ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

ஆத்மாவின் “விழி நிலையின் ஒளி நிலை”

 

பிறவா வரம் கொண்டு ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை உணர்ந்தீரானால் உயர்வு கொண்ட “ஒளி நிலையின் உண்மை புரியும்…”

சகல ஜீவசக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித்தன்மையின் “விழி நிலை” ஜீவராசிகளுக்குத் தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றையத் தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டிருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில்
1.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாய் மாறி மாறி வரும் வளர்ப்பு, அழிவு, வளர்ப்பு என்ற நிலையில்
2.ஒவ்வொன்றின் வார்ப்பு வளர்ப்பில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு
3.உயிரணு தோன்றி ஒவ்வொன்றிலும் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து, அழிந்து சக்தி கொண்டு பல நிலைகளுக்குப் பிறகு
4.ஜீவ சரீரம் பெறும் விழி நிலையாற்றல் ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன
5.இத்தொடர் ஜீவராசிகளில் விழி நிலை ஒளிகாணும் உருவ “எதிர் நிலையை அறியும் ஆற்றல்” வழி வருகின்றது.

பலவில் முதிர்ந்து மனித எண்ண செயல் அங்க அவயவங்களின் ஆற்றல் வளர்ப்புநிலை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் உயிரணு தோன்றி பல வார்ப்பில் மோதுண்டு வளர்ச்சி கொண்டு முற்றிய நிலையில்
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு… விழியின் பாப்பாவில் படம் பிடித்து
2.உணர்வு கொண்ட எண்ணத்தில் அறியும் வாழ்க்கை நிலையிலிருந்து
3.சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவசக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம்தான் உண்டு.

காற்றலையில் இப்பூமி வளர்ப்பில் ஜீவன் பிரிந்த ஆத்ம அலைகள் சுழன்று கொண்டே காற்றலையில் மிதந்து கொண்டே இப்பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் “விழியால் பார்க்கும் நிலை அவ்வாத்மாவிற்கு இல்லை…” சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்… உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அவ்வலையின் உணர்வு இவர்களின்மேல் மோதி அத்தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவகாந்த அலைத்தொடர்பு கிட்டியவுடன் அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர்கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு பார்க்கும் நிலையானது
1.எப்படிப் புகைப்படக் கருவியைக் கொண்டு அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்ப தாள்களை அக்கருவியுடன் பொருத்தி
2.அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்து எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று ஆவி ஆத்மாக்களின் செயல் நிலையுண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலைதான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகை தான் காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக் கண்ணாடியிலோ நீரிலோதான் பார்க்கும் நிலை உண்டு.

ஆத்ம தியான சக்தியைக் கொண்டு ஞான திருஷ்டியால் விழியை மூடிக்கொண்டு ஞானத்தால் பெறும் தியான சக்தியில் ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்… இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித்தொடர் கொண்டு… ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலை காட்சிகளை… எண்ணத்தால் எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித்தன்மை இவ்வாத்ம அலையே பெற்று விட்டால்… ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

இச் சரீரக் கூட்டின் சமைப்பில்…
1.காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக்கூடுகள் பெறும் தன்மை கொண்டுதான்
2.ஆத்மாவின் விழி நிலையின் ஒளி நிலை பெறும் ஆத்ம ஜோதியான ஜோதி நிலை சக்தியினால்
3.ஏகத்தையும் காணும் ஆத்ம நிலையின் ஜோதி நிலை கொண்டு
4.நம் வளர்ப்பின் தொடருக்கு வழிகாட்டிய ரிஷி சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
5.அவர்களின் வளர்ப்பின் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு நாம் உருவாக்க வேண்டிய “அருள் வட்டம்”ஆ

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு நாம் உருவாக்க வேண்டிய “அருள் வட்டம்”

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அகஸ்தியன் தன்னுடைய வாழ்நாளில் எப்படிப் பல தீமைகளை நீக்கினானோ அந்த இயக்க அணுவை சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து வைத்திருக்கின்றது.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) அந்தப் பவரைக் கொடுத்து அதை எடுத்துக் காண்பித்தார்…
2.அந்த வித்தினை ஊன்றினார்… அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்… அதை நான் எடுத்து வளர்த்துக் கொண்டேன்.

