துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

 

வேதனைப்படுபவரை நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும் உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத் தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய நோயைக் குறைக்க உதவும்.

இதை அவர்கள் பின்பற்றினால் வளர முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது. அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு அந்தச் சக்தி உண்டு.

1.ஆகவே வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க முடியும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஒருவருக்கு மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
1.இந்த உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.

அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.

யாம் மற்றவருக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார்… ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று சொல்வார்கள்.

காரணம்… ஆசையின் நோக்கம் வேறு…! அதைக் கேட்கும் நிலை வேறு…!

ஆகவே இது போன்ற நிலைகளை விடுத்து விட்டு… சொல்லும் போது (காதிலே கேட்கும் போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் “ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”

1.நோயால் வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக் கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின் வலிமை நமக்குள் செயல்படுகிறது,

இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் அந்த நோயை நம்மால் போக்க முடியும்.

தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

 

இந்த உலகில் யாரையெல்லாம் நாம் சந்தித்திருந்தாலும்… அவர்கள் உணர்வை எதன் வழி நுகர்ந்திருந்தாலும்… நுகர்ந்த உணர்வை நமது உயிர் அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகின்றது.

அனைவரது உணர்வுகளும் நமக்குள் இப்படி வரப்படும் பொழுது
1.அதிலே இருக்கும் தீமைகளிலிருந்து விடுபட…
2.நமக்குள் அறியாது விளையும் அத்தகைய அணுக்களை வலு இழக்கச் செய்ய…
3.அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு இருளை அகற்றிடும் சக்தியாக… அந்த வாலியை வென்றிட வேண்டும்.

ஒரு நோயாளியின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டால் அல்லது ஒருவன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்று அவனை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் அது வாலியாகிறது.

இராமன் வாலியை மறைந்திருந்து தான் தாக்குகின்றான் என்று காட்டியுள்ளார்கள்.
1.பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வருகின்றது.
2.அவ்வாறு வரும் போதெல்லாம்… கஷ்டமோ… தொழிலிலே நஷ்டமோ வந்தால் அல்லது உடலிலே நோயோ வந்தால்
3.அது நமக்குள் வராது மாற்றி அமைக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இருளை அகற்றிய அந்த அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம் இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்தே தாக்கினான். இந்த வழியினை நமக்குள் எடுத்து அருள் உணர்வினை நமக்குள் சேர்த்து அதாவது
1.தீமை செய்யும் உணர்வுகளுடன் நாம் மோதிக் கொண்டே இருக்காமல்
2.நஞ்சான வாலியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

நாம் எடுக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்வின் ஒளியாக எண்ணங்கள் நமக்குள் வருவதும் இந்த உணர்ச்சிகள் உடலை இயக்குவதும் என்ற நிலைகள் கொண்டு… மகரிஷிகளின் உணர்வை எதனுடன் கலக்கச் செய்கின்றோமோ அதுவாக மாற்றுகின்றது.

உதாரணமாக… சாயங்களை எடுத்துக் கொண்டாலும் பல கலவைகள் உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்தியை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அதற்குத் தக்க நிறங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அந்த எண்ணங்களை உருவாக்கும் அணுக்கள் அத்தகைய இயக்கங்களை உடலில் செய்து கொண்டிருந்தாலும்
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்து அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் கலந்து விட்டால்
4.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது… வாலி என்ற நிலை வலு இழக்கப்படுகின்றது.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து விழ்த்தினான் என்று காட்டினார்கள். இராமாயணக் காவியத்திலே இராமனைக் கடவுள் என்று சித்தரித்தாலும் “அவன் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும்…?” என்று இப்படியும் வாதம் செய்வார்கள்.

ஏனென்றால்
1.தீமையான உணர்வை நேரடியாகக் காணும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.
2.ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்துவிடுகிறது…
3.அதனின் செயலாக்கங்களைக் குறைத்து விடுகின்றது.

காவியத் தொகுப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது…? எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…? மனிதன் என்ற நிலையில் அது எந்த வலிமை கொண்டு அவனை மாற்றுகின்றது…? என்று தான் நமக்குக் காட்டினார்கள்.

இத்தகைய பேருண்மையை உணர்த்தப்படும் நிலை தான் கார்த்திகை தீபம்… அண்ணாமலையார் தீபம்…!

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலின் உச்சியிலே… நம் உயிரிலே…
2.அருள் உணர்வினை ஏற்றி வைக்க வேண்டும்… அதை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்.

