“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“முன் சிந்தனை” நமக்கு அவசியம் வேண்டும்

“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்…? என்னை அவன் இப்படிப் பேசினானே… அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே… எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.. உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.

என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?

“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்…” அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது… பயம் வருகின்றது.

1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால் அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
2.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
3.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
4.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
5.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை…?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போக வேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! முதலில் ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது…? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்து விட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.. “அந்தச் சந்தர்ப்பம்…” அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்…?

“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது…?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது…. இதை எப்படிப் பிடிப்பது…?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.”நொடிக்கு நொடி…” மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது…?
6.பயம்.. என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது…?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது…? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நன்றாகத் திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “அப்படி ஒரு சிந்தனை” வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்…? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…!” என்று காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
1.விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது…?
2.அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி “வசமாகப் இப்படிச் சிக்க வைத்து விட்டார்…” என்று எண்ணினால் எப்படி இருக்கும்…?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்…?
4.குரு தான் வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையில்
5.அவரை எண்ணி… “இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்…” அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள்…? என்று “பார்” என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்தில் இருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு இப்படி ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால் அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

 

ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் என்று பாடுகின்றோம். அந்த கணேசன் எங்கே இருக்கின்றான்…? நம்மை எவ்வாறு இயக்குகிறான்…? என்ற தத்துவத்தை ஞானிகள் கொடுத்திருந்தாலும்… புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகள் நாம் திரிந்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ப் பொருள் கண்டறிந்த அருள் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கின்றது. இதையெல்லாம் பித்தனாக இருந்த குருநாதர் உணர்த்துகிறார்.

எல்லோரும் உங்களைப் பைத்தியமாக எண்ணுகின்றார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்…? என்று கேட்கப்படும் பொழுது அவர் சொல்கின்றார்.

1.உலக மக்கள் என்னைப் பித்தனாக எண்ணுகிறார்கள்.
2.ஆனால் அவர்கள் எத்தகைய பித்துப் பிடித்து வாழுகின்றார்கள்…? என்பதை நீ உணர்ந்து கொள்.
3.அவர்கள் உணர்வைப் பற்றாதே அருள் உணர்வைப் பற்றிக் கொள்.
4.மற்றவர்களைப் பற்றி எண்ணாதே,.. நான் கொடுத்த அந்த அருள் ஞானிகள் உணர்வை நீ பற்று.

வாழ்க்கையில் உன்னை அசுத்தப்படுத்தும் நிலைகளைப் பற்றற்றதாக்கு.

யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் கோபமாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அதையெல்லாம் பற்றற்றதாக்கு.

அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு மெய் உலகம் சென்ற அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.

1.அருள் ஞானிகள் உணர்வுகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றும்படிச் செய்…!
2.அருள் உணர்வுகளை நேசித்துத் தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்டு
3.தீமைகளைப் பற்றற்றதாக உருவாக்கிவிடு என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகிறோம்.

ஒரு சிலர் இதைப் பற்றற்றதாகவும் இருக்கலாம். ஆனால்
1.அருள் ஞானிகளைப் பற்றிடும் நிலையாகத் தீமைகளைப் பற்றற்றதாக்க முடியும் என்று
2.எமது குருவின் ஆணைப்படி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்கின்றேன்.

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

 

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ
2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!
3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே..! என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.
4.”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.
5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது
1.அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது…? என்று அறிய
2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

1.ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி…
2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.
2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை… அறிவின் ஞானம் இல்லை.
3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன்… அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

எவரும் தெரிந்து வரவில்லை.

1.அறியாத நிலைகள்…
2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”
3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை
1.அறிந்திடும் நிலை கொண்டு செல்லும் போதுதான்
2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.

எத்தனையோ மொழிகள் இருக்கிறது நாம் பார்க்கின்றோம். இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.
1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்
2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.
3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து
4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.

மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.

மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்
1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது
2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.

அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.

ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும் போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.

ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஆகவே ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.

இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில்
1.நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும்
2.அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.
3.உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன்.
4.அவர் சொல்வதைத் திருப்பி “என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.
5.அப்போது அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது
6.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.

அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் “இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்
1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்
2.நீங்களும் உணர முடியும்… காண முடியும்.

நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்

நம் குருநாதர் ஜோராகச் சமையல் செய்வார்

 

எப்பொழுது துயரம் என்று வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தீமைகள் புகாது தடுத்து நிறுத்துங்கள்… அந்தச் சக்தி பெற ஏங்குங்கள்.

