தொழில் செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழில் செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

 

தொழிலில் நஷ்டமானால் “நஷ்டம் ஆகிவிட்டது…” என்று எண்ணத்தை விடுத்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஈரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுவாக்க வேண்டும்.

அந்த நஷ்டத்தால் ஏற்பட்ட வேதனையை துருவ நட்சத்திரத்தின் சக்தியைன் எடுத்து அப்புறப்படுத்திய பின்
1.நமக்குச் சிந்திக்கும் திறன் வருகின்றது
2.அடுத்து எப்படி அதை சமாளிக்க வேண்டும் என்ற ஞானமும் வருகின்றது
3.அந்த ஞானத்தின் வழி கஷ்டத்தை நிவர்த்திக்கும் சக்தி நமக்குள் வருகின்றது.

நஷ்டம் வருகிறது என்றால் இவ்வாறு செய்யாதபடி நம் நண்பர்களிடத்தில் இதைச் சொன்னாலோ அவரும் திரும்ப அந்த வேதனைப்படும்படி தான் சொல்வார்.

அந்த வேதனையை மீண்டும் சொன்ன பிற்பாடு
1.அடுத்து அவர் ஏதாவது நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும்
2.பணம் கொடுத்தால் திரும்ப வருமா…! என்று சந்தேகப்பட்டு “என்னிடம் இப்பொழுது பணம் இல்லை…” என்று சொல்லிவிடுவார்

காரணம்… அவரை பாதுகாத்துக் கொள்ளத்தான் அவ்வாறு செய்வார். அந்தச் சமயத்தில் நம்முடைய சிந்தனைகள் (கஷ்டம் என்று சொன்னது) நமக்கு நாமே தண்டனை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

இதைப் போன்ற பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய சொல்…
1.கஷ்டங்களைச் சொல்லாதபடி இந்தக் காரியங்கள் இப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுப் பழக வேண்டும்
2.அப்பொழுது நமக்கு உதவி செய்யும் பண்புகளை அங்கே உருவாக்கும்

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

சில பேர் “தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் எண்ணி… இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு… எனக்குப் பணம் கொடுங்கள்…!” என்று கேட்டபின் அவருக்குக் கொடுத்தால் அடுத்து அவரிடம் திரும்ப வாங்க முடியாத நிலை ஆகிவிடும்.

நம் உடலின் ஈர்ப்பிற்குள் வட்டத்தில் இருந்த இந்த உணர்வுகள் தான்
1.அந்த (நமது) உணர்வே நம் உடலுக்குள் எதிரியாக மாறி எதிரிகளை உருவாக்கிக் கொண்டு
2.நமக்கு ஏற்படும் நன்மைகளை வரவிடாதபடி தடுக்கும்

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்தெல்லாம் தப்புவதற்கு ஆத்ம சுத்தியை நீங்கள் அவசியம் கடைப்பிடித்துப் பழக வேண்டும். காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரவர்கள் வசதியைப் பொறுத்து எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொழில் நஷ்டம்…! என்று சொல்வதைக் காட்டிலும் அந்த அருள் சக்தியைப் பெற்று வளர்த்துக் கொண்ட பின் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற ஞானமும் சிந்திக்கும் ஆற்றலும் வரும்.

நம்மிடம் பொருள் வாங்கியவர் அதற்குண்டான பணம் வர வேண்டும் என்றாலும்
1.அவர்களுக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள்ளும் அந்தத் தொந்தரவு வருவதில்லை… நாம் எண்ணும்போது அவர்களுக்கும் நல்ல நிலை ஏற்படும்.

ஆனால் கொடுத்தேனே… சமயத்தில் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று வேதனைப்பட்டால் இந்த வேதனை அவருக்குள்ளும் பாய்ந்து அவருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து… அவருடைய வரவும் குறையும்… அதனால் நமக்கு வர வேண்டிய பணமும் தடைப்படும்.

இதை எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஆகவே வாடிக்கையாளர்கள் எல்லோரும் நல்ல நிலைகள் பெற வேண்டும்… பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று நாம் தியானித்தால் அவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்… “நம் பணம் தேடி வரும்…”

உதாரணமாக கடன் கொடுத்தவர்களில் கொஞ்சம் “போக்கிரித்தனம்” செய்பவர்களாக இருந்தால்
1.அவன் கேட்டால் கொடுக்கவில்லை என்றால் உதைப்பான் என்று தெரிந்தால் பணம் அவர்களுக்கு முதலில் தேடிப் போகும்
2.ஆனால் நீங்கள் இரக்கம் ஈகை என்று இருந்தால் உங்களிடம் “சொல்லிக் கொள்ளலாம்” என்று வரும்.

அவர்களுக்குப் பணம் போகும்… உங்களுக்குச் சங்கடம் தான் வரும். பார் இவ்வளவு தூரம் செய்தேன் கேட்டவுடனே அவனுக்குக் கொடுக்கின்றான் நமக்குக் கொடுக்கவில்லையே…! என்று மீண்டும் வேதனை தான் வரும்.

ஆகவே பணம் தராதவரைப் பற்றி அந்த வேதனையை நாம் அதிகமாக எடுக்க எடுக்க அவருக்குத் தப்பி வந்தாலும் கூட மீண்டும் கடன் கொடுக்க முடியாத நிலை ஆகிவிடும். அவரும் இருப்பதைத் தட்டி பறித்துச் சென்று விடுவார். அடுத்து நம் காசைக் கூடப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.

இதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

ஆகவே ஆத்ம சுத்தி செய்து அவர்களுக்கும் பணம் (வருமானம்) வர வேண்டும்… எல்லோருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இப்படிச் செய்யச் செய்ய…
1.உங்களுக்கு மன உறுதி கிடைக்கின்றது
2.தொழிலும் மன சங்கடம் இல்லாதபடி நடத்த முடிகின்றது
3.அதற்கு வேண்டிய வரவு வரும்
4.மனம் வலிமை பெறும்போது உங்களைத் தேடி அந்தக் காசு வரக்கூடிய சந்தர்ப்பமும் வரும்.

