உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

 

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

 

இன்று தன் கணவன் என்று இருக்கும்… ஆனால் கணவனுக்கோ தொழில் நிமித்தம் வேலை பார்க்கும் இடங்களில் அவருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்திருப்பார்கள்.

1.“உன்னை விட்டேனா பார்…?” என்ற நிலைகளில் கோபமாகச் சண்டை இட்டிருந்தால்
2.கடைசியில் உடலை விட்டுச் சென்ற பின் அந்த உடலுக்குள் கணவனுடைய ஆன்மா சென்று விடும்…
3.அவருடைய எண்ணமே எமனாக மாறிவிடும்.

அந்த எண்ணத்தின் வழி மற்றவர் உடலுக்குள் கணவன் சென்று விட்டால் அடுத்து… “தன் கணவன்…” என்று சொல்வதற்கு என்ன இருக்கின்றது…?

அதே போன்று தொழிலில் நஷ்டம் என்று வரும் பொழுது ஒருவர் கணவனுக்கு உதவி செய்கின்றார். இருந்தாலும் வாழ்க்கையின் கடைசியில் உடல் பலவீனமாகும் பொழுது… நன்றிக்காக வேண்டித் தனக்கு உதவி செய்தவரின் எண்ணம் தான் வரும்.

அந்த எண்ணம் வந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அவர் உடலுக்குள் தான் கணவனின் ஆன்மா செல்லும்.
1.இங்கே இவருக்குக் கணவன்… பிள்ளைகளுக்கோ தந்தை…
2.உடலை விட்டுச் சென்று இன்னொரு உடலுக்குள் போனால் பேய்…!
3.அந்த உடலில் இருந்தும் வெளியே சென்ற பின் மாடோ ஆடோ தான்…!
4.ஆட்டிலோ மாட்டிலோ அங்கே உரு பெற்ற பின் அதன் இனமாக வளர்ந்தது இதற்குத் தாயாக மாறுகின்றது.

அப்போது இங்கே இந்த மனைவிக்குக் கணவன் எங்கே…? மற்றொன்றுக்குத் தான் கணவனாக மாறுகின்றது.

ஆகவே தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.

ஆனால்… சாங்கியப்படி என்ன செய்கிறோம்…? கணவன் இறந்து விட்டால் தாலியை நீக்கிவிடுகின்றோம். ஏனென்றால் கணவனை இழந்தவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அவ்வாறு செய்து வேதனையைத் தான் உருவாக்குகின்றோம்.

வேதனையை உருவாக்கினால்… கணவனை மனைவி எங்கே மீட்டுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

பல இலட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று பெரும் பகுதியானோர்…
1.தனித்த ஆளாக நான் கடும் தவம் இருந்து விண்ணுலகம் சென்று விடுவேன்…
2.பிறவா நிலை அடைந்து விடுவேன்…! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.முடியாது…! முனி(வனாக)யாகத் தான் மாற முடிமே தவிர உணர்வின் தன்மை “ஒளியாக மாற்றும் திறன் இருக்காது…”

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி “அந்த உணர்வுகள் உராய்ந்து குழந்தைகள் எப்படி ஜெனிக்கின்றதோ” அதே போன்று இந்த உடலை விட்டு அகன்ற பின் கணவன் மனைவி எவர் முன் பின் சென்றாலும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஐக்கியமாகி… ஒரு உணர்வாகும்.
1.என்றுமே ஒளியின் கருவின் அணுவினை உருவாக்கிக் கொண்டே
2.வளர்ந்து கொண்டே செல்லும்…! (துருவ நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்)

தாவர இனங்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு. ஆண்பால் வீசும் உணர்வினைப் பெண்பால் கொண்ட செடி கொடிகள் கலந்தால் தான் அதிலே மற்ற வித்துக்கள் உருவாகும். இல்லையென்றால் வித்துக்களைக் காண முடியாது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் திருமணம் செய்துதான் மனைவியை அரவணைத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அகஸ்தியன் என்று (சொல்) தனித்துச் சொன்னாலும்
1.அவன் உருவாக்கிய உணர்வின் தன்மை கொண்டு தன் மனைவியைத் தன்னுடன் அழைத்தே சென்றான்.
2.அதைத்தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று…” என்று சொல்வது

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இரு மனமும் ஒன்றாக இயக்கி… குறைகள் இருப்பினும் அதை நீக்கி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் குறைகளைக் களைந்து… அந்த ஞானிகள் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையிலே ஒன்று சேர்த்து வாழ வேண்டும்

இதற்குப் பெயர் நளாயினி…!ஆகவே என்றுமே இணை பிரியாது ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது.

1.குடும்பத்திலே கணவன் மனைவிக்குள் குறைகள் வரும்
2.உடலில் அழகான துணிகளை நாம் அணிந்திருந்தாலும் அதிலே அழுக்குப் படியத்தான் செய்யும்
3.அதை மீண்டும் மீண்டும் நாம் தூய்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் சில சந்தர்ப்பம் வெறுப்பின் நிலைகள் வரும். அதைக் களையும் தன்மையாக “மகரிஷியின் அருள் சக்தி கொண்டு இணைத்து” அதை மாற்றுதல் வேண்டும்.

கணவன் மனைவியின் உணர்வுகளை மதித்து… அதே போல் கணவன் சொல்வதை மனைவி மதித்து… இரு உணர்வு ஒன்றாகும் போது தான்
1.மகிழ்ச்சி என்ற உணர்வும்.. இருளைப் போக்கும் அருள் சக்தியும் கிடைக்கின்றது.
2.காவியத்திலே காட்டப்பட்ட இந்த உண்மைகளை நமக்கு யாரும் தெளிவாகச் சொல்லவே இல்லை.

“மனைவி மட்டும் தான்” என்று ஒருதலைப் பட்சமாக நளாயினி முடவனான கணவனைச் சுமந்து சென்றாள்…! என்று திரிபு செய்துவிட்டனர்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்தக் குறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதித்து அந்தக் குறைகளைக் களைந்து மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்…!

அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே சமப்படுத்தி இணைத்து… விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தவர் எவரோ… அவர்கள் தான் அங்கே இருக்கின்றார்கள்…”

அவர்களை எண்ணிக் குறைகளைக் களைய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்து இருள்களை மாய்த்து “ஒன்று சேர்ந்து விண் செல்ல வேண்டும்…!” என்பதுதான் தத்துவம்.

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

 

உயிர்:-
நாம் எண்ணியதை நமக்குள் பதிவு செய்வதும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அதை இயக்குவதும் உயிருடைய வேலை.

கண்;-
நாம் எண்ணியது எதுவோ நமது கண் இந்த உயிரின் இயக்கத்தின் ஓட்டத்தை அது வழிகாட்டுகின்றது நல்லவை கெட்டவை என்று கவர்ந்து உயிருடன் இணைத்து உடலாக மாற்றுகின்றது.

உடல்:-
எது இயக்கியதோ அதைத் தன்னுடன் வரவேற்று அணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை. ஆகவே சிவன் அனைத்தையும் சிவமாக்கித் தனக்குள் சக்தியாக இயக்கச் செய்வது தான்.

எல்லாவற்றையும் இயக்குவதும் உருவாக்குவதும் தான் உயிரின் வேலை.
1.அதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான் பிரம்மாவோ உருவாக்குகின்றான் என்று சொல்வது.
2.நாம் எண்ணியதை நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி
3.ஜீவ அணுவாக ஆனபின்… எந்த எண்ணமோ அதை மீண்டும் உருவாக்குவது தான் பிரம்மாவின் வேலை.

நாம் எண்ணியது அனைத்தையும் தனக்குள் ஜீவ அணுவாக மாற்றுவது தான் உயிரின் வேலை. நாம் எண்ணியதைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை.

ஒருவர் நல்ல சொல்லைச் சொல்கின்றார். அதை நாம் கேட்கும் பொழுது உடனே உயிர் ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

மீண்டும் அந்தச் சொன்னவரை நாம் நினைக்கின்றோம்
1.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட அலைகள் இங்கே உண்டு
2.அதை மீண்டும் கவர்ந்து நாம் சுவாசித்து “உயிரின் வழி தான்” அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்).
3.உயிர் அதை இயக்கிக் காட்டி இந்த உணர்வினை உடலுக்குள் பரப்புகின்றது.
4.அவர் சொன்னது உடலில் ஜீவ அணுவாக இருக்கும் பொழுது அந்த நல்ல அணுக்களுக்கு இது உணவாகப் போய்ச் சேர்கின்றது
5.அந்த நல்ல அணுக்கள் விளையத் தொடங்குகிறது.

உயிரின் வேலையையும் அதனின் இயக்கத்தையும்… உடலின் வேலையையும் உடலாக ஆவதைப் பற்றியும்… அறிந்து கொள்வதற்கே இதை உணர்த்துகின்றோம்.

ஆதியிலே இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அந்த அகஸ்தியன்… அவன் வாழ்க்கையில் தான் கண்டறிந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் விண்ணிலே மின்னிக் கொண்டிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற அனைவருமே பிறவி இல்லா நிலை அடைந்து பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டே உள்ளார்கள். இந்தப் பேரண்டத்தில் மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றுமே அதற்கு அழிவில்லை.