அது வேதனையை உடனே அடக்கிச் சிந்தனையைக் கொடுக்கும்.
1.உங்கள் உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? என்ற பொறுமையும் அதற்கு என்ன உபாயம்…? என்ற உணர்ச்சிகளும் உங்கள் கூட வரும்.
2.வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொன்றையும் சமாளிக்கக் கூடிய தன்மையும்
3.நல்ல உணர்வுகளை நமக்குள் விளைய வைக்கும் சக்தியும் நாம் பெற முடியும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

சீக்கிரமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டால் சுவை வருமா…?

கூடுமானவரை அரிசியை வேக வைத்த பின்பு மற்ற பொருள்களைச் சேர்த்தால் சுவையாக இருக்கும். ஆனால் அரிசி வேகுவதற்கு முன் மற்ற பொருள்களைப் போட்டால் அரிசி ஒரு பக்கம் வேகாதபடி இருக்கும்.

ஏனென்றால் சமையலில் பக்குவம் மிகவும் அவசியம் தேவை.

1.சில காய்கறிகள் உப்பை எடுத்துக் கொள்ளும்… சிலது எடுக்காது… அதற்கு நாம் போடும் உப்பு பத்தாது.
2.அந்தப் பக்குவம் தெரியாதபடி உப்பைச் சேர்த்தால் ருசி கெட்டுவிடும்.

காயாக இருந்தாலும் குழம்பாக இருந்தாலும் அது அது ஈர்க்கும் சமமான பருவம் பார்த்து உப்பைப் போட வேண்டும். சமைக்கத் தெரிந்தவர்கள் அந்தப் பக்குவத்தை அறிந்து செயல்படுத்துவார்கள்.

சில பேர் காயைப் போட்ட பின் உப்பையும் சேர்த்துப் போட்டு விடுவார்கள் வெந்த பின் பார்த்தால் உப்பை எல்லாம் காய் எடுத்துக் கொள்ளும்… குழம்பு சப் என்று இருக்கும். காரணம் சில காய்கறிகளில் உப்பை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும்.

ஆகவே அந்தப் பருவம் தெரிந்து உப்பை இணைத்தால் தான் இரண்டும் ஒன்று போல இருக்கும்.
1.சமையல் வேலையெல்லாம் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
2.எந்தெந்த நேரத்தில் எப்பொழுது எதைச் சேர்க்க வேண்டும் ஜோராகச் சமையல் செய்வார் குருநாதர்.
3.நீ இப்படிச் சமைத்துக் கொள்ளடா என்று சொல்வார்.

அதாவது… நீ உன் உடலுக்குள் சுவை மிக்க உணர்வுகளைச் சேர்த்துச் சமைத்துக் கொள் என்பார்.

சமையல் கலையைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னென்ன பருவத்தில் எதை எதைச் சேர்த்தால் அது எப்படி ருசி கொடுக்கின்றதோ இதைப் போல உன் உயிர் ஒரு நெருப்பு.
1.அதிலே எந்தெந்த உணர்வுகளைப் போட்டு எந்தெந்த நேரத்தில் அதைச் சேர்க்க வேண்டும்…? என்று இணைத்தால்
2.அந்த உணர்வுப்படி சுவை மிக்க உணர்வுகளை உனக்கு ஊட்டும்.
3.அந்தச் சுவை கொண்ட நிலையில் எல்லோரையும் மகிழக்கூடிய சொல்லாகச் செயல்படும் என்று சொல்வார்.

இதற்கும் அதற்கும் சொல்லி அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

இயற்கை எவ்வாறு செயலாக்குகின்றது…? செயற்கை எப்படி உருமாறுகின்றது…? மனிதனான பின் எதை உருமாற்றுகின்றோம்…? என்று இப்படி குருநாதர் தெளிந்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

 

ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தகைய கடும் நஞ்சாக இருப்பினும்
2.அது தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான் இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள். இந்தப் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் செயலிழந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டுத் தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
2.இந்த அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு.
3.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதனின் நிலைகள் நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.

பேரண்டம் முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து உணர்வின் தன்மை உடல் பெற்று
1.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
3.இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது… அதிலே இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக நாம் அமைத்திடல் வேண்டும்.

நமக்குள் நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது
1.அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும்… அமைக்க முடியும்.
2.அத்தகைய நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
3.விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற
4.அவர் அருளியதைப் பெறும் பாக்கியத்தை நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். நம்மால் நிச்சயம் முடியும். எமது அருளாசிகள்…!

குரு பீடம்

குரு பீடம்

 

துன்பத்தைக் கேட்டறிந்தால் அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “துன்பத்தை மாற்றி அமைத்த உணர்வினை” உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் அதை மாற்றலாம்.

