துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

 

சந்தர்ப்பத்தால்… வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து
உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தியை இவ்வாறு எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி… மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.

சந்தர்ப்பவசத்தால்
1.எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்
2.நம்மை மறந்து… துன்பத்தை மறந்து…
3.நாம் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று தியானத்தின் வழி விண்ணின் ஆற்றலை நாம் பெற முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக் கொள்வோம்.

ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும்
1.ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்து
2.அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.

அதை நம் உடலிலே சேர்த்துக் கொண்டு நமக்குத் துன்பம் வரும் போது “ஈஸ்வரா…” என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று நாம் எண்ணிச் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம்
1.எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி
2.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே
3.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி நாம் விண்ணின் ஆற்றலை
4.மிக ஆற்றல் மிக்க நிலைகளைத் “துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும்…” கிடைக்கலாம்.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ சஞ்சலமோ பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து அந்தத் துன்பங்களை அகற்றிட வேண்டும்.

உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

 

நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியினை அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று எண்ணாதீர்கள்.
1.சாமியிடம் போய் அந்த அருள் ஒளியை வளர்ப்போம்.
2.அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம்.
3.நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும்… பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

நம் உடலில் எவ்வளவு வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும் போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும் அந்தத் தீய விஷ உணர்வுகளையும்
2.வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை “மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்…” அப்போது தான் அடங்கும்.

1.வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு
2.மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அதே போல் அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அவர்கள் வழியிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலைவலியே இன்னும் போகவில்லை. சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நடந்தது…! இன்று “யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்களா?” என்று யாம் அவர்களிடம் கேட்டால்
1.ஆத்ம சுத்தி செய்ய “நேரம் இல்லைங்கே” என்று சொல்வார்கள்.
2.இது போன்று “நேரமில்லை…” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்றால்
3.“சாமியிடம் ஒன்றுமே இல்லை” என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

நமது வாழ்க்கையினுடைய நிலைகள் அவ்வாறு பயனற்றதாகப் போய் விடாதபடி “நாம் மெய் வழி காண்போம்…” என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது.
1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள்
2.பல இரகசியங்கள் இருக்கின்றது.

அனைவரும் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள்.

1.உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள்.
2.இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள்.

நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெற முடியும்.

யாரோ செய்து கொடுக்கிறார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ணாதபடி நாம் இதைப் பெற முடியும். இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும், என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு…
1.அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது ஒவ்வொன்றும் நல்லதாகும்.
2.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
3.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
4.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ… உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் ஒளி அலைகளாக மாறி அது செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் “அந்த உணர்வாக…” நாம் மாற்ற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும் போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக்காற்றும் வருகின்றது. இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக்கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான்.

இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?
1.நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும்.
2.இது தான் கடைசி நிலை.

அத்தகைய தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன். எமது குருநாதர் யாம் அதைப் பெறுவதற்கு எதைச் செய்தாரோ அதைப் போன்று எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறப் போகும்போது… உங்கள் மூச்சலைகளை நீங்கள் சந்திப்போரும் பெற்று அவர்களும் அந்த ஆற்றலைப் பெறலாம்.

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருது… புலி வருது…’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’ சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்…’’

‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

சந்தர்ப்பத்தில்
1.நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும்.
2.‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…”
3.உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி தடுப்பதற்குத் தான்
4.”ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தையே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

‘’ஈஸ்வரா…’’ என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி…‘’ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
1.கண் திறந்து ஒரு நிமிடமும் கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.பின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும்
4.நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லி அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
5.அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடியும்.

நாம் நகை வாங்கியபின் அதை மீண்டும் அடுத்த நகையாகச் செய்யும் போது அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல
1.நாம் கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தை அடுத்த நிமிடமே நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது
2.நமக்குள் தீயது சேராது தடுக்கும் ஆற்றல் மிக்க சக்தியினைப் பெறத் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இது தான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? ‘பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்தச் சக்தி இல்லையேல் அதைச் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்ய வாக்கின் நிலையாக உங்களுக்குக் கடும் ஆயுதமாகக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் எப்பொழுது, கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ நுகர்கின்றீர்களோ கேட்கின்றீர்களோ அவைகள் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் “ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.‘’நாளை நடப்பவை யாவும் நல்லவைகளாக இருக்கவேண்டும்
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படர வேண்டும் என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.