அதே போன்ற சந்தர்ப்பத்தைத் தான் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் பொழுது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கின்றேன்.
1.ஆனால் உங்களுக்கு அதைப் பெற வேண்டும் என்ற ஆசை வேண்டும்.
2.தீமைகளை நீக்கக்கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அந்த அருளைப் பெற வேண்டும்… இருளை நீக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தால் “அது நல்ல பலனைத் தரும்…”

ஆசையை வேறு எங்கேயோ வைத்துக் கொண்டு உடலுக்கும் தலைவலிக்கும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்… அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.

நாம் அந்த அருளைப் பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம்
1.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை இயக்கக்கூடிய அணுக்களுக்கும்
2.குறி வைத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும்படி செய்கின்றேன்.

நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் காற்றில் இருப்பதை இழுத்துச் சுவாசித்து எல்லா அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் தன்னாலே அந்த அணுக்கள் அந்தச் சக்தியை ஈர்க்கத் தொடங்கும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுப்பது.

காற்று மண்டலம் இன்று மிகவும் விஷத்தன்மையாகப் போய்விட்டது. பிறிதொருவரை பார்த்து அவர் தவறு செய்கிறார் என்று நுகர்ந்தாலும் அடுத்தடுத்து “அவர் தவறு செய்பவர்” என்று வரக்கூடிய எண்ணத்தை அந்த இடத்திலேயே மாற்றிட
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதை நேராகக் குறி வைத்து
2.உள்ளே பதிவாக்கும் இடத்திலேயே கொண்டு போய் மாற்றி விட வேண்டும்.
3.அப்போது இணைக்கப்படும் பொழுது அந்தச் சிறு புள்ளிகளில் இந்த வட்டங்கள் மாறும்.
4.ஒவ்வொன்றாக கூடிக் கூடி அந்தக் கேட்டதை நல்லதாக மாற்றிக் கொண்டே வரும்.

அந்த நிலை உங்களுக்குள் ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் செய்வது.

இப்பொழுது பேசிக் கொண்டே இருக்கப்படும் பொழுது உங்களுக்குள் பதிவாகி… “ரெக்கார்ட்” ஆகிக்கொண்டே இருக்க்கும்… “பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால்…!”

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

ஒரு வேதனைப்படுபவரை எண்ணும் பொழுது அது நமக்குள்ளும் உருவாகின்றது. திருப்பி எண்ணும் போது அதே வேதனை மீண்டும் வருகின்றது.

இது எல்லாமே சந்தர்ப்பம் தான்…!

ஆனால் இப்பொழுது வேதனைகளை எல்லாம் நீக்கிடும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தியானத்தின் மூலம் உருவாக்கிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் ஆற்றலும் உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறச் செய்வதற்கும் இதை உபதேசிக்கின்றேன்.

எம்மைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிய பிற்பாடு
1.மீண்டும் எண்ணினால் உங்கள் கண்கள் ஆண்டென்னாவாக மாறுகின்றது.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தினை உங்களுக்குள் பதிவாக்கினேனோ
3.காற்றிலிருந்து அதைப் பிரித்துச் சுவாசித்து உங்களுக்குள் ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.

நீங்கள் “எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட” அதை மாற்றிவிடும்… செய்து பாருங்கள்.