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

 

யாம் சொன்ன ஆத்ம சுத்தியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி எடுத்து உங்களுக்குள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) மாற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிட முடியும்.
2.குறைபாடுகள் வந்தால் அது இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் மன வலிமையும் வரும்.

உங்கள் அனுபவத்தில் பெறலாம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் உலக நடப்புகளை இன்று டி.வி. வாயிலாகவோ மற்ற வேறு வகைகளிலோ பார்த்தாலும் அல்லது காதிலே கேட்க நேர்ந்தாலும் அது அனைத்தும் “நம் கண்களுக்குத் தான் வருகின்றது…”

காற்றிலிருக்கக்கூடிய அலைகளை ஆண்டனாக்கள் எப்படிக் கவர்கின்றதோ அதைப் போன்று தான்
1.இன்றைய உலக நடப்புகளையும் நமது கண் ஆண்டனா போன்று கவர்ந்து நம் ஆன்மாவாக்கிச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.அது உயிரின் காந்தத்தால் கவரப்பட்டு உயிரிலே பட்டு உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

ஆண்டனா கவரும் அலைகளை டி.வி. கவர்ந்து டி.வி.க்குள் நுழைந்த பின் அதற்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் (PARTS) இயக்கி எப்படிப் படமாகச் சப்தமாகக் காட்டுகின்றதோ அதே போல நம் உடல் உறுப்புகளிலும் அத்தகைய உணர்ச்சிகள் ஊட்டப்பட்டு நாம் பார்த்ததைச் செய்ல்படுத்தத் தொடங்கி விடுகிறது.

இதை உடனுக்குடன் நாம் மாற்ற வேண்டும். அதை எப்படியும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் நினைவுபடுத்தித் தியான பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.என் குரு அந்தச் சக்தியைப் பெறச் செய்தார்.
2.காரணம் நல்லவர்களுக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றது.
3.நல்லவர்களைக் காக்க வேண்டுமல்லவா…!

ஆகவே உலக நடப்புகளைக் கேட்க நேர்ந்தால் நமக்குள் எத்தனையோ பதட்டமும் பயமும் வருகின்றது. “தியானம் இருந்தேன்…” என்று சொன்னாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வருவதை உடனுக்குடன் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.அது உமிழ் நீராக மாறி உடலுக்குள்ளும் சேருகின்றது. எலும்புக்குள் பதிவும் அதிகமாகி விடுகிறது.
2.அதற்குப் பின் உடல் நோயாகவோ மன நோயாகவோ மாறுகிறது.

ஆகவே உலக நடப்புகளைக் கேட்டாலும் அதனை உடனே நமக்குள் மாற்றிப் பழக வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றிய “குறிப்புகளை…” அதிகமாக நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற உணர்வுகள் பதிவாகாதபடி… அது உமிழ் நீராக உடலுக்குள் செல்லாதபடி மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

ஆத்ம சுத்தியின் முக்கியமான மூலக்கூறு இது தான்…!

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

 

போகர் முருகன் சிலையைச் செய்திருக்கின்றார்.
1.மற்ற தாவர இனச் சத்துக்களை எடுத்துக் காயகல்பமாக உருவாக்கி… தான் அந்தக் கூட்டிலேயே இருந்து…
2.தான் சக்தி பெறும் வரையிலும் வேறு ஒரு உடலுக்குள் மாறவில்லை.
3.வெளியில் செல்வது மீண்டும் இந்தக் கூட்டிற்குள் வருவது மீண்டும் தான் சக்தியைப் பெருக்குவது.

இப்படித்தான் விண்ணினுடைய ஆற்றலை 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எல்லாவற்றையும் இணைத்துத் தான் முருகன் சிலையை வடித்தது. அதிலே பாதரசங்களைச் சேர்க்கப்பட்டு முருகன் சிலையை வடித்து முழுமையாக்கப்பட்டது.