1.முன் செய்த வினையின் தன்மைதான் இன்று நமக்குள் வினையாக விளைந்து
2.இந்த வாழ்க்கையைச் சீர்கெடச் செய்கின்றது… இது விதி ஆகிறது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்தை எடுத்து வளர்த்திருப்போம். வேதனைப்படுவோரைப் பார்த்திருப்போம்… நண்பன் என்ற நிலையில் இதையெல்லாம் கேட்டறிந்து இருப்போம்… அல்லது சொன்னதைக் கேட்டிருப்போம்.

இதையெல்லாம் நாம் நுகர்ந்த பின்
1.அதை உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றி… நண்பன் சொன்ன சொல்லையே உணவாக எடுத்து வளரும்.
2.இவ்வாறு மனித உடலில் விளைந்து விட்டால் அது விதி ஆகிறது.

உதாரணமாக ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது செடியாகிறது. வளர்ச்சியில் வித்துக்களாக விளைந்த பின் செடி பட்டு விடுகின்றது.

இருந்தாலும் அதனுடைய இனங்களாக வந்த பின் அதனுடைய வித்திற்கே மீண்டும் அந்தச் செடியின் சத்து உணவாகின்றது… செடியாக வளர்கின்றது,

இதைப் போன்று தான் நாம் மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ கோபமோ வேதனையோ உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் வித்தாகின்றது. இதுவே விதியாகவும் வளர்ந்து விடுகின்றது.
1.ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து அந்தந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாகவும் நாம் அவஸ்தைப்பட நேருகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.தபோவன குரு பீடத்தில் உள்ள சூரியனைப் உற்றுப் பார்த்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.
3.இதற்கு முன் அறியாது சேர்ந்த தீவினைகள் அனைத்தும் அகன்று உடல் நலம் பெற வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.

அந்த மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து முன் சேர்த்துக் கொண்ட வினைகளை அகற்றும் சக்தியாக அருள் ஒளி படர்ந்து எந்த வலி வேதனை இருந்தாலும் மற்ற குறைகள் இருந்தாலும்… அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் பெருக்கும்.

மனக் கவலையோ சோர்வோ இருந்தால் மன பலம் பெறுவீர்கள் அந்தத் திறன் கிடைக்கும். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்… மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும்… என் பார்வையால் நான் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

1.இப்பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவுவதையும் உடலில் ஆற்றல் பெருகுவதையும் உணர முடியும்.
2.அன்று வாழ்ந்த அந்த மகரிஷிகள் உருவங்களும் சிலருக்குக் காட்சியாகத் தெரிய வரலாம்.
3.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்.

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.

1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள்… அதைக் கவர்கின்றார்கள்.

வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.

அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின்… கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.

அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!

அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.

உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.

கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ண எண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.

அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.

மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.

முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது…
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.

நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ஈந்த ஆன்மா புகும்.

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டிய வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்றவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள்… என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால்… எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.

இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே அதையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.

அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.

1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்…
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.

இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.

ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும். அப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை… நாமும் அங்கே சென்றடைய முடியும்.

அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

 

விஷமான உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி…! என்றார்.

அதாவது எங்கேயோ தோன்றிய… பேரண்டத்தில் இருந்த நிலைகள் கோடிக் கோடியாக மாறுகின்றது.
1.பல கோடிக்குள் மற்ற உணர்வின் அணுக்கள் சேர்த்து
2.மனிதனாக வருவதற்குக் கோடியில் கோடி… எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடி கோடி…!

நான் எண்ணமாகப் பேசுகிறேன் என்றால் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் இங்கே வருகின்றது. இதைத்தான் மனித உணர்வுக்குள் இது பட்டபின் அதனின் நிலை தனக்கொத்ததாக மாறுகின்றது.

1.இதை உணர்த்துவதற்குத் தான் குருநாதர் எனக்கு அடியைக் கொடுத்து
2.பிரமை பிடித்த மாதிரிச் செயல்படுத்தி விண்ணை நோக்கி ஏகும்படிச் சொன்னார்.

குருநாதர் எனக்கு அடி கொடுத்தார்… உங்களுக்கு சொல்லடி கொடுக்கின்றேன். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிகின்றது… சீதாராமா. அந்த ஞானியின் உணர்வுகள் அம்பாகப் பாய்கின்றது.

கோபத்தால் சொல்லும் பொழுது இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது. எதிர் பதிலாக அதுவே வருகின்றது.