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

 

உதாரணமாக புழுவிற்குக் கண்ணில்லாத போது… அது தன் எண்ணங்கள் கொண்டு ஊர்ந்து சென்றாலும்… உணவுக்காக ஆசைப்பட்டுத் தேடிச் சென்றாலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் சிக்கும் பொழுதெல்லாம்…
1.தான் படும் வேதனைகளைத் தாங்காது
2.எது தன்னைத் தாக்குகின்றதோ அதைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றித் தோன்றி… அடுத்த உடல் பெறும் பொழுது “பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருப்பெறுகின்றது…”

முதலிலே எண்ணங்கள் தான் உருவானது. எண்ணத்தின் துணை கொண்டு பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஒவ்வொரு உயிரினமும் (தன் எதிரிகள்) தன்னைத் தாக்கப்படும் பொழுது அந்தச் சரீரத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை உந்தி உந்தி… பல சரீரங்களில் அதை எடுக்கின்றது.

1.அதாவது இரண்டு நாட்களுக்கு அந்த உடலில் உயிர் இருக்கும் அடுத்த நாள் மடிந்துவிடும் ஆரம்ப நிலைகளில்
2.இப்படி நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வளர்ந்து வளர்ந்து
3.கண்களாக உடலில் உருப்பெறும் தன்மை வருகின்றது,

ஆதே சமயத்தில் ஒளி வீசி (வெயில்) மற்ற பொருளைக் காட்டும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே இருக்கின்றது. புழுவின் உயிரின் துடிப்போ… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.மணத்தால் அறிந்தாலும் தன் உணர்வால் அறிய வேண்டும்
2.பார்வையால் பார்க்க வேண்டும் என்று உணர்வுகள் தோன்றுகின்றது (தோற்றுவிக்கின்றது).

இப்படித் தோன்றிய நிலைகள் தான் கண்களாக உருவாகிறது. இதைத் தான் துவாரகா யுகத்தில் நாரயணன்… “சூரியன் கண்ணனாகத் தோன்றுகின்றான்…” என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சூரியனின் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்குள் ஒளிக் கதிராகக் கண்கள் காணும் நிலை வருகிறது. அதாவது
1.சூரியனிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் பொழுது
2.அது மற்றொன்றுடன் மோதி ஒலியின் ஒளிக் கதிர்களாக எப்படி ஆகின்றதோ
3.இதைப் போன்ற நிலைகள் அங்கே பெறுகின்றது.

இந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் தன் உடலில் பெற்ற பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் கண்களாக உருவாகி
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அங்கே தாக்கப்படும் பொழுது
2.எதனின் உணர்வோ அந்த ரூபத்தினை அறியும் வல்லமை பெறுகின்றது – “கண்களுக்கு அந்த ஆற்றல்…”

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கிறார்… நாம் அவரைப் பார்க்கிறோம் என்றால் அதைப் பார்த்த பின் உணர்வுகள் மோதுண்டு உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது
1.அப்போது நமக்கு கோபம் வருகிறது…
2.கோபம் வந்த பின் இருள் சூழ்கிறது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகிறது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சி அந்த உணர்வுகள் கண்ணின் வழி வெளிப்படும் பொழுது
1.அதிலே வரும் அலைகள் மோதி குறித்த தூரத்தில்
2.கண்ணின் உணர்வலைகள் விசை உந்துதலின் தன்மை எவ்வளவு ஏற்படுகிறதோ
3.அந்த வட்டத்திற்கு ஒளியாகத் தெரியும்.
4.(மனிதனுக்கு இது போன்று தெரிவதில்லை)

இரவிலே பாம்பு பூச்சிகள் தேள் மற்ற மிருகங்களுக்கும் கண் பார்வையால் மோதுண்டு அதன் ஒளிகள் அதற்குத் தெரியும் மனிதனுக்குத் தெரிவதில்லை காரணம்…
1.மனித உடலில் விஷத்தின் தன்மை வடிகட்டப்பட்டுக் குறைத்து விட்டதனால்
2.மோதலால் ஏற்படும் ஒளித்தன்மை நமக்குள் இழக்கப்படுகிறது.

