துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

 

“இக்ஷ்வாகு வம்சம்…!”
1.உயிரின் தன்மை தான் இச்சைப்பட்டு
2.அதன் நிலையில் வளர்ந்தது தான் மனிதன் வரையிலும்.

புழு பூச்சி என்று பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொரு தீமையைச் சந்திக்கும் போதும் “அதிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று இச்சைப்பட்டு அந்த இச்சைப்பட்ட உணர்வுக்கொப்ப மனிதனாக உருவாக்கியது “இக்ஷ்வாகு வம்சத்தின் உயிர்…”

ஆகவே இப்போது இச்சை எதிலே பட வேண்டும்…?

அகஸ்தியன் தாய் கருவிலே விஷத்தை நீக்கிடும் சக்திகளை சந்தர்ப்பத்திலே தான் பெற்றான். அவன் பிறந்த பின் எதிலே இச்சைப்பட்டான்…?
1.தீமையிலிருந்து விடுபட வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையை.
2.தீமை என்ற உணர்வுகள் எது… எது… எது…? என்ற நிலைகளைக் கேள்விகளைக் கேட்டு
3.இந்தக் கேள்விகளுக்கு மத்தியிலே அகஸ்தியன் அறிந்தான்.

தாவர இனங்களுக்கு அதனுடைய உணவு எங்கிருந்து வந்தது…? துருவத்தின் வழியாக வந்தது…! என்று துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான்.

துருவத்திற்கு எது வருகின்றது…? 27 நட்சத்திரங்களின் உணர்வு தான் வருகின்றது… அதைச் சூரியன் கவர்கிறது. மற்ற கோள்கள் எதெனதன் உணர்வு பெற்றதோ அது அது உருவாகின்றது.

அதைப் போன்று தான்
1.நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும்
2.உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் இருதயம் சிறுநீரகம் பித்தசுரபி இவையெல்லாம்
3.இரத்தத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தான்… தன் தன் உணர்வை அதிலே வருவதை எடுத்து அவைகள் வளர்கின்றது.

ஆனால் நாம் சுவாசித்ததில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகி… உடலுக்குள் போர்முறையாகி… மனிதன் சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது. நம் உடலில் உள்ள உறுப்புகள் பாழாகின்றது.

இதே போல் தான் பிரபஞ்சத்திலும் சில கோள்கள் பாழாகி விடுகின்றது. பிரபஞ்சத்தின் இயக்கம் தடுமாற்றமானால் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பூமியின் இயக்கத்திலும் மாற்றமாகி
1.தாவர இனங்களின் விளைச்சல் இங்கே குறைவாகும்.
2.தாவர இனங்களை உணவாகப் புசித்த மற்ற உயிரினங்களும் குறைவாகும்
3.இது அனைத்தும் மனிதனாக்கப்படும் பொழுது அவனுடைய சிந்தனைகள் குறையும் என்ற நிலையை
4.அன்றே அகஸ்தியன் உணர்ந்துள்ளான் அணுவின் இயக்கத்தை…!

ஆக… நம் பூமியின் துருவப் பகுதியின் வழியாகத்தான் அனைத்தும் வருகின்றது என்று உணர்ந்து கொண்ட அகஸ்தியன் தான் கண்ட பேருண்மையின் உணர்வுகளை வைத்துப் புது புதுத் தாவர இனங்களை உருவாக்கினான்.

அதை மனிதன் தனக்குள் சுவைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் தாவர இனங்களாக உருவாக்கினான். அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் பழக்கத்தை விடுத்தான்.

காரணம்… மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தன் உடலாக ஆக்கும் தன்மை பெற்றது. அவைகளைக் கொன்று புசித்தால் அதே விஷம் நம் உடலில் அணுக்களாகி உறுப்புகளாக மாறிவிடும்… மனிதனல்லாத நிலையாக உருவாக்கிவிடும் என்று உணர்ந்தவன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன்.

இதைப்போன்று துருவத்தின் ஆற்றலை தனக்குள் கண்டுனர்ந்து திருமணம் ஆன பின் அதையெல்லாம் தன் மனைவியிடம் சொல்கின்றான். ஆண் பெண் என்ற நிலையில் தான் உருவாக்க முடியும் என்று உணர்கின்றான்.

