நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்…?

நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்

 

தசரதச் சக்கரவர்த்தி கங்கணமே கழட்டவில்லை…!
1.திருமணம் ஆகிக் கொண்டே உள்ளது
2.அவருக்கு எண்ணிலடங்காத மனைவி…! என்று கூறுகின்றனர்.

அதனின் உட்பொருள் என்ன…?

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ சம்பவங்களைப் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

உதாரணமாக ஒருவன் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம் அவன் சண்டையிடும் உணர்வை நுகருகின்றோம்
1.நாம் கவர்ந்து கொண்டது அது வசிஷ்டர்…
2.சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்ளப்படும் பொழுது நம் உடலில் அது பிரம்மமாகின்றது.

அதே போன்று ஒருவன் நோயுடன் வேதனைப்படுகின்றான். அவன் ஏன் வேதனைப்படுகின்றான்…? என்று ஏங்கிப் பார்க்கும் போது உயிரிலே பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் உடலில் விளைந்த தீய உணர்வுகள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது. பிரம்ம குருவாக அருந்ததியாக இணைந்து செயல்படுகின்றது… வேதனைப்படும் நிலைகளுக்கு நம்மையும் இயக்கி விடுகிறது.

சங்கடப்பட்டது சலிப்புப் பட்டது ஆத்திரப்பட்டது என்று இப்படி எத்தனையோ உணர்வுகளை மாறி மாறி நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதை உணர்த்துவதற்குத் தான் எண்ணிலடங்காத மனைவியைத் திருமணம் செய்து கொள்கிறான்…! என்று காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் தான் அந்தத் தசரதச் சக்கரவர்த்தி…!
2.காரணப் பெயராக இப்படி வைக்கின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் எதை எதையெல்லாம் ஆசைப்படுகின்றோமோ “அதை எல்லாம் கவர்ந்து கொள்கின்றோம்… அது தான் வசிஷ்டர்…!”

தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றேன்.
1.வேதனையை நுகரும் பொழுது கவர்ந்து கொண்ட உணர்வுகள் நல்லது செய்வதற்கு மாறாக
2.வேதனையை உருவாக்கும் அணுவாக என்னுடன் இணைந்து அது சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது
3.இந்த உயிருடன் மனைவியாக அது இயக்கத் தொடங்கி விடுகிறது

ஆகவே… நாம் எதை ஏங்கிப் பெற வேண்டும் என்று விரும்புகின்றோமோ உயிரிலே பட்டு இந்த உணர்ச்சியின் இயக்கமாக
1.அந்த நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நுகர்ந்ததைத்தான் நமது உயிர் இயக்குகின்றது
3.நுகர்ந்ததைத்தான் நம் உடலாக மாற்றுகின்றது என்பதை இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே நாம் எதைக் கவர வேண்டும்…? எதன் மீது நாம் இச்சைப்பட வேண்டும்…?

நம் இச்சையை உயிர் மீது வைக்க வேண்டும். இருளை நீக்கும் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிர் நமக்குச் சக்கரவர்த்தியாக இருக்கின்றது. எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் எடுக்கின்றது
1.நாம் எதைக் கவர்கின்றோமோ வசிஷ்டர்.
2.இப்போது யாம் (ஞானகுரு) உபதேசிக்கக்கூடிய அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் இது வசிஷ்டர்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவாகும் பொழுது பிரம்மம்
4.பிரம்மமாக ஆனபின் அணுவின் தன்மை அடைகின்றது
5.பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…!

எந்தக் குணத்தின் தன்மை உடலுக்குள் அணுவாக ஆனதோ அந்தச் சக்தியாக அந்த அணு இயக்கும் என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது “பத்தாவது நிலையான ஒளியை நாம் எவ்வாறு அடைவது…?” என்பதைத் தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகிறது..

உயிர் சேர்த்துக் கொண்டது ஆன்மாவாகி… உயிரான்மாவாகிறது – விளக்கம்

உயிர் சேர்த்துக் கொண்டது ஆன்மாவாகி… உயிரான்மாவாகிறது – விளக்கம்

 

உதாரணமாக உடலில் நோயாகி விட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு. உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று விரும்புகின்றோம்.