உணர்வின் தன்மையை ஒளியாக எப்படி மாற்றுவது…? என்பதற்குத் தான் சிலையை உருவாக்கி
1.அதே ஆவியை அவர் சுவாசித்து பகைமை உணர்வுகளை மாற்றி அதே ஒளியை எடுத்து அவர் சுவாசித்தார்.
2.குகைகள் இருக்கப்படும் பொழுது இந்தச் சிலையை வைத்திருக்கின்றார்.
3.அதன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்படி செய்து அந்த உணர்வின் சத்தை நுகர்வதும்
4.தனக்குள் அந்த அணுக்களின் தன்மை மாற்றுவதும் “இப்படிப் பல சிலைகள் உண்டு…”

அதே போல் சிலையை மக்களுக்குச் செய்யப்பட்டு மனிதனுடைய உணர்வுகளை மாற்றுவதற்கும் அவன் நினைவு வருவதற்கும் செய்தார் போகர். அவர் உருவாக்கிய முருகன் சிலை மீது அன்று பாத்திரத்தை வைத்திருப்பார்கள்… தண்ணீர் அது மேலே விழும்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை. கோயிலாகக் கட்டிய பின் அது எல்லாம் இல்லை. கோவில் கட்டுவதற்கு முன் வெறும் சிலை தான் இருந்தது.

பாத்திரத்திலிருந்து சிலை மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்கும்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் அதிலிருந்து வரக்கூடிய சத்து ஆவியாக மாறும்.
2.அதை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மைகளைப் போக்கும்.

இப்படித்தான் காயகல்பமாக அவர் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்து நட்சத்திர மண்டலங்களை எண்ணி ஒளியின் சரீரமாகப் பெற்றது.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அந்த உடலில் இருந்து சமாளிக்க வேண்டும் என்று செயல்படுத்தியவன் போகன். அகஸ்தியன் தன் உணர்வை எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முதன் முதலில் விண் சென்றவன் துருவன் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

நம் குருநாதரும் பல உடல் தாவி வந்தவர்தான்… கூடு விட்டு கூடு பாய்ந்தவர். அபிராமிபட்டர் ஈஸ்வரபட்டர் என்று இப்படி ஒரு ஐந்து ஆறு உடல்களை எடுத்து வந்தவர் தான்.

அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இதிலேயும் அப்படித்தான் இருந்தார். ஆனால் “தன்னுடைய காரியம் எதுவோ…” அதை சாதித்துக் கொண்டே வந்தார்.

தன் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்று உணர்ந்து கடைசி உடலாகச் சக்திகளை சேமித்த பிற்பாடுதான் ரகசியங்களை சொல்லி அதை எப்படி எடுக்க வேண்டும்…? என்று எம்மிடம் சொன்னார்.

தான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அது எப்படி ஒளிச் சரீரம் ஆக வேண்டும்…? என்று
1.அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டி
2.அந்த உந்து விசை கொண்டு விண் செலுத்தும் படிச் செய்தார்.

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

 

உயிரின் இயக்கத்தை அறிந்து அதை எப்படி மதிக்க வேண்டும்…? என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை காடு மேடலாம் அலையச் செய்து எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து அறியும் படி செய்தார்.

அதே சமயத்தில் நகருக்குள் வந்த பின் இங்கே எத்தனையோ வேதனை வருகிறது.

ஒருவனுக்கு உடல் எல்லாம் ரணமாக இருக்கின்றது ஆனால் உணவுக்காக வேண்டி “ஐயா பசிக்கிறது…” என்று உடலை வளர்க்கப் பிச்சை கேட்கின்றான்
1.ஆனால் வேதனை தெரிவதில்லை.
2.வசதி உள்ளவர்கள் நமக்கு உடலில் வேதனையானால் நம்மால் ஒரு இஞ்ச் கூட நம்மால் நகர முடியவில்லை.

ஆனால் வேதனையானாலும் கூட பசிக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு அவன் எப்படிப் பிச்சை எடுக்கச் செல்கிறான்…?

1.ஆகாரத்தின் மீது எண்ணம் இருக்கப்படும் பொழுது வேதனை குறைகின்றது.
2.ஆனால் ஆகாரம் கிடைத்த பின்பு வேதனையை ஜாஸ்தியாக உணர்கின்றான்.

முதலில் உணவு வேண்டும் என்பதற்காகத் தேடிச் செல்கின்றான். அதை தேடிச் சென்று “உணவைப் பெறும் வரையிலும் ஆர்வம் இருக்கின்றது..” உட்கொண்டு பசி தீர்ந்தபின் எவ்வளவு வேதனைப்படுகின்றான்…?

உடலை வளர்க்க விரும்புகின்றான். அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் இந்த உணர்ச்சிகள் எப்படி அறியச் செய்கின்றது…?

இதை அறியும் உணர்வுகள் உனக்குள் நுகர்ந்து கொண்ட பின் என்ன ஆகிறது…? என்பதையும் காட்டுகின்றார். இதெல்லாம் எதற்காக அனுபவம் கொடுக்கிறார்…?