சூரியன் அழியும்… மற்ற பேரண்டங்கள் எவையாக இருப்பினும் அவைகளும் அழிந்து விடும். ஆனால்
1.உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி… ஒளியின் சரீரமாக மாறிவிட்டால் அதற்கப்புறம் பிறவி இல்லை… அழிவே இல்லை…!
2.அதிலிருந்து உருப்பெரும் உணர்வுகள் உயிரணுக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து
3.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளில் ஒளியாக உருவாக்கிக் கொண்டே இருக்கும்

விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் “தொடர் வரிசை”

சப்தரிஷி மண்டலத்தை அடையச் செய்யும் “தொடர் வரிசை”

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றோமோ…
1.உடலை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால்
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்முடன் பழகியதை எண்ணி “ஐயோ… நல்லவராக இருந்தார்… இங்கே எல்லாம் வந்தார்… இப்பொழுது போய்விட்டாரே…!” என்று எண்ணுவதை விடுத்துப் பழக வேண்டும்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் மனித வாழ்க்கையின் துன்பத்தை அவர் கடந்தார்… இனி பேரின்பப் பெரு வாழ்வு அவர் பெற வேண்டும்…! என்ற இந்தப் பேரின்பத்தை தான் எண்ண வேண்டும்.

1.உடலில் வாழ்ந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்
2.உடலை விட்டு அகன்ற பின் இனித் துன்பமில்லா ஏகாந்த நிலையை அவர் அடைய வேண்டும்
3.அவர் அருள் ஒளி பெறுதல் வேண்டும்
4.உலகில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர் அருளானந்தம் பெற வேண்டும்
5.அந்த ஆன்மா ஏகாந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உடலிலே நீடித்த நாள் வாழ்ந்தவர் எவரும் இல்லை. ஆகவே நாம் செயல்படுத்த வேண்டியது துன்பத்தைக் கடந்து அவர் செல்கின்றார். பேரின்பத்தை அவர் அடைய வேண்டும் என்பது தான்.

அவர் உணர்வு நமக்குள் இருப்பதால் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.
1.நமக்குப் பின்னும் இதே போன்று… “பின் உள்ளோர்” நாம் உடலை விட்டுப் பிரிந்த பின்
2.நாம் செய்வது போன்று அவர்கள் செய்தார்கள் என்றால் நாமும் எளிதில் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
3.அந்தத் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்

அதற்குத் தான் கூட்டமைப்பாக அமைத்துள்ளோம்.

ஏனென்றால் “ஒரு மனிதன் தனித்த நிலைகள் அங்கே சொல்ல முடியாது…!” ஒன்றுபட்ட உணர்வினை இயக்கப்பட்டுத் தான் செயல்படுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் எப்படி விண் செலுத்துகின்றோமோ… இது போல நம்முடன் தொடர் கொண்டவர்கள்… நம்முடன் இணைந்தவர்கள்… கேள்வியுற்றபின் அங்கே செலுத்த வேண்டும்.
1.இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று விடாது அருள் ஒளி என்ற நிலைகள் உந்தப்பட்டு
2.என்றும் ஏகாந்த நிலை என்ற ஒளியின் சரீரத்தை நாம் பெற இது உதவும்.

ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழ்கின்றது… ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் உணர்வு ஒன்றுதான் நாம் வாழுகின்றோம்…!

ஆகவே இதை வழிப்படுத்தி நாம் செயல்படுத்துதல் வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“உயிருடன் ஒன்றும் உணர்வை…” ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்வதன் உண்மை நிலைகள்

“உயிருடன் ஒன்றும் உணர்வை…” ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்வதன் உண்மை நிலைகள்

 

நாம் நுகரும் (சுவாசம்) போது உயிரிலே பட்ட பின் எண்ணங்களாகின்றது… அந்தந்த உணர்வுகள் நம் உடலை இயக்குகின்றது. உணர்வின் உணர்வுகள் அதன் பொறி கொண்டு நம்மை இயக்கும் சக்தி பெறுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளிக்கதிர்கள்
2.இன்று மனிதனாக இருக்கும் பொழுது எண்ணங்கள் எதுவோ
3.அதுவே உணர்வின் அறிவாக நம்மை இயக்கும்.

விஞ்ஞானம் இன்று இதை எல்லாம் நிரூபிக்கின்றது. கருவுக்குள் இருக்கும் உயிரிலே
1.உள்ளே ஒரு சிறு அதிர்வைக் கொடுத்தால் அது துடிக்கும் தன்மை பெறுகின்றது.
2.அந்தக் கருவுற்ற சிசுவிற்குள் ஈர்க்கப்படும் உணர்வுகள் வேதனை உருவாகும் தன்மை பெறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வேதனை வேதனை வேதனை வேதனை என்ற உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தறிந்தால் உடலை விட்டுச் சென்றாலும் உயிருடன் ஒன்றி வேதனைப்பட்டுக் கொண்டே தான் இருக்க முடியும்… அது மீளாத் துயர் கொண்டது.