மருத்துவர் கொடுக்கும் மருந்து இரத்தத்தில் அது கலந்த பின் வேலை செய்கிறது. இருந்தாலும்
1.மருந்துக்கு விஷத்தின் தன்மை கொடுக்கப்படும் பொழுது வேதனை என்று வருகின்றது.
2.ஏனென்றால் மருந்திற்கு அந்த விஷம்தான் வீரியத்தன்மை கொடுக்கின்றது
3.விஷத்தின் தன்மை ஊட்டியபின் உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் சென்று உற்சாகமும் ஊட்டுகின்றது.
4.சிறுநீரகத்திற்கு வரப்படும் பொழுது இரத்தம் அங்கே வடிகட்டப்படும் போது விஷம் அதிலே மாட்டிக் கொள்கிறது.
5.கிட்னி சரியாக இயங்கவில்லை என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து எல்லாம் வந்து விடுகின்றது.

சிறுநீரகம் சரியாக இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் வடிகட்டும் தன்மை இழந்து சர்க்கரை உப்பு இவைகளின் அளவு இரத்தத்தில் அதிகமாகி
1.நுரையீரலுக்குச் செல்லும் போது அங்கே வடிகட்டும் நிலைகளீல்
2.பின்னிக் கிளைகளாக வரப்படும் போது… சளியாக அங்கே சேர்ந்து கொள்கின்றது.
3.சளி சேரச் சேர… கட்டியாக உறைந்து நீர் அதிகமாகக் கோர்த்த பின் புஷ்… கிஷ்… என்று மூச்சுத் திணறலாகிவிடும்.

அது மட்டுமல்ல…!

சளியினால் வழுவழுப்பான நிலைகள் அங்கே அதிகமான பின் நாம் உணவாக உட்கொள்ளும் எதையுமே… ஆகாரத்தை வாந்தியாக வெளி தள்ளிக் கொண்டே இருக்கும். உட;ல் எங்கே சௌகரியமாவது…? ஒன்று சரியானாலும் மற்றொன்று இப்படி மாறி வந்துவிடுகிறது.

ஆக… பிறர் செய்யும் தீமைகளை எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர… அந்த உணர்வலைகள் நம் இரத்தத்தில் கலக்கக் கலக்க… அதனின் வளர்ச்சி இப்படி ஆகிக் கொண்டே இருக்கின்றது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் இதை எல்லாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் மற்ற உயிரினங்களோ
1.தன்ன்னைத் தாக்க வரும் எதிரிடமிருந்து “தப்பிக்க வேண்டும்…” என்ற வலுவான உணர்வை நுகர்கின்றது… அறிகின்றது
2.இரத்த நாளங்களிலே அந்த (தப்பிக்கும்) உணர்வுகள் பெருகுகின்றது
3.அதனுடைய உடலில் புதுப்புது வைரஸ்களாக அது மாறுகின்றது
4.அதனுடைய கரு முட்டைகளும் இரத்தத்திலே பெருகுகின்றது.

பின் உடலை விட்டு வெளியே வரும் பொழுது அந்தக் கரு முட்டையுடன் சேர்ந்து தான் உயிர் வெளியே வருகின்றது அதனால் தான் அதை “உயிரான்மா” என்று சொல்வது (இது முக்கியம்). உயிருடன் சேர்த்து இந்த உடலில் விளைய வைத்த அந்த ஆன்மா வெளி வருகின்றது.

1.எந்த உயிரால் அந்த உடலில் வளர்க்கப்பட்டதோ
2.அதனுடைய சத்து அதிலே எது அதிகமோ அதன் வழி இந்த உயிர் வெளியே வரப்படும் பொழுது
3.அந்த உணர்வுக்கொப்ப மாற்று உடலாக உயிர் அமைத்து விடுகின்றது.

ஆனால் இதை யார் செய்தது…? அந்த உடலில் நுகந்த உணர்வுக்கொப்ப எது அதிகமோ அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றிவிடுகிறது… உறுப்புகளை மாற்றி உடலை மாற்றுகிறது.

