அழியாச் சொத்து வேண்டுமா… அழியும் சொத்து வேண்டுமா…! என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்

அழியாச் சொத்து வேண்டுமா… அழியும் சொத்து வேண்டுமா…! என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்

 

இன்றைய மனித வாழ்க்கையில் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் அழியா பேரின்பச் சொத்து.

தொழில் செய்து அல்லது வேலை செய்து சொத்தைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிற போது
1.அது அழியக் கூடிய சொத்து தான்… இந்த உடல் வாழ்க்கைக்கு உதவும்.
2.ஆனால் அதுவும் நாம் சீரான நிலைகள் இல்லை என்றால் அதைக் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாரித்து வைத்திருப்போம். வேதனை… வேதனை… என்று சந்தர்ப்பத்தால் ஏதாவது வந்தால் அடுத்தாற்போல் இந்தச் சொத்தைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தால் இது எதற்கப்பா…? என்பார்கள்.

எல்லாம் சம்பாரித்து வைத்திருப்பார்கள்…! அதை விரிவாக்கி இது அங்கே இவ்வளவு இருக்கிறது… இந்த இடத்தில் உள்ள சொத்துகள் இந்த மாதிரி இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்கிறது…? என்று கேட்டால்
1.எங்கேயோ தொலைந்து போகட்டும்
2.இதை ஏம்ப்பா என்னிடம் சொல்கிறீர்கள்…! என்பார்கள்.

சம்பாரிக்கும் போது எல்லாம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இந்த வேதனை வந்த பின் இந்தச் சொத்துக் கணக்கைச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வருகிறது.

காரணம் செல்வத்தின் தன்மை சேர்த்துக் கொண்டிருக்கும் போது “எனக்கு இப்படி வந்துவிட்டதே…” என்று வேதனை எடுக்கும் போது இந்த உடலின் பற்று தான் வருகிறது.

உடலின் பற்று வரும் போது யார் மீது (தன் குழந்தையோ… நண்பரோ…) நமக்குப் பற்று வருகின்றதோ அவரைப் பற்றிக் கொள்கிறோம். அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். உடலுக்குப் பின் அங்கே வந்து விடுகிறோம்.

அந்த உடலுக்குள் சென்ற பின் குழந்தையாகப் பிறப்பதில்லை.
1.தன் உடலில் விளைந்த உணர்வை அங்கே சாகாக்கலையாக உருவாக்கி
2.அந்த ஆசையைத் தூண்டி அதன் வழிகளிலே அங்கே அவர்களையும் மடியச் செய்கிறோம்.

அதன் உணர்வுகள் அங்கே பேய் மணமாக வளர்ச்சியாகி… பூதகணமாக விளைகிறது… அது தான் பூதங்கள் என்று சொல்வது. ஆனால் உணர்வின் தன்மை விளைவித்த பின் எதனை அடக்கி அதற்குள் வந்ததோ அந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

அந்த உடலிலிருந்து வெளி வந்தபின் இந்த உணர்வை ஒத்த உயிரினங்கள் எது வளர்ச்சிக்கு வருகிறதோ… அங்கே போய் இந்தப் பூதகணங்கள் அதுவாக உருவாக்கி அதன் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவைகள் எல்லாம் தன் இரை தேடும் போது மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. தன் உணர்வு கொண்டு தாக்கித் தான் அதை உணவாக எடுக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் இது போன்ற நிலையைச் செய்வோர் எவரோ அப்படிப்பட்ட மிருகமாகத் தான் உயிர் உருவாக்கும். அதனால் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்..! என்று சொல்வது.

பிறர்படும் வேதனையான உணர்வை எடுத்துக் கொண்டால் அதைத் தூய்மைப்படுத்தத் தெரியவில்லை என்றால் இந்த நிலை வருகிறது.

நம் குழந்தை சிரமப்பட்டால் அதைப் பார்த்துப் பாசத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். ஆனால் நமக்குப் பிடிக்காதவர் ஏதோ ஒரு செயலால் வேதனைப்பட்டார் என்றால் வெறுப்பால் என்ன செய்கிறோம்…?

அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… என்று அதை ரசிக்கின்றோம்.

