தியானம் என்பது… ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்

தியானம் என்பது… ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்

 

ஒரு வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு (அழுத்தம்) நமக்குள் சிக்கலான உணர்வுகள் வருகின்றது. ஆக நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது… அந்த வேதனை உணர்வுகள் தான் கூடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று தெளிவாக நமக்குக் காட்டுகின்றார்கள்… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

மெய் ஞானிகள் காட்டியது
1.பிறருடைய உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது
2.அது நம் நல்ல உணர்வுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றது.
3.ஆக அந்த உணர்வின் அழுத்தம் இந்த வேலையைச் செய்கிறது.

கோபம் அடிக்கடி வருகிறது என்றால் அதைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…

மகரிஷிகள் உணர்வை அடிக்கடி சேர்த்து நாம் இணைத்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் சார்ஜ் அதிகமாகிறது.

குடும்பத்தில் கணவன் மனைவி என்ன செய்ய வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…
1.என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யக்கூடியதில் பேரும் புகழும் அடைய வேண்டும்
3.அவர் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்மறையான வேறு சில உணர்வுகள் குறுக்கே வந்தால் அதை மாற்றியமைக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.அப்படி இதை எடுத்துக் கொண்டால் ஒரு பாதுகாப்பான நிலையாக வரும்.
2.தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்.
3.வாழ்நாளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க உடலில் உள்ல எல்லா அணுக்களிலும் அது பெருகுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபடும் சக்தி பெற்றுத் தான் இன்று வந்திருக்கின்றோம்.

தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இப்போது பதிவு செய்கின்றேன். அது காற்றில் இருக்கின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுத்துப் பயன்படுத்தும் போது நாம் ஆயுள் மெம்பராக அதிலே சேர்கின்றோம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அதைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.

குறைகளைச் சந்தித்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை அடக்கிப் பழக வேண்டும். குழந்தைகளுக்கு கணவனுக்கோ மனைவிக்கோ அல்லது யாராக இருந்தாலும் அந்த அருள் ஞானம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

தொழில்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் நஷ்டம் என்று எண்ணக்கூடாது. நஷ்டம் என்று வந்தாலும் கூட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால் அதை எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் வரும்… உயர்ந்த எண்ணங்கள் வரும்.

கடையில் இப்படி இருக்கின்றது குடும்பத்தில் இப்படி இருக்கின்றது என்று கஷ்டங்களைச் சொல்லி அடுத்தவரிடம் கேட்டோம் என்றால்
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள்
2.கடைசியில் எல்லாவற்றையும் கேட்டுக் குழப்பிக் கொண்டு
3.தொழிலே செய்ய முடியாது போலிருக்கிறது என்று சோர்வடையப்படும் பொழுது
4.நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்

ஆகவே மனைவி அதிகாலை தியானத்தில் கணவனுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும். சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் தொழிலில் வீரிய சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்ச வேண்டும்.

கணவனுக்கு மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அவர் செயல் அனைவரும் போற்றும் நிலையாக வரவேண்டும்… கடையில் பொருள் வாங்குவோர் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று… மனைவி இப்படி எண்ணிப் பாருங்கள்.

மனைவி இவ்வாறு செய்தால் வேறு யாரிடமும் யோசனை கேட்க வேண்டியதில்லை.

கணவர் வேலைக்குச் செல்லும் போது “எல்லாக் காரியத்திலும் வெற்றி கிடைக்கும்…” என்று மனைவி நீங்கள் சொல்லி அனுப்புங்கள் ஆபீஸில் அனைவரும் போற்றும் நிலை வர வேண்டும் வியாபாரம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள். வியாபாரத்திற்காகச் சென்றால் அங்கே நல்ல பொருளை தேர்ந்தெடுக்கக் கூடிய அந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்படிச் செய்தால் கணவன் மனைவி இருவரிடமும் ஒன்றி வாழும் உணர்வுகள் உருவாக்கப்படுகின்றது
1.இப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்
2.இருவரும் வாழ்க்கையில் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மற்றவர்களிடம் “இந்த வழிப்படி நடங்கள்…” என்று சொல்லும்பொழுது நீங்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த உணர்வு அங்கே விளைய வேண்டும். அதே போல் அவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.

ஊரில் இருக்கிறோம் என்றால் நம் வீட்டில் மட்டும் அல்ல நாம் வெளிப்படுத்தும் உணர்வு எல்லாக் குடும்பத்திலும் பரவி ஷேமமான நிலைகளில் உருவாக வேண்டும்.

