளை கேட்டால்
2.அந்த அதிர்வே நமக்குள்ளாகி… அதன் உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்த அணுக்களை அதிகமாக வளர்த்து விட்டால் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்தி விடுகிறது. மனிதனைச் சீர்குலையைச் செய்து உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.

அத்தகைய தீமைகளை மாற்றுவதற்குத் தான் உன்னை நான் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தேன். இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள…!

அதிலிருந்து மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். அதிலே தோல்வி அடைந்தவரும் பலர்.

1.ஆனாலும் அதிலே முழுமை பெற்று விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்கே உனக்குள் இந்த உண்மைகளை உணர்த்துகின்றேன்
2.எல்லாரையும் நீ அதைப் பெறச் செய்…! என்றார் குருநாதர்.

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

 

நாம் இன்று எவ்வாறு கோயிலுக்கோ ஞானியரையோ தேடிச் செல்கின்றோமோ… அதைப் போல ஞானியர் ஒவ்வொருவரும் சாதாரண மக்களைத் தேடி வருகின்றனர்.

அவர்கள் அவ்வாறு வருவதனுடைய உட்போருளே…
1.ஒரு மனிதன் எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ அந்தத் துன்பத்தை நீக்கி
2.அந்தத் துன்பத்தை உருவாக்கிய அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை விலக்கச் செய்து
3.ஆற்றல்மிக்க உள் உணர்விலே தோன்றிய நல்ல உணர்வின் அணுவின் ஆற்றலை அவர்களிடம் உருவாக்கச் செய்வதற்குத்தான்.

உதாரணமாக… கருணைக் கிழங்கு விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.

அதைப் போன்று அரிசி உருவாவதற்கு அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும் அதே ஆற்றல் உடலுக்குள் சென்று விட்டால் தீயதை விளைவிக்கும்.

கடுமையான அந்தச் சுவாசத்தைச் சுவாசித்தாலும் நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.

நெல்லின் உமியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ அதைப் போன்று அந்த மகரிஷிகள்
1.விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய “இயக்கும்…”
2.அந்த உணர்வின் ஆற்றலைச் சுவாசிப்பதற்குத்தான் அவர்கள் பெற்று
3.அவர்கள் பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை மனிதன் உடலிலே செலுத்தி
4.அங்கே துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.

ஏனென்றால் அந்த உடலுக்குள் தான் துன்புறுத்தும் உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை அதை நீக்குவதற்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியினை
1.யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே
2.அந்தச் சுவாசத்தைப் பாய்ச்சி உணரச் செய்தார்கள்.

அங்கே இருக்கக்கூடிய துன்பத்தின் உணர்வலைகளை நெல்லின் உமியை நீக்கி அரிசியை எடுப்பது போன்று
1.மனித உடலுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்தத் துன்பத்தை நீக்கி (உமியை நீக்குவது போன்று)
2.நல்ல வித்தான சத்தை அங்கே உருவாக்கினார்கள் மகரிஷிகள்.

உதாரணமாக… தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன் அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை மற்ற மட்டமான சரக்குகள் எல்லாம் ஆவியாக மாறுகின்றது.

அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு
1.ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சுவாசத்திலே
2.”இவர்கள் பெற்ற ஆற்றலைச் செலுத்தி…” அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.

அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து… அந்த உடலிலிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து தன் உடலிலே ஆற்றல் மிக்க சக்திகளாகப் பெற்றார்கள்.

ஆகவே…
1.அந்த மகரிஷிகளைப் போன்றே நாமும் விஷத்தை அடக்கி அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி… அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

 

ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…” என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.

ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும் சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின் அவனையும் தொலைக்கிறது.

அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல் இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.

இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.

1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள் வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.

அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?

அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்… அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.

இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.

பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”

இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின் ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம் நடக்கின்றோம்.

அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”

நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று கீதை சொல்வதன் உட்கருத்து

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று கீதை சொல்வதன் உட்கருத்து

 

உதாரணமாக ஒருவன் நம்மைக் கெடுத்து விடுவேன் என்று சொன்னால் அவன் சொல்லை நாம் அதைப் பதிவு செய்து கொள்கிறோம்.

பதிவு செய்து கொண்ட பின்… “என்னை இப்படிப் பேசினானே… பேசினானே…” என்று அவனின் நிலையைக் கூர்மையாக எண்ணி அவனின் நிலையை நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றோம்.

“நாம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்…” என்று அவன் எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து அதே வினையாகச் சேர்த்த பின்… நமக்குள் துன்புறும் உணர்வுகள் விளைகின்றன.