1.தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.
2.ஆனால் நமக்குப் பிடிக்காதவருக்கு என்றால் நான் நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…! என்ற
3.இந்த விஷத்தை நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஏனென்றால் எது இந்த உடலில் அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும். அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

ஆக
1.எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ
2.அது அவதார புருஷனாக மாற்றிவிடுகின்றது.
3.கலியா… கல்கியா…? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அவருக்குக் “காரியம் செய்கின்றோம்…” என்றால் ஞானிகள் செய்யச் சொன்ன காரியம் எது…?

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அவருக்குக் “காரியம் செய்கின்றோம்…” என்றால் ஞானிகள் செய்யச் சொன்ன காரியம் எது…?

 

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அங்கே சாங்கியப் பிரகாரம் தான் காரியங்கள் செய்ய வேண்டும் என்பார்கள்.

ஆனால் தியான வழியைக் கடைப்பிடிப்பவர்கள் சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்…? இவர்கள் இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணுவார்கள்.

சொந்தக்காரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். நீங்கள் அழுகக்கூடாது என்று சொன்னால்
1.அப்பா இறந்ததற்கு அழுக வேண்டாம் என்று சொல்கிறான் பார்…
2.இவன் எல்லாம் நரகலோகத்திற்குப் போவான் என்பார்கள்.
3.சொர்க்கலோகத்திற்கு அழுது அனுப்புபவர்கள் இப்படிச் சொல்வார்கள்.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

தாய் தந்தையரின் உணர்வு கொண்டு தான் இந்த உடலை நாம் பெற்றிருக்கின்றோம். அவர்கள் அழியா நிலை பெறுவதற்கு என்ன வழியோ அதை நாம் செய்ய வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏகி அந்த உணர்வைச் சீராகப் பயன்படுத்திடல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
3.ஞானிகள் சாஸ்திரப்படி காட்டிய நிலைகள் இது தான்.

அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர்களைச் சார்ந்தவர்கள் உணர்வு வலுப் பெற்று
1.எங்களுடன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்
2.இனி நீங்கள் என்றுமே இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து என்றும் ஒளி பெறும் சரீரமாக பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பெரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று
5.எல்லோரும் சேர்ந்து அந்த விண்ணுக்கு உந்தித் தள்ள வேண்டும்.

ஆனால் இங்கே வழக்கத்தில் என்ன செய்கிறோம்…? பாசத்தால் கீழே தான் இழுப்போம்…!
1.என்னைக் காப்பாற்றினாயே… என்னை விட்டுப் போய்விட்டாயே ஜர்…ர்ர்ர் என்று இழுப்போம்.
2.அவருடைய நண்பர்… எனக்கு இவ்வளவு தூரம் உதவி செய்தாயே போய்விட்டாயே…! என்று அவரும் இழுப்பார்
3.நாலா பக்கமும் இந்தப் பாசக் கயிறால் இங்கே இழுத்து விடுவோம்.

ஆக… நம்முடைய எண்ணங்கள் அங்கே எமனாக வந்து அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த நிலையில் நம்முடைய துயரத்திற்குத் தக்கவாறு தண்டனையைத் தான் கொடுக்கின்றோமே தவிர சொர்க்கத்திற்கு அனுப்புவதில்லை.

எமன் எங்கே இருக்கிறான்…?

நாம அனைவரும் அவர்கள் மீது பாசத்தால் எண்ணத்தை வைத்திருக்கும் போது அந்த எண்ணம் தான் புவியின் ஈர்ப்புக்குள் எமனாக வருகின்றது.

அதற்குத் தான் எருமையைப் போட்டுக் காண்பிக்கின்றான்…!

சிந்தனை இல்லாத நிலைகள் கொண்டு எதன் மேல் நாம் செயல்படுகின்றோமோ
1.அது அவருக்கும் எமனாகின்றது
2.நமக்கும் அந்த எண்ணமே எமனாகின்றது.

காரணம்… அவர் துயர்படும் உணர்வின் தன்மை எண்ணம் வலு கொண்டால் அந்த ஆன்மா நமக்குள்ளேயே வந்து விடுகின்றது.
1.அப்பொழுது அதற்கும் தண்டனை கொடுக்கின்றோம்
2.அதன் வழி நமக்குள் அந்த எமன் இங்கே வாட்டி வதைப்பான்.
3.எந்தெந்த நோயில் கடைசியில் அவஸ்தைப் பட்டாரோ அது எல்லாம் நமக்குள் வந்து வாட்டும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் நம் சாஸ்திரங்கள் எதை வழி காட்டுகிறது நாம் எதை வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று…!