ஒரு நெருப்பை வைத்து உடலை மாய்த்து விடலாம் என்று எண்ணினால் நெருப்பின் உணர்வுகள் அங்கே எரிந்து கொண்டே இருக்கும். உயிரிலே (உயிருடன் ஒன்றியது) எரிச்சலின் நிலைகள் தாங்காது இருக்கும்.
1.இந்த உயிர் இன்னொரு உடலுக்குள் சென்றால் அதே எரியும் உணர்ச்சியின் தன்மையை ஊட்டும்
2.மீளாத் துயருடன் எரியுதே… எரியுதே…! என்று இருப்பதையும் காணலாம்.

ஒரு பக்தி கொண்ட ஆன்மா நெறி கொண்டு இருப்பினும்… இந்தத் தெய்வம் காக்கும்…! என்று அர்ச்சனை அபிஷேகங்கள் ஆராதனை செய்திருந்தாலும் குடும்பத்தில் எல்லை கடந்த சிக்கல்கள் வரும் போது அது தாங்காது நெருப்பை வைத்து எரித்துக் கொள்கிறது.

ஆனால் பக்தி கொண்டு ஆண்டவன் என்றும் தெய்வம் என்றும் எண்ணியதோ அதனை நினைத்து அந்த எரிச்சலுடன் உடல் கருகினால் மனித உடல் பெற்ற உணர்வின் அறிவு இழக்கப்படுகின்றது. “உயிருடன் (ஒன்றி) எரிந்திடும் உணர்வையே அங்கே பெறுகின்றது…”

அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்லவில்லை என்றாலும் அதே எரிச்சலின் உணர்வின் துடிப்பு கொண்டே வாழும். “அதிலிருந்து மீள முடியாது…”

உதாரணமாக ஒருவர் குடும்பத்தில் பற்றில்லாதபடி வெறுப்பின் நிமித்தம் தற்கொலை செய்யும் நோக்குடன் தீயை வைத்து எரித்துக் கொண்டாலும் இதே உணர்வுகள் எரிக்கப்பட்டு அந்த உணர்வுகளைத் தன்னுடன் சேர்த்து விடும்.
1.அதே சமயம் அவருடன் பழகி அவர் மேல் பற்று கொண்டவர்கள்
2.இப்படி ஆகிவிட்டதே… நல்ல நிலையில் இருந்ததே… என்ன ஆயிற்றோ…? என்று எண்ணி ஏங்கினால்
3.அந்த உடலுக்குள் ஆன்மா வந்து விட்டால் அதே எரிச்சலின் துணை கொண்டு “எரியுதே… எரியுதே…” என்று தான் இருக்க வேண்டி இருக்கும்.

தெய்வத்தின் பெயரால் தெய்வம் காக்கும் என்றும் துயரான நிலைகள் ஏற்பட்டால் ஓர் உடலுக்குள் சென்றால் பக்தி கொண்டு அருளாடுவதும் ஐய்யய்யோ எரியுதே… எரியுதே…! நீரை ஊற்று…! என்று சில பேர் சொல்வதைப் பார்க்கலாம்.

பக்தி கொண்ட ஆன்மாக்கள் உடலில் தீ வைத்து எரித்து கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்
1.அதே உணர்வின் வேகம் கொண்டு அடுத்த உடலுக்குள் புகுந்து விட்டால்
2.எரியுதே… நீரை ஊற்று… மஞ்சள் நீரை ஊற்று…! என்று இவ்வாறெல்லாம் கூறும்.

இது எல்லாம் மனித உடலுக்குள் பெற்ற நிலைகள்…! தன் உயிராக இருப்பினும் விளைந்த வேதனையின் உணர்வுகள் உயிரால் உணர்த்தப்படும் போது அந்த அறிவாகவே உடலை இயக்கும்.

அடுத்த உடலுக்குள் சென்ற பின் அது அடங்கும். அந்த அணுவின் தன்மையை உண்டு அதையே உணவாக உட்கொள்ளும் நிலை பெற்று அதற்குத்தக்க உடலாக அடுத்து அது உருவாக்கும்… “எரி பூச்சியாக மாறும்…”

எரி பூச்சி மனிதன் மேல் பட்டால் சூடு போட்டது போல் ஆகிவிடும். அதாவது
1மனிதனாக இருக்கும் நிலையில் தீ வைத்துக் கருகி விட்டால் (எரி பூச்சியாக ஆன பின்)
2.அதே உணர்வின் தன்மை அந்த உணர்வின் அணுப் பிளம்புகள் ஒரு உடலில் மீது பட்டால்
3.மேலே ஊர்ந்து சென்றால் கோடிட்டது போல் இருக்கும்… ஆனால் அதைக் கருக்கிவிடும்.

