குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்

குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்

 

நம்முடைய மூதாதையர்கள் பண்டைய காலங்களில் இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறை வரையிலும் ஒன்றாகச் சேர்த்து “ஒரு பெரிய குடும்பமாக” வாழ்ந்து வந்திருப்பார்கள்.

காலத்தால் சிறு வேதனைகள் வளர்ந்து மனஸ்தாபம் ஆகி ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால் இவர்களுக்குள் சொத்து பாகங்கள் பிரிக்கப்படும் பொழுது சிறிதாகிவிடும்.

ஏகமாக இருக்கப்படும் பொழுது சொத்தின் பெருமான அளவு அது அதிகரித்திருக்கும். ஆனால் பிரித்து வரப்படும் பொழுது
1.அவர்கள் உழைப்புக்கொப்பத் தன் பங்காகத் தனக்கு நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்
2.அது குறைவாக வரப்படும் பொழுது “என்னை இப்படி மோசம் செய்து விட்டார்களே…” என்று சாப அலைகளை விடுவார்கள்.

நான் ஒன்றி வாழ்ந்தேன்… நம்பி இருந்தேன் என்னை மோசம் செய்து விட்டார்கள்…! என்ற இந்த உணர்வின் சக்தியை வளர்த்து விட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் காணும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வரும். “இதுவும் தியானம் தான்…”

அந்த வெறுக்கும் தன்மை வளர்ந்து வளர்ந்து இவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வெறுப்பும்… அவரைப் பார்க்கும் பொழுது இவருக்கு வெறுப்பும் இப்படி வந்து விடுகிறது.

அதே சமயத்தில் இவரைச் சார்ந்தவர்கள் இரண்டு பேர் சாட்சியாக வருவார்கள் அதே மாதிரி அவர் பக்கம் ரெண்டு பேர் சாட்சியாக வருவார்கள்.

சார்ந்து பேசினாலும் இவர்கள் இடும் சாப அலைகள் அவருடன் இணைந்த மற்றவர்களுக்கும் இது இணைந்து விடும்.

எனக்கு மோசம் செய்தானே… இவன் எல்லாம் உருப்படுவானா…? அவன் குடும்பம் நன்றாக இருக்குமா…? என்று இப்படிச் சொல்லும் பொழுது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நீ இப்படிச் சொல்லலாமா…? நீதான் அப்படி ஆவாய். அவனுக்குச் சாட்சியாக இருந்து அவனைக் கெடுத்தவனே நீ தான்…! என்று
1.நண்பனுக்காக அல்லது இவனைப் போற்றி வளர்க்கும் நிலைகள் சாட்சியாகச் சொல்லப்படும் பொழுது
2.கேட்டறிந்த உணர்வுகள் கடும் சாப வினைகளாக இப்படிச் சிக்கிக் கொள்கின்றார்கள்.

அடிக்கடி இப்படிப் பேசி வித்தாக ஆனபின் என்ன நடக்கிறது…?

ஒரு மரத்தில் விளைந்த வித்தை ஒரு இடத்தில் நாம் ஊன்றினால் அந்த உணர்வின் துணை கொண்டு… காற்றிலிருந்து தன் தாய் மரத்தின் சத்தை நுகர்ந்து அது அதே மரமாக விளைகின்றது.

அது போன்று
1.ஒருவன் சாபம் இட்ட உணர்வுகள் நாம் கேட்டறிந்த பின் அந்த வித்தாக நமக்குள் விளைந்து
2.அந்த வித்து தன் மணத்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை அதைக் கவரும் பொழுது
3.ஆன்மாவாகச் சேர்த்து நம் உணர்வுடன் சேர்க்கப்படும் பொழுது
4.”அந்தச் சாபமிட்ட நிலைகள்” அடுத்து நாம் எந்தக் காரியம் செய்தாலும் அதைத் தடைப்படுத்துவதாக இது வந்து கொண்டேயிருக்கும்.

பாலில் பாதாமைப் போட்டு எவ்வளவு சுவையாக வைத்திருந்தாலும் அதிலே ஒரு மிளகாய் பட்டு விட்டால் அந்தக் காரத்தின் சுவை முன்னணியில் இருந்து அதை ரசிக்க விடாது செய்யும்.

இதைப் போன்று தான் சாபத்தின் நிலைகள்
1.உயர்ந்த குணங்கள் கொண்டு இருந்தாலும்… நல்லதைச் செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது
2.இவர் என்ன பெரிதாகச் செய்தார்…? என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
3.அவர் சொன்ன அந்தச் சொல்லையே நாம் திரும்பத் திரும்ப எண்ணி இதுவே நஞ்சாகி… கடுமையான வினைகளாக நமக்குள் விளைந்து விடும்.