இன்று ஆடாக இருப்பதை நாளைக்கு ஓநாயாக மாற்றி விடுகின்றது… ஆடு புலியை உற்றுப் பார்த்தால் புலியாக மாறுகிறது. ஒரு நரியைப் பார்த்து அதனின் உணர்வை எடுத்தால் அதன் நிலைக்குத் தான் அந்த ஆடு மாறுகிறது.

ஆனால் ஆடு ஒன்று தான்…! அதனுடைய வாழ்க்கையில் எந்த மிருகத்தை அதிகமாக உற்று நோக்கி அதனிடமிருந்து தப்பும் நோக்கில் உணர்வுகளைக் கவர்ந்ததோ… அது இரத்தத்தில் கலந்தால் அதிலே அது பெருகி… அதன் வழி கொண்டு எது அதிகமோ அதற்குத்தக்க மாறுகிறது.

1.இப்படி இந்த உயிர் எதை எதை நுகர்ந்ததோ அதற்குத் தக்க ஆத்மாவாகப் பெருக்கி
2.ஆன்மாவிற்குத் தக்கவாறு உடலை அமைத்து
3.அந்த உடலுக்கொப்ப உணர்ச்சிகளாக இயக்கி
4.அதன் வழிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே…” நாம் வாழ்தல் வேண்டும்

“உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே…” நாம் வாழ்தல் வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியில் இருக்கும் உயிர்…
1.நாம் பார்ப்பதை… கேட்பதை… நுகர்வதை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது..
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! ஆதிசக்தி என்பது விஷம் அந்த விஷத்தின் தாக்குதலால் ஏற்படுவது தான் வெப்பம் அந்த வெப்பத்தின் தாக்குதலால் அணுக்களாகச் சிதறி ஓடுகின்றது.

சிதறி ஓடும் போது அந்த நேரத்தில் ஈர்க்கும் காந்தம் வருகின்றது. அதற்கு லட்சுமி என்று காரணப் பெயர் வைத்துள்ளார்கள்.

1.நமது உயிர் ஆதி சக்தியின் துடிப்பின் இயக்கமாக நம்மை இயக்கிக் கொண்டுள்ளது
2.அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! என்று சொல்கின்றோம்.

குருதேவா…! நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது ஆகவே நான் நமது உயிரைக் குருவாக எண்ணி ஏங்குகின்றோம்.

நமது குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
1.எதன் வழியில் இந்த வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் அருள் சக்தி பெற்றாரோ அந்தச் சக்திகளையும்
2.அகஸ்தியன் பெற்றதை நமது குரு பெற்று அதன்வழி நமக்குள் உபதேசித்த உணர்வையும்
3.நாம் நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிக் கொண்ட பின்…
4.அப்படிப் பதிவான அனைத்தையும் நாம் குருவாக மதித்தல் வேண்டும்.

ஒரு மனிதன் கோவிக்கின்றான் என்றால் அந்த கோபத்தின் உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கும் பொழுது அதை மீண்டும் எண்ணினால் அந்த கோபத்தின் உணர்வே நமக்குள் குருவாக இருக்கும்.

அதே போன்று வேதனையான உணர்வை நுகர்ந்தால் வேதனையை அறிகின்றோம்… அந்த உணர்வு பதிவாகிறது. மீண்டும் அதே வேதனையை எண்ணினால் அதுவே வேதனைப்படுத்தும் உணர்வின் குருவாக நமக்குள் இருக்கும்.

1.ஆனால் நமது குரு மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றவர்.
2.அவர் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் அதைக் குருவாக உருவாக்க வேண்டும்.

நமது உயிரும் பல கோடிச் சரீரங்களை கடந்து ஈசனாக இருந்து வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் உடலை (மனிதனாக) அமைத்தது… நமக்குக் குருவாக அமைந்திருக்கின்றது அனைத்திற்கும் குருவாக நம் உயிரே இருக்கின்றது.