நீங்கள் வசிக்கும் தெருவிற்குள் மகரிஷிகளின் அலைகள் பாய வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையை அது உருவாக்கும்.

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி… பழக்கத்திற்குத் தான்…!”

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி… பழக்கத்திற்குத் தான்…!”

 

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது “மீண்டும்” பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகி விட்டால் “ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து” மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து அதன்படி செய்த நிலைகளில்… “இதில் என்ன குறை இருக்கின்றது…” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்…” ஆகவே
1.தியானம் இருந்து பழகியபின்
2.பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு… RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

1.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிக்கலாகின்றதோ அந்த இடத்திலேயே… அப்போதே… இதனுடய சிந்தனை என்ன…?
2.சாமி என்ன உபதேசம் செய்தார்…?
3.“சாமி உபதேசம் செய்ததற்கும்… நமக்குள் இப்போது வருவதற்கும்,,. என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால்…
6.உங்களுக்கு அப்பொழுதே “விடை” தெரியும்.
7.அந்த விடையை வைத்து மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

சாமியை நம்புகிறோம்… சாமியாரை நம்ப முடிகின்றது.. மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.

ஆனால் இதை விட்டு விட்டு என்ன சொல்வார்கள்…?

தீமை வரப்படும் பொழுது…
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே…
2.இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது… தொழில் செய்தால் நஷ்டமாகின்றது…
3.இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது…
4.”எதைச் செய்தாலும்…” எனக்கு ஒரே தொல்லையாக இருக்கின்றது என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே…
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ… ஏதோ… என்னமோ… செய்து கொண்டிருக்கின்றார்கள்…”
3..யாரோ செய்துவிட்டார்கள்…! என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE – RECORD). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்…” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்… செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு… அல்லது உணர்வின் வலிமை பெற்று… இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

1.உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்
2.ரொம்பவும் தெரிந்தவர்கள்தான்… என்று இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்
3.இவராக இருக்குமோ என்று நம்மிடம் இருந்து சொல்கள் வந்தவுடன்
4.”அவர்களே தான்” என்பான்…
5.கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்… சந்தேகமாக இருந்தாலும்… பின் “அவர்கள் தான் செய்திருப்பார்கள்…” என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்து விட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்… “ஜிர்… ஜிர்…” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்…” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான் பார்…” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்… இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்…?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?

1.“பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது… “கரெக்ட்…”
2.அடுத்து வீட்டிற்குள் வம்பு வந்தது…! என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி… நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நல்லதை எடுப்பதற்கு முடிகின்றதா…?

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!”

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும்… உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும்… நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்… உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

1.நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்… அது கருவாகி
2.அதை வளர்த்து விட்டால்… “உயர்ந்த ஞானத்தையும் தீமைகள் புகாத நிலையும்”
3.உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

அதற்குத் தான் எம்முடைய உபதேசமே… (ஞானகுரு).

தான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தியானம் செய்தால் என்ன ஆகும்…?

தான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தியானம் செய்தால் என்ன ஆகும்…?

 

தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்…?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்… செல்வாக்கு வர வேண்டும்… என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்

ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது… செய்வது வேறாக இருக்கிறது.

பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்…?

ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.

ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்…?

1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது – அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.

அதாவது… காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்… அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.

அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை… கிடைக்கவில்லை… என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே…! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.

சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

 

பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் தவறுகளையும் நாம் நுகர்ந்தறிந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தூய்மையாக்கிக் கொண்டே வந்தால் மன பலம் பெற்று… விவேகத்துடன் நடந்து கொள்ளும் தன்மையும்… நம் வாழ்க்கையை அமைதி கொண்ட வாழ்க்கையாகவும் அமையச் செய்யும்.

பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து “என்றுமே ஏகாந்த நிலையாக” மகிழ்ச்சியுடன் வாழும் அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஏகக்காலத்தில் இதைப் பயன்படுத்திப் பழகுங்கள்.
1.குடும்பத்தில் கோபமோ குரோதமோ வராதபடி
2.அருள் உணர்வுகளைப் பெற்றுச் சிந்தித்து செயல்படும் திறனாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் எடுக்கப்படும் போது நமக்குள் வரும் வெறுப்பையும் வேதனையும் சமப்படுத்திச் சிந்திக்கும் தன்மை கிடைக்கின்றது. அப்போது நமது உணர்ச்சிகள் “விவேகத்துடன்” நடந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

இதை எல்லாம் மனதில் வைத்து யாம் கொடுத்த உபதேசங்களை நூல் வடிவில் வந்ததை அனைவரும் திரும்பத் திரும்பப் படித்து அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதுவே “மிகப்பெரிய தியானம்” ஆகின்றது.

வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றிடும் சக்தி பெற்று மற்றவரை நல்வழிப்படுத்தும் அருள் ஞானிகளாகவும் நாம் மாற முடியும்.

ஆனால்…
1.பிறரிடம் நாம் சொல்லிச் செயல்படுத்தும் நிலை ஆகாது… முடியாது..
2.பிறருக்கு நல்ல புத்திகளைச் சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியாது
3.ஏனென்றால் அது இயங்காது.

இவ்வளவு தூரம் இங்கே உபதேசிக்கிறோம் என்றாலும்
1.இந்த உணர்வுகளைப் பதிவாக்கித் தனக்குள் வளர்த்து
2.உங்கள் உடலிலே விளைந்தால் தான் அந்த ஞானமே வரும்.

சொல்லும் பொழுது… கேட்கும் போது… நன்றாகத்தான் இருக்கும். ஆக உங்கள் உடலுக்குள் விளையச் செய்து அந்த உயர்ந்த கருத்துக்களை என்றுமே நீங்கள் வளர்த்தல் வேண்டும்.

அது வரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் அதிகமாகச் சேர்த்து வளர்த்தல் வேண்டும். அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளையும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் பற்றதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

எந்த நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் பற்றுடனே நாம் வாழ்ந்திட வேண்டும்.

1.ஒரு காரியத்தைச் செய்யச் சென்றாலும்
2.வெளியில் சென்றாலும்
3.உறங்கச் சென்றாலும்
4.உணவு உட்கொண்டாலும்
5.ஒருவரிடம் பேசுவதாக இருந்தாலும் கூட
6.அதற்கு முன் ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அந்த வலுவைக் கூட்டிக் கொண்டு
7.நாம் சொல்லக்கூடியது அவருக்கு நல்லதாக வேண்டும் நல்லதாக அமைய வேண்டும்
8.என் சொல்லை அவர் மதித்து நடத்த வேண்டும்
9.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று
10.எதற்குமே இப்படி ஒரு தொடர்பு வைத்துக் கொண்டால்
11.அருள் உணர்வுகள் உங்களுக்கு அந்த ஞானத்துடன் விவேகத்துடன் வரத் தொடங்கும்.
12.எதிர்ப்புகளைத் தணிக்கும்… எதிரிகள் உணர்வு வராதபடி தடுக்கும்
13.கோபத்தை வளர விடாதபடி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்காது தடுக்கும்.

இதை எல்லாம் மனதில் வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சீராகத் தியானத்தில் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

 

தெருவிலே சாக்கடை இருக்கின்றது… வீட்டிலோ… தொழிலிலோ… “மிகுந்த கஷ்டம்…” என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை எடுத்துச் சாப்பிடும் (நம்மை அறியாமலே).

ஆனால் யாம் சொன்ன முறைப்படி தியானம் அதிகமாக இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்குச் சாக்கடை நாற்றமே பெரும்பகுதி தெரியாது.

1.சாக்கடை அருகிலே இருந்தாலும் கூட… அந்த உணர்வுகளை நுகரவிடாது
2.எடுத்துக் கொண்ட தியானம் அதைத் தடுக்கும்… உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் யாம் பதிவு செய்த ஞான வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

பயிர்களை விவசாயம் செய்யும் போது பார்க்கலாம். புகையிலைக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… நெல்லுக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… சோளத்திற்கு என்று ஒரு உரம் போடுகின்றார்கள்.

அதே மாதிரி யாம் கொடுக்கும் ஞான வித்திற்கு “அருள் ஞான உணர்வின் உரத்தை” நீங்கள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஞான வித்தாக” ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களிலே அது படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை உயர்த்தும்.

1.நான் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்
2.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… கடன்காரன் பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்கிறான் என்று இப்படி விட்டு விட்டால் இது சவாரி செய்து விடும்
3.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… எனக்கு நோய் வந்து விட்டது என்று எண்ணினால்
4.அருள் சக்திகளைப் பெறுவதை விட்டுவிட்டு இதை எடுத்துக் கொள்கின்றீர்கள்
5.கெட்டதற்குத் தான் நீங்கள் சக்தி கொடுக்கின்றீர்கள்… அதையே வளர்க்கிறீர்கள்.

