மந்திரமும் இல்லை மாயமும் இல்லை… எனக்கு நோய் இல்லை “எப்போதும் நான் நலமாக இருப்பேன்” என்று உங்களால் சொல்ல முடியுமா…?

மந்திரமும் இல்லை மாயமும் இல்லை… எனக்கு நோய் இல்லை “எப்போதும் நான் நலமாக இருப்பேன்” என்று உங்களால் சொல்ல முடியுமா…?

 

யாரை நான் ஜெபிக்கின்றேன்…? யாரை எண்ணி நான் தவமிருக்கின்றேன்…?
1.குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றேன் (ஞானகுரு)
2.பெற்று யாரையெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ
3.நான் பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

ஆனால் நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு “என்ன..? சாமி சொன்னார் நமக்கு ஒன்றுமே நடக்கவில்லை… ஒன்றுமே நடக்கவில்லை…” என்று எண்ண வேண்டியதில்லை.

சிலர் “என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…” என்று எண்ணுகின்றார்கள். கை கால் குடைச்சல் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது.. தீராத நோயாக ஒரே தலைவலியாக இருக்கிறது…! என்று கேட்பார்கள்.

தலை வலி நீங்க வேண்டும்… கை கால் குடைச்சல் நீங்க வேண்டும் என்று கேட்கின்றார்களா…? என்றால் இல்லை.

1.அதை “மற்றவர்களுக்குச் சரியாகும்…” என்று யாம் சொல்லியிருப்போம்.
2.ஆனால் “அவர்களுக்குத் தானே சொன்னார்…” என்று இதைத் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.

தீராத தலைவலியாக இருக்கின்றது, உடலெல்லாம் வேதனையாக இருக்கின்றது என்று கேட்கிறார்கள்.

இப்பொழுதுதானே அவருக்குச் சொன்னோம் என்று சொன்னால் “அதற்குச் சொல்லவில்லை…” என்பார்கள். என்னுடைய வேதனைகளை என்னால் தாங்க முடியவில்லை…! என்பார்கள்.

ஏனென்றால் இந்த எண்ணத்தை முதலில் நீக்கிவிட்டால் உங்கள் நோய் நீங்கிவிடும்.

நீங்கள் மந்திரமும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை… ஒன்றும் வேண்டியதில்லை.
1.இந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்து
2.“எனக்கு நோய் இல்லை… நான் நலமாக இருப்பேன்…” என்ற எண்ணத்தை மட்டும் கூட்டிப் பாருங்கள்.

உங்கள் எண்ணத்தை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உங்களுக்குள் அந்த நன்மையின் பயனைக் கூட்டும்.

நீங்கள் எண்ணியவுடன் கிடைக்கும்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

ரேடியோ, டி.விக்களில் எந்தெந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வைத்து ரசித்துப் பார்க்கின்றோம்.

அதைப் போன்றுதான் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் என்று பார்க்கின்றீர்கள் சாதாரண மனிதனைப் பார்க்கின்றீர்கள் நல்லதைப் பார்க்கின்றீர்கள்.

ஆனால், அந்த வேதனை என்ற விஷத்தன்மைகளைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அதை உடனடியாக அறிய முடிகின்றது. அந்த வேதனை உங்களை இயக்கிவிடுகின்றது.

இதைப் போல் தான் “உங்கள் மனதைத் திருப்பி..,” அருள் ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வை ஆழப் பதிவு செய்து கொண்டபின் அதை நீங்கள் நினைவு கொண்டால் மகரிஷிகள் உணர்த்திய உணர்வலைகளை எளிதில் பெற்று நீங்களே உங்கள் துன்பங்களை நீக்கிக் கொள்ள முடியும் உங்கள் எண்ணத்தால் உயர்ந்த நிலைகள் பெற முடியும்.

இதைவிட இன்னும் சுலபமாகக் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது?

மக்கள் யாரும் குறை உள்ளவர் அல்ல. சந்தர்ப்பம் இத்தகைய நிலைகள் அமைந்து விட்டது. அவர்களை மீட்டிட நீ என்ன செய்யப் போகின்றாய்..,? என்று குருநாதர் கேட்டார்.

