ஞானதிருஷ்டி…!

ஞானதிருஷ்டி…!

 

உயிரணு வளர்ச்சியில் பல நிலைகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பல மாற்ற நிலைகள் உருமாறி உருமாறி… வலுத் தன்மை கூடிக் கூடி… வளர் கொண்ட நிலை கொண்ட பிறகுதான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலு கூடப் பெறுகின்றது.

இப்படிப் பல முலாம் தன்மை கொண்டு உருவாகி உருவாகி உயர் கொண்ட வார்ப்பலையில்
நீர்…
நிலம்…
தாவர… தொடர் வளர்ச்சி நிலை
ஜீவ பிம்ப நிலை…
இப்படிப் பல முலாமில் வளரும் வளர்ச்சி நிலையில்
“ஒளி காணும் நிலை” தாவர வளர்ச்சி நிலைக்கும் இல்லை.

ஆரம்ப இனப் புழு வளர்ச்சிகளுக்கும் சுவாச நிலை மட்டும் கூடுகின்றது. ஒளி நிலை வருவதில்லை.

சுவாசத்தை எடுத்து மணம் தரும் வளர்ப்பு நிலை தாவர இன நிலையிலும் தாவர நிலைக்கு அடுத்த நிலையான தாவரத்திலிருந்து சத்தெடுத்து வளரும் ஜீவ உயிரணு புழு நிலைக்கு சுவாச நிலை எடுக்கும் வளர்ப்பு நிலை கூடுகின்றது.

அடுத்த வளர்ப்பின் வார்ப்பு நிலை வளர்ச்சியில் தான்
1.சரீர பிம்பத்தில் எலும்புகளின் வளர்ச்சி நிலையின் வலு கூடிய தன்மையிலிருந்து
2.ஒளி காணும் விழி அமைப்பு நிலை தான் சரீர ஜீவன்களின் வார்ப்பு நிலையாக வழி கொண்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலை யாது…?

விழி நிலையின் ஒளி காணும் வழி நிலைக்கே… பிம்பக் கூட்டின் “எலும்புகளின் ஊன் நிலை உயர்வின் நிலைக்கொப்ப…” விழியின் ஒளி நிலை அமைகின்றது.

சுவாசத்தால் உண்ணும் உணவின் சத்தெடுத்து ஆவியானது அமிலமாகி உதிரமாகின்றது.
1.அந்த உதிர ஓட்டத்தால் எலும்புகளின் சத்து நிலை
2.எலும்பின் உள் நிலையின் ஊன் நிலை உறுதியின் வலுவால்
3.எலும்புகளின் வளர்ச்சி முற்ற முற்ற
4.ஒளி நிலையின் பிரகாச கூர் நிலை… “ஊடுருவும்” வளர்ச்சி நிலை உருவாகின்றது.

சரீர பிம்ப வாழ்க்கையில் முன்னோக்கி ஒளி காணும் விழி நிலையின் அடுத்த நிலையான ஞான திருஷ்டி கொண்டு விழியை மூடிக் கொண்டே
1.முன்புறம் காணப்படும் எதிர் நிலையின் ஒளி ஈர்ப்பு மட்டுமின்றி
2.விழியை மூடிய தன்மையிலும் விழித்திருக்கும் தன்மையிலும்
3.பின்புறக் காட்சிகளையும் நம் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
4.இந்தப் பூமி மட்டுமல்லாமல் எந்தப் பூமியானாலும் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் வழி நிலையில்
5.அங்குள்ள எந்த நிலைகளையும் காணவல்ல உயர்வு நிலை பெறலாம்.

