நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

 

வாழ்க்கையில் எத்தனையோ அழுக்குகளை (தீமைகளையும் கஷ்டங்களையும்) பார்க்கின்றோம்… வருகிறது. “அது வந்து கொண்டே இருக்கும்…”

வீட்டையும் உடலையும் உடையையும் சமையல் செய்வதையும் மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. அது போல் அதை நாம் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத் தான் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க எடுக்க உங்கள் பற்று துருவ நட்சத்திரத்துடனே இணைகின்றது… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது
3.பற்று துருவ நட்சத்திரத்தின் மீது வரப்படும் பொழுது பூமியில் பற்றற்றுப் போகின்றது.

இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலை வைத்து நாம் நிரந்தரமான சொந்தத்தை உருவாக்க வேண்டும். பிறவி இல்லா நிலை என்னும் அந்தச் சொந்தத்தை நாம் கொண்டாட வேண்டும்.

பகைமை அகற்றும் அருள் உணர்வுகளைச் சேர்த்து விட்டால் என்றென்றும் நமக்கு அது உறுதுணையாக இருக்கும்.

1.விண்ணிலிருந்து வரும் நஞ்சினை அகற்றி அதை ஒளியாக மாற்றிடும் திறன்
2.இந்த உடலை வைத்துத் தான் நாம் அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இன்றைய செயல் நாளைய சரீரம்… நேற்றைய செயல் இன்றைய சரீரம். ஒவ்வொன்றும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் தீமைகள் அகற்றிடும் உணர்வாக… நல்லதையே வளர்த்து நல்லதையே எண்ணிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இதை எதற்காகச் சொல்கிறொம் என்றால்
1,இந்தக் காற்று மண்டலம் ஒரு சாக்கடையாக இருக்கின்றது
2.இதற்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கின்றது
3.அதை வலு கொண்டு நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வரும் தீமையைப் பிளக்க வேண்டும்
4.தீமையான உடலைப் பிளக்கும் சக்தி பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரிந்து சென்றால் தீமையைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் அருள் சக்தி கொண்டு பிறவி இல்லா நிலை அடைய உதவும். ஒவ்வொருவரும் இதைப் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியை விரயமாக்காதபடி செயல்படுத்த வேண்டும் டிவி ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள்.

அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைத்தால் அது வேலை செய்கிறது. இது போன்று நாம் தொழில் வியாபாரத்தில் எத்தனையோ பதிவுகளை நமக்குள் வளர்த்து வைத்திருக்கின்றோம்

அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் கொடுக்கல் வாங்கலில்…
1.சரியானபடி நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்தவருடைய நினைவு தான் அதிகம் வரும்
3.பாவிப் பயல் இந்த மாதிரிச் செய்தான்… என்னை ஏமாற்றுகின்றான்… என்ற “அந்த ஸ்டேஷனைத்தான் நாம் அடிக்கடி திருப்பி வைப்போம்…”

இதற்கு தகுந்தாற் போல் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதாவது செய்தால் அவர்கள் மீது நினைவு வரும். சொந்த பந்தங்கள் மீது ஏதாவது குறைபாடுகள் இருந்தால்… அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட குறைபாடுகளைத் தான் எண்ணிக் கொண்டிருப்போம்.

இதுவே வரிசையில் வந்து கொண்டிருக்கும்.

உதாரணமாக ஏதாவது குறைகளைப் பற்றி மட்டும் சிறிது பேசிப் பாருங்கள்…
1.அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறையும் வரிசையில் வரும்… நல்லது நினைக்கவே வராது
2.குறையைப் பேசிப் பேசி… “என்ன உலகம் போ…!” என்று கடைசியில் இப்படித்தான் பேசுவோம்
3.இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இப்படித்தான் வரும்.

நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது பாருங்கள். ஒருவரை மோசமானவன்… மிகவும் மோசமானவன்…! என்று சொல்லிப் பாருங்கள். யாரிடம் சொன்னோமோ நம் சொன்னதைக் கேட்ட பின் அடுத்து அவரும் இதே போன்று மோசம் என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லாவற்றையுமே மோசம்…” என்று சொல்ல ஆரம்பிப்போம். இது வரிசையில் வரும்… இந்த உணர்வுகளின் தொடர்வரிசை இப்படித்தான் வரும்.

இப்படி வரும் போது
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் உயிரிடம் வேண்டி அவனிடம் சொல்லி அந்தத் தீமைகளை நீக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது… உருவாக்கிக் கொண்டிருப்பது அவன் தான். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

 

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்த0 படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரியவரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

 

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்

எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்

 

சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.

இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.

மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.

ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.

ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

நாயை அன்புடன் வளர்க்கின்றோம்… நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.

யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.

ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.

பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?

எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.

இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!

ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.

நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.

இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.

ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.

அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

 

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

 

ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்… நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்… சொன்னபடி கேட்கவில்லை.

அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ…? என்ன ஆவானோ…? என்ற நினைப்பாக இருக்கும்.

இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்…
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே…! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்… இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.

இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.

காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்… ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.

அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்… நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது…!

அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது

இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.

சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.

அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது…!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.

உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து… இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.

அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் – விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.

அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்…! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி…! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்

மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

 

யாராவது அதிகமாகத் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களை என்ன… ஏது…? என்று பதிலுக்குக் கேட்டோம் என்றால் அந்த நிலைக்குத் தான் நாம் போகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அதற்கும் மீறி சிலர் விஷத்தன்மையாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள்
2.ஏனென்றால் அவர்கள் உடலில் ஆவிகள் இருக்கும்
3.காரணம்… ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதத்தில் ஆவிகள் புகுந்து தான் இருக்கின்றது.

மனிதப் பிறவிக்கு வருவது என்றாலே… மனிதனை ஒத்த நிலைகள் எந்த ஏக்கத்தில் ஏங்கி இருக்கின்றோமோ… அதற்குத் தகுந்த மாதிரி ஆத்மா உடலில் வந்துவிடும்.

வந்த பின் எனக்குள் என் குணத்தோடு ஒட்டியே இருக்கும். கெட்ட குணமாக இருந்தாலும் நல்ல குணமாக இருந்தாலும் அதைச் சேர்த்து ஓங்கி வளரும். இரண்டு நிலைகள் கொண்டு அதிலேயே நிரந்தரமாக நான் இருப்பேன்.

சந்தர்ப்பத்தில் நாம் தாழ்ந்து… விலகி அல்லது ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றாலும் அது விடாது.
1.கோபத்தை நாம் அதிகமாக எண்ணுகின்றோம் என்றால் கோபமான ஆன்மா எனக்குள் வந்த பின்
2.அந்த இடத்தில் சமாதானமாகப் போக வேண்டும் என்றால் இது விடாது.
3.ஏனென்றால் அந்த எரிச்சலின் தன்மை அது கூட்டி இன்னும் கொஞ்சம் வளர்க்கத் தான் அந்த ஆன்மா பார்க்கும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி செய்யும் போதெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடலிலிருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என் உடலில் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும்படி சொல்கிறோம்.

ஒரு ஐந்து நிமிடம் அவ்வாறு எண்ணினால் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் புனிதம் பெறுகின்றது.

தாய் தந்தையரின் ஆன்மாக்கள் நம் உடலில் இருந்தாலும் கூட சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைக்கின்றது தாய் தந்தையரின் ஆன்மாக்கள் அதுவும் புனிதம் பெறுகிறது.