காரணம்… உயிரின் இயக்கங்களில் அதனுடன் ஒன்றிய உணர்வுகள் எதுவோ அதன் வழி… வழி செய்கின்றது. ஆகவே மனிதனாக இருக்கும் நாம் “எந்தச் செல்வத்தைத் தேட வேண்டும்…?” என்று சற்று சிந்தியுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியில் நம் வாழ்க்கையை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.நம்மைத் திசை மாற்றச் செய்யும் எதிர்நிலை கொண்ட உணர்வுகளை
2.நாம் எதிர் நீச்சல் ஆடும் நிலைகளுக்கு வருதல் வேண்டும்.

அருள் ஒளி பெற்று இருளை அகற்றும் உணர்வை நமக்குள் வளர்த்து
1.தீமை என்ற நிலைகள் வந்தால் உடனே எதிர்த்துத் தாக்கும் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.நம்முள் அந்தத் தீமைகள் புகாது தடுக்கும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.

குருநாதர் சொல்லும் “கோடி… கோடி… கோடி…” என்ற பதத்தின் உள் அர்த்தம்

குருநாதர் சொல்லும் “கோடி… கோடி… கோடி…” என்ற பதத்தின் உள் அர்த்தம்

 

மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பொருளறிந்து செயல்படும் திறனாக நாம் பெற வேண்டும். அதே சமயத்தில் அகத்தினைச் சீராக்கும் நிலையாக
1.தீமையான அகங்கள் நமக்குள் இயக்கி விடாது
2.அகத்தின் உணர்வு “ஓங்காரம்…” அதாவது தீமையின் விளைவாக விளையாது
3.அதை நாம் சாந்த உணர்வு கொண்டு (சாந்தப்படுத்தி) தன்னுடன் இனிமை கொண்ட
4.மகிழ்ச்சி பெறும் உணர்வாகச் செயல்படுத்த வேண்டும்.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் வேகமாக வீசினாலும் அதனைச் சந்திரன் குளிர்ச்சியின் நிலைகள் கொண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஊட்டுவது போல
1.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.தீமையான உணர்வுகளை நமக்குள் மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க
3.நாம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் செல்வங்கள் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அவை வருவதில்லை. கோடி…கோடி…கோடி…! என்ற நிலைகள் அகண்ட அண்டத்திலும் பல கோடி உணர்வுகள் மாற்றமடைந்து கொண்டே உள்ளது.

அத்தகைய பல கோடி கோடி உணர்வுகளையும் தன்னில் ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். இதுவே நமது குரு காட்டிய நிலைகள்.

குருநாதர் ஒரு சமயம் கூறுவார்… “கோடி கோடி கோடி…” என்று.
1.காரத்தின் தன்மை கொண்டு கோடி கோடி என்றும்
2.நஞ்சின் தன்மைகள் பல கோடி கோடி கோடி என்றும்
3.விஷத்தின் ஆற்றலின் தன்மை கொண்டு பல கோடி கோடி உணர்வின் தன்மை உருவாக்கியது என்றும்
4.இது போன்ற உணர்வுகள் எதனுடன் எது கலக்கின்றதோ பல கோடி உணர்வுகளாக மாறினும்
5.அவை அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் உண்டு.

மனிதனின் உணர்வுக்குள் வந்து “கோடி கோடி” என்றாலும் இதனின் தன்மை கொண்டு பல கோடி உணர்வுகளையும் தனக்குள் ஒளியாக மாற்றினான் துருவன்.

அகஸ்தியன் வழியினைப் பின்பற்றி… அவனைப் போன்றே பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெற வேண்டும்.

அத்தகைய நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் எத்தகைய நிலை வந்தாலும் அந்த அகண்ட அண்டத்தையே நாம் அகண்டு
2.அகண்ட வெளிகளில் நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற “பேரானந்த நிலை…” பெறும் தகுதி பெறுகின்றோம்.

இராமலிங்கம் – உடலற்ற லிங்கம்

இராமலிங்கம் – உடலற்ற லிங்கம்

 

தன்னை இயக்குவது யார்…? என்று உயிரின் தன்மையை அறிந்திடும் நிலை பெற்றுத் தன்னில் ஒளியின் உணர்வு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து
1.தன்னில் தான் அறிந்து தன்னை இயக்கும் தீமைகளில் இருந்து விடுபட்டு
2.அருள் வழி கொண்டு தீமைகளைத் தான் கட்டுப்படுத்தி உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.அருள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அதைப் பிரம்மமாக்கி
4.அருள் சிவமாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும் “ஒளியின் சரீரமாக…!”