அந்தச் சாப அலையின் தொடர் குடும்பத்தில் பாய்ந்து தாய்மார்கள் கர்ப்பமுற்றார்கள் என்றால்… இத்தகைய உணர்வுகளைக் கேள்விப்பட்டு அதைக் கவர நேர்ந்தால் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் குல வழியில் சாப அலைகள் தொடர்ந்து விடுகிறது.

குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தன்னை அறியாமலே சில தவறான நிலைகளும்… பல பல நோய்களும் உருவாகி விடுகின்றது.

ஆக… கருவில் இருக்கும் போது சாபங்களைக் கேட்டு நுகர்ந்தறிந்தால் தான் அது பதிந்து அந்த நிலை வருகின்றது

1.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால் எல்லோருக்கும் அந்த சாப அலைகள் சாடுவதில்லை.
2.சாபமிட்டதைப் பற்றிப் பேசி… சாபமிட்ட குடும்பத்தைப் பற்றிப் பேசி இருந்தால்
2.கருவற்றிருக்கும் குழந்தைகளில் அது வித்தாகி… அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

சாப அலைகள் “குல வழியில்” இப்படித்தான் வருகிறது…!

இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்… சந்தர்ப்பத்தால் எதனை உற்றுக் கேட்டு அதைக் கவர்ந்தனரோ வந்து இவ்வாறு இயக்கிவிடுகிறது.

இதையெல்லாம் துடைப்பதற்காக எத்தனையோ வழிகளை மகா ஞானிகள் கண்டுணர்ந்தார்கள். அதைத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் அது விலகாது

கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் அது விலகாது

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

சாப வினை எப்படி வருகிறது…?

சாப வினை எப்படி வருகிறது…?

 

கடந்த காலங்களில் குடும்பத்தில் பற்றும் பாசத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதில் கொடுக்கல் வாங்கலிலோ… உணவாக உட்கொள்ளும் நிலைகளிலோ… அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பொழுதோ அந்தச் சந்தர்ப்பம்… ஒருவர் அதிகமாகச் செலவழித்து ஒருவருக்கு அதைக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பேதங்கள் வருகிறது.

1.அவர் போகும் போது தனக்கு வேண்டியதை மட்டும் சௌகரியமாக எடுத்துக் கொண்டு செல்கின்றார்
2.நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ற இந்தப் பகைமை உணர்வுகள் விளைந்து விடும்.

பொறுத்திருந்து… அவர் போகும் போது கொடுத்திருக்கலாம் என்றாலும் அது வரை பொறுக்காது கோபம் மேலிட்டு… வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த வெறுப்பு ஊழ்வினை என்று வித்தாக ஆழமாகப் பதிவாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவர்களுக்குள் வெறுப்பு வளரத் தொடங்கி விடுகிறது.

அது பரவி வர வர அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு. வெறுப்பான உணர்வு கொண்டு அடுத்து சுடு சொல்லாகத்தான் வரும். பெரியவர்களாக இருந்தால் மதிக்கச் சொல்லாது.

ஆகவே… மதிப்பற்ற நிலைகள் நம் சொல் வெளிப்பட்டு நம்மைப் பார்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் சேர்த்த வெறுப்பான உணர்வுகளும் அவர்கள் சுவாசித்து நம் மீது வெறுப்படையும் தன்மையாக விளைந்து விடுகின்றது.
1.மூதாதையர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பொழுது
2.நாளுக்கு நாள் பகைமைகள் உருவாகி இத்தகைய இடையூறுகள் வந்துவிடுகிறது.

அடுத்து பாகப்பிரிவினை வரும் பொழுது எனக்கு இவ்வளவு தான் கொடுத்தார்கள் அவனுக்கு நிறையக் கொடுத்தார்கள் என்று பாசத்துடன் ஒன்றி வாழ்ந்த நிலைகளில் இதைப் போன்ற நிலைகள் தடைப்படுகிறது.

