யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

 

வானியல் தத்துவத்தில் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சக்திகளில் வெள்ளிக்கோள் ஒளியான உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. கேதுக் கோள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது. கருகிய புகைகளை ராகுக் கோள் எடுக்கிறது. செவ்வாய்க் கோள் நாதங்களை எடுத்துக் கொள்கின்றது.

இந்த உணர்வலைகள் பிரபஞ்சத்திற்குள் பரவப்படும் பொழுது அதனதன் சக்தி கொண்டு அதனதன் நிலைகளை எடுத்துக் கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனிதர்கல் நமக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை உயிருடன் மோதி ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இணைகிறது.

1.பித்த சுரப்பிகள் பித்தத்தைக் கவர்கிறது… விஷத்தன்மைகள் அனைத்தையுமே அது கவர்கின்றது.
2.நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் அந்த அணுக்கள் அதைச் சுவாசித்து அதனின் மலங்களாக அந்தக் கூட்டைக் (உறுப்பு) கட்டுகிறது.

வியாழன் கோள் சனிக் கோள் போன்று நம் உடலில் உறுப்புகள் எப்படி மாறுகின்றது…? பிரபஞ்சத்தைப் போல உடலுக்கு உயிர் சூரியனாலும் அது நட்சத்திரம் தான். இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும் அகண்ட அண்டத்திற்கு அது நட்சத்திரம் தான் என்று குரு காட்டுகின்றார்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றதோ உடல் ஒரு பிரபஞ்சம். 2000 சூரியக் குடும்பங்கள் அது ஒவ்வொரு பிரபஞ்சமாக இருக்கின்றதோ ஒவ்வொன்றும் வெளிப்படுத்துவதை ஒன்றுடன் ஒன்று கலவையாகி எடுப்பதும் இப்படி ஒவ்வொன்றும் எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனை எடுத்துக் கொண்டாலும் அதுவும் ஒவ்வொன்றும் தனிப் பிரபஞ்சம் தான். அது இயற்கையில் கிரேதா யுகம்.
1.ஆனால் திரேதா யுகம் (உடலுக்குள்) பிறருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது உணர்வின் எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…?
2.உணர்ச்சிகள் உடலுக்குள் எப்படி மாறுகின்றது…?

நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது இந்த உணர்வுகளை மாற்றப்பட்டு சூரியன் தெளிவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல் மனிதனான நாம் நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு பிறரின் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு உறுப்புகளும் அந்த விஷத்தின் ஆற்றலை எடுக்கின்றது… அதனதன் உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.

வெள்ளிக் கோள் எப்படி ஒளியின் தன்மை பெறுகின்றதோ இதைப்போல
1.நம் உணர்வின் அறிவின் தன்மையை நமக்குள் அறிவு ஒளி என்று உணர்த்தும்
2..நமது அணுக்களை உருப் பெற வைக்கும் “சிறுமூளை பாகம்…” அதை இயக்குகின்றது…
3.உணர்வின் அறிவாக எடுத்து நமக்குத் தெளிவாக்குகின்றது.

சுவாசிப்பது நுரையீரலுக்கு வரும் பொழுது அதை எப்படிச் சுத்தமாக்குகின்றது…? கல்லீரல் மண்ணீரலுக்கு வரப்படும் பொழுது பிரபஞ்சத்தைப் போன்று எவ்வாறு சீராக இயங்குகின்றது…?

சூரியன் முதலில் வளர்ச்சி ஆவதற்கு முன்… ஒரு பிரபஞ்சமாக ஆவதற்கு முன்… எப்படி உயிரணு தோன்றிப் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அங்கங்கள் உறுப்புகள் மாறி மாறி… மாறி மாறி… ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் முழுமை அடைகின்றது.

சூரியன் எப்படி நஞ்சைப் பிரித்து நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு நாம் நுகருவதற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து நல்ல உணர்வாக எடுத்துக் கொள்ளும் அறிவாகப் பெற்றதுதான் இந்த உடல் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்…! ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதன் வழியில் எதிர்நிலையாகி இயக்கிப் பொறிகளை உருவாக்கி அதற்குத் தக்க உடல்களை மாற்றி மாற்றி வந்தது.

1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை உங்கள் கண் கருவிழி பதிவாக்குகின்றது.
2.அதை நுகரும் தன்மை வரப்படும் பொழுது அதை மீண்டும் எண்ணினால்
3.அதைப் பெற வேண்டும் என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது
4.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அதைக் கவரும் தன்மை வருகின்றது.
5.கவர்ந்த உணர்வு உயிரிலே படும் போது அந்த உணர்ச்சிகள் தெரியும்.

இதற்கு முந்தி… மனிதன் எண்ணத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு தெய்வங்களை வணங்கப்படும் பொழுது அது எந்தெந்த உருவத்தைக் கண்டோமோ அது அலைகளாக மாறுகின்றது.