நீ பேயாய்ப் போ என்று ரிஷி சாபமிடுவதாக்க் குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள். பேயாகப் போ என்று சாபமிட்டவுடன் “எனக்கு ஒரு விமோசனம் இல்லையா…?” என்று கேட்கின்றான்.
1.நீ நல்லவனைத் தீண்டுவாய் அவன் நிழல் படும்
2.அவன் நிழல் பட்டவுடன் நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்..!
3.ரிஷி சொன்னார் என்று இப்படியும் நமக்குக் காட்டி இருக்கின்றார்கள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று தியானம் செய்து கொண்டே இருந்தால் நம் உடலில் இருந்தே அவைகளும் புனிதம் பெறும்.

உதாரணமாக கிணற்றில் விழுந்து இறந்த ஆன்மாவாக இருந்தால் நம்மையும் கிணற்றுப் பக்கம் இழுத்துக் கொண்டு போகும். வீட்டை விட்டு ஓடிப் போன ஆன்மா வந்திருந்தால் நம்மையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விடும்.

சண்டை போடக்கூடிய ஆவியாக இருந்திருந்தால் நம்மைச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்படி செய்யும். அப்பொழுதுதான் அவைகளுக்கு ரசிப்பாக இருக்கும்.

வெறுப்பாவே பேசிப் பழகிய ஆன்மாவாக இருந்தால் யாரைப் பார்த்தாலும் எதை எடுத்தாலும் வெறுப்பாகவே பேசச் சொல்லும். இது போன்று எத்தனையோ ஆன்மாக்கள் இருக்கும்… `நமக்குத் தெரியாமலே…!
1.நாம் தான் அப்படிப் பேசுகிறோம் என்று நினைப்போம்…
2.ஆனால் நம்முடன் இணைந்து அந்த ஆன்மாக்கள் அது இயக்கப்படும் பொழுது நாம் பேசுவதாகவே நாம் எண்ணிக் கொள்வோம்.
3.இதை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி அவசியம் செய்தே ஆக வேண்டும்.

எங்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.அவர்களுக்கும் ஒரு பாவ விமர்சனம் கிடைத்து
2.நமக்கு ஒத்துழைக்கும் நிலையாக நல்லது செய்யக்கூடிய ஆன்மாக்களாக இயங்கும்
3.அதே சமயத்தில் நமக்குள் கெட்டது வராதபடி நாம் தடுக்கவும் முடிகின்றது.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் இவ்வாறு செய்து பழக வேண்டும்.

ஆனால் மந்திரவாதியிடமோ… மந்திரிப்போரிடமோ சென்று தாயத்தைக் கட்டினால் அவன் ஒரு போக்கிரி ஆவியை நமக்குள் திணித்து விடுவான். மூன்று மாதம் நன்றாக இருக்கும். நான்காவது மாதம் பார்த்தோம் என்றால் “இருடா நானும் பார்க்கிறேன்…!” என்று அதுவும் சேர்ந்து வலுவாக இயக்க ஆரம்பிக்கும்.

அதை மீண்டும் மாற்ற இப்படியே அவரிடம் செல்லச் செல்ல மூன்று ஆவி நாலு ஆவி ஐந்து ஆவி ஆறு ஆவி என்று வரிசையிலே ஒவ்வொரு குணத்திற்குத் தகுந்த மாதிரி அதைக் கட்டிக் கொண்டே வருவான்.

கடைசியிலே என்ன ஆகும்…?

தாயத்தைக் கட்டினாலும் கூட உடலிலே கை கால் குடைச்சல் நம்மை விடாது… மேல் வலியும் விடாது. ஏனென்றால்
1.இந்த உணர்வுகள் உள்ளே புகுந்த நிலையில்
2.ஒன்றுக்கொன்று ஏற்றுக் கொள்ளாதபடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
3.ஆனால் ஒன்றுக்கொன்று அடக்கும். மன நிலை வேண்டும் என்றால் ஒத்து இருக்கும்
4.உடலில் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

தாயத்தைக் கட்டிக் கொண்டு வருவோரெல்லாம் மீண்டும் மீண்டும் அதனுடைய வழிக்கே தான் இழுத்துச் செல்லும்.

