குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததைப் பதிவு செய்கின்றேன்

குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததைப் பதிவு செய்கின்றேன்

 

மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அருள் ஞானச் செல்வமான ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அழியா ஒளி உடலைப் பெறுங்கள்.

1.பூமியில் மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் நமக்கு வேண்டாம்.
2.காரணம் இந்தப் பூமி நிலை தடுமாறும் நிலைகள் வந்துவிட்டது… ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்.

ஆயிரம் ஆண்டு நாம் வாழ்வதில்லை. ஆனாலும் இந்த உயிரின் தன்மை கொண்டு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால்
1.மனித நினைவு இருக்காது…. அதிலே சிக்கினால் நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரும்.
2.1000 ஆண்டுகளில் சூரியன் பிரிந்து சென்று விட்டால் பிரபஞ்ச வாழ்க்கையும் முடிந்தது.
3.பூமி பனிப் பாறைகளாக மாறி… வியாழன் கோள் போல் ஆகிவிடும். இந்தச் சூரிய குடும்பம் சிதறுண்டு ஓடி விடும்.

இதிலே இருக்கக்கூடிய 27 நட்சத்திரங்களும் அதனுடைய குடும்ப நிலைகளாக வளர்ச்சிக்குப் போகும். அது முழுமை பெற்று சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டால் சூரியக் குடும்பங்களாக மாறி “ஒரு வட்டமாக 2000 சூரியக் குடும்பத்துடன் இணைந்து விடும்…”
1.நமது குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.
2.என்றும் அழியா பெரு வாழ்வு என்ற… நிலையான ஒளிச் சரீரம் பெறுவோம்.

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் நாம் நிலைத்திருப்போம்… அந்த எல்லையை அடைவோம் என்று சபதம் எடுப்போம்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும்
1.எத்தகைய தீமைகளையும் உங்களுக்குள் அணுக விடாதீர்கள்.
2.அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் துரத்தி அடியுங்கள்… அந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.

ஆகவே அருள் ஞான உணர்வை அழியாச் சொத்தாக நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அது என்றுமே நிலைத்திருக்கும்.

குணச் செல்வம் இருப்பினும் கூட சிறிது காலம் தான் இருக்கும்… அதுவும் அழிந்துவிடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் பெற்று விட்டால் அது என்றுமே அழிவதில்லை. அதன் வழியில் நாம் அனைவரும் செல்வோம்.

கேட்டுணர்ந்தவர்கள் இதைப் பெற முயற்சி செய்யுங்கள்… நிச்சயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துங்கள். நம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் வர வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ அதை போல்
1.நாம் அனைவரும் குரு வழியில் குருநாதரின் இயக்கத்திற்குள் ஒரு பெரிய பிரபஞ்சமாகி
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமை வராது நம்மைக் காத்திடும் உணர்வுகளாக வளர வேண்டும்.

ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். உலகைக் காத்திடும் உணர்வை விளைய வைப்போம். இந்த உலகைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் நிலையாக வளர்ப்போம்.

நீங்கள் இதைக் கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் தூசியாக மாறிவிடும் எத்தகைய நஞ்சானாலும் தூசியாக மாறிவிடும். அருள் ஞான சக்திகள் என்றுமே உங்களுக்குள் விளைந்து விடும். பேரானந்த நிலைகள் பெறும் தகுதியை இந்த உடலிலேயே பெற்றிடுவோம்.
1.அருள் செல்வம்… அருள் ஞானம் இந்த உலகம் முழுவதும் பரவட்டும்
2.மகரிஷிகள் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் பரவட்டும்… மெய் உணர்வுகள் மலரட்டும்.

இந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு உலகைக் காத்திடும் உணர்வுகள் எல்லா இடங்களிலும் பரவட்டும். அதை நமக்குள் விளைய வைப்போம் என்று எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

 

இது என்னுடைய இளம் வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி. பக்கத்து வீட்டில் நானும் என் நண்பனும் விளையாடுவோம். எனக்கும் அவருக்கும் 6 மாதம் தான் வயது வித்தியாசம்.

ஆனால் படிப்பிலே நான் மட்டம். அன்று அவர் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார். நான் சரியாகப் படிக்காததனால் அவருடைய அப்பா என்னுடன் சேரக்கூடாது என்று அவரிடம் சொல்வார். நான் அந்த வீட்டிற்குள் சென்றால் “நீ உள்ளே வரக்கூடாது ஓடு…!” என்பார் அவருடைய அப்பா.

இவர் அமீனாவில் வேலை செய்தார். இளம் வயதில் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டுக்குத் தான் நான் செல்வேன். ஆனால் அவருடைய அப்பா என்னைத் துரத்தி விடுவார்.

நண்பர் படிப்பிலே நன்றாகத் தேறி சர்வேயர் ஆகித் தமிழ் நாட்டு அளவில் உயர்ந்த சர்வேயராகக் கடைசியில் வளர்ச்சி பெற்று ரிட்டயர் ஆனார். அவருக்குப் பெண் குழந்தைகள் ஆறேழு பேர்.