அதே சமயத்தில்… பிறர் படும் உணர்வின் தன்மை நமக்குள் மோதப்படும் பொழுது… உணர்ச்சிகள் எழுந்து அறியும் தன்மையாக… அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.அவன் என்ன செய்கின்றான்…?
2.குற்றம் செய்கின்றான்… அல்லது குற்றமற்றதாக இருக்கின்றது… என்ற உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகிறது.

ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்…!

பல கோடிச் சரீரங்களில் தான் கூர்மையாகப் பார்த்துத் தன் எதிரிடமிருந்து தப்பித்துக் கொள்ள… எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து… சுவாசித்து… தான் எதை எதை எல்லாம் கூர்மையாகப் பார்த்ததோ அதனின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து… இப்படித் தீமைகளை அகற்றிடும் உடல அமைப்பினை உயிர் உருவாக்குகிறது.

அதாவது தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் உருபெற்று அதற்குண்டான உறுப்புகள் உருவாகி மனிதனாக உருவாக்குகிறது… பரசுராம்…! இயற்கை நிலைகள் எது விளைந்தாலும் அதனைச் சமப்படுத்தி உணவாக உட்கொள்ளும் நிலை பெறுகின்றோம்.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரை இந்த உயிர்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள மரண பயங்களை ஏகி
2.அந்த மரண பயத்தால் நான் நுகர்ந்த உணர்வுகள் வலுவாகி
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடல் மடிந்தாலும்
4.வலுவான உணர்வுகளைச் சேர்த்து… பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக இன்று வந்துள்ளோம்.

மனிதனான பின் பல தீமைகளை அறிந்தாலும் பலராம்…! எல்லாவற்றையும் அறியக்கூடிய ஆற்றல் பெறுகின்றோம்.

அதாவது சமப்படுத்தும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது தீங்கு செய்கிறான் என்றால் அதை நுகர்ந்த பின்
1.அந்த தீங்கு தனக்குள் வராதபடி சமப்படுத்த முடிகின்றது…
2.கண்டிப்பாகச் சமப்படுத்த வேண்டும்… அதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும்.

இது சாத்தியமே…!

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது “வெறுமனே சொல்வதல்ல…”
1.ஓ…ம் என்பது நமது உயிர் உடலுக்குள் என்று இயங்கிக் கொண்டுள்ளது. அதற்குப் பெயர் ஓ…!
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ம்… என்று நம் உடலுடன் ஐக்கியமாகின்றது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை
1.உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட்
2.அதற்குள் இருக்கும் ஊன் ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்தக் குணங்களும் நம் உடலிலேயே இயக்கப்பட்டு அது ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருப்பது நமது உயிர். அதற்கு குருவாக இருப்பதும் நமது உயிர் தான்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும் அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி அந்த ஏக்க உணர்வு கொண்டே சொல்ல வேண்டும்.

ஒரு மைக்… நாம் பேசுவதை இழுத்துக் கவர்ந்து நாடாக்களில் பதிவாக்கப்படும் பொழுது
1.அதில் உள்ள முலாம்…
2.அதற்குள் மறைந்துள்ள காந்தம் எப்படி அது கவர்ந்து பதிவு செய்து கொள்கின்றதோ அதே போல
3.நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளிலிருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயத்தில் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அது கிளர்ந்து எழுகின்றது. அப்பொழுது காற்றிலிருந்து அந்த உணர்வுகளை உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது.

அப்படித் தனது ஆன்மாவாக ஆக வேண்டுமென்றால்…
1.நாம் எண்ணும் எண்ணம் ஊழ்வினையாகப் பதிவாக வேண்டும்
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊனாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டியது வரும்.