சதுர்த்தி

சதுர்த்தி

 

சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.

1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.

உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.

இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.

நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.

அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.

அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.

1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை நீங்கள் செய்து பழகுங்கள்… தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.

ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.

அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.

ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.

அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.

இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக… நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் நம்மை அறியாமல் புகும் ஜீவான்மாக்கள்

நம் உடலில் நம்மை அறியாமல் புகும் ஜீவான்மாக்கள்

 

பிறிதொருவர் வேதனைப்படுவதை நாம் உற்றுக் கவனிக்கும் பொழுது அவ்வேதனையின் உணர்வுகள் நமக்குள் “ஜீவ அணுக்களாக” விளைகின்றது.

இதன் தொடர்வரிசையில் எதனின் உணர்வை நமக்குள் வலுவாக்கினோமோ இதே நிலை கொண்ட மற்றொருவர் இதே வேதனை கொண்டு இறந்தார் என்றால்
1.அவர் மீது நாம் பற்று கொண்டிருப்போம் என்றால்
2.அவருடைய உயிரான்மா நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இது தான் “ஜீவான்மா” என்பது.

தேள்களை பாம்புகளை எறும்புகளை நாம் அடித்துக் கொல்கின்றோம். இவைகளின் உயிரான்மாக்கள் எல்லாம் நம்முள் வந்து விடுகின்றன. நமது உடலின் உணர்வை நுகர்கின்றன. மனிதனாக உருப்பெற்றுக் கருவாகின்றன.

ஜீவான்மாக்கள் மனித இரத்த நாளங்களில் குடிபுகுந்து இரத்த நாளங்களிலே சுழன்று கொண்டே வரும். ஆனால் வளர்ச்சியில்லாத உணர்வின் தன்மை நமக்குள் கருவுறும் கருவுக்குள் இணைந்துவிடும். இந்த உணர்வின் தன்மை கொண்டு அது மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது.

அந்த ஜீவான்மாக்கள் நமது இரத்தத்தில் கலந்து சுழன்று வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

டிரான்ஸாக்சன் (transaction) அதாவது நமது உயிரின் தன்மை உணர்வின் ஒலிகளை உடல் முழுவதும் பரவச் செய்து அதன் வழி கொண்டு நம்மை இயக்குகின்றது.
1.உயிரில் இதன் நுண் உணர்வுகள் சென்றபின்
2.உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்த ஆன்மா எத்தனை வேதனைப்பட்டதோ
3.அதே உணர்வினை உயிர் வழி நுகரச் செய்கின்றது,

கண் என்ன செய்கின்றதென்றால் அதே உருவத்தைக் காட்டுகின்றது. “ஐயோ… பிசாசு வருகின்றது எதிரி வருகின்றான்…!” போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

பிறிதொரு ஆன்மா புகுந்து கொண்ட உடலில் இவையெல்லாம் தெரியும், ஆனால் நமக்குத் தெரியாது.

மைக்கில் வரும் அலைகளை டிரான்ஸிஸ்டர் (transistor) கவர்ந்து விரிவாக்கி ஒலிக்கற்றைகளை ஸ்பீக்கர் (speaker) மூலமாக எப்படி வெளிப்படுத்துகின்றதோ இதைப் போன்று அந்த ஆன்மாக்கள்
1.நம்முள் ஒளி அதிர்வுகளைக் கண் வழி பாய்ச்சுவதும் உணர்வின் ரூபங்களைக் காட்டுவதும்
2.சொல் வழியாக ஒலிக்கற்றைகளையும் வெளிப்படுத்துகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா நம்முள் வந்து விட்டால் இவ்வாறு இயக்குகின்றது.

அதை விட்டு (உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால் இரத்த நாளங்களில் எந்தப் பாகத்தில் செல்கின்றதோ அந்த பாகத்தில் வலியும் குடைச்சலும் ஏற்பட்டு… “ஐயோ கை வலிக்கின்றதே… கால் குடைச்சலாக இருக்கின்றதே…” என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும்.

இது போன்ற பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி பெண்களுக்கே உள்ளது. ஏனெனில் பெண்களிடம் அன்பும் பரிவும் பாசமும் அதிகமாக இருப்பதனால் பெண்களிடம் கவரும் ஆற்றலும் அதிகமாக உள்ளது.