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை உந்தி விண்ணுக்குத் தள்ள வேண்டும். புவியின் ஈர்ப்புக்குள் கீழே இழுக்கக் கூடாது.

இறந்தவர்களுக்குச் சாங்கியம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…? அதனின் விளைவு என்ன…?

இறந்தவர்களுக்குச் சாங்கியம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…? அதனின் விளைவு என்ன…?

 

அம்மா அப்பா இறந்தால்… சுட்ட சாம்பலை எடுத்துக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைத்து… அதற்காக வேண்டி சில மந்திர ஒலிகளைச் சொல்லி சாங்கியத்தைச் செய்தால்… “மோட்சத்திற்கு அனுப்பி விடலாம்” என்று செய்கிறார்கள்.

காரியம் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே… எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிவிட்டு… மாவிளக்கைச் செய்து நெய் தீபம் இட்டு… அணையாது அதை விநாயகர் கோவிலில் கொண்டு போய் அர்ச்சனை செய்தால் மோட்சத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.

மோட்சம் எங்கே என்று தெரியாதபடி மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மோட்சம் எங்கே இருக்கிறது…? அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது…?

அப்பா அம்மாவின் உணர்வுகள் பூராம் பிள்ளைகள் உடலில் இருக்கிறது. வீட்டிலே அல்லது ரோட்டிலே நடந்து செல்வார்கள்…
1.பாதம் பட்ட மண் இருக்கும்… ஆபீஸில் வேலை செய்யும் இடத்திலும் அது இருக்கும்.
2.இவர்கள் அங்கே வேலை செய்யும் போது எப்பொழுது இவர்கள் தலை முடி கீழே உதிரும்…? என்று பார்ப்பார்கள்.
3.தலை முடி உதிர்ந்ததை எடுத்துக் கொள்வார்கள்
4.உடுத்திய சேலையில் இரண்டு மூன்று நூலை எடுத்துக் கொள்வார்கள்.
5.அவர்கள் நடந்து சென்ற பாதையில் வீட்டு வாசல் மண்ணைக் கூட்டி எடுத்துக் கொள்வார்கள்.

ஒருவருக்கொருவர் ஆகவில்லை என்றால் செய்வினை தோஷம் செய்பவர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.

இதை எல்லாம் கொண்டு போய் அதற்குண்டான மந்திரம் தந்திரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள்…? அம்மா அப்பாவை (ஆன்மாகளை) அவர்கள் கூப்பிட்டு இழுத்துக் கொள்வார்கள்.

எப்படி…?

அமாவாசை அன்று சாப்பாட்டைப் போட்டு எங்கள் அப்பா அம்மாவிற்காக வேண்டி “நினைவு நாள் இருக்கிறோம்” என்று இங்கே கொண்டாடுவார்கள்.

1.கடவுள் பக்தியிலே எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உச்சரித்து
2.நம் உடலுக்குள் வாழ் நாள் முழுவதும் அந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கின்றோமோ
3.எந்தத் தெய்வத்தின் மீது பக்தியை அதிகமாகச் செலுத்தியிருக்கின்றோமோ
4.அந்த உணர்வுகள் இறந்தவர் ஆன்மாவிலே பதிவாகியிருக்கும்.

மந்திரத்தைச் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்…! என்று எண்ணித் தான் அதைப் பதிவாக்கியிருப்போம். இந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

உடலை விட்டுப் போன பிற்பாடு நாம் இங்கே இறந்தவர்களுக்குச் சாங்கியம் செய்கிறோம். அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் கொண்டு தான் நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை எல்லாம் நம் பாதம் பட்ட மண்ணிலே பதிந்திருக்கும். அமாவாசை அன்று இங்கே சாப்பாட்டைப் போட்டு அவர்களை நினைவுக்குக் கொண்டு கூப்பிடுவோம். நம் ஈர்ப்புக்கு அந்த அலைகள் வரும்.