தடைப்பட்ட பின் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தாலும்… மூத்தவராக இருக்கப்படும் பொழுது அவர்கள் பிள்ளைக்குத் தனியாகச் சலுகை செய்கின்றார்கள்… என் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை…! என்ற இந்த உணர்வு நஞ்சின் தன்மையாக விளைந்து விளைந்து “நாளடைவில் விஷத்தின் தன்மையாக விளைந்துவிடுகிறது…”

பின் யார் மீது இந்த வெறுப்பு அதிகமாக விளைந்ததோ “அடப்பாவி இப்படிச் செய்கின்றாயே… இப்படிச் செய்கின்றாயே…” என்ற நிலைகள் இந்த உடலில் அதிகமாக விளையப்பட்டு “வெளிப்படும் மூச்சுகள்…” அந்தக் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுப்பானாலும் வெறுப்பற்றவர்களோ…
1.எதற்காக நீங்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள் என்ற உணர்வுடன்
2.ஒன்று சேர்ந்து வாழ நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும்
3.பாகப்பிரிவினையால் விளைந்த பேத உணர்வுகள் அங்கேயும் சேர்த்து அறியாதபடி… அவர்களுக்குள்ளும் வெறுப்பின் உணர்வுகளே விளையும்.

எனக்கு இப்படிச் செய்தானே… அவன் குடும்பம் உருப்படியாகுமா…? என்ற இந்த உணர்வுகள் அதிகரித்து விடுகிறது. இது போன்ற சாப உணர்வுகளை வெளியிட்டால்… வெளியிட்ட அந்த அலைகள் அவர்கள் உடலில் மறைந்து “வித்தாக” விளைந்து வரத்தொடங்கும்.

இரண்டு தலைமுறைக்குப் பின் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் கரு உருவாகிக் குழந்தைகள் பிறந்த பின்…
1.அதே சாப அலைகள் தொடரப்பட்டு
2.மூதாதையர்கள் உடலில் விளைந்த உணர்வின் உமிழ் நீர் (அமிலங்கள்) கூடி… அந்த உணர்வின் சத்து வித்தாக மலர்ந்தது
3.இங்கே சொல் வடிவில் இணை பிரியாது வந்து கொண்டே இருக்கும்.
4.சாப அலைகளாக குடும்பங்களில் அது இயக்குவதை இன்றும் பார்க்கலாம்… நம்மை அறியாமலே மறைமுகமாக வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் எத்தனை இன்னல்கள் பட்டோமோ… மனிதனான பின்னும் இப்படிப்பட்ட தீமைகளில் சிக்குண்டு… தீமைகளை அகற்ற முடியாத நிலைகள் தான் நாம் சுழன்று கொண்டுள்ளோம்.

மூதாதையர்கள் குடும்பத்திற்குள் இட்ட சாப அலைகள் பதிந்து அவருக்குள் விளைந்தது அலைகளாகப் பரவி உள்ளது. அதிலே ஒருவருக்கொருவர் தான் எண்ணியதற்குத் தடை வரும் போது பகைமையாகி அதனால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அடுத்தவருக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தி… அதைக் கண்டு ரசித்து மடிந்தவர்களும் பலர் உண்டு.

வேதனைப்பட்டவர்களைக் கண்டு ரசித்த உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது குடும்ப குடும்பத்தின் சந்ததியினருக்கும் இது வருகின்றது. உடல்களில் இருந்து குல வழியில் இது வருகின்றது.

1.உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் எல்லாம் மூதாதையர்களால் விளைந்தது தான்
2.ஒருவருக்கொருவர் இன்னல் படும் பொழுது “தான் என்ன செய்வது…?” என்று பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
3.அதே சமயத்தில் வேதனைப்பட்ட உணர்வுகளால் உறுப்புகள் சீராக இயங்காது
4.உமிழ் நீர்கள் சுரக்கப்படும் பொழுது உறைந்து அது நெஞ்சுச் சளியாக உருவாகின்றது.

விஷத்தன்மை கொண்டு அங்கே உருவான அத்தகைய உணர்வுகள் அணுவாக மலர்ந்து வித்தாக உருப் பெற்று வருகின்றது. அதன் வழிகளிலும் குல வழிகளில் பின் தொடர்ந்து வருகின்றது.

தனித்த மனிதர் நம்மிடமிருந்து இப்போது அந்த நோய் வரவில்லை. முந்தி எத்தனையோ நிலைகள் விளைந்தது… குல வழியில் நமக்குள் பின் தொடர்ந்து வருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிய அந்த சாப அலைகள் கொடூரத் தன்மை கொண்டது.
1.கொடூரத் தன்மை கொண்டு நமக்கு கிடைக்கும் நல்ல நிலைகளை அது கிடைக்க விடாதபடி தடுத்து
2.இருள் சூழ்ந்த நிலையாக்கி மனிதனுக்குள் எதிர்நிலையாக வருகிறது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் வாழ்க்கையில் இது போன்ற நிலை வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.

சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.

அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…

ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”

நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”

அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.

இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.

ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.

இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?

வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.

அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?

நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.

அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.

இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.

இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.

தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.

இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.

எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்…!

எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்…!

 

நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்… உதவி செய்கின்றோம். ஆனால் அவன் மீது சிறிது வெறுப்பாகி விட்டால் “எனக்குத் தீங்கு செய்கின்றான்… இவனுக்கு எப்படி நன்மை செய்வது…?” என்ற எண்ணம் வருகின்றது.

அப்பொழுது நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை தான் செய்வோம். தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த தீமையை விளைவிக்கும் அணுக்களே நமக்குள் உருவாகின்றது.

நண்பன் தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
2.தீமையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்”
3.தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வின் அணுக்கள் உடலிலே உருவாகி
4.நமக்குள் “தீமையை நீக்கும் சக்தியாக” உருவாகின்றது (இது முக்கியம்)

கோபமாக இருக்கும் பொழுது ஒரு பொருளின் தரத்தை நம்மால் சரியாகக் காண முடிகின்றதா…! ஒரு நூலையோ துணியையோ அல்லது மற்ற பொருள்களையோ பதார்த்தத்தையோ காண முடிகின்றதா…? கோபமாக இருக்கும் போது தரத்தை நிர்ணயிக்க முடியாது.

நண்பனாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப்படும் பொழுது அவன் ஒரு நல்லதைச் சொன்னால் இந்த நேரத்தில் நீ ஏனய்யா இங்கே வந்து வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று அவரிடம் நாம் கோபமாகத்தான் பேச ஆரம்பிப்போம்.

அவர் நல்லதைச் சொல்லும் போது “நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ…! ஏன் வம்பு செய்கின்றாய்…?” என்று தான் சொல்வோம்.
1.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம்
2.கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உயிர் தான் உருவாக்குகின்றது… உடலாக்குகின்றது. மீண்டும் நினைவாக்கும் பொழுது அதனைச் செயலாற்றுகின்றது அந்த நினைவுகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்.
1.இந்தப் பேருண்மையை நீங்கள் நினைவாக்கிக் கொண்டால்
2.உங்களை அறியாது வரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.அதை பெற வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றேன்.

ஆகவே… இயற்கையின் இயக்க நிலைகளைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியமாகப் படைத்து அந்தக் கருத்தினை நான் நுகரப்படும் பொழுது அந்தக் கருத்தே நம் உடலில் உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

உதாரணமாக… தமாசுக்காக ஒருவரைக் கேலி செய்து பாருங்கள்… இந்த உணர்வுகள் விளைந்து கொண்டேயிருக்கும். ஆனால் இவர் சும்மா தமாசு செய்து கொண்டே இருக்கின்றார்…! என்று அவர் நினைப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வருவார். ஒரு நாள் என்ன ஆகும்…? நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்… பொறுத்துக் கொண்டேயிருக்கின்றேன்… “இரு உன்னை என்ன செய்கின்றேன் பார்…!” என்று பகைமை ஆகிவிடும்.

விளையாட்டாகத் தானே…! என்று நாம் நினைப்போம் ஆனால் கடும் விளைவுகளை உண்டாக்கிவிடும். இதனுடைய வளர்ச்சி முதுமைக்கு வரும் பொழுது இப்படித்தான் வரும்.

இரண்டு பேர் சண்டை போடுவதை (அடிக்கடி) வேடிக்கையாகப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாளடைவில் இவன் மோசமான ஆள் என்று அடுத்தவரிடம் சொல்ல ஆரம்பிப்போம்… திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்போம்
2.இந்த உணர்வுகள் அடுத்து “நம்மையே மோசமான ஆளாக” மாற்றக்கூடிய அளவுக்கு அணுக்களாக விளையத் தொடங்கும்
3.எதை “மோசம்” என்று சொன்னோமோ அதுவே இங்கு வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்லதை நுகரும் சக்தி அவர்களுக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

முதலில் அவர் செய்யும் தீமையைக் கண்ணின் கருவிழி பதிவாக்கி உயிரிலே பட்டு நுகரும் போது தான் அதை அறிகின்றோம். ஆனால்
1.அதற்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்து விட்டால் அது அடங்குகின்றது
2.நமக்குள் தீமையை வளர்க்கும் தன்மையைக் குறைக்கின்றது.

இவையெல்லாம் ஆலயத்தின் பண்புகளாக ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்ட நிலைகள்.