உதாரணமாக குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்து விட்டால் “ஐயோ… பாவமே…! குடும்பத்தில் இத்தனை பேரையும் விட்டு விட்டுச் சென்று விட்டாரே…!” என்று எண்ணினால் இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.

இப்படிப் பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்து விட்டால்…
1.தான் மனித உடலில் வாழ்ந்த காலத்தில் என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ
2.அவைகளையெல்லாம் இங்கே விளைவித்து இவர்களுடைய உடலில் கை வலி கால் வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

இப்படிப் பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால் பிற ஆன்மாக்களைக் கவர்ந்து அதன் வழி செல்லப்படும் பொழுது குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன.

இதைப் போன்று நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன. இப்படி நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு ஜோசியமும் வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா…?

வாஸ்து சாஸ்திரம் பார்த்து வீட்டின் நிலையையும் வாசல்படியையும் மாற்றி வைத்து விட்டால் அனைத்தும் சரியாகி விடுமா…? உங்களைக் காக்குமா…? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

1.மனிதர்களுக்கு ஜாதகமில்லை…!
2.எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள் தான் ”மனிதர்கள்…”

இன்று வாழும் வாழ்க்கையில் விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்… எவ்வளவோ மாற்றங்களைச் செய்துள்ளனர்.

விமானம் பறப்பதற்கு ஜாதகமா பார்க்கின்றனர்…?

விஞ்ஞான அறிவு கொண்டு மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால் விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.

ஆனால் மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்கச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் செலுத்தும் பொழுது நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து… ஆன்மாவில் பட்ட அழுக்கை அது நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்.

எனது வாழ்க்கையில் நான் யார் யாரையெல்லாம் பார்த்தேனோ அவர்களுடைய குடும்பமெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும். அவர்களின் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணங்களை நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும்.

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.

இப்படித் தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்தி விட்டால் அவைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும்.

ஆகவே
1.துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றுங்கள்.
2.உடலின் பற்றைப் பற்றற்றதாக்குங்கள்… அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
4.இருளான உணர்வுகளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்… மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள்.

இதன் வழி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும் “எமது குரு அருளும் எமது அருளும்… என்றும் உறுதுணையாக இருக்கும்…”

யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…!

யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…!

 

பூமியில் உள்ள காற்றுக்குள் பல வித செடிகள் மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன. அவ்வாறு பல விதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும் ஒரு வித்து தன் இனத்தின் சத்தை அதிலிருந்து பிரித்து எடுத்துச் செடியாக மரமாக வளருகின்றது.

இதைப் போன்றுதான்
1.நமது உடல் பூமிக்குச் சமமானது.
2.உயிரின் இயக்கத்தால் நாம் கவரும் நிலைகள் மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளைப் பதிவு செய்து கொண்டபின்
3.பதிந்த நிலைகளை தன் இனமான உணர்வின் அலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பூமியில் ஒரு விதையினை ஊன்றினால் அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரும். அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால் “அதன் வாசனையை” நாம் அறிய முடியும்.

இதைப் போன்றுதான் நம் உடலான நிலத்திற்குள் நாம் எண்ணிய உணர்வின் சத்தை நாம் பதிவு செய்து கொண்டால் உணர்வு அதிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து, ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.

அவர்களுக்குள் எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து நுகர்ந்து அதையே பதிவாக்குகின்றோம்.

பிறருடைய நிலைகளை எண்ணி
1.“இப்படி ஆகிவிட்டதே…” என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்து விட்டால்
2.அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி
3.சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.

பின் அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து நாம் சிந்தித்தாலும் “சிந்திக்க இயலாத நிலையை” நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.

இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ அதனின் உணர்வுகள்
1.நாம் ஒரு சொல் சொல்வதற்கு முன் வெளிப்பட்டு
2.“யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…” என்பதைப் போன்று
3.நாம் பேச இருப்பவரின் உணர்வில் மோதுகின்றது.

நாம் அவரிடம் உதவி கேட்டுச் சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி நாம் பேசும் பொழுது நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள் நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி…
1.நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்
2.உதவி செய்ய விரும்பும் அவரின் எண்ணத்தை இது தடுக்கும்.

ஆகவே அவர்கள் தவறு செய்யவில்லை.

ஆனால் உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும் வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது. நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார்.