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…! எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் இசையாக சொல்லாகவும் செயலாகவும் நான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலாகவும் அமைத்துக் கொண்டு இருப்பது நம் உயிர் தான்.

ஆகவே…
1.இயற்கை நிலைகள் என்னை மனிதனாக உருவாக்கிய
2.இந்த உணர்வின் நினைவு எனக்குள் எப்பொழுதுமே வரவேண்டும்.

அதாவது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் மனித சரீரத்தைக் கொடுத்த “உயிரான ஈசனை… நாம் நினைவில் கொள்தல் வேண்டும்…”

இருளை நீக்கி ஒரு பொருளைக் காணச் செய்வதும்… அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைக் காணச் செய்வதும்… நமது உயிரே. உணர்வை அறிவாக இயக்கி அறிவின் உணர்வாக நம்மை இயக்குவதும் நமது உயிரே. எப்பொழுதுமே உன் நினைவாகவே நான் இருத்தல் வேண்டும்,

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
1.உயிராக இருந்து நுகர்ந்த உணர்வுகளை எப்படி எனக்கு அறிவிக்கின்றாயோ
2.இதைப் போன்று ஏகாந்த நிலைகள் கொண்டு அருள் ஒளி பெற்று துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் ஒளியைப் பெற்று
3.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக உருவாக்கும் உணர்வு அந்த நினைவு என்னில் வர வேண்டும் ஈஸ்வரா.

உயிரான உணர்வுகள் ஒளியான உணர்வாக உருவாகி… அனைத்தையும் உணர்வின் அறிவாக இயக்குவதும்… மனிதன் ஆன பின் அனைத்து அறிவையும் இயக்கி
1.அறிவின் ஒளியாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் அந்த (உன்னுடைய) அருள்…
2.உன் நினைவு எனக்குள் வரவேண்டும் என்று தான் பொருள்.
3.உயிரின் நினைவாகவே… நினைவுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றியே நாம் வாழ்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகிறது என்று அறிகின்றோம். ஆகவே அருள் ஒளி பெறும் உணர்வினை நாம் எண்ணி நம் எண்ணங்கள் அனைத்தும் உயிருடன் ஒன்றி அவனிடம் அதை வேண்டினால்
1.நாம் வேண்டிய உணர்வுகளை ஒளியாக இயக்குகின்றான்
2.இருளை அகற்றிடும் ஒளியாக மாற்றுகின்றான்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருல் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

இந்த உணர்வுகளை உயிர் வழி செலுத்தப்படும் பொழுது
1.அதன் உணர்வைப் பெறும் நிலையாகவும்…
2.அதன் வழி நுகரச் செய்வதும்…
3.அந்த அருள் ஒளியை நமக்குள் இயக்கச் செய்வதும்…
4.அணுவாக உருவாக்குவதும் அதை உடலாக ஆக்குவதும்…
5.“அருள் வழியில் – அதுவே உயிரின் வேலை…!”

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி… உயிரான ஈசனை மதித்து… உடலில் இருக்கும் அனைத்திற்கும் ஈசனும் அவனே…! குருவும் அவனே…! என்று மதிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டுவோம்.

பின் கண்களை மூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து… இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்
1.தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் உணர்வுகளையும்
2.அவன் பிறந்த பின் சர்வ நஞ்சுகளையும் தனக்குள் ஒடுக்கிடும் சக்திகள் பெற்றதையும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்திகள் பெற்று மெய்ப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்த… அவனில் விளைந்த உணர்வுகளையும்
4.நாம் நுகர்வோம்…. நம் உடலுக்குள் செலுத்துவோம்
5.அருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

அகஸதிய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”

சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”

 

கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.

“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.

ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.

மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.

இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.

ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.

மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.

அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.

ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.

இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்

ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.

“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

 

“ஆதி மூலம் என்ற உயிரால்” மனிதன் எப்படி உருவானானோ அவன் தான் முழு முதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பல கோடி உடல்களைக் கடந்து இந்த மனிதனாக ஆனபின் தான் அந்த நிலை வருகிறது. எப்படி…?