அதே தெய்வத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது ஒரு மனிதனில் பெற்ற அந்த உணர்வினைப் பெற்றால் அதே மனித உணர்வு வரப்படும் பொழுது
1.அவனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வு ஆவியாகவும் பேயாகவும் தெய்வமாகவும் காட்சி தருகின்றது.
2.இது மனிதனின் உடலில் விளைந்தது.

ஆனால் இப்போது ஞானிகளால் உருவாக்கப்பட்ட சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினை அறிவதற்கு உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். சூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்து அந்தச் சூரியன் எப்படி வளர்ந்தது…? என்ற நிலையில் அந்தச் சூனிய மண்டலம் ஆதியிலே எப்படி உருவானது…? என்ற நிலைகளை நீங்கள் அறிய முடியும்.

1.அதை நுகரப்படும் பொழுது அறியும் ஆற்றல் வரும்… அறிய முயற்சி எடுங்கள்.
2.அகண்ட அண்டத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அப்படி பதிவானாலும் சில நேரங்கள் சந்தர்ப்ப பேதங்களில் யாம் பதிவு செய்த உணர்வுகள் உங்களுக்குள் உண்டு. “அந்தப் பதிவின் துனை கொண்டு” நீங்கள் மீண்டும் எண்ணி எடுக்க முடியும்.

1.ஆனால் பல விதமான உணர்வுகள் ஆன்மாவிலே சேர்ந்திருக்கும் பொழுது சேர்க்கப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் கலந்த பின் உடலின் ஈர்ப்பு அதிலே அதிகமான பின் பிற மண்டலங்களிலிருந்து வருவதைத் தடுக்கும்.
3.தடுத்தாலும் எப்படியும் பெற வேண்டும் என்று உள் உணர்வைச் செலுத்தி
4.அதை எல்லாம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
5.குருநாதர் எனக்குள் பதிவு செய்தது போன்றே உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

இதை நீங்கள் சீக்கிரம் வளர்த்துக் கொண்டால் அகண்ட அண்டம் எப்படி ஆனது…? என்ற அந்த உண்மையின் இயக்கத்தை அதில் சூரியக் குடும்பம் ஒரு பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதைப் போன்று பல சூரியக் குடும்பங்கள் எப்படி உருவானதோ அதை எல்லாம் உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக இது உதவும்.

1.குருநாதர் எனக்குக் காண்பித்த முறைப்படி வழிப்படி உங்களுக்குள்ளும் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.
2.நீங்கள் தியானத்தின் மூலம் நிச்சயம் பெற முடியும்… உணர முடியும்.

சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

 

அம்மா அப்பா அருளால்… மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியையும் கோலமாமகரிஷி வளர்த்த அந்த அருள் சக்தியையும் நமக்கு முன் படர்ந்திருப்பதை நாம் கவர்ந்து நம்மில் இணைப்போம்.

அந்தத் தத்துவ மகரிஷி உலக இயல்புகளை எவ்வாறு கண்டுணர்ந்தார்…? அவருக்குள் எவ்வாறு விளைய வைத்தார்…? என்று
1.அவரில் விளைந்த அருள் ஞான வித்தை நமக்குள் பதிவு செய்து
2.உண்மையான மெய் உலகில் அவர்கள் சஞ்சரித்த அந்த இடங்களுக்கு நாமும் சென்றடையத் தியானிப்போம்.
3.அதற்குத் தான் கொல்லூருக்கு வந்து தியானிப்பது.

அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டறிந்தது. ஆனால் கோலமாமகரிஷியோ அழியாப் பெரு வாழ்வு என்ற நிலையைப் பெற வேண்டும் என்று அவர் எண்ண வலுவால் தனக்குள் நுகர்ந்தறிந்தார்.

இன்னொரு சரீரம் வேண்டியது இல்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டு… என்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்து விட வேண்டும் என்ற தன் எல்லையை வகுத்துக் கொண்டார்.

தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் வளர்த்து அவர் விண்ணுலகம் சென்றார்.
1.மிகக் குறுகிய காலத்தில் இவையெல்லாம் 2000 – 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சிகள்.
2.சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள்… எங்கெங்கு அவர் தவம் இருந்தாரோ
3.அந்த அலையின் தன்மை இங்கே பரவி உள்ளது… அதை நாம் பருகுவோம்.

கோலமாமகரிஷியை எண்ணி அவர் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

அவர் தன் உடலில் பெற முடியாத அச்சக்தியை தொக்கியுள்ள காலத்தில் அதைப் பெறும் தகுதியாக ஆதிசங்கரர் உடலில் புகுந்து எஞ்சிய சக்தியைத் தான் பெற்று விண்ணுலகம் சென்றடைந்தார்… சப்தரிஷி மண்டலத்துடன் கலந்தார். அந்தச் சக்திகள் இங்கே படர்ந்துள்ளது.