பின் அவர் தலையை ஆட்டிவிட்டு “அப்புறம் பார்ப்போம்…” என்பார். இங்கே நம்முடைய சொல்லே நமக்கு எதிரியாகின்றது. அவர்களல்ல…! அவர் உதவி செய்ய விரும்பினாலும் அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.

அதே சமயம் நமது தொழில்கள் தடைப்படும் பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு. இந்த நஞ்சின் தன்மை வந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.

பின் நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும் நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும்
1.அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்து
2.அவர் நம்மைப் பார்க்கும் பொழுது “இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…!” என்று
3.நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.
4.“இவர் எதையும் செய்ய மாட்டார்…!” என்ற உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும்.
5.இந்த இடத்தில் நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.

ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத்தான் ஒவ்வொரு நொடியும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்து விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை… “நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் வழி நுகர்ந்து…” நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து உள் முகமாக இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாகப் பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது.
1.அது நம்முள் எத்தகைய தீமைகளையும் நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா பரிசுத்தமாகி நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

இந்தப் பிறவிக்குப்பின் நம் உயிராத்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.

தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

 

நல்ல உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தால்… பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல அணுக்களில் அது திரை போட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம் சிந்திக்கும் நிலைகளுக்கு அதுவே தடையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
2.இதைத் துடைக்க வேண்டும்.

அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

என் பார்வை அவர் இருளைப் போக்கும் அருள் சக்தியாக மாற வேண்டும். என் சொல் அவருக்குள் உண்மையை உணர்த்தும் சொல்லாக வரவேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உணர்வின் ஒலிகள் படப்பப்படும் பொழுது நம்மை அவர் எண்ணும் பொழுது “இந்த உணர்வு அவருக்குள் ஊடுருவும்…”
2.எந்த காரணத்தைக் கொண்டு நாம் அந்த நல்லதைச் சொன்னோமோ
3.அவருடைய தீமையான உணர்வுகளுக்குள் இது சேரும் போது அங்கே இது முன்னாடி இருக்கும்.

அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னணியில் இருக்கும். அருள் உணர்வுகளை எடுத்து அதையே நாம் சொல்லப்படும் பொழுது
1.நாம் சொல்லும் உணர்வுகள் அவனைத் திருத்தும்
2.இல்லை என்றால் நமக்கு முன்னணியில் இருக்கும் “அவர் உணர்வு” நம்மை மயக்கிவிடும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்மையைச் சொல்கின்றோம். அவர் தீமையைச் சுட்டிக் காட்டுகின்றோம். தீமையான உணர்வுகள் முன்னிலையில் வருகின்றது அவருக்கு. இந்த உணர்வுகள் முன்னணியில் இருக்கப்படும் பொழுது அவர் அதை மறுக்கின்றார். அவருக்கு அது எதிர் நிலை.

அதாவது
1.தீமையின் உணர்வுக்கு நாம் சொன்ன நன்மையின் உணர்வு அங்கே மறைத்திருக்கின்றது.
2.அவரிடமிருந்து உருவான தீமையான சொல்களை நாம் கேட்டவுடன் நல்ல உணர்வுக்கு இங்கே திரைமறைவாகின்றது.
3.இருவருக்குமே மறைக்கிறது… அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தத் தீமையைத் துடைத்து விட்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகள் கொண்டு சொல்லாகச் சொல்லப்படும் பொழுது தன்னிச்சையாக அங்கே அவருக்குள் அது ஈர்க்கப்படும்.

பெரிய மனிதர் மாதிரி சொல்ல வந்து விட்டார் என்று முதலில் நினைப்பார்.
1. பின் நாம் வெளிப்படுத்திய அந்த மகரிஷிகளின் உணர்வு சிறுகச் சிறுக அவருக்குள் போகும்.
2.இந்த உணர்வுகள் அங்கே புகுந்து அங்கே ஒரு இக்கட்டான நிலை வரும்.
3.அப்பொழுது பதில் சொல்ல முடியாது திணறுவார்.
4.அன்று அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று திருப்பத்திற்கு வரும் பொழுது நம்மைத் தேடி வருவார்கள்.

இந்த உணர்வின் தன்மை அங்கே இப்படி முடக்கப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை நிச்சயம் வரும்.

செய்து பாருங்கள்…!

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

 

குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில் நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால் நமது காருக்குக் குறுக்கே ஒருவர் திடீரென்று வந்து விட்டால் சடாரென்று காரை நிறுத்திக் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு அவரைத் திட்டுகின்றோம்.