இந்த மாதிரி எண்ணங்கள் எதனால் வருகின்றது…?

உடலில் உள்ள அணுக்களுக்கு அதற்குப் பசி எடுக்கும் பொழுது அது உணர்ச்சியைத் தூண்டி நல்லதை எடுக்க விடாது இப்படித் தடுக்கும்.

அந்த மாதிரித் தடுக்கும் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சி மூலம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து நல்ல உரமாகக் கொடுத்தால்
2.ஞானத்தை நாம் பெருக்க முடியும்
3.தீமையான உணர்வுகள் உள்ளுக்கே புகாதபடி தடுக்கவும் முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா. இப்படி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஒருவன் போகின்றான்… யாரையோ கோபமாகப் பேசுகின்றான். அதைப் பார்த்தவுடன் நம் நினைவுகள் எப்படி வருகிறது…?

பார்… இந்த மாதிரி நடுரோட்டில் பேசுகின்றானே…! இந்த உணர்வு வந்த பின் உயிரிலே பட்ட பின் நமக்குள்ளும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நாமாக அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…! அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. ஆகவே இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இந்த வலுவான நிலைகள் இங்கே ஆனபின்
1.அவன் உணர்வைத் தள்ளி விட்டு விடும்
2.காரணம் இங்கே அடைத்து விடுகின்றோம்
3.துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டுகின்றோம்
4.ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்

துணியில் அழுக்குப்பட்ட பின் சோப்பைப் போடுகின்றோம். நுரை என்ன செய்கின்றது…? அந்த நூலுக்குள் மறைந்துள்ள அழுக்கை அப்புறப்படுத்துகின்றது.

சோப்பு போடாதபடி… என்ன தான் துணியைத் துவைத்தாலும் கூட அழுக்குப் போகாது. இருட்டடித்த மாதிரி தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது.

உப்பைப் போட்டுத் துணிகளை வேக வைத்த பின் அழுக்கை எல்லாம் வெளியேற்றி விடுகின்றது. அது போன்று தான் நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழகுங்கள்.

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்தவரையிலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போலக் கவர்ந்து கொண்ட சக்தியாக… அருள் உணர்வுகளை இணைத்து வாழ்தல் வேண்டும்.

நளாயினை போன்று மதித்து நடக்க வேண்டும் என்றால்
1.கணவனை மனைவி உயர்த்தி எண்ணுவதும்
2.கணவன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும் தான்.

இந்த ரெண்டு எண்ணங்களும் உயர்த்தி எண்ணும் போது உயர்ந்த உணர்வாக இரண்டு பேரும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும் பகுதி குறை சொல்லும் பழக்கத்தில் தான் இன்று வாழ்கின்றோம். நம் உடலிலே இது போன்ற எத்தனையோ உணர்வுகள் உண்டு இருந்தாலும் அதை மாற்றி அமைக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் நிலையாக உயர்ந்த நிலை பெறுதல் வேண்டும்.

கணவர் தொழில் செய்யும் இடங்களில் அனைத்தும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்… அதே போன்று மனைவியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்து இருக்க வேண்டும்… மனைவி வெளிப்படுத்துவது உயர்ந்த சொல்களாக வர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… கணவன் மனைவி இருவருமே இப்படி எண்ணிப் பாருங்கள்.

நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது என்று இதைத் தான் சொல்வது.

நளாயினி முடமான தன் கணவனைக் கூடையில் அமர்த்தித் தூக்கிச் சென்றாள் என்று உருவ அமைப்பைக் கொடுத்து நமக்குக் காவியத்தைப் படைத்துக் காட்டி உள்ளார்கள்.

கணவன் சொல்லை சிரம் மீது ஏற்று அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இதைப் போன்று கணவன் மனைவியை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.சக்தி தான் சிவமாகின்றது…
2.பெண்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உடலாக மாறுகின்றது.
3.அதே மாதிரி கணவனும் எண்ணி எடுக்கும் பொழுது “அதே சக்தி நிலைகொண்டு”
4.உயிரில் அந்த உணர்வுகளை ஊட்ட உதவுகிறது.