வேதனை என்ற விஷத்தின் இயக்கமும் விஷத்தை வென்ற துருவ நட்சத்திரத்தின் இயக்கமும்

வேதனை என்ற விஷத்தின் இயக்கமும் விஷத்தை வென்ற துருவ நட்சத்திரத்தின் இயக்கமும்

 

ஒருவருக்கு நன்மைகளைச் செய்கின்றோம்… அதனால் நாம் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் நம்மிடம் உதவி பெற்ற அந்த மனிதனோ அவருடைய சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார் அல்லது வேதனைப்படும்படியாக ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

வேதனை என்பதே விஷம். விஷத்தை உட்கொண்டால் எப்படி மயங்கச் செய்யுமோ இருளடையச் செய்கின்றதோ சிந்திக்கும் தன்மையையும் இழக்கச் செய்கின்றதோ இதைப் போன்று நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் சிந்தனை குறைகின்றது… நம் சொல்லின் தன்மையும் மறைந்து விடுகின்றது.
1.மறைந்த பின் எவ்வளவு தான் நல்ல உபதேசங்களைக் கொடுத்தாலும்
2.சரியான வழியைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

பாலில் விஷம் பட்டால் குடிப்போரை அது மயங்கச் செய்யும். நல்ல பாலை அதிலே அதிகமாக ஊற்றும் பொழுது அந்த விஷத்தின் தன்மை குறையும்.

அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ள பால் அனைத்தும் வீணாகி விடுகிறது. அந்தப் பால் முழுவதுமே விஷம் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
1.ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்றினால் விஷம் சிறுத்து விடுகிறது
2.அந்த விஷம் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது

அது போல் ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் ஒரு தடவை வேதனைப்பட்ட நிலைகளை நல்லதாக்க முடியும்.

இல்லை என்றால் வேதனை தாங்காது… தாங்குமோ…? அதற்குண்டான மனமில்லை. வேதனையே ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறுகின்றது வேதனை என்ற விஷத்தை நுகரப்படும் பொழுது கண்களைப் பார்த்தால் கரு நீலமாகத் தெரியும்… ஒளி மங்கியே தெரியும்.

இத்தகைய வேதனைப்பட்டு விட்டால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு கணக்கையோ பார்த்துப் படிக்க வேண்டும் என்று
1.அந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் அந்த எழுத்துக்கள் சீராகத் தெரியாது
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்புத் தப்பாகத் தான் படிக்க வேண்டி வரும்.

இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலிமைப்படுத்த வேண்டும்

ஆக… ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தாலும் அவர் தவறான வழியில் செயல்படும்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படுகின்றோம்.

சந்தர்ப்பம் அதை நுகரப்படும் பொழுது வேதனை உருவாக்கும் அணுவாக உடலில் உருவாகின்றது அந்த வேதனையான அணு உருவாவதற்கு முன்
1.பிறர் படும் வேதனைகளைப் பார்த்த உடனே
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.புருவ மத்தியில் இடைமறித்து உயிருடன் ஒன்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று சிறிது நேரம் அதை ஈர்க்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா பெற வேண்டும் என்று நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்திய பின்… நம்மை வேதனைப்படும்படி யார் செய்தார்களோ அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும் என்று
1.நாம் அவனைப் பற்றி எண்ணி வேதனைப்பட்ட உணர்வை
2.இவ்வழியில் நமக்குள் இணைத்து அந்த அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய… நமது உயிர் “ஓ” என்ற ஜீவ அணுவாக மாற்றுகின்றது ஆனால் உற்றுப் பார்த்து வேதனை என்ற உணர்வு வந்தவுடனே விஷத்தின் தன்மை அதிகம்.

ஆனால் அந்த விஷத்தை முறிக்கும் வல்லமை பெற்றது நட்சத்திரத்தின் ஆற்றல்.

உதாரணமாக விஷத்தின் தன்மை ஒரு மனிதனுக்குள் சாடி விட்டால் எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து அதன் மீது இரண்டு கால் பாதங்களை வைத்தால் உடலுக்குள் சென்ற விஷத்தை முறித்து விடுகின்றது.

ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷத் தன்மை ஜாஸ்தி. விஷத்தைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு நல்லதை அதனுடைய சாணமாக மாற்றுகிறது.

இது எல்லாம் வைத்தியர்கள் தான் கொடுக்கும் மருந்துகளில் பேதிக்கோ மற்ற நிலைகள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த நிலை ஆகிவிடும்
1.அப்பொழுது எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து அதில் சிறிது நேரம் பாதத்தை வைக்கும்படி செய்வார்கள்… அதை முறித்து விடும்.
2.உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை… பாதத்தில் வைக்கப்படும் பொழுது அதை முறிக்கும் ஆற்றல் வருகிறது
3.எருமை மாட்டு சாணத்திற்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு
4.நஞ்சினை மாற்றிடும் சக்தியாக அதனுடைய சாணம் வெளிப்படுகிறது

வேதனைப்படும் உணர்வுகளை நாம் எப்போது நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தி கண்கள் உற்று நோக்கும்… அதே வேதனை உணர்வை நுகரச் செய்யும்

உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் சுழலத் தொடங்கும். உடல் முழுவதும் அந்த வேதனை சுழலப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகின்றது.

விஷம் ஊடுருவி எதிலும் கலந்துவிடும்
1.நல்ல குணங்களை அதற்குப்பின் என்னதான் எண்ணி எடுத்தாலும் இந்த விஷம் அந்த நல்ல குணங்களை அடக்கிவிடும்.
2.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்லி விட்டால்
3.அடுத்தாற்போல் “அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… விட்டு விடுங்கள்… என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…!
4.உங்களுக்கு என்ன தெரியும்…? என்பீர்கள்.

இது எல்லாம் இயற்கையின் நியதிப் பிரகாரம் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இப்படித் தான் இயக்கும். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இத்தனை விளக்கங்களையும் சொல்கிறோம்.