அந்த பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வைத்திருந்த பணத்தைச் செலவழித்தார். பையன்கள் இருவர்…
1.ஆனால் அவர்களுக்குப் புத்தி கொடுக்கவில்லை.
2.அவர்கள் செலவழித்துக் கடனை உருவாக்கி விட்டார்கள்.

அவருக்குப் பென்ஷன் வருமானம் 5000 ரூபாய் வருகின்றது. ஆனாலும் பையன்கள் இப்படிக் கடனாளியாக ஆக்கிவிட்டார்களே…! என்று என்ற எண்ணங்கள் வந்துவிட்டது.

அவர்கள் வாங்கிய கடன் ஒரு லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. தான் குடியிருக்கும் வீட்டையாவது சமாளித்து விற்று விட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றார்.

ஆனால் “தாய் தந்தையர் சம்பாதித்த இந்தச் சொத்து இப்படி ஆகிவிட்டதே…” என்று எண்ணுகின்றார்… வேதனைப்படுகின்றனர்…
1.அதையே வளர்த்துக் கொள்கிறார்.
2.வீட்டை விற்ற பின் எண்ணங்கள் சுருங்குகின்றது. நான்கு மாதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

காரணம் ஏழு எட்டு பெண்கள் இவருக்குக் குழந்தைகளாக இருக்கப்படும் பொழுது இவருடைய தாயை இவர் சரியாகக் கவனிக்கவில்லை.

நான் அவரிடம் செல்லும் பொழுது அந்த அம்மா என்னிடம் சொல்லும்.
1.அவனை நன்றாகப் படிக்க வைத்தேன் எல்லாம் செய்தேன் ஆனால் என்னைத் தெருவிலே விட்டுவிட்டானே…!
2.அதனால் தான் அவனுக்குப் பெண் பிள்ளைகளாகக் கிடைத்தது…
3.அவன் செலவழித்துப் பார்த்தால் தெரியும்… அவன் அனுபவிக்கின்றான் என்று சொல்கிறது.

காரணம் தன்னுடைய தாய்க்குச் செலவுக்குச் சிறிதளவு கூடப் பணம் கொடுக்கவில்லை. வீடு இருக்கின்றது எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஆப்பம் சுட்டு அதை விற்று வாழுகின்றது. அதை வைத்துத் தான் அது ஜீவனம் நடத்துகின்றது.
1.தாயினுடைய அந்த மனக்குமுறல் இங்கே விளைகின்றது.
2.ஏனென்றால் பையன் ஒரே பையன் தான்… வேற யாரும் இல்லை.

“இந்த அலைகள் இங்கே வரும் பொழுது…” தொடர்ந்து அதே உணர்வைத் தான் அவருடைய பையன்களும் அவருக்குச் செய்கின்றார்கள்.

பென்ஷன் வந்தது… இருந்தாலும் கடனாகி “வீட்டை விற்று விட்டோம்… பையன்கள் இப்படி செலவழித்து விட்டார்கள்…” என்ற உணர்வுகள் விளைந்து சீக்கிரம் ஆளை முடித்துவிட்டது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்.

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று… அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்குச் “சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்…”

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.சாதாராண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த…?” என்ற சோர்வை விடுத்து
2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்து விடாதபடி “நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம் என்றும்
3.மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கி விட்டு “நிச்சயம் ஒளி நிலை பெறுவோம்…” என்ற ஏக்க உணர்வுடன் நீங்கள் செயல்படுங்கள்.

அவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும்
1.துன்பம் வரும் நேரங்களில்தான் “மெய் ஒளியை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக” ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
2..நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து… “நாம் மெய் ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…!” ஏன்று எண்ணுங்கள்.

அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும்,

அந்த நிலைகளை நாம் பெறுவோம்.

எத்தகைய துன்பங்கள்… எந்த நேரத்தில் வந்தாலும்… நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு நாம் அருள் சக்திகளைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்வோம்.

அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்கு…
1.எந்த மகரிஷிகள் அவர்கள் அதை விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வலைகளை “சிலிகான்களாக…” உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது.

நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம்.

என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும். ஆகவே உலகம் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதை யாம் பரப்புகின்றோம்.

இதையே நீங்களும் எடுத்து… உங்கள் உடலுக்குள்ளும் பெருக்கும் போது… உங்கள் பேச்சும் மூச்சும் பிறரை அது நன்மை பெறச் செய்யும்.

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

 

இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள்… ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்…? அதைக் கொல்ல வேண்டும்…! என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள்.

கறிக் கடைக்குச் சென்று கறி வாங்கச் செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதைப் பார்த்தால் கறி வாங்கச் சென்றவர்களுக்கு “எச்சில்…” ஊறிக் கொண்டே இருக்கும்.

ஆடு அறுக்கப்பட்டு ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால் ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது…? என்பதை நேரடியாக அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில், ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்கள்.
1.அறுக்கப்படும் ஆடோ கத்திக் கொண்டிருக்கும்.
2.ஆடு அறுக்கின்றவரைப் பார்த்து அவனை ஏங்கி… “இந்த மாதிரிக் கொல்கின்றானே…” என்ற உணர்வோடு வேதனைப்படுகின்றது.