அதுதான் நளாயினி என்று சொல்வது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்றால் பிறரிடமிருந்து தீங்கான உணர்வுகள் வந்தாலும்… மனைவி அருள் உணர்வுகளைத் தனக்குள் பெற்றுக் கணவன் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் “எத்தகைய தீய நிலைகளோ சாப அலைகளோ இங்கே வந்து சாடாது…”

1.உங்களுக்கு முன்னாடி ஒரு துப்பாக்கியை வைத்துச் சுட்டாலும் கூட அந்த உணர்வுகள் திடீரென்று திசை மாறும்.
2.கணவனைக் காத்திடும் சக்தியாக செயல்படுத்த முடியும்
3.அங்கே சக்தி கொடுக்கப்படுகின்றது… துன்பத்திலிருந்து மாற்றப்படுகின்றது.

ஆகவே கணவன் மனைவி ஒவ்வொருவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும் “ஒன்று சேர்த்து எடுத்து… ஒருவருக்கொருவர் இணைத்துப் பழகுதல் வேண்டும்…”

இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது இரண்டு உயிரும் வலுவாகி அடுத்துப் பிறவி இல்லா நிலையை அடைய உதவுகின்றது.

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

 

தியானம் என்பது தனித்து அமர்ந்து சக்தி பெறக்கூடியது அல்ல. காரணம்… எவ்வளவு சக்தி பெற்றாலும் நாம் அந்த “ஞான சக்தி” என்ற நிலையை அடிக்கடி நினைவுபடுத்தி அதைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
1.ஞானத்தின் உணர்வுகள் பெருகினால் தான்
2.இந்த வாழ்க்கையில் ஓரளவு சிந்தித்து செயல்படும் தன்மையும்
3.தீமையான உணர்வுகள் நமக்குள் வளராதபடியும்
4.மீண்டும் பிறவிக்கு வராதபடி தடைப்படுத்தும் சக்தியும் வரும்.

ஞானத்தின் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி வளர்த்துக் கொண்ட பின்… உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிர் நேரடியாக நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்… அதைப் பார்க்கலாம்.

செத்த பிற்பாடு என்ன…? என்று சாதாரணமாக நினைப்பார்கள்…!

யார் மீதாவது நாம் அதிகப் பற்றுடன் பிரியத்துடன் இருந்தால் இந்த ஆன்மா உடலுக்குள் வந்து எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இறந்த பின் எத்தனை அவஸ்தைப்படுகிறது…? இன்னொரு உடலுக்குள் சென்று தான் கஷ்டப்பட்டது போல அவர்களையும் கஷ்டப்படுத்தும் நிலையாக வரும்.

அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.

உடலில் பட்ட அவஸ்தைகளை அங்கேயும் உண்டாக்கி வேதனையை அங்கேயும் எடுத்து அதை முழுமையாக்கிக் கொண்ட பின் விஷம் அதிகமாகி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நிச்சயம் பாம்பாகப் பிறக்கும்.

வேதனைகள் வந்த பின் சிந்திக்கத் தெரியாதபடி குடும்பத்திலோ தொழிலிலோ மற்றவர்களையோ வெறித் தன்மையாகப் பேசினால்… அல்லது அடித்துத் தாக்கும் உணர்வுகள் வந்தால்… அடுத்து புலியாகத்தான் பிறக்க நேரும்.

ஒரு உடலுக்குள் சென்று இத்தகைய நிலைகளை வளர்த்து வெளியே வந்தால் புலியாகத்தான் பிறக்கும்.

ஆனால்… ஒவ்வொரு நொடிகளிலும் இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை எல்லாம் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை எடுத்து
2.வருவதை எல்லாம் மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளரச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பெற வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல் நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… தெருவில் உள்ளோர் நன்றாக இருக்க வேண்டும்… ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

சண்டையிடுபவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் அவர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும். ஒன்றுபட்டு வாழும் உணர்வு பெற வேண்டும். அவர்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அவர்கள் சண்டையிட்ட உணர்வு நமக்குள் பதிவு இருக்கும். அதை மேலே சொன்னபடி எடுத்து மாற்றி அது நமக்குள் வளராதபடி பக்குவப்படுத்த வேண்டும்.