1.சூரியனிலிருந்து வரக்கூடியது (சந்தர்ப்பங்கள்) அது ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிது புதிதாக மாறுகின்றது
2.அதே சமயத்தில் மனிதனோ புதிது புதிதாக எத்தனையோ வகையான நிலைகளை மாற்றி உருவாக்கிக் கொண்டே உள்ளான்.
3.பயிரினங்களை மாற்றுகின்றான்… தாவர இனங்களை மாற்றுகின்றான்…
4.ஏன்…? எத்தனையோ விதமான உயிரினங்களின் உணர்வுகளையும் மாற்றுகின்றான்…. எல்லா செயலும் செயல்படுத்துகின்றான்.

அப்பொழுது கடவுள் யார்…?

கண்கண்ட தெய்வமும்… கடவுள் என்ற முழுமையான சக்தி பெற்ற மனித நிலைகளில்…
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உருவாக்கினால்
2.தீமையை நீக்கும் கடவுளாக நீங்கள் உருவாகின்றீர்கள்.

யாம் (ஞானகுரு) சொன்ன தியானத்தின் முறைப்படி அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுடைய சொல் பிறருடைய தீமையை நீக்கும் தன்மையாக வரும். உங்களுக்குள் தீமை வராது தடுக்கும் சக்தி பெறுகின்றீர்கள்

அதனால் தான் மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனானோ அது “முழு முதல் கடவுள்” என்று விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சிவனின் பிள்ளை என்றும் சொல்வார்கள். நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனிதனாக உடலை உருவாக்கியது. உடலுக்குள் தீமையை நீக்கும் உணர்வுகள் ஆனபின் “தீமையை நீக்கி நன்மையை உருவாக்கும்… அந்தக் கடவுளாக உருவாகின்றது…!”

மனிதன் எப்போது ஆனானோ “அவன் தான் கடவுள்…!”

நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… என்று சொன்னால் வேதனைப்படுத்தும் நிலைகளை ஒருவன் செயல்படுத்தினால்… அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் “அது கடவுளாக வந்து” அந்த வேதனையை நமக்குள் உருவாக்குகின்றது.

ஆனால்… வேதனை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால்… வேதனை நீக்கும் கடவுளாக உங்கள் உடலுக்குள் நின்று தீமைகளை நீக்கும்.
1.உலகில் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை உருவாக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.உங்களுக்குள் இந்த ஞானத்தைப் பெற முடியும்.

இன்று ஒன்றும் அறியாது இருக்கலாம்… ஆனால் யாம் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு உண்டு.

அவ்வப்போது இதை நீங்கள் சிந்தனைக்குரியதாக்கி… தீமைகளை நீக்கி உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் பெற்று… உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து… உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

1.உலகில் உள்ள தீமையின் உணர்வுகள் பூமியில் படராது
2.அது சூரியனால் கவரப்பட்டு அழித்திடும் அதை மாற்றிடும் சக்தியாக
3.உங்களால் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் ஒவ்வொருவரும் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து… சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற்று… சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்திட…. “குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்…”

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

நாம் இப்பொழுது “இது என் உடல்… நமது உடல்…” என்று நினைக்கின்றோம்.
1.நம் உடலுக்குள் எத்தனையோ விதமான உணர்வின் அணுக்கள் உண்டு….
2.அதனின் மலமே நம் உடல்…! அதாவது “அணுக்களின் மலம் தான்” இந்த உடல். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய்விட்டால் இந்த உடலான சிவம் சவமாகி விடுன்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டேயுள்ளது. ஆனால் உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்.

உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலிலுள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

எத்தகைய உணர்வை நாம் சுவாசித்து இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் மலமே நம் உடலாகின்றது.

அந்த அணுக்களின் மலமாக நம் உடலானாலும் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் நம் உடலையே தின்னும் அணுக்களாக மாறி விடுகின்றது.

அதாவது…
1.நம் உடலை உருவாக்கிய அதே அணுக்கள் உயிர் வெளியில் சென்றபின்
2.நம் உடலை உணவாக உட்கொள்ளும் அணுவாக மாறிவிடுகின்றது.