சம்பாதிக்க வேண்டிய அழியாச் செல்வம்

சம்பாதிக்க வேண்டிய அழியாச் செல்வம்

 

தொழிலைச் செய்து சொத்தைச் சேர்க்கலாம் என்று விரும்புகிறோம். இருந்தாலும் அது எல்லாம் அழியக்கூடிய சொத்து தான்… காரணம் நம் உடலே அழியக்கூடியது தான்.

உடலால் செல்வத்தைச் சம்பாதித்தாலும் “அது இந்த வாழ்க்கைக்கு தான் உதவும்…!” ஆனால் அதுவும் சீராகப் பார்க்கவில்லை என்றால் அந்தச் செல்வத்தையும் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாதித்து வைத்திருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் நோயாகி வேதனை வேதனை என்று வந்தால்
1.அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே
2.சம்பாதித்த சொத்தை எல்லாம் கையிலே கொடுத்தால் “இது எதற்கப்பா…?” என்று கேட்பார்கள்.

சம்பாரித்த சொத்து அவர்களுடையது தான். அதை விரிவாக்கி அங்கே இவ்வளவு இருக்கின்றது… இங்கே இவ்வளவு இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்யலாம்…? எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டால்
1.எங்கேயாவது தொலைந்து போங்கள்…!
2.என்னிடம் ஏனப்பா சொல்கிறீர்கள்…?

இந்த உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.

சம்பாதித்து வைத்திருந்தாலும் வேதனையாக இருக்கும் பொழுது இந்த சொத்தை பற்றிச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வரும்.

சொத்தைச் சம்பாதித்து வளர்த்துக் கொண்டிருக்கும் போது உடலிலே நோயான பின் “எனக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று வேதனையில் உடலின் பற்று தான் வருகின்றது… அதனால் நஞ்சாகி விடுகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது யார் மேல் நம் நினைவுகள் பற்று அதிகமாக வருகின்றதோ… இந்த உணர்வின் தன்மை வந்தபின் அதைப் பற்றிக் கொள்கின்றோம்… அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்… அங்கே சென்றுவிடும்.

இந்த உடலுக்குள் வந்து பிறவிக்கு வரும் பொழுது என்ன செய்கின்றோம்…?
1.இந்த உடலிலே விளைந்தது சாகாக்கலையாக உருவாகி
2.ஆசையை அங்கே தூண்டி அதன் வழியில் அந்த உடலையும் மடியச் செய்யும்

அதன் உணர்வு பேயாக அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி பூத கணையாக விளைகின்றது… அது தான் பூதங்கள்…! இத்தகைய உணர்வின் தன்மை விளைய வைத்த பின் எதனை அடக்கி அதற்குள் வளர்ந்ததோ அது அந்த உணர்வின் தன்மை வந்த பின் உயிரினங்கள் எதனின் வளர்ச்சி பெற்றதோ அங்கே கொண்டு போய் அதுவாக உருவாகி அதனின் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவையெல்லாம் தன் இரையத் தேடி இரக்க்கமற்றுக் கொன்று சாப்பிடுகிறது. மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதைக் கொடூரமாக தாக்கி உணவாக எடுக்கிறது.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைகளைச் செய்பவர் எவரோ அந்த எல்லைக்குத் தான் இந்த உயிர் அழைத்துச் செல்லும். அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.

ஆக… பிறர் படும் வேதனையை நாம் எடுத்து விளைய வைத்துக் கொண்டால் இத்தகைய நிலை வந்து விடுகிறது.

நம் குழந்தை மீது நமக்குப் பற்று இருக்கின்றது. குழந்தை வேதனைப்பட்டால் பாசத்தால் நாமும் அதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்.

ஆனால் எனக்கு பிடிக்காதவர்கள் ஏதாவது வேதனைப்பட்டார்கள் என்றால் வெறுப்பால்… “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசிக்கின்றோம்.

நம் பையன் சரியாக வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். ஆனால் பிடிக்காதவர் என்றால் “நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித்தான் நடக்கும்…!” என்று இந்த விஷத்தை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்.
1.ஏனென்றால் எது அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும்
2.அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!

ஆகவே அதனின் உணர்வின் செயலாகவே அதனின் அறிவாகவே நம்முடைய இயக்கமும் நம் பார்வை எதுவோ இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் கூர்மை அவதாரம்.

எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ அப்படிப்பட்ட அவதார புருஷனாக இது மாற்றி விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து ஒளியாக ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டால் கல்கியின் அவதாரம்.

எது மற்றவருக்குள் தீமையாக உருவாக்கியதோ அந்த இருளில் இருந்து விலக வேண்டும் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.வெறுமனே சொன்னால் அவர்கள் உணர்வு தான் நமக்குள் புகுந்து விடும்
2.ஈஸ்வரா என்று உயிரிடம் சொல்லி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த உணர்வின் தன்மையை ஆன்மாவிலிருந்து முதலில் பிளக்க வேண்டும்… நரசிம்மா…!

இப்படி… அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையை முதலில் நமக்குள் சேர்க்க வேண்டும். தீமைகளைப் பிளந்து ஒளியாக மாற்றி… நஞ்சினை வென்றிடும் நிலையாக…
1.மற்றவருக்கு வழிகாட்டும் உணர்வின் தன்மையாக
2.இதைத்தான் நாம் கொண்டு வர வேண்டும்.

எம்முடைய உபதேசங்களை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வரவேண்டியதன்… இரகசியம்”

எம்முடைய உபதேசங்களை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வரவேண்டியதன்… இரகசியம்”

 

நாம் எப்பொழுது தீமைகளைக் கண்டாலும் பத்திரிக்கை டி.வி.யில் பார்த்தாலும் கேட்டாலும் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு போய் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1ஆனால் பழக்கம் இல்லை என்கிற போது
2.முதலிலே மாற்றும் எண்ணம் வராது.