அவர்களின் உயிர்களை நீ கடவுளாக மதி. உடல்களைக் கோவில்களாக மதி. மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களை நீ அங்கே வரம் கேள். அங்கே உயர்ந்த குணங்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் உனக்குள் அது வளர்கின்றது.

அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் உனக்குள் காக்கும் சக்தி வளர்கின்றது.

ஆகவே, “குறைகளைக் காணாதே…,” குறைகளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய், உயர்ந்த தியானத்தை நீ எடு. அவர்கள் குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று நீ தவமிரு.

அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நீ உயர்கின்றாய். அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கு. அதை உன்னால் பெற முடியும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

எனக்குக் குரு கொடுத்தது இது தான்.

விஞ்ஞான அறிவால் “எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”

விஞ்ஞான அறிவால் “எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”

 

மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட விஷக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள்ளும் சேர்ந்து அங்கேயும் இப்போது கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இருந்தாலும் இரு மடங்கு அழுத்தத்தின் தன்மை சூரியனுக்குள் அதிகமாகப் பாய்ச்சப்பட்டுப் பிரபஞ்சத்தில் அத்தகைய நிலைகள் பரவுமேயானால் “விஞ்ஞான அறிவால் வந்த இவை அனைத்தும் சூனியமாகிவிடும்…!”

இப்பொழுது இரு மடங்கு மின்சாரம் வயர்களில் வந்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட பல்புகள் அனைத்தும் ஃப்யூஸ் (FUSE) ஆவது போன்று இந்த உணர்வுகள் அதிகமானால்….
1.மனிதனுடைய சிந்தனைகளும் மிருகங்களுடைய உணர்வுகளும் மாறுபட்டு
2.”வெறி பிடித்தது…” போன்று உலகம் முழுவதும் பரவும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து நாம் மீள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற எது வந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் உடலில் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாளும் வளர்த்துக் கொண்டே வந்தால் மன உறுதி கிடைக்கும். நம்முடைய காரியங்களை எல்லாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற அந்த உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வார்கள்…
1.பிறருடைய கஷ்ட நஷ்டங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டே வந்தால்
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அவருக்கு வந்த கஷ்டமெல்லாம் நமக்குள் வந்து நம்மையும் அது பாதிக்கும்.
3.அவர் உடலுக்குள் வந்த அவர் நோய்களும் நமக்கும் வர நேருகிறது.

ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று “இந்தக் கணக்கைக் கூட்டினால்” இந்த உடலில் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

ஆக… அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க… மன உறுதி கொண்டு இந்த வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதே சமயத்தில்
1.நீங்கள் எடுத்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும்
2.உங்கள் மூச்சலைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் பரவி
3.நச்சுத்தன்மைகளைப் போக்கக்கூடிய சக்தியாகப் படரும்.

அகஸ்தியன் அன்று தன்னுடைய பார்வையில் இந்தப் பூமி குடை சாயும் நிலையில் இருந்ததைத் திருப்பி… வெப்பத்தின் தன்மை கூடச் செய்து “துருவத்தில் உறைந்த பனிகளைக் கடலாக மாற்றி…” பூமியைக் காக்கும் சக்தியாக அன்று அவன் செயல்படுத்தினான்.

அகஸ்தியனுக்கு முந்திய காலத்தில் இருந்த கடல் நிலைகள் வேறு அகஸ்தியனுக்குப் பின் வந்த கடல் நிலைகள் வேறு.

மனிதன் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் இன்று அதிகமாக… அதிகமாக… நீர் நிலைகள் பெருகி நிலங்கள் குறைந்து கடல் நீர் பெருக்கமாகி… ஊரை அழிக்கும் நிலையாக வருகின்றது.

துருவப் பகுதியில் உள்ள உறைபனிகள் அனைத்தும் உருக உருக கடல்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல…!

பூமிக்குள் வெப்பத்தின் தணல் அதிகமாகும் பொழுது பூகம்பங்களும் எரிமலைகளும் அதிகமாகி உள்ளே கொதிகலன்கள் அதிகமாகி “எந்த நேரத்திலும்…” இந்தப் பூமி சிதையும் நிலைகள் இருக்கின்றது. நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இதே நிலைகள் ஆகி கொண்டிருக்கின்றது.

ஒரு கோள் சிதைந்தாலே போதும்…! அதனுடைய விகிதாச்சாரம் மனிதனுடைய நிலைகள் அது கிடைக்காது போனால்
1.மனிதனும் மிருகமாகி விடுகின்றான்… விஞ்ஞானமும் அழிந்து விடுகின்றது…
2.இருளான உணர்வுகளே உலகெங்கும் பரவும் சந்தர்ப்பங்கள் வருகின்றது… இந்த விஞ்ஞானம் பயனற்றதாக ஆகிவிடும்.
3.இன்று செயல்படுத்தும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பூராமே பாழாகி அதனால் இயங்கும் சாதனங்கள் செயலிழந்து அனைத்தும் திசை திருப்பப்பட்டு
4.“அடுத்து விஞ்ஞான அறிவால் எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”.

ஆனால் மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் கவர்ந்து கொண்டால் இந்த உலகைக் காக்கலாம்… உங்களையும் காக்கலாம்… பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

இதைப் பெறுவதற்கும் செயப்படுத்துவதற்கும் உங்களுக்கு “மன உறுதி தேவை…!”

ஆகவே… ஏதோ என்று இல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்யுங்கள்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
2.இன்று அவனுடைய அருளைப் பெற்று பல ஆயிரம் அகஸ்தியர்களை உருவாக்குங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் உலகைக் காக்கும் சக்திகளாக இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா…?

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.. ஏன் நாம் ஆக முடியாதா…?

 

வான் வீதியிலே ஜீவ அணுக்கள் உருவாகி இருக்கிறது… நிறைய இருக்கின்றது என்று சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன் (ஞானகுரு).

பூமிக்குள் வரும் பொழுது அது எதன் எதன் வழிகளில் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளில்,,, அதன் உணர்வின் தன்மை மோதப்பட்டதோ வியாழன் கோளுக்குள் வரும்பொழுது ஜீவனுள்ள அணுவின் தன்மையாக மாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் சொல்கின்றார்கள் வான் வீதியில் வைரஸ் என்ற அணுக்கள் இருக்கிறது… அங்கே ஜீவிக்க முடியும் என்று.

ஆனால் தாவர இனங்கள் இல்லாது மேலே (வான்வீதியில் மற்ற மண்டலங்களில்) வாழ முடியாது.

1.எல்லாக் கோள்களிலும் “வைரஸ்கள்…” அந்த அணுக்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
2.அங்கிருக்கக்கூடிய உணர்வுகளை எடுத்தாலும் மாற்றிடும் உடலின் நிலைகள் இல்லை… உடல் பருமனம் இல்லை.
3.விஷ அணுக்களின் தன்மை வைரஸ்களாக மாறுமே தவிர உடல் அமைப்புகள் இல்லை.

காற்று மண்டலமாக மாறும் தன்மை… திடப்பொருளாக உருவாகும் தன்மை… சில கோள்களில் தான் உயிரணுக்கள் தோன்றி மடிகின்றது… தோன்றி மீண்டும் மடிகிறது. சிறிது காலம் இருக்கும். எந்த மண்ணை எடுத்ததோ வளர்கிறது… மீண்டும் மடிகிறது.

1.பூமி ஒன்றிலே தான் தாவர இனங்கள் இருப்பதனால் அதன் வழி கொண்டு
2.உயிரணுக்கள் அந்தச் சத்தினைக் கவர்ந்து ஒவ்வொரு உணர்வும் உணர்ச்சி கொண்டு
3.தாவர இனத்திற்கு ஒப்ப எண்ணங்களாகி உணர்வின் சத்தை எடுத்து உடலுக்கொப்ப அணுக்களும் வருகின்றது

இதையெல்லாம் இன்று விஞ்ஞான அறிவு கண்டு கொண்டு தான் உள்ளார்கள். இந்தப் பூமியை விடுத்து “மற்ற மண்டலங்களுக்குச் சென்று அங்கே வாழலாம்…” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் செல்லும் நிலைகள் இல்லை. உடல் பற்றே வருகின்றது. சொர்க்கலோகமாக இருக்கும் இந்த மனித உடலிலிருந்து என்றுமே அழியாத நிலை பெற முயற்சிக்கவில்லை.

