நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

 

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

 

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ வகையான சாப அலைகள் சாடி உள்ளது (நமக்குத் தெரியாமலே…!)
1.நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்
2.நல்லவர்களாக வேண்டும் என்று முயற்சித்தாலும் சாப வினைகள் கலந்து
3.வாயிலே விஷம் கலந்தது போன்று வாழ்க்கையில் ஈடேற முடியாத நிலைகளில் சாப வினைகள் தடுத்துக் கொண்டுள்ளது.

சாப வினைகளையும் பாப வினைகளையும் சுட்டுப் பொசுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளோர் வலுவாக எண்ணினால் அவைகள் நீங்கும்.

இன்று பார்க்கலாம்…! ஒன்றுமறியாத இளம் குழந்தைகளாக இருந்தாலும் கூட சாப அலைகளால் கை கால் முடமாகி… நாளுக்கு நாள் குறுகி எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றது.

ஒரு குடும்பத்தில் செழித்த நிலைகள் செல்வங்கள் இருப்பினும் எனக்கு எப்படி இந்தக் கதியானதோ… உன் குடும்பமும் இப்படித்தான் போகும்…! என்று யாரோ சாபமிட்ருப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய் இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் போதும்.
1.சாபம் இட்ட உணர்வின் வீரிய சக்தி அந்தக் குடும்பத்தில் வாழும் பெண் கொடி வழியில் அது படர்ந்து வந்து
2.அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுத்து… அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் படுவதைப் பார்க்கலாம்.

எல்லோருக்கும் நல்லது தான் செய்வார்கள்… நல்ல குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் கொடி வழி வந்த அந்தச் சாப வினைகள் அவர்களை ஈடேற விடுவதில்லை.

அதே சமயத்தில் எல்லோருக்கும் பரிபக்குவ நிலைகளை நாம் செய்திருப்பினும்… அன்புடன் பண்புடன் பழகி மற்றவருக்கு உதவி செய்வோராக நாம் இருந்தாலும்…
1.ஒரு ட்ரெயினிலே போகும் பொழுது சாதாரணமாக ஒருவருடன் பழகி இருப்போம்… உதவி செய்திருப்போம்
2.ஏனென்றால் கஷ்டமாக அவர் இருந்திருப்பார்… நாம் உதவி செய்த உணர்வோ ஆழமாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

கஷ்டங்களைப் பட்டவராக இருப்பதால் “அவருடைய சந்தர்ப்பம்” அவர் வீட்டுக்குச் சென்ற பின் ஹார்ட் அட்டாக் வந்தோ அல்லது திடீரென்று அதிர்ச்சியினாலோ இறந்து விடுகிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உயிர் பிரியும் நேரம்… உதவி செய்த நம் மீது தான் அவருடைய எண்ணம் வரும்.
1.காரணம் அவருக்கு நாம் உதவி செய்த நன்றிக் கடனாக நம்மை எண்ணுவார்.
2.ஆக… ஹார்ட் அட்டாக்கில் இறந்த அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும்
3.வந்த பின்… அவருக்கு எப்படி அந்தப் பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலை இங்கேயும் வருகின்றது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றது. இதை யாரும் குறையாகச் சொல்வதற்கு இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் வராது தடுக்க வேண்டுமா இல்லையா…!

ஆறாவது அறிவு துணை கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்திக் கொண்டால் மனிதன் முழுமையாகின்றான்.

இல்லை என்றால் மீண்டும் நரகலோகம் தான்…! (மீண்டும் பிறவி நிலை) என்று சாஸ்திரங்களில் தெளிவாகத் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேளுக்குக் கொடுக்கிலே விஷம் இருக்கின்றது ஆனால் உணவு உட்கொள்ளும் போது எத்தனையோ வேதனைப்படுகின்றது. மற்ற எதிரிகளிடமிருந்து தப்பித்து வாழ “அஞ்சியே வாழ்கின்றது…”

இது போன்று ஒவ்வொரு உயிரினங்களும் எத்தனையோ வகையில் அல்லல்படுகின்றது… நரக வேதனைப்படுகின்றது இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

1.அது போன்ற வேதனைப்படும் உயிரினங்களாக மீண்டும் பிறவிக்கு வந்து
2.இன்னொரு இழி நிலையான சரீரத்திற்குள்ளே சென்று விடாதபடி
3.இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் ஆற்றல்களைப் பெற்றுத் தீமைகளை அகற்றி
4.நம்மை அறியாது சேர்ந்த சாப வினைகளையோ பாவ வினைகளையோ நீக்கி
5.வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்து வாழும் அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும்.

இந்த உடலை விட்டு அகன்றால் நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! அந்த எல்லையை அடிப்படையாக வைத்து வாழ்க்கை வழி நடத்தினால் தான் அது சரியாக இருக்கும்.
1.யாரும் என்னை மதிக்கவில்லை… எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…! என்ற
2.பிறருடைய எண்ணங்களோ அல்லது அது போன்ற உணர்வின் இயக்கமோ நம்மைக் கீழே இழுத்து விடாது…!

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ளத் தான் இந்தப் பயிற்சி

 

உங்கள் வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் மிகுந்த சிக்கல்கள் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்…?

1.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மூலிகைகளின் மணங்கள் நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.யாம் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
4.அதை உங்களுக்குள் சேர்த்து உமிழ் நீருடன் கலந்து ஆகாரத்துடன் கலந்து இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். அகஸ்தியன் பெற்ற சர்வ தோஷங்களை நீக்கிடும்… சர்வ பிணிகளையும் நீக்கிடும்… அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானியுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் போது உடலிலே நோய் உள்ளவர்களுக்கு
1.இது எதிர்நிலையான பின் உடலில் வலி கூட அதிகமாகும்.
2.ஏனென்றால் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க விடாது அந்த அணுக்கள் தடுக்கும்.

ஆனாலும் மீண்டும் அதை எண்ணி ஏங்கி எங்கள் உடலில் அந்த அகஸ்தியன் பெற்ற நஞ்சை வெல்லக்கூடிய சக்தி படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படர வேண்டும் நல்ல அணுக்களாக மாற வேண்டும் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.எம்மா… எப்பா…! என்று வேதனையாக எண்ணுவதற்கு மாறாக
2.அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

எப்படித் தான் வாழ்ந்தாலும் குறுகிய காலம் தான் நாம் வாழுகின்றோம். உடலில் சிறிது காலம் தான் நாம் இருக்க முடிகின்றது.

அதற்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் அகஸ்தியன் பெற்ற தீமையை நீக்கிய உணர்வுகளையும் நமக்குள் சேர்த்துச் சேர்த்து… சேர்த்துச் சேர்த்து… இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அதற்குத்தான் இந்த மார்க்கத்தைத் தெளிவாக்குவது.

நான் சம்பாரித்தேன் எல்லாம் செய்தேன் என் குடும்பத்தில் என் பையன் நாளை என்ன செய்வான்…?

அதே போன்று தொழில் செய்யும் இடத்தில் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்… நாளை என்ன ஆகுமோ…? என்று அதை நமக்குள் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த ஏமாற்றும் உணர்வு நமக்குள் நோயாக மாறி
1.இறந்த பின் எவன் ஏமாற்றினானோ அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல முடியும்.
2.மீண்டும் உடலுக்குத் தான் நாம் வருகின்றோம்
3.விண் செல்லும் உணர்வுகளை இழந்து விடுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் எப்போது சிரமம் என்று வந்தாலும் கொடுத்த பயிற்சிப் பிரகாரம் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் பெற்றுப் பாருங்கள். எத்தகைய துயரம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

1.எதனையும் பற்றி “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற சிந்தனை செய்ய வேண்டியது இல்லை.
2.அருளைப் பெறுவேன்… இருளை நீக்குவேன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்…!
3.என் இரத்த நாளங்களிலே அந்தப் பேரருள் பேரொளியைக் கலக்கச் செய்வேன்
4.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்த அருள் சக்தியைப் பெறும்படி செய்வேன் என்று எண்ணுங்கள்.

அதே சமயத்தில் அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல விஷத் தன்மைகளை ஒடுக்கினான். அந்த உணர்வுகளைத் தனக்குள் வலிமை மிக்கதாக அவனுக்குள் உருவாக்கிக் கொண்டான்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகளும் இங்கே பரவி உள்ளது. உங்களுக்குள் பதிவு செய்ததை எண்ணத்தால் அதைக் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்றிட்ட அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து ஏங்குங்கள். உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்…!

இப்போது
1.உமிழ் நீர்கள் வாயிலே சுவை மிக்கதாக பச்சிலை மணம் கலந்ததாகச் சுரந்து உங்கள் உடலுக்குள் செல்லும்
2.உங்கள் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் விஷத்தன்மையை மாற்றும் சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.காற்றிலே இது உண்டு… உங்களால் அதை எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இந்தப் பயிற்சிகள் எல்லாம்…!

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

 

விஞ்ஞான அறிவால் வந்த விஷத்தன்மைகள் பலவாறு பரவி… மக்களை இன்று மடியச் செய்யும் நிலையாக வருகின்றது.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய “அணு உலைகளை” உருவாக்குகின்றோம்.
1.அதிலிருந்து வரும் கசிவுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
2.இந்த உணர்வுகள் நம் பூமி முழுவதும் படர்கின்றது.
3.அதன் எல்லையில் நுகர்வோர் அனைவருக்குள்ளும் விஷத்தன்மையான கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
4.அந்தக் கதிர்கள் படரப்பட்ட மனிதர்கள் இறந்த பின் அந்த உடலிலிருந்து அதே அணுக்களின் தன்மை மீண்டும் பெருகத் தொடங்குகிறது.

மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது “மிகக் கடுமையான நோய்களாகவும்…” மாறுகின்றது.

முதலில் மனித உடலுக்குள் சென்று தீய அணுக்களின் தன்மையாக உருவாகின்றது. இறந்த பின் மனிதனை ஒத்த நிலையில் கொண்டு பரவிப் புது விதமான நோய்களாக வருகின்றது.
1.இதைத் தான் வைரஸ் என்ற நிலையில்
2.”புதிது புதிதாக உருவாகிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

ஒவ்வொன்றையும் என்னென்ன நிலைகள் என்று பரீட்சித்து பார்க்கும் போது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூடச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த அணு தன்மைகள் உடலிலே நுகர்ந்து விட்டால் அது விளைந்த பின்
1.கேன்சர் எப்படி விஷத்தன்மையான நோயாக ஆன பின் வேறு எந்தக் கடுமையான மருந்தைக் கொண்டும் அதை நீக்க முடிவதில்லையோ
2.இதைப் போன்று வைரஸ் சென்ற அந்தக் கிருமிகள் அதிகமாகி விட்டால் அதை மற்ற மருந்துகள் கொண்டு மாற்றி அமைக்க முடிவதில்லை

எதிர் நிலையான நிலைகள் வரும் பொழுது காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கப்படும் பொழுது இதை மாற்றுவதற்காக இரத்தத்தைப் பரிசோதித்து. இதனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையில் அதைக் கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆகி விடுகிறது.

இந்த உணர்வின் தன்மை சேர்த்துச் சேர்த்து இதற்கு இது ஒத்துக் கொள்கிறதா… இல்லையா…? இந்த உணர்வின் தன்மை எது…? என்ற நிலையும் இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்கு என்ன கொடுப்பது…? என்று பல மருந்துகளைக் கொடுத்துப் பரிசீலித்துப் பார்க்கின்றார்கள்.

அதற்கு அப்புறம் அது பலவீனமான பின் செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வைரஸின் வீரியத் தன்மை அதிகமாகிவிட்டால் அந்தக் காய்ச்சலையே போக்க முடியாது… எத்தனையோ பேர் அவதிப்படும் நிலைகளும் இருக்கின்றது.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்களால் தாக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை மனிதனுக்குள் வருகிறது…!

அது எப்படி…? என்றால் இன்று சென்னை அருகிலே அணு மின் நிலையத்தில் அணு உலைகளை அமைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே அருகிலே வீட்டிலே குடியிருக்கின்றார்கள்.

அங்கே இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றலாகி வந்தார்கள் என்றால்
1.அவர் உடலில் விளைந்த அந்தக் கதிரியக்கங்கள் அவர்கள் இறந்தால்
2.அந்த உடலிலிருந்த அந்த அணுக்கள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது.
3.அவர்கள் பழகிய நண்பர்கள் உடலில் எல்லாம் பரவுகின்றது.

இப்படி வரப்படும் பொழுது தான் இந்த அணுக்களின் தன்மை (வைரஸ்) வளர்ந்து விடுகின்றது.

ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டு வருகின்றது…? என்ற நிலையையும் குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

இதிலிருந்து மீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் வென்றது. அந்த உணர்வுகளை எல்லோரையும் பருகச் செய்…! என்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

திட்டியவர்களைப் பதிவு செய்த பின் அவர்களை நினைத்தால் கோபம் வருகின்றது. அன்றைக்கு ஒரு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் திட்டியவரை எண்ணினால் கணக்குத் தப்புத் தப்பாகத்தான் வரும்.

துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கேயும் தவறாகும். ஆக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம். நம்மை அறியாமல் இத்தகைய நிலைகள் நடக்கின்றது.

இதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி விட்டால் தீமை என்ற உணர்வை அறிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் அதை அடக்கும்.

ஆகவே…
1.ஒவ்வொரு நிமிடத்திலும் தீமையை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும்
2.அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கு தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஒரு சில பேர் சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஒரே தலைவலியாக இருக்கிறது என்று கூடச் சொல்லி விடுகின்றார்கள் ஆனால் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

ஒலி… ஒளி… அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

ஒலி… ஒளி… அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது… அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்…?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்… வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்… ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது… வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது… நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது… ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்… அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்… கடைசியில்
1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே… அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்…! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்…?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்… குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்… சள்… சள்… என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்…?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…!

ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது

உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது

 

பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது…” என்று பார்க்கின்றோம்.

பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.

அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.

உதாரணமாக… அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.

1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.

காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.

ஆக… நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.

இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்…
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.

அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்… டப்… என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்… என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்…” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது

அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.

பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது…
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது… நாம் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.

வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.
இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?