பிற உணர்வுகளைக் கவர்ந்து கொண்ட நிலையில் அந்தத் தீமையின்பால் நினைவுகள் செல்லப்படும் பொழுது “என்ன உலகம்…?” என்று சலிப்படைந்த உணர்வு கொண்டு தான் பேசுவோம்.

1.அந்த உணர்வு இயக்கும் பொழுது இந்த ஆத்ம சுத்தி செய்யும் எண்ணம் வராது
2.ஆனால் அந்த நினைவைக் கட்டாயப்படுத்தி நாம் கொண்டு வர வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுக்க வேண்டும்.

நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் கட்டாயப்படுத்தித் தான் கசப்பான மருந்தை உட்கொண்டு அதை நீக்குகின்றோம்.

1.நமக்குள் வேதனை என்ற உணர்வுக்கு அந்த ஞானிகள் உணர்வு கசப்பு
2.வெறுக்கும் தன்மை கொண்டு நமக்குள் அதை எடுக்க விடாது

ஆனாலும் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை உள்ளுக்குள் செலுத்தி அந்தக் கசப்பினை மாற்றுதல் வேண்டும்.

1.அப்படி மாற்றுதல் வேண்டும் என்றால் “எடுக்கும் சக்தி” வேண்டும்
2.உங்களுக்கு. எடுக்கும் சக்தி வந்தாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்தக்கூடிய நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி…?

உதாரணமாக துணியில் சாயத்தை ஏற்றும் பொழுது துணியில் ஒட்டுவதற்குண்டான “அமிலத்தின் அளவு…” எப்படிச் சம பங்கு கொண்டு வர வேண்டும்…? என்று அந்த அளவுகோல் தெரிய வேண்டும்.

1.சீக்கிரம் சாயத்தை ஏற்றி நிறத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று
2.அளவுகோல் தெரியாதபடி அமிலத்தை அதிகமாகப் போட்டுவிட்டால் சாயம் இருக்கும்.
3.ஆனால் துணி சீக்கிரம் நைந்து விடும்.

ஆனால் அதே சமயத்தில்
1.குறைத்துப் போடுவோம்… லாபத்தை அதிகமாகக் கொண்டு வரலாம் என்றால்
2.சீக்கிரம் சாயம் போய்விடும்… துணி அழகு கெட்டுவிடும்

இப்படியும் போகும்… அப்படியும் போகும்…!

ஆகையால் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்வதனுடைய நோக்கமே
1.பல காலமாக நமக்குள் பதிந்த உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.ஒவ்வொரு சமயத்திலும் அதனுடைய இரைக்காக வேண்டி உணர்வை உந்தும்.
3.அந்த மணம் வரும்
4.அந்த நினைவு வரும்… இயக்கும்
5.அது வளரும்.

சாமி சொன்னார்… ஆனால் நான் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்…! இருந்தாலும் அடுத்து ஏதோ ஒரு வகையில் இடைஞ்சல் செய்கின்றார்கள் அல்லது இடைஞ்சல் வருகின்றது என்றால் அந்த உணர்வு முன்னாடி வரும்
1.தொடர்ச்சியாக வாழ்க்கையில் இப்படி வந்து கொண்டே இருக்கின்றது
2.அந்த அருள் உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த இடைஞ்சலும் சேர்ந்தே வரும்
3.இதுவும் வளரும் அதுவும் வளரும்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அந்த தீமையின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றால் முக்கியமாக இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது ஆத்ம சுத்தி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இந்த அடிப்படையில் நாம் உள்ளே கொண்டு போக வேண்டும்.

இப்படி எண்ணித் தனக்குள் சேர்த்த பின்பு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இப்படித்தான் நாம் எண்ண வேண்டுமே தவிர
2.எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்.., கெடுதல் செய்கிறார்… என்று அவர்களை முதலில் எண்ணி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உணர்வுதான் முன்னாடி வரும்
4.அந்த நஞ்சு நமக்குள் கலந்து… நாம் எடுத்ததை நஞ்சாகத்தான் மாற்ற முடியும்
5.ஏனென்றால் இந்த உணர்வு… அவரின் எண்ணங்களைக் கொடுத்து இது முன்னாடி வந்து விடும்

ஆகவே… “என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… “நான் பார்ப்பவர்களுக்கெல்லாம்” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா ஏன்று இப்படி நாம் எடுத்துப் பழக வேண்டும்.

தனித்த நிலையில் இடைஞ்சல் செய்வோரின் உணர்வே நமக்கு நினைவுக்கு வரக்கூடாது ஏனென்றால் அது விஷம்…!
1.நினைவுக்கு வந்தால் மீண்டும் அந்த அணுக்கள் சாப்பாடு எடுத்துக் கொள்ளும்
2.சாப்பாடு கிடைத்த பின் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்… ஆன்மாவிலே அதைப் பரப்பும்
3.தனக்கு வலு கிடைத்தது… என்ற நிலையில் இரு… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியமாக வளரும்
4.பின் நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும்.

இதை எல்லாம் வரிசைப்படுத்தித் தெளிந்து… தெரிந்து தெளிவான நிலைகளில் செய்து பழக வேண்டும்.

அது மட்டுமல்ல…! சாமி மட்டும் சொல்கிறார் என்று இருக்கக்கூடாது. இந்த உணர்வின் ஆற்றலை… யாம் பதிவு செய்ததை… மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தில் ஒவ்வொருத்தரும் நீங்கள் சொல்ல வேண்டும்.

இதைப் பயன்படுத்திப் பார்க்கும் போது நல்ல சிந்தனை வரும். அப்பொழுது இதை “எழுத்து வடிவிற்குக் கொண்டு வாருங்கள்…”
1.நீங்கள் வளர்ச்சி பெற்றால் தான் குருநாதர் பெற்ற நிலைகளை உலகுக்கே கிடைக்கச் செய்ய முடியும்
2.நான் ஒருவன் சொல்லிக் கொண்டே இருந்தால் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான்
3.சாமி நன்றாகச் சொல்கின்றார் என்ற ஒரே புகழோடு போகும்… பின் அதனுடன் மறைந்து விடும்…!

அந்த நிலை இருக்கக்கூடாது…!

வேதனை வந்த பின் நம்மால் நல்லதைச் சிந்திக்கவே முடிவதில்லை… ஏன்…?

வேதனை வந்த பின் நம்மால் நல்லதைச் சிந்திக்கவே முடிவதில்லை… ஏன்…?

 

கீதையிலே சொல்லப்பட்ட உண்மை “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” எந்தக் குணத்தை நீ சுவாசிக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!”

உதாரணமாக… மாம்பழம் வேண்டும் என்று எண்ணும் பொழுது அதைத் தேடிச் செல்கிறோம். அதைச் சுவாசித்துக் கடைக்குச் சென்று அதை வாங்கும்படி செய்கின்றது. வாங்கிய பின் அதை ரசித்துச் சாப்பிடுகின்றோம். “மாம்பழம் வேண்டும் என்கிற போது இவ்வாறு செய்கிறோம்…”

அதைப் போல் மூஷிகவாகனா…! ஒருவர் குற்றம் செய்கிறார் என்று பார்த்த பின் அவரை உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்… அந்த உணர்வை எண்ணும் போது சுவாசிக்கின்றேன்.
1.அதே உணர்வு கொண்டு கம்பையோ மற்ற ஒரு ஆயுதத்தையோ எடுத்து அவனை அடிக்க வேண்டும் என்று செல்கின்றேன்.
2.ஆனால் இங்கே மாம்பழம் வாங்க வேண்டும் என்றால் கூடையை எடுத்துச் சென்று அதை வாங்கிச் சாப்பிடுகின்றோம்
3.அதனால் தான் நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய் என்று கீதையில் சொல்லப்பட்டது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…! இதற்கு முன் நல்லதைப் பெற வேண்டும் என்று எத்தனையோ சரீரங்களில் எடுத்தது பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக உருவாக்கியது.

“வராக மூர்த்தி…” என்று காட்டியது போன்று முந்தி நாம் பன்றியாக இருக்கும் பொழுது கெட்டதை எண்ணாது… நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்துள்ள நல்ல பருப்பைச் சுவாசித்து… அதை உணவாக எடுத்து வளர்ந்து மனிதனாகக் கொண்டு வந்தது.

ஆக மனிதனாக வளர்ந்து வரும் போது உடலில் உள்ள நாற்றத்தைச் சிறுக சிறுக அப்புறப்படுத்திவிட்டு
1.நல்லதைச் சிந்தித்து…
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய சக்தியாக
3.நல்ல உடலை மனிதனாகப் பெற்றிருக்கின்றோம்..

நல்ல சுவைமிக்க உணவை உட்கொண்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது.

ஆடு மாடு மற்றும் மிருகங்கள் கெட்டதைச் (விஷமானதை) சாப்பிட்டாலும் அந்தக் கெட்டதை உடலாக மாற்றுகின்றது ஆனால் நல்லதை மலமாக மாற்றி விடுகின்றது… அது நாற்றமாவதில்லை… நல்லதைத்தான் அது கழிக்கின்றது

வராக மூர்த்தி என்று அதனால் தான் பன்றித் தலையைப் போட்டு மனித உடலாகக் காட்டி இருக்கின்றார்கள்.

பன்றியாக இருக்கும் போது நாற்றத்தை நினைக்கவில்லை. அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்த்து… நல்ல சுவாசத்தை எடுத்து நல்ல பருப்பை எடுத்தது.

அதிலே சேர்த்துக் கொண்ட அந்தச் சத்து தான்… படிப்படியாக… படிப்படியாகக் கெட்டதை நீக்கி… மனிதனாக இன்று வளர்ந்து இருக்கின்றோம். நாம் சாப்பிடுவது… நினைக்கிறது அதில் உள்ள விஷத்தை எல்லாம் கழிக்கின்றது மனித உடல்

ஆனால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்…?

என் பையன் நல்லவனாக வேண்டும் என்று ஒரு தடவை நினைக்கின்றோம் ஆனால் சேட்டை செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… என்று வேதனைப்படுகின்றோம்.
1.இதைப் பல முறை எண்ணுகின்றோம்.
2.இப்படிப் பல முறை தியானம் செய்தால் என்ன ஆகும்…? வேதனை தான் விளையும்.

வியாபாரத்தில் ஒருவருக்குக் கடனாக கொடுக்கின்றோம். கடனைக் கொடுத்த பின்பு நான் கொடுத்தேன்… அவன் திருப்பிக் கொடுக்கவில்லை… நான் கொடுத்தேன் கொடுக்கவில்லை… கொடுக்கவில்லை… என்று இப்படிப் பண்ணுகின்றார்களே இப்படிப் பண்ணுகின்றார்களே…! என்று வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.
1.ஒரு தடவை நல்லது செய்கின்றோம்.
2.ஆனால் பல தடவை வேதனையைத்தான் வளர்க்கின்றோம்… வேதனை தான் உடலுக்குள் வளர்கின்றது,

இதை மாற்ற முடிகிறதா…? நல்லதைச் சிந்திக்க முடியாதபடி போய் விடுகின்றது அதைத் தான் தியானம் பண்ணுகின்றோம். இதைப் போன்ற உணர்வின் தன்மைகள் எல்லாம் விஷம்.

விஷம் (வேதனை) அதிகமாகும் பொழுது…
1.அந்த விஷத்தை உடல் கழிக்க முடியாதபடி இரத்தத்துடன் கலந்து எல்லாமே நஞ்சாக மாற்றி விடுகின்றது.
2.கழிக்கக்கூடிய திறனை இழந்து விட்டால் எல்லாம் நஞ்சாகி நல்ல குணங்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலில் நஞ்சை அதிகமாகச் சேர்த்தால் நஞ்சின் வாசனை உயிராத்மாவில் அதிகமாகி… எவ்வளவு அளவுகோல் கொண்டு அதைச் சேர்த்திருக்கின்றோமோ மிருகங்களில் எந்த நஞ்சு இருக்கிறதோ அங்கே தான் போகும். அது “லபக்…” என்று நம் உயிராத்மாவை இழுத்துக் கொள்ளும்.