அவன் எண்ணியபடி நம் மனம் மாறுகின்றது. அதன் வழி நமக்குள் வரும் பொழுது
1.“இவன் என்னை இவ்வாறு சொன்னான்… சொன்னான்…” என்று அவன் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
2.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தபின்
3.“கெட்டுப் போக வேண்டும்…” என்று அவன் சொன்ன உணர்வுகள் நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளைக் கெடச் செய்து
4.”அவன் நிலைக்கு நாம் ஆளாகின்றோம்…”

நாம் இந்த உடல் நலிந்த பின் இறக்கப்படும் போது அவனுடைய நினைவுகள் வந்து… கண்ணன் காட்டிய வழி கொண்டு அவன் செய்த தீயதை நாம் மீண்டும் எண்ணும்போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…”

அவன் தீயதை விளைவித்ததின் தன்மையை நீங்காது அவனின் நினைவு கொண்டு நாம் வருவோமென்றால் அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து
1.அவன் சொன்ன சிரமங்கள் நமக்குள் விளைந்து
2.இந்த உடல் நலிந்து அவன் நினைவு கூடுகிறது.

அவன் நினைவு கூடிய பின்பு இந்த உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அவன் யாரைச் சொன்னானோ அங்கே பழி தீர்க்கும் உணர்வுடன் சென்று… இதே உணர்வு அங்கே விளைந்து… அவனையும் வீழ்த்தி விடும்.

ஆகவே கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று சொல்வது. இதுவும் கூர்மை அவதாரம்தான்.

அவன் செய்த தீய உணர்வின் நிலையை நாம் கூர்மையாக எண்ணி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவனின் உணர்வு நமக்குள் வலுப்பெற்று… அதனின் உணர்வு நமக்குள் ஓங்கி வளர்ந்து…
1.இந்த உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அவனின் மணம் கொண்ட ஈர்ப்பு வட்டத்துக்குள் சிக்கி
2.அவனின் பழி தீர்க்கும் உணர்வை அவனுடைய உடலில் விளைவித்து அவனையும் வீழ்த்தும்.

இதைத்தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” என்று சொல்கின்றோம்.

திரும்பத் திரும்ப எண்ணிய உணர்வின் தன்மை சிவமானாலும் சிவத்திற்குள் சக்தியாக இயங்கி எதனின் மணமோ அதனின் நிலைகள் கொண்டு மீண்டும் இயங்கி “மீண்டும் மீண்டும் தனக்குள் எதனைச் சேர்க்கின்றோமோ…” அதனின் நிலைகள் கொண்டு மாறிக் கொண்டேயிருக்கும்.

அதைத்தான் கீதையில் “எதை நீ நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று எடுத்துரைக்கப்பட்டது.

மற்ற உயிரினங்கள் தன்னைக் காத்திடத் தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைகள் கொண்டு அதனின் உணர்வை நுகர்ந்து பரிணாம வளர்ச்சியை அடைந்து எதனையும் காத்திடும் உடலாகப் பெற்றது.

அவ்வாறு பரிணாம வளர்ச்சி அடையச் செய்து மனிதனான நிலையில் தன் உயிரின் துணை கொண்டு தீமையை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக நின்று என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மெய் ஞானிகள்.

இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்திட… அது நமக்குள் நிலைத்திடாது தடுத்திட… கீதையிலே கண்ணன் காட்டிய அருள் நெறி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நம்முள் உட்செலுத்தி இந்தத் தீமைகளைத் துடைக்க எண்ணினால் தீமைகள் நமக்குள் வராது.

1.நாம் எண்ணிய அந்தக் கூர்மையின் நிலைகள்
2.இந்த வாழ்க்கையிலே தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் ஓங்கி வளர்ந்து
3.அந்த அருள் ஞானியின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் வலுப்பெறுகின்றது.

அவ்வாறு அந்த ஞானிகளின் உணர்வுகள் வலுப் பெற்றுப் பிறருடைய உணர்வுகள் தம்மை இயக்காமல் தடைப்படுத்தும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

 

கேள்வி:-

வான்மீகி மாமகரிஷி உணர்த்திய ராமாயணத்தில், தசரத சக்கரவர்த்தி, கைகேயியின் குறுகிய எண்ணங்களால், இராமன் காட்டிற்கு சென்ற நிலையும், இந்த பிரிவின் நிலையைத் தாங்காது, தசரத சக்கரவர்த்தி இறந்த நிலையை காண்பிக்கின்றார்.

நமது ஞானகுரு உணர்த்திய அருள் வழியில், பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உடலை ஆளும் இந்த உயிரின் நிலை “தசரத சக்கரவர்த்தி” பத்தாவது நிலையை அடையக்கூடியது.

இந்த உடலுக்குள், எண்ணத்தின் நிலைகளை பிரதானமாக வைத்து வான்மீகி மகரிஷி உணர்த்தி, இந்த மனித உடலின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என அருளியுள்ளார்.

இதில் தசரத சக்கரவர்த்தியின் செயலாக்கங்கள் இறந்த நிலையாகக் காண்பிக்கின்றார்கள். இதற்கு விளக்கம் வேண்டும்.

