துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

 

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

Leave a Reply