அங்கே தான் நாம் பிறப்போம். அதை உறுதியாக்க முடியும்… மனிதனாகப் பிறப்பது உறுதி இல்லை.

ஆனால் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
1.ஞானிகள் கண்ட வழியில் சென்றால் தான் துன்பத்தைத் (நஞ்சை) துடைக்க முடியும்… உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.
2.இதைத் தவிர வேறு வழி இல்லை.

அடுத்தவர்களைப் பார்த்து இரக்கப்பட வேண்டுமா… கூடாதா…? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

அடுத்தவர்களைப் பார்த்து இரக்கப்பட வேண்டுமா… கூடாதா…? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

 

மனிதனாக வர வேண்டும் என்றால் 1008 குணங்கள் வேண்டும். அந்த 1008 நல்ல குணங்கள் தான் நம்முடைய உடலை உருவாக்கியது.

அத்தகைய நல்ல மனதுடன் ரோட்டிலே செல்லும் பொழுது ஒரு பையன் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். அதை உற்று நோக்கி அவன் வேதனைப்படுவதைக் காணுகின்றோம்.

அவன் படும் வேதனையை நுகர்ந்து எனக்குள் சேர்த்த உடன் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி என் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.முதலில் கீழே விழுந்து விட்டானே என்று இரக்க உணர்வு கொண்டு காப்பாற்றி விடுகின்றேன்
2.ஆனால் ஆகாரத்துடன் கலந்த அந்த வேதனை உணர்வுகள் என் உடலில் சத்தாக மாறி விடுகின்றது.

இன்று நான் அவனைக் காப்பாற்றி விட்டேன். அடுத்த நாள் அந்தச் சாப்பாட்டுடன் கலந்த வேதனை உணர்வுகள் ஒரு விதமான அலசலாக மாறுகின்றது.

அதே சமயத்தில் பலவீனமான மனம் கொண்டவர்கள் அவன் அடிபட்டு மிகவும் காயமாகி விட்டான் என்பதைப் பார்த்தவுடனே பதட்டமும் வேதனையும் வந்து விடுகிறது.

அந்த இரண்டும் சேர்ந்து உயிருக்குள் பட்டு அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி சிறு குடலில் கலந்த உடனே
1.அடிபட்டவனைப் பார்த்தவுடன் உடல் பதறுகின்ற மாதிரி…
2.அந்தப் பதட்டத்தில் உடலை எப்படிக் குலுக்கியதோ
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தையும் இவ்வாறு குடல் பகுதியில் குலுக்கி அலசி விட்டு விடுகிறது.
4.ஆகாரத்தை ஜீரணிக்காதபடி பட..பட… என்று அந்த விஷம் (வேதனை) வயிற்றாளையாகப் போக ஆரம்பிக்கும்.
5.நல்ல சத்தாகச் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மாதிரி ஆகிவிடும்.

உழைத்து நன்றாகச் சாப்பிட வேண்டும்… டாக்டர் சிபாரிசு செய்தார் என்று உடல் ஆரோக்கியத்திற்காக நாம் சாப்பிட்டாலும் இங்கே பயத்தின் துடிப்பு வேகமாக இருக்கப்படும் பொழுது இப்படி ஆகின்றது.

பயத்தால் துடிப்பும் வேதனையும் இரண்டையும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் உடல் நடுக்கம். அதிலே வடித்துக் கொண்ட இந்தச் சத்து ஆகாரத்திற்குள் இணைந்த பின்
1.சிறு குடல் மூன்றரை கஜம் இருக்கும்… அது கோர்த்து… இழுத்து… மூடி.. அப்படியே பிழியும்.
2.பாம்பு தவளையை விழுங்குவது போன்று அது சுருக்கி இறுக்கி அந்தச் சத்தை எப்படி ஜீரணிக்கின்றதோ
3.அதே போல் சிறுகுடல் இழுத்து நெருக்கி சத்தைப் பிழிய முற்படும் போது அதை ஜீரணிக்க விடாதபடி (முடியாதபடி) விட்டு விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பாச உணர்வு கொண்டு அங்கே கீழே விழுந்தவனைப் பார்க்கின்றோம். பாச உணர்வுகள் கொண்டு வரும் போது பயம் எனக்குள் துடிப்பாகி அது எனக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது. பயமாகி வயிற்றாளை போகின்றது.

நான் சத்தாகச் சாப்பிட்டேன் என்றால் என்ன சொல்வது…?

பயமான சக்திகள் அதிகமாக கூடிவிட்டால் “டப்…” என்று ஒரு சாமான் கீழே விழுந்தால் நாம் உடனே துள்ளி விடுவோம். ஏதாவது படித்துக் கொண்டிருக்கும் போது “சறுக்…” என்ற சத்தம் கேட்டால் போதும் கவனம் அங்கே போகும்… படிப்பு வராது.

ஒரு நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று சொன்னால் வேதனையும் பயமும் கலந்த உணர்வுகள் தூண்டியவுடனே
1.பொருளை எடுக்கக்கூடிய கவனம்… ஞாபக சக்தி எல்லாமே இழந்து விடும்…
2.பயத்தின் துடிப்பிலேயே போய்க் கொண்டிருக்கும்… இரக்கம் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆகின்றது.

இதை நாம் எவ்வாறு சுத்தப்படுத்துவது…?

ஆனால் ஒரு முரடன் கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்தால் என்ன செய்வான்…?
பாசமும் இரக்கமும் கொண்டு செயல்படும் பொழுது அடிபட்டதைப் பார்த்து வயிற்றாளை போக வைக்கிறது. “ஓ… ம்…” அந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று வினையாகச் செயல்படும் சக்தியாக வருகின்றது.