ஒரு செடியில் விளைந்த வித்தை அது அப்படியே விட்டு விட்டால் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும். அது போன்று மற்றவர்கள் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே தான் நமக்குள் பதிவாகின்றது. அது வளராதபடி தடுக்க வேண்டும்.
1.அந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு இது எதிரான நிலை.
2.இப்படி இது வளரும் போது அந்த அணுக்கள் நல்ல அணுக்களாக நமக்குள் மாறும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி எத்தகைய தீமையையும் மாற்றி நம் உடலில் நல்ல அணுக்களாக அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

AGRICULTUREல் (விவசாயப் பண்ணைகளில்) வீரிய வித்தாக மாற்றுவது போன்றது செய்து பழக வேண்டும் ஒவ்வொரு உணர்வையும் நல்லதாக.. ஒளியாக… மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

தியான வளர்ச்சியில்… நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

 

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் பாசத்துடன் இருப்பார்கள். அவர் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அவருடன் வேலை செய்பவர்கள் எல்லாம் தொல்லை கொடுக்கின்றார்களே… என்று எண்ணுவார்கள்.

இருந்தாலும் மனைவி இப்படி எண்ணி இந்த உணர்வைச் சமைத்து வெளிப்படுத்தினால் ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சுத்தமாக அது செயலற்றதாக மாற்றிவிடும் (பாசமாக இருப்பவர்களுக்குள்).

1.கணவருக்கு இந்த மாதிரித் தொல்லை வருகின்றதே… இப்படிச் செய்கின்றார்களே…! என்ற உணர்வை எடுத்தால்
2.கணவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் பாய்ந்து அவருடைய திறமைகளை எல்லாம் குறைத்துவிடும்.

இதையெல்லாம் மாற்ற நாம் அருள் ஒளி பெற வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவருடைய உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் இரு மனமும் ஒன்று பட வேண்டும்… இரு உயிரும் ஒன்றாக இணைய வேண்டும்
3.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இரண்டு பேரும் ஒரு ஐந்து நிமிடமாக எண்ணிப் பழக வேண்டும்

அதிகாலையில் முழிப்பு வரும் பொழுது இது போன்று செய்து பழக வேண்டும்.

நான்கு மணிக்கு மேல் உங்களை அறியாமலே அந்த முழிப்பு நிச்சயம் வரும். அந்த நேரத்திலே சுதாரித்து இந்த சக்தியை இரண்டு பேருமே எடுக்க வேண்டும்

பெண்கள் தங்கள் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும். குரு அருளைப் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து அவர்கள் பார்வையில் தீமை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று செலுத்திப் பாருங்கள்

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும். அவரைப் பார்ப்பவர் எல்லாம் அந்த புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும். இதே போல மனைவியும் கணவனுக்கு எண்ண வேண்டும். ஒரு இரண்டு நிமிடமாவது இதை எண்ண வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு செய்து விட்டு அடுத்து எழுந்தபின் ஒரு ஆனந்தமான நிலையாக இருக்கும்.
1.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் வீட்டிலே பளீர்… பளீர்… என்று வெளிச்சம் வரும்
2.உங்கள் உடலில் இருந்து வீட்டிற்குள்ளேயே அது படரும்.

ஏனென்றால்
1.நாம் அருள் சக்திகளை நுகரப்படும் பொழுது அது பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.அந்த வீட்டிற்குள் பளீர்… என்று ஒரு வெளிச்சம் வரும்… பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் மூச்சலைகள் பட்ட உடனே இது போன்ற நிலைகள் நிச்சயம் வரும்.

சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தால் தன் அருகில் வரும் மற்ற உணர்வுகளுடன் மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்த பிரபஞ்சம் முழுவதற்குமே வெளிச்சமாகின்றது.

இதே போன்று நாம் வீட்டிற்குள் செய்தோம் என்றால் நம் உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியுடன்
1.தீமை என்ற உணர்வுகள் மோதிய பின் அது விலகிப் போகும்
2.நம் உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும்
3.புதுவிதமான ஒரு மகிழ்ச்சி வரும்… அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பழகுங்கள். இப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் நான் கொடுத்த ஞான வித்திற்கு “நீங்கள் சக்தி ஊட்டுகின்றீர்கள்…” என்று அர்த்தம்.

தியானமிருப்பதைக் காட்டிலும் அதை எழுத்திலே எழுதிப் பாருங்கள்

தியானமிருப்பதைக் காட்டிலும் அதை எழுத்திலே எழுதிப் பாருங்கள்

 

ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?

டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா…! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.

ஆனால் “நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.

ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?

1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.

யார்..? ஆண்டவனுக்கு.

சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.

எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.

உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.

இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.

ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.

இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

 

அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.

கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.

அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.

ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.

1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.

“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்

இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாககச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த உணர்வுகள் மாறும். ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.

உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.

எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.