கடைக்காரரோ… ஆட்டை வேதனைப்படுத்திக் கொன்று, தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுது இதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின் இந்த ஆன்மா அடுத்தவரின் உடலில் எப்படிச் செல்கின்றது…? என்பதனைக் காண்பித்தார் குருநாதர்.

அதே சமயத்தில் ஆட்டுக் கறி வாங்கப் போன இடத்தில் ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தை “தான் தான் முதலில் வாங்க வேண்டும்” என்று காத்திருப்பார்கள்.

ஆட்டை அறுக்கும் பொழுது ஆட்டினிடத்தில் உருவான வேதனையை நாம் இரசித்து பார்க்கும் பொழுது
1.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு நம்முள் உமிழ் நீராக மாறி நமது சிறுகுடலில் கலக்கின்றது.
2.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறினாலும் அந்த உமிழ் நீருடன் இயக்க அணுக்கள் கலந்து
3.இரத்தமாக மாறும் பொழுது இயக்க அணு “ஜீவ அணுவாக” மாறுகின்றது.
4.ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது.
5.அந்த உறுப்புகளில் எந்த வேதனை வருகின்றது…? என்பதைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர்

நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம் என்பதைப் பார்த்தோம்.

இப்போது மனிதரானபின் இரக்கமற்ற நிலைகளில் ஆட்டைக் கொல்லும் பொழுது அப்படிக் கொன்று, ஆட்டின் உயிரான்மா வெளி வரும் பொழுது கொன்றவரின் உடலிலோ அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது.

ஏனென்றால்…
1.ஆட்டினுடைய எண்ணங்கள் இன்னார்தான் நம்மைக் கொல்லச் சொல்லித் தூண்டினர் என்றும்
2.இவர்தான் நம்மைக் கொன்றார் என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்து
3.அவருடைய உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது.

ஆனால் ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே அவரிடத்தில் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவு பண்பு என்பது துளியும் இல்லை.

இத்தகைய நிலை வரும் பொழுது
1.இந்த மனித உடலின் முதுமைக் காலத்தில் மிருக உணர்வின் தன்மையே மிஞ்சும்.
2.மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும்.
3.பின் மனித உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப இன்று மனிதராக இருக்கின்றார்… நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படிச் சேர்கின்றார்…? என்பதனையும், இது காண்பிக்கின்றது.

1.நீ வேடிக்கை பார்க்கின்றாய்… நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது.
2.உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து சிறு குடலில் கலந்தபின் அந்தச் சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது.
3.பின் பெருங்குடலுக்குப் போகும் பொழுது வேதனை உணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது.
4.நாம் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது…?
5.ஆகாரம் இரத்தமாக மாறி கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுது இரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
6.முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது… உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும்
7.அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது ஏற்கனவே நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின்,
8.அது நல்ல அணுக்களின் தசைகளை… உறுப்புகளை எப்படிக் குறைக்கின்றது…? என்பதை அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால் வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும்.

அதாவது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள் தசைகளைக் கரைத்து எப்படிச் சீழாக மாற்றுகின்றது என்பதனையும் நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து மறுபடியும், நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது…? என்பதனையும் குருநாதர் அங்கே அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.

ஏனென்றால் எத்தனயோ கோடி உடல்களைக் கடந்து மனிதராகப் பிறந்தபின் இரக்கமற்ற செயல்கள் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம்.

தெய்வங்களின் பெயரைச் சொல்லி ஒன்றுமறியாத ஜீவன்களைப் பலியிட்டு எனக்குச் சுகம் வேண்டும் என்று வேண்டி பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.

1.இது போன்ற பிழைகளைச் செய்து
2.தம்முள் தீமைகளையும் விஷத்தையும் வளர்க்கும் நிலையைத் தவிர்த்து
3.நம்முள் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால்
4.இதற்கு முன் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும்…. தீமைகள் வராது காக்க முடியும்.

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்

(1)

ஒரு முறை யாம் குருதேவருடன் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…!” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ தண்ணீரோ ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அங்கே இரயிலில் உடன் வந்தவர்கள்… அந்த நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள் “ஏனம்மா…! என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொன்னவுடன் நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.

சந்தர்ப்பம்… இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது. குருநாதர் இதைக் காண்பித்தார்.

ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

1.மருத்துவர் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள்
2.எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!

ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே…! கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே…?” என்று எண்ணுகின்றார்.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி… “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும் பொழுது…
1.நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்களுடைய நினைவு
2.இந்த நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வருகிறது… “மகராசி…! எனக்கு உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு “துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது.. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

இதையெல்லாம் பார்க்கும்படியாக…
1.குருநாதர் எம்மை “48 நாட்கள்” அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார்.
2.ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணிக்கு யார் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் புகுந்து விட்டது.

புகுந்த பின்… தான் அது எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ அதே வேதனையின் உணர்ச்சிகளை புகுந்து கொண்ட உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்…! ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது… இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று…!

