ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருது… புலி வருது…’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’ சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்…’’

‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

சந்தர்ப்பத்தில்
1.நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும்.
2.‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…”
3.உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி தடுப்பதற்குத் தான்
4.”ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தையே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

‘’ஈஸ்வரா…’’ என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி…‘’ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
1.கண் திறந்து ஒரு நிமிடமும் கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.பின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும்
4.நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லி அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
5.அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடியும்.

நாம் நகை வாங்கியபின் அதை மீண்டும் அடுத்த நகையாகச் செய்யும் போது அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல
1.நாம் கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தை அடுத்த நிமிடமே நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது
2.நமக்குள் தீயது சேராது தடுக்கும் ஆற்றல் மிக்க சக்தியினைப் பெறத் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இது தான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? ‘பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்தச் சக்தி இல்லையேல் அதைச் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்ய வாக்கின் நிலையாக உங்களுக்குக் கடும் ஆயுதமாகக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் எப்பொழுது, கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ நுகர்கின்றீர்களோ கேட்கின்றீர்களோ அவைகள் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் “ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.‘’நாளை நடப்பவை யாவும் நல்லவைகளாக இருக்கவேண்டும்
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படர வேண்டும் என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply