நல்லதைக் காக்கும் சக்தி

Fool proof protection

நல்லதைக் காக்கும் சக்தி 

நாம் நகை செய்யும்போது பித்தளையும், செம்பும், பொடி செய்து வைத்து இவை இரண்டையும் நெருப்பில் காட்டியவுடன் அந்தத் தங்கச் செயின் ஒன்றாக ஒட்டிக் கொள்கின்றது.

வெறும் தங்கத்துடன் தங்கத்தை வைத்துச் செயினாக செய்ய வேண்டுமென்றால் முடியாது. இரண்டிற்கும் ஒரு அளவான சூடு வேண்டும். வெள்ளியும் செம்பும் கலந்து வைத்தவுடன் இது சீக்கிரம் சூடாகி கரைந்து இத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது. அதைப்போல
1.நாம் நல்ல மனது எவ்வளவு தூரம் இருந்தாலும்
2.நல்ல மனது கொண்டே நம்மைக் காப்பாற்ற முடியாது.

நாம் நல்ல மனதுடன் போய்க் கொண்டிருக்கிறோம். எதிற்புறம் ஒரு மாடு பயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ மிரண்டு ஓடி விருகிறது. அப்பொழுது அது வெளிப்படுத்தும் மூச்சலைகள் நாம் கண்ணில் பார்த்தவுடன் அந்த உணர்வை நாம் சுவாசிக்க நேருகிறது.

அது எதைக் கண்டோ பயந்து மிரண்டு தன்னையறியாமல் கட்டுக் கடங்காமல் ஓடி வருகிறது. அப்படி ஓடி வரும்போது நம் மீது மோதினால் என்ன ஆகும்…?

நம் உயிருக்கே ஆபத்து. நம் வாழ்க்கையைச் சரிபடுத்த முடியாது.

அப்பொழுது அந்த மாடு வெளிப்படுத்தும் மூச்சில் நம் கண் புலனறிவு ஈர்த்து உயிரிலே பட்டவுடன் அது வேகமாக நமக்குள் பயத்தை ஊட்டி அந்த மாடு மிரண்டு வருவதில் இருந்து நம்மைத் தப்பிக்கச் செய்கின்றது.

1.அப்பொழுது அந்த வாழ்க்கை என்கிற செயின் ஒழுங்காக இருக்கிறது.
2.இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நல்ல குணத்தை நல்லதை எண்ணியதைக் காப்பாற்ற முடியாது.
3.இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும்தான் செயல்படுத்த முடியும்.
4.இந்த உயிர் போய்விட்டால் ஒன்றுமே இல்லை.
5.இந்த உடலுக்குள் இருந்து உயிர் இயங்க வேண்டுமென்றால் உடல் நலமாக இருக்க வேண்டும்.

அந்த மாடு மிரண்டு ஓடிப் வரப்படும்பொழுது அந்த உணர்வுகள் பட்டுத்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். ஆக நம் உடலைக் காப்பாற்றிக் கொள்கிறோம். அதே சமயம் பயமான எண்ணங்களை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கிறது.

நாம் செம்பும் வெள்ளியும் சேர்த்து தங்கத்துடன் ஒட்ட வைக்கும்போது இரண்டும் அதனுடன் கலந்து விடுகின்றது. மறுபடியும் நெருப்பில் போட்டு உருக்கினாலும். இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.
1.நீங்கள் அடிக்கடி அழித்து அழித்துப் பற்ற வைத்துக் கொண்டே இருந்தால்
2.செம்பும் வெள்ளியும்தான் தேறும், கடைசியில் தங்கம் குறைந்துப் போகும்.

இதே மாதிரி நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதுகாக்கும் எண்ணத்தை எடுத்து எடுத்து நாம் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு சரீரமாக மாற்றி எல்லா துன்பத்தையும் துடைக்கக் கூடிய ஆற்றல் மிக்க சக்தியாகப் பெற்று வந்துள்ளோம்.

இவ்வளவு உயர்ந்த தங்கத்தைப் போல சுத்த தங்கத்தைப் போல அதே மாதிரிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் அந்த உயர்ந்த சக்தியின் நிலைகளை நமக்குள் தங்கமாக வைத்திருக்கிறோம்.