தொடர்ந்து அவருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளிடம் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்க நடப்பதை எல்லாம் அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.

இயற்கையின் இயக்கத்தில்…
1.சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது…? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

(2)

கோலமாமகரிஷி… ரிஷி நிலை எப்படிப் பெற்றார்…? என்று அறிவதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் தியானமிருந்து வந்தோம்.

அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன் பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.

பையனுக்கு ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார். அந்த “இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டுத் தன் கணவர் இறந்து விட்டாரே… இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது…?” என்று அம்மா எண்ணினார்கள்.

இப்படித் தன் கணவருடைய உணர்வையே எடுத்துக் கொண்டபின் சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.

இந்தப் பையனுடைய அம்மாவின் அம்மா… அதாவது பையனுடைய பாட்டி தான் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாட்டி தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன்…! இவன் பிறந்தான் இரண்டு பேரைக் கொன்று விட்டான்…! தொலைந்து போடா நாசமாகப் போகிறவனே…!” என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.

பையனுடைய அக்காவோ… “அவன் என்ன செய்வான் பாட்டி…? அவர்கள் இறந்து போனால் இவன் என்ன செய்வான்…! இவனா அவர்களைக் கொன்றான்…?” என்று பையனுடைய சகோதரி தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.

ஆனால் பாட்டி… “அவனுக்குச் சோறு போடாதே…! வெளியே தள்ளிவிடு… எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்…!” என்று சொல்கிறது.

ஆனால் பையனுடைய அக்கா “தம்பி என்ன செய்வான்…?” என்று கூடுமான வரையில் தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.

பாட்டியோ… “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார். வியாபாரமும் கெட்டது… இருக்கின்ற சொத்தும் போனது…!” என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தன் பேரனை “வெடுக்…வெடுக்…” என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள்.

1.தன் பேரன் மேல் பாட்டிக்கு வெறுப்பு அதிகமான அதே நேரத்தில் தன் பேத்தி மீது அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள்.
2.இதனின் தொடர் கொண்டு பாட்டி இறந்த பின்… பாட்டியின் உயிராத்மா அந்தப் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் என்ன நடக்கிறது…?

பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் சகோதரியும்…
1.தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில்
2.தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடா… நாசமாகப் போடா…” என்று சொன்னாள்.

அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.

ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்கு மாறுவதும் இதனின் உணர்ச்சிகள் வந்ததும் செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும் யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.

அதற்கான இடத்தைக் காண்பித்து
1.“இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… அதனை நீ பார்…” என்று சொல்லியிருந்தார் குருநாதர்.
2.அவர் சொன்னது போன்றே நடந்தது.

இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து நோய் வந்து பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.

பையனோ… ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான்.

ஒதுக்கப்பட்டாலும்
1.தன் மீது பற்று கொண்டு தான் எப்படியும் வளர வேண்டும் என்று மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.
2.‘பாவம் பையன் என்ன செய்வான்…!” என்று எண்ணிய உணர்வு கொண்டு மற்றவர்கள் அவனுக்கு உதவிகள் செய்தனர்.

அவன் சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான்…. அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் அனாதையாக இருந்தாலும் தன் உணர்வின் வேகத்தைக் கூட்டித் தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வை எடுத்து விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்…!

இது நடந்த நிகழ்ச்சி…!

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

 

உதாரணமாக நாம் கண் கொண்டு பார்க்கும் பொழுது பையன் தவறு செய்கின்றான் என்று நாம் நுகர்கின்றோம்.

நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும்… அவன் செய்யும் தவறான குணங்களுக்கும் எதிர்மாறான நிலைகளாக இருக்கப்படும் போது…
1.உயிரிலே பட்டபின் அவனுடைய உணர்ச்சிகள் “அவன் தவறு செய்கின்றான்…” என்று உணர்த்துகின்றது.
2.உணர்த்தியவுடனே நாம் அறிகின்றோம்.

அறிந்தவுடன் அதை நிறுத்திவிட்டு அவன் ஏன் செய்கின்றான்…? என்று சிந்தனை செய்து அவனை நல்வழிப்படுத்த வேண்டும். அதை விடுத்து நாம் வேதனைப்பட்டால் வேதனை என்பது விஷம். நாம் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.

சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டால் கோபமென்ற உணர்ச்சியின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது சிந்தனையற்ற நிலைகளில் அதீதமான உணர்வுகளை நாம் சேர்க்கும் பொழுது… இந்த உணர்ச்சிகள் எல்லாம் நம் உடலில் கலக்கப்படுகின்றது.

அப்படிக் கலக்கப்படும் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்த பின் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுத்தால் நாம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இப்படிப் பண்ணுகின்றானே என்ன பண்ணுவது…? என்று வேதனையில் வெறுப்பான பின் நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் எல்லாம் சோர்வடைந்து… நாமும் சோர்வடைகின்றோம்.
1.செய்வதறியாது மயக்கப்படுவோரும் உண்டு.
2.சமாளிக்க முடியாத நிலையில் பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்படும்… அவனை எண்ணினாலே மயக்கம் வரும்.
3.நம் பக்கத்து வீட்டில் யாராவது இடைஞ்சல் செய்தாலும் மயக்கம் வரும்.