1.தீவினைகளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்ட
2.அவருடைய சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… கோலமாமகரிஷி பெற்ற அந்தச் சக்தி வாய்ந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை

அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை

தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் “ஓ…ம் ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின்
1.கருவிலிருக்கும் அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அந்தக் குழந்தையைச் சிறிது நேரம் நினைத்து அதைத் தியானியுங்கள்.
3.கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும்.
4.அப்படி ஞானப் பாலை ஊட்டி அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.

உலகிற்கு அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும் மிளிரும் தன்மையாக அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்றுத் தனக்குள் விளைய வைத்து அந்த மூச்சு “அம்மா…” என்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும்.

அந்த மெய் ஒளியின் தன்மைகள் உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும்… அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள் இந்த நாட்டுக்கும் உதவும் மற்றவர்களுக்கும் உதவும்.

1.ஆகவே எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.
2.ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் கர்ப்பமுற்ற பின் அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் குடும்பமாக மாற்ற வேண்டும்.

அது சமயம் ரோஜாப்பூவும் குங்குமப்பூவும் கல்கண்டும் தேனும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும் கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து பழகுதல் வேண்டும்.

அதிகாலையில் குடும்பத்துடன் துருவ தியானத்தை எடுத்து அகஸ்தியர் துருவனாகி அணுவின் இயக்கத்தை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகிக் கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமான அவர்களின் பேரருளைக் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும், என்று தியானிக்க வேண்டும்.

கருவிலிருக்கும் குழந்தை உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும் என்று குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.இதனின் உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து தன் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.இதனின் உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்கின்றது.

இப்படிச் செய்தோமென்றால் நமது குடும்பத்தில் சாப அலைகள் இருப்பினும் தீய அலைகள் இருப்பினும் பாவ அலைகள் இருப்பினும் பூர்வ ஜென்ம அலைகள் இருப்பினும் “இதையெல்லாம் தகர்த்தெறியும் பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்…”

அவன் வளர வளர குடும்பத்திலுள்ள சர்வ தோஷங்களையும் சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும் பேரருள் என்ற உணர்வை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றான்.

1.இதனால் அந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல… அவர்களுடைய ஊரிலும் தெருவிலும் அருள் ஞானியின் உணர்வுகள் படர்கின்றன.
2.இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால் அவர்கள் பிறந்தபின் இருளை அகற்றி மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

நாமும் இந்த நிலை பெற்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும் நமக்குள் இருக்கும் சாப அலைகளை மாற்றிடும் அருள் ஞானியாகவும் ஆகின்றான்.

பண்டைய காலங்களில் அரசர்களின் மனைவிமார்கள் கர்ப்பமுற்றால் அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்துத் தங்களுடைய நாட்டின் பெருமைகளையும் பிற நாடுகளை எப்படி வெல்ல வேண்டும்…? என்றும் எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற வேண்டும்…? என்றும் மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதிக் கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.

மிக பலசாலியாகவும் அதே சமயத்தில் தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும் அந்தக் குழந்தை வளரும். இப்படி அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டித் தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.

அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய கத்தி வாள் போன்ற ஆயுதங்களை நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால் அவைகளை அரசர்கள் ஒரு கையாலே தூக்கி விளையாடுவார்கள். ஏனென்றால் மிருக தசைகளை அதிகமாகக் கொடுத்து மிருகங்களுக்குண்டான வலுவை உடலிலே ஏற்றியிருப்பார்கள்.

1.ஆனால் நீங்கள் குடும்பத்துடன் துருவ தியானத்தில் அமர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இல்லம் முழுவதும் படரச் செய்து
3.குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து தெய்வீகக் குடும்பமாக
4.சஞ்சலங்களும் குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து
5.கர்ப்பமுற்ற பெண்ணிற்குக் குங்குமப்பூவும் தேனும் கலகண்டும் ரோஜாவும் கலந்த பாகை குடும்பத்துள் உள்ளோர் அனைவரும் கொடுங்கள்.

இது சமயம் கருவில் வளரும் குழந்தை மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.

விஞ்ஞான உலகால் வரும் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும் அவன் பெற வேண்டும் என்று எண்ணித் “தேன் கலந்த பாகைக் கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்…”

இதைப் போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கி விட்டால் இன்று விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும் உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை நீக்கிடும் பாவ அலைகளைப் போக்கிடும் எத்தகைய நிலைகளையும் மாற்றும் அரும் பெரும் சக்தி கொண்ட ஞானியாக, அந்தக் குழந்தை வளரும்.

நாம் ஒருவருடன் அன்புடன் பண்புடன் பழகியிருந்தால் அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா பற்று கொண்ட நமது உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச் செய்கின்றது.