நாம் எண்ணிய உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசித்த உணர்வுக்கொப்ப உயிரின் தன்மை அது இயங்குகின்றது. அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

இப்பொழுது எதை உபதேசிக்கின்றேனோ… கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ்வினையாக… வித்தாகப் பதிவாகின்றது. அப்படிப் பதிவாகி மீண்டும் நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

எந்த மகரிஷிகளின் சக்திகளையோ அல்லது சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல் மிக்க உணர்வலைகளையோ…
1.குருநாதர் கூறிய அருள் வழிப்படி நான் எண்ணிச் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாக எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் நான் நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணின் ஆற்றலை எனக்குள் பெருக்கி அதைச் சுவாசித்து
4.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக வெளிப்படுத்துவதை இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால்
5.அந்த உணர்வின் சத்து ஊழ்வினையாக உங்களுக்குள்ளும் பதிவாகிறது.

அந்த ஞானிகள் மனிதர்களாக இங்கே வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குள் அறியாது வந்த தீய வினைகளை… சில தீய விளைவுகளை… அவர்கள் மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

அவர்கள் எப்படி அருள் வழியில் வாழ்ந்தார்களோ அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும் அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

 

ஆண்டனாக்களின் பவரைக் கூட்டும் பொழுது வெகு தொலைவில் இருக்கும் விண்ணின் ஆற்றலையும் செயற்கைக்கோள் மூலமாக ஈர்க்க முடிகிறது விஞ்ஞான அறிவால். அங்கிருந்து வரும் அலைகளை நாம் கவர்ந்து வீட்டிலே டிவி பெட்டி மூலமாகப் பார்க்கின்றோம்.

அதைப் போன்று… அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்போது யாம் உபதேசிக்கும்போது நீங்கள் அதைக் கூர்ந்து கவனித்தால்
1.உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்வது மட்டுமல்ல.
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
3.அது ஆழமாகப் பதிவான பின் உபதேசித்ததை எண்ணும் பொழுது
4.விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த ஆண்டனாக்களைக் கொண்டு வருவது போன்று
5.உங்கள் கண்களை ஆண்டனாவாக… மிக சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும்.

இப்பொழுது இதைக் கேட்டுணரும் பொழுது கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் யாம் சொல்வதை
1.உங்கள் கண் ஈர்த்து உங்களுக்குள் முதலிலே ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
2.அதே சமயம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளுக்கு…
3.திரைகளுக்கு அனுப்பும் அந்த ஒவ்வொரு நுண்ணிய அலைகளிலும் “சக்தி வாய்ந்ததாக” இது சேர்கின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் “ஆண்டனா பவர்” (சக்திவாய்ந்த) போல அதைக் கவர்ந்து… உங்களைச் சுவாசிக்கச் செய்து… உங்கள் உடலுக்குள் சென்று தீமையான நிலைகளை நீக்கிட இது உதவும்.

தீமைகளை நீக்கி… அந்த அருள் சக்திகளை வலுகொண்டதாக மாற்றுவதற்கு… குருநாதர் எனக்கு எவ்வாறு அருள் உணர்வுகளைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று அதைப் பெறச் செய்கின்றோம்

அதன் பின்பு… தீமை நீங்கிய உணர்வை நீங்கள் பேசப்படும் போது உங்கள் மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்த அலைகளாகப் பரவச் செய்கிறது.

1.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
2.மற்றவர்கள்… அவரின் உணர்வுகள் அறியாது சென்றாலும்
3.”உங்களுடைய மூச்சலைகள்” அவர்களுடைய தீமைகளை நீக்கக்கூடியதாக… மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

அதற்கு இது நிச்சயம் உதவும்.

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

 

உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.

ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.

குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.

அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?

கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.

நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”

1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.

மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.

அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

 

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

 

1.அருள் ஞானிகள் உணர்வுகளை… அருள் ஒளி பெறும் சக்திகளை…
2.துருவ நட்சத்திரம்… சப்தரிஷி மண்டலங்கள்… என்று வரிசைப்படுத்தி யாம் உபதேசிக்கும் போது
3.கூர்ந்து கவனித்தால் உங்கள் நினைவாற்றல் “அங்கேயே” அழைத்துச் செல்கின்றது.