அந்த ஞானதிருஷ்டி என்ற நிலையை இச்சரீர பிம்ப இயக்கத்திலிருந்து தான் செயல்படுத்த முடியும். அதாவது ஜீவ சக்தியுடன் கூடிய இயக்க ஓட்டத்தில் மேல் நோக்கிச் செலுத்தி எடுக்கும் சூரிய அலையின் காந்த மின் அலைத் தொடர்புகளை ஆற்றலாக எடுத்து எலும்புகளை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வெலும்புகளின் வலுத் தன்மையில் எலும்பின் ஊன் வளர்ச்சி பெருகப் பெருக விழி நிலை கொண்டு எதிர் நிலையில் தெரியும் ஒளி நிலை பெற்ற மனித நிலை
1.அதற்கடுத்த நிலையான எங்குள்ளவற்றையும்
2.உள்ள நிலையிலிருந்தே ஞானதிருஷ்டி என்ற
3.ஊடுருவி ஒளி காணும் ஒளி ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான வைத்தியத்தால் உடல் உறுப்பின் உள் நிலை காணும் ஊடுருவல் புகைப்படப் பதிவு நிலை (எக்ஸ்ரே) செயல்படுவதைக் காட்டிலும் உயர்ந்த காந்த மின் அலைத் தொடர்பின் வார்ப்பக வளர்ச்சியை இச்சரீர இயக்கத்தில் பெற்ற ஆத்ம நிலையின் வலுத் தன்மையால் பெற்றிட முடியும்.

1.ஊடுருவிக் காணும் அந்த உயர் தன்மை கொண்ட விழித் தன்மையின் செயலை வைத்து
2.பூமியின் உள் நிலையில் உள்ள தன்மைகளையும் காணும் நிலை
3.இச்சரீர பிம்ப ஆத்மாவிலிருந்து ஒவ்வொரு மனிதனும் பெறலாம்.

ஆத்மீக வழித் தொடரினால் ஆத்ம வளர்ச்சியினால் அடையும் தன்மை யாது…? என்ற வினாவிற்கு இந்தப் போதனையிலிருந்து விடை காணலாம் பலரும்.

இச்சரீர பிம்ப ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ளும் ஆற்றலினால்
1.ஊடுருவிக் காணும் விழி ஞான ஒளித் தன்மையால்
2.விஞ்ஞானத்தில் வளர்ச்சி முற்றிய செயற்கைக் கோளினால் அறியும் வழியைக் காட்டிலும்
3.உயிராத்மாவின் ஊடுருவிக் காணும் ஒளி ஞான ஒளி அலையினால்
4.எத்தொடரையும் உயிராத்மா தொடர்பைக் கொண்டு
5.ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் நிலைத் தொடர்பிலிருந்து நிலைப்படுத்தும் வழி முறையையும்
6.உருவாகும் ஊடுருவச் சேர்க்கையில் “நிகரில்லா நிலைதனைப் பெறலாம்…!”

ஜோதி நிலை

ஜோதி நிலை

 

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

உறக்க நிலையில் வரும் கனவுகள்

உறக்க நிலையில் வரும் கனவுகள்

 

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன.

காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு… அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாதபடி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

நாம் வளர்ந்து… மற்றவருக்கும் வழி காட்டி… அந்தத் தொடர்பை மகரிஷிகளுக்குத் தர வேண்டும்

நாம் வளர்ந்து… மற்றவருக்கும் வழி காட்டி… அந்தத் தொடர்பை மகரிஷிகளுக்குத் தர வேண்டும்

 

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்…
2.வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
3.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளிலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகைய நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

பிறர் உணர்வு நம்மை இயக்குகிறது… ஆனால் ஞானிகள் உணர்வு நம்மை இயக்கும்படி நாம் செய்ய வேண்டும்

பிறர் உணர்வு நம்மை இயக்குகிறது… ஆனால் ஞானிகள் உணர்வு நம்மை இயக்கும்படி நாம் செய்ய வேண்டும்

 

1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

1.உயர் அலையின் தொடர்பலையால்
2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

அதை மாற்றி… எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழி முறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக் கொண்டோமானால்
1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

“மூன்றாவது கண்…” மூலமாகக் காணும் ஆற்றல்

“மூன்றாவது கண்…” மூலமாகக் காணும் ஆற்றல்

 

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்று விட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

ரிஷித் தன்மை பெறுவதற்கு “மேல் நோக்கிய சுவாசம்” மிகவும் அவசியம்

ரிஷித் தன்மை பெறுவதற்கு “மேல் நோக்கிய சுவாசம்” மிகவும் அவசியம்

 

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்து பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனை புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்
1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியை சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

மறைக்கப்பட்ட பல உண்மைகளை அறியலாம்

மறைக்கப்பட்ட பல உண்மைகளை அறியலாம்

 

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்.. இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளரவிடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1.ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

உண்மையை உணர்ந்து கொண்டால் ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் “உலக சிருஷ்டியையே…”

உண்மையை உணர்ந்து கொண்டால் ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் “உலக சிருஷ்டியையே…”

 

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள்… அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப… ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாக உருவாகின்றது.