வாழ்க்கை என்கிற நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பயம் ஆத்திரம் எல்லா நிலையும் வருகிறது. எல்லாம் பித்தளை செம்பு வெள்ளி போன்றவை, அடிக்கடி இவை நம் உடலில் சேர்ந்து விட்டால் நம் உயிரான வெப்பம் இவையெல்லாம் சேர்த்துக் கலந்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.

நல்ல மனதாக இருப்போருக்கு இப்படி ஆகிறது. இன்று நல்லதைப் பற்றி எண்ணுகிறோம். அடுத்து யாராவது தப்பான நிலைகளைப் பார்த்து விட்டால், அந்த உணர்வு வந்து அதையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம்.
1.இப்படி நம் நல்லகுணத்தை அழித்து விடுகின்றது.
2.இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் குறையில்லாமல் நாம் வாழமுடியாது. நாம் ரோட்டில் போகும்போது குறையான நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. யாராவது சண்டை போடுகிறார்கள் என்றால் அதைப் பார்ககாமல் இருக்க முடியாது.

இருவர் சண்டை போடும்போது யார் எதற்கு என்கிற வகையில் நாம் கேட்போம். சும்மா போய்க் கொண்டிருக்கும்போது அடித்தான் உதைத்தான் அடித்து ரொம்பக் காயமாகிவிட்டது என்று சொல்வார்கள்.

அடப் பாவிப்பயலே…! இந்த மாதிரி அடித்தானே என்று நமக்குள் பயமும் ஆத்திரமும் கோபமும் வருகிறது. ஏனென்றால் அந்த உணர்வுப் பட்டு அதற்குத் தகுந்த எதிர்மறை நமக்குள் உருவாகிறது.

அப்பொழுது நாம் அதைச் சுவாசிக்கும்போது உயிரில் பட்டு உணர்வு உமிழ் நீராக மாறுகிறது. நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைக்க வேண்டுமல்லவா…!

ஆகவே தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்

shiva pradosham

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்

 

நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்கள்… சாபமிடுதல்… வேதனைப்படுதல்.. இதை எல்லாம் பரிவுடன் கேட்டால் அது எல்லாம் நமக்குள் வலிமையாகி விடுகின்றது.

அப்போது அதையேல்லாம் நாம் நுகரப்படும் போது அவர்கள் உடலிலே விளைந்த தோஷங்கள் எல்லாம் நமக்குள்ளும் வந்து விளைந்து விடுகின்றது. இதைத்தான் “பிரதோஷம்…!” என்று சொல்வார்கள்.

அந்தப் பிரதோஷத்தை நீக்க நாம் என்ன செய்கின்றோம்…?

சிவனுக்கு முன்னாடி இருக்கிற நந்தீஸ்வரனுக்கு மாலையைப் போட்டு அபிஷேகமும் செய்து அதற்கு வேண்டிய பதார்த்தத்தை எல்லாம் கொடுத்து அந்த நந்தீஸ்வரன் செவியில் போய்ச் சொல்கிறோம்.
1.என் குடும்பத்தில் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
3.நான் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
4.என் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் நோய் வந்து விட்டது.
5.எங்கள் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் சொல்லு. அவன் பார்த்து ஏதாவது செய்வான்…!
6.இப்படி ஒரு நிலையில் தான் நாம் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டு கோவில்களுக்குப் போகிறோம்.

ஆனால் இவைகள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்…?

நாம் நல்ல பண்புடன் தான் எல்லோரையும் பார்த்தோம்… கேட்டோம்…! ஆனால் அந்தத் தோஷங்கள் நமக்குள் விளைந்து விட்டது. அதை நாம் நீக்க வேண்டும் அல்லவா…!

எல்லா வகையான பிரதோஷங்களையும் நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகப் பேரொளியாக இன்றும் நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே வாழ்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. அதிகாலை நான்கு மணியில் இருந்து துருவப் பகுதியின் வழியாக இழுத்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அப்படிக் கொண்டு வரப்போகும் போது நாம் அந்த நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை சொல்லி நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நான் எனது வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்து அவருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும், துயரங்களையும் கேட்டுணர்ந்தேனோ… அவர்கள் குடும்பங்களில் எல்லாம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் குடும்பத்தில் அவர்கள் அறியாது சேர்ந்த சகல தோஷங்களும் நீங்க வேண்டும்.

நாங்கள் பார்த்தவர்கள் அனைவரும் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பங்கள் அனைத்திலும் படர்ந்து அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம் என்றால் அப்போது என்ன ஆகின்றது…? (இதை எதற்காக நினைக்க வேண்டும்…?)

மற்றவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைகளையும் நாம் கேட்டோம் அல்லவா…! அப்பொழுது அவருடைய தோஷ உணர்வுகள் நமக்குள் வந்து பதிவாகின்றது.

அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி நாம் (மேலே சொன்ன மாதிரி) எண்ணும் போது
1.“அவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணும் போது”
2.நமக்குள் வந்த அந்தத் தோஷங்களை நீக்கி விடுகின்றோம்
3.அந்தப் பேரொளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
4.நமக்குள் பிறருடைய தோஷங்களைத் துடைக்கும் சந்தர்ப்பத்தை அப்பொழுது உருவாக்குகின்றோம்.
5.காரணம் அன்று நாம் பகைமை உணர்வை எல்லாம் மறக்கின்றோம்
6.அதே சமயத்தில் மகிழ்ச்சியான உணர்வை உணவாக்குகின்றோம்
7.பிரதோஷத்தை முடித்த பின் சுவை மிக்க உணவை உணவாக்கி மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றோம்.

இப்படி எல்லோரும் இதைப் போல மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் பெறவேண்டும் என்று பிரதோஷம் அன்றைக்கு இப்படி எண்ண வேண்டும்.

இப்படி யாராவது எண்ணுகிறார்களா என்றால் இல்லை…! சாயங்காலம் 4 ல் இருந்து 6 க்குள் காசைக் கொண்டு செலவு செய்து சாங்கியப்படி அதைச் செய்கிறார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டியது அதிகாலை 4 ல் இருந்து 6 க்குள் நாம் இதை எண்ணச் சொன்னார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயம் ஆகின்றது. அப்பொழுது பூமியிலிருப்பதை இழுக்கும் சக்தி வருகிறது.

பிரதோஷம் என்ற நிலையில் மேலே சொன்ன மாதிரி நாம் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதை (தீமைகளை) இழுக்கும் சக்தி குறைகிறது.
1.நமது ஆன்மா முன்னால் இருக்கும் அந்தத் தீமைகளை நாம் இழுக்க மறுக்கும் பொழுது
2.அந்தச் சூரியன் அது இழுத்துக் கொண்டு போய்விடும்,
3.சூரியன் தனது அருகிலே கொண்டு போனால் அதற்குள் அருகிலே போகும் போது நெருப்பாக மாறுகின்றது. விஷத்தைக் கருக்கி நீக்கி விடுகின்றது.
4.இப்படித் தான் தோஷங்களை அன்று நீக்கும்படிச் சொன்னார்கள்.

ஆனால் நந்தீஸ்வரன் காதில் ஓதி… “இந்தப்பா…! நான் லட்டு ஜிலேபி வாழைப் பழம் ஆப்பிள் பழம் எல்லாம் கொடுத்திருக்கிறேன். என் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா…!” என்று ஞானிகள் சொல்லச் சொல்லவில்லை.

ஏனென்றால் நந்தீஸ்வரன் என்றால் “நாம் எதைச் சுவாசிக்கிறோமோ… அது தான் நமக்குள் உருவாகிறது. அப்பொழுது நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..?

அந்தப் பேரருள் பெற்ற அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நுகர்ந்தால் நமக்குள் அது உருவாகி நமக்குள் பிறருடைய தீமைகளை நீக்கிவிடும். தோஷங்கள் வராது தடுக்க இது உதவும். இப்படித் தான் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

காசைக் கொடுத்து விட்டுப் பிரதோஷம் அன்றும் சிவன்ராத்திரி அன்றும் விடிய விடிய முழித்துக் கொண்டு நாம் வரம்பு மீறித் தவறுகளைத் தான் செய்கின்றோமே தவிர
1.தவறை நீக்கும் மார்கங்களை ஞானிகள் காட்டி இருந்தாலும்
2.யாரும் இதைச் செயல்படுத்தவில்லை…! (இது தான் இன்றைய நிலை)

எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம்

Curse rays

எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம் 

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசையில் அலைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்.
1.அதை இருக்கும் இடத்திலிருந்தே பதிவாக்கி
2.அதனின் உணர்வின் நிலையை உலகம் முழுதும் பரப்பச் செய்கின்றான் (RELAY) மற்றொருவன்.

உலகம் முழுதும் பரவச் செய்யும் போது அதே அலை வரிசையில் டி.வி. வழியாகவோ கம்ப்யூட்டர் மூலமாகவோ மற்றவர்கள் இருப்பிடத்திலிருந்து உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது. இது புறத்தில் விஞ்ஞானக் கருவிகளால் நடக்கக்கூடிய சம்பவம்.

ஒருவருடன் நண்பன் என்ற நிலையில் நன்றாகப் பழகுகின்றோம். அவனை நமக்குள் பதிவாக்கி விட்டால் நண்பனின் நினைவு கொண்டாலே போதும். அவன் உருவ நிலை நம் முன் நிற்பதை காணலாம்.

1.ஆக மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கி விட்டால்
2.அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் அங்கே பதிவாகின்றது.. அலைகளாக மாறுகின்றது…!
3.பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் போது “குவித்து” அந்த உணர்வின் தன்மையை அறிகின்றோம்.

அவனுடன் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சியின் தன்மையாக உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு… பரிவு கொண்டு… நண்பன் எனக்கு உதவி செய்தான்… உபகாரம் செய்தான்…! என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது. நண்பனை நினைத்தாலே நமக்குள் மகிழச் செய்யும் நிலையாக வருகின்றது.

ஆனால் பண்புடன் வாழ்ந்து வந்த நிலையில் சந்தர்ப்பத்தில் பகைமையாகி வெறுப்பின் உணர்வாக ஆகி தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

தன் வாழ்கையில் சிரமம் என்ற உணர்வுகள் உந்தப்படும் போது எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் போது
1.அவனில் உருவான இந்த உணர்வுகள்
2.இவனின் உணர்வு அங்கே பதிவானதனால்
3.அந்த உணர்வுகள் இரண்டும் மோதிப் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி
4.உணவை உட்கொள்ளும் நேரமாக இருந்தால் சாப்பிடும் உணவை உள் இழுக்கும் செயலை இழந்து விடுகின்றது… புரை ஓடுகின்றது…!
5.ஒரு பருக்கை நுரையீரலுக்குப் போனால் மடிந்து விடுவான்.

ஆனால் ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுற்றுப் பார்த்துக் கவர்ந்த உணர்வின் தன்மையை வைத்து வாகனத்தைச் சீராக இயக்கிச் சென்றாலும் நண்பர்களுக்குள் துரோகம் செய்தான் என்ற உணர்ச்சிகள் உந்தி எதிர்மறையான எண்ணங்கள் கொண்டு தாக்கப்படும் போது ஒரு நொடி அவன் சிந்திக்கும் தன்மை இழந்தால் உடனே விபத்தாகின்றது. (ACCIDENT)

மனிதனுக்கு மனிதன் வாழும் போது பகைமை உணர்வு கொண்டால் ஒரு தொழிலில் வேலை செய்யும் போது இத்தகைய நிலையானால் புரையாகி அந்தச் சந்தர்ப்பத்தால் மரணம் அடையும் நிலை கூட வருகின்றது.

ஒரு எலக்டிரிகல் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான் என்றால் இதைப் போல நண்பர்களுக்குள் தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் செயல் இழந்து மின்சாரம் செல்லும் வயரில் கையை வைத்தான் என்றால் இவன் மடிகின்றான்.

இதைப் போன்று ஒரு நொடி தவறினால் மனிதனை அது வீழ்த்தி விடுகின்றது. ஆகவே மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாது எவரும் இல்லை.
1.பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு.
2.மகிழ்ந்தாலும் உணர்வுகள் நமக்குள் தொடர்பு உண்டு.
3.மனிதர்கள் யாரும் பிரிந்து வாழ்ந்ததில்லை.

நாம் பிரிந்து வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் பிரிவினையான எண்ணங்களை நுகரப்படும் போது நம் உடலுக்குள் அந்தப் பகைமையான உணர்வின் அனுக்களும் பண்புடன் வளர்ந்த அணுக்களும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

அது ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் போது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் வரும். சில பேருக்குப் “பளீர்…!” என்று ஊசி குத்துவது போல இருக்கும்.

ஏனென்றால் அந்தப் பகைமை உணர்ச்சி கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

நாம் எப்பொழுதோ சண்டையிட்டோம். அதனால் பகைமை ஆனது. இப்பொழுது அவனிடமிருந்து விடுபட்டிருக்கிறோம்…! என்று எண்ணுகின்றோம். ஆனால்
1.அவனின்று நுகர்ந்த உணர்வு நம்முள் நின்றே அதன் வீரியத்தை ஊட்டும் போது
2.நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது.
3.அதனால் சிந்திக்கும் தன்மை இழந்து ஒரு செயலின் தன்மை குறைகின்றது… வேதனைப்படுகின்றோம்.

வேதனையை நுகரப்படும் போது மேலும் சிந்திக்கும் தனமை குறைந்து…
1.நினைத்த காரியம் நடக்கவில்லை என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு
2.கோபத்தின் உணர்ச்சி உச்சகட்டம் ஏறுகின்றது.
3..தன்னையே அழித்திடும் தன்மை வருகின்றது அல்லது
4.தன்னுடைய சார்புடையோரால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்ற உணர்ச்சிகளே தோன்றுகின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வின் இயக்கங்களிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டும். அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
1.ஈஸ்வரா…! என்று நம்முடைய உயிரைப் புருவ மத்தியில்
2.உடனுக்குடன் எண்ணும் பழக்கம் வந்து விட்டால் தீமைகளைத் தடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் தீமைகள் நமக்குள் உருவாகாது நன்மை செய்யும் சக்தியாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.

 

ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

Good and bad segregation

ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

 

ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.

இதைப்போல தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!

அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.

ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,

பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.

இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.

ஆகவே தீமையையே எண்ணாது எந்தத் தீமையும் நமக்குள் வராது
1.மீண்டும் மீண்டும் உயர்ந்த நிலைகளை நாம் எண்ணி
2.இந்த உணர்வலையைப் பரப்பப்படும் போது தான்
3.நமக்குள் உயர்ந்த சக்தியைப் பெற முடியும்.

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

Maharishi doctor

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகும் பருவத்தில் இருக்கிறது. இப்படி விலகி விட்டால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுவிடும்.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம் என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பர பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
(உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!)
3.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நல்லா இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்… இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மை காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

Muruga murugu

முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

 

ஒரு சமயம் ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு இருக்கின்றார்கள். அதற்கு என்ன அர்த்தம்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.

முருகனுக்குப் முன்னாடி மயிலைப் போட்டு வைத்து காலடியில் பாம்பைப் போட்டு வைத்து இருக்கிறது. இது என்னங்க..? என்றும் நாம் (ஞானகுரு) கேட்டேன்.

கேட்டவுடனே அந்தப் பெரியவர் எதை எதையோ சொல்லிக் கொண்டு வந்தார். தான் படித்த பாட நிலைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

சுருக்கமாகச் சொல்லுங்கள் எனக்கு அர்த்தம் ஆகவில்லை. நான் படிக்காதவன்.. நீங்கள் படித்தவர்…! என்று சொன்னேன்.

அவரால் ஒன்றும் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. அப்புறம் நான் விளக்கத்தைச் சொன்னேன்.

ஒரு வேதனைப்படுபவனை நான் பார்க்கின்றேன். பார்த்து அந்த வேதனையை நான் நுகர்கின்றேன். சுவாசித்த உடனே உயிர் அதை என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகிறது. கரு முட்டையாகி வெடித்து அந்த அணு உருவான பிற்பாடு என்ன செய்கிறது…?

உருவான அந்த அணு மீண்டும் வேதனைப்படச் செய்யும் உணர்வையே உணவாகத் தனக்குள் சேர்க்கிறது. அதன் வழியில் என்னை வேதனைப்படும்படியாகத் திருப்பித் திருப்பி எண்ணச் செய்கிறது.

வேதனை வேதனை என்று சுவாசித்து உடலுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில் அதனின் கணக்கு அதிகமான பிற்பாடு எங்கே போகிறோம்…!

உடல் சிவமாகின்றது. வேதனையான உணர்வின் கணக்குக் கூடிய நிலையில் அடுத்து நம்மைப் பாம்பாக பிறக்கச் செய்கிறது நம் உயிர்.

1.அவன் இல்லை என்றால் அணுவும் அசையாது.
2.அதாவது இந்த உயிர் என்ற ஈசன் இல்லை என்றால் உடலான ஈசன் என்னாகும்…?
3.ஒன்றும் செய்ய முடியாது.

மூஷிகவாகனா அதாவது எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள். இப்போது நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன். அதைச் சுவாசித்தேன். உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தேன்.

அந்த உயர்ந்த ஞானத்தைக் கேட்டு உயர்ந்த வழியில் நான் சிந்தனை செய்தால் அது கணங்களுக்கு (உடலில் உள்ள குணங்களுக்கு) அதிபதியாகிறது.

விநாயகர் அருகிலே வேப்ப மரத்தை வைத்தார்கள் என்கிற போது மனித வாழ்க்கையில் ஒருவன் சிரமப்படுகின்றான் என்று பார்க்கின்றோம். அவன் படும் வேதனையை நுகரப்படும் போது அது மாறி நமக்குள் தாயாக வந்து விடுகிறது.

நம்முடைய நல்ல குணத்தைக் கொண்டு தான் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் அந்த நல்ல குணத்தைக் கொண்டு நாம் பார்க்கும் போது பிறர் படும் வேதனையான உணர்வுகள் அந்த அணுக்கள் நம் உடலுக்குள் புகுந்தவுடனே என்ன செய்கிறது…?

1.பூமிக்குள் (தரையில்) எலி எப்படி வங்கு போடுகிறதோ இதே மாதிரி
2.நம் உடலுக்குள் வந்த அந்த வேதனைபப்டும் அணு நம் நல்ல குணத்தை எல்லாம் வங்கிட்டு விடுகின்றது.

சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் “ஓ…” என்று இயங்கினாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் இதற்குள் சேரத்தவுடனே “ஓமுக்குள் ஓ…ம்” ஆகின்றது.

ஓ…ம் என்று ஜீவ அணுவாக உடலாக ஆனது. ஆனால் அதை அடக்கக்கூடிய வலிமை கொண்ட ஓங்காரமாக அந்த வேதனையான அணு இங்கே வருகிறது

1.இந்த ஓங்காரத் தன்மை வந்தவுடனே
2.நம்முடைய நல்ல சுருதிகள் குறைகிறது.
3.அப்போது அதை அடக்கி ஆளும் அந்த அணுவின் தன்மையாக வேதனை வருகிறது.

நம் உயிர் ஓ என்று இயக்கிக் கொண்டிருந்தாலும் நாம் எண்ணியதை எல்லாவற்றையும் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது.

ஓமுக்குள் ஓமாகி… அந்த ஓமுக்குள் ஓ…ம் வேதனை வரப்போகும் போது உடலிலே எப்படி மாற்றம் ஆகிறது…? என்பதைக் காட்டுவதற்குத் தான் எலியை போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

புறத்திலிருந்து நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் குடி புகுந்து நல்ல குணங்களை வங்கு போட்டுத் தன் இருப்பிடமாக்குகிறது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்காக அப்படிக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

அதாவது நாம் நல்ல குணம் கொண்டு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த வேதனையை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கு போட்டுக் குடி கொள்ளும் என்றனர் ஞானியர்.

அந்த அரத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் எலிக்கு அபிஷேகம் செய்து எலிப் பாடல்கள பாடி விநாயகரைத் தூக்கி அவன் சுமந்தான் என்ற நிலையில் அத்தனை பெரிய சரீரம் எலி மேல் உட்கார்ந்தால் என்ன ஆகும்…?

நசுங்கிப் போகும் அல்லவா…! இதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா…?