அகண்ட உலகில் உருவாகும் உணர்வினைச் சூரியன் நுகர்கின்றது… பிரபஞ்சமாக உருவக்கி வாழ்க்கையைத் தொடங்குகிறது… உயிரணுக்களை உருவாக்குகின்றது.

உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாக்குகின்றது உயிர். தீமைகளை மாற்றி விட்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி மனிதனுக்குத் தான் உண்டு.

மிருக நிலையில் இருந்து வளர்ச்சியாகி மனிதன் ஆன நிலையில் ஆதிமூலம் என்றும் விநாயகர் என்றும் உயிரால் உருவாக்கப்பட்ட நிலையை விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டுகின்றது. ஆக மனிதனாக உருவானபின் அவனே முழு முதல் கடவுள்.

அதே சமயத்தில் இந்த மனித உடல் பெற்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக உருவாக்கவில்லை என்றால்
2.அடுத்து நாம் தேய்பிறை தான்… வளர்ச்சி குன்றுகிறது (மனிதனல்லாத உருவாகப் பிறக்க வேண்டி வரும்).

மனிதனைக் காட்டிலும் மற்ற உயிரினங்கள் எப்படி எல்லாம் வேதனைப்படுகிறது என்று பார்க்கின்றோம் அல்லவா. நாம் இன்று மனிதனாக இருக்கலாம். சந்தர்ப்பத்தால் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து விட்டால் விஷம் கொண்ட ஜந்துக்களாக உயிர் மாற்றிவிடும்.

காரணம் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் வளர்ந்து விட்டால் உடலை உருவாக்கிய அணுக்களை அது உணவாக உட்கொள்ளும் டிபி போன்ற எத்தனையோ கொடிய நோய்களாக வந்து கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது.

அப்போது உணர்வுகள் குறைந்து விட்டால் உடலும் சுருங்கிவிடும். உடலில் வேதனை அதிகரிக்கும் பொழுது எவ்வளவு வலுக் கொண்டவர்களாக இருந்தாலும் சுருங்கி விடுகின்றது. இதெல்லாம் இயற்கையினுடைய சில நியதிகள்.

1.ஆனால் அருள் ஒளியின் உணர்வை நாம் கூட்டக் கூட்ட
2.“என்றும் ஒளியின் சுடராகப் பரவுகின்றது… இருளை மாய்க்கின்றது…”

இருளை மாய்த்து ஒளியின் உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் அதற்குத்தான் இந்தப் பயிற்சியை உங்களுக்கு திரும்பத் திரும்ப கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான். பேரின்பப் பெரு வாழ்வு என்றும் பெருவீடு பெரு நிலை என்றும் அது வளர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும்.

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

 

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டால் அதைத் தீர்க்க “சாங்கிய சாஸ்திரத்தின்படி” இன்று முயற்சிக்கின்றார்கள்.
1.இங்கே கேட்டால் எனக்கு நல்லதாகும்… அங்கே கேட்டால் என்னுடைய கஷ்டங்கள் தீரும்
2.இன்ன இடத்தில் அல்லது இன்ன ஆலயத்தில் யாக குண்டம் இறங்கினால் எனக்கு நல்லதாகும்
3.கற்பூரத்தைக் கொளுத்தினால் எனக்கு நல்லதாகும் என்று
4.தனக்குள் எண்ணும் இத்தகைய எண்ணங்களை வலுக்கூட்டி விட்டு…
5.இன்றைய நிலைகளுக்கு (பிழைப்புக்கு) இதைப் பெற்றால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுவது “அது தீமையே…”

நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டால் அந்த மணம் சிறிது சிறிது நேரத்திற்கே இருக்கும்… அடுத்த கணம் மறைந்துவிடும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் நிலைகள் கொண்டு மேலே சொன்ன வழியில் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பொழுது… இந்த உணர்வலைகள் படரும்… நினைவுகளைக் கூட்டும்… ஆனால் அடுத்து அது எல்லாமே அழிந்துவிடும்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் செயல்படுவோம் என்றால்
1.மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.
2.அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படத் தேவையில்லை
3.பொருள்களை (செல்வம்) நாம் விரயமாக்க வேண்டியது இல்லை.
4.எங்கெங்கோ தேடிச் சென்று அவர் செய்வாரா…? இவர் செய்வாரா…? என்ற எதிர்பார்ப்பில்
5.மற்றவர்களை நாட வேண்டியதில்லை… அவர்களை எண்ணி ஏமாறவும் வேண்டியதில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திர விதிப்படி ஒவ்வொரு ஊரிலும் தெருக்களில் மாரியம்மன் உண்டு… தெருவின் மூலைகளில் விநாயகனையும் அமைத்து இருப்பார்கள்.

முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினாலே போதும்…! மெய் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் உண்மைகள் உங்களுக்குள் பதிவாகி
1.உங்கள் எண்ணங்கள் வலுவாகி… மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து… தீமைகளைச் சுட்டுப் பொசுக்க உங்களால் முடியும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உயிரே கடவுளாக நின்று
3.தீமைகளைப் போக்கும் சக்தியாகப் பரப்பித் தீமையற்ற உணர்வாக மாறும்.

துருவ மகரிஷியுடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் உங்கள் நினைவு கூர்மையாகி (கூர்மை அவதாரமாக) அது வலுவாகும் போது வராகனாக மாறி தீமையான நிலைகளைப் பிளந்து விடும்.

என்றும் அழியாத நிலைகள் கொண்டு பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகளில் தெளிவாக நாம் அடைய முடியும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனாக உருவாக்கிய உயிர் நீங்கள் நுகர்ந்த உணர்வின் அறிவையே எண்ணங்களாக “ஓ…” என்று ஜீவனாக்கி… இயக்கி… உடலாக மாற்றிவிடுகிறது.

மனிதனான பின் எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையைக் கண்டுணர்ந்த மகரிஷிகள் தனக்குள் வலிமைமிக்க சக்திகளைப் பெற்று தீமைகளிலிருந்து நீக்கிடும் நிலைகளைக் காட்டினார்கள்.
1.அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும்
2.தீமைகளை நாம் எளிதில் அகற்ற முடியும்
3.அந்த மகரிஷிகளுடன் ஒன்றாக இணைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செயல்படுத்துங்கள்.

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

மனிதனான நாம் இப்போது எல்லோருக்கும் பல நன்மைகள் செய்திருப்பினும் நன்மை செய்வதருடைய நிலைகள் கடைசியில் என்ன ஆகிறது…?

தன் குடும்பத்திலோ அல்லது ஒரு ஆயிரம் பேருக்கோ நன்மை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

அதிலே ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால்
1.அந்த வேதனைப்படுவர் உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டு அவருக்கு இரக்கப்பட்டு
2.பரிவுடன் அதிகமாக உதவி செய்ய நெருங்கும் போது அவருக்குள் விளைந்ததை இவர் நுகரப்படும் போது
3.அந்த வேதனை உணர்வுகள் இவருக்குள் ஊடுருவி… அவரின் நோயை இங்கே உருவாக்கி விடுகின்றது.

காரணம் கூர்மையாகப் பார்த்துத் தான் அந்த வேதனையை உணர்கின்றார்… உதவி செய்கின்றார். அப்படி உற்றுப் பார்த்து “அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…” என்று பக்தியில் கடவுளே… தெய்வமே… முருகனே… விநாயகனே…! என்று அந்த உணர்வின் தன்மை சொல்லி அங்கே நுகரப்படும் பொழுது இது உருப்பெற்று விடுகின்றது.

இது கூர்மை அவதாரமாக மாறி அவன் உடலில் உருவான தீமை இங்கே உருவாகி அதே நைந்திடும் உணர்வாக நோயாக இங்கே விளைந்து விடுகின்றது.

நாம் என்ன செய்வோம்…?
1.கஷ்டப்பட்டவருக்கு அனைத்து உதவியும் செய்தேனே…
2.கடவுளே…! எல்லோருக்கும் நான் நன்மை தானே செய்தேன்… எனக்கு இவ்வாறு நோய் வந்து விட்டதே…! என்று
3.அந்த வேதனையை நோக்கியே மீண்டு சென்று
4.எந்தத் தெய்வம் காக்கும் என்று எண்ணினோமோ “அவன் காப்பான்…” என்ற நோக்கத்திலேயே குறைகளை எல்லாம் சொல்லி
5.அது நிறைவேறும் என்ற நோக்கத்தில் (எதிர்பார்த்து) வேதனைகளை அதிகமாகஸ் சுவாசித்து
6.நிறைவுபெறும் எண்ணமே இல்லாது அழிந்திடும் உணர்வு கொண்டு அதையே நொந்திடும் உணர்வாக வளர்ந்துவிடுகிறது.