ஏனென்றால்
1.சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல்.
2.கார்த்திகேயா… என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றி என்றும் ஒளியின் உடல் பெறுவது தான் சொர்க்கம் என்பது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் (நாம்) செல்லப்படும் பொழுது என்றும் ஒளியின் உடலாக மாறுகின்றது

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் பிறந்தது தான் உயிரணு. அந்த உயிரணு பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சியாகி… மனிதனாக ஆன பின் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிச் சென்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

1.சூரியனிலிருந்து வரக்கூடிய விபத்துக்களோ அல்லது விபரீதங்களோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய மற்ற எதுவாக இருந்தாலும்
3.துருவ நட்சத்திரம் அந்த விஷங்களை எல்லாம் மாற்றித் தன்னைச் சீர்படுத்தி ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றது.

அது எப்படி அந்த நிலை பெற்றது…?

இந்த மனித உடலில் இருந்து தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
1.இந்தப் பூமியில் தோன்றிய மனிதர்களில் விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்
2.துருவத்தில் நிலை கொண்டு “அவன் தான் துருவ நட்சத்திரமாக உள்ளான்…”

நம்மைப் போன்ற மனிதன் தான் அகஸ்தியன்… அவன் துருவ நட்சத்திரமாக ஆனான். ஏன்… நாம் ஆக முடியாதா…?

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்… அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்… வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்… நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்… தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை…” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்… “கை வைத்தோம்…” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்… ஒவ்வொரு நோய்க்கும்… ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக… சிறு குழந்தையால் எண்ண முடியாது… அதனால் சொல்ல முடியாது… சொன்னால் கேட்க முடியாது…! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக… நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு… நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது…!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

 

இந்தப் பேரண்டத்திலே மற்ற அணுக்களாகி… துகள்கள் ஆகி… கோள்களாகி நட்சத்திரமாகி வளர்ச்சியில் சூரியனாகி அதன் வழிகளில் பிறந்த நிலையில் அனைத்தும் தெளிந்திடும் அணுவின் தன்மை பெற்று உலகையே சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றது தான் “சப்தரிஷி மண்டலம்…” என்பது.

விண்ணின் ஆற்றலைப் பெற்று பேரண்டத்திலிருந்து வரும் நஞ்சினைப் பிளந்துவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள் ஒளிச்சுடராகச் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். பிறவா நிலை என்ற நிலை அடைந்துள்ளார்கள்

தீமை எது…? நன்மை எது…? என்று உணர்ந்து அதிலே தீமைகளை அகற்றி நன்மைகளை உருவாக்கும் எண்ணங்களைத் தனக்குள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் வலுவைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் உருவாக்கிய நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி அழியா ஒளி சரீரம் பெற்றுப் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளை அகஸ்தியன் அடைந்தான்.

ஆவியாக இருப்பது அணுக்களாக வளர்ந்தாலும் அதிலே மனிதனான பின் உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகள் ஒளியின் சிகரமாகப் பெற்றபின்
1.அதனின்று வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும்
2.பேரண்டத்தில் பெரும் சக்தியாக மாற்றமடைந்து வருகின்றது.

இப்படித் தான் தன்னுடைய வளர்ச்சியில் வந்த மனிதனின் உயிர் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறியபின் உலகையே படைக்கும் சக்தியாக வருகின்றது.

ஆகையினால் இந்த மனித வாழ்க்கையில் நாம் சிந்தித்து… எதனை நமக்குள் சமைக்க வேண்டும்… பொங்கலாக்க வேண்டும்… எதை ஒளியாக மாற்ற வேண்டும்…? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதிலே மற்ற அனைத்தையுமே வளர்ச்சி அடையச் செய்கின்றதோ அதே போன்று மனிதனானவன் சூரியனைப் போன்ற நிலைகள் அடைந்து படைக்கும் திறனைப் பெற்றவன் தான்,