வேதனை உணர்வு நுகர்ந்த பின் அந்த விஷத்தின் தன்மை நம்மை ஆட்கொள்கின்றது. அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
1.உடனே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உடலுக்குள் பல முறை செலுத்தப்படும் போது அந்த வேதனையை ஒடுக்குகின்றது.

ஏனென்றால் நஞ்சினை அடக்கி அதை ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அவர்கள் அருள் சக்தியை எடுக்க்கப்படும் பொழுது நம் உடலுக்குள் அறியாது வந்த நஞ்சை அடக்குகின்றது.

அதற்கு அடுத்து யாரைப் பார்த்து நாம் வேதனைப்பட்டோமோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் நன்றாக வேண்டும் என்ற எண்ணத்தை நாம் எண்ணுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்…
2.நோயிலிருந்து விடுபடுவாய்.
3.உனக்கு நோய் இல்லை நீ நன்றாக இருப்பாய் என்று அவரிடமும் சொல்லாகச் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது நமக்குள்ளும் மகிழ்ச்சி தோன்றுகிறது. அவரையும் மகிழச் செய்யும் உணர்வாக வருகிறது.
1.அப்போது அந்த விஷம் நமக்குள் ஒடுஙகுகின்றது.
2.அவரும் அதை எண்ணினால் விஷம் அங்கேயும் ஒடுங்குகின்றது.

கருணைக் கிழங்கு இருக்கிறது என்றால் மாடு அதை முகர்ந்து பார்த்து விட்டு விலகிப் போய்விடுகிறது. ஆனால் மனிதனான நாம் என்ன செய்கிறோம்…?

அதை வேக வைத்து விஷத் தன்மையை ஒடுக்குகிறோம். புளியைக் கரைத்து ஊற்றினோம் என்றால் விஷத்தின் அரிப்பை ஒடுக்குகின்றது. மிளகாயைக் கலந்த பின் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. இதையும் சேர்த்தவுடனே அங்கே சுவை வருகின்றது.

விஷமான கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை எல்லாம் முறித்து விட்டுச் சுவையாக உருவாக்குகின்றோம். மாற்றி அமைக்கின்றோம்…!

முருகனுக்கு “முருகு…” என்று ஒரு பேர் உண்டு. ஏனென்றால் மனிதனான பின் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் சக்தியை முருகு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள். இதெல்லாம் சந்தர்ப்பம்.

அடுத்தாற்போல அந்தக் கருணைக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் ருசி வருகின்றது. நமக்குள் மகிழ்ச்சி வருகிறது. ஆகவே நஞ்சை ஒடுக்கி அழகுபடுத்தும் நிலையாக வருகின்றது. அதற்குத்தான் மயிலின் காலடியில் பாம்பைப் போட்டுள்ளார்கள்.

முருகா… அழகா…! என்று காரணப் பெயர் வைத்து இதை நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

Lord vinayar

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

 

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால் அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.

மாலையைப் போடுகிறோம். ஆடம்பரப் படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம் இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.

எல்லாவற்றையும் வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.

1.ஞானிகள் சொன்ன தத்துவம் வேறு. நாம் சொல்வது வேறு.
2.எல்லாம் கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன் எதற்கு என்று சிந்திக்கின்றோமா…?

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..? துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

காலையில் விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலு பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும். அங்கே அருள் ஒளி படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிப் பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய வேண்டும்.

நம் பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று அன்றைக்கு எண்ண வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

அன்றைக்குத் தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

1.குடும்பத்தில் சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

ஞானிகள் விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் தாங்க முடியவில்லை ஏன்…?

soul-protections

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன்…?

 

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின் தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுகொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

 

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…?

Argument

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…? 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டு தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.

அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது. இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும். அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும் தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும். தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

 

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

Image

Lord velaudham

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

 

தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்…? என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்…
1.அட.. ஆமாம்… என்ன வந்தது…?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே…! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது…? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி… அது இப்படி…! அவன் இப்படியே தவறு செய்கிறான்…!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்…. உடைந்து விடுகிறது…!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது…! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ…? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன…? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா…! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது…!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா…! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி… நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா…? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்…!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்…!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள் அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.