ஆத்ம சுத்தி செய்து பழகினோம் என்றால் நம் ஆன்மாவும் புனிதம் ஆகின்றது நம் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்களும் புனிதம் பெறுகின்றது.

இதே போன்று கணவன் மனைவிக்குள்ளும் ஆன்மாக்கள் இருக்கும்.
1.அது இரண்டு பேரையும் சேர விடாது
2.பிரியமாக இருப்பார்கள் ஆனால் நெருங்க விடாதபடி இந்த உணர்ச்சியினுடைய நிலைகள் இயக்கி விலக்கி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.இதை நினைத்து இரண்டு பேருமே வேதனைப்படுவார்கள்.

இவ்வாறு இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் நாள் சக்தி என் கணவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி பெற வேண்டும் என்று இருவருமே இப்படித் தூண்டி எங்கே சென்றாலும் இருவருமே இப்படி இந்த உயர்ந்த உணர்வுகளை சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

மனைவி வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் கணவன் வெளியிலே வேலைக்குச் சென்று இருந்தாலும் அங்கிருந்து மனைவியை எண்ணி… என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படி இருவருமே செய்து கொண்டே வர வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் எல்லாம் அனைவரும் மகிழ்ந்திடும் சக்தியாக வர வேண்டும் எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி இருவருமே எண்ண வேண்டும்.

1.இது “சாதாரண சொல்…” என்று நினைக்க வேண்டாம்
2.இருவரையுமே ஒன்றி வாழச் செய்ய மகிழ்ந்து வாழச் செய்ய இது பேருதவியாக அமையும்.

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

 

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தை செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அதைப் பெறக்கூடிய தகுதியாக இது அமைகின்றது.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும்
1.பஸ்ஸிலே சென்றாலும்… மற்ற வாகனத்தில் சென்றாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்லுங்கள்
3.ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்…
4.வாகனத்தில் செல்வோர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.

ஏனென்றால் ரோட்டிலே வாகனத்தில் செல்லும் நிலையில் எத்தனையோ விபத்துக்களும் சேதாரங்களும் ஆகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்ல வேண்டும்.

பஸ்ஸிலே பயணம் செய்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நாம் வாகனத்தில் போகும் பொழுது…
1.ரோட்டிலே “பாதசாரிகள்” நடந்து செல்பவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.உங்கள் எண்ணம் உங்களையும் காக்கின்றது… பஸ்ஸிலே பயணம் செல்வோரையும் காக்கின்றது… ரோட்டில் செல்வோரையும் காக்கின்றது.

அதே போன்று பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தாலும் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உலகில் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும். உலக மக்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… மன பேதமின்றி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திடும் அந்த சக்தி உலக மக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்…!

இது போன்ற உணர்வுகளை நாம் பெருக்கப் பெருக்க உலகம் எங்கிலும் இந்த அருள் உணர்வுகள் பெருகும். காற்று மண்டலத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமாகப் பெருகும்.

1.நமது நினைவுகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் இணையும்.
2.அந்த உடலை விட்டு அகன்றால் வாழ்க்கையில் வரும் எந்தத் துயரங்களும் நம்மைப் பற்றி விடாது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
3.ஆகவே அந்த மகரிஷிகளுடனே ஒன்றி வாழுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கப் பெருக இந்தப் பூமியின் பிடிப்பு குறைந்து மிதப்பது போன்று அந்த உணர்வு கிடைத்திருக்கும்… பூமியின் ஈர்ப்பு குறைந்திருக்கும்.

உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்றால் எப்பொழுதுமே அதைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள். யாருடைய உணர்வும் இழுத்து விடாதபடி தடுத்துக் கொள்ள முடியும்
1.இதை ஒரு பழக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…
2.“குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்…”

அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது

அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது

 

பாசத்தால் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு என்று எவ்வளவோ செய்வோம் “என் பையன் எப்படி வருவான் தெரியுமா…? என்று…!”