அதனை அறிந்து அதன் வழிகளில் தீமைகளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் வளர்த்து முழுமை அடைந்தவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கியதோ அதைப் போன்று முதல் மனிதனான அகஸ்தியன் துருவத்தின் நிலைகளை உணர்ந்து துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

அதிலிருந்து உமிழ்த்திய உணர்வுகளைப் பெற்று அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்ற மனிதர்கள் அனைவருமே ஒளிச் சரீரமாகி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனோ அது குறிப்பிட்ட காலத்தில் மடிந்துவிடும். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வின் சத்தைத் தனக்குள் தெளிவாக எடுத்துக் கொண்டால் அது என்றுமே மடிவதில்லை.
2.இந்தப் பேரண்டத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது.

அத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் தான் அகஸ்தியனும் மற்ற மகரிஷிகளும். நாமும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…! (ஞானகுரு).

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

 

நம்மை ஒருவர் திட்டினால் அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். அடுத்தாற்போல் அதே செயலில் நாமும் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அது போன்று யாம் (ஞானகுரு) இங்கே உபதேசிக்கும் போது யார் ஒருவர் இதைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
1.சாமி சொன்ன வழிகளில் நாம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.அந்த உணர்வுகள் உங்களுக்குள் வருகின்றது.

கீதையிலே சொன்னது போல் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்… மூஷிகவாகனா…! எதை நினைக்கின்றீர்களோ அதையே நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.

அப்படி அந்த ஞானிகளை நினைப்பதற்குண்டான ஆற்றலையும் அதை நீங்கள் பெறுவதற்கும் அதைச் சுவாசிக்க கூடிய நிலைகளுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நிகழ்ச்சி தான் தியானம்.

அந்த முறைப்படி நினைக்கப்படும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய வழிகளிலே அங்கே போகலாம்.
1.சாமி செய்து கொடுப்பார் என்று எண்ணினால் ஏமாந்து தான் போக வேண்டும்.
2.சாமி பெரிய மகான்…! அவர் கொடுக்கின்றார் பிரசாதம் கொடுக்கின்றார்… அது கொடுக்கின்றார்… என்று எண்ணிக் கொண்டிருந்தால்
3.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இயற்கையின் உண்மை இதுதான் என்று உங்களுக்குள் அருள் உணர்வின் வித்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதைக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியது “உங்களுடைய பொறுப்பு…”

குருநாதர் எனக்கு அந்த அருள் வித்தைக் கொடுத்தார்… அதற்கு வேண்டிய பக்குவத்தைச் சொன்னார்… எடுத்துக் கொண்டேன். அதன்படி விளைய வைத்த வித்தின் தன்மையை உங்களுக்குள் கொடுக்கப்படும்போது அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

“சாமி கொடுப்பார்…” என்று கோவிலில் தெய்வத்திடம் சென்று வரம் வாங்கிக் கொடு…! என்று கேட்பது போன்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சாமி பெரிய சக்தி வாய்ந்தவர்…! என்ற எண்ணத்தில் தலைவலி என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது… முழங்கால் வலி போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கேட்கின்றார்கள்.

வலி நீங்கி நான் நன்றாக வேண்டும் என்று கேட்கச் சொல்கின்றேன். மீண்டும் தலை வலி விட மாட்டேன் என்கிறது… ஐந்தாறு மாதமாக விட மாட்டேன் என்கிறது… என்னென்னமோ வைத்தியம் பார்த்தேன் என்றே சொல்கிறார்கள்.

இப்போது என்ன வேண்டும்…? என்று கேட்டாலும் அது தான் வலி விட மாட்டேன் என்கிறது என்று மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். ஏனென்றால் அந்த உணர்வுதான் நம்மைப் பேச வைக்கின்றது.

எத்தனை தடவை சொன்னாலும் கூட அதைத்தான் திருப்பிக் கேட்கின்றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குள் பக்தியை வளர்த்து வைத்து விட்டார்கள்.

டாக்டரிடம் சென்று தலை வலி… இடுப்பு வலி மேல் வலி என்று சொல்கிறார்கள். அவர்கள் அதற்குண்டான மருந்தை கொடுத்து மற்ற எல்லாம் சொல்கின்றார்கள்.