ரோட்டிலே அல்லது பக்கத்து வீட்டிலே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுவதைப் பார்த்தாலே நம் வீட்டிலும் சண்டை வரும். இவைகளெல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடியது.

தவறு செய்யும் உணர்வுகள் பையன் உடலிலே “ரிக்…” அவன் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் வெளிப்படுவது “சாம…” இசை.

நமது உடல் ரிக்… அவன் மேல் அன்பு கொண்டு பரிவு கொண்ட நாம் பேசும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது சாம… இசை.

பாலில் பாதாமைப் போட்டால் பாலிற்கு நல்ல சத்து இருக்கிறது. அதில் ஒரு துளி விஷம் பட்டால் அதற்குச் சக்தியிருக்கிறதா…? நம்மை மயக்கத்தான் செய்கிறது. பாதாமின் வலு இழந்து விடுகின்றது.

1.பையன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகர்ந்தோமென்றால் அதைக் குறைத்துப் பழக வேண்டும்.
2.இல்லையென்றால் அவன் செய்த தவறான உணர்வுகள் நமக்குள் வந்து எதிர் நிலையாகி
3.நமது நல்ல குணத்தை அடக்கிவிடுகின்றது…!

இதற்குப் பெயர் “அதர்வண…”

அவன் இப்படிச் செய்கின்றானே, என்ற உணர்வின் தன்மையை வளர்க்க வளர்க்க “யஜூர்…” ஓர் வித்தாகின்றது. அதனை எண்ணும் பொழுது வேதனைப்படும் உணர்வுகள் நம் உடலில் வித்தாகின்றது.

அவன் இளையவன்… நாம் மூத்தவர்கள்…! “அவன் இப்படிப் பண்ணுகிறானே…” என்ற உணர்வுகளை வளர்த்து நம் உடலில் கலந்து விட்டால் நம் உடலில் இரத்தக் கொதிப்பு வரும்.

நாம் எதாவது எண்ணினால் இப்படியாகி விட்டதே…! என்ற வேதனை இரண்டும் கலந்து வரும்.
1.சிறு மூளை பாகம் செல்லக்கூடிய இடங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டால்
2.அந்த நரம்பு மண்டலம் வெடித்துவிடும்.

யாரை நினைத்து இந்த ஆன்மா வெளியில் செல்கின்றதோ அவர் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

நாம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று நினைத்தோம்.
1.அவனாலே வேதனையை அதிகமாகச் சேர்த்தோம்.
2.இறந்தபின் அவன் உடலுக்குள்ளே போய் இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கும்.

மான் சாந்தமானது… புலி துரத்தும் பொழுது அதே நினைவாகின்றது. துரத்தும் நேரத்தில் அந்த உணர்வுகள் அதிகமாகின்றது. அது இறந்தால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து இந்த உணர்வை நுகர்ந்ததனால் புலியாக மாறுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் புலிக்குண்டான குணம்… அது மற்றொன்றை வேதனைப்படுத்திக் கொன்று சாப்பிடும்.

இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்ட தந்தை… உடலை விட்டுச் சென்றபின் மகன் உடலுக்குள் சென்று அங்கிருக்கும் நல்ல குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடும்.

பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.இந்த உணர்வுகள் அதை பலவீனப்படுத்தி அதையே வளர்க்கும்.
2.அவனுக்கும் கோபம் வரவைக்கும்.
3.இதைப் போல அதன் உணர்வுகள் தவறாகப் போக வைக்கும்.
4.தேடி வைத்த செல்வத்தை அவன் பாதுகாக்க முடியாமல் போய்விடும்.
5.கடைசியில் அவனும் இதே கதியில் மடிவான்.

அதே சமயத்தில் இவர் ஆன்மாவும் உடலை விட்டு வந்தபின் எதன் உணர்வுகள் அணுக்களாக மாறியதோ அந்த உடலை விட்டு வெளி வந்தபின் புலி மேய்ந்து கொண்டிருந்தால் அதன் உணர்வின் வலுக் கொண்டு ஈர்த்துவிடும்.

அந்த உடலுக்குள் அதே உணர்ச்சிக்குத்தக்க அதனுடைய கருவாகி மனிதன் ரூபத்தைப் புலியாக மாற்றிவிடும். நாம் தவறு செய்யவில்லை.

இதே போன்று… அவரைப் பற்றி வீட்டில் அடிக்கடி பேசினால் “பரம்பரை நோய்…” என்று வரும். இரத்தக் கொதிப்பு வந்ததென்றால் மற்றவர்களுக்கும் இதே போல் வரும்.

அவர் இரத்தக் கொதிப்பில் இறந்தார். அதே போல அந்தக் குடும்பத்தில் பரம்பரை நோயாக மாறும்.
1.அந்தக் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும்
2.யாராவது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது குடும்பத்தில் தாய் கருவுற்றிருந்தால் கருவில் வளரும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் விளையும்.

