“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

 

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமல் அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த விஷத் தன்மைகள் நம் சிறுநீரகத்தைச் சீராக இயக்க விடுவதில்லை.

இரத்தத்தில் கலந்து வரும் அந்த அசுத்தத்தின் தன்மைகளை… அது நீக்கும் சக்தி இழந்து விடுகிறது. இந்த விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
1.காரணம் உப்புச் சத்து என்ற நிலைகள் அதிலே உருவாகிவிடுகின்றது.
2.உப்பை வைத்தால் எப்படி ஒரு பசபசப்பாகக் கசிகின்றதோ அதைப் போல் நுரையீரல் கல்லீரலில் கசிவுகள் அதிகமாகி விடுகின்றது
3.அதனால் அடிக்கடி வாந்தி என்ற நிலையும் வருகின்றது.
4.அதே போல் சர்க்கரையை நீக்கும் உடலிலே அதைச் சமப்படுத்தும் சக்தி இழந்து விட்டால் அதுவும் இணைந்துவிடும்.
5.இத்தகைய நிலைகள் ஏற்பட்டால் “உணர்வின் உந்துவிசை அதிகமாகி விடும்…: இரத்தக் கொதிப்பும் இதனுடன் கலந்துவிடும்.

இதைப் போன்ற உணர்வு நமக்குள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுக்கும். பின் வேதனை உணர்வு அதிகமாகி… உடலில் இதே உணர்வு கொண்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறச் செய்ததைச் சீராகப் பயன்படுத்தி… உங்கள் உடலில் எத்தகைய நோய் இருப்பினும் யாம் சொல்லும் முறைப்படி தியானித்து,,, உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீக்க முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது
2.அதே எண்ணத்தால் அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கிவிட்டு… கண்களை மூடி அந்த அருள் சக்திகள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.சிறுநீரகத்தில் குறை இருந்தால் அந்தப் பாகத்தில் நினைவைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்பிலே படரப்பட்டு நஞ்சினை நீக்கி…
3.என உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று உங்கள் உடலில் வாத நோயோ கீழ்வாதமோ முடக்கு வாதமோ சர்க்கரைச் சத்தோ ஆஸ்த்மாவோ அந்தந்த நோய்கள் நீங்கி நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

உங்கள் எண்ணத்தை இவ்வாறு செலுத்தினால் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படர்ந்து டிபி.யிலிருந்து கேன்சர் வரையிலும் நீக்கும்.

“கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வது போல் உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதை உடலுக்குள் செலுத்தி உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் இவ்வாறு செலுத்தச் சொல்வதன் நோக்கம் என்ன…?

நண்பன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்… இரண்டு பேரும் சண்டையிட்டு அவனை நினைத்து “இப்படிச் செய்தானே பாவி” என்று எண்ணினால்… கண்களால் செலுத்தப்படும் போது உடனே அங்கே புரையோடித் தீமையின் செயலாக இயக்குகிறது.

அதே சமயத்தில்… “தக்க நேரத்தில் எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் உடனே விக்கல் பாய்ந்து அங்கே நல்லதாகிறது.

இதைப் போல்
1.நம் உடலுக்குள் கண்களால் பதிவான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.கண்ணால் நுகர்ந்தறிந்த அந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்ததை
3.கண்ணின் நினைவை அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த உணர்வின் சக்தியை உடலுக்குள் பரப்பி
4.நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று எளிதில் இணைத்து… அதைப் பெறச் செய்ய முடியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த தீமைகள் கருவாகி அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சியைத் தூண்டி தன் இனத்தைப் பெருக்கும்.

இவ்வாறு அதன் இனத்தைப் பெருக்கும் அந்தச் சக்தியைக் குறைக்கத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உடலுக்குள் செலுத்தி அதை வளர்த்துக் கொண்டே வாருங்கள் என்று சொல்கிறோம்.

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட
2.எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

 

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்… அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்…?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்… நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.

எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.

பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.

இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.

உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.

பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது…. அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.

ஆனால் பூனை என்ன செய்யும்…?

1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது… பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.

பூனை இதே மாதிரி தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.

இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு… அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.

ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்… சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.

நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்…? என்று தான் கேட்போம்.

காரணம்… அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்…” என்று காட்டுகின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வரும் பேரருள் பேரோளியைக் கவர்ந்து உயிரிலே அதை மோதச் செய்ய வேண்டும். அந்த உணர்வு நம்மை இயக்கும்படி செய்ய வேண்டும்.

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

 

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.

அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.

உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.

எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.

கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.

சுழி முனை

சுழி முனை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து இழுக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகவும் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரம் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் திக்..திக்.. என்று அடிக்கும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “என்ன செய்வான் அவன் பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய உணர்வுகள் உயிரிலே பட்டு
1.எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றிச் சொன்னாலும்… மாங்காயை இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்த சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

 

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

 

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

 

நாம் தியானம் இருக்கும் போது
1.சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட
2.அது திசை மாறிச் சென்று விடும்.

இது எதனால் ஏற்படுகின்றது…?

நாம் இதற்கு முன் நம் உடலில் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது அதற்கு அந்த உணவு தேவை.

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணினால்…
1.அது தனக்காக வேண்டி… எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.

எதனதன் வழிகளில் சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ எதன் மேல் பட்டோமோ அந்த உணர்வுகள் தான் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் அதனதன் உணர்வை எடுத்து வளரும்.

ஆக அதைத் தடுப்பதற்கு… உடனே கண்களைத் திறந்து நாம் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலிலிருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கட்டாயப்படுத்தி உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்குச் செலுத்தி
2.சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இதன் வழி புகாதபடி அடைத்து உயிர் வழி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வது தான் இந்தப் பயிற்சி. அதாவது
1.நம் நெஞ்சுக்கு முன் இருக்கும் ஆன்மா வழியாக வராதபடி தடுத்து (மூக்கு வழி சுவாசம்)
2.புருவ மத்தி வழி கண்ணினின் நினைவு கொண்டு இழுக்கின்றோம்

ஏனென்றால் நம் உடலில் எத்தனையோ விதமான தீய அணுக்கள் இருப்பதால் அதனுடைய உணர்வுக்கு அதனுடைய வலுவைக் காட்டத்தான் செய்யும்.

அதை நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

இரத்தத்தின் வழி சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது.

ஆக கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

உதாரணமாக…
1.நாம் தவறு செய்தவனை கண்ணின் நினைவு கொண்டுதான் எண்ணுகின்றோம்
2.எண்ணியவுடன் அந்த “நிழல் படம்” (தவறு செய்தவன் முகம்) எவ்வாறு தெரிய வருகின்றதோ
3.அந்த நேரம் அவனைப் பற்றிய உணர்ச்சிகளும் பல விதமான வெறுப்புகளும் எப்படித் தோன்றுகிறதோ அதே போன்று…
4.நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் கண்களால் உற்றுப் பார்த்தது தான் நம் உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்தது. அதே மாதிரி
1.இந்தக் கண்ணின் வழி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கு
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று உள் முகமாகச் செலுத்தினால் அதனுடைய உணர்வுகளை எடுத்து நாம் நுகர்ந்து
3.”இரத்தங்களிலே ஈர்க்கும் சக்தி பெருகி” உடலில் உள்ள தீய அணுக்களை எல்லாம் நல்லதாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது நினைவுகள் எங்கெங்கோ அலைக்கழிக்கின்றது எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

இதன் உணர்வை மாற்றி மாற்றி மாற்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் இரத்தத்தின் வழி செலுத்திப் பழக வேண்டும்… அதனின் வலுவைக் கூட்ட வேண்டும்…!