இப்படி குடும்பத்தில் அறியாது தீய வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும் பொழுது உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள் உங்களுக்குள் வந்து உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

1.உங்களுக்குச் சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம் கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த இந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே நமது குடும்பத்திலும் உடலிலும் ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால் உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள் ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும் வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச் சொல்லிச் செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். இதனால் பிறக்கும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாகப் பிறக்கும்.

குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும் உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும் குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும் கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.

இதைப் படிக்கும் அனைத்து மக்களும்
1.தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை வென்று
2.பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞானம் பெற்று
4.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் சக்தி பெற்று
5.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞான வாழ்க்கை அமைந்து
6.இவ்வாழ்க்கையில் பேரின்ப்ப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்

யாம் (மறைமுகமாக) உங்களுக்குக் கொடுக்கும் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள்

 

நாம் என்ற நிலைகளில் தான் பேசுகின்றேனே தவிர நான் என்ற நிலை எனக்கு இல்லை.
1.நாம் என்ற நிலைகளில் அனைவரும் சேர்ந்தால்தான் இயக்க முடியும்.
2.காரணம்… சக்தி வாய்ந்த அந்த ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற வேண்டும்.

கனமான பொருளைத் தூக்க வேண்டும் என்றால் ஒரு நூலால் முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அனைவரும் ஒன்று சேர்ந்து தூக்கப்படும் பொழுது தான் அந்தப் பொருளைத் தூக்க முடிகின்றது.

அது போன்று நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை… பிறவா நிலை அடைந்த அந்த ஆற்றல்களை நாம் பெற முடியும்.
2.அவர்கள் பெற்ற ஆற்றல்கள் நெருப்புக்குச் சமம்… நெருப்பு என்றாலும் பரவாயில்லை…! அதைக் காட்டிலும் வலுக் கொண்டவர்கள்.

அணுவைப் பிளந்தான். பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது இரும்பு உலோகத்தையும் அதற்குள் இருக்கும் இயக்கத்தின் தன்மையும் மற்றதை உருக்கி விட்டுத் தன் அணுவின் தன்மையாக வளர்த்துக் கொள்கின்றது.

அத்தகைய ஆற்றல்மிக்க சக்தி கொண்டவர்கள் தான் ஞானிகள்.

சாதாரண மனிதர்கள் நாம் வெளிவிடும் எண்ணங்கள் கொண்டு
1.அத்தகைய ஞானிகள் உணர்வின் அருகிலே இருப்போம் என்றால்
2.அந்த உணர்வுகள் பட்டால் நம் எண்ணங்கள் சுக்குநூறாக ஆகி
3.இந்த உணர்வின் ஒலிக்குள் இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
4.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து நமக்குள் இருளை நீக்கும் சக்தி கிடையாது.

இருந்தாலும் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்.

1.ஞானிகளின் பால் உங்கள் நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி
2.அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைகளுக்கு ஏக்க உணர்வு கொண்டு
3.உங்களுக்குள் விளைந்திடும் விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகளுக்குள் ஒவ்வொன்றும்
4.ஒவ்வொரு குணத்தால்… ஒவ்வொரு குணத்தின் செயலையும் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது
5.அதிலே ஞானிகள் உணர்வின் நிலைகளைப் பிணைக்கச் செய்து
6.பிணைத்த உணர்வின் நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து அதைப் பதியச் செய்து
7.பதிந்த நிலைகளை நீங்கள் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை விளைந்து
8.உங்களுக்குள் விளைந்த தீய உணர்வினைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறனாக நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்கு… நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் எண்ணங்களை யாம் உங்களுடன் சேர்த்து… நாம் அனைவரும் சேர்த்து ஏக்க உணர்வு கொண்டு அதைக் கவரப்படும் பொழுது இங்கே அலைகளாகப் படர்கிறது.

சிறு நிலையாக இருந்தாலும் அந்த வலுவின் தன்மை வரும் பொழுது
1.நம்முடைய எண்ணங்கள் அவரை ஒத்த நிலையாக வரும் அந்த நினைவினை உங்களுக்குள் கூட்டச் செய்து…
2.கூட்டிய உணர்வை ஓங்கச் செய்து… இந்த உணர்வின் அலைகளைப் பெருக்கச் செய்து…
3.இந்த நினைவினைக் கூட்டச் செய்து… அதை இயக்கும் தன்மையாக தியானத்தை நாம் கொண்டு வந்து
4.வலுக் கட்டாயமாக நம் எண்ணங்கள் அனைத்தும் சேர்த்து அவர்களை ஒத்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
5.நாம் எத்தனை குணங்கள் கொண்டிருந்தாலும் அதை மறந்து மெய் வழியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி வளர்த்து
6.கதிரவனின் காந்த அலைகள் கொண்டு காற்றிலே படர்ந்துள்ள ஞானிகள் உணர்வினைக் கவரும்போது
7.அவரவர்களுக்குச் சிறிதளவேனும்… சிறிது பங்கு கிடைக்கும்.