என்னிடம் பழகி இருக்கிறீர்கள்.
1.உங்களுக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.வெறுப்படைந்த பின் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்படையச் செய்வது எது…?
3.அதே சமயத்தில் அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

இத்தனையும் நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டு வந்தேன்.

உயர்ந்த சக்தியை உங்களிடம் சொல்லி அதை ஏங்கிப் பெறும்படி செய்து வளர்த்து அந்தத் தீமையை நீக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வந்து உங்களுக்கு அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல வரவில்லை.

திட்டியவனைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வு பதிவாகின்றது. அது எப்படி மீண்டும் மீண்டும் இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் “எல்லாமே சந்தர்ப்பம்…” என்பதை நீங்கள் உணர முடியும்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்ததும் சந்தர்ப்பம்தான். தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வைச் சுவாசித்த பின்
1.அது அணுக்களாக மாறி உடலில் மாற்றமாகி உணர்வுகள் மாறி குணங்கள் மாறி செயல்கள் மாறி
2.இது எல்லாம் எப்படி மாறி வந்தது…? என்பதைத் தெரிந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.நாம் போகும் வழியினைச் சீராக்கி அதன் வழி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

 

திருஞானசம்பந்தர் குழந்தையாகப் பிறந்த பின் தாய் அவரை ஆலயத்திற்கு எடுத்து வரும் பொழுது
1.கருவில் இருக்கும் போது தாய் எதையெல்லாம் உற்றுப் பார்த்ததோ அதைப் பார்த்து அங்கே தவழ்ந்து செல்கின்றது.
2.நஞ்சை ஈசன் எப்படி நீக்கினானோ அதே போல என் கருவில் வளரும் குழந்தை பிணிகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும் என்று தாய் எண்ணியது.
3.அதைப் போல் அந்தக் குழந்தையின் பார்வையில் மற்றவர்கள் பிணி போகின்றது.

அதைப் போல கருவுற்ற தாய்மார்களும் அகஸ்தியன் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்… அப்படி வளர்ந்த குழந்தை பிறந்த பின் உற்றுப் பார்த்து கையை மேலே வைத்தால் அந்த உணர்வுகள் தோன்றும். அவர்கள் நோய் நீங்கும்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அது நீங்க வேண்டும்… என்று குழந்தையிடம் இந்த ஆசியை வாங்கினால் அந்த நோய் போகும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகள்…
1.அன்று அகஸ்தியனுக்கு எப்படித் தாய் கருவிலே நஞ்சை வென்றிடும் சக்தி பூர்வ புண்ணியமாக விளைந்ததோ
2.அதைப் போன்று கருவுற்ற தாய்மார்களும் எண்ணி அந்த சக்திகளை வளர்த்து அகஸ்தியனைப் போன்ற ஆற்றலைப் பெறச் செய்ய முடியும்.

ஆனால் இன்று கருவுற்ற தாய்மார்களோ மாமியாரோ நாத்தனாரோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று “ஒருவருக்கொருவர் சண்டையிட்ட உணர்வுகளைக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டினால்…” அதில் உருப்பெற்ற குழந்தை “வம்புச் சண்டைக்கு” செல்லக்கூடிய குழந்தையாகத் தான் வருவான்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றி ஒழுக்கமான நிலைகள் வரவேண்டும் என்பதற்குத் தான் அருள் ஞானிகள் “படமாக உருவாக்கி”
1.அதன் மூலம் ஞானத்தின் தன்மை பெறுவதற்காக லட்சுமி சரஸ்வதி விநாயகர் என்ற காவியங்களைப் படைத்து
2.பின் அந்த அருள் ஒளியின் சுடர் என் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கும்படி சொன்னார்கள்.

ஆனால் காலத்தால் இது எல்லாம் மறைந்து விட்டது. ஞானிகள் காட்டிய வழியில் நாம் யாரும் செல்லவில்லை.

திருமூலர் எப்படிச் சக்தி பெற்றார்…? திருஞானசம்பந்தர் எப்படி அந்த உயர்ந்த சக்தி பெற்றார்…? என்று எண்ணி அதையெல்லாம் கர்ப்பமாக இருப்பவர் உணர்வுகளில் பதிவாக்கிக் கொண்டால்
1.அந்தக் குழந்தை உங்களைக் காக்கும்… குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக அவன் வளர்கின்றான்.
2.அவன் மூச்சு பட்டால் விஞ்ஞான அறிவினால் இனி வரக்கூடிய விஷத்தன்மையிலிருந்து உங்களைக் காப்பான்.
3.அந்தக் குழந்தையால் அது முடியும்.

