
எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!
ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் “எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…” அந்தச் சொல் வரும்… தனித்து வராது… அதனுடைய சுருதிகள் அப்படி…!
ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள்… இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.
உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும்… எதிர்மறையாகும்.
இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.
இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.
ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.
புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் இங்கே படரும்… நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே “எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”
வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.
விண்ணின் பற்றைக் கொண்டு நாம் அந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.
மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும்… கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்… செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும்… இரண்டும் கலவையாகும்… அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!
சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.
நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோபமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.
சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.