அங்கே மந்திரம் செய்பவர்கள் பாத மண்ணை வைத்து மந்திரத்தைச் சொன்னால்
1.அபபா அம்மாவின் ஆன்மா அவர்கள் கையில் குவியும்.
2.குவிந்த பின்னாடி வீட்டில் அம்மா அப்பா என்னென்ன செய்தார்கள்…?
3.எந்தெந்த வகையில் அவர்கள் சாபங்களில் சிக்கினார்கள்…?
4.எந்த நோயினால் செத்தார்கள்…? என்ற இந்த உணர்வெல்லாம் அங்கே அவர்களுக்குக் கிடைக்கும்.

இறந்த உடலில் இருந்தது எல்லாவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இறந்து 48 நாளுக்குள் இந்த மாதிரிச் செய்தால் அவர்கள் கைவல்யம் ஆகின்றது. அதற்குப் பின் அந்த ஆன்மாக்களை ஆட்டிப் படைக்கிற ஆள் தான் அவர்கள்…!

1.அம்மாவையும் அப்பாவையும் மோட்சத்திற்கு அனுப்பிவிட்டோம்…! என்று நாம் நினைக்க வேண்டியது தான்.
2.ஆனால் இங்கே மோட்சம் என்ற நிலை இப்படித்தான் இருக்கும்.

இங்கே மட்டுமல்ல… இந்த உலகில் மதங்களால் உருவாக்கப்பட்ட அனைத்திலுமே இந்த நிலை தான். அரசர்கள் அன்று உருவாக்கிய இது போன்ற தீமையான வழிகள் தான் இன்றும் வழி நடந்து கொண்டுள்ளது.

விநாயகர் தத்துவத்தில் காட்டிபடி விண்ணுலக ஆற்றலை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து…
1.உடலுடன் இருப்பவர்கள் உந்தித் தள்ளினால் அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யலாம்.
2.மீண்டும் பிறவி என்ற நிலைக்கு வராதபடி பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்யலாம்.

அவர்கள் முதலிலே விண் செலுத்தினால் நாமும் அடுத்து அதே வழியில் விண் செல்ல முடியும். ஞானிகள் காட்டிய விண் செல்லும் மார்க்கம் இது தான்.

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன…?

திருக்கடையூர் அமுதகணேஸ்வரரின் தத்துவம் என்ன…?

 

ஒளியைக் கண்டபின் இருள் எப்படி மறைகின்றதோ அதைப் போல் மெய் ஒளியின் தன்மையை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் சிந்தனையைக் குறைக்கச் செய்யும் உணர்வின் தன்மையை அது பிளக்கச் செய்துவிடும்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் போது ஒவ்வொரு நொடியிலும் அதை எடுத்து வளர்க்கச் செய்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுவது தான் நரசிம்ம அவதாரம்… அடுத்து கல்கி.
1.இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக அது வருகின்றது.

அதற்குத் தான் “மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள். என்றும் பதினாறு என்ற நிலையில்
1.எமனையே அவன் சிறைப்பிடித்தான்… எமனை வீழ்த்தினான்…! எமனை சம்ஹாரம் செய்தான் என்று
2.திருக்கடையூர் அமுதகணேஸ்வரர்…! ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
அதாவது… இந்த உயிர் பூமிக்குள் வந்த நிலைகளில்
1.சுவைமிக்க அமுதமாகக் கணேஸ்வரனாகத் தனக்குள் சேர்த்து
2.அந்த ஒளியின் சரீரமாக அசுத்தத்தை நீக்கி என்றும் பதினாறாக ஒளியின் தன்மையாக அது சேர்ந்தது.

அங்கே ஸ்தல விருட்சம் எது..?

பிஞ்சிளம் கொடி…! உயிரின் தன்மை கொண்டு அது எப்படி இளமைப் பருவமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைகின்றதோ அதைக் காட்டுகின்றனர்.

அந்தக் கொடியை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பட்டு… அதை ஒட்டியே தழுவிப் படரும்.

கொடி ஒன்றை ஒன்று படர்ந்து அது எப்படித் தன் சத்தை எடுத்து வளர்கின்றதோ… அது படர்வது போல் நமக்குள் அந்த உணர்வின் சத்தாக…
1.எல்லோரின் உணர்வுகளையும்
2.அருள் ஞான வழியில் வளர்க்க வேண்டும்.
3.அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் கூட்டுத் தியானம் என்பது.

நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் என்றால்… என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு அந்தச் சாமி செய்யும்… இந்தச் சாமி செய்வார்… யாகம் செய்யும்… மந்திரம் செய்யும்… தந்திரம் செய்யும்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

உங்களை நீங்கள் நம்புங்கள்.. உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலை ஆலயத்தை மதித்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலிலே விளையச் செய்யுங்கள். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யுங்கள்…!

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்

 

நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.

1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.

வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டான்…! என்பார்.

என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான் நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.

அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.

பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் ஐயோ.. இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…! என்று தான் எண்ணினேன்.

1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.

அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.

அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.

அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.

ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.

இந்த மகான் நல்லது செய்தார் என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.

இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால் அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.

ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.

ஏனென்றால் எந்த விஷமாக இருந்தாலும் அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் தான் ஞானிகள்.
1.அவர்கள் தங்களுக்குள் விளைய வைத்த அந்த அரும் பெரும் சக்திகளைத் தான்
2.இங்கே உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

தேடிய செல்வத்தை வைத்து வைத்தியம் பார்த்து உடலைக் காத்தாலும்… “உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்”

தேடிய செல்வத்தை வைத்து வைத்தியம் பார்த்து உடலைக் காத்தாலும்… “உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்”

 

உதாரணமாக நாம் வாழும் இந்த மனித வாழ்க்கைக் காலங்களில் வேதனை என்ற அணுக்கள் நம் உடலில் வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்களும் அதனால் மேலும் மேலும் வேதனை அதிகரிக்கின்றது.

1.தேடிய செல்வம் எத்தனையோ இருப்பினும்…
2.வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
3.உடலில் விளைந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ
4.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி எல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அதை எண்ணி எண்ணி வேதனைப்படுவதோ… அல்லது தன்னைச் சார்ந்தோர் வேதனைப்படுவதை அடிக்கடி நுகர்ந்தாலோ… அதை எல்லாம் தூய்மைப்படுத்தவில்லை என்றால் தீய அணுக்களாக மாறி உடலில் நோய்களாக மாறிவிடும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் இதைப் போன்ற கஷ்டங்களோ நஷ்டங்களோ அது எது வந்தாலும்… உடலுக்குள் அதை வளர விடாது தடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் கார்த்திகேயா… என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரில் அடிக்கடி இணைக்க வேண்டும்.

1.கண் வழியாக அந்த அரும் பெரும் சக்திகளைக் கவர்ந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் போது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் திறன் வருகிறது
4.அப்பொழுது மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

அதற்குப்பின் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செலுத்தப்படும் போது அதுவும் வலுப் பெறுகிறது.
1.அப்பொழுது நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள
2.விஷத் தன்மைகளைத் தூர ஒதுக்கிச் செல்ல… அங்கிருந்து வெளியே தள்ளி விடுகின்றது.
3.நமது ஆன்மா தூய்மை ஆகிறது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா… ஒரு வட்டம் உண்டு. அந்த ஜீவான்மாக்களும் அப்போது சுத்தமாகிறது.

இப்படி ஒரு பயிற்சி நமக்குள் வளர்ந்துவிட்டால்…
1.உயிரைப் போன்றே நாம் நுகரும் உணர்வின் தன்மைகளும்
2.ஒளியின் அறிவாக அந்த அணுக்கள் வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.

அதாவது… உயிருடன் இணைந்து ஒளி என்ற ஆறிவு எப்படி இருந்ததோ… அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரமாக மாறுவதே கடைசி நிலை.

அந்த நிலைக்கு வரும்போது..
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ
2.அதனின் ஈர்ப்புக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

 

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது…? என்று தெளிவாகக் காட்டினார்.

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

உயிரை மணியாக்கும் ரசமணி

உயிரை மணியாக்கும் ரசமணி

 

சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசம் அது மற்றதுடன் மோதி விஷத்தைப் பிரித்து வெளியே செல்லப்படும் பொழுது அந்தப் பாதரசத்தால் வெப்பமும் அதனால் ஈர்க்கும் காந்தமும் வருகின்றது.

வெப்பமும் காந்தமும் வந்தாலும் அந்தக் காந்தம் கடைசியில் பலவீனமான விஷத்தின் தன்மையை அது கவர்ந்து கொள்கின்றது. கவர்ந்து கொண்டபின்…
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும்
3.விஷம் இயக்கும் சக்தியாகவும் மாறுகின்றது.

