இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

 

குருநாதர் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞான உணர்வை உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.

குமாரபாளையத்தில் நாராயணசாமி என்பவர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.

நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு. குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக அவர்களை அழைத்துச் சென்றோம்.

மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில் இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள் புலிகளைப் பார்க்கவில்லை.

அவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள் என்று கருதி யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில் 10 வயது 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால் வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

1.யாம் அவர்கள் புலியைப் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம்.
2.எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள் அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன்
3.இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று விருட்டென்று ஓடி மறைந்தன.

புலிகள் ஓடுவதைக் கண்டு யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம் அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.

மாதேஸ்வரன் மலைக்கு அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.

காட்டிற்குள்ளும் மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது…? என்பதைத் தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால் சாமி “கதை சொல்வதாக…” எண்ணக் கூடாது.

இயற்கை எப்படி இயங்குகின்றது…? வாழ்க்கையில் வரக்கூடியது அனைத்தும் என்ன செய்கின்றது…? என்பதை குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.

1.காட்டிற்குள் சென்றால் மிருகங்கள் கட்டுப்படும்.
2.ஆனால் மனிதர்களிடம் பழகும் பொழுது அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.

அதனால் நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே நமது உணர்வுகள் கொண்டுதான் நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஆகையால் “ஒருவர் தவறு செய்கிறார்…!” என்று எண்ணும் பொழுது நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. ஆகவே
1.ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.இதனால் அவருடைய உணர்வு நம்மைத் தாக்குவதில்லை.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கித் தீமைகள் வராது காக்கும் நிலையாக… உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக… ஞானிகள் காண்பித்த அருள் வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும்… தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை பாவ வினைகளை தீய வினைகளை நீக்கி… அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று…
1.உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும் நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
2.நீங்கள் இவ்வாழ்க்கையில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக
3.பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

 

உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களிடம் பேசும் பொழுது சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் இது போன்ற உணர்வுகள் வளர்ந்து உங்கள் நல்ல குணங்கள் அடைபட்டு விடுகின்றது.

அடைபட்டுக் கிடந்த அந்த நல்ல குணங்களை மீட்டத் தான் யாம் உபதேசித்தது. உபதேசித்த அந்த உணர்வுக்கு வலுக் கூட்ட உங்களுக்குள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் எல்லா குணங்களிலும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நட்சத்திரங்களுடைய உணர்வுகளையும் தூண்டி
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து
3.எல்லோருடைய உள்ளங்களிலும் அதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்… எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் வந்திருப்பீர்கள்.

ஒருவருக்கு வீட்டிலே கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்குத் தன் பிள்ளை சொன்னபடி கேட்காதபடி இருக்கும்… ஒருவருக்கு நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்கு உதவி செய்து அதனால் தொழிலில் தொல்லைகள் அனுபவித்து அதனால் கஷ்டமாக இருக்கும்… ஒருவாருக்கு வியாபாரத்தில் மந்தமாக இருந்திருக்கும்… எதை எடுத்தாலும் எனக்குத் தொல்லையாகவே இருக்கிறது…! என்றும் இப்படி எத்தனையோ பேர் வந்திருப்பீர்கள்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்குள் உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசத்தைக் கொடுத்து
3.மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த இடத்தில் அடைத்து வைத்து உங்களுக்குள் சக்தி கூடும்படிச் செய்கின்றோம்.

குழம்பிலே புளிப்பு காரம் கசப்பு துவர்ப்பு உப்பு இவையெல்லாம் போட்டு அதை எப்படி ருசியாகக் கொண்டு வருகின்றோமோ இதைப் போன்று
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகளை நுகரும்படிச் செய்து
2.அதைப் பெறுவதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்து
3.இந்த உணர்வினை ஒலிகளாக எழுப்பும்படி செய்து அதைச் சூரியனுடைய காந்த சக்திகள் கவரும்படிச் செய்து
4.கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளிலே ஊடுருவச் செய்து
5.ஊடுருவிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் இருக்கும் 1008 குணங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

எனது குருநாதர் எனக்கு எப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ அதே போலத்தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டும்படிச் செய்து… அதைத் தட்டி எழுப்பி துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் உடலிலிருந்து நீங்க வேண்டும் என்று… மகரிஷியின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… தீமைகள் அகன்று நன்மையை உருவாக்கச் செய்கிறோம்.

உங்கள் அனைவரையும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பும்படி செய்து அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் நிரப்பி அந்த அடிப்படையில் நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலில் வந்த துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

எனக்குத் துன்பத்தைக் கொடுத்துத் தான் குருநாதர் எல்லாமே தெரிய வைத்தார். ஆனால்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த முறைகளைக் கையாண்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்றுத் தீமையிலிருந்து மீண்டு உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்தேன் என் துன்பம் நீங்கியது நான் நன்றாக ஆனேன் என்று நீங்கள் சொல்ல முடியும்.
1.கஷ்டம் இல்லாது நீங்கள் பெறுகிறீர்கள்.
2.ஆகையினால் நான் லேசாகச் சொல்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
3.வாக்குடன் கூடி உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… அந்த வாக்கை நீங்கள் மீண்டும் எண்ணினால் சீக்கிரம் நல்லதாகும்.