இதைப் போல் தான் கோடியில் கோடி என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் உணர்வினை ஒளியாக மாற்றி… குருநாதர் கண்டுணர்ந்த உணர்வை அடியால் கொடுத்து… உணர்வின் தன்மை அங்கே உந்தச் செய்து உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

1.எனக்கு அடி கொடுக்கும் பொழுது அவருடைய சக்தி எப்படி எனக்குள் உறைகின்றதோ இதைப் போன்று தான்
2.அந்த விண்ணின் ஆற்றலும் அது உருவாகும் மாற்றமும்
3.மண்ணுலகில் வரப்படும் பொழுது “கோடி கோடி கோடி கோடி…” என்ற இந்த நிலையைக் கொண்டாருகின்றார் குருநாதர்.

விண்ணின் ஆற்றலை எனக்குள் அவர் பதிவு செய்த பின்… உடல் எங்கே இருக்கின்றது… உதைத்த உணர்வுகள் அவருடன் ஒன்றும்… ஒன்றிய உணர்வுகளை விண்ணிலே பறக்கச் செய்வார்…!

பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
1.அடைந்த உணர்வுகளும் இங்கே அடித்த உணர்வுகளும் இழுக்கும்… இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்கு அறிவித்தார்.
2.நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழிகள் எல்லாம் வந்தாய்…? என்று கனா காண்பது போன்று
3.அணுவாகத் தோன்றி உயிரணுவாக… உன் உயிரே எப்படி உண்டானது…? என்று அறியச் செய்தார்.

விண்ணிலே உயிர் உண்டாவதற்கும் இதிலேயும் பல கோடி கோடி கோடி கோடி. பார்த்தால் உயிரின் துடிப்பு ஒன்றாக இருக்கும். ஆனால் எத்தனை கோடி உணர்வுகள் கலந்து உயிரின் துடிப்புக்குள் இணைந்து அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்.

ஒரு அணுவின் தன்மை மற்ற கோளின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி கோடி… கோடி கோடி.

காரத்தின் தன்மையோ கசப்பின் தன்மையோ அதுஎப்படி வந்தது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பானது…? காரமானது…? என்று சுவையின் உணர்வுகளும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…?

இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி.

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

 

இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.

“இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றது” என்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.

ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகையினால்
1.மற்றவர்கள்… யார் தவறு செய்கின்றார்கள்…?
2.எப்படிச் செய்கின்றார்கள்…? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற வழி

 

துருவ மகரிஷி எவ்வாறு… எதன் வழியில் விண்ணுலகம் சென்றார்…? என்பதை “நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்…” அவருள் அறியும் ஆற்றல் பெற்றபின் அந்த வழியினை… “விண் செல்லும் மார்க்கங்களை…” எமக்கு உபதேசித்தார்.

அவர் உடலை விட்டுப் பிரிந்த பின்… நான் அவரை உற்றுப் பார்க்கப்படும்போது
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலும்
2.அவர் உடலிலிருந்து… இந்த உடல் பெற்ற நிலையை உடல் பெறா நிலைகள் கரைவதையும் காட்டுகின்றார்

இவர் தற்காலத்தில் விண் சென்றவர் தான். அதாவது 1970 என்று எண்ணுகின்றேன். ஆனால் சரியாக நினைவில் இல்லை.

1970ல் உடலை விட்டுச் சென்றபின் அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்றும்
1.விண் செல்வதற்கு… அவரை விண் செலுத்துவதற்கு என்ன உபாயங்கள் செய்ய வேண்டும்…? என்றும்
2.அவரைப் பின் தொடர்ந்து செல்லும் நிலையினை… எனக்குள் எப்படிப் பெருக்க வேண்டும்…? என்றும்
3.அவர் காட்டிய அருள் வழிப்படித் தான் அதைச் செய்தது.

பின் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சக்திகளைப் பெறும் தன்மையையும் எமக்கு உபதேசித்தருளினார்.

அன்று அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற “விண்ணுலக ஆற்றல்கள்…” அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

அதை எப்படிப் பெற வேண்டும்…? என்று குருநாதர் கூறிய அந்த அருள் வழிப்படி அதை நுகர்ந்தறிந்து… எமக்குள் அது விளையச் செய்து… அதன் உணர்வின் எண்ண அலைகளை உங்களுக்குள்ளும் இப்பொழுது பதியச் செய்கின்றேன்.

உங்கள் செவிப்புலனறிவில் அது ஈர்க்கப்பட்டு… அதன் துணையால்
1.உங்களுக்கும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவது தான் இந்த நிலை.
2.குருநாதர் விண் சென்ற உணர்வுகள் தான் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் இந்த ஆற்றல் அனைத்தும்…!