இப்படி ஆன அந்த அணுக்களின் மலம் வெளிப்படும் பொழுது நாற்றமாகின்றது.

முதலில் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப நம் உடலாக நல்ல உடலாகின்றது. ஆனால், உயிர் வெளியே சென்று விட்டால் அதே அணு ஜீவ அணுவாக இருப்பது உயிரணுவாக மாறுகின்றது.

உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”. அது நுகர்ந்த உணர்வின் மலம் நம் உடலாகும் பொழுது சிவமாகின்றது.

ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது. உயிரணுவாக மாறிய பின் எந்த ஜீவ அணு நம் உடலை உருவாக்கியதோ அந்த உடலையே உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அது உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் உயிரணுவான பிற்பாடு அதன் மலத்தை வெளியிடும் பொழுது நாற்றம் சகிக்க முடியாது. இறந்த பின் உடலிலிருந்து நாற்றம் வருவதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த உடலாக நாம் எந்தெந்த குணத்தை நாம் எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் “நல்ல மணங்களாக” இருக்கின்றது. ஆனால்…
1.அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றமாகின்றது
2.நம்மால் பக்கத்தில் இருக்க முடியவில்லை.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மையை நம் உயிரணு கவர்ந்து ஜீவ அணுக்களாக மாறியதோ இது உயிர் சென்ற பின் இந்த உடலை இந்த ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி அதன் உடலாகிப் புழுக்களாகி விடுகின்றது.

மனிதனுக்குள் எத்தனை விதமன வேதனைகளைப் பட்டோமோ எத்தனை வேதனைப்படுத்தினோமோ எத்தனை துயர்படுத்தினோமோ இந்த உணர்வின் அணுக்கள் புழுவாகி மலமாகும் பொழுது அந்த நாற்றமாக வெளிப்படுகின்றது.

1.இப்படி நாற்றமாகும் உடலைத்தான்…
1.நம் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
3.யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா?

என் அம்மா என்போம்… அப்பா என்போம்… கணவன் என்போம்… மனைவி என்போம்… அண்ணன் தம்பி தங்கை… இன்னும் என்னென்னவோ சொல்வோம்.

உயிர் வெளியேறி விட்டால்
1.எவ்வளவு நேரம் அந்த உடலை வைத்திருக்கின்றோம்…?
2.”உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…?” என்று தான் உடனே கேட்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் காட்டியது உயிரே கடவுள்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
1.ஆனால் உயிரைப் பற்றி நாம் சிறிதளவாவது… சிறிது நேரமாவது சிந்திக்கின்றோமா…?
2.“அவனுடன் அவனாக” (உயிருடன்) – “அவனாக ஆகும் நிலையை” நாம் எய்த வேண்டும்
3.இதைத்தான் கோவில்களில் மனித உடலைப் பெற்ற நீ… “தெய்வமாக ஆகு…!” என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் இன்றும் கடவுளைத் தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்…!

பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் “நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையட்டும்…”

 

இன்றைய சூழ்நிலையில் இந்தப் பிரபஞ்சமும் சரி… நமது சூரியனும் சரி… நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி…
1.ஏன் நம் உடல்களிலும் அது பரவி… பூமிக்குள்ளும் இது பரவி…
2.பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் உருகும் தன்மை கொண்டு சிதறும் தன்மை கொண்டே வருகின்றது. எந்தெந்தப் பூமிகளில் இந்தக் கதிரியக்கங்கள் அதிகமாகின்றதோ… அதனால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களுக்குள் வெப்பம் அதிகமாகி உருகி விட்டால் அவைகள் சிதறிவிடும்.

அது சிதறி விட்டால் நம் பூமிக்குக் கிடைக்கும் நல்ல சக்திகளும் சிதறிவிடும்.