ஆகையினால் கர்ப்பமுற்ற தாய்மார்கள் அனைவரும் அந்த அருளைப் பெற்றுக் குழந்தைக்கு அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாக உருவாக்கி வளர்த்திடுங்கள்.

எது பதிவாகின்றதோ அதுவே நினைவாகின்றது. டி.வி அலைகளை ஒளிபரப்பு செய்தால் அது எந்த ஸ்டேஷனில் வருகின்றதோ அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்த பின் இங்கு வருகின்றது.

அதே சமயத்தில் கோபம் வெறுப்பு என்று நண்பர்களுக்குள் வரப்படும் பொழுது “இப்படி ஆகிவிட்டதே… நாளை என்ன ஆகுமோ…?” என்று அவனுடைய நிலைகள் எண்ணி இணைக்கப்படும் பொழுது நோயாக இங்கே வந்து உருவாகி நம்மையும் வாட்டுகின்றது.

அன்று செய்யக்கூடிய நம்முடைய காரியங்களும் பலவீனம் அடைகின்றது செயலற்றதாகின்றது. குழந்தைகள் பாடம் படிக்கவும் முடியாது போகிறது.

ஆகவே எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அது இப்படி வருகின்றது. அதே உணர்வு நம்மையும் இயக்குகின்றது மற்றவரையும் இயக்குகிறது.

ஆனால் எண்ணும் பொழுதே
1.அருள் ஒளி பெற வேண்டும்… வரும் இருளை மாற்ற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்வதற்குத் தான்
2.இந்த ஸ்டேஷனை (ஞானிகள்) உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
3.இந்தப் பதிவை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு அந்த ஞானமாக உங்களைப் பேச வைக்கும்.
4.பழமையில் உருவான தீமைகளை நீக்கும் அருள் சக்தி உங்களில் விளையும்.

விஞ்ஞான அறிவினால் மனிதன் சிந்தனை இழந்து செல்லும் நிலைகள் வந்து கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்.

ஓசோன் திரை கிழிந்ததால் அதன் வழியாக பல விஷத்தன்மைகள் பூமிக்குள் வருகின்றது. வெப்பத்தின் தணல் கூடுகின்றது,,, துருவப் பகுதியில் பரவி பனிகள் உருகிக் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறைகின்றது.

நாடு முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது மனிதனின் சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. மனிதன் கடந்த காலக் காட்டு விலங்குகள் போல் செல்லப் போகின்றான்.

ஆகவே விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பின் விளைவுகளாக அழிவின் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
1.தன் நாட்டைக் காக்க என்று செய்த இந்த அறிவு
2.மனிதனுடைய சிந்தனையைச் சிதறச் செய்யும் சந்தர்ப்பமாக வந்துவிட்டது.

இதிலிருந்து மீட்ட அருள் ஞானி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெற்று ஆறாம் அறிவை… ஏழாவது நிலையாக “சப்தரிஷி” என்ற நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.

குரு பீடம்

குரு பீடம்

 

துன்பத்தைக் கேட்டறிந்தால் அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “துன்பத்தை மாற்றி அமைத்த உணர்வினை” உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் அதை மாற்றலாம்.

1.முன் செய்த வினையின் தன்மைதான் இன்று நமக்குள் வினையாக விளைந்து
2.இந்த வாழ்க்கையைச் சீர்கெடச் செய்கின்றது… இது விதி ஆகிறது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்தை எடுத்து வளர்த்திருப்போம். வேதனைப்படுவோரைப் பார்த்திருப்போம்… நண்பன் என்ற நிலையில் இதையெல்லாம் கேட்டறிந்து இருப்போம்… அல்லது சொன்னதைக் கேட்டிருப்போம்.

இதையெல்லாம் நாம் நுகர்ந்த பின்
1.அதை உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றி… நண்பன் சொன்ன சொல்லையே உணவாக எடுத்து வளரும்.
2.இவ்வாறு மனித உடலில் விளைந்து விட்டால் அது விதி ஆகிறது.

உதாரணமாக ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது செடியாகிறது. வளர்ச்சியில் வித்துக்களாக விளைந்த பின் செடி பட்டு விடுகின்றது.