பதில்:-

எந்த ஒரு ஞானியாக இருந்தாலும் அவரவர்கள் கண்ட பேருண்மைகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைக்கொப்பத் தான் வெளிப்படுத்துவார்கள். வான்மீகியும் அப்படித்தான் “உயிரை அரசனாக வைத்துக் காட்டியுள்ளார்…”

நமது ஞானகுரு அதை நமக்கு வெளிப்படுத்திய விதம்
1.இன்றைய காலகட்டத்திற்கொப்ப… அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து
2.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்படியான விளக்கத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்.

தசரதன் இறக்கின்றான் என்றால் இங்கே உயிர் இறக்கவில்லை. அதாவது
1.உயிரில் இருள் சூழ்கிறது… நஞ்சு சூழ்கிறது…
2.”உயிரான்மா நஞ்சாகிறது…” என்று தான் பொருள்.

சிறுகச் சிறுகப் பரிணாம வளர்ச்சி அடைந்து நஞ்சைக் குறைத்து மனிதனாக உருவாக்கிய நிலையில்… மனித சிந்தனை இழப்பதைத் தான் அவ்வாறு காட்டப்பட்டது.

மகாபாரத்திற்கும் இராமாயணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

அங்கே “சகுனி” சூழ்ச்சி செய்கிறான்… பஞ்ச பாண்டவர்களும் (கடைசியில் திரௌபதையும் – உயிரின் உணர்ச்சிகள் நஞ்சாகிறது) அதிலே சிக்கி விடுகிறார்கள்.

இங்கே “கூனி” சூழ்ச்சி செய்து கைகேயி மூலமாக உயிரின் உணர்வுகள் நஞ்சாகிறது.

அங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள்… பின் போர் நடக்கிறது.

இங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். பின் போர் நடக்கிறது.

1.இந்த உடல் தான் காடு.
2.உயிரான்மாவை நஞ்சிலிருந்து மீட்கும் நிலை தான் போர்.

போர் முடிந்து வந்தாலும் ராமனும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சீதாவைப் பிரிகின்றான்.

அங்கே மகாபாரதத்தில் பாணடவர் பிள்ளைகள் அனைத்தும் மடிகின்றனர். கடைசியில்… தர்மன் மட்டும் எஞ்சியதாகக் காட்டி…
1.சுவாசத்திற்கு மோட்சம் கேட்டு (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)
2.அதன் பின் விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இங்கே சீதா (உடல்) மண்ணுக்குள் செல்கிறது, ஆனால் அதிலே உருவானதை
1.லவா குசா என்று (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி) அதைக் காட்டி…
2.அவர்கள் மூலமாக உயிருடன் ஒன்றி விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இரண்டிலுமே… மனித வாழ்க்கையில் வந்த “நஞ்சை வென்று உணர்வை ஒளியாக்கும் சூட்சமம் தான்…” காட்டப்பட்டுள்ளது.

இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குளவியால் தாக்கப்படும் புழு… “(புழுவின் உயிர்)”
1.அடைபட்ட இடத்திலிருந்தே (உடல் – காடு) குளவியின் உணர்வைச் சுவாசித்து (நஞ்சாகி)
2.புழுவின் உயிரான்மா குளவியின் உயிரான்மாவாக “வளர்ச்சி” அடைகிறது.

அதே போல் மனித வாழ்க்கையில் பிறரை வீழ்த்த வேண்டும் (கைகேயி) என்று வீழ்த்திய அந்த உணர்வு தன்னை வீழ்த்திடும் நஞ்சாக மாறுகிறது.

அதிலிருந்து உயிரான்மாவை மீட்ட “ஒளியான உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்…” என்பது தான் காவியத் தொகுப்பின் உள் கருத்து.

1.தசரதன் இறக்கிறான் என்றால் உயிரான்மா நஞ்சாகிறது – அமாவாசை (மீண்டும் பூமிக்குள் உடல் பெறும் நிலை)
2.அதுவே… ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது – அது பௌர்ணமி (பிறவா நிலை)

அதாவது… சீதா (ஒளியான உணர்வுகள் – நாம் தியானத்தின் மூலம் இப்பொழுது எடுப்பது) விஷ்ணுவுடன் (உயிர்) இணைந்து ஒளிச் சரீரம் பெறுவது.

விண்ணிலே உதித்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… மனித உடலில் முழுமை பெற்று முதிர்ச்சி பெறுவது தான் “படைப்பின் வளர்ச்சி…”

1.அதனுடைய பருவங்களைத் தான் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டு… நிகழ்ச்சிகளாக விவரித்து
2.பின் வளர்ச்சி அடைய வேண்டிய “சரியான பாதையைக் காட்டி…” தான் அந்த வழியில் பயணம் செய்து
3.பிறவா நிலை என்ற எல்லையை அடைவதாக… முழுமை பெறுவதைக் காட்டினார்கள் ஞானிகள்.

கேள்விக்குண்டான பதிலின் மொத்தச் சுருக்கம்:-

1.புழுவாகிய நான் வீழ்கிறது – குளவியான நான் வளர்கிறது… அது போல்
2.மனிதனான நான் (தசரதன்) வீழ்கிறது – ஒளியான நான் வளர்கிறது.