எண்ணத்தின் உணர்வு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும். அதாவது…
1.எண்ணம் இராமன் என்றும்
2.உணர்வின் தன்மை ஒளியாகப் படும் பொழுது இராமலிங்கம் என்றும்
3.உயிரின் தன்மை வரும் பொழுது உடலற்ற லிங்கமாக உணர்வின் ஒளியாக
4.அருள் வழி கொண்டு உலகில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளியாக மாறும்.

ஞானிகள் காட்டியது…
1.உணர்வுகள் எண்ணத்தால் தான் வருகின்றது
2.உணர்வும்… உணர்ச்சிகளும்… எண்ணங்கள் வருவதும்…
3.உணர்வுக்கொப்ப உடல் அமைவதும்
4.உணர்வுக்கொப்ப எண்ணங்கள் செயலாக்குவதும்… அதனை உணவாக்குவதும்
5.எதனின் உணர்வைப் பெற்றதோ அதனின் உணர்வினை நுகர்ந்தறிந்து
6.அதன் உணர்வின் எண்ணங்களாகச் செயல்படுவதும் இதுவே.

அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து… பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டத்தையும் தன்னுள் உணர்ந்து… அண்டத்தின் சக்தி பிண்டத்திற்குள் இயக்குகிறது என்ற நிலையைத் தன்னைத் தான் அறிந்தவன் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்த காலத்தில் உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அருள் உணர்வுகள் அனைத்தும் இங்கே பரவியுள்ளது. அதை நாம் பெறுவோம்.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.

1.அவன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை நாமும் பின்பற்றுவோம்.
2.அருள் ஒளி பெறுவோம்… முழுமை பெறுவோம்.
3.நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான் என்று உணர்ந்து அதை நாம் அடைந்திடுவோம்.

“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

 

உதாரணமாக ஒரு மின்னல் பாய்கிறது என்றால் அப்போது ஒளிக்கற்றைகள் பலவாறு பல திசைகளிலும் பரவுகின்றது. அந்த மின்னல் தாக்கும் இடத்தை விடுத்து விட்டு
1.ஒளிக்கற்றைகள் பரவுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலுக்குள் ஒளிகள் பெருகிப் பெருகி
2.இந்த மின்னலையே தாங்கிப் பார்க்கும் நிலையும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் நிலையும் பெற முடியும்.

ஏனென்றால் மின்னல் மற்றதைக் கருக்கி விட்டு ஒளியாக எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று
1.தன் வாழ்க்கையில் ஒளியாகச் சேர்த்துக் கொண்டவன் தான்
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
3.துருவ நட்சத்திரமாக ஆன பின் அது கதிரியக்கப் பொறிகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது
4.அகஸ்தியன் பெற்ற அதே உணர்வுகளை நாமும் பெறுதல் வேண்டும்.
5.அவன் வழியில் நாம் பெற்றோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நமக்கு இன்னொரு உடல் இல்லை.

இந்த உடலிலேயே உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு “வேகா நிலை” என்ற நிலை அடைகின்றோம்.

இத்தகைய அருள் ஒளி பெறும் மார்க்கத்தை “நம் குரு காட்டிய அருள் வழியில்…” ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உடலுக்குள் உருவாக்குவோம்..

சதம் இல்லாத இந்த உடலுக்கு நாம் பற்றை வைக்க வேண்டியதில்லை. உடல் தேவை… ஆனாலும்
1.உடலுக்குள் தீமைகள் பற்றிடாது அருள் ஞானத்தை உள்ளே புகுத்தி
2.அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளை பற்றதாக மாற்றிட வேண்டும்.

எவரொருவர் இந்த வாழ்க்கை வாழுகின்றனரோ அவரே அருள் ஞானத்தின் வழி கொண்டு பிறவி இல்லா நிலை அடைவர். அவ்வழி பெறச் செய்வதற்கே குரு காட்டிய அருள் வழியில் “கூட்டமைப்பாக அமைக்கின்றோம்…”

உங்கள் எண்ணங்களை ஒருக்கிணையச் செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சினையும் நீக்கிடும் வலிமை பெறுங்கள்.
1.எத்தகைய துன்பம் வந்தாலும் அதனில் சிக்கிச் சோர்வடையாது
2.அதனை மாற்றிடும் வலுக் கொண்டு
3.அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஒளியைப் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடையுங்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் முடிவு செய்ய வேண்டிய முக்கியமானது

இந்த வாழ்க்கையில் நாம் முடிவு செய்ய வேண்டிய முக்கியமானது

 

ஒரு அணுவின் தன்மையைப் பற்றி விஞ்ஞானி நிரூபிக்கின்றான். உணர்வுக்கு தக்க அணுக்கள் நம் உடலுக்குள் எத்தகைய வளர்ச்சிகள் பெறுகின்றது…?