ஆனால் போக்கிரி அடிபட்டதைக் கவனித்தவுடன்
1.”அவனுக்கெல்லாம் இப்படித்தான் வேண்டும்…!” என்று கொடூரமான நிலைகளில் பேசி அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு செல்வான்.
2.அவனுடைய உணர்வு வேதனையை நுகரும் தன்மையே இல்லை
3.அசுரத்தனமான நிலைகள் கொண்டு பிறர் இம்சைப்படுவதைக் கண்டு ரசிப்பதும் பிறரை இம்சிப்பதும் தான் அவனுக்கு அது வழக்கம்.
4.அந்த உணர்வை இவனுக்குள் எடுத்துக் கொள்வதில்லை… அதை ரசிக்கின்றான்.

உதாரணமாக ஒரு கொள்ளை அடிக்கிறவன் வீட்டிற்குள் வந்தால் பணத்தை எடுத்துச் செல்கின்றான். ஆனால் என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாய் என்று சொல்லி வீட்டில் உள்ளவரையும் அடித்துக் கொல்லத்தான் பார்க்கின்றான்.

பணத்தையும் எடுத்துச் செல்கிறான்… ஆளைக் கொல்லவும் செய்கிறான். அவனுக்கு அந்த இரக்கம் இருக்கின்றதா… வருகின்றதா…? இல்லை. ஆகையினால் அந்த உணர்வின் தன்மையை அவன் நுகராதபடி ரசித்துக் கொண்டே செல்கிறான்.

இதே பழக்கத்திற்கு இவன் சென்றான் என்றால் அங்கிருந்து ஒரு பஸ் வேகமாக வருகிறது என்றால் “என் மீது ஏற்றி விடுவானா…? பார்ப்போம்…!” என்று முரட்டுத்தனமாகத் தான் நிற்பான்.

சில பேரரை நீங்கள் பார்க்கலாம் புத்தி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால் அந்தக் குணம் உள்ளவர்கள் நடுரோட்டில் போய்க் கொண்டே இருப்பார்கள். எதையும் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

காரோ பஸ் வந்தாலும் கூட சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டை விட்டு இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காதவர்கள் எப்படிப்பட்ட புத்தியில் இருக்கின்றார்கள் என்றால்
1.இரக்கமும் நல்ல புத்தியும் இருக்காது.
2.இறங்க மாட்டார்கள்… நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள்
3.அவர் வீட்டிலும் கொஞ்சம் கூட இரக்கம் இருக்காது… எதை எடுத்தாலும் எதிர்த்துச் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.

ஆனால் இன்று ஒரு முறை தப்பித்தாலும் “என்னைக் கண்டு எல்லோரும் பயந்துவிட்டார்கள்… பார்…!” என்று அவன் நினைப்பான்.

ஆனால் அடுத்தாற்போல் இன்னொருவன் இதே போன்று வேகமாக கண்ட்ரோல் இல்லாத வரும் பொழுது அந்த உணர்வு கொண்டே இந்தப் போக்கிரி அடிபட்டுச் சாவான்.

1.பாசத்தாலும் விஷம் வந்து வேதனையாகி உடல் நலம் கெடுகின்றது
2.முரட்டுத்தனமாகச் சென்றாலும் இப்படி ஆகிவிடுகிறது.

காரணம்… நான் எதைக் கொடுக்கின்றேனோ உயிர் அதை இயக்கி விடுகின்றது… அதை அப்படியே சிருஷ்டித்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

குருநாதர் காட்டி வழியில் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அருள் உணர்வினைப் பெற வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.
1.அதை வளர்த்துக் கொண்டால் உயிர் அதுவாகவே நம்மை ஆக்கிவிடும்
2.அருள் உணர்வுகளை உயிர் சிருஷ்டித்து நம்மை அருள் ஞானிகளாக உயிர் நம்மை உருவாக்கி விடும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது…!

வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

உங்களிடம் யாராவது கடுமையாகப் பேசிக் கொண்டே இருந்தால் உம்… கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தார்கள் என்றாலும் சரி… ஆமாம்… ஆமாம்… சரி…! என்று சொல்லுங்கள்.

மிகவும் வசனம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மோசமான நிலையில் இருப்பார்கள்… வாயில் வராததைப் பேசுவார்கள். ஆமாம்… ஆமாம்… சரி… சரி… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.

உனக்குக் கண் இருக்கின்றதா… காது இருக்கிறதா…? என்று மீண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
1.இது அத்தனையும் நீயே வைத்துக் கொள் எல்லாவற்றையும் வைத்துக்கொள்… போ…! என்று சொல்லி விட்டு வந்துவிடுங்கள்.
2.அப்படியே மயங்கி சொத்… என்று விழுந்து விடுவார்கள்… இதைப் பார்க்கலாம்.

அதாவது… அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்… நீங்கள் திட்டவே வேண்டாம்…! எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… எனக்கு வேண்டாம் நீங்களே அதை வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்…! என்று சொல்லிவிட்டுத் திரும்பி விடுங்கள்.

1.நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை
2.ஏனென்றால் அவர் உடலில் இருக்கக்கூடிய “ஒரு ஆவி” அந்த வேலையைச் செய்கின்றது.

அந்த மாதிரி நேரங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டு விழுவதைப் பார்க்கலாம்.

1.இந்த வாக்கைச் சொன்னவுடன் அந்த ஆவி செயலிழக்கும்
2.அப்படிச் செய்கிறோம் என்றால் நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்… அவர்களுக்குத் தீமை செய்யவில்லை.

நம்முடைய உணர்வுகள் பாய்ந்து அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடையும். அடுத்து கீழே விழுந்து எழுந்தார்கள் என்றால் “சுயநினைவு” வரும்.

அந்த ஆவியின் இயக்க நினைவில் இருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றுகின்றீர்கள் என்று அர்த்தம்…! நான் (ஞானகுரு) வாக்குடன் கூடி உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கின்றேன்

ஏனென்றால் திட்டுகின்றார்கள்… என்னால் தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை என்று மீண்டும் அவருடைய எண்ணங்களைத் தான் நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்கின்றீர்கள்.