இருந்தாலும் அதனுடைய இனங்களாக வந்த பின் அதனுடைய வித்திற்கே மீண்டும் அந்தச் செடியின் சத்து உணவாகின்றது… செடியாக வளர்கின்றது,

இதைப் போன்று தான் நாம் மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ கோபமோ வேதனையோ உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் வித்தாகின்றது. இதுவே விதியாகவும் வளர்ந்து விடுகின்றது.
1.ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து அந்தந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாகவும் நாம் அவஸ்தைப்பட நேருகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.தபோவன குரு பீடத்தில் உள்ள சூரியனைப் உற்றுப் பார்த்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.
3.இதற்கு முன் அறியாது சேர்ந்த தீவினைகள் அனைத்தும் அகன்று உடல் நலம் பெற வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.

அந்த மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து முன் சேர்த்துக் கொண்ட வினைகளை அகற்றும் சக்தியாக அருள் ஒளி படர்ந்து எந்த வலி வேதனை இருந்தாலும் மற்ற குறைகள் இருந்தாலும்… அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் பெருக்கும்.

மனக் கவலையோ சோர்வோ இருந்தால் மன பலம் பெறுவீர்கள் அந்தத் திறன் கிடைக்கும். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்… மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும்… என் பார்வையால் நான் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

1.இப்பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவுவதையும் உடலில் ஆற்றல் பெருகுவதையும் உணர முடியும்.
2.அன்று வாழ்ந்த அந்த மகரிஷிகள் உருவங்களும் சிலருக்குக் காட்சியாகத் தெரிய வரலாம்.
3.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்.

விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்

விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்

 

விஞ்ஞான உலகில்… அவர்கள் கண்டுணர்ந்த விஷக் கதிரியக்கங்கள் வான்வீதியில் பரவி சூரியனின் ஈர்ப்புக்குள்ளும் சென்று விட்டது.

அதனால்… ஒரு நொடிக்குள் நிலநடுக்கம் வருவது போல விஷத்தின் தன்மை கொண்டு இரு மடங்கு மின் உற்பத்தி அதிகமானால்… நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கூடி காந்த உற்பத்தி இரு மடங்காகிவிடும். நம் எண்ணங்கள் அனைத்தும் செயலிழந்து விடும்.

1.இத்தகைய தீமைகளிலிருந்து தப்புவதற்காகவாவது அதிகாலையில் எழுந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்… மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும்
4.அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… எல்லோரும் அந்த அருள் வழி வாழ வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு அது சீரான வழியைக் காட்டும். தீமைகள் புகாது தடுத்துக் காட்டும். சாந்த உணர்வைக் கொடுக்கும். வாழ்க்கையைச் சீராக வாழவும் வழிகாட்டும். மகிழ்ந்த நிலைகள் வரும். வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும். போதும் என்ற மனம் வரும்.

1.போதும் என்ற நிலை வரும் போது அருள் வழியில் வந்து கொண்டே இருக்கும்.
2.வேண்டாம் என்று சொன்னாலும் அந்த அருள் செல்வங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

உதாரணமாக ஒரு இடத்திலே பிரசாதம் கொடுக்கிறார்கள் என்றால் “இன்னும் கொஞ்சம் வேண்டும்…” என்று கேட்டால் “இல்லை போ” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் கேட்காமல் இருப்பவருக்கு அதிகமாகக் கொடுக்கும் நிலை வரும்.

இதைப் போன்றுதான் உணர்வின் இயக்கங்கள் செயல்படும் தன்மைகள்.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை குரு வழியில் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம் இதை எல்லாம் நான் படிக்காதவன் தான் உபதேசிக்கின்றேன். நீங்கள் அனைவரும் படித்தவர்கள்.

வான்மீகி படிக்காதவன்… அண்டத்தில் உள்ளதை அறிந்தான். வியாசகரும் படிக்காதவர் தான் அவரும் அண்டத்தை அறிகின்றார். அகஸ்தியன் ஒன்றும் அறியாதவன். தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சை வென்றிடும் உணர்வுகள் தான் அவனை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது. திருமூலரும் அதைப் போன்று பெற்றவர் தான்.