ஆனால் அவனுடைய சந்தர்ப்பம் கெட்டவர்களோடு பழக நேரும் பொழுது அவர்கள் உணர்வெல்லாம் சேர்ந்தபின் சில தவறான வேலைகளை அவன் செய்ய ஆரம்பிப்பான்.

1.சில வீடுகளில் பார்த்தால் ஒரே பிள்ளை என்று வைத்திருப்பார்கள்.
2.ஆனால்… அவனுடைய செயலைப் பார்த்தாலே தெரியும்… அவன் இஷ்டத்திற்குச் செயல்பட்டுக் கொண்டிருப்பான்.

டேய் கண்ணு இப்படிச் செய்யடா… அப்படிச் செய்யாதடா…! என்று அவனை மிகவும் கெஞ்சுவார்கள்… எதுவாக இருந்தாலும் அதை நயமாகத்தான் சொல்வார்கள்.

அவனும் உம்.. உம்.. சரி… சரி…! என்றே சொல்வான்.

ஆனால் அடுத்து அவனுக்குள் அந்த விஷத்தின் தன்மை அவனுடைய சேர்க்கையால் (அவனுடன் பழகுபவர்கள்) வந்து விட்டால் மீண்டும் தவறைத் தான் செய்வான். இதைத் தெரிந்து ரொம்ப ஏதாவது ஆகிவிட்டால் உடனே வீட்டிலே கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவான்.

அது போன்ற சந்தர்ப்பத்திலே நல்ல வழிகளை அவனுக்குச் சொல்லக்கூடிய நிலை இல்லாது போய் விடுகின்றது. அவன் கோபித்து வெளியே சென்ற பின் இவர்கள் தாய் தந்தையர்கள் மிகவும் வேதனைப்படுவார்கள்.

செல்வங்கள் கோடி இருப்பினும் அவர்களால் அடுத்து அந்தச் செல்வத்தை நாட முடியாது. குழந்தையோ விலகிப் போய்க் கொண்டிருப்பான். என் தாய் தந்தை என் மீது கோபித்து விட்டார்கள்… என்னை மறுத்து விட்டார்கள்… என்று சோறும் தண்ணீரும் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பான்.

செல்லமாகக் குழந்தைகளை வளர்க்கக்கூடிய குடும்பத்தில் இதைப் பார்க்கலாம்…!

இதை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

செல்வத்தையே (எண்ணிக் கொண்டிருப்பதை) மறந்து
1.எதுவாக இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.அருள் ஞானச் செல்வம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை கூட்டி விட்டால்
3.அந்தக் குழந்தையை நாம் சீர்படுத்த முடியும் (வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டான்).
4.அவனும் செல்வத்தை மறப்பான்… அருள் ஞானச் செல்வத்தை வளர்த்திடும் நிலையாக வருவான்.
5.ஏனென்றால் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

என்னமோ சாமி சொல்கின்றார்… ஏதோ கேட்டோம்… சாமி நன்றாகச் சொன்னார்…! என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்…!

மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் எல்லோரும் சொல்வது மாதிரித் தான் “இந்தச் சாமியும் சொல்கின்றார்…” என்று சொல்லி வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

யாம் சொல்லக்கூடியதை ஆர்வமாகக் கேட்டாலும் அதில் உள்ள தத்துவங்களை எண்ணினாலும் அடுத்தாற்போல் பிறரின் உணர்வுகளைக் கலந்து கொண்ட பின் அவர் சொல்லும் குறையை வளர்த்து “இப்படிச் சொல்லி விட்டாரே…!” என்று எண்ணினால் அதைத் தான் வளர்க்க முடியும்.
1.அந்த வேதனைகள் வளர்ந்து விட்டால்
2.நான் கொடுத்த ஞான சக்தி அந்த நஞ்சுக்குள் மறைந்து விடுகின்றது

ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் மன உறுதி கொண்டு வேதனையை எடுக்காது மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று தானும் பெற வேண்டும்… தன்னைச் சார்ந்தவர்களும் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

“இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் குடும்பம் முழுவதும் அது படர வேண்டும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பெற வேண்டும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அந்த உணர்வோடு நாம் உறங்கச் செல்ல வேண்டும்…”

மற்றவர்களுக்கு நீங்கள் ஆர்வத்தில் நல்லதைச் சொன்னாலும் கூட மற்றவர்கள் கேட்கவில்லை என்றால் அந்த உணர்வு மாறத்தான் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தில் குறையைத் தான் வளர்த்துக் கொள்வோம்.