அப்படி உருவான மண்டலங்கள்… கோள்கள்… நட்சத்திரங்கள்… சூரியன்கள்… அதனதன் ஈர்ப்புச் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே… வழி கொள்ளும் வளர் முறைக்கு வருகின்றது.

இந்தப் பூமியில் மணல் உண்டு.. நீர் உண்டு… சுண்ணாம்பும் உண்டு… இப்படி மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அவை எல்லாற்றையும் நாம் எடுத்து நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக வீடுகளாகக் கட்டிப் பாதுகாப்பு இடமாகத் தேடி அமைத்து வாழ்கின்றோம்.

1.எப்படி வீட்டை அமைக்கப் பல பொருள்களை எடுத்துப் பக்குவப்படுத்திக் கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்று
2.பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில்
3.தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து
4.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு… எண்ணத்தின் ஞானம் கொண்டு…
5.உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்பு நிலை உருவகங்கள் தான்
6.ஆதி சக்தியின் வழி வந்த மகரிஷிகளின் வழி மண்டல அமைப்பின்
7.ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வருகின்றது.

அது அது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப… வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும் தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உருப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்…
3.உண்மையின் உன்னத சக்தியினை உணர்த்தினால்… உருவாக்கினால்…
4.ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இந்தப் பூமிக்கு “மனிதக் கரு வர” ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித் தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இந்தப் பூமியின் சிவ சக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இந்தப் பூமியில் மட்டுமல்ல…
1.நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்
2.நம் சூரியக் குடும்பமல்லா மண்டலங்களில் ஜீவிக்கின்றார்கள்.

ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்… மற்ற எல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

அவர்களின் கூட்டுச் செயல் தான் ஆதி சக்தியின் இயக்கமே…!

நெற்றியின் புருவத்திற்கு இடையில் தெரிய வேண்டிய… தெரியும்… “பிரகாசமான நீல நிற ஒளி”

நெற்றியின் புருவத்திற்கு இடையில் தெரிய வேண்டிய… தெரியும்… “பிரகாசமான நீல நிற ஒளி”

 

ஈஸ்வரபட்டர்:-
“ஆத்மாவின் இயக்கம் தான்… சரீரச் செயல் வழித் தொடர்…!” என்பதனை நான் போதனை நிலையில் உணர்த்தியதற்கு ஒப்ப ஆத்ம வளர்ச்சியால் தியானத்தில் கண்ட உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

அன்பரின் அனுபவம்:-
கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்ததும் உபதேசம் செய்யும் ஞானகுருவை நினைத்தேன். ஞானகுரு கையை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார். ஞானகுருவின் உள்ளங்கையிலிருந்து குருதேவரின் முகம் மட்டும் என்னை நோக்கி வருவதாக உணர்ந்தேன்.

வந்த முகம் பிறகு முழு உருவமாகவும் கையில் ஒரு தடியுடனும் அவரைச் சுற்றி ஆட்டுக் கூட்டம் இருப்பது போலவும் தெரிகின்றது. பிறகு வெண்மையான முகிலைப் போன்று படர்ந்த ஒளியாகத் தெரிந்தது.

இன்னொரு அன்பரின் அனுபவம்:-
உடல் முழுவதையும் சுற்றி ஓர் ஒலி சுழல்வதைப் போலவும்… செவியில் “உய்…” என்ற ஒலி நாதம் கேட்டது.

உடல் முழுவதுமே அந்த ஒலியுடன் ஒளியும் சேர்த்து இயக்கக்கூடிய :இழுப்பு நிலை போன்று… உடலே ஜிவ்…வ்வ்.. என்று மேல் நோக்கி உச்சந்தலையிலிருந்து இழுப்பதைப் போன்று “ஆனந்தமான நிலை” ஏற்பட்டது.