1.ஞானிகள் பெரும்பகுதி ஆனவர்கள் எல்லோருமே இப்படிச் சக்தி பெற்றவர்கள் தான்.
2.ஆகவே அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வை உங்களுக்கு உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. எந்த குணத்தின் தன்மையை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் நம்முடைய வாழ்க்கை… அடுத்த சரீரம்…!
1.அதை உருவாக்குவது உயிர்
2.உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதும் உணர்வுக்கொப்ப வாழ்க்கை அமைப்பதும் அனைத்துமே உயிர் தான்.
3.ஈசனாக இருந்து அவனே இயக்குகின்றான்.
4.உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
5.அவனால் மனிதனாக உருவாக்கியதைப் பாதுகாக்க வேண்டும்
6.அவனை நேசிக்க வேண்டும்… அருள் உணர்வுகளை அவனுக்கு அபிஷேக்க வேண்டும் ஆராதனை செய்ய வேண்டும்.
7.உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுதைக் கொடுக்க வேண்டும்.

உயிரான ஈசனுக்கு மகரிஷிகளின் உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது மகிழ்ச்சியைக் கூட்டுகின்றது. அந்த உணர்வை இயக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்தியாக… தெய்வமாக நம்மை இயக்குகின்றது.

இதுதான் நமது காவியங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் அதைப் பெறுவோம் அருள் ஞானம் பெறுவோம். விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபடுவோம். மெய்ஞான வாழ்க்கை வாழ்வோம் பிறவியில்லா நிலை அடைவோம்.

அதுவே நமது எல்லை என்று சப்தரிஷி மண்டலத்தை அடைவோம்.

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

 

கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.

உதாரணமாக கோபமான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.

இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.

இவை எல்லாம்…
1.அவனைப் பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள் உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன். கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.

நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும் போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதை எடுத்துப் பழகிக் கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.

நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.

இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.

இந்த உணர்வுகள் அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர் நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!

இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ வைக்கும்.
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வரவேண்டும்.

உணர்வின் இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை உணர வேண்டும்.

ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

 

நமது காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் மூலக்கூறுகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றோமா…?

1.ஆனால் நான் படிக்காதவன் தான்…! அந்தக் காவியங்களையும் நான் படிக்கவில்லை.
2.இருந்தாலும் அதனின் விளக்கங்களை உங்களிடம் சொல்கிறேன்.
3.காரணம் குருநாதர் காட்டிய அருள் வழியில் என்னால் அதை அறிய முடிந்தது.
4.அந்த இயற்கையின் உண்மைகள் மறைந்து விடவில்லை.

இன்றைய விஞ்ஞான அறிவு… பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே பூமிக்குள் எந்தெந்த நிலைகள் பதிவாகியுள்ளதோ “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற முறைப்படி அதனின் உணர்வின் அதிர்வுகளை எடுக்கின்றான்.

அந்த அதிர்வுகளை வைத்து அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களோ மனிதர்களோ அவருடைய எண்ண அலைகளை வைத்து “உருவத்தையும் காட்டுகின்றான்…”

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்ட உண்மை உணர்வை “மெய் ஞானத்தைக் கண்ட நமது குருநாதர் எனக்குள் பதிவு செய்து…”
2.அதை எப்படி அறிய வேண்டும்…? என்று உணர்வுகளை ஊட்டினார்.

அதன் வழியில் நான் செல்லப்படும் பொழுது அதை எல்லாம் காண முடிந்தது.
1.அந்த உண்மையின் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
2.நீங்களும் அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவானால்தான் அது இயக்கும். ரேடியோ டி.வி. ஸ்டேசன்கள் எங்கேயோ இருந்து கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். அந்த அலைவரிசையில் இங்கே நாம் திருப்பி வைத்தால் தான் காற்றிலிருந்து வருவதை எடுக்க முடியும்.

இதே போன்றுதான் பகைமை உணர்வு வெறுப்பு கொண்ட உணர்வு கோப உணர்வு இப்படி எண்ணிலடங்காத உணர்வுகள் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் பதிவாகியுள்ளது.

அதை நினைக்கும் போதெல்லாம் அதற்குத் தக்கவாறு அதனுடன் தொடர்பு கொண்டு… கவர்ந்து சுவாசிக்கப்பட்டு இயக்குகின்றது.

ஆனால் குரு கொடுத்த தீமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.எப்பொழுதெல்லாம் இதை எண்ணுகின்றீர்களோ
2.அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் மாற்றி விட்டு
3.வாழ்க்கையைச் சீராக்க நிச்சயம் இது உதவும்.
4.”உதவ வேண்டும் என்பதற்குத்தான்” உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.