செடி கொடிகள் கல் மண் எதுவானாலும் ஆண் பெண் நட்சத்திரங்களுடைய உணர்வின் கலவைகளால் தான் உருவாகிறது என்பதை உணர்ந்தான்.
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே முழுமையாகக் காணும் திறன் பெற்றான்
2.நம் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து மக்களுக்கும் அதை எடுத்துக் கூறுகின்றான்… துருவனாகின்றான்.

திருமணமான பின் துருவ மகரிஷியாக மாறுகின்றான் தீமைகளை வென்றிடும் உணர்வு கொண்டு…
1.உயிர் எப்படி உணர்வின் அறிவாக இருக்கின்றதோ
2.உயிரைப் போலவே உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டான்… கணவனும் மனைவியாக.

ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் எதுவுமே நடக்காது… அது வளர்ச்சி அடைய முடியாது.

இப்படி ஆனவன் தான் துருவத்தின் எல்லையில் நின்று… இந்த பிரபஞ்சத்திலும் சரி… மற்ற பிரபஞ்சத்திலிருந்து நம் பூமி கவரும் நிலைகளில் விஷத்தன்மைகள் வந்தாலும்… அதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

காற்றுக்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர வேண்டும் என்று ஆசைப்படுங்கள்

காற்றுக்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர வேண்டும் என்று ஆசைப்படுங்கள்

 

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்கு உடனடியாக மயக்கம் வருகின்றது. வேதனை என்றாலே அது விஷம் தான். ஏனென்றால் விஷம் உடனடியாக எதிலேயும் வேலை செய்யும்.

ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த மயக்கத்தை மாற்றிட முடியும்.
1.விஷத்தை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது சிறிதளவு நம் மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சியை ஊட்டும்.

“இந்த மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்ள…” ஒவ்வொரு நொடியிலும் வரும் சங்கடங்களோ வேதனைகளோ வந்தால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்யுங்கள். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் அதைப் பாய்ச்சுங்கள்.

கண்ணால் பார்க்கப்படும் பொழுது வேதனைக்குண்டான உணர்வுகளைக் கவர்ந்து கண் காட்டினாலும்… “கண்ணுக்குள் இருக்கும் கருமணியில்”
1.விஷத்தன்மை படர்ந்து விட்டால் கண் பார்வை குறைவதும்
2.விஷத்தன்மை அதிகரித்தால் சிந்தனை குறைவதும்
3.விஷத்தன்மை அதிகரித்தால் நரம்பு மண்டலங்கள் பலவீனம் அடைவதும்
4.நல்லதை நம் கண்கள் ஈர்க்கும் நிலையும் குறைக்கப்படுகின்றது

ஆதே சமயத்தில் கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றால் கடும் வேதனை வருவதும் இதைப் போன்ற விஷத்தன்மைகளைத் தான் வளர்க்க முடிகிறது.

இருந்தாலும்… கண்களால் எப்படி உற்றுப் பார்த்து நமக்குள் அந்த வேதனை வந்ததோ அதே கண்ணின் நினைவு கொண்டு “நாம் உயர்ந்த சக்திகளைக் கவர முடியும்…”

ரேடியோ டிவிக்களில் ஆண்டென்னா என்ற சாதனத்தைப் பொருத்தி காற்றில் உள்ளதைக் கவர்வது போன்று..
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு
2.இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்
3.அதை உயிர் வழி கவருங்கள்… உங்கள் கண் வழி உடலுக்குள் செலுத்துங்கள்.

ஏனென்றால் அதே கண்ணால் பார்த்தது தான்… அதன் வழியிலேயே துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத்தன்மைகளைக் குறைக்கும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் விஷத்தை முழுமையாக ஒரு நிலையில் நிறுத்த முடியாது.

ஆக உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தவே “இந்தத் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம்…”

யாரோ செய்வார்… என்பதற்குப் பதிலாக..
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் சேர்த்து
2.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு அதனின் வலிமையை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நல்ல அணுக்களாக நீங்களே மாற்றிவிடலாம்.