ஒளியாக உருப் பெற்ற அந்த உணர்வின் தன்மையை… அகஸ்தியன் துருவனாகி நஞ்சினை முறித்த உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது அந்தச் சக்தியைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

உதாரணமாக… ஒரு டிவி ஸ்டேஷனை அமைத்தப் பின் எந்தெந்த அலை வரிசைகளில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று
1.அதில் இருக்கக்கூடிய மேக்னட் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.அதனுடைய இணைப்பின் ஆற்றல் வரப்படும் பொழுது ட்ரான்சாக்சன் ஆக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் ஒளி அலைகளை இது மாற்றிய பின் “டிவி ஒரே பெட்டியாக இருப்பினும்…” எங்கிருந்தோ ஒளிபரப்பாகும் அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி எல்லாப் பக்கமும் பரவச் செய்தாலும்…
1.அதே அலைவரிசையில் இந்தப் பெட்டியைத் திருப்பி வைத்து
2.ஆண்டென்னா என்ற ஒரு சாதனத்தை வைக்கப்படும் பொழுது
3.அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி பெட்டிக்குள் ஈர்க்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான் எல்லாவற்றையும் உணர்ந்து நுகர்ந்து இந்த மனித உடலை உருவாக்கிய “கண்” நமது உடலுக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

எந்த உணர்வின் தன்மை ஒளி அலைகளாகத் தாக்கப்படுகின்றதோ… அந்தந்த உணர்வின் தன்மை கண்களில் உந்தப்பட்டு…
1.எது என்று அதை அறியும் ஆற்றலும்
2.நுகர்ந்து உயிருடன் உணர்வின் ஒலிகளைப் பரப்பி
3.அதற்குத்தக்க (அலை வரிசைக்குத்தக்க) குணங்களின் அடிப்படையில் உடலை இயக்கச் செய்கின்றது.

ஆனால் எதனின் உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலைகள் கூடும் பொழுது மனிதனின் உருக்களும் மாறுகின்றது… நினைவுகளும்… செயல்களும் மாறுகின்றது.

மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அலைகளாக மாற்றி வரும் பொழுது அதைக் கூர்ந்து நாம் கவனித்தோம் என்றால்… இதன் வழி நமக்குள் பதிவானது அதன் வழியே தனக்குள் கொண்டு வருகின்றது.

ஆண்டென்னாவாக இருப்பதும்…
1.ஒரு காந்தப்புலனறிவு பிற நிலைகள் இயக்குவதை இணை சேர்த்து ட்ரான்சாக்சன் ஆக இயக்கப்பட்டு
2.இந்த உணர்வின் தன்மை இரண்டும் கலக்கப்பட்டு இங்கே பதிவாக்கும் நிலைகள் கொண்டு (அது பதிவானால்தான்) ஈர்க்கும் சக்தி வருகின்றது.
3.இணைத்து நாடாக்களில் பதிவாக்கவில்லை என்றால் அது பதிவாகாது…. அலைகளை ஈர்க்காது (ஆண்டென்னாவைத் திருப்பி வைப்பது)

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகளை மனிதன் கண்டுணர்ந்து விஞ்ஞான அறிவால் இதை மாற்றுகின்றான்.

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… ஒரு செடியின் சத்தை நுகர்ந்து கொண்டால் அதனின் மணத்தை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உணர்வின் தசைகளாகும் பொழுது (உடலாக) மின் அணுவின் தன்மையை நாம் எந்தத் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோமோ இந்த உணர்வின் எதிர் அலைகளைப் பாய்ச்சும் பொழுது… தாவர இனத்தின் உண்மையின் உணர்வுகளைக் கவர்வதையும் பார்க்கலாம்.

இதெல்லாம் மனிதனுக்குண்டான ஆற்றல்…
1.மனிதனான பின் எதனையும் கவர்ந்து… அதனைப் பதிவாக்கி நுகர்ந்து விடலாம்
2.இதனின் தன்மை கொண்டு… நாம் இனி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.