 

நமது வாழ்க்கையில்
1.தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் நமக்குள் இருப்பினும்…
2.பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

1.ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ
2.விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
3.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.

நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும். நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

உங்கள் நினைவு எப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால்
1.இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.
2.சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கிக் கொண்டே உள்ளது.

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது.

இதைப் போல… உயிரிலும்… உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.

1.மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம்
2.மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி
3.நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!

 

உதாரணமாக… வேதனைப்படுகிறார் என்று ஒருவர் மேல் எண்ணம் கொண்டு “அவரைக் காத்திட வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

ஆனால் அதை அதிகமாகச் சுவாசித்து நமக்குள் வளர்த்தாலே
1.அந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின் அவருடைய மணமே நமக்குள் வந்து
2.அவர் இறந்தபின் உயிரான்மா நமக்குள் வந்துவிடும்.

எந்த நோயைத் தனக்குள் விளைய வைத்தாரோ… அதே உணர்வு… அதே புலம்பல்… அதே செயல்… என்று நமக்குள்ளும் வந்துவிடும்.

அவருடைய எண்ணமும் நம்முடைய எண்ணமும் ஒன்றான பின் நமக்குள்ளும் அவர் வளர்த்த அதே நஞ்சினை ஊட்டி இங்கிருந்து உணவாக உட்கொண்டு நம்மையும் வீழ்த்தி விட்டு அந்த உயிரான்மா வெளியே சென்று விடும்.

தன் உடலில் எத்தனை வேதனைப்பட்டதோ அடுத்த உடலிலும் எத்தனை வேதனைப்படுத்தியதோ அந்த வேதனை அதிகமான பின் மனிதனுடைய எண்ண அலைகளே வராது… நஞ்சு கொண்ட எண்ணம் தான் அந்த உயிரான்மாவில் இருக்கும்.

அந்த நஞ்சு உயிருடன் சேர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத் தான்
1.”உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…” என்று நமது சான்றோர்கள் அன்று சொன்னார்கள்
2.இந்த உயிர் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நிழல்
3.அதில் எத்தனை வேதனைப்பட்டதோ அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்

தேள் பாம்பினங்கள் இவை அனைத்தும் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உயிரினங்கள் தான். எந்த இரையைப் பிடித்தாலும் அதற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி கொண்டவைகள் தான்.

நஞ்சின் வலு கொண்டு அது ஊர்ந்து சென்றாலும் வேதனை அறியாத உடலாகத் தான் அவை பெறுகின்றது.

கட்டுவிரியனுக்கு ஒரு விஷம்… நல்ல பாம்பிற்கு ஒரு விஷம்… கண்ணாடி வீரியனுக்கு ஒரு விஷம்…! இப்படித் தரையிலே ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு.

அதைப் போல்
1.மனித உடலில் எத்தனை வேதனைகளை எடுத்துக் கொண்டோமோ
2.எத்தகைய விஷத்தை நமக்குள் ஏற்றுக் கொண்டோமோ
3.அது எல்லாம் நாம் உடலில் கலந்து நம் உணர்வுகளில் கலந்து நோயாகிறது.

நோயின் உணர்வுகள் விளைந்து உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றபின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் விஷத்தின் தன்மையை அங்கே பரப்பி அதையே உணவாக எடுத்து அந்த உடலையும் வீழ்த்திவிடும்.

உதாரணமாக நாம் செய்யும் பலகாரத்தில் சிறிதளவு விஷம் பட்டால் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது. அதிகமான விஷம் பட்டு விட்டால் சாப்பிட்டவர் நினைவையே இழக்கச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் தன்மை மனித உருப் பெறச் செய்யும் நல்ல உணரவுகள் அனைத்தையும் அடக்கிவிடுகிறது.

இத்தகைய உயிரான்மா வெளியே வந்தபின் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.

1.கடைசியில் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உடல்களின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகவோ தேளாகவோ அது வாழும்.
2.மனித வாழ் நாளில் பெற்ற விஷத் தன்மை அங்கே சென்று தான் அடங்கும்.

அந்த உடலிலிருக்கும் போது ஒரு மனிதன் அடித்துக் கொன்றான் என்றால் மீண்டும் மனித உரு பெறும் வாய்ப்பு கிடைக்கும். அது அல்லாது பருந்தோ கோழியோ மற்ற பிராணிகள் உட்கொண்டால் அந்த உடலாகத் தான் பிறக்கும். மனித உடல் பெற முடியாது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!

 

இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.

1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.

ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.

உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.

காசு தான் அங்கே வேலை செய்யும். நீதி இப்படித்தான் இருக்கின்றது வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும். இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.

வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.

பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.

கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.

நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.

1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.அழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.

இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

காரணம் யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.

அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும். குடும்பமும் நலமாக இருக்கும்.

நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.

எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்ககுள் நாம் செல்கின்றோம்.