காரணம் விஷம் எதிலே வேண்டும் என்றாலும் ஊடுருவிச் செல்லும்…! அதை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் வாக்குடன் சொல்லி இதைக் கொடுக்கின்றேன்.

அதிகமாகப் பேசுகின்றார்கள் திட்டுகின்றார்கள் என்றால் “எல்லாவற்றையும் நீ வைத்துக் கொள்…!” என்று சொன்ன உடனே
1.அந்த உடலில் இருக்கக்கூடிய ஆவி பலவீனமாகி மயக்கப்படும்.
2.அப்போது இவர்களுடைய சுய சிந்தனை அங்கே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம். இந்த வாக்கின் தன்மை அங்கே தீமையான நிலைகளை நீக்கச் செய்யும்… வயிற்றால் போகும்…!

அடுத்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்.

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

 

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

 

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ வகையான சாப அலைகள் சாடி உள்ளது (நமக்குத் தெரியாமலே…!)
1.நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்
2.நல்லவர்களாக வேண்டும் என்று முயற்சித்தாலும் சாப வினைகள் கலந்து
3.வாயிலே விஷம் கலந்தது போன்று வாழ்க்கையில் ஈடேற முடியாத நிலைகளில் சாப வினைகள் தடுத்துக் கொண்டுள்ளது.

சாப வினைகளையும் பாப வினைகளையும் சுட்டுப் பொசுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளோர் வலுவாக எண்ணினால் அவைகள் நீங்கும்.

இன்று பார்க்கலாம்…! ஒன்றுமறியாத இளம் குழந்தைகளாக இருந்தாலும் கூட சாப அலைகளால் கை கால் முடமாகி… நாளுக்கு நாள் குறுகி எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றது.

ஒரு குடும்பத்தில் செழித்த நிலைகள் செல்வங்கள் இருப்பினும் எனக்கு எப்படி இந்தக் கதியானதோ… உன் குடும்பமும் இப்படித்தான் போகும்…! என்று யாரோ சாபமிட்ருப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய் இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் போதும்.
1.சாபம் இட்ட உணர்வின் வீரிய சக்தி அந்தக் குடும்பத்தில் வாழும் பெண் கொடி வழியில் அது படர்ந்து வந்து
2.அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுத்து… அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் படுவதைப் பார்க்கலாம்.

எல்லோருக்கும் நல்லது தான் செய்வார்கள்… நல்ல குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் கொடி வழி வந்த அந்தச் சாப வினைகள் அவர்களை ஈடேற விடுவதில்லை.

அதே சமயத்தில் எல்லோருக்கும் பரிபக்குவ நிலைகளை நாம் செய்திருப்பினும்… அன்புடன் பண்புடன் பழகி மற்றவருக்கு உதவி செய்வோராக நாம் இருந்தாலும்…
1.ஒரு ட்ரெயினிலே போகும் பொழுது சாதாரணமாக ஒருவருடன் பழகி இருப்போம்… உதவி செய்திருப்போம்
2.ஏனென்றால் கஷ்டமாக அவர் இருந்திருப்பார்… நாம் உதவி செய்த உணர்வோ ஆழமாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

கஷ்டங்களைப் பட்டவராக இருப்பதால் “அவருடைய சந்தர்ப்பம்” அவர் வீட்டுக்குச் சென்ற பின் ஹார்ட் அட்டாக் வந்தோ அல்லது திடீரென்று அதிர்ச்சியினாலோ இறந்து விடுகிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உயிர் பிரியும் நேரம்… உதவி செய்த நம் மீது தான் அவருடைய எண்ணம் வரும்.
1.காரணம் அவருக்கு நாம் உதவி செய்த நன்றிக் கடனாக நம்மை எண்ணுவார்.
2.ஆக… ஹார்ட் அட்டாக்கில் இறந்த அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும்
3.வந்த பின்… அவருக்கு எப்படி அந்தப் பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலை இங்கேயும் வருகின்றது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றது. இதை யாரும் குறையாகச் சொல்வதற்கு இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் வராது தடுக்க வேண்டுமா இல்லையா…!

ஆறாவது அறிவு துணை கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்திக் கொண்டால் மனிதன் முழுமையாகின்றான்.

இல்லை என்றால் மீண்டும் நரகலோகம் தான்…! (மீண்டும் பிறவி நிலை) என்று சாஸ்திரங்களில் தெளிவாகத் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேளுக்குக் கொடுக்கிலே விஷம் இருக்கின்றது ஆனால் உணவு உட்கொள்ளும் போது எத்தனையோ வேதனைப்படுகின்றது. மற்ற எதிரிகளிடமிருந்து தப்பித்து வாழ “அஞ்சியே வாழ்கின்றது…”

இது போன்று ஒவ்வொரு உயிரினங்களும் எத்தனையோ வகையில் அல்லல்படுகின்றது… நரக வேதனைப்படுகின்றது இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

1.அது போன்ற வேதனைப்படும் உயிரினங்களாக மீண்டும் பிறவிக்கு வந்து
2.இன்னொரு இழி நிலையான சரீரத்திற்குள்ளே சென்று விடாதபடி
3.இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் ஆற்றல்களைப் பெற்றுத் தீமைகளை அகற்றி
4.நம்மை அறியாது சேர்ந்த சாப வினைகளையோ பாவ வினைகளையோ நீக்கி
5.வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்து வாழும் அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும்.

இந்த உடலை விட்டு அகன்றால் நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! அந்த எல்லையை அடிப்படையாக வைத்து வாழ்க்கை வழி நடத்தினால் தான் அது சரியாக இருக்கும்.
1.யாரும் என்னை மதிக்கவில்லை… எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…! என்ற
2.பிறருடைய எண்ணங்களோ அல்லது அது போன்ற உணர்வின் இயக்கமோ நம்மைக் கீழே இழுத்து விடாது…!

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

 

உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?

1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.

ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.

அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.

நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?

அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.

அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!

இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!