ஒரு கேன்சர் நோய் என்று வந்தால் அந்த விஷமான அணுக்கள் மிகக் கொடிய தன்மையாக எப்படி இருக்கின்றது. என்று அவன் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கின்றான்

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் இந்திரீகங்களாக மாறி அணுத்தன்மை அடைந்து இந்த உடலில் ஒட்டி அது எப்படி ஜீவிக்கின்றது…? அதைப் பெருக்கப்படும் பொழுது உயிருடன் சேர்த்து மாற்று உடலை எப்படி அமைக்குகின்றது என்பதை விஞ்ஞானம் கூறுகின்றது.

ஆனால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அணுவின் ஆற்றலை… அதனின் இயக்கத்தை அறிந்து கொண்ட மெய் ஞானி அகஸ்தியன்..

அவன் ஒவ்வொரு தாவர இனத்தையும் நுகர்ந்து பார்த்து
1.அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகிறது…?
2.உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படிப் பெறுகிறது…?
3.அந்த உடல்கள் மடிந்த பின் இதிலே விளைந்த உணர்வலைகளைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கின்றது…?
4.மறையாத நிலையில் அது எப்படி இருக்கின்றது…?
5.சூரியன் கவர்ந்து வைத்திருப்பதை மீண்டும் எடுத்தவர்கள் உடல்களிலே அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்கின்றது…? என்று தெளிவாகக் காட்டி உள்ளான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகும் பொழுது தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்லி… கணவன் மனைவி இரண்டு பேருமே ஒன்றாக இணைந்து… இந்த இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் பெற்ற நிலையை நாம் பெற வேண்டும்…
2.பெற முடியும்…! என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக வேண்டியது எது…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குருநாதர் ஏற்கனவே பல முறை சொல்லி உள்ளார். இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல. அருள் ஒளியை நாம் சொந்தமாக வேண்டும்.

உயிர் ஒளியாக இருக்கின்றது நம் உணர்வை ஒளியாக மாற்றி அந்தச் சொந்தத்தை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அழியாத செல்வமும் பேரின்பமும் அதிலே தான் வருகின்றது.

வாழ்க்கையில் குறைகள் வராதபடி குறைகள் எது வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்று இருளை அகற்றி நமக்குள் ஒளியான உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால்
1.இன்று நமக்குள் எதை விடாப்பிடியாக வளர்த்துக் கொண்டுள்ளோமோ
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக அதை உயிர் அமைத்து விடும்…!

இனி எத்தகைய நிலைகள் வந்தாலும் அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து… அதை வளர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உடலை விட்டுச் சென்றால் “ஏகாந்த நிலை கொண்ட அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணைய முடியும்…!”

இந்தப் பிரபஞ்சம்… நம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலையும்.. இப்போது மனிதனாக இருக்கும் போது எந்த நிலையோ அதை எல்லாம் அறியலாம்… சந்தோஷமாக இருக்கும்.
1.அந்தச் சந்தோஷத்தை விரும்புகின்றீர்களா…?
2.அல்லது ஒருவரைத் திட்டிச் சண்டையிட்டு அதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா…?
3.அல்லது செல்வத்தைச் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்…! என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… நாளை என்ன செய்யப் போகின்றானோ…? என்று அதை அந்த வேதனையை வளர்க்கப் போகின்றீர்களா…?

நன்றாக யோசனை செய்து கொள்ளுங்கள்…!

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல…!

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல…!

 

இன்று நாம் இருக்கக்கூடிய இந்தச் சூரிய குடும்பம் எப்பொழுது செயல் இழக்கும்…! என்று சொல்ல முடியாது.
1.மனிதர்கள் வயதாகி உடலை விட்டுப் பிரிவது போன்றுதான்
2.இந்தச் சூரிய குடும்பமும் முதுமை அடையக் கூடிய காலம் வந்து விட்டது… அதனுடைய சத்து எல்லாம் போகிறது.

பிரபஞ்சம் செயல் இழந்தால் இந்தப் பூமியும் அனாதையாகத் தான் செல்லும். ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் பிற சூரியக் குடும்பத்தில் இருந்து செயல் இழந்த பூமி… அது எப்படி நம் வியாழன் கோளிலே விழுந்து பஸ்பமாகியதோ அதே போன்று இந்தப் பூமியையும் திக்கெட்டுச் செல்லும்.

அது போகும் வேகத்தில் மற்றதுடன் உராய்ந்து கரைந்துவிடும்… அமிலமாக மாறும். எதிலேயாவது போய் விழுந்து மடிந்துவிடும்.