பெரிய மீனை எடுத்தாலும் அதனுடைய பசிக்கு நாம் சிறுகச் சிறுக எடுத்து நிறைய நாம் விளைய வைத்தாலும் நம்முடைய உணவுக்கு அது சிறிதளவாவது பெருகும்.

அது போல
1.ஆற்றல்மிக்க சக்தியைக் கவரச் செய்து உங்களை நுகரச் செய்து உங்களுக்கு அது கிடைக்கச் செய்ய
2.உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கும் பொழுது உங்களுக்கு அந்த வலு கிடைத்து
3.ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் புகுரச் செய்து ஒவ்வொரு குணத்திலும் ஊடுருவச் செய்து
4.அதை விளையச் செய்ய இதே தியானத்தை மேற்கொண்டு
5.தீயவை எவை ஆனாலும் அது நினைவில் வராது அருள் உணர்வினைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது பெறச் செய்து
6.இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையச் செய்து உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வைச் சிறுக்கும்படி செய்து
7.அந்த மெய் ஒளியை உங்களுக்குள் வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

அதன் வழிப்படி உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்களோ அதை அவன் படைக்கின்றான் ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.

அனைத்திற்கும் பாத்திரமாகி அனைத்தையும் அணைத்துக் கொண்டு அது நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நமக்குள் அவன் இருக்கின்றான். அந்த ஞானிகள் உணர்வினை விளைவிக்கும் போது ஈசனுடன் ஒத்த நிலையாக ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்.

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

 

தசரதனின் கருவிற்குள்…
1.எத்தனையோ உடல்கள் இருப்பினும் பல கோடித் தீமைகளை வென்றிடும் உணர்வுகள் பெற்று
2.அந்த மனைவி என்ற நிலை வரும் போது அதற்குப் பிறந்தவன் தான் இராமன்.

அதே சமயத்தில் உறுதுணையாக இருந்து தன்னைக் காத்திடும் தன்மை தான் லட்சுமணன். ஒரு தாய்க்கு (சுமித்ரை) இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.

முதலில் தசரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தான். தூதுவனை அனுப்பிப் பாயாசத்தைக் கொடுத்தான். முதல் நிலையை இராமனின் தாயாருக்குக் கொடுத்தார். இரண்டாவது பரதனின் தாயாருக்கு கொடுத்த்து. மூன்றாவது லட்சுமணனின் தாயாருக்கு கொடுத்தது… தொக்கியுள்ள மிச்சத்தை மூன்றாவது மனைவிக்கே கொடுக்கின்றான்… சத்துருக்கன்.

இங்கே லட்சுமணன்…! லட்சுமணன் என்றால் என்ன…? சூரியன் தன்னுடைய பாதரசத்தால் தாக்கப்படும் பொழுது அதிலே விஷங்கள் பிரிகின்றது… வெப்பமாகின்றது… காந்தமாகின்றது.

காந்தமானாலும்
1.விஷம் பிரிந்து செல்வதை இந்தக் காந்தம் இழுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
2.அது தான் லட்சுமணா என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆக எதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொள்கின்றதோ சத்துருக்களை… சகோதரன் என்ற நிலை வரப்படும் பொழுது
1.சத்துருக்கன் தீமைகள் வராதபடி பரதனுக்கும்…
2.லட்சுமணன் இராமனுக்கு உதவியாக இருப்பதாகவும் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் விஷம் இயக்கச் சக்தி அது தான் லட்சுமணா. காந்தம் கவர்ந்து கொண்டால்…
1.எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கவர்ந்து கொண்டதோ அதனின் இயக்கச் சக்தி
2ஆக… காந்தம் கவர்ந்து வெப்பத்துடன் எது சேர்ந்ததோ அதனுடன் சேர்த்து உருவாக்கும் சக்தி என்ற நிலைகளை
3.இப்படித் தனித்தன்மையாகப் பிரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

விஷ்ணுவை நோக்கித் தவம் என்று வரும் பொழுது உயிர் விஷ்ணுவாகின்றது. அவன் தவத்தின் தன்மை கொண்டு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எண்ணினான். அதன் உணர்வின் தன்மை கொண்டு தன் உடலில் பல நிலைகள் ஆகின்றது.

சூரியனோ தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் பாதரசமாக மாற்றுகின்றது. மனிதன் புழுவில் இருந்து மிருகம் வரையிலும் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் கருத்தன்மை “விந்து தன்மை…” அடைகின்றது.

அந்த விந்தின் தன்மை அடைந்த பின் தான் ஒரு பூச்சியைக் கொன்று தின்றாலும்… அதன் உணர்வின் தன்மை கருவாக்கப்பட்டு அணுத் தன்மை கருவாக மாறுகின்றது. இதைப் போலத் தான் மனிதனின் நிலை.

நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகள் இராமாயணத்தில் உள்ளது இன்று அது திசை திரும்பி விட்டது அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எல்லோரும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். பரதனின் தாயாரும் அதிலே சேர்ந்திருக்கின்றது. இருந்தாலும் பரதன் இராமனுடன் சேர்ந்து வாழ்ந்தவன். நாம் ஏதாவது சொன்னால் அவனுடன் சேர்ந்து விடுவான்… நம்மிடம் மறுத்துப் பேசிவிடுவான் கைகேயி எண்ணுகிறது.

1.இராமனின் தாயார் எல்லோரையும் அரவணைத்தது.
2.பரதனின் தாயார் போரில் ஜெயிக்கும் உணர்வு பெற்றது… தன் சுயநலத்தைக் கொண்டது.
3.ஆனால் இராமனின் தாயாரோ பொது நலத்தைக் கொண்டது என்ற நிலையை பிரித்துக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அதனுடன் வாழும் குழந்தைகள் எல்லாம் இணைந்து வாழும் சக்தியாக வருகின்றது.

காவியத்தில் உள்ள மூலங்களை அவ்வப்போது உங்களுக்குப் பிரித்துக் காட்டுகின்றோம்.

உலக மாற்றத்தின் காலம்

உலக மாற்றத்தின் காலம்

 

ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… எது… எவ்வாறு… எதனுடன் சேர்ந்தபின்… அதன் உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்ற உண்மையை அடிக்கடி சொல்லி வரும் போது அது உங்களுக்குத் தெளிவாகின்றது

1.அருள் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்…
2.மறந்து விடாதீர்கள்…! கருவில் வளரும் குழந்தைகளுக்கு அந்த அருள் ஞானத்தை உங்கள் வீட்டிலிருந்தே ஊட்டுங்கள்.
3.அருள் உணர்வு பெற்று அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் உங்கள் துயரைத் துடைப்பான்… அருள் ஞானத்தைப் பெருக்குவான்… உலக சக்திகளைப் பெறுவான்.
4.அவன் பேச்சும் மூச்சும் உங்களை நலமாக்கும் உங்கள் வீட்டையும் நலமாக்கும் ஊரையும் நலமாக்கும்.
5.இப்படி அருள் ஞானிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் வரும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
1.மூவாயிரத்திற்கு முன் பேரருள் பெற்ற உலகமாக மாறி
2.இங்கே படர்ந்துள்ள இருள்களை அகற்றி விட்டுப் பேரின்ப பூமியாக மாறும்.

அதே சமயத்தில்… மூவாயிரம் ஆவதற்கு முன் இந்த பூமியில் நீர் நிலைகள் அதிகமாகிவிடும். நாளடைவில் இது சூரியனைக் கடந்து சென்றுவிடும்… பனிப்பாறைகளாக மாறும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் நுகர்ந்த அருள் உணர்வுகள் வளரப்படும் பொழுது இந்த அருள் ஞானிகள் உணர்வின் தன்மை “துருவ நட்சத்திரத்துடன் நாம் இணையும் பருவம் வரும்…”

ஒளியின் சக்தியாக… என்றும் நிலையாக… பிறவி இல்லா நிலையாக… பேரின்ப நிலையாக… என்றும் அருள் ஞான உணர்வாக… வரும் இருளை அகற்றிடும் உணர்வாக… “என்றும் ஏகாந்தமாக வாழும் சக்தியை” நாம் பெறுகின்றோம்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கி விடுங்கள். அருள் உணர்வைப் பெருக்கச் செய்யுங்கள்.

1.இந்தப் பூமி அதனுடைய செயலைக் கூடிய சீக்கிரம் இழக்கத் தான் போகின்றது.
2.எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலும் நாளடைவில் பாழடையத்தான் போகின்றது.

இந்த உண்மைகளை உணர்ந்து நம்முடைய எல்லை… பிறவி இல்லா நிலை… சப்தரிஷி மண்டலம் அடைவது தான்…! என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாழுங்கள்.

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

 

1.தீமைகளை வென்றவன் அருள் ஞானி.
2.அதை வைத்து நமக்குள் உருவாகும் தீமைகளைக் கொல்ல வேண்டும்.

ஒன்றை ஒன்று புசித்துத் தான் ஒவ்வொன்றும் வாழ்கின்றது. ஆடு சாந்தமாந உணர்வாக இருந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும்
1.நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளால் உடலுக்குள் டி.பி.நோய் வந்து விட்டால்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத் தான் செய்யும்…
3.எலும்புகள் இருக்காது காணாமல் போய்விடும்.

ஆக நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் உடலில் இவ்வாறு உருவாகி விட்டால் அதைக் கொன்று புசித்து விடும்.