ஒரு சமயம் அகஸ்தியன்…
1.இந்தப் பூமி நீண்ட நிலையில் நீள வடிவில் வளரும் பொழுது
2.அதை இலேசாகத் திசை திருப்பி ஒரு பக்கம் எடை கூடிக் கவிழாது மாற்றி அமைத்தான்…
3.பூமியைச் சமப்படுத்தினான் ஒரு அகஸ்தியன்.
4.ஆனால் இன்று நாம் பல அகஸ்தியர்களை உருவாக்க வேண்டும்.

கடும் விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகள் நம் பூமியிலே பரவிக் கொண்டிருப்பதை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். அத்தகைய ஞானிகளை நாம் உருவாக்குதல் வேண்டும். உருவாக்கினால் இயற்கையிலே அது விளையத் தொடங்கிவிடுகிறது.

நாட்டைக் காத்திடும் நிலையாக… மக்களைக் காத்திடும் நிலையாக… உலகைக் காத்திடும் நிலையாக… பிறவி இல்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெற
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தப் பிரபஞ்சம் நீண்ட நாள் இயக்க வேண்டும்
2.நம் பிரபஞ்சத்தில் உருவாக்கிய உயிரணுக்கள் அனைத்தும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஏனென்றால் ஒரு பிரபஞ்சம் ஒளியின் உணர்வானது. அதில் தோன்றிய உயிர் எல்லாவற்றையும் அறியும் தன்மையானது. உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது தான் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவது இல்லை. உடலின் உணர்வுகள் கருகிவிட்டால் கருகிய உணர்வு கொண்ட அடுத்த உடலைப் பெறுகின்றோம். காரணம் உயிர் வேகாநிலை… உடல் சாகாக்கலை…! இன்று நாம் எந்த வேதனையை எடுக்கின்றோமோ சாகக்கலையாக அடுத்த உடலாக மாற்றிவிடும்.

ஆகவே நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். வேகா நிலை அடைதல் வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்திலும்… சரி அகண்ட அண்டத்திலும் சரி…
1.இந்த உயிர் எதிலுமே அழிந்திடாது அருள் உணர்வு கொண்டு விஷத்தை ஒளியாக மாற்றி
2.என்றும் ஏகாந்த நிலையாக வாழும் சக்தியை இந்த மனித உடலிலிருந்து தான் பெற வேண்டும்.

ஆகவே… மறவாதீர்கள் உங்கள் உயிரை…!

1.மனிதனாக்கியது உயிர்
2.மனித உடலை உருவாக்கியது உயிர்
3.அனைத்தையும் தெரிந்து கொண்ட உணர்வைப் பெற்றதும் உயிர்,
4.ஆகவே அவன் நமக்குள் இருக்க அவன் துணை கொண்டே நாம் ஞானிகளுடைய அருள் உணர்வைப் பெறுவோம்
5.நம் உடலில் சேரும் அழுக்குகளை மாற்றிப் பேரருளைப் பெறுவோம்.

உங்களுடைய நினைவாற்றல் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தினால் உங்களுக்கும் நல்லது… ஊருக்கும் நல்லது… உலகுக்கும் நல்லது…!

அகஸ்தியன் தாய் கருவிலேயே எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்ற ஞானிகளை உருவாக்கினால் இந்த உலகில் வரும் கடுமையான தீமையிலிருந்து விடுபடவும்… நம்மைக் காக்கவும்… நாம் பிறவி இல்லாத நிலை அடையவும் முடியும்.

ஆகவே பல அகஸ்தியர்களை நாம் உருவாக்குவோம்…!

மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!

மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!

 

இந்தக் காற்று மண்டலம் மிகுந்த நச்சுத்தன்மையாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது என்று ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கின்றேன்.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களும் அதிலிருந்து வெளிப்படக்கூடிய விஷத்தன்மைகளும் நமது பூமியில் கடுமையாகப் பரவிக் கொண்டுள்ளது.

1.இந்த விஷத்தன்மைகள் மனிதனுக்குள் நுகரப்பட்டு நுகரப்பட்டுத் தாவர இனங்களையும் சாடி
2.நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள்ளும் இந்த விஷத் தன்மைகள் பரவிவிட்டது.
3.மனிதனுடைய சிந்தனையையே அது இழக்கச் செய்து மனிதனுக்கு மனிதன் கொடூரமாகத் தாக்கிடும் நிலை வந்துவிட்டது.