ஆனால் இதிலே இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் மீண்டும் பரவும்.
1.உயிரினங்கள் வாழக்கூடிய கோளுக்குள் நாம் வந்தால் மனிதனாகப் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது
2.ஆனால் பூமியே கெட்டுப் போனது என்கிற பொழுது என்ன செய்ய முடியும்…?

மற்ற சூரியக் குடும்பத்திலே ஏதாவது பூமி உருவானால் அங்கே போய்ச் சேரும். அங்கே போய் மனித உடல் பெறும் வரை இந்த உயிரிலே நரக வேதனைப் பட வேண்டியது தான்.

இதை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்றது…!

ஒரு உயிரணுவின் தன்மை அடைந்தால் அந்த அணுவிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறையான துடிப்பினால் அது எவ்வளவு வேதனைப்படுகிறது…? என்று அதற்கென்று சாதனங்களை வைத்துக் கம்ப்யூட்டர் மூலமாக உணர்வின் இயக்கங்களை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் அன்று மெய் ஞானிகள் சொன்னது… (இறந்த பிற்பாடு) உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் “அதனுடைய கடைசி நேரம்…” எந்த வேதனைப்பட்டதோ அதே நிலைகள் கொண்டு அது நரக வேதனைப்படுகிறது. “சாகாக்கலை…” என்று அதைத் தெளிவாகக் காட்டினார்கள்.

இப்போது மனித உடலுடன் இருக்கும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.
1.ஆனால் உடலை விட்டுச் சென்றால் உயிரோடு ஒன்றி இருக்கும் போது
2.அந்த வேதனைகள் அனுபவிப்பதை இவ்வளவுதான்…! என்று சொல்ல முடியாது.

செத்துப் போனால் என்ன தெரியப் போகிறது…? செத்த பிற்பாடு ஒன்றும் தெரியாது…! என்று நினைப்போம். ஆனால் அந்த ஆன்மா மனித உடலுக்குள் சென்றால் எத்தனை வேதனைகள் படுகிறது,,,? எத்தனை வேதனைகள் கொடுக்கிறது…! என்று பார்க்கலாம்…!

பேய் பிடித்து விட்டது என்று சொல்கின்றோம். மருந்து குடித்துச் செத்தது என்றால் அந்த ஆன்மா அடுத்த உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கோயம்புத்தூரில் பீளமேடு என்ற இடத்தில் இருந்தேன். ஆவிகள் என்ன செய்கிறது…? நோய்கள் எப்படி வருகிறது…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஆரம்பத்திலே சுற்றி வந்ததுதான்.

அப்பொழுது அங்கே ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். குடம் குடமாக அவர் வாயிலிருந்து தண்ணீர் வருகின்றது. குருநாதரை நினைத்து இது எப்படி..? என்கிற வகையில் தியானித்தேன்.

வந்த ஆளோ ஊமை பேசுவது போன்று தான் பேசுகின்றார். ஆனால் அவர் நன்றாகப் பேசக் கூடியவர் தான். இதைச் சரி செய்வதற்குப் பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுதுதான் இங்கே வருகின்றார்கள்.

அவர்களிடம் நான் விசாரித்தேன். அவர் வசிக்கக்கூடிய இடத்திலே ஒரு ஊமைப் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வீட்டில் ஏதோ திட்டி விட்டார்கள் என்று ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றது.

கிணற்றில் விழுவதை இவர் பார்த்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண்ணைக் கிணற்றிலிருந்து தூக்கியிருக்கிறார். வண்டிச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி அது குடித்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றுகின்றார்.

இருந்தாலும் அந்தப் பெண் இறந்து விட்டது…!

இவர் எந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்தாரோ இவர் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா வந்து விட்டது.

உடலுக்குள் ஆவி வந்த பின்…
1.அது தன் உடலுடன் இருக்கப்படும் பொழுது கடைசி நேரத்திலே எவ்வளவு நீரைக் குடித்ததோ
2.இந்த உடலுக்குள் வந்த பின் அந்த அணுக்கள் காற்றிலிருந்து அந்த நீர் சக்தியை இழுத்து
3.அதே உணர்ச்சியை ஊட்டித் தண்ணீராக வருகிறது.

ஒரு குடம் நீர் வருகின்றது. அடுத்து நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு குடம் தண்ணீர் வருகிறது. இப்படிக் குடம் குடமாக வந்து கொண்டே இருக்கிறது.

இது நடந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? இறந்தபின் ஆவி அடுத்த உடலுக்குள் சென்றால் என்னென்ன எல்லாம் செய்யும்…? என்று பார்ப்பதற்குத் தான் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார் குருநாதர்.