ஆக… மனிதனின் முடிவு எங்கு போகின்றது…? சற்று சிந்தியுங்கள்.

ஒரு குடும்பத்தில் இப்படி ஏற்பட்டால் அடுத்து அந்தக் குடும்ப வரிசையிலும் இதே போன்று பரம்பரை நோயாக மாறும்.
1.ஆஸ்துமா நோய் போன்ற நோய்களும் இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட நிலைகளால் வருவதுதான்.
2.வாத நோய் வருவதும் இதைப் போன்று தான்.

எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த நம் அம்மா அப்பா மனிதர்களாகப் பிறந்து நம்மை மனிதனாக உருவாக்கினாலும் சந்தர்ப்பத்தால் நாம் மனிதனல்லாத உருவுக்குத்தான் நாம் திரும்பிச் செல்கின்றோம்.

வளர்த்துக் கொண்ட உணர்வுகள் எப்படியோ… அதற்குத்தக்கத்தான் மற்ற உடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றத்தான்
1.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.
2.தீமை வரும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அந்த அருள் சக்திகளை உயிரின் வழியாக நுகர்ந்து
4.உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களுக்கும் பாய்ச்சி உடனுக்குடன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.நாம் நுகரும் உணர்வுகள் நோயாக உருவாகாதபடி “அந்தக் கணமே…” மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

 

கோபப்படுவோரின் உணர்வை சுவாசித்தால் நம்மிடத்தில் அது “காளி” ஆகின்றது. அதிகமானால் இரத்தக் கொதிப்பாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால் மனிதரின் கை கால் அங்கங்கள் சுருங்குகின்றன… கோபத்தின் தணலும் அதிகமாகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உடலுக்குள் அணுக்களாகி… வேதனையின் உணர்வுகளே அதிகமாகும்.

ஆகையால்
1.யாரைப் பார்த்தாலும் கோபிக்கும் தன்மையும்
2.தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உணர்ச்சி வசப்பட்டு அழுவதும்
3.அவர்களைக் கோபிப்பதுமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

இவர் யார் மீது அதிகப் பற்று கொண்டு பார்க்கின்றாரோ அல்லது இவர் மீது யார் பற்று கொண்டு பார்க்கின்றனரோ அவருடைய உணர்வுகளில் இது பதிவாகி அந்த உணர்வின் தன்மை அதிகமாகி விட்டால் இவருடைய உயிரான்மா அவருடைய உடலுக்குள் செல்கின்றது.

பின்… உடலில் இருந்த பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை அவரிடத்திலும் உருவாக்குகின்றது.

இவருடைய உடலில் அதை உருவாக்கி அதே உணர்வினைத் தனது உணவாக ஈர்க்கின்றது. இவருடைய உடலில் இந்த ஆன்மா புகுந்து விட்டதால்
1.இவருக்கும் கோபம் அடிக்கடி வரும்
2.ஏன் கோபம் வருகிறது…? என்றே இவருக்குத் தெரியாது.
3.பின் இவருடைய உடலையும் வீழ்த்திவிட்டு வெளியே சென்றபின் மனிதனல்லாத பிறவியைத்தான் அடைகின்றது.

இதில் எத்தகைய உணர்வின் வலுவைச் சேர்த்துக் கொண்டதோ… பரிணாம வளர்ச்சியில் வந்த பொழுது எந்தெந்த குணங்கள் கொண்ட உடலின் உருவங்கள் பெற்றதோ… அதற்குத்தக்க உருவத்திற்கு உயிர் அழைத்துச் சென்று… எங்கே அதனின் உணர்வின் வலு இருக்கின்றதோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு TV நிலையத்தில் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும் பொழுது மறுமுனையில் அதே அலைவரிசையில் நமது TV.யைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அந்த நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.

இதைப் போன்று
1.நமக்குள் எவருடைய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது
2.அதே நினைவின் உணர்வுகளை நாம் சுவாசித்து அதன் வழிகளில் பெருக்கப்படும் பொழுது
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அவருடைய உடலுக்குள் நாம் புகுந்து கொள்கின்றோம்.

இயற்கையின் நியதிகளைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

ஒருவர் தொழிலில் முன்னேற்றமடைந்து அவருடைய மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து… நாம் தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்து அங்கலாய்த்துக் கொள்கிறோம்.
1.பார்…! நான் இத்தனை தொழில் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
2.ஆனால் ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று
3.அவர்பால் உயர்வைக் காட்டி தன்பால் அங்கலாய்த்துக் கொள்ளப்படும் பொழுது… “அந்த எண்ணம்”
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு உணவு கொடுப்பதில்லை… நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.

அங்காளேஸ்வரி என்ன செய்கின்றது…? தன் குழந்தையையே பிளக்கின்றது. குடலை உருவுகின்றது. அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் வேதனையை நுகர்வதனால் நமது உடலினுள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் பிளந்து விடுகின்றோம்.