இப்படி இந்த மூன்றும் ஒன்றாக ஆனால் அது ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது. ஆனால் இந்தப் பாதரசம் உலகம் முழுவதற்கும் எல்லாவற்றிலும் கலந்துள்ளது.

1.பாதரசம் எல்லாத் தாவர இனங்களிலும் உண்டு
2.ஒவ்வொரு செடியிலும் எடுத்துக் கொண்டாலும் அந்தப் பாதரசம் உண்டு
3.நம் உடலிலிருக்கக்கூடிய உயிரணுக்களில் துடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் ஜீவ அணுக்களிலேம் இதே பாதரசம் உண்டு
4.நமது உயிரிலேயும் அந்தப் பாதரசம் உண்டு
5.எல்லா அணுக்களிலும் பாதரசம் உண்டு.

ஆனாலும் இந்தப் பாதரசம் எது எதிலே கலந்து கொள்கின்றதோ அதன் உணர்வு ஒட்டியே வாழும்.

இதைப் பிரிப்பதற்கு என்ன செய்வது…? என்பதற்குண்டான விளக்கங்களை குருநாதர் உபதேசிக்கின்றார்.

ஏனென்றால் இன்றைய வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் வாழ்ந்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு உதவி செய்கின்றோம்.

ஆனால் கேட்டறியும்போது அவர் படும் கஷ்டம் நம்மை அறியாமலே நமக்குள் வந்து விடுகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் நாம் இணைந்து தான் வாழ்கின்றோம். யாரும் பிரிந்தில்லை.

இருந்தாலும் மற்றவர்கள் வெளிப்படுத்தும் வேதனை என்பது வலிமையானது… கோபம் என்பதும் வலிமையானது… குரோதம் என்பதும் வலிமையானது…!

ஆக நல்ல குணங்களைக் காட்டிலும் அவர்கள் செயல்படுத்தும் இத்தகைய குணங்களை நாம் நுகரப்படும் பொழுது…
1.அந்த வலிமையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை ஆட்கொண்டு
2.நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி நம் உடலுக்குள் நோயாக மாறுகின்றது.

நாம் செய்த நன்மைகளுக்குள் நம்மை அறியாமல் வந்து சேரும் நோய்களை எப்படி நீக்குவது…? அந்தத் தீமைகளை எப்படிப் பிரிப்பது…? நமது வாழ்க்கையை நாம் எப்படி வழி நடத்த வேண்டும்…? என்பதற்குத் தான் குருநாதர் இதை எல்லாம் படிப்படியாக வழி காட்டுகின்றார்.

ஆதியிலே உயிரணுவாகத் தோன்றிய பின் அகஸ்தியன் எத்தனையோ வகையான உணர்வுகளை எடுத்தாலும் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகப் பிரித்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளி உடலாக மாற்றிக் கொண்டவன்… இதே பாதரசம் தான்…!

இந்த உணர்வின் தன்மையை ஒளியாக… இருளை நீக்கி ஒளியின் உணர்வாகும்போது “ரசமணி…!”
1.தன் உயிரின் தன்மையை மணியாக்கப்படும்போது பிறவி இல்லை என்ற நிலை அடைகின்றது
2.அப்படி அடைந்தது தான் துருவ நட்சத்திரம்
3.அதிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வுகள் இருளை நீக்கும் அருள் சக்தி பெற்றது.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பருக வேண்டும் என்ற நிலைக்குத் தான்
5.குருநாதர் எமக்கு (ஞானகுரு) இதைத் தெளிவாகக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அதே வழியில் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள்ளும் பதிவாக்கி அதைப் பெறும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் துயரத்தையும் சொந்தமாக்க நாம் பிறவி எடுக்கவில்லை

 

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்… எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று…!

இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வம் ஆக மாறுகின்றது.

நோயின் உணர்வுகள் விளைந்தால்… “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே…” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை…!

நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது…? என்று சிந்தியுங்கள்.

வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது

ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.

இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது இதைப்போல அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது

ஆகவே அத்தகைய வீடுகளை இந்த உடலில் மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றும் நிலையான
2.பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.