நல்லதைச் சொல்ல வேண்டும் என்று நினைப்போம்… ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக வேதனையை எடுத்த பின் நல்ல குணங்கள் இங்கே மறையத் தொடங்குகிறது.

1.இப்படி ஒரு நான்கு பேரிடம் சொல்லிவிட்டு எதிர்மறையானால் நமக்குள்ளேயே அந்தக் கலக்கம் வந்து விடுகின்றது.
2.சாமி ஆத்ம சுத்தி செய்யச் சொன்னார் என்பதையே விட்டுவிடுவீர்கள்
3.என்ன வாழ்க்கை…? என்ன நல்லதைச் சொன்னாலும் இப்படித்தான் இருக்கின்றது என்று
4.தனக்குள்ளேயே எதிரிகளை தேடிக் கொள்வார்கள்…!

இப்படித் தான் நாம் இருக்கின்றோம்.

இதைப் போன்று வராது தடுக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கையில் எப்போதுமே…
1.அன்றாடம் நாம் சந்தித்தோர் அனைவருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.இரவில் உறங்கும் முன்னும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… இது போன்று எண்ணிக் கொண்டு வாருங்கள்.
4.வேறு எதுவும் எண்ண முடியவில்லை என்றாலும் இதை நீங்கள் ஒரு சுருக்கமாக வைத்துக் கொண்டாலே போதுமானது
5.இந்த நினைவினை அதிகமாக வளர்த்துக் கொண்டால் ஆன்மாவிலே இது உணர்வு வலுவாகும்
6.நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த எண்ணம் உங்களைக் காக்கும்.

நம் வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டாதவர்களோ எதிரிகளோ இருந்தால் அவர்கள் சிரமப்பட்டால் “அப்படித்தான் வேண்டும்…” என்று அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதீர்கள்.

அதே போன்று உங்கள் வேண்டியவர்களுக்கு ஏதாவது கெடுதல் ஆகிவிட்டால் “ஐயோ கஷ்டம் வந்துவிட்டதே… என்று வேதனைப்படாதீர்கள்…!” தன் பிள்ளை “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று வேதனைப்படாதீர்கள்…!

இதெல்லாம் மிகவும் முக்கியமானது…!

எனென்றால் வேதனை என்றாலே நஞ்சு…! எவ்வளவு சுவை மிக்க ஒரு சத்துள்ள பதார்த்தமாக நாம் உருவாக்கினாலும் அதிலே ஒரு துளி நஞ்சு பட்டால்… அதை உட்கொண்டால் நம்மை மயங்கச் செய்து நினைவை இழக்கச் செய்து விடுகிறது.

அது போலத் தான்
1.தன் பிள்ளைகளோ உறவினர்களோ அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்துத் தானும் வேதனைப்படுவதோ…
2.தனக்கு வேண்டாதவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு அதை ரசிப்பதோ…
3.இவையெல்லாம் நம் நல்ல குணங்களை முழுமையாக விழுங்கிவிடும்
4.பின் நல்லதைத் தேடிப் பிடிப்பதே மிகவும் கஷ்டமாகிவிடும்.

அதற்குத்தான் தீமை என்று தெரிந்தாலே “அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…” என்று சொல்கிறோம். ஆத்ம சுத்தியின் மூலம் எடுத்துக் கொண்ட வலுவான உணர்வு கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள முடியும்…!