எனக்குத் தொல்லை கொடுத்தாய்… “நீ உருப்படுவாயா…?” என்ற அடுத்தவர் சொல்லை வாங்கிக் கொண்டோம் என்றால் அது பதிவான பின் வியாபாரத்தில் மந்தம் உடலில் கை கால் குடைச்சல் என்று உங்கள் உடலை எப்படி அது கீழே கொண்டு போகின்றதோ இதே மாதிரி அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு
1.சாமி சொன்னார்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைத்து
2.அதை எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்தச் சக்தி உங்களுக்கு உதவி செய்யும்.

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

 

மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.

இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.

எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.

எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ… பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ…
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ… நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.

அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.

மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.

அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.

குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

 

நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். “ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.

ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் “நண்டு மாதிரி இருந்து… எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?

1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.

நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை… “இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.

உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுது… அதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.

மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்…
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.

அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது… கண் திருஷ்டி பட்டுவிட்டது… எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.

ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது… ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.

ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்… அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.

அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக “நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

 

“சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கின்றீர்கள்” என்று நம் மூலமாக அந்த உதவியைப் பெற்றவர் என்ன செய்வார்…?
1.வேறு யாரும் உதவி செய்யவில்லை… இந்த மனிதர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று கடைசியிலே அவர் எண்ணினால் போதும்.
2.அந்த ஆன்மா நேராக நம் உடலில் புகுந்து விடும்… அவர் உடலில் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இங்கே செயல்படுத்தும்.

ஒரு வயதான கிழவியாக இருந்தது. அவர்கள் வீட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் பெரியம்மா என்ற நிலையில் நாம் சந்தர்ப்பத்தில் உதவி செய்தோம் என்றால்… “இறக்கப்படும்போது அந்த அம்மாவிற்கு நம் நினைவு தான் வரும்…”

அதற்கு முன்னாடி உதவி செய்திருக்க மாட்டோம். கடைசியிலே அது இறப்பதற்கு ஒரு நான்கு நாளைக்கு இந்த உதவி செய்திருந்தால் போதும்…! மற்ற நிலைகளை எல்லாம் மறந்து இது அந்த அம்மாவின் முன்னணியில் வந்து விடும். அது எந்தெந்த வேதனைப்பட்டதோ அதெல்லாம் நமக்குள் வந்து இயக்கத் தொடங்கும்.

இப்படிப் பல நிலைகள். ஏனென்றால் ஒரு மனிதன் இறந்து பின் அவன் இன்னொரு உடலுக்குள் வந்தால் மனிதனாக உருப் பெறும் கருவாக உருவாவதில்லை.

அந்த உடலுக்குள் சென்று அவனை உருக்குலையச் செய்து அவனைச் சின்னாபின்னமாக்கி இந்த உடலிலே விஷத்தைக் கலந்து… ஒரு மிருகம் எப்படி விஷமான சத்து கொண்ட தன் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றதோ அது போன்று மனித சிந்தனைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து மனித நிலை அற்ற பிற்பாடு மிருகத்தின் ஈர்ப்புக்குள் செல்கிறது.

உதாரணமாக பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனிதருடைய நினைவு இழக்கப்பட்டு பாம்பினுடைய ஈர்ப்பிற்குள் சென்று பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

ஆனால் அதே சமயத்தில் “கொசு கடிக்கிறதே…” என்று கொசுவை நாம் அடிக்கிறோம் என்றால் அது நம் உடலுக்குள் வந்து கொசு மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்று தான் ஒன்றுக்குள் ஒன்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் ஏப்படி எல்லாம் மாறி வருகிறது என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து எப்படி நாம் தப்புவது…?

ஒரு சிலர் அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் “பேயாகச் சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன்…! என்று பேசுவார்கள். எனக்கு இப்படிச் செய்தார்களே பாவிகள்…! என்று இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகிறது.

குடும்பத்திற்குள்ளோ மற்றதற்குள்ளோ எதைச் செய்தாலும் இந்த உணர்வுடன் இறந்தபின் அதே உணர்வின் ஒலி கொண்டு இங்கே வந்துவிடுகிறது. அதற்குத் தான்… நீ செய்த தொல்லைகளுக்குப் பேயாகப் போ என்று ரிஷி சாபமிடுவதாகக் காட்டுகின்றார்.

பேயின் தன்மை அடைந்தபின்… ஐயனே எனக்கு வேறு வழி இல்லையா…? என்று தன் விமோசனத்திற்குக் என்று கேட்கப்படும் பொழுது “உயர்ந்த நிலைகள் கொண்ட ஒரு மனிதனை நீ தீண்ட எண்ணுவாய்… அவன் நிழல் பட்டு மீண்டும் மனித நிலையை அடைவாய்…!” என்று ரிஷி சொல்வார்.