உடலில் நோய் வந்தால் அதை மாற்ற டாக்டரிடம் செல்கிறோம். மருந்தைக் கொடுத்து நோயைத் தான் அவர்களால் போக்க முடிகிறது. இருந்தாலும் நோய்க்குக் காரணமான “ஊழ்வினை என்ற வித்தை…” அவர்களால் மாற்ற முடியாது.

மருந்தினால் நோயைக் குறைத்த பின் மீண்டும் இதே உணர்வுகள் “சிறிது குறை…” என்று வேதனைப்பட்டால் அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து வேதனையான அணுக்களை நமக்குள் உருவாக்கத் தொடங்கிவிடும்.
1.மீண்டும் உடல் உறுப்புகள் பலவீனம் அடையத்தான் செய்யும்.
2.முழுமையாக அதிலே விடுதலை அடைய முடிவதில்லை.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துக் கொண்டால் உயிர் என்றுமே நம்மை ஏகாந்த நிலை அடையச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

சகஜ வாழ்க்கையில் இருப்பது போல் பண்பு பரிவு பாசம் கொண்டு பிறருடைய வேதனையான உணர்வினை நுகர்ந்தோம் என்றால் “இன்னொரு ஆன்மா நமக்குள் வந்து” வேதனையைக் கூட்டும். பின் இந்த உடலை வீழ்த்தும்.

இந்த உடலை விட்டு வெளியே செல்லும்போது நமது ஆன்மா உயிருடன் சேர்ந்து எத்தகைய வேதனையின் ஆன்மாவாக இருக்கின்றதோ அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்று “வேதனைப்படும் உடலாக நம் உயிர் உருவாக்கிவிடும்…” என்பதை நீங்கள் மறந்திடலாகாது.
1.ஆகவே உயிரான ஈசனை மதித்து வாழுங்கள்.
2.மனிதனான பின் தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும்…!

அருள் வாழ்க்கை வாழ்வோம் இருளைப் போக்குவோம் பேரருள் பேரொளியாக மாறுவோம். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம் மெய்வழி செல்வோம்… மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவோம்… மெய்ஞானம் பெறுவோம்.

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

 

அகஸ்தியன் உண்மையான நிலைகள் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

யார் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுகின்றார்களோ அவர் வாழ்க்கையில் வரக்கூடிய இருளான நிலைகளை ஒவ்வொன்றாக… அடுக்கடுக்காக… ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது. கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ எதைப் பார்த்தாலும்… அல்லது நுகர்ந்தாலும்…
1.அடுத்த நிமிடம் அந்தத் தீமைகள் உடலுக்குள் புகாதபடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை முந்தி
4.இந்த உணர்வுகளை உடலுக்குள் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி வலு ஏற்றியவுடன் தீமைகளைப் பிரித்து விடுகிறது.

அடுத்து நாம் எந்தத் தீமை செய்வோரைப் பார்த்தோமோ… அவர்கள் அறியாத தீமையிலிருந்து விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் “புதிய உணர்வின் அணுக்களாக” நமக்குள் உருவாகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருந்தாலும் நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டிப் பேரொளியாக மாற்றுதல் வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்… தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைப் பார்த்துச் சுவாசித்து… ஒன்றை ஒன்று கொன்று தின்று மற்றதுக்கு இரையாகி… வலிமையான உடலுக்குள் சென்று தான் பரிணாம வளர்ச்சிக்கு வந்தது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும் விஷத்தின் தன்மை கூடி தேய்பிறையாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை
2.ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குணத்திலும் நாம் சேர்த்துச் சேர்த்து
3.நாம் இந்த உடல்களில் அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்றி மாற்றி
4.எல்லாவற்றையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

எதன் வழி கொண்டு…?

நம் உயிரின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் பாய்ச்சி… தீமை செய்யும் உணர்வுகளை மாற்றி… தீமைகள் வராது தடுக்கக்கூடிய கவசமாக “ஒவ்வொரு குணத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்…”

அப்பொழுது அது நம்மை காக்கக்கூடிய உணர்வாக வரும்.

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

 

ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது…?

குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.

அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது…?” என்று பாருங்கள்.

தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்… நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது…? என்று கேட்டால் என்ன ஆகும்…?

நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே…! வந்ததா வினை…!

பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.

அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்…
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்… நெகட்டிவ்… பாசிட்டிவ்…!
2.மனதில் என்ன செய்யும்…? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே…!

தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.

பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.

துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.

சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்…! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.

அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே…!

சரிப்பா… சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா…! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.

ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்…? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது… வெறுப்பும் வந்து விடுகிறது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்… நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை… நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா…” என்றும் சொல்லலாம்.

இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது…? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.

விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி…?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உனர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.

சில பேர் என்ன செய்வார்கள்…?

அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.

ஆனால் பெண்ணோ… அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே… வேதனைப்படுகின்றாரே… துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே…! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.

தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்…? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.

ரியாக்ஷன் ஆகி… “வேண்டாம்…” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்… கண்களிலே நீர் வருகின்றது.

தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே…!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்… அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்…?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

 

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

 

பூமியில் உயிரணு தோன்றி பல உடல்களைப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆனபின் முதல் மனிதன் அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவன் பிறந்த பின் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான். அவனின் வளர்ச்சியில்
1.வானுலகில் வரும் மின்னல்களைத் தனக்குள் நுகர்ந்து
2.உயிரைப் போலவே உணர்வை ஒளியாக மாற்றினான்.

கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து துருவத்தின் வழி வரும் ஆற்றல்களைக் கவர்ந்து ஒளியின் சரீரமாக ஆகி நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்.

அதிலிருந்து வரும் சக்திகளைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
2.இணைத்தாலும் வெறுமனே ஆயுள் மெம்பராக இருக்கக் கூடாது.

குடும்பத்தில் ஆனாலும் சரி… அல்லது புறத்திலே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி… அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி…
1.வேதனைப்படுவதோ வேதனைப்படுத்துவோரைப் பார்ப்பதோ…
2.சாபம் விடுவோரைப் பார்ப்பதோ அல்லது சாபமிடும் நிலைளுக்கு நாமே ஆளாகுவதோ…
3.இது எல்லாம் நுகர்ந்து… நுகர்ந்த பின் தான் அறிகின்றோம்
4.அறிந்து கொண்டாலும் அது நமக்குள் உருவாகாதபடி… விளையாதபடி ஆயுள் மெம்பர்கள் முதலிலே தடுத்து பழக வேண்டும் (இது முக்கியம்).

ஒரு வித்தை வேக வைத்தால் அந்த வித்து மீண்டும் மண்ணிலே ஊன்றினால் முளைக்காது. வேக வைத்த பொருள்கள் எதுவுமே மண்ணிலே போட்டால் முளைப்பதில்லை.

ஆகவே இந்த வாழ்க்கையில் வேதனையோ சலிப்போ சங்கடமோ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்ட நிலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் பதிவு செய்திருக்கிறது.
1.தீமை என்ற நிலை வந்தால் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்
2.கண்களின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவ மேல் நோக்கி வானிலே செலுத்திக் குறைந்தது ஒரு நிமிடமாவது ஏங்க வேண்டும்.

காரணம்… எத்தகைய விஷத்தையும் வென்று அதை ஒளியாக மாற்றிக் கொண்டே இருப்பது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரையிலும் உபதேசித்தது.

இந்த உணர்வை நீங்கள் சீராக எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி விட்டால் இங்கே நின்று விடும்.
1.அதைத் தாண்டி உடலுக்குள் போவதில்லை
2.அதைத் தான் இராமன் வாலியைக் குகையின் மீது இருக்கும் பாறையைத் தட்டி வீழ்த்தி விடுகிறான் என்று காட்டுகிறார்கள்.
3.குகையை மூடிவிடுகிறான்… வாலி வெளியே வருவதற்கில்லை.
4.அவனுடைய செயலாக்கங்கள் தடுக்கப்படுகிறது.

வாலி என்றால் யார்…?

வேதனைப்படுவது கோபப்படுவது கொதிப்படைவது சலிப்படைவது சங்கடப்படுவது இது போன்ற மோசமான உணர்வுகள் எல்லாமே வாலி தான்.