ஆனாலும்… நாம் இப்படி வேதனைப்படும் பொழுது… நமக்கும் இதே போன்று இன்னொருவர் உதவி செய்ய வருவார். “அடப்பாவமே…! இவர் எல்லோருக்கும் உதவி செய்தார்… இவருக்கு இப்படி ஒரு துன்பமா…?” என்று எண்ணும் போது… தன் கதைகளை எல்லாம் சொன்னால் அவர் கூர்ந்து கேட்டால்
1.ஆகா… நீயாவது எனக்கு இரக்கப்பட்டாயே…! என்று
2.கடைசியில் இறந்த பின் நம் ஆன்மா இவர் உடலுக்குள் தான் போகும்.

இப்படி இந்த உணர்வின் தன்மைகள் மாறி மாறி மீண்டும் பூமியின் தன்மைகளில் தேய்பிறைக்கே வந்து கொண்டுள்ளோம்.

பல கோடிச் சரீரங்களில் கூர்மையின் நிலையாக தன்னைக் காட்டிலும் வலிமையான நிலைகளைப் பெற்றுப் பெற்று
1.அதனின் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சி ஆகி மனிதனான பின்
2.இரக்கம் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகளில் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புடன் வளரக்கூடியவன்
3.மற்றவருடைய நோய்களைக் கூர்மையாக எடுத்து உணர்வின் தன்மை அவருக்கு உதவி செய்தாலும்
4.புவியின் ஈர்ப்புக்குள்ளே தான் மீண்டும் சுழலும் நிலை வருகின்றது.

இதிலிருந்து மீளும் மார்க்கம்…?

இதற்குண்டான விளக்கங்களை யாம் இப்போது சொல்ல வந்தால்
1.”நன்மையே செய்யக்கூடாது” என்று நீங்கள் சொல்கின்றீர்களா…? என்ற இந்த வினாவில் தான் எல்லோரும் உட்கார்ந்து இருப்பீர்கள்…!
2.நன்மை செய்தவர் இப்படியானால் “எந்தக் கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறார்…?” என்ற இந்த கேள்விக்குறியில் தான் இங்கே இருப்பீர்கள்.

அதனால் தான் இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) நீ சிந்தித்துப் பார்…! என்று விநாயகன் உருவமாகக் ஞானிகள் காட்டினார்கள்.

ஆதிமூலம் என்பது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றது. இந்த கணங்களுக்கெல்லாம் இந்தக் குணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்… கணேசா…!

நாம் எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ மூஷிகவாகனா அதற்கொப்ப அடுத்தடுத்து உடல்கள் மாறி மாறி வந்தது. இந்த மனித வாழ்க்கையில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?

மான் புலியை பார்த்து அதனுடைய கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வுகளைத் தன் உடலுக்குள் விளைய வைத்து இந்த உடலை விட்டுப் பிரியும் போது கூர்மையாக அந்தப் புலியையே எண்ணி
1.புலியின் உணர்வைச் சுவாசித்த நிலைகள் கொண்டு மூஷிகவாகனா
2.அந்தப் புலியின் உணர்வே இதை வாகனமாக அழைத்துச் சென்று தன்னுடன் அணைத்து
3.இதனுடைய தசைகளை அது உணவாக எப்படி உட்கொண்டதோ அதைப் போல
4.புலியின் உணர்வை இந்த மான் அதிகமாகச் சுவாசிக்கப்படும் பொழுது தன் இனமான சத்தைத் தனக்குள் கவர்ந்து
5.மானின் உயிரான்மா இந்தப் புலியின் உணர்வின் துணை கொண்டு புலியாக உருவாக்கச் செய்து விடுகின்றது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்… கடவுளின் செயலும் இது தான் ஒன்றுக்குள் ஒன்று செல்லப்படும் பொழுது உணர்வின் செயலாக கடவுளாக உள் நின்று இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

 

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.

இருளைப் போக்கும் அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது”

இருளைப் போக்கும் அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது”

 

ஒரு நோயாளியையோ ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தாலோ உங்களால் தாங்க முடியவில்லை. நான் (ஞானகுரு) அத்தனை பேர் கஷ்டத்தையும் கேட்க வேண்டி இருக்கின்றது… எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காட்டிற்குச் சென்று தவமிருந்தோ… அல்லது மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தோ ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று செய்வார்கள்.
மந்திரங்களை ஜெபிக்கலாம்… அந்த உணர்வுகள் உடலில் பெருகும்… உடலை விட்டு ஆன்மா போகும். எங்கே…?
1.இதே மந்திரத்தை மீண்டும் எவன் ஜெபிக்கின்றானோ அங்கே அந்த உடலுக்குள் தான் செல்லும்.
2.சாகாக்கலையாக அந்த உடலில் விளையும். விளைந்த பின் அவன் பெரிய மேதை ஆகி விடுவான் ரிஷியாகக் கூட ஆகிவிடுவார்
3.எல்லாம் தெரிந்தவராகின்றார்… அவர் பிழைப்புக்குப் போக ஆரம்பிப்பார்.