இப்படிக் காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பதுடன் மட்டுமல்லாமல் ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது…? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.

இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி… மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி… இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது.

காரின் குறுக்கே வந்தவருக்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால் பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால் பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில் “ஓம் நமச்சிவாயா…” என்று உடலாக மாறி விடுகின்றது.
1.நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும் அதிர்ச்சியின் உணர்வுகளும் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
2,அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி நமது உடலையே நடுங்கச் செய்கின்றது.

அது சமயம் நாம் எதைச் செய்வது…? என்ற சிந்தனை இல்லாதபடி “பிரமை பிடித்தது…” போன்று ஆகி விடுகின்றோம்.

ஆனால் ஒருவர் தான் அறியாது திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால்… அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள் வியாபாரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை அதனால் சஞ்சலமும் சோர்வும் ஏற்பட்டுக் கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது…? என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.

அதே சமயத்தில் நம்முடைய வருமானம் இவ்வளவுதான்…! ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்க வேண்டும் நாளை என்ன செய்வது…? என்ற நிலையில் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது
1.எதிரே வரும் வாகனத்தையோ எதிரே வரும் மனிதரையோ அல்லது
2.எதிரே இருக்கும் பள்ளத்தையோ பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இப்படித் திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும் காரின் டிரைவர் ஒலியை எழுப்பிச் சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால் காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது.

அது சமயம் காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது
1,நமது உயிரான ஈசன் அந்த உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து அதன் வழி நம்மை இயக்குகிறது.
2.இதனின் உணர்வின் தன்மை நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.

நன்கு வசதியுள்ள வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள் இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து விட்டபின் என்ன ஆகிறது…?

இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து இதையே எண்ணி இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால்
1.அவருடைய உடலில் பலவிதமான நோய்களும் உடலில் நடுக்க வாதமும்
2.சிந்திக்கும் தன்மையை இழப்பதும் இனம் புரியாத கோபம் வருவதும்
3.இனம் புரியாத பயம் உருவாவதும் போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.

இதே போன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இருந்து ஆடோ மாடோ நாயோ ஏதோ ஒன்று குறுக்கே வரும்.

இதன் மீது மோதாமலிருக்க எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறு பக்கம் திருப்பும் பொழுது வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.

ஒரு நாயோ பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால் அதைக் காப்பாற்ற எண்ணிச் சிந்தனையை அதன் மேல் செலுத்தி எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால் எதிரே வந்த வாகனமும் இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.

இத்தகைய விபத்தில் சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும் அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து அவரிடத்தில் “மன நோயாக…” மாறிவிடுகின்றது.

இதனால் சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும் தம் குழந்தைகள் தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும் பலவீனமான நிலையில் பயமும் தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால் அதிர்ச்சியும் பயமும் வருகின்றது.

இதன் தொடர் கொண்டு பலவித நோய்களும் வருகின்றது.

பண வசதி படைத்திருப்பதினால் மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால் மன நோயினால் உணர்வின் தன்மை உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும் பயிற்சியும் செய்கின்றனர்.

1.வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும்
2.இது போன்று எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது.

இவ்வாறு சந்தர்ப்பத்தால் நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது…?

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மனிதனாகப் பிறந்து தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும் தங்கத்தில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்” என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்… யார் தவறு செய்தாரோ அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது இவை அனைத்தும் நமக்குள் கலவையாகி நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
1.இதனின் உணர்வுகளை நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து
2.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

“ஒருவர் நல்லவராக வேண்டும்” என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது.

அதே சமயம் நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் நமது உடலில் சேரப்படும் பொழுது நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.

இது போன்று நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் வலு சேர்க்கச் சேர்க்க நமக்குள் மனத் தூய்மையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.

இவ்வுண்மைகள் அனைத்தும் அருள் ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.

இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும் பிறவியில்லாப் பெரு நிலை பெரும் நிலையாகவும் தாம் அருள் ஞான நெறி துணை கொண்டு தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும்
1.தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாபவினைகள் பாவவினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்றி
2.மெய்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் சக்தி பெற்று
4.பெருவீடு பெருநிலை அடையும் நிலையாகப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

 

நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இது… தன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.

முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”

ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.

இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.

அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.

தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்

நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.

துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.

அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.

செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.

இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.