ஒருவர் திட்டுகிறார்… நம்மைத் தவறாகப் பேசுகிறார்… என்றால் நமக்குள்ளும் அதே உணர்வுகள் வந்து உணர்ச்சியைத் தூண்டி இயக்கத் தொடங்குகிறது. நம்மால் அடுத்து நல்ல எண்ணங்களை எண்ண முடிகிறதா…? இல்லை.

இது நம் இரத்தங்களில் கலந்தால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் விஷத் தன்மையாக மாறும். நம்மைச் செயலற்றதாக மாற்றும். அதனால் தான் வாலி யாரைப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து சம வலுவைப் பெற்று விடுவான் என்று சொல்வது.

அதை மாற்றுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்துடனே உங்கள் வாழ்க்கையை இணைக்கும்படி செய்கிறோம்.

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

 

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

மனிதன் ஒருவன் தான் என்றுமே அழியாத நிலை பெற முடியும்

மனிதன் ஒருவன் தான் என்றுமே அழியாத நிலை பெற முடியும்

 

மூதாதையரின் உணர்வுகளை அதிகமாகப் பதிவாக்கி வைத்திருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் அதிகமானால்… உடலை விட்டு அவர்கள் சென்ற பின் இந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

எந்தெந்த நோய்களை அவர் பெற்றார்களோ அந்த நோய்களும் நமக்குள் உருவாக்கப்பட்டு நமக்குள் வேதனை வெறுப்பு என்ற நிலையே வரும்.

இப்படி… இதற்கு முன் நாம் செய்யத் தவறிய உணர்வுகள் மூதாதையரின் உயிரான்மா அந்த உயிரணுக்கள் அனைத்தும் நம் உடலில் உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் வலுவாக எடுத்துக் கொண்ட பின்
2.அவருடைய (முன்னோர்) உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு
3.அந்தச் சூட்சம சரீரங்களைச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையச் செய்ய முடியும்.

இந்த உடலில் எத்தனை கடுமையாக நோயினால் வேதனைப்பட்டனரோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் செலுத்தும் பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்தில் ஊடுருவி அங்கே நிலை கொள்ளும்.

பின் இந்த உடல் பெற்ற நஞ்சுகள் அனைத்தையும் அங்கே கரைத்து விட்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மூதாதையரின் உயிரான்மாக்கள் வாழத் தொடங்கும்.

இப்படி அவர்கள் வளர்ந்தால் அடுத்து அவர்களுக்குப் பிறவி இல்லை. மனிதன் ஒருவன் தான் இதை செய்ய முடியும்.

நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெற்ற நிலைகள் கரைந்து விட்டால் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.துருவ நட்சத்திரம் விஷத்தை முறிக்கும் உணர்வை ஒளியாகக் கொடுக்கும்
2.அந்த உணர்வலைகளை உணவாக எடுத்து வாழும் சக்தி பெறுகின்றார்கள்

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் எக்காலத்திலும் அழியாது.
1.அகண்ட அண்டத்தில் உள்ள எத்தனையோ சூரியக் குடும்பங்களும் அழியலாம்
2.ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அழிவதே இல்லை.

நமது பிரபஞ்சத்தில் இருப்பது போல ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் மனிதர்கள் வாழ்ந்து முழுமை அடைந்த பின் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அமைந்துள்ளார்கள்.
1.சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும்
2.அந்த ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் என்றுமே அழியாது.
3.உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின்
4.மனிதன் ஒருவன் தான் இந்த அழியாத நிலை பெற முடியும்.

தீமைகளை நீக்கிப் பேரின்பம் என்ற நிலைகளில் என்றைக்குமே பேரானந்த நிலையில் வாழ முடியும். ஆகவே உணர்வை ஒளியாக மாற்றுவது தான் மனிதனின் கடைசி நிலை.

அதைத்தான் இராமேஸ்வரம் என்றும்… பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வு கோடிக்கரை என்றும்… மனிதனுக்குப் பின் தீமைகளை நீக்கியது தனுஷ்கோடி என்றும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி அவ்வப்பொழுது அதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெறச் செய்து இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி நிலை.

இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் காவியத் தொகுப்புகளாக அமைத்து அந்த உண்மைகளை நாம் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

 

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு… “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்…” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்… தியானம் செய்தேன்…
2.“எனக்கு அது கிடைக்கவில்லை… இது கிடைக்கவில்லை…” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய… துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா…!

ஆகவே நமது எல்லை எது…? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்…? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்…! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது…?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா…” எனக்கு ஏன் நோய் வருகின்றது…” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது…!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது…?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது…? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய…! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்… ஆ… என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை…
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல…!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது… அதன் உணர்வே உடலாக மாறுகின்றது…
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற நிலையோ… அதீத ஆசை என்ற நிலையோ… இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றா உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன…? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ… உணர்வுகள் மாறுகின்றதோ… செயல்கள் மாறுகின்றதோ… அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்…? என்ற நல்ல சிந்தனை வரும்.

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

 

இன்று கோடிச் செல்வங்களை நாம் வைத்திருந்தாலும் அழகான உடலாக வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் பண்பால் பரிவால் கேட்டறிந்த உணர்வுகள் உடலுக்குள் கடும் நோயாக மாறும் பொழுது “நம் அழகான உடல் நிற்கின்றதா…?”

ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து பிறரை மகிழச் செய்யும் நிலை நமக்கு இருந்தாலும்
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகிறது…?
2.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அழகான ஆடையை மேலே போட்டால் என்ன சொல்வீர்கள்…?

நல்ல ஆடைகளைப் பார்த்தால் வெறுப்பு தான் வரும்.

மீறி யாராவது கொடுத்தால் என்னைக் கேலி செய்கின்றீர்களா…? நான் நோயாக இருக்கும் போது இப்படிச் செய்கின்றீர்களே…! என்று வெறுக்கும் தன்மை தான் வரும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஒரு நல்ல ஆடையைக் காண்பித்து இது எப்படி இருக்கிறது பாருங்கள்…! என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்…?

காட்டுவர்கள் மீது ஏரிந்து விழுவோம்… எந்த நேரத்தில் எதைச் செய்கிறார்கள் பார்…! என்று. ஆகவே அதை அப்போது ஒதுக்குகின்றோம் அல்லவா…!

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய ஆடம்பர நிலை பெற்றிருந்தாலும்
1.அருள் ஒளி என்ற நிலையை நாம் பெருக்கி
2.அருளைப் பெறும் ஆசையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இருளை நீக்கும் அந்த வலிமை பெற்று நமது வாழ்க்கையில் பேரருளைப் பெறும் அருள் சக்தியாக நாம் வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் முழுமை பெறுதல் வேண்டும்.

உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றேன்…? துருவ நட்சத்திரத்திற்கே இப்போது அழைத்துச் செல்கின்றேன்…!

நம் பிரபஞ்சத்தின் இயக்கம் 2000 சூரியக் குடும்பத்தில் இணைந்து வாழும் தன்மை பெற்றது.
1.அதைக் கண்டுணர்ந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்கு உணர்த்தப்படும் போது
2.உங்கள் நினைவாற்றல் அந்த 2000 சூரியக் குடும்பங்கள் வாழும் எல்லைகளுக்கே செல்லுகின்றது
3.அதன் உணர்வின் தன்மையைப் பெருக்கி பிறவில்லா நிலையை அடையும் நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஆகவே உங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அறியாது வந்த இருளை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கணவன் மனைவி எங்கள் இரு உயிரும் ஒன்றாக வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல நாங்கள் ஒன்றி வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து சாவித்திரி போன்று தீமைகள் புகாது இரு உயிரும் ஒன்றிட வேண்டும் என்று கணவன மனைவி இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஆகவே உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
2.பேரின்பப் பெரு வாழ்வு வாழக்கூடிய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

தியானிக்கும் முறைகளை வழி காட்டினோம்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் பதிவு செய்தோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்துடன் இணைத்து “ஆழ்ந்த நித்திரைக்கு முன் நீங்கள் கொண்டு வந்தால்” என்றும் ஏகாந்த உணர்ச்சி கொண்டு உங்கள் உடலுக்குள் உண்மையின் உணர்வை அது உணர்த்தும்… பேரருளைப் பெருக்கும்… பேரொளியாக மாறுவீர்கள்.