டாக்டர் சொன்ன வழிப்படி செய்தால் தானே அந்த நோய் சரியாகும்.

ஊசியையும் போட்டு மருந்தையும் உட்கொண்ட பின் ருசியாக இருக்கிறது என்று டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?

மீண்டும் கை கால் குடைச்சல் உடல் வலி வரத்தான் செய்யும்.

அதே போன்று இங்கே தியானத்தைச் சொல்லிக் கொடுத்து மெய் ஒளியின் தன்மையைப் பதிவு செய்கின்றோம். அதை எடுத்து உங்களுக்கு வரக்கூடிய தீமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை நீங்கள் செய்தால் தான் சரியாகும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறேன்
2.நான் சரியாக்கித் தருகின்றேன் என்று சொல்ல வரவில்லை.

குருநாதர் சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

குருநாதர் சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது…? வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது…? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்…” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்…?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம…கம… என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்… “ஐய்யய்யோ… வாசனையையே காணோம்…” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன…? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்…?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்… “சாமி சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…….!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்…?

1.சாமி…! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்… கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்…
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே…!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே… செய்ய முடியவில்லையே…! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன…?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு…! என்றும் அங்கே போ… இங்கே போ…! எல்லாம் சரியாகிவிடும்…! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும் என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

 

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்…! என்று சொல்ல முடியும்.

அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.

1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்… ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.

சாதாரணமாக… விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசான் திரை இங்கே வருகிறது.

ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.

ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா…? அல்லது வேறு என்ன வருகிறது…? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.

அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது… நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.

இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

trust-yourself-3

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

 

சர்க்கரையைத் தயாரிக்கும் போது கரும்பில் இருக்கக்கூடிய சாற்றில் இருக்கும் விஷத்தைப் பிரிப்பதற்கு கெமிக்கலைத் தான் போடுகின்றார்கள்.

1.அந்தக் கெமிக்கலை ஒரு துணியில் போட்டால் துணி வெந்து போகும்.
2.ஆனால் அதைத்தான் சர்க்கரையில் போட்டு நாம் சாப்பிடுகின்றோம்.
3.பார்ப்பதற்கு அழகாக (சீனி) இருக்கின்றது ருசியாகவும் இருக்கின்றது.

இப்படி அந்தக் கெமிக்கலைக் கலந்து அழுக்குகளை நீக்கினாலும் அது சிறிது சர்க்கரையுடன் கலந்துவிடுகின்றது. இப்படி விஞ்ஞான அறிவால் ஒரு பொருளைத் தெளிவாக்கினாலும் விஷத் தன்மை நம் உடலுக்குள் சேர்கின்றது.

1.குடிக்கும் நீரிலும் இதைப் போன்றே தூய்மைப்படுத்துகின்றார்கள்.
2.நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் கெமிக்கலைப் பயன்படுத்துகின்றனர்.

எண்ணையிலுள்ள கொழுப்பு சத்து மற்றவைகளை எடுப்பதற்காக கெமிக்கலைப் போட்டுச் சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் அது வேண்டாதவைகளை எடுத்து விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் அந்தக் கெமிக்கல் கலந்த எண்ணை சென்றுவிடுகின்றது. நம் உடலுக்குள் சென்றவுடன் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற கடும் விளைவுகள் வருவதனால் இதிலிருந்து தப்புதல் வேண்டும். ஆகையினால் இதை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகளை நமக்குள் வளராது தடுத்துப் பழக வேண்டும்.

1.இன்று இந்தக் காற்று மண்டலத்தில் பல வகையிலும் படர்ந்து வரும் நச்சுத் தன்மையால்
2.இந்த விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து
3.சிந்தித்துச் செயல்படும் திறன் எல்லோருக்கும் இழந்து விட்டது.

அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும்… தவறு செய்யக்கூடிய உணர்வுகளைத் தூண்டுவதும்… சிந்தனை இல்லாத செயல்களைச் செயல்படுத்தும் நிலைகள் வருகின்றது. (எல்லோருக்கும் இப்படித்தான்…!)

இதைப் போன்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் போக்குவரத்துகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் விபரீத விபத்துக்கள் ஏற்படுகின்றது.