அதே சமயத்தில் நாம் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் அதற்குப் பாதுகாப்பு இருக்கிறதா…! என்றால் அதுவும் கேள்விக் குறி தான்.

செல்வத்தை எடுத்துக் கொண்டு சென்றாலும் பரவாயில்லை… வீட்டில் உள்ளோரையும் கொன்று விட்டு அதன் பின் செல்வத்தை அபகரித்து செல்லும் சூழ்நிலை இருக்கின்றது.

அது மட்டுமல்ல…! மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகளும் வந்துவிட்டது. தாய்லாந்து ஆப்பிரிக்கா சீனா ரஷ்யா அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இது வந்து விட்டது. “மனித மாமிசத்தை வைத்து விற்பனை செய்யும் ஓட்டல்களும்… கடைகளும் வந்துவிட்டது…”

காரணம்… விஞ்ஞான அறிவுகள் முதிர முதிர “மனிதனுடைய சமுதாயம்… மக்கள் தொகை கூடுகின்றது…” என்று கணக்கிட்டு இந்த வகையிலாவது குறையட்டும் என்று கருச் சிதைவுகள் ஏற்படுத்தப்பட்டு கருச்சிதைவான அந்தச் சிசுக்களை எடுத்து “மாமிசமாக வியாபாரம் செய்து கொண்டுள்ளார்கள்…!”
1.இன்று சிசுக்களைச் சாப்பிடுகின்றனர்…
2.நாளைக்கு மனிதனையே முழுமையாக உட்கொள்வார்கள்.

உலகம் முழுமைக்கும் இது பரவி விட்டது. இத்தகைய உலகில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!
2.மதங்களால் உருவாக்கப்பட்ட சத்தியம் தர்மம் நியாயம் நிதானம் எல்லாம் எங்கே போனது…? என்றும் தெரியவில்லை

படிப்பறிவு அதிகமாக இருந்தாலும் அதைச் சீர்படுத்த ஞானம் தேவை. பொதுவாக… எல்லாவற்றுக்குமே ஞானம் தேவை தான். கொலைகாரனாக இருந்தாலும் திருடனாக இருந்தாலும் அந்த ஞானத்துடன் தான் அந்த வேலையைச் செய்கின்றார்கள்.

1.ஆனால் அருள் ஞானம்…! தீமைகளை அகற்றி நன்மைகள் செய்யும் இந்த ஞானங்கள் தான் மனிதனுக்குத் தேவை.
2.அத்தகைய நிலை இல்லை என்றால் இனி வரக்கூடிய எதிர்காலம்……….!

60 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இருபது வயது ஆனவர்களோ அல்லது பிறக்கும் குழந்தைகளுடைய எதிர்காலமோ… “இனி எவ்வாறு இருக்கும்…?” என்று சொல்லவே முடியாது. அந்த அளவில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

மதங்களாலும் இனங்களாலும் உருவாக்கப்பட்ட கடவுள்கள் யாரையும் காப்பாற்றப் போவதில்லை. நம்மை உருவாக்கிய கடவுள்… உயிர் தான் கடவுளாக நம்மைக் காப்பாற்றக் கூடியது.

இன்று மனிதனாக இருப்பவர்கள் நாளை மனிதனாகப் பிறப்பது கஷ்டம். இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத விஷத்தன்மை கொண்ட உயிரினங்களாக உயிர் நம்மை உருவாக்கிவிடும்.

1.உயிரணு தோன்றி புவியின் ஈர்ப்புக்குள் வந்து மனிதனாக வளர்ந்து
2.இருளை நீக்கி ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழகி
3.உடலுக்குள் சேர்த்து நம் உணர்வுகள அனைத்தையும் ஒளியாக மாற்றப் பழகுதல் வேண்டும்.
4.ஆகவே இன்று நமக்கு நல்ல நினைவு இருக்கும் பொழுது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைச் செயல்படுத்துங்கள்.

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

 

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

 

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை…”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.