என்னிடம் வந்து கஷ்டங்களை நீங்கள் சொல்கின்ற மாதிரி அய்யா… சாமி… கஷ்டமாக இருக்கின்றது என்று எல்லோரும் அவரிடம் சொல்வார்கள். அவர் அதற்குப் பக்குவம் சொல்லி… பதிலுக்கு “நான் செய்தேன்…!” என்ற புகழுக்கு ஏங்குவார்.

விஷத்தைத் தான் சேர்ப்பார்… விஷத்தின் சேமிப்புகள் அதிகமாகும் அவர் ஆசை அந்த உடலில் பெருகும்… கடைசியில் அதனால் அவர் மடிவார்.

ஆன்மா வெளி வரும். வந்த பின் சாகாக்கலையாக மீண்டும் எந்த விஷத்தின் அளவுகோல் அந்த உடலில் அதிகமானதோ அதற்குத் தக்க உயிரினங்களாகத்தான் உயிர் பிறக்கச் செய்யும் உயிர்.

இதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

இப்படி
1.அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலுக்குப் புகழ் தேடி வாழ்கிறோம் என்றால்
2.மனிதனுடைய ஈர்ப்புக்குள் தான் மீண்டும் வர முடியும்.

ஏன்…?

புகழுக்காக ஏங்கி அதனால் பிறர் போற்றும் நிலை வரும் போது அடுத்தவர்கள் துயரங்களை எல்லாம் கேட்டால் என்ன ஆகும்…?

வீட்டிலே பெண்கள் பிள்ளைகளை எல்லாம் விட்டு விட்டுச் “சாமியாராக” வெளியே வந்து விடுவார்கள். வெளியில் மற்ற இடத்திலே நல்ல வரவேற்புகள் இருக்கும்.

ஆனால் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகல கஷ்டங்களையும் இவரிடம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

1.நுகர்ந்த உணர்வுகள் இவர் உயிரிலே படும்.. பட்டதும் அந்த உணர்ச்சிகள் வருகின்றது
2.வேண்டாம் என்று தடுத்தால் அங்கே கோபம் வரும்.

ஏனென்றால் “சும்மா தொல்லை கொடுக்கின்றார்கள்…!” என்று அதைக் கேட்டவுடனே “சொல்ல வேண்டாம்…” என்று இவர் சொல்வார்… மனதிற்குள் இங்கே போர் ஆகி இவருக்குக் கோபம் வரும்.

ஆனாலும் இவர் இல்லை என்று சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா என்றால் விடமாட்டார்கள்.

இங்கே எத்தனை பேர் என்னிடம் (ஞானகுரு) வந்து கஷ்டம்… கஷ்டம்… நஷ்டம்… என்னால் முடியவில்லை…! என்று அதைத்தான் சொல்கின்றார்கள்
1.எனக்கு அந்த அருள் பெற வேண்டும்
2.இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது…”

நானும் பலமுறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது…!

அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் நான் என் செவிகளில் கேட்டு அந்த உணர்வினை நான் நுகர வேண்டும்… அவர்கள் கஷ்டத்தை என் உடலில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சக்தியை குருநாதர் வழியில் பெற்றிருந்தாலும் கூட
1.கஷ்டத்தைச் சொல்பவர் நிலைக்குத் தான் நான் செல்ல வேண்டி இருக்கின்றது
2.நான் சொல்வதை அவர்கள் பின்பற்றும் நிலை இல்லை என் பையன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.

என் பையன் ஞானியாக வேண்டும்; சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் அந்த அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்… என்னுடைய நிலத்தில் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் நான் தொழில் செய்யும் இடங்களிலே என்னுடைய வாடிக்கையாளர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… என்னிடம் வாங்கிச் சென்ற பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும் சக்தி வர வேண்டும் என்று எண்ணி கேட்கின்றோமா…!
1.யாராவது ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம்
2.யாரும் நினைப்பதில்லை…!

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

 

உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.

காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!

பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.

ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!

ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.

அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.

அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.

இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.

அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!

இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).

ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.

நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.

40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.

பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.

தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.

சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.

1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.

துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!