மனிதனில் விளைந்த வேதனையான தீமையான மூச்சலைகள் அங்கே தாவர இனங்களில் பட்டு நாம் எதைப் புசித்தோமோ அதைக் கொன்று நமக்கு உணவில்லாத படி செய்து அந்த இனத்தைக் கொன்று விடுகின்றது.

அதாவது நம் உடலுக்குள் மட்டுமல்ல… தாவர இனத்திலும் இதைத்தான் கொல்கிறது.

அக்ரிகல்ச்சரில்… தென்னை மரத்திலே அதனுடைய கருவுலகை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்து அதிலே தீமை விளைவிக்கும்
1.“ஓலைக் கருகல்” என்ற நிலையில் அந்தச் சத்தினை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களையோ பூச்சிகளையோ கொல்ல
2.விஞ்ஞானிகள் மற்ற உணர்வைச் சேர்த்து அதிலே கருவை உண்டாக்குகின்றார்கள்.

விஞ்ஞான அறிவு கொண்டு மரத்திலே இணைத்த பின் இது படர்ந்து ஓலைகளின் சத்தை எடுக்கும்… ஆனால் அதே சமயத்தில் ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் பூச்சிகளையும் கிருமிகளையும் இது கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.

அது செத்த பிற்பாடு தான் இதுவும் போகும்… பின் மடியும்…!

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகள் உணர்வின் சத்தை அந்த மெய் ஞானிகள் அருள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டு உடலில் விளைய வைத்த பின்
1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களை “எது கொன்று புசிக்கின்றதோ…”
2.அது இருக்கும் வரையிலும் அருள் ஞானிகள் உணர்வு அதைக் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

விஞ்ஞானத்திற்கு மெய் ஞானத்திற்கும் உள்ள நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவுக்காக விஞ்ஞானி அவ்வாறு செய்கின்றான். ஆனால் என்றும் நிலையான சரீரத்தை அதாவது “நம்மை ஒளியின் சரீரமாக…” நிலைக்கச் செய்கின்றான் மெய் ஞானி.

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்

 

எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.

நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.

மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.

1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது… மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது…? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்… அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.

100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் “அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது…?” என்பதைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.

விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது… சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்…! என்று சிலர் நினைப்பார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி…? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.

1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.

என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ராம ராஜ்யம்

ராம ராஜ்யம்

 

ஒருவன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால் அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அன்றைய அரசர்கள்.

ஆனால் மகரிஷிகளோ…
1.ஒருவர் உடலில் அறியாது புகுந்த தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.

அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.

மகாத்மா காந்தி நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் “ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே” என்று சொல்லி அவர்களிடம் இருக்கும் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான் விலக்க வேண்டும்” என்று பாடுபட்டார்.

1.உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.

நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுது… நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது நமக்குள் அது ஒருக்கிணைந்து நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது.

இது தான் ராம ராஜ்யம்.

வான்மீகி மகரிஷி கொடுத்தருளிய இராமாயணக் காவியத்தின் உண்மையின் தன்மை கொண்டுதான் காந்திஜி தமது உயிர் உடலை விட்டுப் பிரியும் கடைசி நொடி வரையிலும் வாழ்ந்தார்.

1.எல்லோரையும்… எல்லாவற்றையும் காக்கும் பல உணர்வுகளுடனும் பிறரைத் துன்புறுத்தா நிலைகளிலும்
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.

இந்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பல உயிர்கள் பலியாக வேண்டியிருக்கின்றது என்ற உணர்வினை காந்திஜி உணர்ந்து… சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் மக்களை நல்வழிப்படுத்தினார்.

அதாவது… அன்னிய நாட்டிடமிருந்து நமது மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வினை மீட்டு அதை மக்களுக்குக் கிடைக்கச் செய்து மக்களை நல்வழியில் வாழச் செய்ய வேண்டுமென்ற முடிவை காந்திஜி தமக்குள் எடுத்து இந்திய மக்களைப் பண்படும்படி செய்தார்.

1.காந்திஜி “உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர்” என்பதை தமது எண்ணம் சொல் செயலில் வைத்து
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.

இதனால் காந்திஜி உலக அரங்கில் அனைவருடைய உள்ளத்திலும் இடம் பிடித்தார்.

காந்திஜி “எதிரிகளையும்” கடவுளாக மதித்தார். அவர் தனக்குள் பகைமை உணர்வுகள் இயக்காதபடி தடுத்து… சாந்தம் ஞானம் விவேகம் எனும் நல்லுணர்வுகளைத் தமது உடலுக்குள் சுதந்திரமாக்கினார்.

ஞானத்தின் வழி கொண்டு நல் உணர்வுகளைத் தமக்குள் சுதந்திரமாக்கி அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் காந்திஜி தனக்குள் ஓங்கி வளரச் செய்தார்.