மேலும்…
1.மனிதனுக்கு மனிதன் விபரீதச் செயல்களைச் செய்து (இன்றைய நிலை)
2.மனிதன் என்ற நிலை இல்லாதபடி இரக்கம் ஈகையற்ற நிலைகளில்
3.தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் உணர்வுகள் பெருகிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு பொருளில் விஷம் பட்டால் அதை உட்கொண்டால் சிந்தனை சிதறிவிடுகின்றது. இதைப் போன்று விஷத் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளாக மாறுகின்றது… கடும் நோயாகவும் விளையும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தை எப்படியோ நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தவுடனே எடுத்துத் தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு…
1.மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
2.கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
3.குழந்தைகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்றும்
5.கட்டாயப்படுத்திச் செய்ய வேண்டும்.

குழந்தைகளையும் இவ்வாறு எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று நாளைக்கு அவர்களுக்குச் சொல்லிச் சொல்லி நீ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறு… உடல் நலம் பெறுவாய்… உனக்கு நன்றாகப் படிப்பு வரும்… நல்ல ஞான சக்தி கிடைக்கும்…! என்று இது ஒரு பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்குள் எழுந்து ஒரு பத்து நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தியானித்தால் போதும்.

இந்த மாதிரி எண்ணி எடுத்து அந்தச் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும். நம்மைக் காக்கும் சக்தியை நமக்குள் நாமே பெருக்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும்

be positive

கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும் 

 

ஒரு புதிய சாதனத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில்
1.அதற்குள் இன்னென்ன அளவில் அதற்குண்டான பொருளைச் சேர்த்தால்
2.அதனின் இயக்கச் சக்தி அது இந்த இடம் வலு தாங்கக்கூடியது என்று உணர்கின்றார் விஞ்ஞானி…
3.அதன்படி சீராக வேலை செய்யும் அந்தச் சாதனத்தை உருவாக்குகின்றார்.

அந்த விஞ்ஞானி அவர் கற்றுணர்ந்த நிலைகளை எல்லாம் தன்னிடம் சீடனாக வருபவரிடம் கற்பிக்கின்றார். அவர் கற்றுணர்ந்த வழியை அவருக்குள் காட்டப்படும் பொழுது சீடரும் கற்றுணர்ந்து வருகின்றார்.

அதன் வழியில் சீடர் வந்தாலும் அவர் எதைப் போதித்தாரோ அதன் வழிகளில் அவர் சீராகச் செயல்படுவார் என்றால் அவர் அதிலே வெற்றி பெறுகின்றார்.

1.ஆனால் கற்றுக் கொடுக்கும் பொழுது “கடினம்…” என்று எண்ணி அந்த்க் கல்வியைக் கற்க நேர்ந்தால்
2.ஒவ்வொரு எண்ணங்களிலும் அந்தக் கடுமை வந்துவிடும்
3.சீடனாக வருபவர் சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் ஒரு இன்ஜினியராக வந்தாலும் எப்படியோ அவர் பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்
1.அந்தப் பாட நிலை தான் மீண்டும் அவருக்கு வரும்.
2.ஆனால் மூலக்கூறுகளை அறிய முடியாது.
3.ஏனென்றால் அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

அதைப் போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை உங்கள் உணர்வுடன் இணைத்து விட்டால்… அந்த உணர்வை நீங்கள் நுகரும் பொழுது… அந்த அறிவின் ஞானமாக வளருகின்றது.

1.அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான்
1.ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்
2.அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது
3.அதனதன் கருக்கள் உங்களுக்குள் உருவாகின்றது.

அந்த ஞானிகளின் நினைவாற்றலின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவினை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவாக்க வேண்டும்.

அவ்வப்பொழுது உங்கள் வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றியமைக்க
1.இந்தப் பதிவான நிலைகள் நீங்கள் நினைவு கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டே வந்தால்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவி இல்லா நிலைகள் அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய உணர்வுகள் நம்மை இன்னொரு பிறவிக்குள் அழைத்துச் சென்றுவிடும்.

மனிதனான பின் பிறவி இல்லா நிலைகள் அடைவதே… சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே கடைசி நிலை…!