உடலோ மற்ற உணர்வுகளோ எதுவுமே தெரியாத நிலையில் நான் இருப்பது தெரிகின்றது. ஆனால் உடலின் எண்ண ஓட்டங்கள் இயங்குவது தெரிகின்றது. உடல் கனமோ உடலுக்குகந்த மற்ற உறுப்புகலீன் நிலையோ மறந்து “எண்ணம் மட்டும்” ஓடுவது தெரிந்தது.

1.பிறகு ஒரு மிளகைப் போன்ற அளவில்
2.மிகவும் பிரகாசமான நீல நிற ஒளி
3.நெற்றியின் புருவத்திற்கு இடையில் (ஆத்ம ஜோதி) தெரிந்தது.

பின் மஞ்சள் நிறமான பெரிய சூரியனைப் போன்று ஒளி தெரிகின்றது. அந்த ஒளி சுழன்று ஓடுகின்றது. அப்படிச் சுழலும் பொழுது அதிலிருந்து வானவில்லில் காணும் ஒளியைக் காட்டிலும் மிக மிகப் பிரகாசமாகச் சில ஒளிகளும் அந்த ஒளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிலிருந்து பல ஒளிகளும் தெரிந்தது.

வான மண்டலம் மஞ்சள் நிறமான பிரகாசமான ஒளி நிலைக்கு அது சுழன்று ஓடும் ஓட்டத்துடன் செல்வதைப் போன்றும் சில இடங்களில் உஷ்ணமாகவும் குளிராகவும் நெருப்பும் மற்றும் விவரிக்க முடியாத பஞ்சைப் போன்று தெரிந்தது…!

மேலும்… அதை எப்படிச் சொல்வது என்றே புரியாத நிலையில்
1.வெண்மை முகிலுமல்லாமல் கனத்த தன்மையும் இல்லாமல் சொல்லால் உணர்த்த முடியாத சிலவும்
2.இதே தொடரில் அவ் ஒளி வட்டத்துடனே செல்லப்படும் பொழுது
3.மனித உருவத்தைப் போன்றும் ஆனால் உருவமல்லா ஒளியைப் போன்றும்
4.பிரகாசத் தன்மையுடன் வரிசையாக உள்ளனர்….
5.ஒருவர் முதுகில் மட்டும் ஏதோ ஒரு மிருகம் உள்ளதைப் போன்று தெரிகின்றது.

அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “ஆசீர்வாதம்…” வாங்கும் எண்ணம் வந்தது. உங்கள் உயர்வைப் போன்று… நானும் உயர வேண்டும்…! என்று வணங்கச் செல்லும் பொழுது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜீவ சரீர பிம்ப வாழ்க்கையில்…
1.உங்களை ஒத்தவர்கள் பெறும் ஞானத்தைக் கொண்டு தான் எங்கள் வளர்ச்சி நிலையே உள்ளது
2.உங்களைக் கொண்டு தான் எங்கள் உயர்வே
3.நீ அவரிடம் ஆசி பெறு…! என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4.அவ்விடம் ஒன்றுமே இல்லா பால்வெளி வான மண்டலத்தைப் போல் கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே இல்லாமல் தெரிகிறது.

பிறகு முகிலைப் போன்று படர்ந்த திட்டுத் திட்டாகத் தெரிகின்றது. வார்த்தையிலும் இது வரைக்கும் கண்ணிலும் கண்டிராத ஒளிகள் மிக மிகப் பிரகாசமாகப் பல வண்ணத்தில் நாட்டியமாடுவதைப் போன்று மிகவும் துரிதமாகச் சுழன்று “ஓர் உயர்ந்த முப்பது நாற்பது அடி உயரத்திற்குப் பெண்ணின் உருவம் போன்று… ஒளியிலேயே… ஆனதைப் போன்று…” தெரிகின்றது.

ஊன்றிப் பார்க்கும் பொழுது ஆணின் உருவமாகவும் பெண்ணின் உருவமாகவும் மாறி மாறித் தெரிந்தது. பின் சாதாரணப் பெண்ணை ஒத்த உருவமாக ஒளி வண்ணங்களாகத் தெரிந்தது.

ஆசீர்வாதம் வாங்கும் நோக்கத்தில் காலில் விழுந்து வணங்கியவுடன்
1.என் செயலை வளர்ப்பாயா..? என்ற குரல் கேட்டது…!
2.அங்கே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் நிற்பதும் தெரிகின்றது.