இதைத் தான் அவ்வாறு உருவமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதாவது,,,
1.அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து
2.அங்கே மடி மீது குழந்தையை வைத்துக் குடலை உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

யாரையோ பார்த்து அங்கலாய்த்து அதனின் உணர்வின் சக்தியை நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது… நமக்குள் வளர்ந்து வரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது அதாவது… “நம்மிடத்தில் உள்ள நல்ல அணுக்களைப் பிளந்து விடுகின்றது…” என்பதனைத் தெளிவாகக் காண்பித்தார்கள் ஞானியர்கள்.

ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும் கோழியும் கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள் என்று நமது நல்ல குணங்களைக் கொன்றிடும் நிலையாக அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பலி கொடுக்கின்றோம்.

பலி கொடுத்தால் அவள் நமக்குச் செய்வாள் என்று அந்த அகங்கார உணர்வுகளை எடுத்துப் பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.

பின்… எதிலும் நம் காரியம் சித்தி ஆகவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

தன் சொந்தமோ நண்பர்களோ அவர்களுடைய உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும்… வெறி கொண்ட உணர்வுகளைப் பெறுவதும்… ஆக இந்த உணர்வின் தன்மையினைக் கொண்டு வரப்படும் பொழுது…
1.எவர் மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ அவருடைய உடலுக்குள்
2.இவர் இறந்தபின்… இவருடைய உயிரான்மா புகுந்து கொள்ளும்.

அதாவது… இந்த ஆன்மா வெளி வந்தபின் “தன் மேல் வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ… அல்லது இவர் மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ…” இது ஈர்க்கப்படுகின்றது.

நோய்வாய்ப்பட்டு இவர்கள் மரணமடையப்படும் பொழுது… அவர் நண்பர்கள் உற்றுப் பார்த்து இதைக் கேட்டறிந்தால் இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா அங்கே “அங்காளேஸ்வரி போன்று…” காட்சி தரும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண முடியாதபடி “ஐயோ என்னை விரட்டுகின்றது… ஏதோ என்னைத் துரத்துகின்றது…” என்ற நிலை வரும்.

வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அவர் உடலுக்குள் சென்றால் இப்படித் தான் செய்யும்.

எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக் கொண்டதோ அதன் ரூபமாகக் காட்சி கொடுத்து
1.“இது வருகிறது” என்றும்
2.சோர்வடையும் நேரங்கள் எல்லாம் “என்னைத் துரத்துகின்றது தூங்க விடுவதில்லை…” என்றும் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல…!
1.எந்தச் சிலையைப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டதோ
2.இன்னொரு உடலுக்குள் சென்றபின் “எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை…?
3.எனக்குக் கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை…” என்றும்
4.இந்த உணர்வு கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
5.அசுர உணர்வின் செயல்களையே அங்கே செயல்படுத்தும்.

ஆகவே இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக அந்த உடலில் வளர்ந்து அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வழியில்தான் மரணங்கள் நேரிடுகின்றது. இதை எல்லாம் மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பலவற்றிற்கு இரையாகி அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து மனிதனாக உருவாகி… பகைமை உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கிப் பகைமையற்ற நிலையாக மாற்றி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி அதன் செயலாக்கமாக…
1.தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
2.துருவ நட்சத்திரமாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்து
4.நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும் வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் வளர்த்து உடலில் உள்ள அணுக்களில் அதை விளையச் செய்து… சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக வாழ்ந்திடல் வேண்டும்

அவ்வாறு வாழ்ந்து வரும் அனைவரும் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும் மலரைப் போன்ற மணத்தையும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

 

நமது கண் காது மூக்கு வாய் உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். “நமது கௌரவம் குறைந்து விடுமே…” என்ற உணர்வு வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது.

பஞ்ச பாண்டவர்கள்தான் நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும், இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது கௌரவர்கள்.

ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதைக் காதால் நாம் கேட்கப்படும் பொழுது நமக்குள் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

அப்போது கௌரவப் பிரச்சினை வந்து
1.“இப்படி நம்மைச் சொல்லிவிட்டானே…!” என்று நமது கௌரவம் குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம்
2.வேதனை என்ற நிலைகள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.

நமது கண் காது மூக்கு வாய் உடல் இவை ஆட்சி புரிந்தாலும் ‘கௌரவப் பிரச்சினை…” என்று வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

நமக்குப் பணம் தர வேண்டியவர் அதைத் தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை நாம் தருகிறோம் என்று கூறியவருக்குத் தரவில்லை என்றால் “கௌரவம் போய்விடுமே…” என்று ஒரு பக்கம் வேதனை.
1.நமக்குத் தர வேண்டியவன் தருகிறேன் என்று சொல்லித் தரவில்லையே என்று கோபமும்
2.”ஏமாற்றிவிட்டானே…” என்ற வேதனையும் சேர்ந்து எலிப்பொறியில் சிக்கியது போன்று ஆகி விடுகின்றது.
3.இதனின் வேதனைகளாகும் பொழுது அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி “அவன் நமக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது.

“அவன் நமக்குத் தீமைகள் செய்தான்” என்று எண்ணினால் அவனுக்கு புரை ஏற்படுகிறது.