1.காந்திஜியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் உலகைக் காத்திடும் பேரருளை நாம் அனைவரும் பெறுவோம்.
2.காந்திஜியின் வழியில் சென்றோம் என்றால் நமது குடும்பத்தில் பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற முடியும்.

காந்திஜி மதங்கள் இனங்கள் என்ற பேதமில்லாது நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் “சீதாராமா”என்றும் சொல்லத் தொடங்கினார்.

“சீதாராமா”என்று நாம் மகிழ்ச்சியான உணர்வை நுகர்ந்தால் நம்மிடம் மகிழ்ச்சியின் தன்மை வெளிப்படுகின்றது. மகிழ்ச்சியான சொல் வெளிப்படும் பொழுது கேட்போர் உணர்வுகளிலும் மகிழ்ச்சி அடைகின்றது.

இதைத் தான், காந்திஜி “ஹரே… ராமா…” என்று அடிக்கடி சொன்னார்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் அதன் உணர்ச்சிகள் நமது உடலுக்குள்ளும் நல்லதாகச் செய்யும்… மக்களுக்கும் நல்லது செய்யும் என்று காந்திஜி எண்ணினார்.

அதன் வழி அவருடைய சொல்லும் அவருடைய செயலும் ஒன்றாக இருந்தது.

மக்கள் ஏகோபித்த நிலையில் தவறு செய்யும் நிலை வரும் பொழுது காந்திஜி உண்ணாவிரதம் இருந்தார். காரணம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம்
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.

நாம் ஒவ்வொரு ஞானியரையும் போற்றித் துதிக்கின்றோம்… காந்திஜியையும் போற்றித் துதிக்கின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய அற வழிகளை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றுகின்றனர். ஆனால் மகான்கள் இருக்கும் வரை போற்றுகின்றோமே தவிர அவர்கள் மறைந்த பின் அவர்களைச் சுத்தமாக மறந்து விடுகின்றோம்.

இன்று மனிதர் ஒவ்வொருவரும் தனக்குச் செல்வத்தைத் தேட எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். செல்வத்தைச் சேர்த்தபின்… அவர்களின் குடும்பத்திற்குள் செல்வத்திற்காகப் போரிட்டுக் குடும்பத்திற்குள் ஒற்றுமையற்ற நிலை உருவாகிச் செல்வத்தைச் சீரழிக்கச் செய்யக்கூடிய நிலையே நடக்கின்றது.

இது போன்ற நிலை பெரிய செல்வந்தர்கள் வீடுகளில் இப்பொழுதும் இருப்பதைக் காணலாம். இப்போர் முறைகளினால் செல்வம் கரைகின்றது. அந்த உணர்வுகள் வளர்கின்றன. அன்பு பண்பு என்ற நிலைகள் மறைகின்றன.

இது போன்ற நிலைகள் உலகம் முழுவதற்கும் இருக்கின்றது.

இவையெல்லாம் யாம் ஏன் சொல்கிறோம் என்றால் நமது நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு மகான் என்பதை விட “ஒரு ரிஷி” என்றே சொல்லலாம்.

உலக மக்கள் அனைவரும் தெளிந்த நிலைகள் கொண்டு சகோதர தத்துவத்துடன் வாழ வேண்டுமென்று ஒரே நிலையில் இருந்தவர் காந்திஜி.

காந்திஜியே ஒரு சமயம் “அன்னியனே வெளியேறு…!” என்று சொல்லும் தன்மை வந்து விட்டது. சாந்தமும் விவேகமும் காந்திஜி கொண்டிருந்தாலும் அன்னியருடைய ஆட்சி மிகவும் கடுமையான நிலைகளில் வரும் பொழுது காந்திஜி எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, “அன்னியனே வெளியேறு” என்ற கோஷத்தை எழுப்பினார்.

அன்னியன் என்றால்
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.

காந்திஜி யாரையும் அன்னியமாக எண்ணவில்லை. மற்றவரை யார் பகைமை உணர்வுடன் பார்க்கின்றனரோ அவர்கள் தான் அன்னியர் ஆகின்றனர். இந்த அன்னியத்தில் இருந்துதான் விடுபட வேண்டும் என்று “அன்னியர்கள் வெளியேற வேண்டும்” என்று சொன்னார்.

நாம் அனைவரும் காந்திஜியின் கொள்கைகளை நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாட்டைக் காக்கும் பண்புகள் நமக்குள் வளர வேண்டும்.

நாட்டில் அன்பு கலந்த உணர்வுகள் வளர வேண்டும் என்ற அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் வளர்க்கும் அன்பர்கள் அனைவரும்
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தெய்வச் செயல்

தெய்வச் செயல்

 

தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

இதைத் தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் “நல்ல உணர்வுகள் வளர வேண்டும்” என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும்.

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும் சக்தியாக
4.”பிறவா நிலை” என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்

இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.