நாம் நல்லதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த நன்மை செய்த நிலைகள் கொண்டு இன்னொரு ஆன்மா இந்த உடலுக்குள் வந்து இந்த உணர்வின் தன்மை இயக்கமாகின்றது.

அதாவது பாலிற்குள் விஷம் பட்டால் எப்படி அதனுடைய நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ இதைப் போன்று “நாம் உதவி செய்த நிலைகள்…”
1.வேதனையான இயக்கத்தால் இந்த உடலுக்குள் வந்துவிட்டால்… அது அதனின் நிலையையே இங்கே உருவாக்குகின்றது.
2.நம்முடைய உணர்வும் அதனுடைய உணர்வும் இரண்டும் கலந்து உயிரிலே படும்போது “இரண்டு எண்ணங்கள்” வருகின்றது.

பேய் பிடித்தவரைப் பாருங்கள். நல்லா இருப்போம் என்று நினைப்போம்… ஆனால் என்னை எங்கேயோ இழுக்கிறதே… என்னை எதுவும் செய்ய விட மாட்டேன் என்கிறதே… கை கால்கள் குடைகின்றதே… இடுப்பு எல்லாம் வலிக்கின்றதே… என்னைத் தூக்கு போடச் சொல்கின்றதே… என்னை எங்கேயோ ஓடச் செய்கின்றதே என்று பேசுவதெல்லாம்
1.தன் நினைவுகள் நல்லதாக இருந்தாலும் அந்த உணர்வுகள் இவ்வாறு இயக்குகின்றது.
2.நாம் தவறு செய்யாமலேயே இப்படி நடக்கின்றது.
3.இன்னொரு ஆன்மாவின் உணர்வின் தன்மை இவ்வாறு இயக்குகின்றது.
4.அதை நமக்குள் அடக்க வேண்டும். அதற்கு நமக்குச் சக்தி வேண்டும்.

அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் அந்த மெய்ஞானிகள் அருள் வாக்குகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஒன்றும் தெரியாத மூடனிடத்தில் (என்னிடத்தில்) அந்த மெய் ஞானிகள் உணர்வை ஊட்டி அந்த வித்தினை வளர்க்கும் முறையைக் காட்டினார் “எனது குருநாதர் ஈஸ்வரபட்டர்…”

அவர் காட்டிய அந்த உணர்வின் ஓளியை… அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த ஒளியான வித்தைத்தான் இப்போது உபதேசமாகக் கொடுத்து உங்கள் உடலுக்குள் விதைக்கின்றோம்.

அதன் மூலம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்கே இந்த நிலை.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அடக்குங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்… இருளான நிலையிலிருந்து விடுபட முடியும்.

அத்தகைய சந்தர்ப்பத்தை… அந்த நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியான பயிற்சியைக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

 

மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து… நமக்குள் பரிசுத்த நிலைகளை ஊட்டி… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி… உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி… இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற பின்… எந்தத் தீங்கும் நேராதவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

யாம் கொடுக்கும் நல் வாக்கினை எண்ணி “அதைப் பெற வேண்டும்” என்று ஏங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விலக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை உருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!

ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.

அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு “உபசாந்திகளைச் செய்… யாகத்தைச் செய்தால் மீள்வாய்… இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.

அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.

இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் “விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?

ஆனால் அதை எப்படி எதன் வழிகளில் நடத்த வேண்டும்…?

நம் உணர்வின் தன்மை ஒளியாக… ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான்… “இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர… புற கேள்விகளைச் செய்து அல்ல…!”

அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கரர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.உணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.

இது ஆதிசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இதைச் சொல்கின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும்… வயிற்று வலியாக இருந்தாலும்…
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.

கேன்சர் நோய் வந்து விட்டது… உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது… “வேதனை… வேதனை…” என்று எண்ணுவது போல “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக எனக்குள் விளைய வேண்டும் என்று… கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச் செலுத்த வேண்டும்.

கண்களை மூடி… கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.

1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த… அந்தத் தீய நிலைகளை மாற்ற… அதனின் தன்மை கொண்டு “நன்மை பயக்கும் நிலையை” நாம் பெற முடியும்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவு தான் சுவாசமாகி… அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி… அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.

1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.

பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்போது அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.

நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு “இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது… தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது. அதைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாதபடி கடவுள் செய்வார் யாரோ செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும் என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.

1.நல்ல நேரம் எது என்றால்…? “நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்

 

துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.

இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.

1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.

நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.

ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.

நோயாளியை அன்புடன் பண்புடன் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.

நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.

நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”

அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.

பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.

இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா…? அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கின்றோமா…?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்…!
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?

 

வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.

வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”

பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.

பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?

உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.

ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.

மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”

வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.

அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”

சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.