அதைப் போன்று நாம் நமக்குத் தர வேண்டியவனிடம் “எனக்குப் பணம் தராமல் இருந்து விட்டாயே…!” என்று உற்று நோக்கும் பொழுது அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
1.அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும்… அவருடைய வியாபாரம் குறையும்.
2.அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.

அவரும் எண்ணுவார்… “அவருக்குக் கொடுக்க வேண்டுமே சரியான காலத்தில் அவருக்குக் கொடுக்கவில்லையே…” என்று நம்மை எண்ணி எண்ணி வேதனைப்படுவார்.

வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில் அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது நம்மைப் பற்றிய நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.

இப்படி நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அவர் நோயுடன் இருக்கும் பொழுது “நீ வேண்டுமென்றே எனக்குப் பணம் தரவில்லை…!” என்று நாம் கடுமையாகப் பேசும் பொழுது அதனின் உணர்வுகள் அவருக்குள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகி விடுகின்றது.

அது மட்டுமல்லாமல் நம்மைப்பற்றிய நினைவு கொண்டு வேதனையின் உணர்வுகளை வளர்த்து அது அவருள் கடுமையான நோயாக மாறி
1.அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால் அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும்.
2.வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவருடைய உயிராத்மா நம்முள் வந்து விடுகின்றது.
3.அவர் தமக்குள் சேர்த்துக் கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை இங்கே உருவாக்கி விடுகின்றது.

இது ஒரு பக்கம்.

அதே சமயம் “இவர் கேட்டாரே அவருடைய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே…” என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் சாப அலைகளாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள்தான் மற்றவருக்குப் பணம் தர வேண்டிய நிலையில் கொடுக்க முடியாத பொழுதும் உருவாகின்றது.

அவருடைய சாப அலைகள் வளர்ச்சி அடைந்தபின் அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து பேய் மனம் என்ற நிலையில் நோயின் நிலைகளை நம்முள் உருவாக்கி விடுகின்றது.

அதன்பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத் தான் “சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன்…” என்று சிவதத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதனையின் உணர்வை நுகர நுகர அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ அதன் நிலைகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேதனையின் உணர்வுகளால் நம்மிடத்தில் “விஷத்தின் தன்மையான நரகாசுரன் தான்…” வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும்.

காலை 4.00 மணிக்கெல்லாம் எழுந்து “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச் செய்தல் வேண்டும்.

1.அதன் பின் யார் மீது பகைமை கொண்டோமோ அவர்பால் நினைவைச் செலுத்தி
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும்
4.என் பணத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்கும்போது
5.விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

 

உதாரணமாக ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால் அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம்.

“பாவி எனக்குத் தீங்கு செய்தானே… அவன் உருப்படுவானா…!” என்று கோபத்தின் எல்லை கடந்து உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம் (சாபமிடுகின்றோம்).

அவ்வாறு நமக்குத் தீங்கு செய்தவனை எண்ணி அது உடலில் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…” என்று நமக்குள் பதிந்தாலோ அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.

இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரையோடி அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும்.
1.ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில்
2.”பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்” என்று எண்ணினால்
3.இது அவன் செயலாக்கங்களுக்கே தடையாயிருக்கும்.

இப்பொழுது நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப்பட்டுப் பிரிந்திருந்தாலும் சில நேரங்களில் புரையோடும்.

புரையோடும் பொழுது சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது. எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது “நமது உறுப்பின் இயக்கங்களே தனி…”

நண்பனாக இருக்கும் பொழுது அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி அது தணித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நிலையின் இயக்கங்கள். மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது.

நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்யும் பொழுது நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று பற்றின் தன்மையால் தீமையே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலோ “பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும் பொழுது…”
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.அந்த உடலிலிருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.

சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே நஞ்சினைப் பிளந்துவிடுவது போன்று… மனிதன் தன் உணர்வின் செயலால் தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது அதனைப் பிரித்துத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் தன்மை பெற்றவன்.

கோளாக இருந்து நட்சத்திரமானதைப் போன்று
1.மனிதன் தன் உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து
2.தீமையைத் தன்னிடமிருந்து வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன்.

இந்த ஆற்றல் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால் விளைவதுதான்.

இதைத்தான் “மாரியம்மன்” கோவிலில் நமக்குக் காண்பிக்கிறார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது, அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி — மாரி) தீமை செய்யும் நிலையாக விளைவதைப் போன்று
1,துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அது நமக்குள் மாறித் தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.

ஆகவே நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பற்றுடன் பற்ற வேண்டும். அதைப் பற்றுடன் பற்றினால் நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும்.

இந்த வாழ்வில் பெற வேண்டிய மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறச் செய்ய முடியும்.

எல்லையில்லா பேரண்டத்தில்…
1.ஒரு எல்லையோடு நின்றாடும் இந்தப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும்
2.மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.
3.மெய் ஞானிகள் உரைத்த வழியை அனைவரும் பின்பற்றிப் “பெரு வீடு பெரு நிலை” அடைவதற்கு எமது ஆசிகள்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!